--
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
---
You received this message because you are subscribed to the Google Groups "tamil_ulagam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil_ulagam...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சங்க இலக்கியங்களில் தாழை கைதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சங்கப்பாட்டில் 99 வகையான மலர்கள்:
பத்துப்பாட்டு தொகுப்பில் ஒரு பகுதி குறிஞ்சிப் பாட்டு ஆகும். இந்த நூல் கபிலரால் எழுதப்பட்டது. மேலும், இது காதலர்கள் மேற்கொள்ளும் நீண்டதூரப்பயணத்தை பற்றியதாகும்.
இந்நூலில் 99 வகையான மலர்களை பற்றிய குறிப்புகள் உண்டு. இந்த நூல் குறிஞ்சி பகுதியின் வளத்தை எடுத்துரைக்கும் என்றாலும், அனைத்து திணை மலர்களையும் சொல்கிறது. இதன் மூலம் சங்ககாலம் முதலே தமிழகத்தில் எண்ணற்ற மலர்கள் உண்டு என்பதை அறியலாம். அந்த மலர்களின் பெயரை தந்துள்ளேன்.
(1) காந்தள்
(2) ஆம்பல்
(3) அனிச்சம்
(4) குவளை
(5) குறிஞ்சி
(6) வெட்சி
(7) செங்கோடுவேரி
(8) தேமாம்பூ
(9) மணிச்சிகை
(10) உந்தூழ் (பெருமூங்கில்)
(11) கூவிளம் (வில்வம்)
(12) எறுழம்
(13) கள்ளி
(14) கூவிரம்
(15) வடவனம்
(16) வாகை
(17) குடசம் (வெட்பாலை)
(18) எருவை (கோரை)
(19) செருவிளை (காக்கணம், சங்கு)
(20) கருவிளை
(21) பயினி
(22) வாணி (ஓமம்)
(23) குரவம்
(24) பசும்பிடி (இலமுகிழ்)
(25) வகுளம் (மகிழம்)
(26) காயா
(27) ஆவிரை
(28) வேரல் (சிறு மூங்கில்)
(29) சூரல்
(30) பூளை
(31) கன்னி (குன்றி மணி)
(32) குருகிலை (முருங்கிலை)
(33) மருதம்
(34) கோங்கம்
(35) போங்கம்
(36) திலகம்
(37) பாதிரி
(38) செருந்தி
(39) அதிரல் (புனலி)
(40) சண்பகம்
(41) கரந்தை
(42) குளவி (காட்டுமல்லிகை )
(43) கலிமா
(44) தில்லை
(45) பாலை
(46) முல்லை
(47) குல்லை
(48) பிடவம்
(49) மாறோடம்
(50) வாழை
(51) வள்ளி
(52) நெய்தல்
(53) தாழை (தென்னம்பாளை)
(54) தளவம்
(55) தாமரை
(56) ஞாழல்
(57) மொவ்வல்
(58) கொகுடி
(59) சேடல் (பவளமல்லிகை)
(60) செம்மல்
(61) செங்குரலி
(62) கோடல்
(63) கைதை (தாழை)
(64) வழை (சுரபுன்னை)
(65) காஞ்சி
(66) நெய்தல்
(67) பாங்கர்
(68) மரா (கடம்பு)
(69) தணக்கம் (நுணா)
(70) ஈங்கை
(71) இலவம்
(72) கொன்றை
(73) அடும்பு
(74) ஆத்தி
(75) அவரை
(76) பகன்றை
(77) பலாசம்
(78) பிண்டி
(79) வஞ்சி
(80) பித்திகம்
(81) சிந்துவாரம் (நொச்சி)
(82) தும்பை
(83) துழாய் (துளசி)
(84) தோன்றி
(85) நந்தி (நந்தியாவட்டம் )
(86) நறவம்
(87) புன்னாகம்
(88) பாரம் (பருத்தி)
(89) பீரம் (பீர்க்கு)
(90) குருக்கத்தி
(91) ஆரம் (சந்தனம்)
(92) காழ்வை (அகில்)
(93) புன்னை
(94) நரந்தம் (நாரத்தம்)
(95) நாகம்
(96) நள்ளிருள் நாறி (இருவாட்சி)
(97) குருந்து (காட்டு எலுமிச்சை)
(98) வேங்கை
(99) புழகு (மலை எருக்கு)
--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
புறநானூறு - 132
போழ்க என் நாவே!
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.
முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே!
