--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
அன்புடன் நு.த.லோ.சு அவர்களுக்கு
ஆரியர்களைக் கூத்தாடிகள் என்றும் மிலேசர்கள் என்றும் சங்க நூல்கள் கூறுகின்றன.
குறுந்தொகை:
“ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக்
கலங்கி வாகைவெண் நெற்றொலிக்கும்” (7:3:5)
மூங்கிலின் மேல் கட்டிய கயிற்றின் மேல் ஏறிநின்று ஆடும்போது கொட்டப்படுகின்ற பறை ஒலிக்கு ஏற்றார்போல ஆடுகின்றவர்கள், ஆரியர்கள்! என்கிறது.
மேலும், “ஆரியர்”, பறை-மேளத்தின் ஓசைக்கேற்றவாறு, ஒரு கயிற்றில் கழைக் கூத்து ஆடுவார்கள் எனக்குறிப்பிடுகிறது.
……………………..…………………..ஆரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகைவெண்நெற் றொலிக்கும். (குறுந்தொகை.7:3-5)
காடு முழுவதும் மூங்கில் மரங்கள் நிறைந்துள்ளன. அவை வாகை மரத்தின் (Sirisa tree) முற்றிய விதைகள், அம்மரம் சிலிர்த்து உதிரும்போது காற்றினால் எடுத்துச் செல்லப்பட்டு, அம்மூங்லில்களின் மேற்பட்டு, பறைகளை அடித்து உருவாகும் ஓசைபோல, அரியர் கொட்டும் பறையோசை இருக்கிறது. “ஆரியர்” என்பவர் கயிறு மேல் ஆடுபவர் என்று தெரிகிறது.
இத்தகைய கூத்துகளைத் தான் ஆரியக்கூத்து என்று கூறினார்கள், போலும்.
அகநானூறு (நெடுந்தொகை):
“ஆரியர்” பெண் யானைகளைப் பிடிப்பவர்கள் எனக் கூறுகிறது.
”………………………………….ஆரியர்
பிடிபயின்று தரூஉம் பெருங்களளிறு போல” (அகம்.276:9-10).
ஆரியர் பெண் யானையைக் கொண்டு – அதாவது, பழக்கி, ஆண்யானையை எளிதாகப் பிடிப்பர் எனத் தெரிகிறது. முல்லைப்பாட்டு, தமிழக அரசர்கள், இத்தகையவரை யானைகள் பழக்க பணிக்கு அமர்த்துகிறார்கள் எனக் கூறுகிறது.
(பெண் யானையைக் கொண்டு ஆண் யானையைப் பிடிப்பவர் என்பதன் உட்பொருளை நோக்க வேண்டும்)
”தேம் படு கவுள சிறு கண் யானை……..
ஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த,
வயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து,
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென,
கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி, ……………
கல்லா இளைஞர், கவளம் கைப்ப……………” (முல்லைப்பாட்டு.31-36)
யானைப்பாகர் யானைப் பேச்சாகிய வடமொழியைச் சொல்லிப் பரிக்கோலால் கவளத்தை உண்ணும்படி குத்தினார்கள்.
ஆரிய மொழியாகிய வடமொழி, யானையைப் பிடிக்கும் பாகர்கள் கூறும் மொழியாகும் என்பது விளங்கும்.
இவர்களை, “மிலேச்ச ராரியர்” என்று பிங்கலந்தை (ரு. ஆடவர் வகை) என்ற பிங்கல நிகண்டு
பிற்காலத்தில் கூறுகிறது
On 8/7/12, N D Logasundaram <selvi...@gmail.com> wrote:
> திருவாளர் இரவா அவர்களுக்கு
>
> பிள்ளை அவர்களின் கருத்து சரியானதே
>
> வளமுடையோரைச் எப்போதும் சார்ந்து வாழும் குடி
> இடம் பெயர்ந்து வந்து தன் தாய்நாட்டில் வாழாதவர்கள்
>
> அலைந்து திரிதலையே தொழிலாக வைத்துக்கொண்டவர்கள்
> "பார்பன மகனே பார்ப்பன" மகனே என தூதிற்கு ஊர் நாடோடி போல்
> செல்பவனை விளித்து தானே ஓர் சங்கப் பாடல் உள்ளது
>
> பிற்காலத்தில் தெலுங்கு தேசத்தின் வழியாக வந்த ஒருசாரார் கலைப்பணி
> என நாம் கூறும் இசை நாடகம் என பொழுது போக்கு நெறிகளில் பிழைப்பவர்கள் ஆவார்கள்
> ஒருகாலத்தில் ஏறக்குறைய இராஜராஜன் காலத்தலிருந்து
> கோயில் தேவதாசி சட்டம் வரும் வரை மக்களை *மகிழ்விக்க மட்டும்*