Re: [வல்லமை] தினம் ஒரு (ஈழத்) தமிழ் சொல்...

794 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 2, 2015, 12:52:38 PM11/2/15
to வல்லமை, மின்தமிழ், housto...@googlegroups.com, Santhavasantham, thami...@googlegroups.com


On Sunday, November 1, 2015 at 2:28:21 AM UTC-6, seshadri sridharan wrote:

குழந்தை அப்பாவாட்டம் (ஆட்டம்) இருக்கிறது. இதில் ஆட்டம் என்பதை ஈழத்தவர் ஓட்டம் என்பர். ஓட்டம் பொருந்துதற் கருத்துடையது. ஓட்டம் > ஆட்டம் ஆனது.
மனசிருக்கணும் பச்ச புள்ளையாட்டம்    https://www.youtube.com/watch?v=b2zMe5OOu6U

ஓமன் 

வாலியின் அருமையான பாடல்களில் ஒன்று என அறிந்தேன். நன்றி. 1965-ஆம் ஆண்டுப் பாடல்.

ஓம் என்பது ஆம் என்றாகியுள்ளது. எல்லோம் - எல்லாம், எல்லோரும் - எல்லாரும்,  ...

ஒடு/ஓடு என்னும் உவம உருபு ஓட்டம் என்று ஈழத்தில் வழங்கும் உதாரணங்கள் உண்டா? ஸ்ரீமதி சுவாதியிடம் கேட்போம். 
பாவாணர் தொல்காப்பியச் சூத்திரம் கொடுகிறார்:

”ஓடுதல் = ஒத்தல், பொருந்துதல், கூடுதல். ஓட என்பது ஓர் உவம உருபு. 

"ஓடப் புரைய என்றவை எனாஅ" என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க. (1232) 

ஓடாவி = ஓவியன். ஓடு - ஓட்டம் - ஆட்டம் = ஒப்பு. 

குரங்காட்டம் ஓடுகிறான் என்னும் வழக்கை நோக்குக. ” (தே. பாவாணர்)


நா. கணேசன்

Swathi Swamy

unread,
Nov 5, 2015, 2:27:36 AM11/5/15
to தமிழ் பிரவாகம், பண்புடன், muththamiz, Thamizhthendral, vallamai, தமிழாயம்”
5)
  மக்கு , மொக்கு - (சொல் தேர்வு சுகந்தி) முட்டாள் ; அறிவிலி


 மலராத பூவை மொட்டு, அல்லது மொக்கு என்று அழைக்கிறோம்… அதே போல் ஈழத்தில் மக்கு அல்லது மொக்கு என்ற வார்த்தையை  முட்டாள் அல்லது  அறிவிலித் தனமாக நடப்பவர்களை குறிக்க பாவிக்கிறோம்.

அறிவு மலராதவர்  என்ற அர்த்தத்தில் மொக்கு என்ற வார்த்தை பாவிக்கத் தொடங்கினார்களோ என்னமோ

உதாரணம் :
1) சரியான ஒரு மொக்கு பிள்ளையை என்ர மாமியார் பெத்து என்னட்டை தந்திட்டு போய்ட்டா.. 

(எனது மாமியார் ஒரு முட்டாள் மகனை பெற்று என்னிடம் தந்துவிட்டு போய்விட்டார் )

2) இப்பிடியொரு மொக்கை வைச்சுக் கொண்டு நான் எப்பிடி காரியம் சாதிக்கிறது?

(இப்பிடி ஒரு முட்டாளை கூடவே வைத்துக் கொண்டு நான் எப்படி முன்னேறுவது?)

இதே போல் மோட்டு புத்தி என்ற வார்த்தையும் பாவிக்கிறோம். மொக்கு புத்தி தான் அப்படி உரு மாறியதோ என்னமோ..

உதாரணம்

1)  உன்ர மோட்டுப் புத்தியை காட்டிட்டாய் பார்த்தியா?

(உன்னுடைய முட்டாள் தனத்தை வெளிப்படுத்திவிட்டாய்..பார்)

2) ஏன் உன்ர புத்தி இப்பிடி மோட்டுத் தனமா / மொக்குத் தனமா வேலை செய்யுது?

(ஏன் உன்னுடைய புத்தி இப்படி முட்டாள் தனமாக செயற்படுகிறது? )



Swathi Swamy

unread,
Nov 5, 2015, 2:27:37 AM11/5/15
to தமிழ் பிரவாகம், பண்புடன், muththamiz, Thamizhthendral, vallamai, தமிழாயம்”
6)  சாலம்

சாலம் என்ற சொல் அகராதிகளில் பலவிதமான அர்த்தங்களுடன் இருக்கிறது.

University of Madras Lexicon

சாலம்¹

Multiple matches found. Best match is displayed
n. jāla. 1. See சாலவித்தை. 2. Artfulness, pretence; நடிப்பு. சாலமென்னசொல்லுவேன் (பணவிடு. 316). 3. Multitude,company, flock, herd, shoal; கூட்டம். திரிந்தனசாலமீன் சாலம் (கம்பரா. வருணனை. 25). 4. Assembly, court; சபை. (பிங்.). 5. [T. jāla.] Net;வலை. அளப்பில் சாலம் வீசிநின் றீர்த்திடும் (கந்தபு.திருநகரப். 18). 6. [T. jāla.] Latticed window;பலகணி. (பிங்.) 7. Flower-bud; அரும்பு. (W.)8. Slander; குறளை. (பிங்.). 9. cf. sāra. Learning;கல்வி. (திவா.) 10. cf. sāra. Medical science;வைத்தியநூல். (W.)
Searched word சாலம்

தமிழ் தமிழ் அகரமுதலி

சாலம்

கூட்டம்; மதில்; ஆச்சா; பலகணி; வலை; பூவரும்பு; கல்வி; தாழ்வாரம்; பெருமை; வஞ்சகம்; மாயவித்தை; நடிப்பு; சபை; அகலம்; குறளை; மருத்துவநூல்; கொடிமரம்; வகை.
Searched word சாலம்

J.P.Fabricius Tamil and English Dictionary

சாலம்

Multiple matches found. Best match is displayed
ஜாலம், s. magic, trick, மாயவித் தை; 2. a feigned promise, purposed delay, வஞ்சகம்; 3. a net, வலை; 4. multitude, company, flock, கூட்டம்; 5.a flower-bud, அரும்பு; 6. slander, குறளை.
சாலக்காரன், a hypocrite; an artful person.
சாலமாலம், tricks, artifice, evasion.
சாலம்பண்ண, to make a false promise without having a mind to fulfil it; to protract or delay; to play tricks.
சாலவித்தை, the magical art.
இந்திரஜாலம், legerdemain, jugglery.

ஆனால் இந்த சாலம் என்ற வார்த்தையை ஈழத்தில் நம்மவர்கள்

பொய் பேசுதல், நடிப்பு போன்ற அர்த்தத்திற்கே பயன்படுத்துகின்றனர்.

ஒருவர் இன்னொருவரிடம் அன்பு, காதல் இல்லாவிட்டாலும் கூட அவர்கள் மீது அன்பும் காதலும் இருப்பது போல் நடிட்து ஏமாற்றுவது.
சுயநலம், சூழ்நிலைக்கமைய நேரத்திற்கு ஒரு விதமாக தன்னை மாற்றி மாற்றி பொய்யாக இன்னொருவரிடமோ பலரிடமோ பழ்குவது போன்றவற்றை சாலம் காட்டுதல் என்று சொல்வோம்.

குழந்தைகள் தங்கள் காரியத்தை சாதிப்பதற்காக அழுவது போல்  நடிப்பது, கெஞ்சுவது , கொஞ்சுவது போன்றவற்றையும் விளையாட்டாக சாலம் காட்டுதல் என்று சொல்வோம்..

உதாரணம்:

1) தாய் யசோதாவிடம் சாலம் காட்டுவதில்  கண்ணன் கை தேர்ந்தவன்.

2) ஏன் இப்ப உந்த சாலங்காட்டுறாய் எனக்கு?

( ஏன் இப்போது இப்படி என்னிடம் நடிக்கிறாய்)

3) உன்ர சாலங்காட்டுற வேலையெல்லாம் என்னட்டை வேகாது .

( உன்னுடைய நடிப்பு எதுவும் என்னிடம் செல்லுபடியாகாது)

4) என்ன சாலக்கார வித்தை போட்டு என்ர மகனை மயக்கிட்டாளோ தெரியாது

( எப்படி எல்லாம் நடித்து என் மகனை ஏமாற்றிவிட்டாளோ தெரியாது)

N. Ganesan

unread,
Nov 7, 2015, 9:00:44 AM11/7/15
to வல்லமை, pira...@googlegroups.com, panb...@googlegroups.com, mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, thami...@googlegroups.com


On Saturday, November 7, 2015 at 4:53:47 AM UTC-8, சுவாதி சுவாமி wrote:
9)  வளவு / காணி  -

ஒருவரின் வீடு இருக்கும் நிலப்பரப்பையோ அல்லது வெறும் நிலப்பரப்பையோ வளவு அல்லது காணி என்று ஈழத்தில் கூறுவார்கள். 


வளவு என்ற சொல் கொங்குநாட்டில் உண்டு. ஆனால் பொருள் வேறு. கொங்கில் ஒருவரது மனையின் இடமல்ல வளவு.
பல வீடுகள் இருக்கும் பகுதி வளவு. மேக்கு வளவு, தெக்கு வளவு, ... வளவு = வளைவு (வளைவாய்ச் செல்லும் வீதியில் உள்ள வீடுகள்).

நா. கணேசன்


 





முன் வளவு /முற்றம் என்று வீட்டின் முன் வாசலிலிருந்து  தெரு வரை யிலான (படத்தில் இருப்பது ) ஒவ்வொரு வீட்டினது நிலப்பரப்பையும் குறிப்பது. இதை தமிழகத்திலும் முற்றம் என்று சொல்வார்கள் என்றே நினைக்கிறேன். முறவாசல் என்பதும் இது தானா என்று பெரியவர்கள் தெளிய வைக்க வேண்டுகிறேன்.

கோடி / பின் வளவு -  கொல்லை, புழக்கடை என்று தமிழகத்தில் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். இது வீட்டின் பின் பக்க நிலப்பரப்பு.

உதாரணம்

1)  வளவு முழுக்க  பூஞ் சோலையா இருந்தது ஒரு காலம்; சுடுகாடா போனது இந்தக் காலம் .

2) இராசையா மாஸ்டரின் நாலுபரப்புக் காணியையும் மகேஸ் அக்கா வாங்கிட்டாவாம்.

( இராசையா என்ற வாத்தியாருக்கு சொந்தமான நாலு பரப்பளவு நிலப்பரப்பை மகேஸ் என்ற பெண்மணி  வாங்கிவிட்டாராம்)
 
3) பின் வளவுக்குள் மாமரங்ளும் பலாமரங்களுமா பழுத்து செழிப்பா கிடக்குது

( புழக்கடைப் பக்க நிலத்தில் மா, பலா மரங்கள் செழித்து  காய்த்து இருக்கின்றன)

4)  கோடிக்குள்ள நிண்டு இவளவை ரெண்டு பேரும் அப்பிடி என்ன குசு குசுத்துக் கொண்டு நிக்கிறாளவையள் ?

( இரண்டு பெண்களும் வீட்டின் புழக்கடைப் பக்கமாக நின்று என்ன இரகசியம் பேசிக் கொண்டு நிற்கிறார்கள் ?)

5) காலமையளில எழும்பினால் முன் முற்றத்தையும்  கோடியையும்  கூட்டி கீட்டி சாணகத் தண்ணி தெளிச்சால் தான் அண்டைய பொழுது விளங்கும் எனக்கு. 

(தினமும் விடிகாலையில் வீட்டின் முன் பின் நிலப்பரப்பை பெருக்கி, தண்ணி (சாணகம் கரைத்த தண்ணீர்) தெளித்துவிட்டால் தான் அன்றைய பொழுது எனக்கு மங்களகரமாக இருப்பது போல் உணர்வு வரும் )

Swathi Swamy

unread,
Nov 7, 2015, 9:31:55 AM11/7/15
to muththamiz, தமிழ் பிரவாகம், பண்புடன், Thamizhthendral, vallamai, தமிழாயம்”
 வயதில் மூத்த மாமா பையனை அத்தான் என்று தான் அழைப்போம்.
கணவர் எப்படியும் வயதில் மூத்தவராகத் தான் இருப்பார்..ஆகையால் மாமா மகனை கல்யாணம் செய்தாலும் அவரை அத்தான் என்றே அழைப்போம்...ஆனால் எங்களிடம் இன்னொரு விசேசமான அழைப்பு இருக்கிறதே கணவருக்கென்று.... “இஞ்சேருங்கோ”

2015-11-05 11:33 GMT-05:00 Sankarkumar <ommur...@gmail.com>:
//மச்சான் - மாமா பையன், தங்கை கணவர் .//

இதில் ஒரு விநோதம் என்னவெனின், தாய்மாமன் அல்லது அத்தையின் மகனை மணம் செய்துகொள்ளும் முறை இருப்பதால், கணவனும் மச்சான் என அழைக்கப்படுவான்! :))


--
--
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.

---
You received this message because you are subscribed to the Google Groups "முத்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to muththamiz+...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Swathi Swamy

unread,
Nov 7, 2015, 9:31:55 AM11/7/15
to muththamiz, piravakam, பண்புடன், Thamizhthendral, vallamai, தமிழாயம்”

2015-11-05 14:37 GMT-05:00 Sankarkumar <ommur...@gmail.com>:
பெயரைச் சொல்லக் கூச்சப்படும் மனைவிமார்கள்.... அழைப்பது வழக்கமே.
அதுவேதான் அங்கே 'இஞ்சேருங்கோ' ! :))


நானெல்லாம்  கூப்பிடும் பாணியே தனி அண்ணா... 

இஞ்சேருங்கோவும் இல்லை..என்னங்கவோம் இல்லை....

ஓய்ய்ய்ய்ய்....  தேவன்..!  பிராண்நாதா...!  ரெண்டுக்கும் செவி சாய்க்கலைன்னா ஹலோ புடலங்காய்..அவ்வளௌ தான் பிள்ளை விழுந்தடிச்சு வருவார் ... :)

Swathi Swamy

unread,
Nov 7, 2015, 9:31:55 AM11/7/15
to தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai, தமிழாயம்”

2015-11-05 15:28 GMT-05:00 சோழியான் <tamila...@gmail.com>:
எதுக்கும் 'இஞ்சேருங்கோ'ந்னு ஒருக்கா கூப்பிட்டுப் பாருங்கோவன்! :O :P


ஹஹஹஹா ....அப்படி நான் கூப்பிட்டால் உங்கட மச்சானுக்கு  ஹார்டட்டாக் வந்திடும்...   :)  .....

Swathi Swamy

unread,
Nov 7, 2015, 9:31:55 AM11/7/15
to தமிழ் பிரவாகம், பண்புடன், muththamiz, Thamizhthendral, vallamai, தமிழாயம்”
7) மச்சாள்  -  மாமா மகள், சகோதரன் மனைவி.

மச்சான் - மாமா பையன், தங்கை கணவர் .

உறவு முறைகளை சுட்டும் சொற்களில் மச்சாள் , மச்சான் என்பது ஈழத்து பேச்சு வழக்கில்   அத்தை , மாமாவின் மகள் , மகனை குறிக்க பயன்படுத்தும் வார்த்தைகள்.
அக்கா கணவரை அத்தான் என்று அழைக்கும் வழக்கம் எங்களிடமும் உண்டு. அதே போல் தங்கை கணவரை மச்சான் என்று அழைக்கிறோம்.

அதே போல் அத்தை பெண்ணையும் சகோதரன் மனைவியையும் மச்சாள் என்று அழைக்கிறோம்.

இரண்டு மூன்று சகோதரர்கள் இருந்து அவர்களுக்கு மனைவிமார் வரும் பட்சத்தில் அவர்களுடைய வயது அல்லது அவர்கள் கணவரின் வயதை வைத்து பெரிய மச்சாள் , சின்ன மச்சாள் , குட்டி மச்சாள் என்றோ அல்லது அந்த மச்சாளின் பெயரை சேர்த்தோ அழைப்போம்.

உதாரணம் : ஸ்ரீதேவி என்பவர் தம்பி உதயனின் மனைவி. நிறைய தம்பிமார் இருப்பதால் அவரை பெரிய மச்சாள் என்றோ சின்ன மச்சாள் என்றோ குறிப்பிட்டு அழைக்க இயலாது.. அத்தகைய சூழலில் ஸ்ரீதேவி மச்சாள் அல்லது தேவி மச்சாள் என்று அழைப்போம்.  அதே போலவே மச்சானுக்கும்...

1) இண்டைக்கு என்ர ஸ்ரீதேவி மச்சாளுக்கு பிறந்தநாள்.

(இன்று என்னுடைய தம்பிமனைவி ஸ்ரீதேவிக்கு பிறந்தநாள்)

2) எங்கட பெரிய மச்சாள் தான் எங்கட வீட்டில அம்மாவுக்கு அடுத்தபடி..

(எங்கள் வீட்டில் எங்கள் அம்மாவுக்கு அடுத்து அண்ணி தான் எல்லாமுமே)

3) என்ர மச்சான் இருக்கிறவரை எனக்கு எந்த பயமுமில்லை

(என்னுடைய மைத்துனன் இருக்கும் வரை எனக்கு எந்த கவலையுமில்லை)

4) எங்கட மச்சான் வீட்டுக்கு வந்த நேரம் எல்லாம் நல்லபடியாக நடக்குது

(எங்கள் மைத்துனர் வீட்டுக்கு வந்த வேளை எல்லா விஷயங்களும் சுபமாக நடக்கிறது)


Swathi Swamy

unread,
Nov 7, 2015, 9:31:55 AM11/7/15
to தமிழ் பிரவாகம், பண்புடன், muththamiz, Thamizhthendral, vallamai, தமிழாயம்”
8) குஞ்சி அப்பு, குஞ்சி அம்மா..

ஈழத்தின் உறவுமுறை சொற்களில் குஞ்சி அப்பு (குஞ்சப்பு) அல்லது குஞ்சி ஐயா (குஞ்சைய்யா) என்பது சித்தப்பாவைக் குறிக்கும்.

அதே போல் சித்தியை  சின்னம்மா , குஞ்சியம்மா (குஞ்சம்மா) அல்லது குஞ்சி ஆச்சி (குஞ்சாச்சி) என்று அழைப்போம்.

குடும்பத்தில் அப்பா அம்மாவுக்கு இளையவர்கள் என்பதால் குஞ்சு என்ற செல்ல அடைமொழி சேர்க்கப்பட்டு இந்த வார்த்தை வந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

என்னுடைய அப்பாவையும் , அம்மாவையும் அப்பாவின் சகோதரர்களின் பிள்ளைகள் முத்துச்சாமி குஞ்சப்பு , முத்துச்சாமி குஞ்சாச்சி ( கவனிக்கவும் திருமதி முத்துச்சாமி என்பது  போல் அப்பாவின் பெயரோடு அம்மாவின் முறையை சொல்லி கூப்பிடுவார்கள்; மற்றவர்கள் வீடுகளில் எப்படியோ தெரியாது.) 

ஆனால்  நானும் என் தம்பிமாரும் சித்தப்பா என்று தான் அப்பாவின் தம்பிமாரை கூப்பிட சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறோம். சித்தப்பாவின் மனைவியை சின்னம்மா என்றோ அன்ரி என்றோ தான் கூப்பிடுகிறோம்.

இதன். காரணம் நாங்கள் வாழ்ந்த இடங்களில் சித்தப்பா தான் வழக்கிலிருந்தது. அப்பாவின் குடும்பத்தினரும் அம்மா குடும்பத்தினரும் வாழ்ந்த ஊர்களில் குஞ்சியப்பு குஞ்சியம்மா வழக்கில் இருந்தது.  குஞ்சியம்மா குஞ்சியப்பு என்றே தங்கள் சித்தி சித்தப்பாவை இன்று வரை எனது அம்மா குறிப்பிடுகிறார். அதே அம்மாவும் அப்பாவும் தான் எங்களுக்கு சித்தப்பா ,சின்னம்மா அல்லது அன்ரி அங்கிள் என்று அழைக்கப் பழக்கியதும்  .

Swathi Swamy

unread,
Nov 7, 2015, 9:31:55 AM11/7/15
to muththamiz, பண்புடன், தமிழ் பிரவாகம், Thamizhthendral, vallamai, தமிழாயம்”

2015-11-07 7:58 GMT-05:00 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:
காணி நிலம் வேண்டும்... பராசக்தி காணி நிலம் வேண்டும் - பாரதியார்


அப்ப தமிழகத்தில் காணி என்ற சொல் பாவனையில் உண்டு தானே?

Swathi Swamy

unread,
Nov 7, 2015, 9:31:55 AM11/7/15
to தமிழ் பிரவாகம், பண்புடன், muththamiz, Thamizhthendral, vallamai, தமிழாயம்”
9)  வளவு / காணி  -

ஒருவரின் வீடு இருக்கும் நிலப்பரப்பையோ அல்லது வெறும் நிலப்பரப்பையோ வளவு அல்லது காணி என்று ஈழத்தில் கூறுவார்கள். 





முன் வளவு /முற்றம் என்று வீட்டின் முன் வாசலிலிருந்து  தெரு வரை யிலான (படத்தில் இருப்பது ) ஒவ்வொரு வீட்டினது நிலப்பரப்பையும் குறிப்பது. இதை தமிழகத்திலும் முற்றம் என்று சொல்வார்கள் என்றே நினைக்கிறேன். முறவாசல் என்பதும் இது தானா என்று பெரியவர்கள் தெளிய வைக்க வேண்டுகிறேன்.

கோடி / பின் வளவு -  கொல்லை, புழக்கடை என்று தமிழகத்தில் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். இது வீட்டின் பின் பக்க நிலப்பரப்பு.

உதாரணம்

1)  வளவு முழுக்க  பூஞ் சோலையா இருந்தது ஒரு காலம்; சுடுகாடா போனது இந்தக் காலம் .

2) இராசையா மாஸ்டரின் நாலுபரப்புக் காணியையும் மகேஸ் அக்கா வாங்கிட்டாவாம்.

( இராசையா என்ற வாத்தியாருக்கு சொந்தமான நாலு பரப்பளவு நிலப்பரப்பை மகேஸ் என்ற பெண்மணி  வாங்கிவிட்டாராம்)
 
3) பின் வளவுக்குள் மாமரங்ளும் பலாமரங்களுமா பழுத்து செழிப்பா கிடக்குது

( புழக்கடைப் பக்க நிலத்தில் மா, பலா மரங்கள் செழித்து  காய்த்து இருக்கின்றன)

4)  கோடிக்குள்ள நிண்டு இவளவை ரெண்டு பேரும் அப்பிடி என்ன குசு குசுத்துக் கொண்டு நிக்கிறாளவையள் ?

C.R. Selvakumar

unread,
Nov 7, 2015, 9:58:52 AM11/7/15
to தமிழாயம், muththamiz, vallamai
ஈழத்துத் தமிழர்கள் அகரத்தை சற்று ஒகரமாக ஒலிப்பதால் மக்கு மொக்கு ஆகியிருக்கலாம். 
மொக்கை என்பது கூர்மை இல்லாமை என்பது வேறொரு சொல். ஒருகால் மொக்கை என்பதுபோல்
மொக்கு உருவானதோ என்னவோ அறியேன்.  

அன்புடன்
செல்வா

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

N. Ganesan

unread,
Nov 10, 2015, 9:25:40 AM11/10/15
to வல்லமை, pira...@googlegroups.com, panb...@googlegroups.com, mutht...@googlegroups.com, thami...@googlegroups.com, மின்தமிழ், housto...@googlegroups.com


On Tuesday, November 10, 2015 at 5:27:46 AM UTC-8, சுவாதி சுவாமி wrote:
12) அரியண்டம் -  தொல்லை, தொந்தரவு, பிரச்சினை, அருவருப்பான, அசிங்கமான...என்ற அர்த்தங்களில் ஈழத்தமிழில் இந்த சொல் பாவிக்கப்படும்.

University of Madras Lexicon ல்
* n. Dial. var.of அரிகண்டம்².=அரியண்டம்
என்று தந்திருக்கிறார்கள்.


மல்லிகைப்பூ (மல்லி < முல்லை என்ற சொல்லின் மாற்றம்) மல்லியப்பூ என வருதற்போல,
அரிகண்டம் அரியண்டம் என க > அ ஆனது.

மல்லியப்பூவாட்டம் - வாலி பாட்டில்:


நா. கணேசன்
 
உதாரணம் :

1)  உதென்ன இவனோட பெரிய அரியண்டமாக் கிடக்கு.

( இதென்ன இவனுடன் பெரிய தொந்தரவாக இருக்கிறது)

2) இதில நிண்டு அரியண்டம் குடுக்காமல் அங்கால போ

( இங்கே தொந்தரவு தராமல் தள்ளிப் போ)

3)  இந்த அரியண்டத்துக்காக தான் நான் இங்க வாறதில்லை..

(இந்த பிரச்சினையின் நிமித்தமாகத் தான் நான் இங்கு வருவதில்லை)

4) சைக்..அந்த ஒழுங்கைக்குள்ள ஒரே சேறும் சகதியுமாய் ஒரே அரியண்டமாயிருக்குது.

(சே... அந்த சந்துக்குள் சேறும் சகதியுமாக அருவருப்பாக இருக்கிறது)

5) உப்பிடி அரியண்டக் கதைகள் கதைப்பாயெண்டால் நான் இங்க வந்திருக்கவே மாட்டன்..

( இந்த மாதிரி அசிங்கமாக பேசுவாயென்று தெரிந்திருந்தால் நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன்)


Swathi Swamy

unread,
Nov 10, 2015, 10:12:00 PM11/10/15
to தமிழ் பிரவாகம், பண்புடன், muththamiz, Thamizhthendral, vallamai, தமிழாயம்”
12) அரியண்டம் -  தொல்லை, தொந்தரவு, பிரச்சினை, அருவருப்பான, அசிங்கமான...என்ற அர்த்தங்களில் ஈழத்தமிழில் இந்த சொல் பாவிக்கப்படும்.

University of Madras Lexicon ல்
* n. Dial. var.of அரிகண்டம்².=அரியண்டம்
என்று தந்திருக்கிறார்கள்.

Swathi Swamy

unread,
Nov 10, 2015, 10:12:00 PM11/10/15
to தமிழ் பிரவாகம், பண்புடன், muththamiz, Thamizhthendral, vallamai, தமிழாயம்”
படலைக்கு பொருத்திய படங்கள் தெரியாவிட்டால்..இதில் கோப்பாக இணைத்திருக்கிறேன்,

2015-11-08 9:45 GMT-05:00 Swathi Swamy <mswat...@gmail.com>:
10)
படலை - Gate. முற்ற வாயிலை மூடிவைக்கும் படல் .

( தமிழகத்தில் தமிழில் எப்படி  Gate அல்லது படலையை சொல்வீர்கள் என்று கணேசன் ஐயா போன்றவர்கள் தான் சொல்ல வேண்டும். இணையத்தில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட தமிழக நண்பர்களிடம் கேட்டு கிடைத்த பதிலில் 99%  “கேட்” என்பது தான். ஒருவர் மட்டும் வாசல், வாயிற்படி என்று சொன்னார். ஆனால் அது மிகத் திருத்தமான சொல் என்று எனக்கு தோன்றவில்லை... வாசலை மூடி , திறக்க வல்ல ஒரு அமைப்பின் பெயர் தான் நான் எதிர்பார்ப்பது. வாசல் அல்ல; கதவு என்பது கூட வீட்டில் இருக்கும் அமைப்பு . )

படலை  என்ற சொல் அகராதியில் பல்வேறு அர்த்தங்களுடன் பொருந்திப் போயிருக்கிறது.  ஆனால் நம்மவர்கள் ஈழத்தில் ,  விக்கிபீடியாவில் சொல்லப்பட்டிருப்பது போல் வேலியால் அல்லது மதிலால் சுற்றிவர  வேயப்பட்ட ஒரு காணியின் நுழைவாயிலில் மூடி திறக்கவல்ல அமைப்பை  “படலை” என்கிறோம்.  அதாவது Gate என்பதன் (ஈழத்து) தமிழ் அர்த்தம் “படலை”

பெரும்பாலும் எங்கள் வீடுகளைச் சுற்றி தென்னோலைகளால், அல்லது பனை ஓலைகள், பனை மட்டைகளால் வேயப்பட்ட வேலிகள் இருக்கும் காணிக்குள்  நுழையும் வாசலில்  பனை ஓலை, பனம் மட்டை அல்லது மரதட்டிகளால் அடைப்பு போன்று செய்து கதவாக பொருத்தி வைப்பார்கள். காலப் போக்கில்  மதில் சுவர்கள் எழும்பத் தொடங்கிய பின்னர் இரும்பு, அல்லது அலுமியத்திலான படலைகள் Gate என்ற நவநாகரீக ஆங்கிலப் பதத்துடன் வந்துவிட்டாலும் இன்றளவும் படலை என்பதே அதன் தமிழாக்கமாக நாம் கொண்டிருக்கிறோம். 




படலை என்ற வார்த்தை அகநானூறு, புறநானூறு, ஐங்குறு நூறு , அரிச்சந்திர புராணம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் பல பாடல்களில் வந்திருக்கிறதாம்.

படல் என்ற சொல்லிருந்து  படலை உருவாகியிருக்கிறதாம்.



​உதாரணம் :

1) உப்பிடியே படலையை திறந்து போட்டு மூடாமல் வாறது?

2)  குமர் பெட்டையளுக்கு படலையடியில் என்ன கதை காரியம் வேண்டிக்கிடக்கு ?

3) அடியேய்..ஆமிக்காரங்கள் படலையடியில வந்து நிக்கிறாங்களடி ....

200px-Gate_on_deer_fencing_on_Meall_na_Faiche_-_geograph.org.uk_-_1761011.jpg
Coconut_Leaves_Fence_-_full.jpg
padalai_600.jpg
சங்கடப் படலை - 2.jpg

Swathi Swamy

unread,
Nov 10, 2015, 10:12:00 PM11/10/15
to தமிழ் பிரவாகம், பண்புடன், muththamiz, Thamizhthendral, vallamai, தமிழாயம்”
11)  ஒழுங்கை.- ஒடுங்கிய தெரு/ பிரதான  வீதியிலிருந்து பிரிந்து செல்லும் மிகச்சிறிய கிளை வீதி...
தமிழகத்தில் சந்து என்று இதை தான் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.





எங்கள் நாட்டில் ஒழுங்கைகள் நிறைய...அதுவும் ஈழப்பகுதிகளில் ஒவ்வொரு ஒழுங்கையின் தபால் திணைக்கள பெயர்களை விட அந்த ஒழுங்கைகளில் வசிக்கும் முக்கியஸ்தர்களை வைத்தோ அல்லது அங்கிருக்கும் இயற்கை சூழல், மரங்கள், வாசனை, அமைப்பு,கட்டிடம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து மக்கள் தமக்குள் ஒரு பெயர் சூட்டி வைத்திருப்பார்கள்...அந்தப் பெயர்கள் மிகவும்  சுவாரஸ்யமானவை. 

ஒழுங்ககளின் முகப்பில் அல்லது அந்தத்தில் பெரும்பாலும் ஒரு வைரவர் கோவில் இருக்கும் எங்களூர்களில்... வைரவர் எங்கள் காவல்தெய்வங்களில் ஒருவர். ஒரு சூலத்தை ஏற்றி அந்த சூலத்தை சுற்றி நாலு கல் வைத்து  கற்பூரம் கொளுத்தி வைத்தால் அது வைரவர் கோவிலடி ஒழுங்கை என்று பெயர் பெற்றுவிடும்.

ஒழுங்கையின் முகப்பில் வழிப்போக்கர்கள் இளைப்பாறும் மடம் ஏதாவது இருந்தால் அந்த ஒழுங்கை மடத்தடி ஒழுங்கை என்று பெயருடன் அடையாளப்படுத்தப்படும்.

அந்த ஒழுங்கையில் ஒரு பெரிய மருதமரம் பல வருடங்களாக இருக்குமாயின் எப்படியும் அந்த ஒழுங்கையை மருதடி ஒழுங்கை என்று தான் அடையாளம் சொல்வார்கள்... அந்த ஒழுங்கையில் பென்னாம் பெரிய ஒரு மருதமரம் நிக்கும்....என்று சுட்டிக் காட்டுவார்கள்....

பெரும்பாலும் ஒழுங்கைகள் தார் வீதிகளாக இருக்காது.  கிரவல் கல் வீதிகளாகவோ அல்லது மணல் வீதிகளாகவோ தான் இருக்கும்..   ஒழுங்கை என்பது பிரதான வீதிகளிலிருந்து ஊருக்குள் சென்று  சிறு சிறு கிளை வீதிகளாகவும் , ஒடுங்கிய தெருக்களாகவும் கிளைபரப்பி செல்பவையாகவும் இருக்கும்.

உடம்பின் நரம்புகளை போல் எமது ஊரின் நரம்புகள் இவை.

உதாரணம்:

1) ஒழுங்கைகளுக்குப் பெயர்போனது கொக்குவில். அவற்றின்தான் எத்தனை ரகம்? வண்டிப் பாதை, மணல் பாதை, ..முக்கித் தெரு, மூலைத் தெரு, குறுணி ஒழுங்கை., ஒற்றையடிப் பாதை, ஒன்றரையடிப் பாதை இப்படியாக இன்னும் பலப்பல. இப்படிப்பட்ட ஒழுங்கைகளோ புழுதிக்குப் பெயர்போனவை. பிறந்தநாள் தொடங்கி மேற்கூறிய ஒழுங்கைளோடு பழகியவர்களையே சிற்சில சமயங்களில் இவை ஏய்த்துவிடுவதும் உண்டு. பழையபடி புறப்பட்ட இடத்துக்கே கொண்டு போய்ச் சேர்க்கும் அசாத்தியத் திறமை படைத்தவை. இந்த ஒழுங்கைகளில் சைக்கிள் சவாரி செய்வதற்கு அபூர்வப் பழக்கம் வேண்டும். (நன்றி : தமிழ் விக்சனரி & கோடை மழை, அ.முத்துலிங்கம் சிறுகதை)

2) எங்கட ஒழுங்கையால ஆமிக்காரன் வாரான் போல கிடக்கு.

(எங்கள் சந்துக்குள் ஆமிக்காரன் வருகிறான் போலிருக்கிறது)

3) அந்த ஒழுங்கையில  ராமசாமி பரியாரியின் வீடு தான் ஒரே ஒரு மேல்மாடி வீடு.

(அந்த  சந்தில் இராமசாமி வைத்தியரின் வீடு மட்டும் தான் மாடி வீடு)

4) எங்கட வைரவர் தான் எங்கட ஒழுங்கைக்குள்ள ஆமிக்காரன் வராமல் பார்த்துக் கொள்ளுறார்..

(இது வரை காலமும்  எங்கள் தெருவை ஆமிக்காரன் வராமல் எங்களை காத்திருப்பது எங்கள் தெருவில் இருக்கும் வைரவர் பிரான் தான். )
lane.jpe
lane1.jpg

Swathi Swamy

unread,
Nov 10, 2015, 10:12:00 PM11/10/15
to தமிழ் பிரவாகம், பண்புடன், muththamiz, Thamizhthendral, vallamai, தமிழாயம்”

Neduchezhian T. Chezhian

unread,
Nov 10, 2015, 10:12:00 PM11/10/15
to தமிழாயம்
நல்ல முயற்சி - வாழ்த்துகள்
-முனைவர் தி.நெடுஞ்செழியன்


5 நவம்பர், 2015 ’அன்று’ 10:56 பிற்பகல் அன்று, Swathi Swamy <mswat...@gmail.com> எழுதியது:

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்

N. Ganesan

unread,
Nov 11, 2015, 9:16:03 AM11/11/15
to வல்லமை, pira...@googlegroups.com, panb...@googlegroups.com, mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, thami...@googlegroups.com


On Wednesday, November 11, 2015 at 5:58:58 AM UTC-8, சுவாதி சுவாமி wrote:

13) ஆக்கினை: 

அகரமுதலி - ஆக்கினை

(ஒலிப்புமுறை) ISO 15919: /ākkiṉai/


MTL: 

ஆக்கினை ākkiṉai , n. < ā-jñā. 1. Order, command, mandate; கட்டளை. 2. Punishment, penalty; தண்டனை. தலைக்குமிஞ்சின ஆக்கினை யில்லை. 3. A cakra between the eyebrows. See ஆஞ் ஞை.

 

ஆக்கினை என்ற சொல்லுக்கு அகராதியில் பலவிதமான அர்த்தங்கள் இருக்கின்றன. அவையாவன

கட்டளை
உத்தரவு
தண்டனை

எனினும்  ஈழத்துப் பேச்சு வழக்கில் இந்த ஆக்கினை என்ற வார்த்தை அன்றாட உபயோகத்தில் சிரமங் கொடுத்தல், தொந்தரவு செய்தல்  போன்ற அர்த்தங்களிலேயே பெரும் பாலும் இடம்பெறுகிறது.

எங்கள் தாலாட்டுப் பாடல் ஒன்றில் இப்படி வருகிறது.

”ஆராரோ ஆரீவரோ

ஆரடிட்து நீர் அழுதீர்?

அடித்தவரை சொல்லியழும்.

 ஆக்கினைகள் செய்து வைப்போம்.”

யோகாசனத்தில் “ஆக்கினை தவம்” என்றொரு முறை இருக்கிறதாம்.  (ரிஷி ஐயா இது பற்றி விளக்குவார் என எதிர்பார்க்கிறேன்)

ஆக ஆக்கினை என்ற பதம் மிகப் பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பது எனது ஊகம்.

உதாரணம்:

1) உதென்ன பெரிய ஆக்கினையா கிடக்குது?