ஆழ்க, என் உள்ளம்! போழ்க என் நாவே! பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே!
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி குவளைப் பைஞ்சுனை பருகி, அயல தகரத் தண்ணிழல் பிணையடு வதியும் வடதிசை யதுவே வான்தோய் இமையம், தென்திசை ஆஅய் குடி இன்றாயின், பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே.
தகரம் என்றொரு செடி கிராமங்களில் இருக்கிறது! ஆடு, மாடுகள் தீண்டாது!
புறநானூறு - 132
போழ்க என் நாவே!
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.
முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே!
ஆழ்க, என் உள்ளம்! போழ்க என் நாவே! பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே!
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி குவளைப் பைஞ்சுனை பருகி, அயல தகரத் தண்ணிழல் பிணையடு வதியும் வடதிசை யதுவே வான்தோய் இமையம், தென்திசை ஆஅய் குடி இன்றாயின், பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே.
On Friday, August 21, 2015 at 7:57:43 AM UTC-7, இரவா wrote:தகரம் என்றொரு செடி கிராமங்களில் இருக்கிறது! ஆடு, மாடுகள் தீண்டாது!
--
மேலும் ..."தகர இலை" >>> https://commons.wikimedia.org/wiki/File:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%882.jpg
Botanical Name: Cassia Tora
என்று டாக்டர் சௌந்தரபாண்டியன் தெரிவிக்கிறார்.
Dr.S.Soundarapandian
இவர் தாவரங்கள் பற்றி நன்கு தெரிந்த அறிஞராகத் தெரிகிறார்
https://commons.wikimedia.org/wiki/Special:Search/S.Soundarapandian
மற்றொரு தகரை படம்:
https://commons.wikimedia.org/wiki/File:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%883.jpg
மேலும் மற்றுமொரு தகரை படம்
https://commons.wikimedia.org/wiki/File:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%881.jpg
இந்த படங்கள் எடுக்கப்பட்ட இடம் டி.நகர், சென்னை
13.038889, 80.228611
மாம்பலம் இரயில்வே நிலையம் அருகில்....
எனத் தெரிகிறது.
***ஆனால் "நறுமணம்"பற்றிய குறிப்புகளைக் காணவில்லை.
***தகரை என்பதுதான் தகரம் செடியா ... என்பதும் தெரியவில்லை
தகர த் தந்தச் சிகரத்தொன்றித் தடநற் கஞ்சத்து 81 அருணகிரிநாதர் வெண்மைநிறம்
On Sunday, August 23, 2015 at 12:16:06 AM UTC-7, selvi...@gmail.com wrote:தகரத் தந்தச் சிகரத்தொன்றித் தடநற் கஞ்சத்து 81 அருணகிரிநாதர் வெண்மைநிறம்
இந்தத் திருப்புகழில் தகரம் என்னும் தாவரம் சொல்லப்படவில்லை.“தகரத்து (= daharatttu) அந்தச் சிகரத்து ஒன்றிச்” எனப் பிரிக்கவேண்டும்.த³ஹராகாஶம் என்னும் தத்துவத்தை விளக்கும் பாடல்.நா. கணேசன்
On Tuesday, August 25, 2015 at 12:58:06 AM UTC-7, N D Logasundaram wrote:தவறுதகரம் பண்புதகரம் போன்ற வெண்மை நிறமான தந்தம்இங்கு தந்தம் என்பது நிறம் வழி ஆகு பெயராக பெண்களின் தனத்தைக்குறித்ததுநான் கூறியதில் தவறு இல்லை ஐயா. முழுத் திருப்புகழும் படித்துப்பாருங்கள். இங்கே ”தகரம் போன்ற வெண்மை நிறமான தந்தம்” என்ற பொருளில்லை.இந்தத் திருப்புகழில் தகரம் என்னும் தாவரம் சொல்லப்படவில்லை.“தகரத்து (= daharatttu) அந்தச் சிகரத்து ஒன்றிச்” எனப் பிரிக்கவேண்டும்.த³ஹராகாஶம் என்னும் தத்துவத்தை விளக்கும் பாடல்.நா. கணேசன்
நூ த லோ சுமயிலை
