





மதுரை குலசேகர பாண்டியமன்னனின் மகன் மலயத்துவசன்.
மலயத்துவசனும் அவனது மனைவி காஞ்சனமாலையும் செய்த புத்திரகாமேட்டி யாகத்தில் உமாதேவியார் மூன்று தனங்களையுடைய பெண்குழந்தையாகத் தோன்றினாள். அவளுக்குத் "தடாதகை" என்று பெயரிட்டனர். இவள் கன்னியான காலத்தில் இவளது தந்தை இறந்தான். இவளே மதுரையை ஆண்டாள். கன்னி ஆண்டதால் பாண்டியநாடு "கன்னிநாடு" என்ற பெயர் பெற்றது. தடாதகை பரதகண்டம் முழுவதையும் வென்று "பாரத மாதா" ஆனாள்.
இறுதியாகக் திருக்கயிலாயத்தை அடைந்து சிவனுடன் போரிடத் துணிந்தாள். சிவனைக் கண்டதும் தனது மூன்று தனங்களுள் ஒன்று மறைந்தது. இதனால் சிவபெருமானையே திருமணம் செய்து கொண்டாள்.
பாரதம் முழுவதையும் ஆண்ட தடாதகைப் பிராட்டியே உண்மையான "பாரதமாதா" ஆவார். பாரதம் வல்லரசாக நல்லரசாக மாறிட நாம் நம் தடாதகைப் பிராட்டியை வணங்குவோம். ஓம்.