(இது என்ன பெரிய தொந்தரவாக இருக்கிறது)

2) வரதன்ர ஆக்கினை தாங்காமல் தான் அவன்ர பெண்சாதி கிணத்துக்குள்ள குதிச்சவளாம்.

(வரதனின் கொடுமை தாங்க முடியாமல் தான் அவனுடைய மனைவி கிணற்றுக்குள் குதித்தாளாம்)

3) பள்ளிக்கூடம் போக மாட்டன் எண்டு இவன் ஒரே ஆக்கைனைப்படுத்துறான்.

(பாடசாலைக்குப் போக முடியாது என்று இவன் அடம்பிடித்து தொந்தரவு செய்கிறான்)

4) இப்பிடியே நீ அவளை ஆக்கினைப்படுட்திக் கொண்டிருந்தியெண்டால் ...ஒரு நாளில்லை ஒரு நாள் அவள் உன்னை கொன்றே போட்டுடுவாள்.

( இந்த மாதிரி அவளை நீ துன்புறுத்திக் கொண்டிருந்தால் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் அவள் உன்னைக் கொன்றுவிடுவாள்)

5) புதுச்சட்டை வாங்கித் தா எண்டு வீட்டில பிள்ளையளின்ர ஆக்கினை / ஆக்கினையை  தாங்க முடியவில்லை.

(புது உடை வாங்கித் தர சொல்லி வீட்டில் பிள்ளைகளின் தொந்தரவு / தொந்தரவை தாங்க முடியவில்லை )






N. Ganesan

unread,
Nov 11, 2015, 9:29:58 AM11/11/15
to வல்லமை, pira...@googlegroups.com, panb...@googlegroups.com, mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, thami...@googlegroups.com, மின்தமிழ், R Cheran, E. Annamalai, Dr. Krishnaswamy Nachimuthu, sirpi balasubramaniam, Iravatham Mahadevan, Ramachandran Nagaswamy

 அன்பின் சுவாதி,

மாட்டேன், மாட்டோம், மாட்டான், மாட்டன், ....

மாடுதல் என்னும் வினையின் எதிர்மறைத் தொடர் ஈழச் சொல்லாக உண்டா?
அங்கே நிக்கமாட்டன். அவன் செய்யமாட்டான். இவர்கள் மாட்டாதார் (முடியாதார்),
இச் செயலைச் செய்யமாட்டோம், ....

இதுபோல வாக்கியங்களில் மாட்- வினை எதிர்மறையாகவோ, உடன்பாடாகவோ
பயன்படுகிறதா? நன்றி.

நா. கணேசன்

On Mon, Nov 9, 2015 at 11:26 AM, E. Annamalai <annam...@yahoo.com> wrote:
>
> The classical forms cited, I think, parallel modern colloquial Tamil forms
> அவன் பேசுறான் இல்லை, which does not refer to a single occurrence, but refers to repeated occurrences.
>
> The parallel form to the Sri Lankan Tamil form is
>
> அவன் பேசுறதுல்லை 'he does not speak (as a habit)'  It differs from the form above as describing a habit vs repeated action.
>
> அவன் பேச மாட்டேங்குறான் 'he would not speak' refers to his will not to speak. I think this is called subjunctive in Latin. By anthromorphic extension, the subject could be inanimate in Harold's example. This has past form also: அவன் பேசமாட்டேன்னான். In both cases the forms could have their 'literal' sense also: He says / said 'I will not speak'
>
> Annamalai
>


While mATTEn2 or mATTAn2  is used in Tamil negation sentences, the underlying mATu- verb is used in positive affirmation in Kannada language. 

DEDR 4797 Ma. māṭuka to build, construct; māṭṭam making. Ko. ma·ṭm (obl. ma·ṭt-) fashion of doing things, action, wonderful thing; ma·ṛ- (ma·ṛy-) to do, act (< Badaga). To. soty mo·ḍ- to swear an oath (< Badaga). Ka. māḍu to do, make, perform, accomplish, cause, effect, prepare, manufacture, construct, build, execute, cultivate as a field; n. doing, making; māḍuvike, māḍuha doing, making, etc.; māḍisu to cause to make, do, perform, build, etc.; māṭa making, doing, work, business, performance, undertaking, manner, way, state of being nicely made, well-finished state, handsomeness, beauty, elegance; mār̤ =māḍu vb.; mār̤ke doing, business, manner. Koḍ. ma·ḍ- (ma·ḍi-) to do; ma·ḍï burned clearing in jungle where grain is grown. Tu. māḍā̆vuni to cultivate as land, display, parade. Te. māḍ(i)ki manner, way, mode. Go. (Ko.) māṛ- to make (Voc. 2804). DED(S) 3931.

Instead of mATu- in DEDR 4797, Tamil uses "mARu-" with the same meaning, "to do" in some places. 

முன்னின பணிமுறை மாற முந்துவார் (கம்பரா. ஊர் தேடு. 49). (they rush to do things planned earlier)
இங்கே, கம்பன் மாறுதல் = செய்தல் என்னும் பொருளைப் பயன்படுத்துகிறார்.

கனமிருக்குங் கந்தரரர்க்குன் கன்னிநா டீந்தென்
தினமிரப்ப தோவொழியார் தேனே - பனவனுக்காப்
பா மாறியார்க்கு உனைப்போற் பாரத் தனமிருந்
தாற்றாமாறி யாடுவரோ தான் (குமரகுருபரர்)
(பனவனுக்காகப் பா மாறியவர் = தருமிக்காகப் பாடல் செய்தவர் ஆகிய சிவபெருமான்.)

Often, the alveolar ṯ is realized as ṭ and ṟ. For example, (1) paṟai/paṭi "frame drum/grain measure" (2) paṭapaṭa/paṟapaṟa ideophone from which paṟa- "to fly", hence paṟavai 'bird'. maaṭu-/maaṟu- pair of verbs in Tamil and Kannada languages seems to contain alveolar ṯ  also. In many instances [1], the word-initial m- is lost, and consider the pair, aaṭu-/aaṟu- vs. maaṭu-/maaṟu-.

I have written more on maaṭu-/maaṟu- and compared with paṭapaṭa/paṟapaṟa in

N. Ganesan


Swathi Swamy

unread,
Nov 15, 2015, 7:37:42 AM11/15/15
to தமிழ் பிரவாகம், பண்புடன், muththamiz, Thamizhthendral, vallamai, தமிழாயம்”

சொதி, (பெயர்ச்சொல்.)



ஈழத்து சமையலில் உணவுகளின் பெயர்கள் கூட சிலது வித்தியாசமானவை;  எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது  சன் தொலைக்காட்சியில் கிராமத்து விருந்து என்ற சமையல் நிகழ்ச்சியில் பரவை முனியம்மா அவர்கள் கிராமத்து சமையல் குறிப்புகள் தருவார். அப்போது ஒரு நாள் கோவக்காய் பால் கறி செய்து காட்டினார்.  அந்த குறிப்பினூடாக  அவர் சொன்ன இன்னொரு விசயம் “கோவாக்காயில் மாத்திரமே பால்கறி செய்யக் கூடியதாக இருக்கும். கத்தரிகாய் போன்றவற்றில் பால்கறியே செய்ய முடியாது என்று சொன்னார்”.  ஆனால் எங்கள் வீடுகளில் ஆட்டிறைச்சிக் குழம்புக்கு காம்பினேஷனே கத்தரிக்காய் பால் கறி தான்  முதல் தேர்வாக இருந்து வருகிறது கால காலமாய்.

இது போல சொதியும் எமது சமையலில் மிக முக்கியமானது. தமிழ் நாட்டு மக்கள் சமையலில் நான் அதை கண்டதில்லை.ஆனால் இணையத்தில் தேடிய போது திருநெல்வேலி மாவட்டத்தில் திருமண விருந்துகளில் சொதி பரிமாறப்படுவதாக படித்தேன். நெல்லை சீமை சொதியின் சமையல் செய்முறை எம்மவர்களின் சொதியுடன் கொஞ்சம் வேறுபட்டிருக்கிறது. நெல்​லை சீமை சொதி

மாப்பிள்ளை சொதி என்று இன்னொரு வகைச் சொதிக் குறிப்பும் பார்த்தேன். இந்த சொதியில் பாசிப்பருப்பு கூட போடுகிறார்கள் . :)

நம்மவர்கள் செய்யும் சொதி குழம்பு போல் கெட்டியாக இருக்காது. நீர்த்தன்மை அதிகமானதாக இருக்கும்.

ஈழத்தில் தமிழில் சொதி என்றும் சிங்கள பிரதேசங்களில் ஹொதி என்றும் சொல்லப்படுகிறது. சொதிக்கு “ஆணம் “ என்று இன்னொரு பெயரும் உண்டு.

வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி , உப்பு , சிட்டிகை மஞ்சள் பொடி எல்லாம் சேர்த்து கப்பி பாலில்  கொதிக்க விட்டு மிளகாய் வெங்காயம் அவிந்ததும் இரண்டாம் பால் , கடைசியில் முதலாம் பால் விட்டு இறக்கி ஆறினதும் எலுமிச்சம் புளி பிழிந்து விட வேண்டும். இது தான் சாதரணமாக பால் சொதி செய்யும் முறை. வாசனைக்கு கடுகு, கறிவேப்பிலை தாளித்தும் போடுவார்கள்.

அதே  சொதியில் கப்பி பாலில் மீன் தலை , மீன் துண்டம் போட்டால் மீன் சொதி,
கருவாடு போ
ட்டால் கருவாட்டு சொதி,
உருளைக் கிழங்கு போட்டால் உருளைக்கிழங்கு
சொதியாகிவிடும் .

இதை  இடியப்பம், புட்டு, சோறு போன்ற உணவு வகைக்கு விட்டு பிசைந்து சாப்பிடுவோம். எங்கள் சமையலின் கறி வகைகள் குழம்பாக இருந்தாலும் கொஞ்சம் கெட்டியாக இருக்கும். அந்த கெட்டியான கறிகளுடன் இடியப்பம், புட்டு போன்றவை சாப்பிட்டால் தொண்டையை அடைக்கும்.. அதனால் சொதி நிறைய விட்டு கொஞ்சம் நீர்பதமாக பிசைந்து சாப்பிட சொதி உதவியாக இருக்கும்.. குழந்தைகள் உறைப்பான காரமான உணவு வகை சாப்பிட மாட்டார்கள்..அவர்களுக்கும், சரியாக பல் முளைக்காத குழந்தைகளுக்கும் , பல் விழுந்த தாத்த பாட்டிக்கும் உணவை மென்மையாக்கி பிசைந்து சாப்பிட சொதி உதவியாக இருக்கும்.

அது மட்டுமல்ல  காரமான கறிகளினால் தொண்டையிலும் குடலிலும் ஏற்படவல்ல எரிவிலிருந்தும் , புண்ணிலிருந்தும் தடுக்கும் ஒரு சமநிலை உணவாக சொதியை எடுத்துக் கொள்ளலாம்.

உதாரணம்:

1) இரவைக்கு  சொதியும் இடியப்பமும் தான் சாப்பாடு.
(இரவு உணவாக இன்று இடியப்பமும் சொதியும் இருக்கும்)

2)  புட்டு தொண்டைக்குள் அடைக்குது. கொஞ்ச சொதி இருந்தால் நல்லா இருக்கும்.

3) கறி ஒண்டுமில்லாட்டில் ரெண்டு உருளைக் கிழங்கை சீவி பொரிச்சு எடுத்து சொதியோட  சாப்பிடலாம்.
( சாத்தத்துக்கு குழம்பு எதுவும் இல்லையென்றால் உருளைக்கிழங்கு வறுவலும் சொதியும் சேர்த்து சாப்பிடலாம்)
chothy.jpe

Swathi Swamy

unread,
Nov 15, 2015, 7:37:42 AM11/15/15
to தமிழ் பிரவாகம், பண்புடன், muththamiz, Thamizhthendral, vallamai, தமிழாயம்”

13) ஆக்கினை: 

அகரமுதலி - ஆக்கினை

(ஒலிப்புமுறை) ISO 15919: /ākkiṉai/

ஆக்கினை என்ற சொல்லுக்கு அகராதியில் பலவிதமான அர்த்தங்கள் இருக்கின்றன. அவையாவன

கட்டளை
உத்தரவு
தண்டனை

எனினும்  ஈழத்துப் பேச்சு வழக்கில் இந்த ஆக்கினை என்ற வார்த்தை அன்றாட உபயோகத்தில் சிரமங் கொடுத்தல், தொந்தரவு செய்தல்  போன்ற அர்த்தங்களிலேயே பெரும் பாலும் இடம்பெறுகிறது.

எங்கள் தாலாட்டுப் பாடல் ஒன்றில் இப்படி வருகிறது.

”ஆராரோ ஆரீவரோ

ஆரடிட்து நீர் அழுதீர்?

அடித்தவரை சொல்லியழும்.

 ஆக்கினைகள் செய்து வைப்போம்.”

யோகாசனத்தில் “ஆக்கினை தவம்” என்றொரு முறை இருக்கிறதாம்.  (ரிஷி ஐயா இது பற்றி விளக்குவார் என எதிர்பார்க்கிறேன்)

ஆக ஆக்கினை என்ற பதம் மிகப் பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பது எனது ஊகம்.

உதாரணம்:

1) உதென்ன பெரிய ஆக்கினையா கிடக்குது?

Swathi Swamy

unread,
Nov 15, 2015, 7:37:42 AM11/15/15
to vallamai, தமிழ் பிரவாகம், பண்புடன், muththamiz, Thamizhthendral, தமிழாயம்”, மின்தமிழ், R Cheran, E. Annamalai, Dr. Krishnaswamy Nachimuthu, sirpi balasubramaniam, Iravatham Mahadevan, Ramachandran Nagaswamy

2015-11-11 9:29 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
மாட்டேன், மாட்டோம், மாட்டான், மாட்டன், ....


செய்ய மாட்டன் - (நான்)
செய்ய மாட்டம்- (நாம்)
செய்ய மாட்டான்-(அவன்)
செய்ய மாட்டாள்.(அவள்)
செய்ய மாட்டார்கள் (அவர்கள்)
செய்ய மாட்டார் (அவர்)

இதே போல்

தர மாட்டேன்/மாட்டம்/மாட்டான்/மாட்டாள்/மாட்டார்கள் /மாட்டார் - என்று எதிர்மறையாக உபயோகிப்போம்.

மாட்டார் - பிடிபடமாட்டார் என்றும் வரும் அல்லது மாட்டுப்படமாட்டார் என்றும் வரும்

அதே போல் மாட்டு - என்பது கொழுவ விடுதல் (சட்டையை கொக்கியில் மாட்டிவிடு அதாவது கொழுவி விடு என்று வரும்)

தூக்கு மாட்டிட்டாள் - தூக்கில் தொங்கி விட்டாள்

இந்த  மாட்ட என்ற பதத்தை வைத்து தனி இழை எழுத இருந்தேன்...இதிலேயே சரியாகிவ்ட்டது என்று நினைக்கிறேன் :)

Swathi Swamy

unread,
Nov 15, 2015, 7:37:42 AM11/15/15
to தமிழ் பிரவாகம், பண்புடன், muththamiz, Thamizhthendral, vallamai, தமிழாயம்”
குறிப்பு : இன்றைய சொல் பற்றி எழுதத் தொடங்கும் முன் ஒரு சின்ன விண்ணப்பம்..

தமிழ் இலக்கணம் படித்திருந்தாலும் இன்றுவரை அது எனக்கு ஒரு பெரிய இடியப்பச்சிக்கலாகவே இருந்து வருகிறது.
இன்றைய சொல் இலக்கணம் சம்மந்தப்பட்டது. கணேசன் ஐயா போன்றவர்கள் போல் என்னால் வேற்றுமை உருபு, அது இது என்று விளக்கம் சுயமாக தர தெரியாது.  அதனால் இது பற்றி இணையத்தில் தேடிப் படித்ததை வைத்தே இதை எழுதுகிறேன்.
பிழை ஏதும் இருந்தால் இலக்கணம் அறிந்த பெரியவர்கள் சுட்டிக் காட்டுங்கள். திருத்திவிடுகிறேன்.

13)  உது / உவர் /உவர்கள்/உவன்/உவள்/உவை/உங்கு/உப்பக்கம்

ஈழத்தில்
அது ,இது /
அவர் , இவர்/
அவர்கள், இவர்கள்/
அவன் , இவன்/
அவள், இவள் /
அவை,இவை/
அங்கு,இங்கு /
அப்பக்கம்.இப்பக்கம்/
அந்த ,இந்த/
அஃது, இஃது

என்ற சொற்பதங்களுடன் இன்றைய தெரிவான
உது/
உவர்/
உவர்கள்/
உவன்/
உவள் /
உவை/
உங்கு/
உப்பக்கம்/
உந்த
உஃது
என்ற வார்த்தைகள் பாவிக்கப்படுவது  இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.

இது என்பது (தன்னிலை வகை) கிட்டவாக, அண்மையில் இருக்கும் பொருளையும்,
அது என்பது (படர்கை நிலை) தூரவாக அல்லது தொலைவில் இருக்கும் பொருளையும் சுட்டிக் காட்டும் சொல்லாக பயன்படுத்துவது போல்
உது என்பது (முன்னிலை வகை) எமக்கு முன்னால் இருக்கும் ஒரு பொருளை சுட்டிக் காட்டுவதற்காக பாவிப்போம்.

அது போலவே உயர்திணையைக் குறிக்கும் சொற்களான உவர்,உவர்கள், உவன், உவள் என்பனவும், உவை,உங்கு.உப்பக்கம் என்பனவும் வரும்.

இந்த சொற்கள்  சுட்டுப் பெயர்களுக்குள் அடங்கும்.

Tamil-lexicon ல்
(That which is between the near and the more remote )
சேய்மைக்கும் அண்மைக்கும் மத்திம மானதைக் குறிக்கும் ஒரு சுட்டுப்பெயர் என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.

பொதுவாக

இது - தன்னிலை
அது -படர்கை
உது - முன்னிலை என்ற வகையில் எடுத்துக் கொள்ளலாம்.

அதே போல்

இது - இஃது
அது - அஃது
உது - உஃது  என்றும் வரும்.

அதே போல்

அதை, இதை என்பது போல் உதை என்றும்
அதனை , இதனை என்பது போல்  உதனை என்றும் வரும்.

(அவனை, இவனை, உவனை /
அவளை , இவளை,உவளை/
அவரை,இவரை,உவரை/
அவர்களை/இவர்களை/உவர்களை
அவை/இவை/உவை

பண்டைய இலக்கியங்களில் உவன், உவள் போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததை  தமிழ் விக்சனரி மூலம் அறிந்தேன்.

a)முன்நிற்பவன். பார்த்தானுவன். (பரிபாடல். 12, 55).

b1)முன் நிற்பவள். படையுவள் கண்காண்மின் (பரிபா. 11, 123)

b2) உவள்தரு மறையினொடு (கம்பரா. திருவவ. 127)

உதாரணம்:
உது :
  1.  உது என்ன புதினமாக் கிடக்கு?                                            (உது என்ன விநோதமாக இருக்கிறது  / உது என்ன புது விடயமாக இருக்கிறது? )
  2. உதுக்கு இப்ப நான் என்ன செய்ய?                                              (உதுக்காக நான் இப்ப என்ன செய்ய முடியும்?)
  3. உது தான் எனக்கு பிடிக்கிறதில்லை.                                   (உது தான் எனக்கு பிடிப்பதில்லை)
  4. உதை வைச்சு கொண்டு ஒண்டும் செய்யேலாது. (உதனை வைத்துக் கொண்டு ஒன்று கூட (எதுவுமே) செய்ய முடியாது)
  5. உந்தப் பக்கம்  ஒரு அலுவலா வந்தனான்.
  6. உந்த மனுசனுக்கு என்ன சொன்னாலும் மண்டையில ஏறாது..
  7. உங்கை நிண்டு என்ன விடுப்பு பார்க்கிறாய்?
  8. உங்காலப் பக்கம் ஏதும் பிரச்சினையோ?
  9. உவள் மகேசுவரிக்கு கலியாணமாம் வாற மாசம்.
  10. உவன் பரமு தான் வகுப்பில கெட்டிக்காரன்.
  11. உவர்களின்ர கதையை நம்பாதையும்..
  12. உவர் இப்ப என்னவாம் சொல்ல வாறார்?
  13. உவை இப்பிடித் தான் சொல்லுவினம் ஆனால் ஒண்டும் செய்யமாட்டினம்.

இந்த சொற்கள் எழுதத் தொடங்கினால் இப்படி நிறையவே எழுதிக் கொண்டு போகலாம்..
ஆனால் நான் எழுதியவை விளக்கமாக இருக்கிறதா என்று தான் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நான் எழுதியவற்றிலிருந்து  சிறிதாவது நீங்கள் உள்வாங்கிக் கொண்டீர்கள் என்றால் அதுவே எனக்கு கிடைத்த வெகுமதியாக எடுத்துக் கொள்வேன்.
நன்றி ! :)

Swathi Swamy

unread,
Nov 15, 2015, 7:37:42 AM11/15/15
to பண்புடன், piravakam, muththamiz, Thamizhthendral, vallamai, தமிழாயம்”

2015-11-13 10:38 GMT-05:00 Sankarkumar <ommur...@gmail.com>:
கப்பி பால்??????


தேங்காய் பூவை நீர் விட்டு பிழிந்து  1ம் பால், 2ம் பால், 3ம் பால்  , கடைசியாக கிடைப்பது கப்பி பால் .

Swathi Swamy

unread,
Nov 15, 2015, 7:37:42 AM11/15/15
to தமிழ் பிரவாகம், பண்புடன், muththamiz, Thamizhthendral, vallamai, தமிழாயம்”
16) 
       ஏலும் - இயலும் /முடியும்
       ஏலாது - இயலாது / முடியாது

ஏலும் என்ற வார்த்தையை கீழ்வரும் பாடல்களில் காணலாம்.
மாலும் நான்குவ தனனும் மாமறை 
நாலும் நாடரு நம்பர னேஎவ 
ராலும் நீக்கஅ ரிதிவ்வ ருத்தம்நின் 
ஏலும் நல்லருள் இன்றெனில் சற்றுமே

- வள்ளலார் - 1267
பாலும் தேனும் கலந்த தென்ன என்னுள் இனிக்க வே
பரம ஞான அமுதம் அளிக்கின் றாய்த னிக்க வே
ஏலும் உயிர்கள் எல்லாம் நினக்குப் பொதுவ தென்ப ரே
இன்று நோக்கி ஓர வாரன் என்பர் அன்ப ரே.
 
- திருவருட்பா

இல்லை நின் கழற்கு அன்பு அது என் கணே

ஏலம் ஏலும் நல் குழலி பங்கனே

கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு

என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்

எல்லை இல்லை நின் கருணை எம்பிரான்

ஏதுகொண்டு நான் ஏது செய்யினும்

வல்லையே எனக்கு இன்னும் உன் கழல்

காட்டி மீட்கவும் மறு இல் வானனே.


- திருவாசகம்


இந்த பாடல்களில் இடம்பெறும் “ஏலும்” என்ற வார்த்தைகளின் பொருள் இயலும் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கின்றனவா இல்லையா என்று பெரியவர்கள் தான் சொல்ல வேண்டும்.

ஆனால் எங்களூரில் ஒரு காரியத்தை செய்ய முடியும் என்றால் ஏலும் என்றும் செய்ய முடியாது என்றால் ஏலாது என்றும் சொல்வோம்.  கிழக்கு மாகாண உச்சரிப்பில் (மட்டக்களப்பு தமிழில் ) ஏலாது என்பதை ”ஏலா” என்று சொல்வார்கள்.

இயலும் / இயலாது என்ற வார்த்தை ஏலும் / ஏலாது என்று மருவியதா அல்லது பண்டைய தமிழ் வழக்கிலிருந்தே ஏலும்/ஏலாது என்ற தனிச் சொல் இருந்ததா என்று எனக்கு தெரியாது.

உதாரணம்

1) ஏலும் எண்டால் அந்த பெட்டையோட கதைச்சிட்டு வா பாப்பம்.  (சவால் விடும் தொனி)
{முடிந்தால் அந்த பெண்ணுடன் பேசிவிட்டு வா பார்க்கலாம்}

2) ஏலும் எண்டால் ஏலும் எண்டு சொல்லு ஏலாட்டில் ஏலாதெண்டு சொல்லிட்டு போவன்.  (முடியுமா முடியாதா என்ற தொனி)

{ இந்த விடயத்தை உன்னால் செய்ய முடியுமென்றால் முடியும் என்று சொல் , இயலாடு என்றால் முடியாது என்று சொல்லிவிட்டு போ}

3) என்ன தான் கோவமெண்டாலும் நாலு பேருக்கு நடுவில சொந்த்தக்காரனை விட்டுக் கொடுக்க ஏலுமே?

{எப்பேற்பட்ட பகையாக இருந்தாலும் சபையில் மற்றவர்கள் முன்னிலையில் உறவுக்காரனை விட்டுக் கொடுத்து பேச முடியுமா?}

4) என்னால இவ்வளத்தையும் எழுதி முடிக்க ஏலாது போலக் கிடக்கு.

{என்னால் இத்தனையையும் எழுதி முடிக்க இயலாது என்று தோன்றுகிறது}

5) ஏலாத விசயங்களுக்குள்ள மூக்கை நீட்டிப் போட்டு இப்ப தலையை சொறிஞ்சு கொண்டு நிண்டால் என்ன அர்த்தம்?

{ உன்னால் இயலாத விசயங்களுக்குள் மூக்கை நுழைத்துவிட்டு  கடைசி நேரத்தில் தலையை சொறிந்து கொண்டு நின்றால் என்ன அர்த்தம்?}

Swathi Swamy

unread,
Nov 16, 2015, 12:57:28 AM11/16/15
to தமிழ் பிரவாகம், பண்புடன், muththamiz, Thamizhthendral, vallamai, தமிழாயம்”
17) ஓங்காளம் / சத்தி  -  வாந்தி

இன்றைய சொல் ஓங்காளம் அல்லது சத்தி!

ஒக்காளம் என்பதே ஓங்காளமாக மருவியது என்று அகராதி காட்டுகிறது.

பொருள்

  1. வாந்தி குணம்
  2. வாயாலெடுத்தல்
  3. ஓக்காளிப்பு
  4. ஓங்காளம்

விளக்கம்

உண்ட உணவு உடல்நலம் இன்மையாலோ, ஒவ்வாமையாலோ, அல்லது வேறு காரணங்களாலோ செரியாமல் இரைப்பையிலிருந்து வாயின் வழியாக வெளியேறும் நிலை.

மொழிபெயர்ப்பு  (ஆங்கிலம்)

  1. vomiting
  2. retching

Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary

ஓக்காளம்




s. [prov. ஓங்காளம்.] Retching, heaving, the involuntary effort of the stomach in nausea, வாந்தி.
ஒன்றுகை, v. noun. Uniting, un ion, ஒன்றுதல்.


தமிழ் தமிழ் அகரமுதலி

சத்தி
ஆற்றல்; பிரபுசத்தி, மந்திரசத்தி, உற்சாகசத்திஆகியமூவகைஅரசர்ஆற்றல்கள்; மூன்றுபெருங்கொடி; கொடிநாட்டுங்குழி; சிவனதுஅருள்; உமை; சத்திதத்ததுவம்; ஞானவதி; வேல்; சூலம்; சொல்லாற்றல்; கந்தகம்; நெல்லிக்காய்க்கந்தகம்; நீர்முள்ளி; வாந்திசெய்கை; வேம்பு; கொம்மட்டி; பேய்ப்புடல்; விருந்து; குடை; இசைச்செய்யுள்.

தமிழ் நாட்டில் வாந்தி அல்லது வாந்தி எடுத்தல் என்பதற்கு நிகராக ஈழத்தில் ஓங்காளம் அல்லது சத்தி  என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது.

சில வேளைகளில் ஓங்காளம் என்பது வாந்தி வருவது போன்ற ஒரு அசூசையான நிலையையும் குறிக்கும் சொல்லாக பயன்படும்.  அதாவது வெளியேற்றப்படாத வாந்தி அல்லது வாந்தி வருவதற்கு அறிகுறியான நிலமையை சொல்வதாக இருக்கும் வார்த்தை.

உதாரணம்:

  1.   சாப்பிட்ட சாப்பாடு சரியில்லை... அப்போதையிலிருந்து ஓங்காளிச்சுக் கொண்டு இருக்குது.
  2. சத்தி சத்தியா எடுத்து  களைச்சுப் போனன்.
  3. ரோட்டோரம் எல்லாம் ஒரே நாத்தம். வயித்தை பிரட்டிக் கொண்டு  சத்தி வருது.


Swathi Swamy

unread,
Nov 16, 2015, 10:26:18 PM11/16/15
to தமிழ் பிரவாகம், பண்புடன், muththamiz, Thamizhthendral, vallamai, தமிழாயம்”
18 ) சுளகு - முறம்

அரிசியிலிருந்து உமியை பிரித்தெடுக்க அதாவது அரிசி புடைக்க பயன்படுத்தும் , பனை ஓலை , பிரம்பு போன்றவற்றைக் கொண்டு பின்னப்பட்ட  ஒரு உபகரணம்.

தமிழகத்தில் முறம் என்று வழக்கில் இருப்பது. சூர்ப்பம் என்றும் சொல்வார்களாம்.  ஈழத்தில் சுளகு என்று சொல்கிறோம்.

சுளகில் அரிசி புடைக்கும் அழகும், ரிதமும், அந்த சத்தமும் ஒரு அலாதியானது.  அதுவும்  வீட்டில் ஏதும் விசேஷங்கள் என்றால் பலகாரச் சூடு, மாவிடித்தல் போன்ற விசயங்களில் அண்டை அயலாரும், உற்றார் உறவினரும் வந்திருந்து கூடி  சமா நடத்தும் அழகே தனி தான். 

அதில்  நாலைஞ்சு பேர் வரிசையாக இருந்து சுளகில் அரிசி புடைப்பார்கள்.  அத்தனை பேரும் ஒருங்கே சொல்லி வைத்த மாதிரி  சைக் சைக் சாசா....சைக் சைக் சாசா என்ற ரிதத்தில் புடைக்கும் போது  ரிங் மாஸ்டர் இல்லாமல் ஒரு தாளக்கச்சேரி கேட்டது போலிருக்கும்... 




​உதாரணம்

  1. தனக்கு தனக்கு எண்டால் சுளகு படக்கு படக்கு எண்டுமாம்.  (பழமொழி)
  2. சுளகில் அரிசி புடைக்க துடங்கினால் ஒரே உமியும் கல்லுமாய் தான் வருது.
  3. சுளாகால புலியை அடிச்சு விரட்டின பரம்பரையடி என்ர பரம்பரை.
  4. கனகு வாத்தியாரை அவர்ர மனுசி சுளகாலேயே அடிச்சு நையப் புடைச்சிட்டாவாம்.

460px-Rice_winnowing_2.jpg
CN0266.jpg
sulaku.jpe

Swathi Swamy

unread,
Nov 16, 2015, 10:26:18 PM11/16/15
to vallamai, தமிழ் பிரவாகம், பண்புடன், muththamiz, Thamizhthendral, தமிழாயம்”, mintamil, housto...@googlegroups.com

2015-11-15 11:20 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஈழத் தீவின் மக்கள் பயன்படுத்தும் சமையலில் அரம்பைத் தாழை இலை நறுமணம் ஊட்ட வெகுவாகப் பயன்படுகிறது.
தமிழ்நாட்டு, கேரள கடற்கரை முஸ்லீம்களும் புலவுச்சோறு செய்யும்போது பயன்படுத்தும் மணப்பொருள் இந்தப் புலவுத்தாழை.
மலையாளத்தில் பிரியாணி-கைதை என்கின்றனர்.


ஆமாம் ஐயா...இரம்பை என்றே நாமும் அழைக்கிறோம்.

சிங்களத்தில் இரம்பே என்று சொல்வார்கள். சிங்கள பிரதேசங்களில் இது அதிகமாக கிடைக்கிறது. அவர்களு தமது சமையலில் அதிகமாக இதை பயன்படுத்துவார்கள்.

எமது சமையலில் அதிகமாக இறைச்சிக் கறிகளிலும், பிரியானியிலும் இது கட்டாயமாக இருக்கும். கறி கம கம வென்ற மணத்துடன் இருக்கும்
நன்றி ஐயா.

ஐயா இந்த பதிவை நான் ஒரு தொகுப்பாக சேர்த்துக் கொண்டிருக்கிறேன். அதில் உங்கள் குறிப்புகளையும் உங்கள் பெயருடனேயே செருகிக் கொள்ள அனுமதி தாருங்கள். என் வலைப்பூவில் பதிந்து  வைக்க விரும்புகிறேன்

நன்றி
அன்புடன்
சுவாதி

Swathi Swamy

unread,
Nov 16, 2015, 10:26:18 PM11/16/15
to vallamai, தமிழ் பிரவாகம், பண்புடன், muththamiz, Thamizhthendral, தமிழாயம்”, mintamil, housto...@googlegroups.com
இரம்பை என்று நாங்கள் சொல்லும்  இலை



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
irampai1.jpe
rambai 1.jpg

வேந்தன் அரசு

unread,
Nov 17, 2015, 8:27:17 AM11/17/15
to vallamai, தமிழ் பிரவாகம், panbudan, முத்தமிழ், தென்றல், தமிழாயம், மின்தமிழ், housto...@googlegroups.com
உரலில் இடிக்கும்போது இடிபடும் பொருள் சிந்தாமல் இருக்க முறங்களை அரணாக வைக்கும் வழக்கம் உண்டு. அதனால் சுளகு என்பதை mudguard எனும் சொல்லில் வரும் பொருளிலும் பயன்படுத்தலாம்

”நல்வேம்பின் இலை சுளகா” எனும் கலித்தொகை அடிகளல் அது பெறப்படும்


16 நவம்பர், 2015 ’அன்று’ 11:55 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
நிச்சயமாக பயன்படுத்தலாம். எந்த இழை என்பதற்கு தொடுப்புக் கொடுங்கள். நன்றி.

”கந்த ரம்பை” என திருச்செந்தூர்த் திருப்புகழில் அருணகிரிநாதர் அரம்பைத் தாழையைச்
சொல்வது அவருக்கு முன்னர் 1500 ஆண்டுக்காலமாக எப்படிப் பொருந்துகிறது
என நாளை எழுதுகிறேன்.

நா. கணேசன்

 
நன்றி
அன்புடன்
சுவாதி

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Nov 18, 2015, 1:03:15 AM11/18/15
to வல்லமை, thami...@googlegroups.com, pira...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, thamizh...@googlegroups.com


On Tuesday, November 17, 2015 at 8:32:13 PM UTC-8, சுவாதி சுவாமி wrote:
இடைச்செருகல்

19)  விசர்/பைத்தியம்/பனி.

மனநோயை  பனி என்றும் எங்களூரில் சொல்வார்கள்.
முகநூலில் இந்த வார்த்தையை சுரதா யாழவன் என்ற சகோதரர் நினைவூட்டினார்

மன நடுக்கம் என்ற பொருள்பட “பனி” என்கிறீர்கள் என நினைக்கிறேன்.
புற உலகப் பனியால் உடல் நடுங்கும். அதுபோல, அக உலகப் பனியால் உள்ளம் நடுங்கும்.
மனநோய்க்குப் பனி தமிழ்நாட்டில் கேட்ட்டிராத ஒன்று. தமிழின் பன்முகத்தன்மை நீங்கள்
தரும் சொற்களின் பொருள்கள். நன்றி

பனி-த்தல்:
[M. panikka.] To tremble; to be agitated; to quake; நடுங்குதல். உள்ளுநர் பனிக்கும் பாழாயினவே (பதிற் றுப். 13, 19). 6
 

உதாரணம்

6) அந்த மனுசன் பனி பிடிச்சு திரியுது

7) உனக்கென்ன பனியே?

2015-11-17 10:23 GMT-05:00 Swathi Swamy <mswat...@gmail.com>:
19)

இன்றைய சொல் “விசர்”.


விசர் / பைத்தியம் - மனநோய்,பைத்தியம்,
             நினைவிழந்த நிலை, பிரமை பிடித்த மனநிலை
              Mental Illness.

விசர் நாய் -  வெறி நாய்.  (A mad dog)


மனநோயை ஈழத்து தமிழில் விசர் அல்லது பைத்தியம் என்று குறிப்பிடுவர்.

பைத்தியம் என்ற சொல் நோயின் பெயராகவும்,  மனநோய் பாதிக்கப்பட்டவரை சுட்டும் சொல்லாயும் வழக்கிலிருக்கிறது.

விசரன் - மனநோயால் பாதிக்கப்பட்ட ஆண்.
விசரி    -  மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்.
விசரர்/ விசரன்கள்/விசரிகள் -  மனநோயால் பாதிக்கப்பட்ட பலர் .

மனநோயாளிகளை மட்டுமல்ல  முட்டாள்தனமாக செயல்படும் அல்லது பேசும்  ஒருவரை கூட  விசரன் அல்லது  விசரி என்று பொதுப்படையாக பேச்சு வழக்கில் குறிப்பிடுவர்.

உதாரணம் :

  1.  உனக்கு என்ன விசரே?
  2.  இந்த மனுசனுக்கு சரியான விசர்.
  3. நேற்று அங்கோடைப் பக்கம் போன போது நிறைய விசர் பிடிச்ச மனிதர்களை பார்த்தம்.
  4. விசர் நாய் கடிச்சால் பொக்கிளை சுத்தி கனக்க ஊசி போட வேணும்  .
  5. அங்கோடை, முல்லேரியா, தெல்லிப்பளை ஆசுபத்திரிகளில  தான் விசர் நோய்க்கு வைத்தியம் பார்க்கிறவை.

