

இலங்கை
அரசுக்கு இந்தியா முன் வந்து ஆயுத உதவியும், பண உதவியும் இப்போது தாராளமாக
வழங்கி வரும் சூழ்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே 1987 ஆம் ஆண்டு
காலகட்டத்தில் அப்போது அவர் ஒரு மனித உரிமைகள் சட்டதாரியாக இருந்தபோது ஒரு
அயல் நாட்டு ஊடகத்தில் இந்தியாவை பற்றி தெரிவித்த கருத்துகள்...
சிங்களர்களை வளப்படுத்துவதற்காக தமிழக நிலங்களை மேம்படுத்த எம்.எஸ்.சுவாமிநாதனைப் பயன்படுத்த இலங்கை முயல்கிறது.
எனவே எம்.எஸ்.சுவாமிநாதன் இலங்கை செல்லக்கூடாது. மீறி அவர் சென்றால் சென்னையில் உள்ள சுவாமிநாதனின் வீடு மற்றும் அவரது அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்
என்று இயக்குநர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது:
இலங்கை
அரசு வடக்கில் வசந்தம் என்ற பெயரில் குழு ஒன்றை அமைத்து பாதிக்கப்பட்ட
தமிழர்களை மீண்டும் அவர்களது பூர்வீக பகுதியில் குடியமர்த்தப் போவதாக கூறி
உள்ளது.
ஆனால் இதுவரை தமிழர்கள் யாரும் குடியமர்த்தப்படவில்லை.
சிங்கள ராணுவ, போலீசார் குடும்பத்தினரும் நிர்வாகத்தில் உள்ள
சிங்களர்கள்தான் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.
இதற்காக
இந்தியா வழங்கிய ரூ.500 கோடியையும் தமிழக அரசு கொடுத்த ரூ.100 கோடியையும்
சிங்கள அரசு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. எனவே இந்திய, தமிழக அரசுகள்
இந்த நிதி உதவியை நிறுத்தி வைக்க வேண்டும்.
இலங்கை வடக்கில் தமிழர்
பகுதிகளில் 1 லட்சத்து 25 ஆயிரம் சிங்களர்களை குடியமர்த்த
திட்டமிட்டுள்ளனர். புலம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் அவர்கள் வசித்த
இடத்தில் வீடு கட்டி கொடுக்காமல் சிங்கள அரசு சொல்லும் இடங்களில் வசிக்க
கட்டாயப்படுத்தப்படுகிறார்க�
�்.
19 பேர் கொண்ட இலங்கை
குழுவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயின் 2 தம்பிகள், 8 ராணுவ
அதிகாரிகள் உள்பட அனைவரும் சிங்களர்கள். ஒரு தமிழர் கூட இல்லை. இந்த
குழுவா தமிழர்களுக்கு வசந்தமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கப்போகிறது?
இதை இந்திய அரசும், தமிழக அரசும், சர்வதேச சமூகமும் தட்டிக்கேட்க வேண்டும்.
கடந்த
ஜூன் மாதம் வரை அடுத்த நாட்டு விவகாரத்தில் எப்படி தலையிடுவது என்று
கேள்வி எழுப்பிய மத்திய அரசு ரூ.500 கோடி கொடுத்தது வேடிக்கையானது. இந்த
தொகையை வைத்துதான் கண்ணி வெடிகளை அகற்ற சிங்கள அரசு ஏற்பாடு செய்து
வருகிறது.
நெற்களஞ்சியமான கிளிநொச்சி, மன்னார் மாவட்டத்தில் உள்ள
பெரும்பாலான விளை நிலங்களை சிங்களர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கத்
திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் அங்குள்ள விவசாய நிலங்களில்
விவசாய புரட்சி ஏற்படுத்துவதாக கூறி தமிழக வேளாண் விஞ்ஞானி
எம்.எஸ்.சாமிநாதன் இலங்கை சென்று ராஜபக்சேயை சந்தித்து பேசி உள்ளார்.
முழுமையான
விவசாய திட்டங்களை செயல்படுத்த மீண்டும் எம்.எஸ்.சுவாமிநாதன் இலங்கை
செல்லப் போவதாக அறிந்தோம். இதனால் சிங்களர்கள்தான் பயன் அடைவார்களே தவிர
தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவது இல்லை.
தமிழர்கள்
அனைவரும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்படி விவசாயம்
செய்வார்கள்? இது சிங்களர்களை வளப்படுத்தும் முயற்சி. எனவே
எம்.எஸ்.சாமிநாதன் இலங்கை செல்லக்கூடாது. விவசாயப் புரட்சிக்கான
திட்டங்களையும் அவர் வழங்கக்கூடாது.