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
நூ த லோ சு வைத்ததுதகர த் தந்தச் சிகரத்தொன்றித் தடநற் கஞ்சத்து 81 அருணகிரிநாதர் வெண்மைநிறம்------------------நாசா கணெசனார் வைத்ததுஇந்தத் திருப்புகழில் தகரம் என்னும் தாவரம் சொல்லப்படவில்லை.“தகரத்து (= daharatttu) அந்தச் சிகரத்து ஒன்றிச்” எனப் பிரிக்கவேண்டும்.த³ஹராகாஶம் என்னும் தத்துவத்தை விளக்கும் பாடல்.==========முதலில் என்னுடைய மடலில் தகரம் ஒரு தாவரம் எனக் குறிக்கவில்லை என்பதைகண்ணை நன்றாக திறந்து மனப்போக்கினை முன்சார்நிலை அல்லாது நோக்குகநான் காட்டியது வெண்மை நிறம் மட்டுமே அது ஓர் பண்பு
>தகரத் தண்ணிழல்
ஒரு மரம் என புலனாகிறது
Fabaceae (pea, or legume family) » Senna alata
SEN-nuh -- Latin form of Arabic word for a thorny bush
a-LAY-tuh -- winged
commonly known as: candle bush, candlesticks, large-leafletted eglandular senna, ringworm shrub • Hindi: एड़गज ergaj, प्रपुन्नाड prapunnad • Kannada: ಸೀಮೆ ಅಗಸೆ sime agase • Malayalam: ആനത്തകര aanattakara, മലന്തകര malamtakara, ശീമ അഗത്തി seema agatti, പുഴുക്കാടിത്തകര puzhukkadittakara •Marathi: शिमई अगसे shimai agase • Sanskrit: एडगजः edagaja, प्रपुनाल prapunal, उरभ्रः urabhrh, उरणक्षकः uranakshaka • Tamil: சீமையகத்தி cimai-y-akatti, வண்டுகொல்லி vantu-kolli •Telugu: అవిచిచెట్టు avicicettu, మెట్టతామర metta-tamara, సీమ అవిసె siima avise, తంటెము tantemu • Urdu: ايڙگج ergaj
Native to: tropical South America (the Amazon rainforest); naturalised elsewhere in tropics
இதற்கும் ப்ரபுன்னாடம் என்ற பெயரை ஹிந்தியில் வைத்துள்ளமை காண்க. அடிப்படையில் தமிழ்ப் பெயர் இது.
ஆனைத்தகரை, மலந்தகரை, புழுக்கடித்தகரை என்கிறது மலையாளம். தமிழில் சீமையகத்தி (வெற்றிலைக் கொடி)
கொடிக்கால்காரர் வளர்த்தும் தோப்புகளில் பார்க்கலாம்.
நா. கணேசன்
ஆனால் நறுமணம் கொண்ட சிவப்புமலர் என்று நீங்கள் குறிப்பிட்ட நினைவு???
அப்படியானால் Cassia renigera இருக்கவும் வாய்ப்புண்டு
On Wednesday, August 26, 2015 at 10:54:57 PM UTC-7, N. Ganesan wrote:இமயமலையில் தகரம் என்னும் மணப்பொருள் விளைவது. அதனால்,இமையத்தை வில்லாக வளைக்கும் சிவபிரான் என்ன்னும்போது“தகரம் அணி அருவித் தடமால் வரை சிலையா” என்கிறது தேவாரம்.தகரத் தாவரங்கள் அணித்தே இருக்கும் அருவி எனலுமாம்.
தகர மணியருவித் தடமால் வரைசிலையா
நகர மொருமூன்று நலங்குன்ற வென்றுகந்தான்
அகர முதலானை யணியாப்ப னூரானைப்
பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
பொ-ரை: தகரம் எனப்படும் மணப் பொருளும் மணிகளும் கலந்து விழும் அருவிகளை உடைய மிகப் பெரிய மலையை, வில்லாகவளைத்து, அசுரர்களின் நகரங்களாக விளங்கிய முப்புரங்களும் பொடி படச் செய்து மகிழ்ந்தவனும், எல்லா எழுத்துக்களிலும் கலந்து நிற்கும் அகரம் போல எப்பொருள்களிலும் கலந்து நிற்பவனும், அழகிய ஆப்பனூரில் எழுந்தருளியிருப்பவனுமாகிய சிவபிரான் புகழைக் கூறும் மனம் உடையவர்கள் வினை மாசுகளினின்று நீங்கப் பெறுவர்.
கு-ரை: தகரம் அணியருவி - தகர மரத்தை அணிந்த அருவி என்றுமாம். நகரம் ஒரு மூன்று - முப்புரம். அகரமுதலானை என்பது ‘அகரமுதல எழுத்தெல்லாம்’ என்ற குறட்கருத்து.