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 18, 2015, 1:14:48 AM11/18/15
to வல்லமை, thami...@googlegroups.com, pira...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, thamizh...@googlegroups.com
இந்நூல் இவ்விழைக்குப் பயன்படும் உங்களுக்கு:

N. Ganesan

unread,
Nov 18, 2015, 10:31:33 AM11/18/15
to வல்லமை, thami...@googlegroups.com, pira...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, thamizh...@googlegroups.com, mintamil, housto...@googlegroups.com


On Tuesday, November 17, 2015 at 7:23:26 AM UTC-8, சுவாதி சுவாமி wrote:
19)

இன்றைய சொல் “விசர்”.


விசர் / பைத்தியம் - மனநோய்,பைத்தியம்,
             நினைவிழந்த நிலை, பிரமை பிடித்த மனநிலை
              Mental Illness.

விசர் நாய் -  வெறி நாய்.  (A mad dog)


விசர் என்றால் மனநோய், பித்து என்ற பொருளில் தமிழ்நாட்டில் கண்டிலேன்.
ஆனால், தொடர்புடைய சொற்கள் உள்ளன.

வேசடை vēcaṭai , n. [T. vēsaṭa.] Sorrow; துக்கம். (யாழ். அக.)
வேசடை என்றால் தொந்தரவு, துன்பம் என்ற பொருள் உண்டு.

வேசரம்¹ vēcaram , n. [T. vēšaramu, K. vēsara.] See வேசறவு.
வேசறவு vēcaṟavu

n. < வேசறு-. 1. Weariness, fatigue; மனச்சோர்வு. 2. Sorrow; துக்கம். வேசறவொழிதி (காஞ்சிப்பு. தழுவக். 214).


இது தான் சென்னைத் தமிழில் bejaru (பேஜாரு) என மருவி வழங்குகிறது.

இந்தப் படுமழை ஒரே பேஜாரு,


வேசறிக்கை vēcaṟikkai

n. < id. See வேசறவு. இன்ப வீட்டினிடைத் துயின்றே வேசறிக் கை தீர்வேனோ (திருப்போ. சந். கொச்சகக்கலி. 4).

வேசறு-தல் vēcaṟu-

6 v. intr. cf. ஏசறு-. [T. vēsaṟu, K. bēsaṟu.] 1. To be weary, fatigued; மனஞ்சோர்தல். 2. To be vexed, distressed; வருந்துதல். என்பிழைக்கே குழைந்து வேசறுவேனை (திருவாச. 6, 50).


வேசாடல் vēcāṭal

n. perh. வேசறவு + ஆடு-. [K. pēcāṭa.] Mental agitation; மனக்கலக் கம். (யாழ். அக.)

வேசாடை vēcāṭai

n. See வேசடை. (யாழ். அக.)

வேசாறல் vēcāṟal

n. < வேசாறு-. [T. vēsāru, K. bējaru, M. bējāra.] 1. Weariness; சோர்வு. 2. Sorrow; துக்கம். நினைக்கினும் வேசாற லாறுமடி (அருட்பா, vi, அனுபவ. 44). 3. Becoming consoled or pacified; ஆறுகை. (யாழ். அக.) 4. Rest; களைப்பாறுகை. (யாழ். அக.)


வேசாடல் = மனக் கலக்கம், வேசறு- இத்தோடு தொடர்புடைய சொல் விசர் = பைத்தியம்.


நா. கணேசன்


 

மனநோயை ஈழத்து தமிழில் விசர் அல்லது பைத்தியம் என்று குறிப்பிடுவர்.

பைத்தியம் என்ற சொல் நோயின் பெயராகவும்,  மனநோய் பாதிக்கப்பட்டவரை சுட்டும் சொல்லாயும் வழக்கிலிருக்கிறது.

விசரன் - மனநோயால் பாதிக்கப்பட்ட ஆண்.
விசரி    -  மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்.
விசரர்/ விசரன்கள்/விசரிகள் -  மனநோயால் பாதிக்கப்பட்ட பலர் .

மனநோயாளிகளை மட்டுமல்ல  முட்டாள்தனமாக செயல்படும் அல்லது பேசும்  ஒருவரை கூட  விசரன் அல்லது  விசரி என்று பொதுப்படையாக பேச்சு வழக்கில் குறிப்பிடுவர்.

உதாரணம் :

  1.  உனக்கு என்ன விசரே?
  2.  இந்த மனுசனுக்கு சரியான விசர்.
  3. நேற்று அங்கோடைப் பக்கம் போன போது நிறைய விசர் பிடிச்ச மனிதர்களை பார்த்தம்.
  4. விசர் நாய் கடிச்சால் பொக்கிளை சுத்தி கனக்க ஊசி போட வேணும்  .
  5. அங்கோடை, முல்லேரியா, தெல்லிப்பளை ஆசுபத்திரிகளில  தான் விசர் நோய்க்கு வைத்தியம் பார்க்கிறவை.
2015-11-16 9:18 GMT-05:00 Swathi Swamy <mswat...@gmail.com>:

--

N. Ganesan

unread,
Nov 18, 2015, 10:41:17 AM11/18/15
to வல்லமை, pira...@googlegroups.com, panb...@googlegroups.com, mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, thami...@googlegroups.com, மின்தமிழ்


On Saturday, November 14, 2015 at 8:10:30 AM UTC-8, சுவாதி சுவாமி wrote:
16) 
       ஏலும் - இயலும் /முடியும்
       ஏலாது - இயலாது / முடியாது

ஏலலை என்ற வழக்கம் உண்டா? ஏலலை = இயலாது என்ற பொருளில்
தமிழ்நாட்டில் உண்டு,

N. Ganesan

unread,
Nov 18, 2015, 11:05:25 AM11/18/15
to வல்லமை, pira...@googlegroups.com, panb...@googlegroups.com, mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, thami...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com


On Monday, November 16, 2015 at 8:47:32 PM UTC-8, N. Ganesan wrote:


On Monday, November 16, 2015 at 6:19:18 AM UTC-8, சுவாதி சுவாமி wrote:
18 ) சுளகு - முறம்

அரிசியிலிருந்து உமியை பிரித்தெடுக்க அதாவது அரிசி புடைக்க பயன்படுத்தும் , பனை ஓலை , பிரம்பு போன்றவற்றைக் கொண்டு பின்னப்பட்ட  ஒரு உபகரணம்.

தமிழகத்தில் முறம் என்று வழக்கில் இருப்பது. சூர்ப்பம் என்றும் சொல்வார்களாம்.  ஈழத்தில் சுளகு என்று சொல்கிறோம்.

மதுரை, மதுரைக்கு தெற்கே எல்லா இடங்களிலும் சுளகு பாவிப்பில் உண்டு. சுளவு/சொளவு, சொளகு(அ) சுளகு தேடிப்பாருங்கள்.
பல செய்திகள் கிடைக்கும். சுளகு நடனம்: https://www.youtube.com/watch?v=jbqjHeo6cBI

சுளகு - சொல் பிறந்தது எவ்வாறு?
துள்- என்னும் வினை, துடி- என வரும். தாளக்கருவியின் தோல் (membrane) துள்-/துடி-த்தலால் துடி என்றும்,
துடி அடிப்பவன் துடியன் (பார்க்க: புறநானூறு) என்றும் தமிழில் சொல்கிறோம்.

த- > ச- என மாறும் சொற்கள் பல. இதே துள்- என்ற வேரினின்றும் துண்டி (துண்டி கணபதி) துதிக்கைக்குப் பெயர்.
ஒரிசாவில் விடங்கர் என்னும் முதலையின் பெயர். த- > ச- மாற்றம் ஆண் உடல் உறுப்புகட்கு உண்டு.

 சுளகுக்கு மீண்டும் வருவோம். துள்- > சுளகு. துடியின் தோற்போல மேலும் கீழும் அசைத்து தானியம் புடைப்பது.
துள்- தூள்+து = தூற்று. துள்- > சுள- என தமிழில் ஆனாற்போல, சகர வர்க்கத்தில் ஒன்றான ஶ வடிவத்தில்
ஸம்ஸ்கிருதத்தில் இத் தமிழ் வினைச்சொல் பெயர்ச்சொல் படைக்கக் காரணமாக விளங்குகிறது.

தூள்-ப (< துள்-), இதனை வடக்கே tuur̥pa என vocalic vowel கொண்டு
எழுதுவர். காலப்போக்கில் tuur̥pa > zuurpa (ஶூர்ப) ஆகியுள்ளது.
நாளணன் (நாள் = கருமை) நாரணன் என ஆதலும், கோடு > கௌடீ > கௌரி ஆதலும்,
ஶாடை (தமிழில், ஆடை) > சாரி (ஆங்கில வார்த்தை: saree) ஆதலும் இவ்வாறே.
i.e., vocalic becoming an ordinary r.

ஶூர்பகர்ணர் = கணபதி; ஶூர்பணகா = முறநகை கொண்ட ராவணன் தங்கச்சி.
ஶூர்ப என்பது தூற்று (துள்-) என்னும் அடிப்படையான தமிழ் வினைச்சொல்லை
வேராக உடையது. http://www.kamakoti.org/tamil/dk6-46.htm

பிற பின்!
நா. கணேசன்



முறம் என்று சொல்வோம். சூர்ப்பம் என்று யாரும் சொல்வதில்லை. அது வடசொல், தூற்று- எனும் வினைச்சொல் தருவது என்பர் வடமொழி அறிஞர்.
தானியத்தைப் பதர் நீக்க முறத்தால் தூக்கித் தூற்றுவது.

சூர்ப்பம் போல நகம் உள்ளவள் சூர்ப்பணகை. சூர்ப்பம் போல் காதுள்ளவர் கணபதி.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 18, 2015, 8:35:11 PM11/18/15
to வல்லமை, pira...@googlegroups.com, panb...@googlegroups.com, mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, thami...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com


On Monday, November 16, 2015 at 9:17:29 AM UTC-8, சுவாதி சுவாமி wrote:


2015-11-16 9:39 GMT-05:00 Swathi Swamy <mswat...@gmail.com>:

2015-11-15 11:20 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஈழத் தீவின் மக்கள் பயன்படுத்தும் சமையலில் அரம்பைத் தாழை இலை நறுமணம் ஊட்ட வெகுவாகப் பயன்படுகிறது.
தமிழ்நாட்டு, கேரள கடற்கரை முஸ்லீம்களும் புலவுச்சோறு செய்யும்போது பயன்படுத்தும் மணப்பொருள் இந்தப் புலவுத்தாழை.
மலையாளத்தில் பிரியாணி-கைதை என்கின்றனர்.


ஆமாம் ஐயா...இரம்பை என்றே நாமும் அழைக்கிறோம்.

சிங்களத்தில் இரம்பே என்று சொல்வார்கள். சிங்கள பிரதேசங்களில் இது அதிகமாக கிடைக்கிறது. அவர்களு தமது சமையலில் அதிகமாக இதை பயன்படுத்துவார்கள்.

அரம்பை என தமிழ் இலக்கியம் அழைக்கும் தாழை. 

(search for pandan, from this the genera name pandanus is formed in European languages).


-----------------

வாசத் தாழை தான் புலவு நாற்றத்தை மாற்றும் என சங்கப் புலவர்கள் பதிவு செய்தனர்.
தாழை இலைகள் அரம் போல் இருப்பன. தாழை சாதிகளிலே ஒரே தாழை தான்
இலைகளிலும் நறுமணம் அளிப்பது. அதைக் கறியூட்டியாகச் செய்து அரம்பை
என காரணப்பெயரும் அளித்தனர் பண்டைத் தமிழர். நாம் ரம்பை எனச் சொல்லும் தாழை
இலை தான் இது. அரம்பை பெயரால் ஊர்களும், சிந்தாமணி, திருப்புகழ் நூல்களும்
இந்த வாசத் தாழையை அழைத்தல் சிறப்பு. உலகிலேயே தமிழின் பழைய இலக்கியங்களில்
புலாச்சோறு செய்வதும், தாழை புலவு நாற்றத்தை அழிப்பதும் பதிவாகியிருப்பது நம் தமிழில்தான்.
(அ)ரம்பை என்ற தமிழ்ச் சொல்லே பல்லாயிரம் ஆண்டுகளாய் இந்திய மொழிகளில்
இந்த புலவுத் தாழைக்கு இருப்பதால் தமிழரின் சமையற்கலை கண்டுபிடிப்பு எனக் கொள்ளலாம்.

நா. கணேசன்

வாரியார் சுவாமிகள் “கந்த அரம்பை” என்னும் தொடருக்கு வாழை எனச் சொல்லும்
பொருளைவிட, நெய்தலின் கடற்கரைத் தாவரமாம் அரம்பைத்தாழை எனக் கொள்ளல்
சிறப்பு என நண்பர் லக்ஷ்மிஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு விளக்கி எழுதினேன். அம் மடல்:

Dear LS,

Variar Swamikal's trying to explain the "kantarampai" as "vaazai with tuber"
is just because the meaning of arampai as one word of a kind of
pandanus got lost over
Time. We see this in "arampaiyaGkOTu", the Tevaram site on the Cooum
river near Madras.
All the water woes now in Chennai are buildings in these river
flooding areas, and expanding
the drainage facilities of the runoff from rains.

I checked and there is no verse in Tamil literature describing banana
tree with the "kizhangu".
In the Tiruchendur Tiruppukaz under discussion, it is all plants that
naturally grow on the sea shore in
south India. Among these plants, panadanus occupies the pride of
place. Being fragrant screwpine
Arungirinathar sings as "kanta arampa" which is "gandha" arampai (=
tAzhai or kaitai).
Also, see arampai as tAzhai is Ciivaka CintaamaNi verse, with
description of Neytal landscape,
along with Punnai trees. This is repeated in Periya Puranam as well.

Yours,
NG


2015-11-16 16:13 GMT-08:00 L Srinivas <lsri...@gmail.com>:
LSrinivas wrote:
> I dont think rampe is a Hindi word. In Hindi, the white variety is called
> kevaDa (केवडा) while the yellow one is called ketaki (केतकी). You may want to
> check the Marathi word for it - kevaDa and kevaDa water are rather popular
> among people in Maharashtra.

May be. But web pages fragrant pandan leaves and recipes give rampe
as a Hindi word too. See a botant's page on this,
http://gernot-katzers-spice-pages.com/engl/Pand_ama.html
In Mughal recipes, did the chefs employ rampe leaf in biryanis?
Another question is, the Arabic term "ak-Kadi" (Arabic: الكادي‎) is
so close to Tamil and Malayalam's Kaida, and the Arabs take the
Dravidian term, say, when they came to trade in Muziri pattinam etc.,?

>btw, the late Kripananda Variyar glosses 'கந்தரம்பை' as கிழங்குடன் கூடிய வாழை'
>in that verse on Thiruchendur.
> Is 'rampe' perhaps a Sinhala word? Srini

Yes, I mentioned it in the MinTamil and Vallamai threads.
Being a Saivaite (both in religion and food habits), Sri. Variyar
may not be aware of how Ambur mutton biryani, Jaffna chicken biryani,
oDiyal kuuzh, Kaayal kanji, Batticola prawn curry, ... are made
with rampai leaves in Neytal seascape folks.

However, looking at the first 15 centuries of Tamil texts, it is
very common to see the fragrant screwpines are mentioned for their
fragrance when Neytal lands are described. Sangam texts tell how they
remove the stench (pulavu) smell of the sea and sea produce. I would
take
Tiruppukaz's "kanta (a)rampai" as same as Tevaram's mentioning
"kantam" (< gandha)
along with pandan trees. Look in Tevaram verses of temple sites
Rameswaram, Tiruchendur for description of Neytal landscape.
Also, compare the Ciivaka CintaamaNi verse with that of Periya PuraaNam
verse. Obviously taking "arampai" as banana tree does not fit well
for Cintamani as banana flowers are not like stars in the dark sky.
But arampai, if taken as tAzhai screwpines, and their flowers fit
with the Nature to explain CintaamaNi verse. Also, arampai-amkODu
on the Kuuvam river banks, must have has lots of tAzhai growing naturally.

N. Ganesan

In Tamil,
https://groups.google.com/forum/#!msg/vallamai/MeUVJPnDL2A/9udmHXxtCwAJ

கடலலை மோதும் இடங்களில் எக்கரில் செழித்து வளர்வது தாழை. அதன் பூவும்,
கனியும், மடலும் மிக மணமுடையது. அரம்பைத் தாழை என்னும் தாழைவகையின்
இலைகளும் நறுமணம் கூடியவை. தாழையின் முகிழ் கருவி உள்ளபோதே அறிந்து
வண்டுகள் செல்லும் என்கிறது சங்க இலக்கியம். ஓலைப்பூ என்னும் தாழம்பூவின்
மடல்களுக்கிடையில் சோறெனப்படும் இழுது போன்ற உறுப்பு ஒன்று உண்டு.
இந்தியாவிலேயே பழைய லிங்கம் - மீன யக்ஷனின் மேல் நிற்கும் வருண விடங்கர்,
பெரிய மழுவைக் கையில் ஏந்தி நிற்கும் “மழுவாள் நெடியோன்” (மதுரைக்காஞ்சி)
- தாழம்பூவின் இழுதால் அலங்கரிக்கப்பட்டுளது நெய்தல் திணைத் தெய்வமான
வருண வழிபாட்டின் ஓர் அம்சம் ஆகும். நெய்தல் திணைப்புலக் கடவுள்
வருணனுக்கான வடிவம் எனலாம் (தொல்காப்பியம்). பின்னாளில், இருக்குவேத
வருணனின் பண்புகள் சிவபிரானுக்கு ஆகின்றன. அப்போது, தாழை சிவனுக்கு ஆகாது
என்ற கதைகள் எழுகின்றன. ஆண் தாழம்பூக்களிலே உள்ள மடல்களின் கட்கத்தில்
கிளைத்த சோற்று மகரந்தக் கிளைகள் எண்ணற்ற மகரந்தப்பைகளைத்
தாங்கிநிற்கும். இந்த மகரந்தக்கிளைகள் குடிமல்லம் வருண விடங்கர்
தலையலங்காரமாய் திகழ்கின்றன.

“வீழ்தாழ் தாழை ஊழுறு கொழுமுகை
குருகுளர் இடத்தின் விரிபுதோடு அவிழும் கானல்”

“கொழுமுள் மடற்றாழைக் கூன்புற வான்பூ
விடையுள் இழுதொப்பத் தோன்றிப்
புடையெலாந் தெய்வம் கமழும்”

சமையலில் புலாநாற்றத்தை மாற்ற இலங்கை, இந்தியா, தென்கிழக்கு ஆசிய
நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படும் அரம்பை (தாழை) ரம்பை என
இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் அழைக்கப்படுகிறது.

“பேஎய்த் தலைய பிணரரைத் தாழை
எயிறுடை நெடுந்தோடு காப்பப் பலவுடன்
வயிறுடைப் போது வாலிதின் விரீஇப்
புலவுப் பொருதழித்த பூநாறு பரப்பின்” (அக. 130)

“வீழ்தாழ் தாழைப் பூக்கமழ் கானல்” (நற். 78)

“                           வெண்பூத் தாழை
எறிதிரை உதைத்தலின் பொங்கித் தாது சோர்பு
சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும்
மணங்கமழ் கானல்” (நற். 203)

வாழை பொதுவாக குறிஞ்சித் திணையின் குன்றுகளில்
சொல்லப்படும் தாவரம் ஆகும்:
”வாழையஞ் சிலம்பில் வம்புபடக் குவைஇ” நற். 176:7
“படுநீர்ச் சிலம்பில் கலித்த வாழை” நற். 188:1
”வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில்” (நற். 222:7)
“வாழை ஓங்கிய தாழ்கண் அசும்பில்
படுகடுங் களிற்றின் வருத்தம் சொலிய
பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல் (அக. 8:9-11)

கம்பன் இம் மரபிலே, குறிஞ்சி வரைகளைப் பாடுகையில்
வாழை என்ற பொருளில் பாடுகிறான்:
”துன் அரம்பை நிரம்பிய தொல் வரை
துன் அரம்பையர் ஊருவின் ”

---------------------------------

ஆனால், நெய்தல் திணையின் கடல்கரையைச் சொல்லும்போது
புன்கு, தாழை, கண்டல் போன்றவற்றைப் பாடுவன தமிழ்நூல்கள்.
நெய்தல் நிலப் பாடல்களில் அரம்பை (ரம்பை) என்பது தாழை
என்று தெளிய நெய்தல்திணைப் பாடல்களை கி.பி. 15-ஆம்
நூற்றாண்டுவரை பார்க்கலாம். கூவம் ஆற்றின் கரையிலே
அரம்பையங்கோட்டூர் என்னும் தேவார ஸ்தலம் உள்ளமையும்,
அதன் பழம்பெயர் ”அரம்பைஅம்கோடு” எனவும் பல ஆன்றோர்
எழுதியுளர். அரம்பை/ரம்பை என்பது தாழை வகை என அறிய
சிந்தாமணிப்பாடல் போன்றவை துணை. கந்தரம்பை (கந்த அரம்பை)
என திருப்புகழில் நெய்தல் தலம் திருச்செந்தூர்த் திருப்புகழில்
அருணகிரியார் பாடினார்.ரம்பை என்னும் பிரியாணி-கைதை பற்றி
அறியாததால் சைவர்கள் பொருள்கூற இடர்ப்பட்டுள்ளனர் எனவும்
தெரிகிறது. கடற்கரையிலே இருப்பது அரம்பை என்னும் வாசத் தாழை
என்றால் பொருள் சிறக்கும்.

இந்த திருப்புகழ்ப் பாடலைப் பாருங்கள்:
http://thiruppugazhamirutham.blogspot.com/2012/09/52.html
”சந்து அடர்ந்து எழுந்து சென்று அரும்பு மந்தரம் செழும் கரும்பு
கந்தரம்பை சேண் பதம் கொள் செந்தில் வாழ்வே”
கந்த அரம்பை = கந்த (gandha) அரம்பை = வாசத் தாழை, நெய்தல் கரையிலே செழிப்பது.

"கந்தம் உந்தக் கைதை பூத்துக் கமழ்ந்து சேரும் பொழில்
செந்து வண்டு இன் இசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள்" (தேவாரம்)

”வனமல்கு கைதை வகுளங்க ளெங்கு முகுளங்க ளெங்கு நெரியச்
சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு திருமுல்லை வாயி லிதுவே.” (தேவாரம்)

சீவக சிந்தாமணி:
இறு நுசுப்பின் அம் நலார் ஏந்து வள்ளத்து ஏந்திய
நறவம் கொப்புளித்தலின் நாகு புன்னை பூத்தன
சிறகர் வண்டு செவ்வழி பாட மாடத்து ஊடு எலாம்
இறை கொள் வானின் மீன் என அரம்பை முலையின் இருந்தவே

இளைய புன்னை மரங்கள் இட்டிடை மகளிர் மதுவைக்
கொப்புளிக்க பூக்கள் பூத்தன. அஞ்சிறை வண்டுகள் அதுகண்டு
செவ்வழிப் பண்கள் பாடின. மாடங்களின் மேலே தெரியும்
விண்மீன்கள் போல தாழை (= அரம்பை) பூக்கள் பூத்தன.
குறிப்பு: இங்கே, அரம்பை = வாழை என்று கொள்ளல் பொருந்தாது.
மாடங்களின் மேலே தெரியும் விண்மீன்கள் வெண்ணிறமானவை.
ஆனால், வாழையின் பூவோ விண்மீன்கள் நிறமன்று.

சீவக சிந்தாமணிப் பாடலை, அப்படியே உள்வாங்கிப்
பாடுகிறார் சேக்கிழார்:
கழிப் புனல் கடல் ஓதமுன் சூழ்ந்து கொண்டு அணிய
வழிக் கரைப் பொதி பொன்னவிழ்ப்பன மலர்ப் புன்னை
விழிக்கு நெய்தலின் விரை மலர்க் கட்சுரும்பு உண்ணக்
கழிக்கரைப் பொதி சோறு அவிழ்ப்பன மடற்கைதை

தேவரின் “அரம்பை” பெரியபுராணத்தில் கைதை.
நெய்தல் நிலக் கவிஞர் வாகரைவாணனும் சிந்தாமணி, பெரியபுராணம்
போலவே புதுக்கவிதையில் புன்னையும், அரம்பைத் தாழையும் சொல்கிறார்:
”கடற்கரைப் பூக்கள்

கடலோரம், புன்னைக்
காடு செந்தாழை
மடல் மீது தண்ணீர்
மணி பட்டு உருளும்

உருளும் மணி கண்டு
ஓடி வரும் மீன்கள்
திரளும், பின் திகைக்கும்
தின்ன இரை இல்லை!

குண்டு குண்டாக
குரும்பட்டி மாலை
கொண்ட இளந் தென்னை
குளிர் கழுத்தொளிரும்!

ஓலை தனைக் குழலாய்
ஊதும்! இசை வெள்ளம்
சோலை அது இன்பச்
சொர்க்க புரியாகும்!”

திருச்செந்தூர்த் திருப்புகழில் “கந்தரம்பை” என்பது வாசமணத் தாழை என்பதை
கடற்கரைத் தலமான ராமேசுவரத் தேவாரம் கொண்டும் விளக்கலாம்.
http://saivasiddhanta.in/Paadal_petra_thalam_thoguppu.php?page=37
முதற் பாட்டிலேயே தாழையைச் சொல்கிறார்:
”முலை வளர் பாகம் முயங்க வல்ல முதல்வன்; முனி;
இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம்”

இரண்டாம் பதிகத்திலும்:
”மலை வளர் காதலி பாட, ஆடி மயக்கா வரு மாட்சி
இலை வளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம்”

சங்க இலக்கியத்திலும் பின்னரும் மீன், ஓங்கில், திமிங்கிலம், சுறா, கராம், ...
இவற்றால் துர்நாற்றம் வீசும் கடலின் இயல்பை புலவு நாறும் கடல் என்பர்.
ஆனால் இராமேச்சுரத்தில் ரம்பை, தாழை போன்றவற்றால் கடம்
நறுமணம் வீசி மணக்கிறது என்கிறார்.

உரை உணராதவன், காமம் என்னும்(ம்) உறு வேட்கையான்,
வரை பொரு தோள் இறச் செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய
விரை மருவும் கடல் ஓதம் மல்கும் இராமேச்சுரத்து
அரை அரவு ஆட நின்று, ஆடல் பேணும் அம்மான் அல்லனே!
http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=3010
”விரை மருவும் கடல் - புலவு நாறுங்கடலை இங்ஙனம் கூறியது. இறைவனைத்
தொழ உவந்து நீராடிய அரம்பை மாதர் முதலியோரது மெய்ப்பூசல் என்க. ”

மாதர் மெய்ப்பூச்சுக்கு அரம்பைத் தழை, தாழை மகரந்தம் இன்றும் பயன்படுகிறது.
தமிழ் இலக்கியத்தின் முதல் 15 நூற்றாண்டுப்பாடல்களால் நெய்தல் ஸ்தலம்
ஆகிய திருச்செந்தூர் திருப்புகழில் வாச நறுமண தாழையை “கந்தரம்பை” என்று
விளக்கினால் சிறப்படையும். அரம்பைஅங்கோடு என்னும் தேவார ஊரும், அதன்
பேரும் கூறும் பொருள் விளக்கமும் அரம்பை = ரம்பை தாவரம் என நிற்கிறது.

அனைவர்க்கும் கந்த சஷ்டி திருநாள் வாழ்த்துடன்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 21, 2015, 9:38:07 AM11/21/15
to வல்லமை, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, thami...@googlegroups.com, mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com
On Friday, November 20, 2015 at 10:20:08 AM UTC-8, சுவாதி சுவாமி wrote:
முகநூலில் இப்பதிவை பகிர்ந்தேன். அதன் பின் மட்டுநகர் தமிழில் வேறு பெயர்களிலும் விளக்குமாறுக்கு இருப்பதை அறியமுடிந்தது.

  அவையாவன:  கட்டுமாறு,
                                வாருக்கட்டு,
                                ஈர்க்கில் கட்டு,
                                  வார்கல்

இன்னொரு முக்கியமான சொல் விளக்குமாறுக்கு உண்டு. கொங்குவழக்கான இதனைக் கொண்டு
ஈழம் என்ற சொல்லின் பொருள் விளக்கமடைகிறது. ஆ. வேலுப்பிள்ளை போன்றோர் இதுபற்றி
எழுதிய மடல்கள் உண்டு.

பிற பின்.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Nov 21, 2015, 10:13:10 AM11/21/15
to வல்லமை, mintamil, housto...@googlegroups.com, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com
Swathy Swamy wrote: 
2) காலமை எழும்பினதும் தும்புத்தடியால் வீடு பெருக்காவிட்டால்  வீடு விடியாது.


 தமிழ்நாட்டிலே காலமை என்பதைக் ’காலமே’ என்போம்.

அங்கே போகுங்கால்/போகுங்காலத்தில்/போகுங்காலை என்பது போல,
அங்கே போகும்போழ்/போகும்பொழுது/போகும்போ(ழ்)து/போகும்போது என வருதல் காணலாம்.

பொழுது என்றால் சூரியன். பொழுது விழுந்துவிட்டது என்றால் சூரியன் மறைந்தனன் எனப் பொருள்.
அதே போல, காலம்/கால்/காலை என்றாலும் சூரியன் என்ற பொருள் உண்டு. காலம்பெற என்கிறோம்,
அதாவது சூரியன் உதய காலம். அதாவது, காலம்பெற. வானம் என்னும் பெருவெளி சூரியனை (=காலம்)
பெறும் காலம். காலம்பெற = விடிகாலை. காலம்/காலை என்னும் சூரியன் மறையும் காலம்
சாயுங்காலம்/சாயுங்காலை சாயங்காலம்/சாயங்கால் என்பதும் உண்டு.

கால் (அ) காலை = Time.  காலுதல் = செல்லுதல்; கால்+து = காற்று  இந்திய காலக் கணக்கீடு சூரிய உதயத்தில் 
இருந்துதான் என்பதால், காலை= காலம் என்பது விடிகாலை. சாயுங்காலை = சாயந்தரம் என்பதும் நோக்குக. 
"அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல்" (நாலடி).

பொழுது என்றால் போழ்வது = பிளப்பது. இருளைப் பகுத்து வருவது பகல். பகலவனால் நிகழ்வது.
பகு- > பகல் > பால். பகுப்பு: ஆண்பால், பெண்பால் என்பதும் சிந்திக்கலாம். பாலூட்டிகளின் (பெண், பசு,
ஆடு, எருமை, ... mammals) உடல் அரத்தத்தை பகுத்து மடியில் உருவாவது பால். பா- என்றாலே பகு-
என்ற பொருள் உண்டு. பாத்தூண் = பாத்து + ஊண், இதில் உள்ள பா- (=பகு-) தான் பாலில் உள்ள பா-.
பால் > வால் ’வெண்மை’
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை 
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் (குறள்).

தொல்தமிழர்கள்/த்ராவிடர்கள் உருவகத்தால் பொருள்களுக்குப் பெயர்களும் கலைகளும் செய்தனர்.
உதாரணம்: சிந்துவெளியில் நட்சத்திரங்களை மீன் சின்னத்தால் குறித்தனர். விண்மீன்கள்.
கால் - நடந்து செல்ல உதவுவது. கால்+து = காற்று. ஒவ்வொரு யுகத்திலும் எத்தனை கால்களை
ஊன்றி தரும விடை நிற்கிறது என மாபாரதம் குறிக்கிறது. இது காலுக்கும், காலத்துக்கும் உள்ள சொல்தொடர்பு.
கணவனை இழந்து கைம்மை அடியும் கையினியைக் குறிக்க மாசதிக் கல்லில் கை குறிக்கப்படுகிறது.
இன்னும் சில உதாரணங்கள் காண,

அண்மையில் அரம்பை “fragrant screpine" என்னும் வாசத் தாழையின் பழைய தமிழ்ப் பெயரும்,
அரம்பை என்றால் இத் தாழை என வரும் சிந்தாமணிப் பாடல்கள் இரண்டும், திருப்புகழும் ஆராய்ந்தேன்.
படித்தருளுக:

நா. கணேசன்

C.R. Selvakumar

unread,
Nov 21, 2015, 12:31:39 PM11/21/15
to தமிழாயம், muththamiz, vallamai
//தமிழ் நாட்டில் வாந்தி அல்லது வாந்தி எடுத்தல் என்பதற்கு நிகராக ஈழத்தில் ஓங்காளம் அல்லது சத்தி  என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது.//

தமிழ்நாட்டிலும் ஓக்காளம் என்னும் சொல்லாட்சி  மிகநன்றாக உண்டு. 
ஆனால் ஓங்காளாம் என நான் கேட்டதில்லை. 

அன்புடன்
செல்வா


--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

N. Ganesan

unread,
Nov 21, 2015, 4:20:59 PM11/21/15
to வல்லமை, pira...@googlegroups.com, panb...@googlegroups.com, mutht...@googlegroups.com, thamizh...@googlegroups.com, thami...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com


On Tuesday, November 17, 2015 at 5:27:17 AM UTC-8, வேந்தன் அரசு wrote:
உரலில் இடிக்கும்போது இடிபடும் பொருள் சிந்தாமல் இருக்க முறங்களை அரணாக வைக்கும் வழக்கம் உண்டு. அதனால் சுளகு என்பதை mudguard எனும் சொல்லில் வரும் பொருளிலும் பயன்படுத்தலாம் 

துள்-/துடிப்பது துளகு சுளகு ஆகியுள்ளது. mudguard = மண்திரை எனவும் சொல்லலாம்.
 
”நல்வேம்பின் இலை சுளகா” எனும் கலித்தொகை அடிகளல் அது பெறப்படும்


வேப்பிலை மிகச் சிறியது. சுளகு அளவில் இல்லை. கலித்தொகையில் இப்படியா உள்ளது?

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Nov 22, 2015, 11:50:10 AM11/22/15
to வல்லமை, thami...@googlegroups.com, pira...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, thamizh...@googlegroups.com, mintamil


On Saturday, November 21, 2015 at 8:21:08 AM UTC-8, சுவாதி சுவாமி wrote:


காம்பறை என்பது சிங்களத்தில் அறை என்ற பொருளாகும். ஆனால் எங்கள் ஊர் தமிழில் சவக்காம்பறை என்ற சொல் தாரளமாகவே புழக்கத்தில் இன்றும் இருக்கிறது. 

காம்பறை என்பது ஐரோப்பியச் சொல். kamer (Dutch) =  cámara (Spanish) = chamber 
என்னும் சொல் இலங்கையின் சிங்களம், தமிழ் மொழிகளில் பயனாகிறது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 27, 2015, 7:53:43 AM11/27/15
to வல்லமை, thami...@googlegroups.com, pira...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, thamizh...@googlegroups.com, mintamil


On Friday, November 27, 2015 at 12:07:57 AM UTC-8, சுவாதி சுவாமி wrote:


29)   இன்றைய தேர்வுச் சொற்கள் பெயர் சொற்களாலானவை.  மன்னிக்கவும் இச் சொற்கள் கொஞ்சம் கடுமையானவை மட்டுமல்ல பொது இடங்களில் பேசும் நாகரீகமான வார்த்தை வடிவங்கள் அல்ல .. அதே சமயம் பேசத்தகாத தூஷணையும் அல்ல.
  சீரற்ற ஒழுக்கத்தினை கொண்ட மனிதனை குறிக்கும் கொஞ்சம் வீச்சம் கூடிய கடுமையான  வார்த்தை வடிவங்கள் அவை.


காவாலி / கடப்புலி/ விடுகாலி//வங்கோலை  -  நடத்தை தவறான மனிதன் . ஒழுக்கமற்றவன்.

காவாலி -   ஒழுக்கங் கெட்ட கொடியவன்.

காவாலி என்பது உர்துச் சொல். சற்றே பொருள் விரிவாகியுள்ளது.
காவாலி² kāvāli , n. < U. qawwālī. Vaga- bond; மனம்போனபடி நடப்பவன்.

பர்வா நஹி - என்பது பரவாயில்லை என்கிறோம். அதில் பர்வா என்னும் உர்து இருக்கிறது. அதுபோல்.

நா. கணேசன்
 
கடப்புலி - கெட்டவன்
விடுகாலி - கட்டுக்கடங்காதவன். கட்டுப்பாடற்றவன்

வங்கோலை - ராஸ்கல் -  கெட்டவன்

இந்த வார்த்தைகள் மிக உக்கிரமான வெறுப்பின் அல்லது கோபத்தில் ஒருவரை பார்த்தோ அல்லது ஒருவரைப் பற்றியோ அவரது  ஒழுக்கச்சிர் கேட்டை சுட்டிக் காட்டி இடித்துரைக்கும் சொற்களாக அடையாளப்படுத்தப்படுவை.

உதாரணம்

1)  இஞ்ச....உந்தக் காவாலி சேட்டையை என்னட்டைக் காட்டாதை ...!
2) இதென்ன காவாலித்தனம் ?
3)கண்ட கண்ட காவாலி கடப்புலியளோடு ரோடு ரோடா திரி..அப்ப தானே அப்பாண்ட பெயரை கெடுக்கலாம் என்ன?
4) நவமணிண்ட ரெண்டு மக்களும் விடுகாலிகளாப் போட்டான்கள்.
5) வங்கோலை ராஸ்கல் உனக்கு அவ்வளவு தைரியமா?



2015-11-26 11:50 GMT-05:00 Swathi Swamy <mswat...@gmail.com>:
28) 
ஆத்தாப் போக்கிலி  -    நேர்மையற்றவர், குழப்பவாதி என்ற வார்த்தைகள் பொருத்தமாயிருக்கும் என்று நினைக்கிறேன்.

போக்கிலி :

போக்கிலி, பெயர்ச்சொல்.

  1. போக்கு இல்லாதவன், ஒழுக்கமற்றவன், தறுதலை, பொறுக்கி
மொழிபெயர்ப்புகள்
  1. rogue, vagabond, scoundrel ஆங்கிலம்
விளக்கம்

ஆத்தாது - இயலாது அல்லது முடியாது என்ற உணர்வை தரவல்ல சொல்வடிவம்.