இதை மீறி அவர் இலங்கை சென்றால்
தமிழ் உணர்வுள்ள மக்களை ஒன்று திரட்டி சென்னையில் உள்ள
எம்.எஸ்.சாமிநாதனின் வீடு மற்றும் அவரது அலுவலகங்களை முற்றுகையிட்டு
போராட்டம் நடத்துவோம்.
எம்.எஸ்.சாமிநாதன் தமிழர்கள் உணர்வை மதிப்பார் என்று நம்புகிறோம் என்றார் சீமான்.
---------------------

வவுனியா
மெனிக்பாம் ஏதிலிகள் தடுப்பு முகாமில் இருந்த தமிழீழத் தேசியத் தலைவர்
அவர்களது பெற்றோரைக் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கை
அரசானது தனக்குக் கட்டுப்பட்டுச் செயற்படாத செய்தி இணையத் தளங்கள்
அனைத்தையும் அந்நாட்டில் பார்வையிட முடியாதவாறு முடக்கிவிடுவதற்குத்
தீர்மானித்திருப்பதாக நம்பிக்கையான அரச வட்டாரங்களை ஆதாரம் காட்டி சிங்கள
இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறான இணையத்தளங்களை யார் நடத்தி வருகின்றார்கள், எங்கிருந்து நடத்துகின்றார்கள் என்ற தகவல்களைக் கண்டறியுமாக குற்றப் புலனாய்வுத்துறைக்கும் இலங்கை அரசு உத்தரவிட்டிருக்கின்றது.
அரசின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலான பரப்புரைகளை மேற்கொண்டுவரும் இணையத் தளங்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை ஒன்று முடுக்கிவிடப்பட்டுள்ளது' என அரச ஆதரவுச் சிங்கள நாளேடான 'தினமின' இன்று செய்தி ஒன்றை வெளியிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.
அரசை சங்கடத்துக்குள்ளாக்கும் வகையிலான செய்திகளை வெளியிட்ட இணையத்தளங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் தொடங்கியுள்ளார்கள் எனவும் தினமினவின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
| இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்குவதைத் தடுக்கும் முயற்சியில் இந்தியா |
இருந்தும்
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட சில படுகொலைகளை புலிகள் செய்ததால் அது
ஒரு பயங்கரவாத இயக்கம் என இந்தியாவின் பிறபகுதிகளிலுள்ள மக்கள்
கூறத்தொடங்கியதால் இந்தியா இலங்கையை முற்றுமுழுதாக புறக்கணித்துவிடாமல்
ராடார், யுத்தக் கப்பல்கள் போன்ற ஆயுதத் தளபாடங்களை வழங்கிவந்தது.
புலிகளின் ஆயுதக் கடத்தலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடற்படையினரின்
ரோந்தை இந்திய-இலங்கைக்கடற்பரப்பில் முடுக்கிவிட்டது இந்தியா. இலங்கையும் இதையடுத்து, பாகிஸ்தான், சீனா ஆகியவற்றிடம் 200 மில்லியன் டொலருக்கு வாங்கவிருந்த ஆயுதங்களை ரத்துச் செய்துள்ளது. புலிகளை ஒழித்துவிட்டதால் இனி ஆயுதம் தேவைப்படாது என்று கூறுகிறது இலங்கை. உண்மையில், இலங்கையிலும் இந்திய கடற்பரப்பிலும் சீனாவின் ஆதிக்கம் மேலோங்குவதால் விழிப்படைந்த இந்தியா அதை முடக்கும் வகையில் தொழிற்படுகிறது. சீனாவுக்கான எரிபொருள் விநியோகமும், சீன வர்த்தகமும் இந்திய கடலினூடாகவே செல்வதால் அவற்றுக்கு பாதுகாப்பு வழங்கும்பொருட்டு சீனா இலங்கைக்கு உதவுவதுபோல தனது கடற்கலங்களை இந்தியக் கடலில் நிலைநாட்ட முனைகிறது. இந்த நடைமுறை தடுக்கப்படவேண்டும் என்றால் இந்தியா, இலங்கைக்கு உதவி செய்து தமக்கு அச்சுறுத்தலாக உள்ள சீன ஆதிக்கத்தை தடுக்கும் எண்ணத்திலுள்ளது. இலங்கையும் சீனாவின் உதவிகளை விட்டு இந்தியாவின் கைகளைப் பற்றிக்கொள்ளும் என நம்பப்படுகிறது. http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1248352715&archive=&start_from=&ucat=2& மின்னஞ்சலில் பதிவுகளைப் பெற... https://www. google.com/ accounts/ ServiceLogin? passive=true&service=groups2&continue=http% 3A%2F%2Fgroups. google.co. in%2Fgroup% 2Fbeyouths% 2Fsubscribe% 3Fhl%3Den% 253Fhl%253Dta% 26note%3D1&cd=IN&hl=en-GB ஆதிசிவம்,சென்னை. www.beyouths.blogspot.com
|