ஆக ஆத்தாப் போக்கிலி என்பது வீச்சம் கூடிய அர்த்தத்துடன் ஒரு குழப்பவாதியையோ அல்லது நேர்மையற்றவரையோ அல்லது ஒழுக்கமற்றவரையோ குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.


ஆத்தாப் போக்கிலி தனம்  -  ஒரு இடத்தில் ஒரு மாதிரி கருத்து சொல்லிவிட்டு இன்னோர் இடத்தில் தான் சொன்ன கருத்தை திட்டவட்டமாக மறுத்து பேசுவது , விதண்டாவாதம் செய்வதைக் குறிக்கும்.

அதே போல் ஈழத்தமிழர்கள் உபயோகிக்கும் மற்றும் இரு சொற்கள் அழாப்பி,  அழாப்புதல். (எந்த லகரம் சரியாக இருக்கும் இந்த வார்த்தைக்கு என்பது இன்னமும் குழப்பமகவே இருக்கிறது எனக்கு. ஆனால் மட்டக்களப்பு தமிழ் சொற்கள் பட்டியலில் இந்த மௌவ்வு  ழனாவையே தந்திருக்கிறார்கள். )

இந்த இரு வார்த்தைகளுக்கும் சரியான அர்த்தம் சொல்லும் ஒற்றை                         வார்த்தைச் சொல்  அகராதியிலோ இணையத்திலோ எனக்குக் கிடைக்கவில்லை

அழாப்பி  -     சரி, பிழை , நியாயம், அநியாயம் தெரிந்திருந்தும் தன்  

                        சுயநலத்துக்காக அந்த நியாயத்துக்கு புறம்பாய் நிற்கும் ஒரு குழப்பவாதி.

அழாப்பி என்பது ஒருவரை சுட்டும் பெயர் சொல்லாகவும் , அவரின் செயற்பாட்டைக் குறிக்கும் வினைச்சொல்லாகவும் பயன்படுத்தப்படும். (அப்பாடா நானும் இலக்கணம் தெரிஞ்சு வைச்சிருக்கிறன் , அதுவும் சரியா பிழையா எண்டு பெரியவர்கள் வந்து சொன்ன பின் தான் தெரியும் :) )

அழாப்புதல்           -    
                          குழப்புதல், விதண்டாவாதம் என்ற வார்த்தைகள் பொருத்தமாயிருக்கும் என நினைக்கிறேன். 
                         பெரும்பாலும் இந்த வார்த்தை  ஆடுகளங்களில் விளையாட்டுக்களில் தான் பாவிக்கும் சந்தர்ப்பங்கள் வரும்.  உதாரணத்திற்கு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட்டில்  ஒருவரை அவுட்  ஆக்கினால் தான் அவுட் இல்லை என்று விவாதிப்பவரை அழாப்பி என்பர்.


உதாரணம் :

1)   அவன் ஒரு ஆத்தாப் போக்கிலி  ..அவனோட  போய் நீதி நியாயம் பேசுறவன் விசரனாத் தான் இருப்பான்.
  
      ( அவன் ஒரு நேர்மையற்றவன் ..சுய அறிவுள்ளவன் எவனும் அவனிடம்  நீதி நியாயம் பேச மாட்டான்)

2)   இப்பிடி உன்ர ஆத்தாப் போக்கிலி தனத்தை என்னட்டையும் காட்டுவாய் எண்டு நான் நினைக்கேலை ...

(உன்னுடைய அநியாயப் போக்கை என்னிடமும் பிரயோகிப்பாய் என்று நான் எதிர்ப்பார்த்திருக்கவில்லை )

3 ) குமார் சரியான அழாப்பி. அவனை விளையாட்டில் சேர்க்க  கூடாது. (பெயர் சொல்லாக அழாப்பி)

4)  எல்.பி.டபிள்.யூ வெண்டால் என்னவெண்டே தெரியாதா பந்து எறியிறவனுக்கு.? அவுட் அவுட் எண்டு அழாப்பிக் கொண்டிருக்கிறானே? (வினைச் சொல்லாக  அழாப்பி)

5)  நீங்கள் இரண்டு பேரும்  இப்பிடியே உந்த சதுரங்க விளையாட்டில் மாறி மாறி அழாப்பிக் கொண்டிருங்கோ..விளையாட்டு முடிஞ்ச மாதிரி தான் இண்டைக்கு,,

 

2015-11-25 12:47 GMT-05:00 Swathi Swamy <mswat...@gmail.com>:

27)

இன்றைய தேர்வாக எங்கள் தமிழ் குடும்பங்களில் நடக்கும் ஒரு முக்கிய சடங்கு  இடம் பெறுகிறது.
 
 

சாமத்தியம் / பெரிசாவது /   - பூப்படைதல்.
குப்பைத் தண்ணி வார்த்தல் / முதற் தண்ணி வார்த்தல்-  பூப்படைந்த 3ம் நாள் சடங்கு.
சாமத்தியச் சடங்கு  - பூப்புனித நீராட்டு விழா. பூப்படைந்து ஒரு மாதத்தில் பெரும்பாலும் நடத்தப்படும் சடங்கு.
தொடமாட்டாள்  -  மாதவிலக்கான பெண். 
குமர் /குமரி/ செல்வி         -  பூப்படைந்த பெண், கன்னி, செல்வி 

சிறுமி என்ற பருவத்திலிருந்து  குமாரி என்ற இளம் பெண் பருவத்தை  மேவும் பெண்னின் பௌதிக மாற்றத்தை சாமத்தியப்படல் / பெரிசாதல் என்பர். பேச்சு வழக்கில் அவள் பெரிசாயிட்டாள் என்றோ அவள் சாமத்தியப்பட்டிட்டாள் என்றோ வரும். 

இது சம்மந்தமான சடங்கை  சாமத்தியச்சடங்கு  என்று சொல்வார்கள். இது பற்றிய விபரங்களை  கீழ் வரும் சுட்டியில் தெரிந்து கொள்ளலாம்.

சாமத்தியச் சடங்கு

இன்றும் இந்த சடங்கு நடைமுறியிலிருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் உறவுகளோடும் நண்பர்களோடும் சேர்ந்திருந்து  தங்கள் வீட்டுப் பெண்ணின் மங்கள நாளாக சம்பிரதாய முறைப்படி நடந்த இந்தச் சடங்கு இப்போதெல்லாம்  ஆனால்  பழமையின் அடையாளங்களைத்  தொலைத்த அல்லது புறக்கணித்த  - உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் முன்னால் தங்கள் தங்கள் தனிப்பட்ட  பண வசதியையும்,  அந்தஸ்தையும் காட்டக் கிடைத்த  சந்தர்ப்பமாக வெறும்   ஆடம்பர கொண்டாட்டமாக மாறிவிட்டது என்பது வேதனைக்குரியது.   

உதாரணம்:

1)  பக்கத்து வீட்டு பொன்னையாவின் மகள் மார்க்கிரேட் பெரிசாயிட்டாளாம்.
 2) சாமத்தியப்பட்ட  பெட்டையை பார்க்கப் போகேக்கில வெறும் கையோட போக ஏலாது. ஒரு நல்லெண்ணெய் போத்திலாவது கொண்டு போக வேணும்.
3) சந்திராவின் மகளுக்கு நாளைக்கு குப்பை தண்ணி வார்க்கினமாம்; மாசக் கடைசியில நல்ல நாள் பார்த்திருக்கினை சாமத்தியச் சடங்குக்கு.
4) அவள் இண்டைக்கு கோவிலுக்கு வர ஏலாது..தொடமாட்டாம இருக்கிறாள்
5) இவள் கமலி குமராகி ஏழு எட்டு வருசமாப் போச்சுது   ...இனி கலியாணத்துக்கு மாப்பிள்ளை கீப்பிள்ளை ஏதும் பாக்க வேண்டாமே?
6) ஒரு குமர் பிள்ளை இப்பிடியே உடுப்பு போடுறது? ஒழுங்கான சட்டையா போட்டுட்டு வா பார்க்கலாம்.
7) குமரி எண்ட நினைப்பில்லாமல் இதென்ன இப்பவும் சின்ன பபாவுக்கு நிக்கிறாள் இவள்?





Swathi Swamy

unread,
Nov 27, 2015, 10:48:10 PM11/27/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai

Swathi Swamy

unread,
Nov 27, 2015, 10:48:10 PM11/27/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai

24)

இன்றைய சொல் ஈச்சாப்பி / ஈயாப்பிசினி  - கருமி /கஞ்சன்


ஈழத்தில் ஈயாப்பிசினி என்று மட்டக்களப்பு பேச்சு வழக்கிலும் பொதுவில் ஈச்சாப்பி என்றும் கருமியை அல்லது கஞ்சனை குறிக்கும் சொற்களாகும்.

ஈதல் - கொடுத்தல்.வறியவர்க்கு கொடுத்தல்
ஈயார்-  கொடுக்காதவர்.
{ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் - கொன்றை வேந்தன் }

ஈயாப்பிசினி என்பது ஈயார் என்ற வார்த்தையிலிருந்து வந்ததாக இருக்கலாம்.

பிசின் என்பது இறப்பர் மரம் , வேப்பம் மரம் போன்ற மரங்களின் பட்டைகளை உரிக்கும் போது வரும் பால். அது  ஒட்டும் தன்மையுடையது.

எவருக்கும் எதையும் கொடுக்க மனமில்லாமல் பணத்தை தன்னோடு ஒட்டி வைத்துக் கொண்டிருக்கும் கஞ்சத்தனம் மிகுந்தவன் என்ற அர்த்தத்தில் “ஈயாப்பிசினி” என்ற வார்த்தை புளக்கத்தில் வந்திருக்கலாம் .

ஈயா அப்பன் - ஈயாப்பன் ,ஈச்சப்பன் , ஈச்சாப்பி என்று வந்திருக்கலாம் என்கிறார் ஒரு நண்பர் . அது சரியா இல்லையா என்று பெரியவர்கள் தான் சொல்ல வேண்டும்.



ஈயாப்பிசினி

(ஒலிப்புமுறை) ISO 15919: /īyāppiciṉi/

கஞ்சன்
கருமி

niggard
miser


உதாரணம் :

  1. இராசரத்தினத்தாரைப் போல ஒரு ஈச்சாப்பியை வேற எங்கயும் காணேலாது.
  2. எச்சில் கையால கூட  காகம் விரட்ட மாட்டான் அந்த ஈயாப்பிசினி.
  3. கஞ்சத்தனமா இருந்தால் தான் நாலு சதம் எங்களுக்கெண்டு சேர்க்கலாம்.

Swathi Swamy

unread,
Nov 27, 2015, 10:48:10 PM11/27/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai


20) இன்றைய சொல்  கட்டாடி / டோபி.

கட்டாடி / டோபி /  வண்ணான். -  சலவைத் தொழிலாளி.
கட்டாடியார் -  பூசாரி அல்லது மந்திரவாதி. (மட்டக்களப்பு தமிழ் பேச்சு வழக்கில்)

அகராதிகளில் கட்டாடி என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் தந்திருக்கின்றனர்.  அவையாவன :

அ)  குறிசொல்வோன் 
ஆ) குறி சொல்லும் திறனுள்ள வண்ணான்
இ)  வண்ணார் தலைவன்

நாம் கட்டாடி என்ற வார்த்தையை  சலவை தொழில் செய்பவர்களை குறிக்கவே பயன்படுத்துகிறோம். மட்டக்களப்பு தமிழ் பேச்சு வழக்கில் கட்டாடியார் என்ற வார்த்தையை ஏவல், மந்திரம் செய்யும் பூசாரிகளை அல்லது  மந்திரவாதிகளை சுட்ட குறிப்பிடுவார்களாம் .

ஈழத்தமிழரின் வாழ்கையின் ஒவ்வொரு சடங்கிலும்  இரத்த உருத்துகளுக்கு நிகராக முக்கியத்துவம் வகித்து நிற்பவர்களில்  கட்டாடியும், சவரத் தொழிலாளியும் முதலாமவர்கள் எனலாம்.

பெண் பூப்படைந்த சடங்கிலிருந்து , பாடையில் போகும் ஈமச்சடங்கு வரை கட்டாடி என்பவர்  எங்களுடன் கூட வருபவர் என்றே சொல்லலாம்.

அவர் வெளுத்து கஞ்சி போட்டு அயர்ன் பண்ணி மடித்துக் கொண்டு வந்து தரும் உடுப்புகளை முதல் முதல் எடுத்துப் போடும் போது கிடைக்கும் ஒரு வாசனை இருக்கே.....ம்ம்ம்ம்...ஹா...!

கட்டாடியார் கோவில்களில் குறி சொல்பவர்களாகவும் கோயிலை வழிநடத்தும் பூசாரிகளாகவும் கூட இருந்திருப்பதாக வரலாறு கூறுகிறது.

ஆதாரம்:-
”கண்ணகி வழிபாட்டு மரபில் ஆகம மரபு தொடர்பபடுத்தப்படுவதை அவதானிக்கலாம். வேளாளரும், பிற குலப்பிரிவினரும் இணைந்து நடத்தி வந்த பொங்கல் விழாக்களில் ஆகம முறைப்படி பூசை செய்யும் அந்தணர்களும் சேர்க்கப்பட்டனர். மக்கள் கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமான நமப்பிக்கையுடையவர்கள். ஆரியரின் செல்வாக்கினாலேயே அந்தணர்கள் பூசை செய்யும் முறை ஏற்பட்டது. ஆகம முறைப்படி பூசை நடைபெறும் ஆலயங்களில் பழைய கிராமிய மரபுகள் புறக்கணிக்கபடுவதைக் காணலாம். ஆனால் வற்றாப்பளையில் கிராமிய மரபும் ஆகம மரபும் இணைந்து செயல்படுவதைக் காணலாம்.
தென்னைமரடியிலிருந்து பிராமணர்கள் முள்ளியவளைக்கு அழைத்து வரப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர். பொங்கல் மடை நிகழ்ச்சிகளில் ஆகம நெறிக்குரிய பூசை முதலியவற்றைப் பிராமணர் செய்யும் மரபு ஏற்பட்டது. ஆயினும் பொங்குதல், படைத்தல் என்னும் மரபுவழிக் கிரியைகளைக் கட்டாடி உடையார் என அழைக்கப்படும் பூசாரியாரும் பிறகுலத் தொழிலாளரும் ஒழுக்கசீலராக இருந்து ஆற்றி வருகின்றனர்.”

கட்டாடி என்பவரை டோபி (Dhōbi)என்றும் குறிப்பிடுவோம். அது அன்னிய மொழியிலிருந்து தமிழுக்குள் வந்த வார்த்தை.

Dhōbi :  A name used for washerman by Anglo-Indians all over India. The word is said to be derived from dhōha, Sanskrit, dhāv, to wash.

உதாரணம்:-

1)
கண்டால் கட்டாடி காணாட்டால் வண்ணான்.
2) டோபிட்ட போட்ட உடுப்புகள் திரும்ப வந்திட்டுதா?
3)  சாமத்திய வீட்டில் ஆர் வருகினமோ இல்லையோ கட்டாடி வர வேணும்.

Swathi Swamy

unread,
Nov 27, 2015, 10:48:11 PM11/27/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
23)

சுடலை / சுடுகாடு/இடுகாடு/மயானம்/சவக்காலை /மையவாடி- மயானம்.

     



பொதுவாக எங்கள் நாட்டில் மயானம் என்பதை  சுடுகாடு , இடுகாடு,சுடலை என்று சைவ சமயத்தவரும், மையவாடி என்று இஸ்லாமிய மதத்தவரும், சவக்காலை என்று கிறிஸ்தவ மதத்தவரும் சொல்கிறார்கள்.

சுடலை என்ற சொல்லுக்கு மயானம் என்பது மட்டுமல்ல சவக்காரம் என்றும் பொருளுமுண்டாம். எங்கள் ஊரில் soap என்பதை  சவக்காரம் அல்லது சவுக்காரம் என்போம். 

சவம்/பிரேதம்/பிணம்/மையத்து - உயிரற்ற சடலம்/பிணம்

 முஸ்லீம் மக்கள் இயற்கை எய்தியவரின் உடலை மையத்து என்று சொல்வார்கள்

பிரேதபரிசோதனை - Embalming. 

பிணவறை/பிரேத அறை/ சவக் காம்பறை.  -    Mortuary or Morgue

காம்பறை என்பது சிங்களத்தில் அறை என்ற பொருளாகும். ஆனால் எங்கள் ஊர் தமிழில் சவக்காம்பறை என்ற சொல் தாரளமாகவே புழக்கத்தில் இன்றும் இருக்கிறது.

பாடை  -  பிரேதத்தை மயானத்துக்கு தூக்கி செல்லவென்று உருவாக்கும் அலங்கரிக்கப்பட்ட சிவிகை அல்லது பல்லக்கு உருவிலானது. சைவ சமயத்தவருடையது.

சந்தூக்கு - முஸ்லீம் மதத்தவர்  சடலத்தை தூக்கி செல்லும் முறை.  தோளில் சுமந்து செல்வதால் சந்தூக்கு என்று பெயர் வந்ததாம். சந்து என்பது நம்மூரில் தோள்மூட்டைக் குறிப்பதாம்.
(நன்றி : தகவல் - தம்பி இலியாஸ் அபூபக்கர்.)






Swathi Swamy

unread,
Nov 27, 2015, 10:48:11 PM11/27/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
26) இன்றைய சொல்லாய்வு எமது தமிழ் மரபில் பிறப்புக்கும் இறப்புக்கும் பொதுவான கிரியை பற்றியது.

துடக்கு / ஆசூசம் அல்லது அசௌசம் -  தீட்டு, சூசகம்

அதாவது மாதவிடாய் விலக்கம், பந்துக்களின் பிறப்பு, இறப்பு இவற்றால் நிகழும் தீட்டு, சாவுநிகழ்ந்த வீட்டிற்குட் செல்லுதல், சவத்தைத்தொடுதல்,முதலிய அசுபச்செய்கைகளால்  நிகழும் தீட்டு என்பவற்றைக் குறிப்பது.

இந்த தீட்டுகளிலிருந்து  மீண்டு இயல்பு வாழ்கைக்கு திரும்புவதை பொதுவாக துடக்கு கழிவு என்று  சொல்வோம்.

 முன்பெல்லாம் மகப் பேறு என்பது வீடுகளில் நடந்தது. அந்த பேறு காலத்தில் பிரசவித்த பெண்ணும், மகவும் மிகுந்த கவனத்துடன் பேணப்பட்டு கவனிக்கப்படுவார்கள். உதிரப் போக்கு போன்ற பலவிதமான சங்கடங்கள், வலிகளுடன் வேதனைப்படும்  பெண்ணை வீட்டின் ஒரு பகுதியில் தனியாக  வைத்து  பத்தியம் பேணி  கவனிப்பார்கள்.
அந்த நாட்களில் கழிவுகளும், கழிவுத்துணிகளும் அதற்கான மருந்துகளுமாய் வீட்டின் சுத்தம் கேள்விக் குறியாகவே  இருக்கும்.

இதே நிலை தான் மாதவிடாய்காலங்களிலும் . உடல் உபாதைகளின் தாக்குதல்களிருந்து ஓய்வாக பெண்ணை ஒரு இடத்தில் தனியாக  வைத்து பத்தியம் பேணுவார்கள். இப்போதைய காலங்களைப் போல் பண்டையகாலங்களில் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு போதியளவு இல்லாத காரணத்தால் மாதவிடாய் காலங்களில் பெண்களை ஒரு இடத்தில் இருத்தி வைத்திருந்தனர்.

அதே போல் இறப்பின் போதும் பூதவுடல் வீட்டின் நடுக்கூடத்தில் கிடத்தப்பட்டு வெளியூர் உள்ளூர் என்று பலவகை இடங்களிலிருந்தும் பலர் வந்து நின்று துயர் பகிர்ந்தவண்ணம் இருப்பர். அப்போதும் அங்கு சுத்தம் என்பது கிரமமாக கவனிக்கப்படமுடியாத விசயமாக இருக்கும்.

இந்த இரண்டு நிகழ்வின் போதும் ஆரவாரங்கள் அடங்கி , மெதுவாக இயல்பு நிலைக்கு வாழ்கை திரும்ப எடுக்க ஒரு மாதமாவது ஆக வேண்டாமா?
அதன் பின்பாவது வாழ்கையை சகச நிலைக்கு திருப்பி எழுப்ப வேண்டி மனதையும், சூழலையும் தெளிவாக்கவும், சுத்தமாக்கவும் பக்குவப்படுத்தும் நோக்குடன் இந்த கிரியைகளை ஒரு மரபாக செய்யத் தொடங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இரண்டு நிகழ்விலும் நடக்கும் துடக்கு கழிவு என்பது பொதுவில் கிருமிகளை அகற்றி வீட்டையும் சூழலையும் சுத்தப்படுத்துவதே மூல நோக்கம்.  அதை சமய சார்பாக பிராத்தனைகளுடன் அனுட்டிக்கபட்டிருக்கிறது.


முப்பத்தொண்டு அல்லது ,முப்பத்தொன்று / துடக்கு அல்லது தீட்டுக் கழிவு / அந்திரேட்டி அல்லது அந்திரெட்டி அல்லது அந்திரட்டி  என்ற இத்தனை வார்த்தைகளின் மொத்த கருத்து என்னைப் பொறுத்தவரை சுத்தப்படுத்துதல் என்பதே. அதாவது   குழந்தை பிறந்து  அல்லது இறப்பு நடந்து ஒரு மாதத்தில் வீட்டில் செய்யப்படும் தீட்டுக் கழிவுக் கிரியை .

தமிழகத்தில் இறப்பு நடந்த பிற்பாடு தீட்டுக் கழிப்பது .10ம் நாள் காரியமோ அல்லது 16ம் நாள் காரியமோ என்று சொல்வார்கள். சரியாக தெரியாது. பெரியவர்கள் விளக்க வேண்டுகிறேன்.   ஈழத்தில் ஒரு மாதத்தின் பின்னரே இந்த கிரியை நடைபெறும்.

அதே போல் குழந்தை பிறந்த பின்பு 31ம் நாள் தான்  தீட்டுக் கழிப்பார்கள்.

பிறப்போ அல்லது இறப்போ நடந்த வீட்டில் 31 நாளைக்கு கோவில் , பூசை, புனஸ்காரம் என்று எதுவும் செய்யமாட்டார்கள். இந்த நாட்களில் கோவில் செல்வதோ, திருமணம் முதலிய சுபகாரியங்கள் செய்வதோ அல்லது முன் நிற்பதோ, பொது நிகழ்வுகளுக்குச் சென்று மகிழ்வுறுவதோ, துடக்கு இல்லாதவர் அவ்வீட்டில் உணவருந்தவோ மாட்டார்கள்.

குழந்தைப் பிறந்து  31ம் நாள் துடக்கு கழிவு நடந்த பின் தான் குழந்தையை முதன் முதலாக கோவிலுக்குள் கொண்டு செல்வார்கள். குடும்பத்தின் வருமான வசதிக்கேற்ப 31ம் நாள் துடக்கு கழிவு  வீட்டில் ஐயர் வந்து பூசை செய்து தீர்த்தம் கொடுத்து அதை வீடெங்கும் தெளித்த பின் உறவினருக்கும் அயலவருக்கும் விருந்து கொடுத்து கொண்டாடுவார்கள்.  

குழந்தை பிறந்த துடக்கு கழிவு என்றால் தாய் மாமன் கையால் குழந்தைக்கு நகை நட்டுகள் பூட்டப்பட்டு , புது துணி உடுத்தி குழந்தையை ஏணை (தூளி) யிலோ அல்லது தொட்டிலிலோ தாய்மாமன்மார் தூக்கி கிடத்துவார்கள்.

இதுவே இறப்பு நடந்த வீட்டின் துடக்கு கழிவாயின் அதை அந்திரட்டி என்று சொல்வார்கள். பூதவுடல் சிதையில் எரிக்கப்பட்ட  பின் கலயத்தில் எடுக்கப்பட்ட சாம்பலை வீட்டில் வைத்திருப்பார்கள். அந்திரேட்டி அன்று அந்த சாம்பலை வைத்து இற்ந்தவரின் மகன்மார்களை கொண்டு ஐயர் சில கிரியைகளை செய்வித்து   நீர் நிலையில் சாம்பலைக்  கரைத்துவிட்டு வரச் செய்வார். ஈழத்தில் கீரிமலை என்ற கடலில் இறந்தவர்களின் சாம்பரை கரைப்பது விசேசம். காசி , இராமேஸ்வரம், திருவையாறுக்கு ஒப்பாக கீரிமலை கடலிலும் அஸ்தி கரைத்தால் மோட்சம் என்ற பெருமைக்குரியது. அஸ்தி கரைக்கும் சடங்கு முடிந்து  வீட்டுக்கு வந்த பின் பூசைகள் செய்து இறந்தவரின் வாழ்கை சரிதம் பாடி அதன் பின்  உறவினருக்கும் அயலவருக்கும் விருந்து வைப்பார்கள் .

இறப்பு நடந்த வீட்டில் ஒரு மாத காலத்துக்கு கோவில் போதல் , பூசை புனஸ்காரம் செய்தல் , சமையல் செய்தல் என்பன தவிர்க்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு நாளும் அந்த வீட்டுக்கு அயலவர்களோ அல்லது உறவினரோ முறை வைத்து  சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பார்கள். கால காலமாக இது மரபு வழி செயல்பாடாக இன்றும் நடந்து வருகிறது திக்கொன்றுக்கு தமிழ் குடிகள் சிதறிக் கிடந்தாலும்...

இப்போது  இயந்திரமயமான வாழ்கை ஓட்டத்தில் 31ம் நாள் செய்ய வேண்டிய துடக்கு கழிவுகளும் அந்திரேட்டிகளும் 13ம் நாளே நடத்துவதாக கேள்விப்படுகிறேன் . அது எந்தளவு உண்மை என்று என்னால் சொல்ல முடியவில்லை..

ஆயினும் வெளி நாட்டு வாழ்கையில் வீட்டில் உயிர் பிரிந்தால் அடுத்த நிமிடமே பிணக்காம்பறைக்கு  பூதவுடலை அனுப்பிவிட்டு அடுத்த நாளே வேலைக்கோ அல்லது பாடசாலைக்கோ போய்விடும் சூழலில் தான் தமிழ் சமுதாயம் இருக்கிறது. பின் மரணக் கிரியைகளுக்காகவும், உறவுகளோடும் நட்புகளோடும் கூடியிருந்து துயர் பகிர்வதற்காகவும் ஒரு நாளை தேவு செய்து இரண்டு மணி நேரம் ஒதுக்கி எரியூட்டிவிடுவதோடு முடிந்துவிடுகிறது. அந்திரேட்டியன்று அவரவர் வசதிப்படி  கிரியைகளும் விருந்தும் நடத்தப்படும்.

Swathi Swamy

unread,
Nov 27, 2015, 10:48:11 PM11/27/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
19)

இன்றைய சொல் “விசர்”.


விசர் / பைத்தியம் - மனநோய்,பைத்தியம்,
             நினைவிழந்த நிலை, பிரமை பிடித்த மனநிலை
              Mental Illness.

விசர் நாய் -  வெறி நாய்.  (A mad dog)


மனநோயை ஈழத்து தமிழில் விசர் அல்லது பைத்தியம் என்று குறிப்பிடுவர்.

பைத்தியம் என்ற சொல் நோயின் பெயராகவும்,  மனநோய் பாதிக்கப்பட்டவரை சுட்டும் சொல்லாயும் வழக்கிலிருக்கிறது.

விசரன் - மனநோயால் பாதிக்கப்பட்ட ஆண்.
விசரி    -  மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்.
விசரர்/ விசரன்கள்/விசரிகள் -  மனநோயால் பாதிக்கப்பட்ட பலர் .

மனநோயாளிகளை மட்டுமல்ல  முட்டாள்தனமாக செயல்படும் அல்லது பேசும்  ஒருவரை கூட  விசரன் அல்லது  விசரி என்று பொதுப்படையாக பேச்சு வழக்கில் குறிப்பிடுவர்.

உதாரணம் :

  1.  உனக்கு என்ன விசரே?
  2.  இந்த மனுசனுக்கு சரியான விசர்.
  3. நேற்று அங்கோடைப் பக்கம் போன போது நிறைய விசர் பிடிச்ச மனிதர்களை பார்த்தம்.
  4. விசர் நாய் கடிச்சால் பொக்கிளை சுத்தி கனக்க ஊசி போட வேணும்  .
  5. அங்கோடை, முல்லேரியா, தெல்லிப்பளை ஆசுபத்திரிகளில  தான் விசர் நோய்க்கு வைத்தியம் பார்க்கிறவை.

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

Swathi Swamy

unread,
Nov 27, 2015, 10:48:11 PM11/27/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
21) இன்று மூன்று சொற்கள் தேர்வு செய்திருக்கிறேன். 
மூன்று சொற்களும் ஒரே மாதிரி இருந்தாலும் இரு வகையான பயன்பாடுகளுக்கு உபயோகிக்கப்படுவனவாகும்.

1) அரிதட்டு /மாவரி/அரிக்கன் தட்டு -  சல்லடை

அரிதட்டு அல்லது மாவரி அல்லது  அரிக்கன் தட்டு என்பது மாவில் குறுணிய சீரான தூள்களை பெரிய கட்டிகளில் இருந்து வேறுபடுத்த பயன்படும் ஒரு சமையல் உபகரணம்.இதில் மா, ரவை, தூள், பொடி வகைகள் அரிக்கப்படுவதுண்டு.




2) அரிக்கன் சட்டி -  அரிசி களைந்து  கல், நெல் அகற்றி அரித்தெடுக்க உபயோகிக்கப்படும்  மண் அல்லது ஈயத்தாலான பாத்திரம்.



3) அரிக்கன் லாம்பு  -  மண்ணென்ணெயில் எரியும் விளக்கு  ஹரிக்கன் காற்றில் கூட இந்த விளக்கு அணையாது என்ற அர்த்தத்தில் இந்த விளக்குக்கு ஹரிக்கேன் இலாம்பு என்று பெயர் வைத்தார்களாம்.

ஈழத்தில் விளக்கை (இ)லாம்பு என்று சொல்வார்கள். லாம்பு என்ற வார்த்தையும் அன்னிய மொழியிலிருந்து தமிழுக்குள் வந்த வார்த்தையே .
 


உதாரணம்:

  1. மாவரிக்க நல்லதா அரிதட்டு ஒண்டு வாங்க வேணும்.
  2. அரிக்கன் சட்டியில அரிசியை அரிச்சால் அரிசியை விட கல்லு தான் கனக்க வருது.
  3. இருட்டப் போகுது, அந்த அரிக்கன் லாம்பை கொளுத்தி வையன்.

Swathi Swamy

unread,
Nov 27, 2015, 10:48:11 PM11/27/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai

Swathi Swamy

unread,
Nov 27, 2015, 10:48:11 PM11/27/15
to பண்புடன், piravakam, தமிழாயம்”, muththamiz, Thamizhthendral, vallamai

Swathi Swamy

unread,
Nov 27, 2015, 10:48:11 PM11/27/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
இடைச்செருகல்

19)  விசர்/பைத்தியம்/பனி.

மனநோயை  பனி என்றும் எங்களூரில் சொல்வார்கள்.
முகநூலில் இந்த வார்த்தையை சுரதா யாழவன் என்ற சகோதரர் நினைவூட்டினார்

உதாரணம்

6) அந்த மனுசன் பனி பிடிச்சு திரியுது

7) உனக்கென்ன பனியே?

Swathi Swamy

unread,
Nov 27, 2015, 10:48:11 PM11/27/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
25)
இன்றைய தேர்வாக சில உரிச்சொற்களையும் அதற்கான எமது பேச்சு வழக்கு தமிழையும் எடுத்திருக்கிறேன்.



கனக்க , கூட, நிறைய, -  அதிகமான ,ரொம்ப, ( lot )
கனக்க
, (உரிச்சொல்).
  • அதிகமான
  • கனதியான


இன்னும் (நிறைய) - more

எ(இ)ல்லிப் போல, கொஞ்சம் ,குறைவு-  குறைவான. கம்மியான

மிச்சம், மிகுதி -  மிகுந்திருப்பது ;

மிச்சம்(பெ)  - எஞ்சி இருப்பது, மீதம்

சொச்சம்  - சொச்சம் என்ற வார்த்தைக்கு அகராதியில் பல அர்த்தங்கள் இருந்தாலும்  பெரும்பாலும்  மிகுதி அல்லது  மீந்திருப்பது என்ற அர்த்ததிலேயே நம்மிடையே பாவிக்கப்படுகிறது.
  1. மிச்சம்
  2. சில்வானம்
  3. வட்டி. (சொச்சத்துக்குப் பணங்கொடுத்தான்)
  4. கழித்தல் வகுத்தல்களில் வரும் மீதி
  5. நிர்மலம்

இதில் பொதுவாக  பெரும்பாலும் எல்லாச் சொற்களுமே ஈழத்தமிழிலும் தமிழகத் தமிழிலும் பேச்சு வழக்கில் உபயோகிப்பார்கள் என்றே நினைக்கிறேன் . ஆனால் இந்த  எல்லிப் போல என்ற வார்த்தை  விதிவிலக்காக இருக்கும். 

எள்ளுப் போல என்பதே எல்லிப் போல அல்லது இல்லிப் போல என்று மருவியதாக இருக்க வேண்டும்.  எள்ளு அளவுக்கு  அளவில் குறைவான  என்ற அர்த்தத்தில் தோன்றிய வார்த்தையாக அது இருக்கலாம் என்று நினைக்கிறேன்.  பெரியவர்கள் தான் விளக்க வேண்டும்.

அதே போல் மிச்சம், சொச்சம் என்ற வார்த்தைகளை தனித் தனியாகவும் பாவிப்போம். இரண்டையும் சேர்த்து சொற்றொடராகவும் பாவிப்போம்.

உதாரணம்:

1) எனக்கும் எல்லிப்போல சீனி போட்டுக் குடன்.
    (எனக்கும் கொஞ்சம் சீனி போட்டுக் கொடு)

2)  நான் என்ன கனக்கவா கேட்டன்? ஒரு எல்லிப் போல தேத்தண்ணி
     தாவெண்டன்.
     (நான் அதிகமாக என்ன கேட்டேன்? ஒரு கொஞ்சம் தேநீர் தா என்று கேட்டேன்)

3)   சாப்பாட்டில மிச்சம் ஏதாவது இருக்கா ?

4)   செலவு செஞ்சதை விட சொச்சமா எவ்வளவு இருக்கு.?

5)  இருந்த மிச்சம் சொச்சத்தை எல்லாம் வழிச்சு அவளுக்கே குடுத்திட்டன்.
     (மிகுதியாயிருந்த எல்லாவற்றையு வாரி அவளிடமே கொடுத்துவிட்டேன்)

6)  இத்தனை ஆயிரமாயிரமா உழைச்சுக் கொட்டியும் மிச்சம் சொச்சமெண்டு  
     எனக்கு என்ன மிஞ்சியிருக்கு?

7)  சாப்பாடு கனத்துப் போச்சுது
     (சாப்பாடு அதிகமாகிவிட்டது)

8)  கனக்க சனம் ஷெல் அடிச்சதில செத்துப் போய்ட்டினம்.
     (நிறைய மக்கள் தொகை ஷெல் அடித்ததில் இறந்துவிட்டார்கள்)

9)  சிரியாவில இருந்து இன்னும் கனக்க  சனம் அகதிகளாக வந்து கொண்டிருக்கினம்.

10)  தம்பிக்கு இன்னும் கொஞ்சம் (கூட) சோறு  போடு.
     (இன்னும் கொஞ்சம் - மேலதிகமாக என்ற அர்த்தத்தில் வரும்)

11)  இன்னும் கொஞ்சம் குறைச்சு வட்டிக்கு விட்டிருக்கலாம்.
     (இன்னும் கொஞ்சம் என்பது இங்கு குறைவான அர்த்தத்தில் வரும்)



Swathi Swamy

unread,
Nov 27, 2015, 10:48:11 PM11/27/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
29)   இன்றைய தேர்வுச் சொற்கள் பெயர் சொற்களாலானவை.  மன்னிக்கவும் இச் சொற்கள் கொஞ்சம் கடுமையானவை மட்டுமல்ல பொது இடங்களில் பேசும் நாகரீகமான வார்த்தை வடிவங்கள் அல்ல .. அதே சமயம் பேசத்தகாத தூஷணையும் அல்ல.
  சீரற்ற ஒழுக்கத்தினை கொண்ட மனிதனை குறிக்கும் கொஞ்சம் வீச்சம் கூடிய கடுமையான  வார்த்தை வடிவங்கள் அவை.


காவாலி / கடப்புலி/ விடுகாலி//வங்கோலை  -  நடத்தை தவறான மனிதன் . ஒழுக்கமற்றவன்.

காவாலி -   ஒழுக்கங் கெட்ட கொடியவன்.
கடப்புலி - கெட்டவன்
விடுகாலி - கட்டுக்கடங்காதவன். கட்டுப்பாடற்றவன்

வங்கோலை - ராஸ்கல் -  கெட்டவன்

இந்த வார்த்தைகள் மிக உக்கிரமான வெறுப்பின் அல்லது கோபத்தில் ஒருவரை பார்த்தோ அல்லது ஒருவரைப் பற்றியோ அவரது  ஒழுக்கச்சிர் கேட்டை சுட்டிக் காட்டி இடித்துரைக்கும் சொற்களாக அடையாளப்படுத்தப்படுவை.

உதாரணம்

1)  இஞ்ச....உந்தக் காவாலி சேட்டையை என்னட்டைக் காட்டாதை ...!
2) இதென்ன காவாலித்தனம் ?
3)கண்ட கண்ட காவாலி கடப்புலியளோடு ரோடு ரோடா திரி..அப்ப தானே அப்பாண்ட பெயரை கெடுக்கலாம் என்ன?
4) நவமணிண்ட ரெண்டு மக்களும் விடுகாலிகளாப் போட்டான்கள்.
5) வங்கோலை ராஸ்கல் உனக்கு அவ்வளவு தைரியமா?

Swathi Swamy

unread,
Nov 27, 2015, 10:48:11 PM11/27/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai



22)

இன்றைய சொல்  விளக்குமாறு / ஈர்க்குமாற்று/தும்புத்தடி /கட்டுமாறு .

 துடைப்பம் என்று தமிழகத்தில் பொதுவாக சொல்லப்படும் .
துடைப்பம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வாரியல் என்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளக்குமாறு என்றும் அழைக்கபடுவது ஈழத்தில் விளக்குமாறு, ஈர்க்க்மாறு, கட்டுமாறு(மட்டக்களப்பு தமிழ்) , தும்புத்தடி அழைக்கப்படும்.

 வீடு, வளவு கூட்டிப் பெருக்கவென்று  உபயோகப்படும் சாதனம்.  தென்னம் பொச்சுகளிலிருது உருவாக்கிய நாரினாலும்,  தென்னோலைகளிலிருந்து வார்ந்த ஈர்க்குகளினாலும் தயாரிக்கப்பட்டவை .

1700 களில் தான் தடி வைத்த விளக்குமாறுகள் ,தும்புத்தடிகள் பாவனைக்கு வந்திருக்க வேண்டும் . அதன் முன் உட்கார்ந்த நிலையில் கூட்டிப் பெருக்கும் விளக்குமாறு அல்லது ஈர்க்குமாறுகள் மட்டுமே பாவனையில் இருந்திருக்கும்.

”Manufacture

In 1797, the quality of brooms changed when Levi Dickenson, a farmer in Hadley, Massachusetts, made a broom for his wife, using the tassels of sorghum, a grain he was growing for the seeds. His wife spread good words around town, therefore caused a need for Dickenson's sorghum brooms. The sorghum brooms held up well, but ultimately, like all brooms, fell apart. This made Dickenson invent a machine that would make better brooms, and faster than he could. In 1810, the foot treadle broom machine was invented. This machine played an integral part in the Industrial Revolution.

.In Swaziland, witches' broomsticks are short bundles of sticks tied together without a handle.

United States

One source mentions that the United States had 303 broom factories by 1839 and that the number peaked at 1,039 in 1919. Most of these were in the Eastern United States; during the Great Depression in the 1930s, the number of factories declined to 320 in 1939. The state of Oklahoma became a major center for broom production because broom corn grew especially well there, with The Oklahoma Broom Corn Company opening a factory in El Reno in 1906. Faced with competition from imported brooms and synthetic bristles, most of the factories closed by the 1960s.”

தும்புத்தடி


 ஈர்க்குமாறு, விளக்குமாறு, கட்டுமாறு







ஆங்கில சிறுவர் கதைகளிலும், திரைப்படங்களிலும் தடி வைத்த தும்புத்தடி சுனியக்காரிகள் பயணிக்கும் வாகனமாக சித்தரிக்கப்படுகிறது.

அதே போல் ஈழத்தில் முழிவியலத்துக்கு உதவாத பொருளாக தும்புத்தடி, விளக்குமாறு கருத்தப்பட்டு வருகிறது.

உதாரணம்:

1)ஒவ்வொரு நாளும் ஈர்க்குமாற்றால் வளவு கூட்டி தண்ணி தெளித்தால் தான்  புளூதி கிளம்பாமல் இருக்கும்.

2) காலமை எழும்பினதும் தும்புத்தடியால் வீடு பெருக்காவிட்டால்  வீடு விடியாது.

3) எங்க அந்த விளக்குமாறு..?  (ஒரு விசயம் அல்லது ஒருவர் கோபத்தைக் கிளறினால் அவரை தாக்குவதற்காக பாவிக்கப்படும் சொல்லாடல்)

   4) விளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சமாம். (பழமொழி)

   5) மூஞ்சூறு விளக்குமாறு கேட்டுதாம்.(பழமொழி) 

விளக்குமாறு, தும்புத்தடி பற்றிய விடுகதைகள் :

அ)  விடிந்தவுடனே வேலையில் இறங்குவான்; வேலை  
       இல்லையேல் மூலையில் கிடப்பான். அவன் யார்?

ஆ)  ஓடியாடி வேலை செய்தபின் மூலையில்  
         கிடப்பாள்.அவள்யார்?

இ)   ஆயிரம் குழந்தைக்கட்கு அரைஞாண் கயிறு ஒன்று. அது
        என்ன?





17651128-Straw-broomstick-Stock-Photo.jpg
coconut-brooms-ekel.jpg
eerkumaru.jpg

N. Ganesan

unread,
Nov 28, 2015, 11:49:40 AM11/28/15
to வல்லமை, thami...@googlegroups.com, pira...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, thamizh...@googlegroups.com, மின்தமிழ்


On Saturday, November 28, 2015 at 8:39:42 AM UTC-8, சுவாதி சுவாமி wrote:

இத்தனை அர்த்தங்கள் ஆணைக்கு இருந்தாலும் எங்களிடம் புழங்கப்படும் ஆணை கடவுள் மீதோ அல்லது ஒருவர் மீதோ குறிப்பிட்டு அல்லது அவரை சாட்சியாக வைத்து செய்து கொடுக்கும் உறுதிமொழி அல்லது வாக்குறுதி அல்லது சத்தியம் செய்யும் போது பொருத்தப்படும் வார்த்தை இது.

உதாரணம் :  
  1. அம்மாவாணை  - அம்மா மீது சத்தியம் / அம்மா மேல் ஆணை


இதே பொருளில், தன் மீது சத்தியம் என்று ஞானசம்பந்தர் பாடுகிறார்:

தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.


கடல்வரை யோதம்மல்கு கழிகானல் பானல்
கமழ்காழி என்று கருதப்
படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த
பதியான ஞான முனிவன்
இடுபறை யொன்றஅத்தர் பியன்மே லிருந்தி
னிசையா லுரைத்த பனுவல்
நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க
வினைகெடுதல் ஆணை நமதே.

ஜோ டிகுரூஸ்மீதான  கட்டுரையில்:

”ஆணை நமதே” என்னும் தேவாரங்ஙள் தொகுக்கப்பட வேண்டும்.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Nov 28, 2015, 12:01:30 PM11/28/15
to வல்லமை, thami...@googlegroups.com, pira...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, minT...@googlegroups.com
ஆணை நமதே பதிகங்கள்

திருநனிபள்ளி தலத்தில், ‘காரைகள் கூகை முல்லை’ எனத் தொடங்கும் பதிகத்தின் இறுதிப் பாடலில்,”நனி பள்ளி உள்க; வினை கெடுதல் ஆணை நமதே!” என்றும் திருவேதிகுடி தலத்தில், ‘நீறு வரி ஆடு அரவோடு’ எனத் தொடங்கும் பதிகத்தின் இறுதிப்பாடலில்,”இமையோர் அந்த உலகு எய்தி அரசாளும் அதுவே சரதம்; ஆணை நமதே!” என்றும் திருக்கழுமலம் தலத்தில், ‘மடல் மலி கொன்றை” என்று தொடங்கும் பதிகத்தின் இறுதிப் பாடலில்,”வான் இடை வாழ்வர்,மண்மிசைப் பிறவார்,மற்று இதற்கு ஆணையும் நமதே” என்றும் கூறி தன் முத்திரையுடன் கூடிய ஆணையை மொத்தம் நான்கு முறை பிறப்பிக்கிறார். 
- லண்டன் சுவாமிநாதன்.

தமிழ்நாட்டிலே திராவிடக் கக்ஷிகளின் ஆதிக்கத்தால், தமிழர் பிற இந்திய மொழிகளைக் கற்பிக்க ஒரு கருவியாக தோற்றுவித்த
கிரந்த எழுத்து தேய்ந்துவருகிறது. ஹிந்தி எழுத்தே மேலோங்கிவருகிறது. எல்லா இந்திய மாகாண எழுத்துக்களும் சம அந்தஸ்து
பெற்றால் தான் பாரதத்தின் வளர்ச்சியும், ஒற்றுமையும் பெருகிவளரும். ஹிந்தி எழுத்து அல்லாமல், எப்பொழுதும் உள்ள
கிரந்த எழுத்தை முதன்மையாக வைத்து ஈழ நாட்டு ஹிந்துக்கள் சமய சாஸ்திரங்களை எழுதி வருகின்றனர். மலையாளம், ஹிந்தி,
சம்ஸ்கிருதம், ... போன்ற மொழிகளின் பல்வேறு மதங்களின் சாத்திரங்கள், தோத்திரங்களை எழுதும் நிலை கிரந்தத்தில் உருவாக
ஈழ நாட்டவரைப் பின்பற்றுவோம்.

திரு. நிரஞ்சன் பாரதிக்கு சந்தவசந்தம் குழுவில் இன்று எழுதினேன் :

On Tuesday, November 24, 2015 at 6:56:03 AM UTC-8, Niranjan Bharathi wrote:

வணக்கம் ,

முருகனை ஏன் தமிழ்க் கடவுள் என்று சொல்கிறோம் ?

முருகனுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு ?


சம்சாரம் தமிழ்க் குறத்தி அல்லவோ? அதனால் தான்.

ஸ்ரீஸுப்ரமண்யாய நமஸ்தே - விளக்குகிறார் காஞ்சிப் பெரியவர்:

பாரதத்தின் இரு செம்மொழிகளிலும் பாண்டித்யம் பெறுக.
தமிழ் மரபுச் செய்யுள்கள் எழுத தமிழ் எழுத்து (தொல்காப்பியம், நன்னூல்).
பிற இந்திய மொழிகளை எழுத நம் முன்னோர் கண்ட எழுத்து
கிரந்தம். தென்கிழக்கு ஆசியாவில் எத்தனையோ மொழிகளை
எழுத நம் முன்னோர் கற்பித்த லிபி கிரந்தம் (Grantha is the Laitin script of Asia!).
அதை விட்டுவிட்டதால் தான் பிற இந்திய பாஷைகளின் இலக்கியங்களை
தமிழர் படிப்பது தடையாக உள்ளது. தமிழ் லிபி, கிரந்த லிபி
இரண்டும் தமிழ்ச் சமுதாய வளர்ச்சிக்கு உதவும். ஆந்திரம், கர்நாடகம்,
கேரளம் எழுத்துக்களை நோக்குங்கள் - ஹிந்தி ஒவ்வொரு எழுத்துக்கும்
நேரான ஒன்று இருக்கிறது. தொன்மையான சங்க, பக்தி இலக்கியம்
போன்ற மரபிலக்கியங்களுக்கு தமிழ் லிபி. ஆனால், மலையாளம், சம்ஸ்கிருதம்,
ஹிந்தி, பிராகிருதம், ... போன்றன படிக்க கிரந்த லிபி உதவும்.
தமிழ்க்கடவுள் ஸுப்ரமண்யர் உதவுவாராக.

நா. கணேசன்

 

நன்றி ,
நிரஞ்சன்


Swathi Swamy

unread,
Nov 29, 2015, 11:35:29 AM11/29/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
31)  கவனப்பிசகு அல்லது  எந்த விசயத்தையும் கூர்ந்து நோக்காது வேறு விடயங்களில்  கவனத்தை மேய விடல் என்பது ஒரு விதமான மனித இயல்பு என்றால்  பிறர் விசயங்களை ஆராய்தல், பிறருடைய சொந்த விசயங்களை அறிவதில் சுவாரஸ்யம் காணல் என்பது ஒரு வகை மனநோய் எனலாம்.  இத்தகைய செயற்பாடுகளைப் பற்றி குறிக்கும் சொற்களை இன்றைக்கு உங்கள் முன் வைக்கிறேன். 

ஏமலாந்தல் -  ஒரு விசயத்தில் கவனம் வைக்காது வேறு எங்காவது பார்வையை அலையவிடுவது.

ஏமாலாந்தி  - மேற்குறிப்பிட்ட செயற்பாடுடையவர். எந்த விசயத்தையும் உள்வாங்குவதில் திறனற்றவர்.  (பெயர் சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படும்)

ஏமல் என்பது மனக்கலக்கம் , முதிரை என்ற இரண்டு அர்த்தங்கள் கொண்டதாக அகராதி சுட்டுகிறது.

பிராக்கு -  கவனம் கலைதல், பொழுது போக்கு.

பிராக்கு பார்த்தல் - ஏமாலாந்தல்

விடுப்பு -  Gossip ; புறம் பேசுதல். அரட்டை

 விடுப்பு பார்த்தல் - இன்னொருவரின் விசயங்களை கவனித்தல் அல்லது உள்வாங்குதல்


ஏமாலாந்தல் , பிராக்கு பார்த்தல் என்பது  ஒரு விசயத்தில் கவனத்தையும் கருத்தை ஒருமித்திருக்க முடியாமையை குறிப்பன.
விடுப்பு , விடுப்பு  பார்த்தல் என்பது  பிறர்விசயத்தை ஆராய்வதும், உள்வாங்குவதுமாகும்.

உதாரணம்

  1.  அங்க என்ன ஏமலாந்திக் கொண்டு நிற்கிறாய்? (வினைச் சொல்லாக ஏமாலாந்தி)
  2. அவன் சரியான ஏமலாந்தி...அவனை நம்பி ஒரு காரியத்தை பொறுப்புக் குடுப்பியே? (பெயர் சொல்லாக ஏமலாந்தி)
  3. பிராக்கு பார்க்காமல் கையில இருக்கிற புத்தகத்தை படி பார்ப்பம்.
  4. அங்க என்ன உனக்கு பிராக்கு வேண்டியிருக்கு?
  5. இந்த விடுப்பு கதைக்கிறதில பெண்டுகளை விட நீ மோசமானவனடா.
  6. நாள் முழுக்க அடுத்தவன் வீட்டில என்ன நடக்குது எண்டு விடுப்பு பார்த்துக் கொண்டே இருந்தால் உன்ர வீட்டில என்ன நடக்குதெண்டு எப்பிடி தெரியப் போகுது உனக்கு?

Swathi Swamy

unread,
Nov 29, 2015, 11:35:29 AM11/29/15
to vallamai, தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, மின்தமிழ்
மிக்க நன்றி ஐயா...

ஒவ்வொரு சொல்லுக்கும் பண்டைய தமிழில் எங்காவது ஆதாரம் கிடைக்குமா என்று பார்க்க எனக்கு மிகவும் ஆவல்.. ஆனால் இணையத்தில் எனது தேடு முறை மிகவும் குறுகியதாக இருக்கிறது..  உங்கள் ஆதாரங்கள் என்னை மலைக்க வைக்கிறது.

மிகவும் நன்றி ஐயா..

அன்புடன்
சுவாதி

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Swathi Swamy

unread,
Nov 29, 2015, 11:35:29 AM11/29/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
30)  ஆணை / சத்தியம் -   ஒருவர் தனது வாக்கின் பரிசுத்தத்தை உறுதிப்படுத்தும் வினைப்பாடு ; வாக்குறுதி :கடவுளையோ அல்லது உறவுகளையோ சாட்சியாக வைத்து சொல்லப்படும் வாக்குறுதி.

ஆணை அவிழ் -  ஒருவருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை அவரோ அல்லது சத்தியம் செய்து கொடுக்கப்பட்டவரோ நீக்கல் .
                                 சத்தியத்திலிருந்து விலகுதல்.



எங்களூரில் சத்தியம் செய்வது நித்தம் நடக்கும் இயல்பான செயல்.
சாதாரண உரையாடல்களில் கூட  சத்தியம் என்பது எப்படியோ ஒரு விதத்தில் புகுந்துவிடும். அப்படியொரு முக்கியத்துவம் சத்தியத்துக்கு இருக்கிறது.
நம்பிக்கையில்லாத அல்லது முன் பின் தெரியாதவர்களை கூட  அவர்கள் செய்யும் சத்தியத்தை மட்டுமே நம்பி உதவிய, கடன் கொடுத்த பலர் எங்களூரில் இருந்திருக்கிறார்கள்.

அதுவும் பேச்சுவாக்கில்  செய்யும் சில சத்தியங்களை செய்பவரும் சரி கேட்பவரும் சரி பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை..ஆனால்  பெற்ற தாய்மீதும் , பிறந்த குழந்தைகள் மீதும், பெண்களாயிருந்தால் அவர்கள் கணவர் மீதோ அல்லது தாலி மீதோ செய்யும் சத்தியம் மிகவும் மதிப்புக்குரியதாகவோ நம்பத்தகுந்ததாகவோ ஏற்றுக் கொள்ளப்படும். அதே போல்  வெகு சாதாரணமான விசயங்களுக்காக இந்த மூன்று சத்தியங்களையும் செய்ய எம் மக்கள் பெரும்பாலும் முன்வரமாட்டார்கள் . இயலாத கையறு நிலையில் தான் இந்த வகையான சத்தியங்கள்  உறுதியளிக்கப்படும். கடவுளாணை என்று பொய்யாக சத்தியம்  செய்பவர்கள் கூட முறுகண்டி பிள்ளையார் மீது பொய்சத்தியம் செய்ய பயப்பிடுவார்கள்.. சில ஊர்களின் காவல் தெய்வங்களான வைரவர் மீதும் பொய் சத்தியம் செய்ய மக்கள் பயப்பிடுவதுண்டு. கோவில்களில் கற்பூரம் ஏற்றி எரியும் சுவாலை மீது அடித்து சொல்லும் சத்தியத்திற்கு இரு பக்கத்தாரும் கட்டுப்பட்டு நடப்பது இங்கு சகஜம். அதே போல் தான் உறவுகளின் தலை மேல் அடித்து சத்தியம் செய்வதும் .

செய்த சத்தியம் தவறக் கூடாது என்று கருதி வாழும் மனிதர்கள் நடுவில் குடிப்பழக்கமிருப்பவர்களின் சத்தியங்கள் காற்றில் பறந்த கதைகளும் உண்டு. காதல் சத்தியங்கள் கடல்நீரில் கரைந்த விரலோவியங்களான புதினங்களும் உண்டு.  எங்கள் அயலில் ஒருவர் சொன்ன சத்தியத்தைக் காப்பாற்ற முடியாமல் தற்கொலை செய்த நிகழ்வும் நடந்திருக்கிறது. அதே நேரம் செய்த படு பயங்கரமான சத்தியத்தை  தான் செய்யவே இல்லை என்று  தலையில் அடித்து  சத்தியம் செய்த எம்டன்களும் இருந்திருக்கிறார்கள்.  அந்தளவுக்கு சத்தியம் என்ற வார்த்தை ஒருமீது சொல்லப்படும் ஆணை எங்களோடு கலந்த விட்டதொரு சொல்.

சத்தியம்




பொருள்

சத்தியம்

மொழிபெயர்ப்புகள்

வினைச்சொல்

சத்தியம்

மொழிபெயர்ப்புகள்


ஆணை :

ஆணை

பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • அங்கேயே நில் என்று ஆணை இட்டார் (ordered him to stand right there)
  • கைது செய்ய ஆணை (order to arrest)
  • தந்தைமேல் ஆணை!

(இலக்கியப் பயன்பாடு)

  • கட்டளை. அமரர்கோ னாணையி னருந்துவோர்ப் பெறாது (மணி. 14, 76)
  • தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை - பாடல்

சொல்வளம்

ஆணை - ஆணையம்
ஆணையிடு
அழைப்பாணை, பிடிப்பாணை, பணியாணை, பிடியாணை, கைதாணை, அரசாணை, சேர்ப்பாணை

இத்தனை அர்த்தங்கள் ஆணைக்கு இருந்தாலும் எங்களிடம் புழங்கப்படும் ஆணை கடவுள் மீதோ அல்லது ஒருவர் மீதோ குறிப்பிட்டு அல்லது அவரை சாட்சியாக வைத்து செய்து கொடுக்கும் உறுதிமொழி அல்லது வாக்குறுதி அல்லது சத்தியம் செய்யும் போது பொருத்தப்படும் வார்த்தை இது.

உதாரணம் : 
  1. அம்மாவாணை  - அம்மா மீது சத்தியம் / அம்மா மேல் ஆணை

அதே போலவே

  • அப்பாவாணை
  • அக்காவாணை
  • பிள்ளையாணை
  • கடவுளாணை
  • அம்மாளாச்சியாணை

உரையாடலில் பயன்படும் போது .................


  1. என்ர ராசாத்தியாணை எனக்கு தெரியாதடி என்ன நடந்தது எண்டு.
  2. என்ர பிள்ளையாணை சொல்லுறன் நான் அந்த காசை எடுக்கேலை
  3. என்ர அம்மாவாணை இனிமேல் குடிக்கமாட்டன்
  4. என்ர புருசனாணை / தாலி சத்தியமா சொல்லுறன் எனக்கு அவனை தெரியாது.
  5. வேணுமெண்டால் எந்தக் கோயிலிலயும் வந்து சத்தியம் செய்து தாரன் கடவுளாணை அவளை நான் ஏமாத்தமாட்டன்.
  6. நீ என்ன சொன்னாலும் நான் நம்பமாட்டன்.  செல்வன் ஒரு நாளும் செய்து தந்த சத்தியத்தை மீற மாட்டான்.
  7. எனக்கு இந்த சத்தியம் எல்லாம் வேண்டாம்..முதலில் ஆணை அவிழ்..




Swathi Swamy

unread,
Dec 1, 2015, 9:58:43 AM12/1/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
32)  கதைத்தல் / பறைதல் -   உரையாடல்
        ஏசுதல் / பேசுதல் -  கோபமான பேச்சு.

மொழி தெரியும் முன்பே ஒலிகள் மூலமாக மானுடம் தமக்குள் உரையாடலை தொடங்கிவிட்டது.
மொழி உரையாடலை , தொடர்பை இலகுவாக்கும் கருவி மட்டுமே...
ஆனால் இன்று தாய் மொழி என்பது உயிராகி, மூச்சாகி  எம்மை எதற்கும் விட்டுக் கொடுக்காது எவருக்கும் அடிபணிய விடாமல் இழுத்து வைத்திருக்கும் கடிவாளமாக கவசமாக சுவாசமாக உருக் கொண்டிருக்கிறது.

இந்த உரையாடல் என்ற வடிவம் கதைத்தல் பறைதல் என்ற அடிப்படையில் அதன் கிளை வடிவங்களாக எப்படியெல்லாம் பரந்திருக்கிறது என்று 2 மணி நேர மேலோட்டமான அலசலில் எனக்கு கிடைத்தவை தான் இன்றைய சொல்லின் வடிவங்கள்.
இன்னும் பல சொற்கள் இருக்கலாம் எனக்கு தெரியாதவையாக...அவை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.. எனக்கும் அவற்றை தெரியப்படுத்துங்கள் என்று  கேட்டுக் கொண்டு ....தொடர்கிறேன்...!

கதைத்தல்

  • கதைக்கிறன்/கதைத்தேன்/கதைப்பேன்-தன்னிலை
  • கதைக்கிறாய்/கதைத்தாய்/கதைப்பாய் - முன்னிலை
  • கதைக்கிறான்/கதைத்தான்(கதைச்சான்,கதைச்சவன்)/கதைப்பான் - படர்கை
  • கதைக்கிறாள்/கதைத்தாள்(கதைச்சாள்,கதைச்சவள்)/கதைப்பாள்-படர்கை
  • கதைக்கிறார்/கதைத்தார்(கதைசசார்/கதைச்சவர்)/கதைப்பார் -படர்கை
  • கதைக்கிறார்கள்(கதைக்கினம்) / கதைத்தார்கள்(கதைச்சார்கள்)/கதைப்பார்கள்(கதைப்பினம்) - பன்மை & படர்கை
இதே போல்

பறைகிறேன் (பறையிறன்) / பறைந்தேன் (பறைஞ்சேன்) /பறைவேன்
பறைகிறாய் (பறையிறாய்) /பறைந்தாய் (பறைஞ்சாய் & பறைஞ்சனீ)  /பறைவாய்
பறைகிறான்(பறையிறான்)/ பறைந்தான்(பறைஞ்சான்) / பறைவான்
பறைகிறாள் (பறையிறாள்) / பறைந்தாள்(பறைஞ்சாள்) / பறைவாள்
பறைகிறார் (பறையிறார்) / பறைந்தார் (பறைஞ்சார்) /பறைவார்
பறைகிறார்கள் (பறையிறார்கள்) / பறைந்தார்கள் (பறைஞ்சினம் & பறைஞ்சார்கள்) / பறைவார்கள்.

இந்த வார்த்தைகளோடு கொண்டிருத்தல் என்ற வார்த்தைச் சேர்வை சேர்த்தும் பயன்படும்.
உதாரணமாக

(நான்) கதைச்சுக் கொண்டிருக்கிறன்/ கொண்டிருக்கிறேன்
(அவள்) பறைஞ்சு கொண்டிருந்தாள்
(அவர் )ஏசிக் கொண்டிருப்பார்
(நாம்) பேசிக் கொண்டிருந்தம்

இந்த கதைத்தலும் , பறைதலும் விரிந்து விரிந்து போக போக அது கவனிப்புகளையும், உள்வாங்கலையு, கற்பனையையும், கவித்துவத்தையும், இட்டுக் கட்டு பேசுவதையும், இடித்துரைத்தலையும், ஒப்பிட்டு பேசுவதையும் ஒப்பாரிப் புலம்பலையும்  சிருஷ்டித்து பல பல சொல்வடிவங்களாக உருக் கொண்டிருக்கின்றன நம்மிடையே....  அவையாவன

1) புதினம் பேசுதல் -    அயல், சமூக, உலகளாவிய நடப்புகளை சுட சுட புத்தம் புதிய செய்தியாக எல்லோரிடமும் தெரிவித்தல்.. 

2) விடுப்பு -  ஒருவரைப் பற்றிய செய்திகளை இன்னொருவரிடம் ஆர்வமாக கேட்பதும் பிறரிடம் பகிர்வதும்

3) விண்ணானம், வித்தாந்தம் , நூனயம்(நூல் நயம்), நுண்ணயம் -  மிகவும் பாண்டித்தியம் பெற்றவர்கள் போல் ஒவ்வொன்றுக்கும் உதாரணங்களையும் எடுத்துக்காட்டுகளையும் , சான்றுகள், ஆதாரங்கள் இருப்பது போல் காட்டி பேசுதல்.

4)  அலம்பல், அலசுவாரம் (ம.த), அரட்டை -  அர்த்தமற்றை பேச்சு. வீண் பொழுது போக்கும் பேச்சு.

5)  ஓட்டை வாய் / ஏலவாய் (ம.த)  -  இரகசியம் பாதுகாக்க வேண்டுமென்ற பொறுப்புணர்வில்லாமல் பிறரிடம் உள்ளதை உள்ளபடியே சொல்லிவிடுதல்.

6) ஊறல் (ம.த) - தேவையற்ற பேச்சு(ம.த)

7) எச்சிற்கதை - மோசமான பேச்சு -(ம.த)

8) எழுந்தமானம் /வந்தமானம் (ம.த) - எதுவித ஆதாரமுமில்லாமல் பேசுதல். எவரைப் பற்றியும் நாக்கூசாமல் பொய் பேசுதலையும் கூறும். தன் பேச்சினால் இன்னொருவருக்கு ஏற்படப் போகும் பாதிப்பை பற்றீய கவலையில்லாமல் பேசுதல் .

9)  மாறியாடல் - கட்சி மாறி பேசுவது

10) லாசுவாசிக்கதை - தேவையற்ற பேச்சு. (ம.த)

11) வக்கணம்/வக்கணை - உவமையுடன் குறை கூறி ஏளனஞ்செய்தல்.

12) கோள்மூட்டி / குண்டானி (அ) குண்டனி (ம.த)/சாட்டி மூட்டடி /மூட்டல்/ போட்டுக் கொடுத்தல்  - ஒருவரைப் பற்றி இன்னொருவர் வெறுப்பேற்படும் படியோ அல்லது கோபப்படும்படியோ  கோள் சொல்லல்

13 ) குளையடித்தல் /தாளம் போடல் - இணக்கம் சொல்லும் வார்த்தைகளை சொல்லி ஏமாற்றுதல் /ஜால்ரா
குழறல் - உளறல் ; பயத்தின் காரணமாக மறைக்க வேண்டியதை மறைக்காமலோ அல்லது தடுமாறியோ தன்னை மறந்தோ உளறி விடல் .

14) புலம்பல் - மனதில் இருப்பவற்றை அழுகையினூடோ அல்லது கோபத்துடனோ உணர்ச்சிவசப்பட்டு கொட்டித் தீர்த்தல்.

15)  ஏசுதல் / கொம்புதல் - திட்டுவது -  கோபத்தில் திட்டுவது .

16)  சளாப்பல் - பொருளற்ற பேச்சு  அல்லது பொய் சாட்டு சொல்லுதல்.

17 ) சாக்கு போக்கு  /சாட்டு -  பொய் காரணம் சொல்லல்..போலி நியாயம் கூறுதல்.

18 )  நொட்டை /நொள்ளை - எதிலும் குற்றம் ,குறை சொல்லல்.

19 ) புறணி -  ஒருவரைப் பற்றி கோள் சொல்லுதல் அல்லது குற்றம் கண்டு பிடித்து அவரிடமோ அல்லது பிறரிடமோ  குறை சொல்லல்

20 ) புறு புறுப்பு - திருப்தியின்மையையோ அல்லது தனது வெறுப்பையோ அல்லது மனக்கருத்தையோ வெளிப்படையாகப் பேசாது தனக்குள்ளேயே முணு முணுத்தல்.

21 ) புளுகல் - இட்டுக் கட்டி பெருமை பேசல்.

22) வாய்சாலன் - பேச்சினால் மற்றவர்களை வசியப்படுத்தல்

23) வாய்சவாடல் - வாயால் வீரம் பேசுபவன்

24) விடான் கணக்கு (ம.த) - மோசடியும்  ஏமாற்றமுமான செய்தி கூறல்.

பிற்குறிப்பு : அடைப்புக்குறிக்குள்  ம.த என தரப்பட்டிருப்பது மட்டக்களப்பு தமிழ் வட்டார வழக்குச்சொல்.

Swathi Swamy

unread,
Dec 15, 2015, 11:21:00 AM12/15/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
40)   ஒரு வார்த்தையின் கனத்தை அல்லது அழுத்தத்தை அதிகப்படுத்திக் காட்டும் முகமாக  அந்த வார்த்தையின் முன்னால் சில குறிப்பிட்ட சொற்களை சேர்ப்பது  உண்டு,.. அப்படி எங்கள் ஊர் பேச்சு வழக்கில்  “வலு” என்ற வார்த்தை  உரையாடல்களில் ஒரு விடயத்தின் தீவிரத்தை மேலும் அதிகமாக உணர்த்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது.  

அ) வலு கெதியா  -  மிக விரைவாக

ஆ) வலுக்கட்டாயமா  - பலவந்தமாக

இ) வலு கவனமா -  மிகவும் ஜாக்கிரதையாக

ஈ) வலுத்த சத்தமாக -  உரத்த சத்தம்

உ) வலு கோவமா -  அதிகப்படியான ஆத்திரம்

ஊ) வலிச்ச உடம்பு  -  உரமேறிய உடம்பு

எ) வலு கெட்டிக்காரன்  - பெரிய அறிவாளி

ஏ) வலு விண்ணன் - சாமார்த்தியன்

உதாரணம்:

 1)  வலு கெதியா போனால் தான் செக்கலுக்கு முன்னம் வீடு போய் சேரலாம்.

2)  அவள் மாட்டன் மாட்டன் எண்டு கத்த கத்த வலுக்கட்டாயமா இழுத்துக் கொண்டு போய்ட்டாங்கள்.

3)  இந்த விசயத்தில வலு கவனமாக இருக்க வேணும். இல்லாட்டில் துலைஞ்சம்.

4)  பாவம் அவன்...ஆமிக்காரண்ட அடி தாங்காமல் வலுத்த சத்தமாக கத்துறான்.

5) என்ன உன்ர கொப்பர் வலு கோவமா வந்தார்? ஆரோடையாம் பிரச்சினை?

6)  அவன் ஒரு வலிச்ச உடம்புக்காரன்..

7)  என்ர மோன் வலு கெட்டிக்காரன்.. அவனை வெல்ல ஆராலும் முடியாது

8)  சின்ராசா வலு விண்ணன் தான் கண்டியளோ...ஆனானப்பட்ட லோகனையே மடக்கிட்டார் எண்டால் பாருங்கோவன் 


Swathi Swamy

unread,
Dec 15, 2015, 11:21:00 AM12/15/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai

45) இதே போல் இரண்டு வினைச்சொல் சேர்ந்த வார்த்தைகளும் உண்டல்லவா? அவற்றையும் பார்க்கலாமே


வந்து கொண்டிருந்தேன்  - வந்து கொண்டிருந்தன்

வந்து கொண்டிருக்கிறேன் -  வந்து கொண்டிருக்கிறன்

வந்து கொண்டிருப்பேன் - வந்து கொண்டிருப்பன்

1) அண்டைக்கு ஆமிக்காரங்கள் வரேக்கில அம்மன் கோவில் வெளிவீதில தான் வந்து கொண்டிருந்தன்.

2) கொஞ்சம் பொறுங்கோ...இந்தா..பக்கத்தில தான் வந்து கொண்டிருக்கிறன்

3) நாளைக்கு இந்நேரம் யாழ் தேவில யாழ்ப்பாணத்துக்கு வந்து கொண்டிருப்பன்.

*******************************************************************

போய் வந்தேன்  - போய் வந்தன்

போய் வருகிறேன் -  போய் வருகிறன்

போய் வந்தேன்  - போய்ட்டு வந்தன்

******
வந்து போனேன் -  வந்து போனன்
வந்து போகிறேன் - வந்து போறன்
வந்து போவேன் - வந்து போவன்

அதே போல் ...

வந்துவிட்டு போனேன்  - வந்திட்டுப் போனன்
வந்துவிட்டு போகிறேன் - வந்திட்டு போறன்
வந்துவிட்டு போவேன் - வந்திட்டு போவன்


திரும்பி போனேன் - திரும்பிப் போனன்
திரும்பிப் போகிறேன் -  திரும்பிப் போறன்
திரும்பிப் போவேன் - திரும்பிப் போவன்


திருப்பி தந்தேன் - திருப்பி தந்தன்
திருப்பி தருகிறேன்- திருப்பி தர்ரன்
திருப்பி தருவேன் - திருப்பி தாறன் 

இதே போல் ஆண் பால், பெண்பால், பலர் பால் வகைகளும் மூன்று காலங்களில் பொருந்தி வரும்.

உதாரணமாக

ஆண்பால்:

வந்து போனான் -  வந்திட்டு போனான்
வந்து போகிறான் - வந்து போறான்
வந்து போவான் - வந்து போவான்.

பெண் பால்:

வந்து போனாள் - வந்திட்டு போனாள்
வந்து போகிறாள் - வந்து போறாள்
வந்து போவாள் - வந்து போவாள்

பலர்பால்

வந்து போனார்கள் - வந்திட்டு போய்ட்டினம்/வந்திட்டு போனவை/வந்திட்டு போனவையள்

வந்து போகிறார்கள் - வந்து போகினம்

வந்து போவார்கள் - வந்து போவினம்

(இன்னும் வரும்)


2015-12-13 17:49 GMT-05:00 Swathi Swamy <mswat...@gmail.com>:
44)  இன்றைக்கு கொஞ்சம் எங்கள் வட்டாரத் தமிழின் இலக்கண முறையில் ஒரு சின்ன விசயத்தைப் பார்க்கலாமென்று முயன்றிருக்கிறேன்.
 
இடம், பால், காலம் காட்டும் விகுதிகள் சொற்களுடன் சேரும்போதும் ஈழத்து பேச்சுத்தமிழ் பல வேறுபாடுகளைக் காட்டுகின்றது.

1) வந்தேன் - வந்தனான்/வந்திட்டன்
    வருகிறேன் - வாறன்./வந்து கொண்டிருக்கிறன்
வருவேன் - வருவன் /வரப் போறன்


உதாரண வாக்கியங்கள் :

1)

  1. நான் நேற்று இரவு வந்தனான்
  2. நான் அப்பவே வந்திட்டன்

  1. நான் நாளைக்கு வேலைக்கு வாறன்.
  2. நான் இப்ப வீட்டை தான் வந்துகொண்டிருக்கிறன்.
  1. நான் வாற மாசம் தான்  வேலைக்கு வருவன்
  2. அம்மா நான் திரும்பி ஊருக்கு வரப் போறன்.

இதை  ஆண் பால் , பெண் பால், பலர்பாலில் பார்த்தால் 

வந்தான் -  வந்தவன்/வந்திட்டான்
வருகிறான் - வாறான்/வந்து கொண்டிருக்கிறான்
வருவான் - வருவான் /வரப் போறான்

2)

  1. அவன் நேற்றுத் தான் வேலைக்கு வந்தவன்
  2. அவன் வெளிநாட்டுக்குப் போய்ட்டு வந்திட்டான்
  1. சந்திரன் வேலையால வாறான்
  2. பாலன்  யாழ்ப்பாணம் போய்ட்டு திரும்ப வந்து கொண்டிருக்கிறான்.
  1. எண்டைக்காவது ஒரு நாள் அவன் இஞ்ச வருவான்
  2. இவன் ராசன் எப்ப தான் இங்க வரப் போறான்?


வந்தாள்  - வந்தவள்/வந்திட்டாள்
வருகிறாள் - வாறாள்/வந்துகொண்டிருக்கிறாள்
வருவாள் -வருவாள்/வரப் போறாள்

3)

  1. அமுதா எப்பவோ ஒருக்கா இங்க வந்தவள்
  2. நவமணி எப்பவோ வீட்ட வந்திட்டாள்
  1. இண்டைக்கு தான் மகிழாவும் இஞ்ச வாறாள்.
  2. கிட்டத் தான் தமிழினி வந்து கொண்டிருக்கிறாள்
  1. ஒரு நாளைக்கு சுகந்தியும் கவிஞரா வருவாள்
  2. சொர்ணம் வரப் போறாள்...எல்லாரும் ஓடிப் போங்கோ


வந்தார்கள் - வந்தவை /வந்தவையள் /வந்திட்டினம்
வருவார்கள் - வருகினம் /வந்துகொண்டிருக்கினம்
வருகிறார்கள் - வருவினம். /வந்திடுவினம்/வரப் போயினம்


  1. அவை  நாலு பெடியளும் ஒருக்கா இங்க வந்தவை
  2. அவையள் வந்தவையள்
  3. அம்மாவும் அப்பாவும் அப்பவே கோவிலுக்குப் போய்ட்டு வந்திட்டினம்
  1. இப்ப தான் மாமி வீட்டாக்கள் வருகினம்
  2. அண்ணாவும் அக்காவும்  கலியாணத்துக்கு வந்து கொண்டிருக்கினம்,
  1. நான் நினைக்கிறன் எப்பிடியும் நாளைக்குள்ள  பிள்ளையள் வருவினம்./வந்திடுவினம்.
  2. பாலாவும் பிரேமாவும் நத்தாருக்கு நியூயோர்க் வரப் போயினம்.

இப்படியே மற்ற சொற்களுக்கும்  உதாரண வாக்கியங்கள் அமைக்கலாம்.

2)

போனேன் - போய்ட்டன் / போனன்
போகிறேன்  - போறன்/போய்ட்கொண்டிருக்கிறன்
 போவேன் - போவன்/போகப் போறன்

போனான் - போனவன் /போய்ட்டான்
போகிறான் -போறான் / போய்க்கொண்டிருக்கிறான்
போவான் - போவான் / போகப் போறான்


போனாள் - போனவள்/போய்ட்டாள்
போகிறாள்- போறாள்/போய்க் கொண்டிருக்கிறாள்
போவாள்-/போவாள்/போகப் போறாள்

போனார்கள்- போய்ட்டினம்/போனவை
போகிறார்கள்-போயினம்/போய்க்கொண்டிருக்கினம்
போவார்கள் -போவினம்/போகப் போயினம்

இப்படியே மற்ற சொற்களுக்கும்  ஆண் பால், பெண் பால், பலர் பால்  பொருத்திப் பாருங்கள்..

3) செய்தேன் - செய்தன் / செய்தனான்/செய்திட்டன்
செய்கிறேன்ன் - செய்யிறன்/செய்து கொண்டிருக்கிறன்
செய்வேன் - செய்வன் /செய்யப் போறன்

4) படித்தேன் - படிச்சன்/படிச்சனான்/படிச்சிட்டன்
படிக்கிறேன் - படிக்கிறன்/படித்துக் கொண்டிருக்கிறன்
படிப்பேன் - படிப்பன்/ படிக்கப் போறன்

5)நடந்தேன் - நடந்தன் /நடந்திட்டன்/நடந்தனான்
நடக்கிறேன் - நடக்கிறன்/நடந்து கொண்டிருக்கிறன்
நடப்பேன் - நடப்பன்/நடக்கப் போறன்

Swathi Swamy

unread,
Dec 15, 2015, 11:21:00 AM12/15/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
43)
 ஈழத்தமிழ் வழக்கில் புழக்கத்திலிருக்கும் சில பெயர் சொற்களை இன்று பார்க்கலாம்.



1) மனுசன் - மனிதன் / ஆண்/ பேச்சுவழக்கில்  சில சந்தர்ப்பங்களில் கணவரையும் குறிக்கும்.

2) ஆம்பிளை - ஆண்

3) ஆம்பிளைப் பிள்ளை - ஆண் பிள்ளை.

4)இளந்தாரி - இளைஞன்

5)பெடியன் - சிறுவன்.

6)புருசன் - கணவன்

7)இஞ்சருங்கோ - கணவனை மனைவி அழைக்கும் சொல்

8)வெள்ளாளன்  - வேளாளன். வேளாண்மை / விவசாயத்தை பரம்பரை தொழிலாக கொண்டவர்- ஈழத்தின்  ஒரு சாதி பிரிவினர்.

9)கமக்காரன் - விவசாயி.

10)ராசா - அரசன் / பாசத்துடன் ஆண்களை விளிக்கும் சொல்.

11) மோன் - மகனை அழைக்கும் சொல்

12) மனுசி - பெண்/ பேச்சு வழக்கில் சில சந்தர்ப்பங்களின் மனைவியையும் குறிக்கும்.

13) பொம்பிளை - பெண்

14) பொம்பிளப் பிள்ளை - பெண் பிள்ளை

15) பெட்டை -  சிறுமி.

16)பெண்சாதி -  மனைவி.

17)இஞ்சரும் - கணவன் மனைவியை அழைக்கும் சொல் .

18) ராசாத்தி -  அரசி/ பாசத்துடன் பெண்களை விளிக்கும் சொல்

19)மோனை - மகளை அழைக்கும் சொல்

*******************************************

உதாரண வாக்கியங்கள் : 

1) அ)  மனுசன் -  உந்த மனுசனை  நான் வேற எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு. ( யாரோ ஒரு மனிதரைப்  
            பற்றி பேசும் போது)

    ஆ) என்ர மனுசன் எல்லாரையும் போல இல்லை ..தான் உண்டு தன்ர பாடு உண்டு எண்டு இருப்பார்.

2 )  ஆம்பிளை -  வீட்டில ஆம்பிளை இல்லாத நேரமா வந்து  வீரம் காட்டாத..என்ன ?

3)  தங்கராசாவுக்கு  ஒரு  ஆம்பிளைப் பிள்ளை இருக்கிறானெல்லே?

4)  வர வர இந்த இளந்தாரிப் பெடியன்கள் அந்த சந்தில நிண்டு கொண்டு அடிக்கிற கும்மாளத்துக்கு ஒரு அளவு கணக்கில்லாமல் போச்சுது

5)  இராசரத்தினத்தாரிண்ட  பெடியன் எட்டாம் வகுப்பு பெயிலாமே? உண்மையே?

6) குமுதினிண்ட புருசன்  வாற மாசம்  வெளிநாட்டில இருந்து வாறாராமே?

7) இஞ்சருங்கோ ..  இஞ்ச  ஒருக்கா வாங்கோ...உங்கட மோள வந்து என்னண்டு  கேளுங்கோ...

8)  கமக்காரன் -  கமக்காரன் இல்லையெண்டால் இந்த கந்தோர்காரர் எல்லாம் என்னத்தை திண்டு கழுவப்
     போகினமாம்?

9) ராசா - 

       அ) பண்டாரவன்னிய ராசா ஆண்ட  நாடடா இது.. ஆருக்கும் அடி பணிய மாட்டம் . (அரசன்)
        ஆ ) அப்பு ராசா என்ர செல்லமெல்லே..நான் சொல்லுறதைக் கேளப்பன். (பாசமுடன் ஒரு ஆணை
               விளிக்கும் போது)

10)  மோன்  - 
         அ) உன்ர மோன் பண்ணின வேலையைப் பார்த்தியாடி பாக்கியம்?
         ஆ) என்ர மோனே..வந்திட்டியா  ராஸ்ஸா?

11)   மனுஷி
           அ)   அந்த மனுசி  மட்டும் இல்லாட்டில் ஆமிக்காரனட்ட  இருந்து  இந்த பெடியளை ஆரும்
                  காப்பத்தியிருக்க முடியாது.
          ஆ)   என்ர மனுசி ஒரு காரியத்தை நினைச்சாளெண்டால் அதை செய்யாமல் விட மாட்டாள்.

12)   பொம்பிள -  இவன் சின்ராசாவிண்ட மகளை  பொம்பிள பார்க்க இண்டைக்கு மாப்பிள்ளை வீட்டாக்கள்
                               வருகினமாம்.  (பெண்)

13)   பொம்பிள்ளைப் பிள்ளை - சின்ராசாவிண்ட பொம்பிள்ளை பிள்ளை  பேய் வடிவு,..அயலுக்குள்ள எல்லா 
                                                          பெடியளும் வளையம் கட்டிக் கொண்டெல்லே திரியினம்?

14)   பெட்டை  -   இந்த பெட்டை என்ன இங்க வந்து மசிஞ்சு கொண்டு நிக்குது?

15)    பெண்சாதி -  பெண்சாதியும் புருசனுமா சேர்ந்து  புளுகத் துடங்கிச்சினமெண்டால் அவ்வளவு தான்..காது புளிச்சுப் போயிடும்.

16)  இஞ்சரும் -  இஞ்சரும்... ஒரு தேத்தண்ணி ஒண்டு போட்டுத் தாரும் பாப்பம்.

17)  ராசாத்தி
       அ)  குவேனி ராசாத்தி அவசரப்பட்டு விசயனை மட்டும் கலியாணம் செய்யாமலிருந்திருந்தால், அந்த
              விசயனையும் சிநேகிதர்களையும் நர பலி குடுத்திருந்தால் ...யோசிச்சுப் பாருங்களேன்..

        ஆ)  என்ர ராசாத்தி இஞ்ச வா ..இந்த வெத்திலைப் பெட்டியை எடுத்து தாணை.

18)   மோனை -  மோனை...மல்லிகா.... உந்த உலை கொதிக்குது...பார்...சோறு அவிஞ்சிட்டுதா எண்டு..


    

Swathi Swamy

unread,
Dec 15, 2015, 11:21:00 AM12/15/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
35)  மானுடத்தின் இன்னொரு முகமான   நாசம்  விளைவித்தலையும் , நாசக்காரர்களையும் குறிக்கும் சொற்களை இன்றைய தேர்வுச் சொற்களாக எடுத்துக் கொள்கிறேன்.


அழிமதியம் - நீச புத்தியுடன் நாசம்  விளைவிப்பவன்.
நட்டாமுட்டித் தனம் / நட்டாமுட்டி வேலை - மோசமான செயல்
வேரறுத்தல்/கந்தறுத்தல்/கருவறுத்தல் -  அடியோடு அழித்தல்
கக்கிசம் (ம.த) - தொல்லை
கசுமத்து (ம.த)- தொந்தரவு
கணக்கட்டு (ம.த)-தொந்தரவு
இடைஞ்சல் / நச்சரிப்பு- தொந்தரவு

மேற்படி மோசமான செயல்களை  செயலாற்றுபவர்களை கீழ்வருமாறு அழைப்பார்கள்:

அழிமதியக்காரன் - நாசம் விளைவிப்பவன்/நீசன்
நாறாணி - மோசமான ஏமாற்றுக்காரன்.
நட்டாமுட்டி  - மோசமானவன் (மட்டக்களப்பு தமிழ்)
நச்சிராணி , கசுமாரி (ம.த) - மோசமானவன், தீமை செய்பவன்
நச்சிராவி (ம.த) - பாவி
போக்கணங்கெட்டவன்  - ஒழுங்கும் நாணயமும் தவறியவன்
கஞ்சல் -  மோசமானவன்
கழிசறை - கேடு கெட்டவன்
கொசப்பு /காவாலி -  ஒழுக்கமில்லாதவன்.
மருளன் -  ஒரு பேய், காமுகன்

உதாரணம் :

1) இந்த அழிமதியக்காரனோட என்னெண்டு தான் இந்த பெட்டை  குடும்பம் நடத்தப் போறாளோ?

2) இந்த நாறாணிய நம்பி என்ர சொத்தெல்லாம் கரைஞ்சு போச்சுதே..

3) உன்ர நட்டாமுட்டித் தனத்தை / நட்டாமுட்டி வேலையை  வயசு போன கிழடுகளிடம் காட்டாதே.

4) அவனே ஒரு நட்டாமுட்டி. அவனையே கந்தறுக்க தக்கதாக  இன்னொருத்தன் வந்திட்டான் போல கிடக்கு.

5) நாசமா போன நச்சிராவி....படுபாவி...பாடைல போவான்..!

6)  அந்த போக்கணங்கெட்ட  போக்கிலிக்காகவா நீ பாவம் பாக்கிறாய் ?

7)  கஞ்சல், கழிசறையளை எல்லாம் வீட்டுக்குள்ள சேர்க்காதே எண்டு தலை தலையா அடிச்சேன்....கேட்டியா? இப்ப பார் உன்ர குடும்பத்தையே  கருவறுத்திட்டு போய்ட்டாங்கள் பார்த்தியா?

8) அதுகள் ஒரு கொசப்பு கூட்டம்.

Swathi Swamy

unread,
Dec 15, 2015, 11:21:00 AM12/15/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
42) 

உலகத்தில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் பசி போக்கவும், உடல் வளர்ச்சிக்காகவும்  உட்கொள்ளப்படும் உணவானது நாட்டுக்கு நாடு  பல வித்தியாசமான  வகையையும், சுவையையும் , தயாரிப்பு முறைகளையும்  கோண்டிருக்கிறது,.

சில குறிப்பிட்ட உணவு வகைகள்  மானுடங்களின் அடையாளங்களில் ஒன்றாகவே ஒன்றிப்போயிருக்கின்றன. 

உணவின் தன்மையும், வகையும் மனிதர்களின் வித்தியாசப்படுத்தலில் ஒரு அங்கமாக திகழ்கின்றது என்று சொன்னால் மிகையாகாது.

ஈழத் தமிழ் மக்களிடையே ஒரு அடையாளமாக அல்லது பன்னெடுங்காலமாக பாவனையிலிருப்பவையாக ஒரு சில உணவுகள்  இருக்கின்றன. இந்த உணவு வகைகள் நமது சம்பிரதாயங்களுடனோ அல்லது சமய வழிபாட்டுடனோ அல்லது கலாச்சாரத்துடனோ சம்மந்தப்பட்டவையாக நாம் தொடர்ந்து சந்ததி சந்ததியாக கடத்திவரும் விசயங்களில் ஒன்றாக இருக்கின்றன.

பச்சை இறைச்சியை வேட்டையாடி தின்ற அன்றைய  மானுடத்தின் உணவு உட்கொள்ளலிருந்து இன்றைய சமைத்தல் முறை மூலம் உட்கொள்ளும் நவீன மாற்றங்கள் பல கண்ட பின்னாலும் நாம் எமது பாட்டி, பூட்டி காலத்தில் சமைக்கப்பட்ட  அதே உணவுகளுடன் தான் எங்கள் சந்ததியினருடன் பயணிக்கிறோம். எத்தனையோ புது புது இடங்களுக்கு புலம் பெயர்ந்தாலும் அந்த நாட்டின் பருவ கால , சூழல் நிபந்தனைகளுக்குட்பட்டு அந்தந்த நாடுகளில் கிடைக்கும் உணவுகளுடன் வாழ்கையை செலுத்த வேண்டிய கட்டாய்த்திலிருப்பினும் கூட  நமது சொந்த ஊரின் சமையல் முறையை எப்பாடுபட்டாவது இருக்கும் ஊரின் சூழலுக்குள் நமக்கு நாமே கொண்டு வந்து விடுகிறோம். எத்தனையோ வகை வகையான புதிய புதிய சமையல் வகைகளை தெரிந்து கொண்டாலும் நாம் பிறந்து வளர்ந்த ஊரில் நாம் சாப்பிட்டு வாழ்ந்த உணவு வகைகளையே பிராதானப்படுத்துகிறோம்.

அப்படி எம்முடன் சந்ததி சந்ததியாக தொடர்ந்து வரும் பல வகையான உணவு வகைகளில் “கூழ்”  என்பது மிக பிரதானமான உணவு எனலாம்.

கூழ்களில் பல வகையான கூழ் வகைகள் இருந்தாலும்  மிகப் பிரதானமாக இரண்டு விதமான கூழ் ஈழத்தில் முக்கிய இடத்தை கொண்டிருக்கின்றன.

1 )   ஆடி மாதப் பிறப்பில்  கோவில்களிலும், வீடுகளிலும் தயாரிக்கப்படும் ஆடிக் கூழ் .
2)    ஒடியல் கூழ்.

ஆடிக் கூழ்



ஆடி மாசத்தில் எந்த நல்லகாரியமும் நம்மூர்களில் நடப்பதில்லை. இறந்தவர்களுக்கான ஆன்ம சாந்தி கிரியைகளை ஆடி அமாவாசையில் கீரிமலை போன்ற புனித நீர் நிலைகளில் உறவினர்கள் போய் செய்வது வழக்கம்.

தை மாசப் பிறப்பை தைப் பொங்கலாகவும், சித்திரை மாசப் பிறப்பை சித்திரை புத்தாண்டாகவும் கொண்டாடுவது போல் ஆடி மாதப் பிறப்பை ஆடிப்பிறப்பாக கொண்டாடுகிறோம் என்பது மட்டும் தெரியும். ஆனால் அதற்கான காரணமோ பாரம்பரிய கதைகள் எதுவுமோ எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.

ஆடிக் கூழ்  இனிப்பானது.  அம்மன் கோவில்களில் ஆடிமாதப் பிறப்பில் பெரிய பெரிய கிடாரங்களில் சித்திரை மாதங்களில் சித்திரைக் கஞ்சி காய்ச்சி ஊற்றுவது போல ஆடிப் பிறப்பன்று  இந்த ஆடிக் கூழ் காய்ச்சி கொடுப்பார்கள். ஊரில் இருப்பவர்கள் எல்லாரும் வந்து ஒன்று கூடி கூழ் வாங்கிக் குடிப்பார்கள். 
வீடுகளிலும் இந்த தினங்களில் ஆடிக் கூழுடன், கொழுக்கட்டையும் அவித்து படைத்து உண்பது நடைமுறையில் இருக்கிறது.

ஆடி மாதம் சைவ சமயத்தாருக்கு பல வகையான விரத நாட்களையும் , உருத்துகளுக்குரிய நாளான ஆடி அமாவாசையும் கொண்ட மாதம் என்பதால் பல தமிழர்களின் வீடுகளில் ஆடி மாதத்திலிருந்து மச்ச சாப்பாடுகளை தவிர்க்க தொடங்கிவிடுவார்கள். அந்த மாதத்திலேயே  அம்மன் கோவில்களில் மட்டுமல்ல ஈழத்தின் பல ஆலயங்களின் திருவிழாக்களும் தொடங்குகின்றன.  அதுமட்டுமல்ல இந்தக் கூழ்  அந்த கோடைக்காலத்தின் சீதோஷ்ண நிலைக்கு மிகவும் அருமையானதாக பொருந்தவும் செய்கிறது.

ஆடிக் கூழ் செய்முறை :  ஆடிக்கூழ் செய்முறை
                                               

ஆடிப்பிறப்பின் சிறப்பினை கூற வந்த ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள்  பாடிய பாடல் பிரபலமானது.


ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே

குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!


2) ஒடியல் கூழ்

இது ஆடிக் கூழைப் போல் அல்லாது கடலில் வாழ் பிராணிகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தயாரிக்கும்  கூழ் .

பனங்கிழங்கை அவித்து காய வைத்தால் கிடைப்பது புளுக்கொடியல்.
பனங்கிழங்கை அவிக்காமல் காய வைத்து எடுப்பது ஒடியல்.  இந்த ஒடியலை மாவாக திரித்து  மச்சக் கூழ் அல்லது ஒடியல் கூழ் செய்வார்கள்.

இதன் செய்முறை இங்கு இணைக்கப்பட்டிருக்கிறது. 

ஒடியல் கூழ் செய்முறை



ஈழத்தில் நமது வீடுகளில் ஒடியல் கூழ் செய்தால் அநேகமாக 15 அல்லது 20 பேருக்கு போதுமானதாக இருக்கும். பக்கத்தில் இருக்கும் உறவனர்கள், அயலில் இருக்கும் நண்பர்கள் என்று வீடு களை கட்டும்.
 
கூழ் விருந்து (பார்டி) அது!  அது ஒரு கனாக் காலம்!!

கூழ் செய்வது ஒரு கோலகலமான நாளாக இருக்கும்.  பொதுவாக விருந்து என்பது ஏதேனும் விசேச தினத்திலோ அல்லது விசேசமான சடங்கிலோ தான் நடக்கும் .  ஆனால் ஒடியல் கூழ் விருந்து என்பது 
 எந்த விசேசம் என்றில்லை...எந்த சடங்கு என்ற காரணம் இல்லாமல் உறவினர்களையும்ம் நண்பர்களையும் ஒன்று கூட  வைக்கும் நாளாக்கி விடும். 

ஒடியல் கூழ் செய்வது எத்தனை  சிரத்தையானதோ , எத்தனை சுவையானதோ அத்தனைக்கத்தனை அதை உட்கொள்ளும் முறையிலும் இருக்கும் .  கூழ்  அல்லது கஞ்சி அல்லது கள்ளு குடிக்கவென்றே நம்மூரில் “பிளா” என்ற பனை ஓலைக் கலயம் வேயப்படும்.  இந்த பிளாவில் குடித்தால் தான் கூழ் குடித்த திருப்தியே ஏற்படும். அதே போல் சிறுவர்களுக்கு பலா மரத்து இலையைக் கோலி கரண்டி மாதிரி செய்து தருவார்கள். கும்பா மாதிரியான கோப்பையில் கூழை ஊற்றி தருவார்கள். அந்த பலா இலைக் கரண்டியால் கூழை அள்ளி குடிப்போம்.


ஈழத்தின் பாரம்பரிய உணவு வகைகளில் இன்று வரை அழியாமல் தமிழர்கள் போகுமிடமெல்லாம்  கூடவே போன உணவு வகைகளில் கூழ் மிகவும் பிரதானமான ஒன்று. இது எமது  வாழ்கையின் சிறுபிராய நினைவுகளையும், எமது வாழ்கை முறையில் ஒன்று கூடலையும், பகிர்ந்து உண்ணுதலின் சிறப்பையும் தன்னுடைய அடையாளமாக வைத்திருக்கும் உணவு வகை என்றால் மிகையாகாது.

இதே போல் பலரோடு ஒன்றாக இருந்து சாப்பிடும் இன்னொரு வகை ஒன்று கூடல் , உணவருந்தல் நிலாச்சோறு என்பது.  அதை பிறிதொரு நாளில் பார்க்கலாம்.

Swathi Swamy

unread,
Dec 15, 2015, 11:21:00 AM12/15/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
34) 
 மனதின் புற்றுநோய் எனப்படும் சந்தேகம் இன்றைய சொல். 

சந்தேகம் என்ற வார்த்தை எம்மிடையே புழக்கத்தில் இருந்தாலும்  சந்தேகத்தின்  ஒத்த சொற்களாக  ஐயம்,ஐயுறவு, ஐமிச்சம் , சக்கு(ம.த) , கரவு, கசடு , சமுசயம் போன்றவையும் பாவனையில் இருக்கின்றன.

அ) ஐமிச்சம் / ஐயுறவு என்ற வார்த்தைகள் ஐயம் என்ற சொல்லிலிருந்து உருவாகியிருக்க வேண்டும்.

ஆ) சக்கு  -  மட்டக்களப்பு தமிழ் வழக்கில் சந்தேகத்துக்கான இன்னொரு சொல்.

இ) கரவு  -ஒளிவு மறைவு; வஞ்சனை; களவு; பொய்; முதலை. / சந்தேகம் கொள்ளல்  ஆகியவற்றைக் குறிப்பதாக இருந்தாலும் அதிகளவில் ஈழத்து தமிழ் பேச்சில் சந்தேகப்படுவதையே குறிக்கிறது. 

ஈ) கசடு  -  அழுக்கு ,குறைபாடு,குற்றம்,ஐயம் (doubt) என்ற அர்த்தங்கள் உள்ளதாக அகராதி காட்டுகிறது. பேச்சுவழக்குத் தமிழில் கசடு என்பது எமது ஊரில் அழுக்கு, சந்தேகம்

உதாரணம் :  கற்கக் கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக (திருக்குறள்)


உதாரணம்
  1.  எனக்கெண்டால் இவன் தான் களவெடுத்திருப்பான் எண்டு ஐமிச்சமா இருக்கு.
  2.   அவனைப் பற்றி இப்பிடி ஒரு ஐயுறவோட எப்பிடி அவனோடேயே காலந்தள்ளப் போறாய்? 
  3.   உன்ர மனசு முழுக்க சக்கு தான் பிடிச்சிருக்கே தவிர தெளிவெண்டதே இல்லை. (உன்னுடைய மனது முழுவதும் சந்தேகம் தான் பீடித்திருக்கிறதே தவிர தெளிவான எண்ணம் எதுவும் இல்லை)
  4. இவ்வளவு கரவை மனசுக்குள்ள வைச்சுக் கொண்டா என்னோட இத்தனை நாளா சிநேகிதனாக இருக்கிறாய்?
  5. முதலில் உன்ர நினைப்பில என்னைப் பற்றின கசடுகளை  அப்புறப்படுத்திப் போட்டு வா. (முதலில் உன்னுடைய எண்ணங்களில் என்னைப் பற்றியதாக  இருக்கும் சந்தேகங்களை களைந்துவிட்டு வா)
  6. எனகெண்டால் அவளில ஒரு சமுசமயமாவே இருக்கு. (எனக்கென்னமோ அவள் மீது தான் சந்தேகமாக இருக்கிறது)



Swathi Swamy

unread,
Dec 15, 2015, 11:21:00 AM12/15/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
44)  இன்றைக்கு கொஞ்சம் எங்கள் வட்டாரத் தமிழின் இலக்கண முறையில் ஒரு சின்ன விசயத்தைப் பார்க்கலாமென்று முயன்றிருக்கிறேன்.
 
இடம், பால், காலம் காட்டும் விகுதிகள் சொற்களுடன் சேரும்போதும் ஈழத்து பேச்சுத்தமிழ் பல வேறுபாடுகளைக் காட்டுகின்றது.

1) வந்தேன் - வந்தனான்/வந்திட்டன்
    வருகிறேன் - வாறன்./வந்து கொண்டிருக்கிறன்
வருவேன் - வருவன் /வரப் போறன்


உதாரண வாக்கியங்கள் :

1)

Swathi Swamy

unread,
Dec 15, 2015, 11:21:00 AM12/15/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
41) இன்றைய தேர்வு பதிவின் வடிவம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.  இந்த இழை தொடங்கியதும் எனக்கும் என்னுடைய இணையச் சகோதரர் ஒருவருக்குமிடையில் நடந்த உரையாடலின் சாரத்தை விளக்கமான பதிவாக எழுத நினைத்தேன்.. ஆனால் பதிவாக எழுதுவதை விட உரையாடலை அப்படியே தந்தால் விளங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும் என்று  புலப்பட்டது. அதன் விளைவு இந்த பதிவு.

எங்கள் பேச்சு வழக்கிலும் தமிழகத்தின் மற்ற பாகங்களிலும் உபயோகத்தில் இருக்கும் வார்த்தைகளான நாங்கள் , நீங்கள், எங்கள் என்ற வார்த்தைகளை  ஈழத்தமிழர் உபயோகிக்கும் விதத்திற்கும் அந்த உரையாடலில் பங்குபெறும் தமிழக  தமிழர் அதை எடுத்துக் கொள்ளும் விதத்திலும் பல தடவை  எனக்குள்ளும் என்னுடன் உரையாடிய தமிழக தமிழர்களுக்கும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதே போல் தம்பி பாலாஜி பாஸ்கரன் தன்னுடைய நண்பர்களான ஈழத்தமிழர் ஒருவரின் வீட்டுக்கு விசிட் போன போது இதே போல் நாங்கள் நீங்கள் எங்கள் வார்த்தைகளையிட்டு குழம்பிப் போனார்.

ஒரு நாள் அவருக்கும் எனக்குமிடையில்  நடந்த “ நாங்கள், நீங்கள் , எங்கள்” என்ற  வார்த்தைகள் பற்றிய உரையாடலை அப்படியே  இங்கு தருகிறேன். நீங்களும் குழம்பலாம் அல்லது தெளிவடையலாம். :) :)

நாங்கள் -  We /  We are/ நாங்க

நீங்கள்  - You / நீங்க

எங்கள்  - Our /நம்ம

எங்களுக்கு- Us / நமக்கு






  • Balaji Baskaran :

    நாங்கள் எங்கள் இதை

    எப்படி பயன்படுத்துகிறீர்கள்

    என சொல்லுங்கோ

    எங்களுக்கும் உங்களுக்கும் ரொம்ப குழப்பம்

    இதன் பயன்பாட்டில்

  • Swathi Swamy :

    புரியவில்லை தம்பி

    நாங்கள் - We

    எங்கள் - Our

    இந்த இரண்டையும் நீங்களும் அப்படித் தானே பயன்படுத்துகிறீர்கள்?

  • Balaji Baskaran:

    haa haa haa

    ஆமாக்கா

  • Swathi Swamy:

    அப்புறம் என்ன?

  • Balaji Baskaran:

    உங்க இலங்கைத் தமிழர்கள் பேச்சுக்கும் எங்க பேச்சுக்கும்

    உள்ள வேறுபாடு சொல்றேன் கேளுங்க

  • Swathi Swamy:

    சொல்லுங்கோ :)

  • Balaji Baskaran:

    நீங்க ,நான், மாமா எல்லாரும் ஒரு இடத்துல பேசிக்கிட்டு இருக்கோம்

    சரியா?

  • Balaji Baskaran:

    நாங்கள் சினிமாவுக்குப் போவோம்னு நீங்க சொல்றீங்க

  • Swathi Swamy:

    சரி

  • Balaji Baskaran:

    அப்படினா நீங்க ரெண்டு பேரு மட்டும் போறீங்கனுதான் எனக்குப் புரியும்

    உங்க மொழில மூனு பேரும் போவோம் என்று சொல்வீர்கள்

  • Swathi Swamy:

    நான் நீங்க.ள் அவர் இருக்கும் போது எல்லாரையும் சேர்த்து தான் நாங்கள் என்கிறோம்.. அதாவது உங்களையும் எங்களோடு சேர்த்தே சொல்கிறோம்

  • Balaji Baskaran:
    ம்ம்ம்ம்

    எங்களுக்கு நீங்க ரெண்டு பேரு மட்டும்னு  தான் புரியும்

    இதையே நாங்க எப்படி சொல்லுவோம் தெரியுமா?

  • Swathi Swamy:

    ம்ம் இப்ப புரியுது.. சரி அப்ப நீங்கள் எப்படி அதை சொல்வீர்கள்?

    சொல்லுங்கோ

  • Balaji Baskaran:

    நாம சினிமாவுக்குப் போவோம்

  • Swathi Swamy:

    :)  நாம என்றால் நாங்கள் தானே?

  • Balaji Baskaran :

    ஆமாக்கா

    ஆனா நீங்க நானு உங்களுக்கு வேண்டியவர் இருக்கும் போது நாங்கள் என்று நீங்க சொல்லும் போது

    நீங்கள் ரெண்டு பேர் மட்டும்னு தான் புரியும்

  • Swathi Swamy:

    சரி.. இப்ப நான், நீங்கள், பிராணநாதர், ஜோ எல்லாரும் ஒரு இடத்தில் இருக்கிறோம்..

  • Balaji Baskaran :

    ஹா ஹா ஹா இதனால ரொம்பகுழம்பியிருக்கேன் தேனுசா வீட்டுல

  • Swathi Swamy:

    நான் உங்கள் நாலு பேரையும் ஒருமித்து சுட்டுவது என்றால் நீங்கள் என்று சொல்வேன் அல்லவா?

    அதை எப்படி சொல்வீர்கள்? நீங்க ந்னு தானே?

  • Balaji Baskaran :

    நீங்கள்தான்

  • Balaji Baskaran:

    எங்கள் பற்றி சொல்றேன்

    கேளுங்க

    நாம நாலு பேருக்கும் சிக்கன் பிடிக்கும்

  • Swathi Swamy :

    ஒரு தடவை நான் தமிழ் பிரவாகம் குழுமம் தொடங்கின புதுசுல எங்கள் குழுமம் , எங்கள் குழுமம் என்று எழுதினதை ஒருவர் கண்டித்து எழுதினார்.. அதென்ன இத்தனை பேரையும் சேர்த்து வைச்சுக் கொண்டு குழுமம் உங்களோடது மட்டும்ன்னு சொல்லுறீங்க என்று

    ஏன் என்று இன்று வரை புரியவில்லை

  • Balaji Baskaran :

    அதேதான்

    பெரிய வேறுபாடு இருக்குக்கா

    என்னடா நம்மள வச்சிக்கிட்டே இப்படி சொல்றாங்களேனு தோணும்

    சிக்கன் மேட்டருக்கு வாரேன்

    எங்கள் பற்றி சொல்றேன் கேளுங்க நாம நாலு பேருக்கும் சிக்கன் பிடிக்கும்

    இங்க ஸ்வாதி சொல்றாங்க

    எங்களுக்கு கடைசியா சிக்கன் வச்சிருக்காங்க

    அப்படினா நீங்க சொல்றது 4 பேருக்கும் கடைசியா வச்சிருக்காங்க

    சரியா?

  • Swathi Swamy:

    ஆமாம்

  • Balaji Baskaran :

    எங்களுக்குப் புரிவது, உங்க ரெண்டு பேருக்கு மட்டும் கடைசியா வச்சிருக்காங்க

    இதையே நாங்க எப்படி சொல்லுவொம்னா

  • மக்கு சிக்கன் கடைசியா வச்சிருக்காங்க
  • Balaji Baskaran:

    நாங்கள் - நாம் வேறுபாடு

    எங்கள் - நம் வேறுபாடு

  • Swathi Swamy:

    அதான் அதை எப்படி விளக்கமாக எழுதுவது என்று ரொம்ப பிரச்சினையா இருக்கிறது. இது பற்றி கணேசன் ஐயாவுடன் தொடர்பு கொண்டு கலந்து பெசி தான் விளக்கமாக எழுத வேண்டும்.

  • Balaji Baskaran :

    சரிங்க அக்கா

    உங்க பேச்சுல நீங்க நல்லாத்தான் பேசுவீங்க

    ஒரு அறையில் படுத்திருக்கோம்

    கொசு கடிக்குது

    காலைல சொல்றீங்க

    ஸ்வாதி : “எங்களுக்கு கொசு கடிச்சது”

    பாலாஜி :  “ஐய்யே, அப்ப எங்களுக்கு தாலாட்டா பாடுச்சு, எங்களையும்தான் கடிச்சிச்சு”

  • Swathi Swamy :

    நீங்க நினைப்பீங்க எங்களுக்கும் தானே கொசு கடிச்சுதுன்னு

    ஹஹஹஹஹ்

  • Balaji Baskaran:

    ஹா ஹா ஹா

    நாலு பேரும் வேர்வையில் நனைஞ்சு போயிட்டோம் கரண்ட் இல்லாம


  • ஆனா அவங்க உங்களையும் சேர்த்து தான் சொல்றாங்க

    நமக்கு கொசு கடிச்சிருச்சுன்னு சொல்லனும் உங்க வழக்கில

  • Balaji Baskaran :

    நாங்கள் வேர்வையில் நனைஞ்சிட்டோம்னு எங்கிட்ட சொன்னா

    அப்ப நான் மட்டும் குளிர்ல நடுங்கினேனானு தோனும்

  • Balaji Baskaran:

    நம்மை விட்டு மூன்றாம் பேருடன் பேசும் போது நாங்கள் எங்கள் சரியா இருக்கும்

  • Swathi Swamy :

    விளங்குது... ம்ம்ம்ம்

  • Balaji Baskaran:

    நமக்குள்ளே பேசும் போது நாம் நம் சரியா இருக்கும்

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

    நன்றி அக்கா

  • Swathi Swamy:

    :) நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேணும்

    இதை எப்படி எல்லாருக்கும் விளங்கிற வகையில எழுதி முடிக்கிறது என்பது தான் இப்ப பிரச்சினையே எனக்கு..

    பேசாமல் உக்களுடன் இப்ப பேசினதையே காப்பி & பேஸ்ட் செய்து போட்டுடலாம் என்று நினைக்கிறேன் :)

            சரிங்க அக்கா
  • பட்  டிங்கரிங் பார்த்துப் போடுங்க

  • Swathi Swamy:

    ஓஒமோம்..

  • Balaji Baskaran:

    நம்மை விட்டு மூன்றாம் நபரிடம் பேசும் போது நாங்கள் எங்கள்

  • நமக்குள்ளே பேசும் போது நாம் நம்

    இது எங்கள் வழக்கம்

    உங்களுடையது

    நாங்கள் எங்கள்

    அதான் குழப்பம்...

  • Swathi Swamy :

    ஆமாம்.

  • Balaji Baskaran :

    இன்னொரு நண்பரிடம் கேட்குறேனு சொன்னீங்களே

    கேட்டுட்டு விளக்கமா போடுங்க

    நம்ம பதிவை பார்த்து மேற்கொண்டு மத்தவங்க குழம்பிடாம :)

  • Swathi Swamy  :

    அதே தான்

          நன்றி தம்பி. வணக்கம்.

***********************************************************************************************

இந்த உரையாடலில் இருந்து...

உதாரணம்

1)  நாங்கள்   சினிமாவுக்கு போகப் போகிறோம்.
    (நாம சினிமாவுக்கு போக போகிறோம்.)

2) எங்களை  நுளம்பு நல்லா கடிச்சிட்டுது.
    (நம்மை கொசு நல்லா கடிச்சிடிச்சு)

3) எங்களுக்கு  பசிக்குது
    (நமக்கு பசிக்கறது)

Swathi Swamy

unread,
Dec 15, 2015, 11:21:01 AM12/15/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
39) 
எங்கள் ஊரில் வீட்டுப் பாவனைகளுக்கு பாவிக்கப்படும் பொருட்களின் பெயர்கள் சிலவற்றை இன்று பார்க்கலாமென்றிருக்கிறேன்.

நீத்துப் பெட்டி / நீற்றுப் பெட்டி  -  பிட்டு அவிப்பதற்காக பனை ஓலையால் பின்னப்பட்ட  Steamer .



***********************************************************


இடியப்ப உரல்  - இடியப்பம் பிழியும் உரல். கிட்டத்தட்ட முறுக்குரல் மாதிரி இருக்கும். அச்சு மிக மிக மெல்லியதாக இருக்கும். மரத்தால் அல்லது உலோகத்தாலானதாக இருக்கும் .


**************************************

இடியப்பத் தட்டு  - இடியப்பம் பிழிந்து வேகவைக்கும் Steamer .


********************************************************8

தாச்சி  -  மா வறுக்க, கறி சமைக்கவென்று பயன்படும் பாத்திரம் இது.  உலோகத்தாலானது.
Inline image 1

***********************************************

சருவச்சட்டி - உலோகத்தாலான  வாயகன்ற பாத்திரம்.



*********************************************

கிடாரம் - இதுவும் உலோகத்தாலான மிகப் பிரமாண்டமான பாத்திரம். ஊரை வளைத்து நடத்தப்படும் விருந்துகளில் சோறு, கறி சமைக்க சமையல்காரர்கள் வைத்திருப்பார்கள். மிகவும் பாரமானது.  இணையத்தில் படம் தேடினேன் கிடைக்கவில்லை. அண்டா என்ரு சொல்லப்படும் பாத்திரத்தை விட இர்னடு மூன்று மடங்கு விசாலமானது.  கோவில்களில் சித்திரைக் கஞ்சி, ஆடிக் கூழ் போன்றவை  இந்த கிடாரங்களில் தான் காய்ச்சுவார்கள்.

******************************************

திருகணி  -  பானை,  சட்டி யின் அடிப்பாகம் வளைவாக இருப்பதால் அவற்றை ஸ்திரமாக இருத்தி வைப்பதற்கு ஏதுவாக இவை உபயோகப்படும். கயிற்றினால் தயாரிக்கப்பட்டது.  அடுப்பிலிருந்து சூடான பாத்திரங்களை இறக்கி இதன் மேல் வைப்பது வழக்கம்.




****************************************

கடகம்  -  பனை ஓலையால் பின்னப்பட்ட  வாயகன்ற ஓலைப் பெட்டி;


******************************************

திருவலை / துருவலை/ தேங்காய் திரு/துருவலை  - தேங்காய் துருவி


*********************************

அகப்பை - தேங்காய் சிரட்டையால் செய்யப்பட்ட ஸ்பூன் .



********************************
சத்தகம் / சத்தகக் காம்பு  -   எனக்கு தெரிந்து இந்த வகையான கத்தியை வேலி அடைப்பவர்களும் , உயரமான மரங்களிலிருந்து காயோ பழமோ இலையோ பறிக்க கொக்கைத் தடியில் கட்டியும் வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன்.




*********************************

பாக்குவெட்டி

 பாக்கை சீவலாக சீவ பயன்படும்.


idiyappam_thumb1.jpg
akappai.jpg
pakkuveddinnn.jpg
12285736_905379649550622_990082798_n.jpg
12277135_905379926217261_14663479_n.jpg
Aluminiam Wares.JPG
Bronze_container.jpg
12277119_905379836217270_1861564082_n.jpg
12270556_905379669550620_220034316_n.jpg
12248807_905379912883929_1976480863_n.jpg
12270591_905379726217281_1005473784_n.jpg

Swathi Swamy

unread,
Dec 15, 2015, 11:21:01 AM12/15/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
பிட்டு

எங்களூரின் உணவில் மிக முக்கிய  முதல் மூன்று இடங்களை பிடிக்கும்  உணவு வகைகள் என்றால் சோறு, பிட்டு/புட்டு , இடியப்பம் ஆகிய மூன்றையும் தான் சொல்ல வேண்டும்.


எங்கள் உணவுப்பழக்கம் என்பது காலையிலும் இரவிலும் மெலிதான உணவாயும் மதியம்  கன போசனமாயும் பகுக்கப்பட்டது.

அதன் பிரகாரம் சோறு பெரும்பாலும் மத்தியானச் சாப்பாடாகவே அமையும்.
  பிட்டு , இடியப்பம், பாண் போன்றவை காலை, இரவு உணவாக உட்கொள்ளப்படும். அப்பம் தோசை இட்டலி போன்றவை எப்போதாவது எல்லோரும் ஒன்றாக இருக்கும் ஓய்வு நாட்களில், வாரக் கடைசியில் , அல்லது  விடுமுறை நாட்களில் மட்டும் காலை உணவாக உட்கொண்டிருக்கிறோம். கால மாற்றங்களும் , போர் சூழலும் , புலம் பெயர் வாழ்வும் இந்த சுழல் வட்டங்களையும் , வகைகளையும் மாற்றியிருந்தாலும் பெரும்பாலான மக்கள் இன்றும் இப்படியே உணவுப் பழக்கத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

பிட்டு அல்லது புட்டு என்பது  எத்தகைய பாரம்பரியமான பழமை வாய்ந்த உணவு என்று நான் சொல்ல தேவையில்லை.

சிவபிரானே பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி வாங்கிய கதை எல்லாம் படித்திருக்கிறோம்;  ஆகையால் பிட்டு என்ற உணவு வகை மிகப்பழமை வாய்ந்த உணவு என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய பழமை வாய்ந்த உணவை இன்று வரை பெரும்பாலான ஈழத் தமிழ் குடும்பங்களின் அன்றாட உண்வாக இடம் பிடித்திருக்கிறது என்பது நமது பாரம்பரியம் எத்தனை சந்ததிகளாய் புறக்கணிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரிகிறது.

அது என்னவோ நம்மவர்களிடம் பிட்டு அல்லது இடியப்பம் பிடிக்காது என்று சொல்பவர்கள் மிக மிக குறைவு . எல்லோருக்கும் மிகப் பிரியமான உணவாக அது இன்று வரை இருக்கிறது.

பொதுவாக  சிவப்புப் பச்சை அரிசி மாவில் குழைத்து தேங்காய் பூ கலந்து நீராவியில் வேக வைத்து எடுக்கப்படும் பிட்டு காலப் போக்கில் வெள்ளை அரிசி மா, சோளன் மா, அமெரிக்கன்(மைதா) மா, கோதுமை மா (ஆட்டா மா) போன்ற சகல மா வகைகளிலும் (வறுத்தோ அல்லது நீராவியில் வேக பண்ணியோ அரித்தெடுத்த மா), தயாரிக்கக் கூடியதாக இருக்கிறது.

எங்கள் ஊரில் இரண்டு விதமாக பிட்டு அவிப்போம்.

குழல் புட்டு

நீத்துப் பெட்டி புட்டு. /நீற்றுப் பெட்டி

குழல் புட்டு  என்பது மூங்கில் குழல்களில் பிட்டு மாவை போட்டு நீராவியில் வேக வைத்து எடுப்பது.

இப்போது அலுமினியம் போன்ற உலோகங்களில் புட்டுக் குழல்கள் தயாரிக்கப்படுகின்றன.

Inline image 1(நன்றி: தமிழ்விக்கிபீடியா)




நீத்துப் பெட்டிப் /நீற்றுப் பெட்டி புட்டு

பனை ஓலையால் பின்னப்பட்ட கூம்பு வடிவான கலயத்தில் புட்டு மாவும் தேங்காய் பூவும் கலந்து போட்டு நீராவியில் வேக வைத்து எடுப்பது. 

இப்போது  Steamer போன்ற வசதி கிடைப்பதால்  நீத்துப் பெட்டி அருகி வருகிறது. அதுவும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள்  நீற்றுப் பெட்டி கிடைப்பது அரிதென்பதால் இந்த ஸ்டீமர் முறையில் அல்லது அலுமினிய புட்டுக் குழல்கள் மூலம் பிட்டு அவிக்கிறார்கள்.
(நன்றி விக்கிபீடியா)

Inline image 6(நன்றி: yarl.com)

பிட்டு  எல்லாவிதமான கறி வகைகளுடனும் மட்டுமல்ல , முக்கனிகளோடும் , தேங்காய் சம்பல், சீனி, சர்க்கரை , சொதி என்று எந்த ஒரு பக்கத்துணையுடனும் உட்கொள்ளக் கூடிய உணவு வகை. ஆயினும் பெரும்பாலும் வாழைப்பழம், சொதி ,சம்பல் போன்றவை அனைவராலும் தேர்வு செய்யப்படுபவை.


300px-Pittu-ta.jpg
DSC_2307.JPG
neethuppetty.jpg
pittu3.jpg
putturecipe.jpg

Swathi Swamy

unread,
Dec 15, 2015, 11:21:01 AM12/15/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
33)

பகை அல்லது பகைமை என்பது மனித மனங்களின் அகோரங்களின் முகங்கள்.
பகையை வெளிப்படுத்துவது அல்லது பழி தீர்ப்பது பற்றியவைக்கான
எங்களூர் வட்டாரப் பேச்சுத் தமிழ் சொற்கள் இன்றைக்கான தேர்வு.
                                                                                                                                                                                                    


கறுவியம் /கறுவித்தல் (ம.த)-  பழி தீர்க்க காத்திருத்தல்/ தீராப்பகை /மனதிற்குள் வளர்த்துக் கொண்டிருக்கும் பகை

துவேசம் -  பகை அல்லது வெறுப்பு

கருவறுத்தல் / நாசமறுத்தல்- அடியோடு நாசம் செய்தல்

சிப்பிலாட்டி - விடாது தொடரும் தொந்தரவு / பிரச்சினை

சிப்பிலியாட்டல் / நிப்பிலியாட்டல் -  கடும் தொந்தரவு விடாமல் கொடுத்தல்

வளர்ப்புப்பிணி - வளர்த்தவர்களுக்கு துரோகம் செய்பவன்

உதாரணம் :

  1.  உன்ர மனசில இத்தனை கறுவியம் வைச்சுக் கொண்டு தானே என்னோட நல்ல சிநேகிதன் மாதிரி இவ்வளவு நாளும் பழகினாய்? 
  2. பரம்பரை பரம்பரையா இந்த துவேசம் வளர்ந்து கொண்டுதானிருக்கே  ஒழிய குறைஞ்சபாடா தெரியேலை.
  3. அவனிண்ட குடும்பத்தையே அடியோட கருவறுத்தால் கூட அவளிண்ட ஆவேசம் அடங்காது போல கிடக்குது 
  4. என்ன நாசமறுத்தலுக்கு போய் அந்த குடும்பத்தில போய் மாப்பிள்ளை எடுத்தனீ?
  5. பிறந்தநாளிலிருந்து என்னை தொடர்ந்து இந்த சிப்பிலாட்டி வந்து கொண்டிருக்குது.
  6. என்னை ஏன் இப்பிடி சிப்பிலியாட்டிக் / நிப்பிலியாட்டிக் கொண்டிருக்கிறாய்?
  7. இவன் இப்பிடி ஒரு வளர்ப்புப்பிணியா வருவான் எண்டு தெரிஞ்சிருதால் கருவிலேயே அழிச்சிருப்பன்.

Swathi Swamy

unread,
Dec 15, 2015, 11:21:01 AM12/15/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai

மொழி என்பது  இலக்கணத்தினால்  மெருகேற்றப்பட்டிருந்தாலும் மொழி உயிர்ப்புடன்  இருக்க இன்னொரு முக்கிய காரணம் பாமர மக்களின் பேச்சு வழக்கு என்று சொன்னால் பிழையாகாது. 

அநேகமான வட்டார வழக்குகளில் உருவான அல்லது மருவிய வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்கள்  பாமர மக்கள் தான்.  மொழியின்  வார்த்தைகளுக்கிடையேயான பாகுபாட்டை அல்லது  உயர்வு தாழ்வை  மக்களின் கல்வி, அந்தஸ்து, சபை நாகரீகம் போன்ற தராதரங்கள் தான் பிரித்து பார்க்கின்றன.

இலக்கண சுத்தம் என்பது பாமரனுக்கு தேவையில்லை.    இன்னும் சொல்லப் போனால் பாமரன் இயற்றிய சொற்களைத் தான் இலக்கணம் மெருகேற்றி வைத்திருக்குமோ என்று தோன்றுகிறது.

மொழி என்பது பாமரனிடமிருந்து தானே உருவாகியிருக்க முடியும்?
இலக்கணம் என்பது பின்னாளில் தானே  எழுதப்பட்டிருக்கும்?

அப்படியானால் சொற்களின் சொந்தக்காரன் பாமரனாகத் தானே இருக்க முடியும் ? 

இந்த சந்தேகங்கள் எனக்கு பல நாட்களாக இருக்கிறது.

அடுத்து நாகரீகமான அல்லது பண்பான வார்த்தைப் பிரயோகம் என்பது எப்போது தோன்றியிருக்கக் கூடும்?
அல்லது ஏன் தோன்றியது?

சினிமாவில் எம்.ஜீ.ஆர் படங்களில்  பண்பான வார்த்தைகள் வரும்.   வார்த்தைப் பிரயோகங்களை வைத்து ஒருவரின் பண்பை அறிந்து  கொள்ளலாம் என்று  சக நண்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் எனது  நேற்றைய ஈழத்து சொல் பதிவில் எழுதியிருந்தார்.  ஊடகங்களின் இலக்கண சுத்தமான வார்த்தைகளோ அல்லது எம்.ஜீ.ஆர் , சிவாஜி திரையில் பேசும் வசனங்களோ மட்டும் மொழியாகிவிடாது. மொழி என்பது பண்பான வார்த்தைகளும் தூஷண வார்த்தைகளையும் உள்ளடக்கிய ஒரு ஊடகம் தான் என்பதே எனது கருத்து

  மனிதர்களின் வார்த்தை பிரயோகங்களில் பிரசுரிக்கத் தக்கதாக தோன்றும் கொஞ்சம் கடுமையானதாயினும் , கெட்ட வார்த்தைகளாயிருப்பினும் நான் இங்கு  சமர்ப்பிக்க வேண்டிய  நிலையில் தான் இருக்கிறேன்.  வார்த்தை தொகுப்பு என்று இறங்கிவிட்டேன்.. அதில் நான் பாகுபாடு பேதம் எதுவும் பார்க்க முடியாதென்றே நினைக்கிறேன்.  சாதிப் பெயரை குறிக்கும் சொல் என்பதற்காகக ஒரு சொல்லையோ அல்லது மத வேறுப்பாட்டின் அடையாளம் என்று இன்னொரு வார்த்தையையோ அல்லது தூஷண வார்த்தை என்று மற்றொரு வார்த்தையையோ நான்  சில பல வார்த்தைகளை தவிர்த்தால் என்னுடைய தொகுப்பு முழுமையானதாக இருக்குமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

எனினும் நான் என் வாழ்கையில் இதுவரை பிரயோகிக்காத வார்த்தைகள் பலவற்றை இந்த தொகுப்பு தொடங்கிய நாளிலிருந்து படித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றில் பண்பான வார்த்தைகளும் இருக்கின்றன. பண்பற்ற வார்த்தைகளும் கிடைத்திருக்கின்றன.  எப்படியான வார்த்தைகளை தரலாம் என்று நானே தீர்மானிப்பதை விட வாசிப்பாளர்களான நீங்களே சொல்லுங்கள்....  அது என்னை பல விவாதங்களிலிருந்தும் , இக்கட்டான நிலைகளிலிருந்தும் தப்பிக்க ஏதுவாக வழியெடுத்துக் கொடுக்கும்    என்பதில் எனக்கு மகிழ்ச்சியே... நான் இந்த தொகுப்பை எழுதுவதன் மூலம் யாருடைய பகையையோ வெறுப்பையோ  இலவசமாக வாங்கி வைக்க விரும்பவில்லை.  :) :)  சண்டை போட்டு களைத்து விட்டேன்.. வயதாகிக் கொண்டு வருகிறதல்லவா எனக்கும்??  :) :)

என்னைப் பொறுத்தவரை எந்த தூஷணையையும் தெரிந்து வைத்திருப்பதில் தவறில்லை. அதை பிரயோகிப்பதா வேண்டாமா என்று என்னுடைய பகுத்தறிவுக்கு தெரிந்தால் போதுமென்பதே... தவிர இங்கு எவரும் மனதிலாவது ஒருவரை சபிக்கவோ , திட்டவோ, கறுவவோ  பண்பற்றை வார்த்தைகளையோ அல்லது ஒருமையிலான வார்த்தையையோ பயன்படுத்தவில்லை என்றால் அவர் மனிதரே அல்ல.. தெய்வம்! நான் தெய்வம் அல்ல... :)   நான் மனதுக்குள் எல்லா வார்த்தைகளாலும் என்னால் திட்டப்பட வேண்டியவர்களை திட்டியிருக்கிறேன் :) :) 

இன்றைய சொல் தேர்வு  பேச்சு வழக்கில் எங்களூரில் உறவு முறைகளை குறிப்பன.

 அவையாவன

எணை / எணோய் /  (உச்சரிப்பைக் கேட்கும் போது நேய். என்ற சத்தம் வரும்) -  வயதான  மூதாட்டிகளை  அழைக்கும் சொல்.


ஓய்  -  முன்னால் போகும் ஒருவரை கூப்பிடும் ஒலிச் சொல்.

எடேய்  -  தன் வயதொத்த  அல்லது வயதில் சிறிய சிறுவர்களை அழைக்கும் சொல். அல்லது இருவருக்கிடையிலான வாய் தகராற்றில் மரியாதைக் குறைவை காட்டும் பொருட்டு எதிராளியை விளிக்கும் சொல்.

எடியேய் / எடி  -  தன் வயதொத்த  அல்லது வயதில் சிறிய சிறுமிகளை அழைக்கும் சொல். அல்லது இருவருக்கிடையிலான வாய் தகராற்றில் மரியாதைக் குறைவை காட்டும் பொருட்டு எதிராளி பெண்ணாக  இருக்கும் பொருட்டு விளிக்கும் சொல்.

கொம்மா / கோத்தை  -  உனது அம்மா

ஆத்தை  - உனது /எனது அம்மா  (இது தமிழகத்தில் ஆத்தா என்ற சொல்லோடு ஒத்திருக்கிறது)

கொப்பா / கொப்பர்  - உனது அப்பா / உனது தந்தையார் ( மரியாதையுடன் )

கொக்கா - உனது அக்கா

கொண்ணன் / கொண்ணர்  - உனது அண்ணன்

கொம்மம்மா  - உனது அம்மம்மா (உனது அம்மாவின் தாயார்)

கொம்மப்பா - உனது அம்மப்பா (உனது அம்மாவின்  தந்தையார்)

கொப்பம்மா - உனது அப்பம்மா (உனது அப்பாவின் தாயார்)

கொப்பப்பா -  உனது  அப்பப்பா (உனது அப்பாவின் தந்தையார்)

கொம்மான் - உனது மாமன்.  (தாய் மாமன்.)  அம்மான் என்று தாய்மாமனை சொல்லுவோம். அந்த அம்மான் என்ற வார்த்தை  முன்னைலை  பேச்சு வழக்காக  கொம்மானாக மருவிவிட்டது என நினைக்கிறேன்.

உங்கள் அம்மா - உங்கம்மா- என்று மருவி உங்கொம்மா வாகி கொம்மாவானதாக சொல்கிறார்கள்.  அதே போலவே மேற்படி தந்த உறவு முறை வார்த்தைகள் எல்லாம்.. 

இந்த சொற்கள் யாவும் ஒருமை நிலையில் பேசும் வழக்குடையவர்களிடம் தான் அநேகமாக பயன்பாட்டிலிருக்கும்.  எங்களூரில் பெரும்பாலும் வயதில் சிறியவர்களை கூட நீங்கள் என்று பன்மையில் தான் விளிப்போம். ஆனால் கிராமப்புறங்களில் பன்மை விளிப்பும் இருக்கும். ஒருமை விளிப்பும் இருக்கும் வயதில் சிறியவர்களிடமும் சரி பெரியவர்களிடமும் சரி. அப்படியானவர்களின் பேச்சு வழக்கில் இந்த வார்த்தைகள் அதிகமாக பயன்பாட்டில் இருப்பதை காணலாம்.

உதாரணமாக

1) எணேய் -  
                   அ) எணேய் ஆச்சி  இந்த வயசில இவ்வளவு தூரம் நடப்பியே?  (வயதான மூதாட்டியிடம் பேசும்
                    போது)
 
                    ஆ) எணேய் அம்மா  பசி வயித்தைக் கிள்ளுதெணை...  (தாயிடம் மகனோ மகளோ பேசுவது)
        
                     இ)  எணேய் என்ர செல்லமெல்லே ... ( செல்லம் கொஞ்சும் போது எந்த வயது பெண்ணையும்)


2)ஓய்  -         ஓய்  இஞ்சை வாரும் பாப்பம்..  (ஒருவரை அழைக்கும் விளிச்சொல்)

3)எடேய்  -    அ)எடேய்....! இஞ்ச பாரடா  சின்ராசர்ர மகள் பத்மாவை...! (தன் வயதொத்தவருடன் பேசும்  
                             போது)

                        ஆ) எடேய்..!  செக்கலாயிட்டுது படிக்காமல் என்னடா அங்க விளையாடிக் கொண்டு  நிக்கிறாய்?
                              (வயதில் சிறியவர்களை  கூப்பிடும் போது)  
                  
                          இ) எடேய் ..என்ர ராசாவெல்லே ??!!  (செல்லமாக பேசும் போது)
  
                           ஈ)  எடேய்!  தைரியமிருந்தால் வெளில வாடா பாப்பம்...  (ஒருவரோடு சண்டை போடும்
                                போது)

இதே போல் எடி / எடியேய்  என்று பெண்பாலுக்கும் வரும்.


4) கொம்மா - உன்ர கொம்மாவிட்ட சொல்லிறியே நான் சீட்டுக்காசுக்கு வந்திட்டு போனனான் எண்டு?

     கோத்தை - எல்லாம் உன்ர கோத்தை குடுத்த இடத்தால தான்  கொப்பர் இந்த ஆட்டம் ஆடுறார்.
    
     ஆத்தை  -   என்ர ஆத்தை எனக்கினி ஏலாது... 
                           உன்ர ஆத்தைட்ட சொல்லு பாப்பம் எல்லா விசயத்தையும்.

5)கொப்பா - உன்ர கொப்பா மட்டும் இல்லையெண்டால் இண்டைக்கு எங்கட நிலமை
                       என்னவாகியிருக்குமோ?

 6) கொக்கா - உன்ர கொக்கா என்னவாம் ?

  7) கொண்ணன்  - எனக்கு உன்னை பாக்க வர ஆசை தான்... ஆனால் உன்ர கொண்ணனை நினைச்சால் தான்
       பயமா கிடக்கு.

   8) உங்கட கொம்மம்மா கொப்பம்மா/ கொப்பம்மா கொப்பப்பா  எல்லாரும் உங்களோடையே இருக்கினம்? 





 

Swathi Swamy

unread,
Dec 15, 2015, 11:21:01 AM12/15/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
38)

என்ன தான் நாம்  தூய இலக்கண நிபந்தனைகளுடம்  நமது தாய் மொழிகளை கற்றிருந்தாலும்    எம்முடைய வட்டார பேச்சு வழக்கில் பேசும் போது கிடைக்கும் திருப்தி இலக்கண முறையில் பேசும் போது கிடைப்பதில்லை. மொழிக்கும் உணர்வுக்குமான நெருக்கத்தையும், இலகுவான சரளத்தையும் பிறந்து வளரும் போது பேசிப்பழகிய வட்டார வழக்கு மட்டுமே தருகிறது.

தமிழகத்தில் இருக்கும் போது  கிட்டத்தட்ட  7,8  வருட சென்னை வாழ்கையில்  நாங்கள் குடியிருந்த வீடுகளைச் சுற்றி விதம் விதமான வட்டாரத் தமிழ் வாழ்ந்தது. நடுவில் நாமும் எங்கட வட்டாரத் தமிழோடு போனோம்.. முதன் முதல் தமிழகத்தில் நாங்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டு  உரிமையாளர் ஐயங்கார். அவர்கள் கீழ் மாடி. நாங்கள் மேல் மாடியில்... அந்த வீட்டு மாமி , பாட்டி, பிள்ளைகள் என்று எல்லோரும் எங்கள் தமிழில் கொஞ்சம் திண்டாடிப் போனார்கள். எங்களுக்கு திரைப்படங்களில் மட்டுமே கேட்டு பழகிய பிராமண பாஷையை பக்கத்திலிருந்து கேட்டு பேசும் வாய்ப்பு... அந்த வீட்டு கோமளா மாமியுடன் சண்டையும் போட்டிருக்கிறேன்...சந்தோஷமாக லஸ், மயிலாப்பூர் என்று சுற்றியுமிருக்கிறேன்.

மாமி என்ன வெலிட்டிட்ட்ட்டியா ? என்று எங்கள் தமிழிலும் நான்  “ வாங்கோன்னா” என்று அவர்கள் தமிழிலும் கிண்டல் பண்ணியிருக்கிறோம்.. ஆனாலும்  ஸ்ரீரங்கம் போன்ற அக்மார்க் அக்ரகார தமிழாக அவர்களுடைய தமிழும் இருந்ததில்லை . பல வருடங்களாக சென்னை வாழ்கையில் இருந்ததால் அவர்கள் தமிழிலும் சென்னை தமிழ் வாடையும் இருந்தது.

என்னதான் அவர்களுடன் வெளியில் போகும் போது பாவாடை தாவணியோ அல்லது சேலையோ அணிந்து போனாலும் கூட  எதிர்க்க வருபவர் என்னம்மா நீங்க சிலோனா என்று கேட்டு வைப்பார்கள். எங்கள் நெற்றியில் தலையெழுத்தை மட்டுமில்லை நாங்கள் எந்தெந்த நாட்டை சார்ந்தவர்கள் என்பதையும் விதி எழுதி தான் அனுப்பியிருக்கிறதோ என்று நினைத்ததுண்டு.  நானும் எப்படியெல்லாமோ ஐயர் தமிழும் , சென்னை தமிழும் பழகி பேசினாலும் நடுவில் எப்படியோ ஒரு ஈழத்தமிழ் வந்துவிடும்... :) :)

  உணவகங்களில் போய் சாப்பாட்டுக்கு ஓர்டர் குடுக்கும் போதெல்லாம் சப்ளையர்கள்  நீங்கள் சிலோனா என்று கேட்பார்கள். மணித்தமிழைய்யா உங்களோடது..பேசுங்க கேட்க சந்தோசமா இருக்கு என்று சொல்லிவிட்டு நாங்கள் எங்களுக்குள் பேசும் தமிழை ஆர்வமாக கேட்டுக் கொண்டு நின்ற பூரிப்பையும் கண்டிருக்கிறேன். எங்களுடைய முகத்தைப்  பார்க்காமல் போனில் பேசும் போதே ஏங்க நீங்க திருநெல்வேலி,  கன்யா குமாரி பக்கமா அல்லது சிலோனா என்று எதிர் முனையில் பேசியவர்கள் கேட்ட சந்தர்ப்பங்களும் உண்டு.
 
இன்றைக்கும் இங்கு 20 வருடங்களுக்கும் மேலாக ஆங்கிலத்தில் தான் வாழ்கையே போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் சில தருணங்களில்  அமெரிக்கர்களிடம் பேசும்  போது கூட  அவர்கள் ஏதாவது கேள்வி கேட்டால் என்னையறியாமலே ஓமோம்...என்றோ என்ன என்றோ அல்லது சீச்சீ...அப்பிடியெல்லாம் இல்லை என்றோ  பதில் சொல்லிவிடுகிறேன்... வீதியில் எந்த அமெரிக்கரிடமாவது  தகராறு வந்தால் கூட உடனே வாயில் ஓய் என்ன என்றோ அல்லது போடா என்றோ சொல்லாமல் வந்ததேயில்லை... என் பாஷையில் திட்டினால் அவர்களுக்கு புரியாது. ஆனால் அது அவர்களுடைய கோபத்தை இன்னும் அதிகமாக்கி நான் கொச்சை ஆங்கிலத்தில் மேலும் திட்டி சண்டை போட்ட சம்பவங்கள் அதிகம்...  :) :)

அப்படி வாழ்கையில் உணர்வில், நாக்கில் வேரூன்றி விட்டதால் தான் எதை விட்டுக் கொடுத்தாலும் எங்கள் எங்கள் மொழியின் பெருமையை யாரிடமும் விட்டுக் கொடுக்க முடியாமல் இருக்கிறோமோ என்னமோ?

அப்படி எங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் எங்கள் தமிழை இப்படி கொஞ்சமாவது உங்கள் எல்லோருடனும் பகிர்வதில் மனதுக்கு மிகவும் நிறைவாகத் தான் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இன்றைக்கும் எமது பேச்சு வழக்கில் வரும் வினைச் சொல்கள் சிலவற்றை தேர்வு செய்திருக்கிறேன்.

காணும்/  போதும்/ பத்தும் -  போதும் (enough)

காணாது , போதாது , பத்தாது,  - போதாது (Not enough)

காணம் - காணவில்லை 

காணமே - காணவில்லையே

ஆர்த்தல் (ம.த)  / மாயமாப் போச்சு - இல்லாது போதல்

இதில் ஆர்த்தல் என்ற வார்த்தை மட்டக்களப்பு தமிழ் வழக்கில் வருவது என்று ஈழத்துப் பூராடனார் தொகுத்திருக்கும் மட்டக்களப்பு பிரதேச வழக்குச் சொற்கள் - சொற்றொடர்கள் அகராதி என்ற நூலில் கிடைத்தது.  எனக்கும் இது புதிய சொல்லே.. மட்டக்களப்பு பேச்சு வழக்கில் இதை எப்படி உரையாடலில் புதுக்குதுவார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அந்த வட்டார தமிழ் வழக்கில் பரிச்சயமானவர்கள் விளக்கினால் நல்லது. அப்படி விளக்கம் கிடைத்தால் இங்கு தருகிறேன்.

ஏலும் - இயலும்

ஏலாது / ஏலா (ம.த) - இயலாது

பாப்பம்  - பார்க்கலாம்...

பிறகு பாப்பம்  -  ஒரு விசயத்தை தள்ளிப் போடல் வகையை சார்ந்தது 

உதாரணம்:

1) காணும்..காணும்...நான் சோறு கனக்க சாப்பிடுறதில்லை.
   (போதும், போதும், நான் நிறைய சாதம் சாப்பிடுவதில்லை)

2)  காணும் நிப்பாட்டு உன்ர புழுகலை..
   (போதும் நிறுத்து..உன்னுடைய பொய்களை)

3) இவ்வளவும் இப்போதைக்கு பத்துமெண்டு (பத்தும் + எண்டு) தான் நினைக்கிறன்.
    (இத்தனையும் இப்போது போதுமென்று தான் நினைக்கிறேன். )

4)  உந்த சில்லறைக் காசு சந்தையில பனங்கட்டிக் குட்டான் வாங்கக் கூட  காணாது, கண்டியளோ?!
    
5)  எனக்கு மத்தியானச் சாப்பாடு பத்தாது.

6) என்ன ரெண்டு சிநேகிதிமாரையும் இண்டைக்கு கோயிலில காணம்..எங்க போனனீங்கள்?
    ( இரண்டு தோழிகளையும் இன்று கோவிலில் காணவில்லையே எங்கே போயிருந்தீர்கள்?)

7)  நான் தேடேக்கில இந்த புத்தகத்தை காணமே...
     (நான் தேடும் போது இந்த புத்தகத்தை காணவில்லையே.)

8) நேற்று கொடில கிடந்த  என்ர சட்டை  இப்ப எங்க மாயமா மறைஞ்சு போச்சுது ?
     (நேற்று கொடியில் போட்டிருந்த சட்டை இப்போது என்கே காணாமல் போச்சுது.

9) உன்னால் ஏலுமான விசயத்தில மட்டும் இறங்கு.  ஏலாதெண்டால் விட்டுட்டு போ.
 ( உன்னால் முடியும் என்ற விடயத்தில் மட்டும் இறங்கு. இயலாதென்றால் விட்டுவிடு)

10) பாப்பம்..பாப்பம் இது  எங்க போய் முடியப் போகுதெண்டு..நானும் பாக்கிறன்.
     (பார்க்கலாம்....பார்க்கலாம்..இந்த விடயம் எந்த முனையில் போய் முடிவாகப் போகிறதென்று நானும் பொறுத்திருந்து பார்க்கிறேன் என்ற அர்த்தத்தில் - சாவாலில் சொல்லப்படுவது)

11) முதலில் வந்த வேலையை முடிப்பம்..பிறகு என்ன நடக்குதெண்டு பாப்பம்.

12) உந்த விசயத்தை இப்போதைக்கு விடுவம். தேவையெண்டால் பிறகு பாப்பம் .
     (இந்த விடயத்தை இப்போது விட்டு வைப்போம். பிறகு தேவைப்பட்டால் பார்க்கலாம்)





Swathi Swamy

unread,
Dec 15, 2015, 11:21:01 AM12/15/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
37)

கடந்த நாட்களில் மனிதர்களின் பல வகையான குணங்களையும்,இயல்புகளையும், தன்மைகளையும், அவற்றுக்குரியவர்களையும் குறிக்கும் சொற்களின் தொகுப்பாக இருந்தது. எல்லாவற்றையும் ஒரெ இழையில் தர இயலாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சொல் நினைவுக்கு வருகிறது. அட இதை அன்றைக்கு சேர்க்காமல் விட்டுவிட்டோமே என்று  என்னை நானே நொந்து கொள்கிற சூழல்.. அதனால் அப்படி விட்டுப் போனெ சில சொற்களை சேர்த்து வைத்திருந்தேன். அவற்றை இன்று தருகிறேன். இனியும் , இன்னும் வேறு சொற்களும் கிடைக்கலாம்... உங்களுக்கும்  தெரிந்திருக்கலாம்... பகிருங்கள் என்னுடன்..


அப்பிராணி - அப்பாவி

மந்தடை (ம.த) - புத்திக் கூர்மையில்லாதவன்

மொக்கு./மொக்கன்/ விண்ணாங்கன்(ம.த)  - மடையன் / மூடன்

ஊமைப்பண்டாரம் /அமிசடக்கி - மனம் திறந்து பேசாதவன்

அறுதோசி (மட்டக்களப்பு தமிழ்) - ஒன்றுக்கும் உதவாதவன்

ஏகாலி (மட்டக்களப்பு தமிழ்) -  பொறுப்பற்ற தனியாள்

ஏமலாந்தி - புத்திக் குறைவானவன் அல்லது கவனம் குறைந்தவன்

வெங்கிளாந்தி - மனதில் ஒன்றும் வைத்திராதவன் / சூது வாது தெரியாதவன்/ அப்பாவி.

நோஞ்சான்  - பலவீனமானவன்
 
ஒல்லி - மெல்லிய உடல்வாகு கொண்டவன் / கொண்டவள்

எலும்பன் -  தசைப்பிடிப்பில்லாத உடல்வாகு கொண்டவன்

தொக்கை - பருமன்.

ஓரல் - -- மெல்லிய உடல்வாகு

தொக்கையன் / குண்டன் - பருமனானவன்

தொக்கைச்சி /குண்டச்சி  -  பருமனானவள்

கிழடு -  முதுமை

கிழவர்/ கிழவன் /  அப்பு  -  முதியவர்

கிழவி /கிழடி/ஆச்சி  - முதிய பெண்மணி.

இதில் கிழடி என்பது இடித்துரைக்கும் போது / மரியாதைக் குறைவாக பேசும் போது பாவிப்பது.

மற்றும் அப்பு , ஆச்சி என்று  தாத்தா பாட்டியை மட்டுமல்ல  வயதில் மூத்தோர் தமக்கு மிகப் பிரியமான  குழந்தைகளை    செல்லமாக அழைக்கும் போதும் பாவிப்பார்கள்.


உதாரணம்:

1)  அந்த  அப்பிராணியை போய் ஆமிக்காரன் பிடிச்சுக் கொண்டு போய்ட்டாங்களே..!

2) என்ன மந்தடை மாதிரி மசங்கி கொண்டு நிக்கிறாய்?

3)  நீயடி சரியான மொக்கு சாம்பிராணி!

4) போயும் போயும் இந்த மொக்கனையா (ஆண் பால்)  / மொக்கிச்சியையா (பெண்பால்) கலியாணம் கட்டினாய்?

5) இந்த விண்ணாங்கனை வைச்சுக் கொண்டா ஒண்டும் செய்ய ஏலா...  
( இந்த மூடனை வைத்துக் கொண்டு ஒரு விசயமும் செய்ய முடியாது)
விண்ணாங்கன் என்பது ஆண்பால். இதன் பெண் பால் சொல் என்ன என்று மட்டக்களப்பு தமிழ் நன்கு தெரிந்தவர்கள் தான் எனக்கு சொல்ல வேண்டும். )

6) சரியான ஒரு ஊமைப் பண்டாரத்தை கொண்டு வந்து எனக்கு கட்டி வைச்சிருக்கினம்.. காசு குடுத்தால் தான் கதை வரும் வாயில இருந்து. 

7) என்ர கடவுளே...இவளைப் போல ஒரு அமிசடக்கியை வேற எங்கயும் பார்க்க ஏலாது.

8) அறுதோசி -  வீணாப் போன அறுதோசி தான் இண்டைக்கு எனக்கு முழிவியலம்.. சைக்!

9) அவனுக்கென்ன ஏகாலி..கவலையத்து திரியிறான்.. கஷ்டப்படுறது அந்த வயசு போன கிழவனெல்லோ?

10)  அவள் சரியான ஏமலாந்தி. யாரெண்டாலும் அவளை சுருக்கா ஏமாத்திடலாம்.

11) வெங்கிளாந்தி  -  பாவம்  சின்ராசா சரியான வெங்கிளாந்தி...இந்த லோகனிட்ட மாட்டுப்பட்டு படுகிற பாடு சொல்லேலாது  .

12)  அவன் ஒரு நோஞ்சான் ,  ஊதிவிட்டால் பறந்திடுவான்.

13)  அவருக்கு கலியாணம் கட்ட ஒல்லி பொம்பிள்ளை தான் வேணுமாம்.

14)  இப்பிடி எலும்பனா இருந்தால் எந்தப் பெட்டை தான் திரும்பிப் பாப்பாள்??

15)  அவன் தொக்கையா இருக்கிறான் எண்டு மச்சாள்காரி கட்ட மாட்டன் எண்டிட்டாளாம்.
( அவன் பருமனாக இருக்கிறான் என்று அவனுடைய மாமன் மகள் கல்யாணத்துக்கு  சம்மதிக்க மறுத்துவிட்டாளாம்.)

16)  ஒரு ஓரலா கருவாடு மாதிரி திரிஞ்ச பெடியன் வெளிநாட்டுக்கு போய் இரண்டு மூண்டு மாசத்தில நல்ல வடிவா வந்திட்டான்.

17)  உன்னை போய் அந்த தொக்கையனுக்கா கலியாணம் பேசினம்?

18)  கலியாணத்துக்கு முன்னம் ஒல்லி குச்சியா இருந்தாள். ஒரு பிள்ளைப் பெறுவோட தொக்கைச்சியா  வந்திட்டாள்.

19) நல்லா இருந்த மனுசன் கிழடு தட்டிப் போய் அறலை பேர்ந்து கிடக்குது.

20 ) 1) எணை ஆச்சி அப்புவிண்ட  வெத்திலைப் பெட்டி எங்கையெணை?!
            பாட்டி தாத்தாவின்  வெற்றிலை பெட்டி எங்கே? (வயதானவர்களை குறிப்பதாக இங்கு ஆச்சி, அப்பு வருகிறது)
    
       2) என்ர ஆச்சியெல்லே ..அம்மம்மாவுக்கு கொஞ்சம் பேன் பார்த்துவிடெணை..  (இங்கு வயதில் சிறிய பெண்ணிடம் வயதில் பெரியவர் செல்லமாக  கெஞ்சுவது போல் வருகிறது.)

      3)  என்ர அப்பு ..ராசா....அந்த பாயை எடுத்து போட்டுவிடடா.. ( வயதில் பெரியவர் சிறிய பையனிடம் உரையாடும் போது) 
 
       

Swathi Swamy

unread,
Dec 16, 2015, 10:08:55 PM12/16/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
47)
இன்றைய தேர்வாக எங்களூரில் ஒவ்வொருவரினதும் காணிகளும் வீடுகளும் இன்னொருவரின் காணிகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும்  பிரிக்க வேலியோ அல்லது மதிலோ நடுவில் இருக்கும். அவை பற்றிய அலசல் இன்றைக்கு,

  • வேலி  
  • மதில்

வீடுகளை சுற்றியும், வளவுகளைச் சுற்றியும் கட்டப்பட்டிருக்கும் இந்த அமைப்பில் மதிலை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. காங்கிரீட் கற்களால் கட்டப்பட்ட மதில்கள் அநேகமாக கல்வீடுகளைச் சுற்றி இருக்கும்.  பெரும்பாலும் வ்சதி படைத்தவர்களின் வீடுகளிலும் காணிகளிலும் தான் மதில்கள் கட்டப்பட்டிருக்கும்.

மற்றும்படி  வேலிகளே எங்கள் ஊரில் எங்கு திரும்பினாலும் எல்லைக் கோடுகளின் அடையாளங்களாயிருக்கும்.

கதியால்  -(பெயர்சொல்) வேலியில் நாட்டும் கிளை . இது கிளுவந் தடிகளாலோ , பூவரசம் மரக் கிளைகளாலோ அல்லது சண்டி மரங்களினது தடிகளையோ வரிசையாக வளவின் எல்லயில் கதியால்களாக நட்டு வைப்பது வழக்கம்.

கிளுவங் கதியால் வேலி ஊரில் சகஜம்.

இது போல் பூவரசம் மரக்கதியால்கள், சண்டி மரக் கதியால்கள் என்று வேலிக்காக பல மரங்கள் பயன்படும். இது தவிர  பனை மட்டை  வேலி , தென்னை மட்டை வேலி, பனையோலை வேலி, கிடுகு வேலி போன்றவற்றையும் எங்களூரின் வேலி வகைகள்.

கிடுகு -  தென்னை ஓலைகளால் முடையப்பட்டு வேலியாக அடைக்கப் பயன்படும் . இது கிடுகு வேலி எனப்படும். விபரங்கட்கு https://ta.wikipedia.org சொடுக்கவும்.

Inline image 1நன்றி(http://kattankudi.info)

(நன்றி: தமிழ் விக்கிபீடியா)

பனையோலை வேலி - பனை மட்டைகளுடன் விசிறி போல் விரிந்திருக்கும் பனையோலைகளை மறைப்பாக வைத்து அமைக்கப்படும் வேலி.
Inline image 2


பனை மட்டை வேலி - பனை ஓலை அகற்றப்பட்ட தண்டுகளை பனை மட்டை என்போம். அவற்றை வரிசையாக பிணைத்து வேலையாக கட்டி வைப்பார்கள்.

தடி வேலி - மெல்லிய கிளைத்தடிகளால் பிணைக்கப்பட்ட வேலி அமைப்பு

குத்தூசி.  - வேலி அடைக்க பயன்படும் சாதனம்/ உபகரணம். குத்தூசி படம் தேடினேன் கிடைக்கவில்லை. யாரிடமாவது இருந்தால் தந்துதவுங்கள்.

காம்புச் சத்தகம் - வேலி அடைக்க பயன்படும்
Inline image 4

பொட்டு - இரண்டு வீடுகளுக்கிடையிலான வேலியில் நட்போடும், தேவைக்காகவும் அமைக்கப்படும் ஒரு சிறு வழி.  சமயத்தில் சுற்றி வளைத்து போக வேண்டிய அடுத்த தெருவுக்கு அப்படி சுற்றி வளைத்துப் போகமல் குறுக்கு வழிப் பாதையாகக் கூட  இந்த வேலிப் பொட்டுகள் உதவும்.

எங்களூர் வேலிகள் வெறும் நிலப்பரப்புகளின் அரண்களாக மட்டுமல்ல ஊர்களின் ஒவ்வொரு  அயலவர்களினதும் உயிரோட்டங்களையும் தினசரி வாழ்வியலையும் தாங்கி நிற்கும் அடையாளங்களாகவும் விளங்குகின்றன. ஒவ்வொரு வீட்டு வேலியும் இரண்டு பக்கங்களிலிருந்தும் பகிரப்பட்ட புதினங்கள், விடுப்புகள், சோகங்கள், சந்தோஷங்கள் என்று தன்னோடு வைத்திருக்கும்.

ஒரு அளவான வளவுகளையும் வீடுகளையும் சுற்றி  அரணாக விளங்கும் வேலிகள் தவிர்த்து பல ஏக்கர் கணக்கில் விரிந்து கிடக்கும் வயல்வெளிகள் , வெறும் நிலப்பரப்புகளில் எல்லாம் எல்லைக் கற்கள் இருக்கும். வரிசையாக எல்லைகளில் தென்னை மரங்களோ, பனை மரங்களோ வேலிகள் போல் வரிசையாக நிற்கும். 




kathiyaalveli.jpg
download1.jpg
veli.jpg
panaiolaiveli1.jpg
panaimaddaiveli.jpg
thadiveli.jpg
kampusathakam.jpg

Swathi Swamy

unread,
Dec 19, 2015, 6:34:11 AM12/19/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai

 உறவு முறைச் சொற்கள்

எங்கள் பேச்சு வழக்கில் பல உறவு முறை சொற்கள் மற்றைய வட்டாரத் தமிழிலிருந்து வேறுபாட்டவையாக இருக்கின்றன்.


பண்டைய தலைமுறையில் ஆச்சி , அப்பு  என்ற வார்த்தைகள்  தாய் தந்தையைக் குறிப்பவையாக இருந்தனவாம்.  எமக்கு முந்தைய சந்ததியினர் ஐயா என்றும் தற்காலத்தில் அப்பா , அம்மா என்றும் அழைக்கும் வழக்கில் இருக்கிறது.  


உதாரணங்கள் :

1)ஆச்சி ! அப்பு வந்த உடன கோவிலுக்கு போவமே?

(அம்மா அப்பா வந்ததும் கோவிலுக்கு போவோமா ? ) 


2)அப்பு! நாங்கள் வெளிக்கிட்டாச்சு..நீங்களும் வாறீங்களா?

(அப்பா! நாங்கள் புறப்பட்டுவிட்டோம். நீங்களும் வருகிறீர்களா?)


3)ஐயா! நாளைக்கு சந்தைக்கு போவீங்களே?

(அப்பா! நாளைக்கு சந்தைக்கு போவீர்களா?)


அப்பு என்று தந்தையை அழைத்த காலத்தில் தந்தையோடு கூடப் பிறந்தவர்களை பெரியப்பு, சித்தப்பு , குஞ்சியப்பு என்று முறை சொல்லியும், பிற்காலத்தில் பெரியய்யா , சின்னைய்யா , குஞ்சியைய்யா என்றும்  இப்போது பெரியப்பா  , சித்தப்பா என்றும் மாற்றத்திற்குள்ளாகியிருக்கின்றன,

 

உதாரண வாக்கியங்கள்:

1)பெரியப்பு சரியான பயந்தாங்கொள்ளி. 

(பெரியப்பா மிகவும் பயந்த சுபாவமுள்ளவர்) 

2)சித்தப்பு நல்ல கெட்டிக்காரர்

3)குஞ்சியப்பு  இல்லாமல் குஞ்சியாச்சி ஒரு இடமும் போக மாட்டா.

 

இப்படியே தாய் தந்தையின்  பெற்றோர்களை பெத்தப்பு, பெத்தாச்சி என்றும் அம்மாச்சி , அப்பாச்சி என்றும் சில வீடுகளில் தாத்தா பாட்டி என்றும் தற்காலத்தில் அம்மப்பா , அம்மம்மா ,அப்பப்பா ,அப்பம்மா என்றும் மாற்றத்துக்குள்ளாகியிருக்கின்றன். 

உதாரணங்கள்

 1)பெத்தப்புவுக்கும் பெத்தாச்சிக்கும் வெத்திலை பாக்கு வாங்கிக் குடுத்தே சொத்தெல்லாம் அழிஞ்சு போயிடும் போல இருக்கே..

ஒரு காலத்தில் தந்தையைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட அப்பு என்ற சொல் தற்காலத்தில் தாத்தாவையும் , வயதான முதியவரையும் அழைக்கும் உறவு முறைச் சொல்லாகவும் , வயதானவர்கள்  குழந்தைகளையோ அல்லது பிள்ளைகளையோ அழைக்கும் செல்ல வார்த்தையாகவும்  மருவி இருக்கிறது, 

உதாரணங்கள் : 

 

1)அப்பு ! நான் தானே உங்கட செல்லப் பேத்தி? (தாத்தா உறவு)

2)அப்பு! இந்த கிழண்டின வயசில எங்க கால்நடையாய் கிளம்பிட்டாய்? (முதியவரை குறிக்கும் சொல்)

3)அப்பு! என்ர செல்லமெல்லே...  (செல்ல வார்த்தை)


அதே போல் ஆச்சி என்ற வார்த்தை தற்காலத்தில் பாட்டியையோ அல்லது மூதாட்டியையோ அழைக்கும் சொல்லாகவும் அன்புமிகுதியில் பெண் குழந்தையையோ அல்லது பெண்ணையோ அழைக்கும் செல்ல வார்த்தையாகவும் மருவி இருக்கிறது.


அம்மான்  - தாய் மாமன்

மாமா  -  தாய் மாமன் /  அத்தை கணவர். 

மாமி  -  தாய் மாமன்  மனைவி, அப்பாவின் தங்கை.

பெற்றோருக்கு அடுத்த படியாக முக்கியத்துவம் கொடுக்கப்படும் உறவாக தாய்மாமன் உறவு  எங்கள் மத்தியில் மதிக்கப்படுகிறது.   

ஒரு பெண்  குழந்தை பிறந்ததிலிருந்து , அவள் ருதுவாகி வரும் வரை ஒவ்வொரு கால கட்டத்திலும் அந்தப் பெண்ணுக்கு நடக்கும் சடங்குகளில் தாய் தந்தையரை விட  தாய் மாமனுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.  

பிறந்த குழந்தையை  தொட்டிலில் கிடத்துவதிலிருந்து  சகல விசேசங்களிலும் தாய் மாமாவின் பங்கு தான் முக்கியமாக இருக்கிறது. தமிழகத்தில் தாய்மாமனுக்கு அக்கா மகளாகிய மருமகளை திருமணம் செய்து கொடுக்கும் முறை இருக்கிறது. ஆனால் எங்கள் ஊரில் அந்த வழக்கு இல்லை. தந்தையை இழந்த பெண்ணுக்கோ பிள்ளைக்கோ தாய் மாமன் தான் தந்தையின் இடத்தில் இருந்து எல்லாவற்றையும் நடத்தி வைப்பார்.

உதாரண வாக்கியங்கள். 

  1. தாய்மாமன் இல்லாட்டில் ஒருத்தன் பாதி அனாதை மாதிரி.
  2. மாமா ! ஏன் மாமிக்கு இப்பிடி பயப்பிடுறீங்கள்?



Swathi Swamy

unread,
Dec 20, 2015, 11:49:20 PM12/20/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
50) இது ஐம்பதாவது இடுகை. மிகவும் சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இதுவரை இப்படி அதிக நாள் தொடர்ந்து நான் எழுதியதே இல்லை எனலாம் என்னுடைய 25 வருடத்துக்கும் மேலான இணைய வாழ்கையில்.  இத்தனை இடுகைகளிலும் எனக்கு ஊக்கமளித்த அத்தனை அன்புள்ளங்களாலும் தான் தொடர்ந்து எழுத வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. மிக்க மிக்க நன்றி ..!

இன்று................

50) திரும்பவும் நினைவு படுத்துகிறேன்..இலக்கணத்தில் நான் பூச்சியம் என்பதை.

என்றாலும் இந்த ஈழத் தமிழ் சொல் இழை தொடங்கியதால் இலக்கணத்துடன் ஒப்பிட்டு பேச்சுத்தமிழ் சொற்களை தர வேண்டிய சூழலில்  இருக்கிறேன்.. சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் வேற்றுமை உருபு சொல்லித் தந்த மிஸ் இராசையாவை இப்ப நினைத்துப் பார்க்கிறேன். இலக்கண வகுப்பு அவர் தொடங்கினதுமே நான் மேசையில் கவிழ்ந்து தூங்கியதும்..அதற்காக  ஒரு வகுப்பு முழுக்க எழும்பி நிற்க கிடைத்த தண்டணையும் கூட நினைவுக்கு வரும்...இந்த மாதிரியான இலக்கணம் தெரிந்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் சில சந்தர்ப்பங்களில்..ஆனால் அவர் சொல்லித் தந்த எந்த இலக்கணமும் ஒரு கிஞ்சித்தேனும் நினைவுக்கு வருதே இல்லை ..

  இறுதியில் உகரம் வருவது எல்லாம் நான்காம் வேற்றுமை உருபு. உதாரணமாக  எனது உனது போன்றவை என்று சகோதரர் லக்கி சாஜஹான் அவர்களின் உதவியால் அறிந்து கொண்டேன் இன்று.  இந்த நான்காம் வேற்றுமை உருபுகள் எங்கள் பேச்சுத் தமிழில் எப்படி மாறியிருக்கிறது என்பதை இன்று பார்க்கலாம்.

என்ர -  எனது / என்னுடைய

உன்ர - உனது /உன்னுடைய

உம்மட - உமது / உம்முடைய

அவன்ர - அவனது /அவனுடைய

அவளின்ர - அவளது / அவளுடைய

அவரிண்ட - அவரது / அவருடைய

அவைன்ர /அவைண்ட - அவர்களது /அவர்களுடைய


உதாரண வாக்கியங்கள்

1) என்ர  உயிர் தோழி சிவசோதியை கன வருசமா தேடிக் கொண்டிருக்கிறன்.
(எனது/என்னுடைய தோழி சிவசோதி என்பவரை பல வருடங்களாக தேடிக் கொண்டிருக்கிறேன்)

2) உன்ர வீட்டுப் பக்கம் தான் ஆமி செக்கிங் நடக்குது.. இப்போதைக்கு அங்கால  போகாதை .
(உன்னுடைய வீட்டுப் பக்கமாக இராணுவ சோதனை நடக்கிறது.இப்போது அந்தப் பக்கம் போகாதே)

3) உம்மட வீட்டுக்கு நான் நேற்று வந்தனான். ஆனால் நீர் இல்லை.
(உமது வீட்டுக்கு நேற்று நான் வந்திருந்தேன். ஆனால் நீர்(நீவிர்) அங்கு இல்லை)

4) அவளின்ர மகள் வலு கெட்டிக்காரி.
(அவளது மகள் மிகவும் கெட்டிக்காரி)

5) அவன்ர அப்பா தான் எங்கட ஊர் விதானையார்.
(அவனுடைய அப்பா தான் எங்கள் ஊர் தாசில்தார்)
(விதானை என்றால் தாசில்தார் தானே?)

6) அவரிண்ட பிள்ளையள் எல்லாரும் நல்லாப் படிச்சு நல்ல நிலமையில தான் இருக்கினம்..
(அவரது பிள்ளைகள் நல்ல படிப்பு படித்து நல்ல நிலமையில் இருக்கிறார்கள்)

7) அவையளிண்ட  காணிக்கில இருக்கிற கிணறு ஒண்டு தான் இந்த அயலுக்குள்ளே நல்ல தண்ணிக் கிணறு. மற்றவை வீட்டுக் கிணத்துத் தண்ணி எல்லாம் ஒரே உப்பு.
(அவர்களது நிலத்தில் இருக்கும் கிணறு மட்டும் தான் இந்த அயலில் நல்ல தண்ணிக் கிணறாக இருக்கிறது. மற்றவர்களின் வீடுகளில் இருக்கும் கிணற்றுத் தண்ணீரில் ஒரே உப்புக் கரிக்கும்)

இதே போல்  வேறு சில சொற்களையும் பார்க்கலாம். இவை எந்த வேற்றுமை உருபைச் சார்ந்தவை என்று பெரியவர்கள் தான் சொல்ல வேண்டும்.

என்னட்ட -  என்னிடம்

உன்னட்ட - உன்னிடம்

உம்மட்ட - உம்மிடம்

உங்களிட்ட  - உங்களிடம்

எங்களிட்ட  - எங்களிடம்

அவனிட்ட - அவனிடம்

அவளிட்ட  - அவளிடம்

அவரிட்ட  - அவரிடம்

அவையட்ட - அவர்களிடம்

1) என்னட்ட  -  என்னட்ட  இப்ப காசில்லை. எப்ப காசு கிடைக்குதோ அப்ப கொண்டு வந்து தாரன்.
(என்னிடம் இப்போது பணமில்லை; கிடைக்கும் போது கொண்டு வந்து தருகிறேன்)

2) உன்னட்ட தானே  எல்லாத்தையும் எடுத்து தந்திட்டேனே.. இன்னும் என்னத்தை இங்க வந்து தேடிக் கொண்டிருக்கிறாய்?
(உன்னிடம் தான் இருந்தவை எல்லாவற்றையும் எடுத்து தந்துவிட்டேனே? மேலும் என்ன இங்கு இருக்கிறது என்று தேடிக் கொண்டு நிற்கிறாய்?)

3) உம்மட்ட அண்டைக்கு ஒரு புத்தகம் தந்தனானெல்லே? அதை எப்ப திருப்பி தரப் போறீர்?
(உம்மிடம் அன்று ஒரு புத்தகம் தந்தேன் அல்லவா? அதை எப்போது திரும்ப தருவீர்?)

4) அவளிட்ட  இன்னுயும் என்னத்தை  பறிக்கப் போறானோ இந்த கூறு கெட்டவன்?
(அவளிடம் இன்னும் என்ன பறிக்கப் போகிறானோ இந்த கூறுகெட்ட மனிதன்?)

5) அவனிட்ட இருந்து அவன்ர அம்மா, அப்பாவை பிரிச்சிட்டாள்.
(அவனிடமிருந்து அவனுடைய அம்மா, அப்பாவை பிரித்துவிட்டாள்)

6) அவரிட்ட இருந்த நாலு பரப்பு காணியையும் , வீட்டையும் மகளுக்கே குடுத்திட்டாராம்.
(அவரிடம் இருந்த நாலு பரப்பு நிலத்தையும் வீட்டையும் அவர் தனது மகளுக்கு கொடுத்துவிட்டாராம்)

7) அவையட்ட இருந்து ஒரு சேதியும் இன்னும் வரவில்லை
(அவர்களிடம் இருந்து ஒரு தகவலும் இன்னும் வரவில்லை.


Swathi Swamy

unread,
Dec 22, 2015, 8:12:06 AM12/22/15
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
எணேய்!

ஏய், எடேய் போல் எணேய் என்பதும் சுட்டு வார்த்தையாக  எமது தமிழ் பேச்சு வழக்கில் இடம்பெறுகிறது. இது ஈழத்தின்
ஒரு சில இடங்களில் குறிப்பாக கிராமங்களில் பெண்களை எணேய் என்ற வார்த்தையால் சுட்டுவது இங்கு வழக்கம்.
வயதான மூதாட்டிகளை, அல்லது அம்மாவின் வயதொத்த பெண்களை எணேய் என்ற வார்த்தையிட்டு அழைப்பது எமது கிராமப்பகுதிகளில் வழக்கமான பேச்சு வழக்கு.
அதே போல் வயதில் மூத்தவர்கள் பெண் குழந்தைகளை, இளம் பெண்களை அன்புடன் செல்லமாக எணேய் போட்டு அழைப்பதுமுண்டு.

பார் + எணை  = பாரணை 

உதாரணமாக 

எமது மிகப்பிரபல்யமான பாப் இசை பாடல் வரிகளைப் பாருங்கள்... 

ஏனணை மாமி மேலே மேலே துள்ளுறியே
பாரணை மாமி படுகுழியில் தள்ளுறியே
தேனணை மாமி அவள் எனக்கு தெவிட்டாத சுகம் எனக்கு
பாரணை மாமி கட்டுறன் தாலியை... 

வினைச் சொற்களுடன் எணேய் என்ற சொல் சேர்த்து பேசுவது பெண்பாலை சுட்டுவதாக அமையும்.


உதாரணங்கள் சில

கேள் + எணேய்  =  கேளணை
பார் + எணேய் = பாரணை
படி + எணேய் = படியெணை
ஓடு + எணேய் = ஓடெணை..
சொல் + எணேய் = சொல்லணை
எழுது +எணேய்= எழுதணை
எழும்பு +எணேய் = எழும்பெணை

1) அம்மாளோய்  ஐயாவிட்ட கேளணை  திருவிழாவுக்கு போகட்டா எண்டு..
(அம்மா ஐயா/அப்பாவிடம் கேள்+எணேய் திருவிழாவுக்கு போகலாமா என்று)

2) இஞ்ச பாரணை எல்லாம் என்ன மாதிரி கிடக்கெண்டு?!
(இங்கே பார்+எணேய் எல்லாம் எப்படி சிதறிக்கிடக்கிறது என்று)

3)ஆச்சி அந்த பாரதக் கதையை இன்னொருக்கால் படியணை
(ஆத்தா அந்த பாரதக் கதையை இன்னொரு தடவை படி+எணேய்)

4) கெதியா எழும்பி ஓடணை...சூரியன் உச்சிக்கு வரப் போறான் ...ஒரு வேலையும் செய்யாமல் கிடக்கிறாய்
(உச்சி வெயில் வரப்போகிறது, இன்னமும் ஒரு வேலையும் செய்து முடிக்காமல் படுத்துக் கிடக்கிறார்..சீக்கிரமாக எழும்பி ஓடு+எணேய்)

5) அம்மாவோய்....உன்னானை சொல்லனை இது ஆரிண்ட வேலையெண்டு..
(அம்மா...உன் மேல சத்தியமா சொல்+எணேய் இது யார் செய்த வேலை என்று)

6) ஒரு சின்ன கடிதம் எழுதணை நான் சொல்ல சொல்ல உன்ர மாமாவுக்கு
(உன்னுடைய மாமாவுக்கு நான் சொல்ல சொல்ல ஒரு கடிதம் எழுது+எனேய்)

7) விடிஞ்சு இவ்வளவு நேரமாப் போச்சுது எழும்பணை பாப்பம்..
(விடிந்து இவ்வளவு நேரமாகிவிட்டது?! எழும்பு +எணேய் பார்க்கலாம்.


Swathi Swamy

unread,
Jan 1, 2016, 9:56:18 AM1/1/16
to தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral, vallamai
52)
எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இந்த புத்தாண்டு எல்லோருக்கும் எல்லா வளமும் நலனும், தேக ஆரோக்கியமும் சிறந்து விளங்கும் நிறைந்த ஆண்டாக இருக்க நல்வாழ்த்து கூறி இன்றைய அலசலுக்குள் நுழைகிறேன்.

இந்த புத்தாண்டிலிருந்து இந்த இழையை வாரம் 3 தடவை மட்டும் எழுதலாம் என்றிருக்கிறேன்.

 ஈழத்திலிருந்து புலம் பெயரும் போது பிறந்து வளர்ந்த ஊரையும், வீட்டையும், உறவுகளையும், நண்பர்களையும் அந்த இனிமையான வாழ்கையையும் விட்டுப் போகிறோமே என்ற வலியிலும் கொஞ்சம் நிம்மதியாகவும் இறுமாப்போடும் பரவாயில்லை எப்படியோ எங்கள் தாய் மொழி பேசும் மண்ணில் தானே போய் இருக்கப் போகிறோம் என்ற சமாதானப்படுத்தலோடு தான் தமிழகத்தில் வந்து இறங்கினோம். ஆனால் அங்கு வந்து இறங்கிய பின் தான் புரிந்தது அத்தனை நாள் சினிமாவில் பழகிய தமிழை பார்க்கிலும் வேறுபட்ட தமிழ் பேச , புரிந்து கொள்ள வேண்டிய சூழலில்  நாம் இருக்கிறோமென்று.

அங்கு போன புதிதில் வாடகைக்கு எமக்கு கிடைத்த வீட்டு உரிமையாளர் ஐயங்கார். ஆனால் பல வருடங்களாக சென்னை வாசிகளாக இருந்தார்கள். அவர்கள் தமிழில் ஐயர் பாஷையும் சென்னை தமிழும் கலந்திருந்தது. சுற்றிலுமிருந்த அயலட்டைகள் மலையாளமும், தெலுங்கும் கலந்த தமிழ் பேசிக் கொண்டிருந்தனர். முதலில் விசயம் புரியவில்லை. பிறகு தான் தெரிந்தது வடபழனி ஏரியாவை சுற்றி கோடம்பாக்கவாசிகள் பலர் குடியிருப்பது. நாங்கள் இருந்த வீட்டுக்கு அருகில் பல துணை நடிகர் நடிகைகள் குடியிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் வேற்று மாநிலத்தவர்.
கொஞ்ச நாள் சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்த மாதிரியே சுற்றமும் சூழலும் நமக்கிருந்தது. எல்லாம் பழகி வர பல மாதங்கள் எடுத்து அவர்கள் மத்தியில்  ஏழெட்டு வருடங்கள் வாழ்ந்து கடைசியில் தமிழகத் தமிழும் கொஞ்சம் எங்களுக்கு பழக்கமாகியிருந்தது.

இன்றைய தேர்வாக ஈழத்து தமிழில் உபயோகிக்கப்படும் சில உணவு வகை அல்லது உணவுப் பொருட்களின் பெயர்களும் அவற்றை தமிழ் நாட்டில் குறிப்பிடும் சொற்களையும் பற்றியது.

உதாரணமாக 

பாண் / வெதுப்பி -  ரொட்டி / bread

சாதாரண பாண் & ரோஸ்ட் பாண் , வட்டப் பாண்

ரொட்டி - சப்பாத்தி

சீனி - சர்க்கரை

சர்க்கரை - வெல்லம்

அமெரிக்கன் மா,  வெள்ளை மா  -  மைதா மா


ஈழத்திலிருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்த  புதிதில் எமக்கு மளிகைக் கடைகளில் சாமான்கள் வாங்கும் போது நேர்ந்த அனுபவங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை  .

நாங்கள் பாண் என்று கேட்டால் அவர்களுக்கு அது புரியாது. அவர்கள் அதை ரொட்டி என்று சொன்ன போது திரு திரு என்று முழித்திருக்கிறோம். ரொட்டி என்பது எங்களுக்கு இன்னொரு வகை உணவு. ஆனால் எங்கள் ரொட்டியை  சப்பாத்தி என்றார்கள் .  சீனி என்று கேட்டால் அவர்களுக்கு புரியவில்லை. சீனியை எது என்று புரிய வைக்க தேநீர் ரெஸிப்பி எல்லாம் மளிகைக்கடைக்காரர் ஒருவருக்கு விலாவாரியாக விளக்கியிருக்கிறேன்.. எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுவிட்டு “ஓ சர்க்கரையாம்மா?” என்றார். எனக்கு ஆத்திரமாக வந்தது.. ஏன் என்றால் நாங்கள் சர்க்கரை என்பது வெல்லத்தை.

அமெரிக்கன் மா இருக்கிறதா என்று கேட்ட போது அதே மளிகைக்காரர் ஐய்யே.. நம்மகிட்ட எல்லாம் லோக்கல் மா தான் இருக்கும்மா என்றாரே பார்க்கலாம்...  மூட்டை மூட்டையாக மா இருக்கே இது என்ன மா என்று கேட்டால் இதுவா இது மைதா என்றார். மைதா மா  தான் அமெரிக்கன் மாவா என்று புரியாமல் ,  மா வாங்காமலே வீட்டுக்கு திரும்ப போய் அம்மாவை கூட்டி வந்து அம்மாவும் முழித்து சரி எதற்கும் கொஞ்சமாக வாங்கிக் கொண்டு போய் பிட்டு அவிச்சு பார்க்கலாம் என்று  வாங்கிக் கொண்டு போனோம். அப்படி தான் அமெரிக்கன் மாவை அடையாளம் கண்டு கொண்டோம் அங்கு.  அதே போல் அரிசி வகைகளும் திக்கு முக்காட வைத்தன. குத்தரிசி, பச்சையரிசி, சம்பா அரிசி என்ற அரிசி வகைகளை மட்டுமே தெரிந்து வைத்திருந்தேன். அங்க போனால் பொன்னி, புழுங்கல், பாஸ்மதி என்பது மட்டுமல்ல ஐயாறு எட்டு  என்று கணித வாய்ப்பாட்டை எல்லாம் அரிசிக்கு பெயராக வைத்திருந்தார்கள்.  அதெல்லாம் ஒரு அனுபவம் ...

நிற்க இன்றைய தேர்வுக்கு வருகிறேன்....

எங்கள் அன்றாட உணவுகளில் பாண் என்ற வெதுப்பி மிகவும் பிரபல்யமானது.  வெதுப்பி என்ற தூய தமிழ் சொல்லை அண்மைக் காலமாகவே கேட்டு வருகிறேன். மற்றும்படி பிறந்து வளர்ந்ததிலிருந்து பாண் என்ற சொல்லே இந்த உணவுக்கு பெயராக குறிப்பிட்டு வருகிறோம். இது போர்த்துக்கீச  மொழியிலிருந்து ஈழத்துக்குள் ஊடுருவிய அந்நிய மொழி சொல் .

செத்தல் மிளகாய் போட்ட அல்லது பச்சை மிளகாய் போட்டு அரைத்த தேங்காய் சம்பலுடனோ, அல்லது பழய குழம்புடனோ அல்லது வாழைப் பழத்துடனோ , முட்டைப் பொரியலுடனோ சாப்பிட்டுவிட்டு பாடசாலைக்கு ஓடிய நினைவுகள் இன்னும் பசுமையாகவே இருக்கின்றன. எங்கள் உணவு வகைகளில் பாண் தான் ஃபாஸ்ட் ஃபூட் வகையை சார்ந்தது என்று சொல்லலாம்.

பாண் சீவல்களில் பட்டர் பூசி, அந்த பட்டர் மீது சீனியை கொஞ்சமாக தூவி சாப்பிட்டிருக்கிறோம். அதே போல் ஒரு சீவலில் பட்டரும் , இன்னொரு சீவலில் ஜாமும் பூசி சாப்பிடுவோம். பிறந்த நாள் கொண்டாட்டங்களில் சாண்ட்விச் என்ற பெயரில் காரெட், பீட்ரூட், அவித்த முட்டை கலவைகளை பூசிய பாண் சீவல்களை அடுக்கி துண்டங்களாக வெட்டி தட்டுகளில் அலங்காரமாக அடுக்கி வைத்திருப்போம். மிகவும் சுவையாகவுமிருக்கும்.

எங்கள் ஊரில் இரண்டு விதமான பாண் வகைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.

1) சாதாரண பாண்    

2) ரோஸ் /ரோஸ்ட் பாண்

அமெரிக்கன் மாவுடன் ஈஸ்ட் சேர்த்து குழைத்து வெதுப்படுப்பில் வேக வைத்து எடுக்கும் உணவு இது.  பெரும்பாலும் எமக்கு இது காலையுணவாகவே பயன்படும். ஆனால் பஞ்ச காலங்களில் மூன்று வேளை உணவாகவும் இதை உட்கொண்டிருக்கிறோம். திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பஞ்சகாலத்தில் இந்த பாணுக்காக மைல் கணக்கில் நின்ற வரிசையில் மணிக்கணக்கில் காவலிருந்து வாங்கியிருக்கும் அனுபவங்கள் பல நமது மக்களிடம் இருக்கின்றன.

அந்நிய ஆட்சியின் போது புகுந்த உணவு இது என்றாலும் இந்த உணவை எமது கறி வகைகளுடனும், இதர துணை உணவுகளுடனும் உண்ணும் உணவாக மாற்றிவிட்டோம்.  பாண் வெதுப்பகங்களை நடத்துவது  சிங்கள மக்களாக ஒரு காலத்தில் யாழில் இருந்திருக்கிறார்கள். எங்கள் அயலில் லீலா பேக்கரி என்பது மிகவும் பிரபலமான சிங்கள வெதுப்பகமாக விளங்கியது. யாழ் கண்டி வீதியில் அந்த வெதுப்பகம் இருந்தது. 1983 இனக்கலவரங்களின் பின் அந்த பேக்கரி மூடப்பட்டுவிட்டது.  இப்போதைய வெதுப்பகங்கள் பற்றிய விபரம் என்னிடம் இல்லை. தெரிந்தவர்கள் சொன்னால் இந்தப் பதிவில் இணைக்க உதவியாக இருக்கும்.
Bread.jpg
roasted-bread.jpg

வேந்தன் அரசு

unread,
Jan 1, 2016, 4:19:46 PM1/1/16
to vallamai, தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, பண்புடன், Thamizhthendral
பாடசாலை என்பதே தமிழில் இல்லாத சொல். நாங்க பள்ளிக்கூடம் என திரைப்படமும் எடுத்தோம்

1 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 8:36 அன்று, Swathi Swamy <mswat...@gmail.com> எழுதியது:

Swathi Swamy

unread,
Jan 1, 2016, 9:42:45 PM1/1/16
to பண்புடன், vallamai, தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz, Thamizhthendral

2016-01-01 16:19 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
பாடசாலை என்பதே தமிழில் இல்லாத சொல். நாங்க பள்ளிக்கூடம் என திரைப்படமும் எடுத்தோம்


பாடம் பயிலும் இடம் பாடசாலை. இது தமிழ் இல்லையா ஐயா?

ம்ம்ம் நானும் அந்த படம் பார்த்தேன். தங்கர்பாச்சன் இயக்கி நடிக்கவும் செய்தார்.

ஐயாவின் அபிமான நடிகை சிநேகா நடித்த படமாச்சே :) :)

vasudevan.dr

unread,
Jan 1, 2016, 9:52:32 PM1/1/16
to தமிழாயம்
தலைவாரிப் பூச்சூடி உன்னை
பாடசாலைக்குப் போ! என்று சொன்னாள் உன் அன்னை! - பாவேந்தர் பாரதிதாசன்


Sent from Samsung Mobile


-------- Original message --------
From: வேந்தன் அரசு
Date:02/01/2016 02:49 (GMT+05:30)
To: vallamai
Cc: தமிழாயம்” , தமிழ் பிரவாகம் , muththamiz , பண்புடன் , Thamizhthendral
Subject: Re: [வல்லமை] Re: {தமிழாயம்} Re: தினம் ஒரு (ஈழத்) தமிழ் சொல்...

பாடசாலை என்பதே தமிழில் இல்லாத சொல். நாங்க பள்ளிக்கூடம் என திரைப்படமும் எடுத்தோம்
1 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 8:36 அன்று, Swathi Swamy <mswat...@gmail.com> எழுதியது:

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Jan 1, 2016, 10:36:11 PM1/1/16
to vallamai, தென்றல், பண்புடன், தமிழாயம்”, தமிழ் பிரவாகம், muththamiz


1 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:43 அன்று, shylaja <shyl...@gmail.com> எழுதியது:


2016-01-02 5:23 GMT+05:30 Swathi Swamy <mswat...@gmail.com>:

2016-01-01 16:19 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
பாடசாலை என்பதே தமிழில் இல்லாத சொல். நாங்க பள்ளிக்கூடம் என திரைப்படமும் எடுத்தோம்<<
 
பாடசாலை  என்னும் சொல் உண்டு. திருவரங்கத்தில் வேதம் பயிலும் இடம் வேத பாட சாலை...பாடசாலை என்னும் பெயர்ப்பலகைகளை பல இடங்களில்  தமிழகத்தில் பார்த்துவருகிறேன்
 
 ஆயுதம்செய்வோம்  காகிதம் செய்வோம்   பாடலில் பள்ளிச்சாலைகள் செய்வோம் என்றார் பாரதி.



என்றால் பாடச்சாலை என்றல்லாவா இருக்கணும்.
ஒருகா;ல் பாடசாலை என்றால் வேதம் சொல்லிக்கொடுக்கும் இடமாக இருக்கலாம். நாங்க ஆரம்பப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளில்தான் பயின்றோம்
 

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
Reply all
Reply to author
Forward
0 new messages