வானவியலில் அனைவருக்கும் முன்னோடிகளான தமிழர்களுக்கு மிகப்பெரும் எண்களின் தேவையும் இருந்தது. ஆகையால் எண்களுக்கும் முன்னோடி நாமே. நம்மிடம் இருந்து அரேபியா சென்றது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட எண்களை பற்றி நாம் சிறிது தெரிந்து கொள்வோமா...
1 - ஒன்று - One
10^1 - 10 - பத்து - Ten
10^2 - 100 - நூறு - Hundred
10^3 - 1,000 - ஆயிரம் - Thousand
10^4 - 10,000 - பத்தாயிரம் - Ten Thousand
10^5 - 1,00,000 - நூறாயிரம் - One Lakh
10^6 - 10,00,000 - பத்து நூறாயிரம் - One Million
10^7 - 1,00,00,000 - கோடி - Ten Million
10^8 - 10,00,00,000 - அற்புதம் - Hundred Million
10^9 - 1,00,00,00,000 - நிகற்புதம் - One Billion
10^10 - 10,00,00,00,000 - கும்பம் - Ten Billion
10^11 - 1,00,00,00,00,000 - கணம் - Hundred Billion
10^12 - 10,00,00,00,00,000 - கற்பம் - One Trillion
10^13 - 1,00,00,00,00,00,000 - நிகற்பம் - Ten Trillion
10^14 - 10,00,00,00,00,00,000 - பதுமம் - Hundred Trillion
10^15 - 1,00,00,00,00,00,00,000 - சங்கம் - One Zillion
10^16 - 10,00,00,00,00,00,00,000 - வெல்லம் - Ten Zillion
10^17 - 1,00,00,00,00,00,00,00,000 - அன்னியம் - Hundred Zillion
10^18 - 10,00,00,00,00,00,00,00,000 - அர்த்தம் - One Quintillion
10^19 - 1,00,00,00,00,00,00,00,00,000 - பரார்த்தம் - Ten Quintillion
10^20 - 10,00,00,00,00,00,00,00,00,000 - பூரியம் - Hundred Quintillion
10^21 - 1,00,00,00,00,00,00,00,00,00,000 - முக்கோடி - One Sextillion
10^22 - 10,00,00,00,00,00,00,00,00,00,000 - மகாயுகம் - Ten Sextillion
இன்னும் மகாதோரை, மகாநிகற்பம், மகாமகரம், மகாவரி, மகாவற்புதம், மகாவுற்பலம், பிரம்மகற்பம், கமலம், பல்லம், பெகுலம், தேவகோடி, விற்கோடி, மகாவேணு, தோழம், பற்பம், கணனை எனும் தமிழ் வார்த்தைகள் உள்ளன. இவையும் மிகப்பெரிய எண்களை குறிப்பிடுவதற்காக உள்ளவையே. ஆனால் எதற்காக என்பது அவ்வளவு சரியாக தெரியவில்லை.
எண்களை அடிப்படையாக கொண்டு இந்த பூவுலகில் எவ்வளவோ சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. ஆனால் நம்மவர்களின் சாதனை தற்சமயம் எதுவும் இல்லை. அநேகர் இருந்தாலும் கணித மேதை ராமானுஜர் ஒருவர் மட்டுமே 20ம் நூற்றாண்டில் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருகிறார். நாம் தற்சமயம் 21ம் நூற்றாண்டில் உள்ளோம். இது சற்று அதிக வருடங்களாக உங்களுக்கு தோன்றவில்லை. நம் குழந்தைகளாவது தமிழ் எண்களை பற்றி ஆராய்ச்சி செய்து மேலும் இச்சமுதாயத்துக்கு பலன் அளிக்கும் வியத்தகு பங்களிப்பினை செய்ய நாம் உத்வேகம் கொடுக்க வேண்டும்.
எல்லோருக்கும் 3/4 முக்கால் என்று தெரியும். ஆனால் எத்தனை பேருக்கு 1/16 அல்லது 3/64 தெரியும்... எண் கணிதத்தில் முழு எண்கள் மற்றும் தசம எண்களை கண்டு பிடித்ததே தமிழர்கள்தாம். வியப்பாக இருக்குமே. மேலே படிக்கவும்.
1 - एक (Ek)
2 - दोन (Don)
3 - तीन (Teen)
4 - चार (Chaar)
5 - पाच (Paach)
6 - सहा (Sahaa)
7 - सात (Saat)
8 - आठ (Aath)
9 - नऊ (Nau)
10 - दहा (Dahaa)
100 - शंभर (Shambhar)
1,000 - हजार (Hazaar)
10,000 - दहा हजार (Dahaa Hazaar)
1,00,000 - लाख (Laakh)
10,00,000 - दहा लाख (Dahaa Laakh/Dasha-Laksha)
1,00,00,000 - कोटी Kotee)
10,00,00,000 - दहा कोटी (Dahaa Kotee/Dasha-Kotee)
1,00,00,00,000 - अब्ज (Abja)
10,00,00,00,000 - खर्व (Kharva)
1,00,00,00,00,000 - निखर्व (Nikharva)
10,00,00,00,00,000 - महापद्म (MahaaPadma)
1,00,00,00,00,00,000 - शंकु (Shanku)
10,00,00,00,00,00,000 - जलधि (Jaladhi)
1,00,00,00,00,00,00,000 - अंत्य (Antya)
10,00,00,00,00,00,00,000 - मध्य (Madhya)
1,00,00,00,00,00,00,00,000 - परार्ध (Paraardha)
|
கணித்தவர்: வேந்தன் சரவணன். பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் சந்தை மேலாளராகப் பணிபுரியும் வேந்தன் சரவணன், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்ட இவர் தமிழில் அச்சில் வெளியாகும் பல இதழ்களில் துணுக்குகள், கதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வருபவர். எண்கணிதத் துறையில் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து முதல் முறையாக தமிழ் முறைப்படி பலன்களைக் கணித்துள்ள இவர் "தமிழ் நியுமராலஜி" என்னும் நூலையும் எழுதியிருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
|
|
எண் கணித பலன்கள் அறியும் முன்...
ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோள்களின் ஆதிக்கமுடையவை. இந்த கோள்களின் செயல்பாட்டிற்கேற்ப அந்த எண்களுக்கு உரியவர்களின் வாழ்க்கையில் பொதுவான குணங்களும், நிகழ்வுகளும் அமைகின்றன என்கிறது எண் கணித சாஸ்திரம். முத்துக்கமலத்தின் பிறந்த நாள் 21 என்பதால் இவரின் பிறந்தநாளின் கூட்டுத்தொகை 3. பிறந்த நாள் வழியிலான எண் - 3 4+6+4+5+6+2+1+4+1+3+1+4 = 41 = 5 ஆங்கிலப் பெயர் வழியிலான எண் - 5 ஆங்கில எழுத்துக்களுக்கான எண்கள் A, I, J, Q, Y - 1 தமிழ் நியுமராலஜி ஆங்கில எண்கணிதமுறையின் தவறுகள் இம்முறையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எவ்வித அடிப்படையும் இன்றி மதிப்பெண்களை வழங்கி உள்ளனர். ஆங்கில எழுத்துக்களுக்கு மேல்நாட்டு அறிஞர்கள் பலரும் பலவிதமான மதிப்பெண்களை வழங்கி உள்ளனர். நாம் பயன்படுத்துகின்ற ஆங்கில எண்கணித முறையான சீரோ எண்கணித முறையிலும் கூட மதிப்பெண்கள் எவ்வித அடிப்படையும் இன்றி எதேச்சையாக வழங்கப்பட்டு உள்ளன. சான்றாக 'b' க்கு மதிப்பு 2 ஆகவும் 'l' க்கு மதிப்பு 3 ஆகவும் கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு கொடுத்ததற்கு எவ்வித அடிப்படை விதிகளும் பின்பற்றப் படவில்லை. சரியான அடிப்படை இல்லாததால் இம்முறையினை போலியான முறை என்று கூறலாம். ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களுக்கு இம்முறையில் ஒரே மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது. சான்றாக, வெற்றியும் தோல்வியும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஆனால் இம்முறையில் இந்த இரண்டு சொற்களுக்கும் ஒரே மதிப்பெண் (26) வருகிறது. இது இம்முறையில் உள்ள குளறுபடியினைத் தெளிவாகக் காட்டுகிறது. ஒரே இடத்தில் பிறக்கின்ற வேறு வேறு ஒலிகளுக்கு வேறு வேறு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன. சான்றாக 'l' உம் 'n' உம் ஒரே இடத்தில் பிறப்பவை. இவற்றுக்கு வேறுவேறு மதிப்பெண்கள் வழங்கி உள்ளனர். இது தவறாகும். ஏனென்றால் ஒரு உண்மையான தாய் தனக்குப் பிறந்த எல்லா குழந்தைகளையும் ஒன்றாகவே மதிப்பாள். அடிப்படை மட்டுமின்றி வழங்கிய முறையிலும் தவறு உள்ளது என்பதற்கு இது சான்றாகும். ஆங்கில எண்கணித முறையில் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் ஒரு ஆட்சிக்கோள் இருக்கும். சான்றாக எண் 1 க்கு சூரியன், 2 க்கு சந்திரன், 6 க்கு சுக்கிரன். ஆனால் கோளுக்கும் எண்ணுக்கும் உள்ள தொடர்பு வரையறுக்கப் படவில்லை. அதாவது எவ்விதமான அடிப்படையும் இன்றி கோள்களுக்கு எண்கள் வழங்கப்பட்டு உள்ளன. கோள்களின் ஆங்கிலப் பெயர்களின் அடிப்படையிலாவது எண்களை வழங்கி இருக்கலாம். சான்றாக சனி கிரகத்தின் ஆங்கிலப் பெயரான 'SATURN' என்பதில் உள்ள எழுத்துக்களின் மதிப்பெண்களைக் கூட்டினால் 21 அதாவது 3 வரும். எனவே சனி கோளுக்கு எண் 3 ஐ வழங்கி இருக்கலாம். இவ்வாறே ஏனைய கோள்களுக்கும் வழங்கி இருக்கலாம். ஆனால் அவ்வாறு வழங்கப் படவில்லை. எவ்வித அடிப்படையும் இன்றி கோள்களுக்கு எண்கள் வழங்கப்படிருப்பது ஆங்கில எண்கணித முறையின் 'கண்மூடித் தனமான' போக்கை காட்டுகிறது. இம்முறையில் பெயரின் முதல் எழுத்தாக வரும் ஆங்கில எழுத்தின் வடிவத்தின் அடிப்படையில் அந்த எழுத்தை தனது பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுடைய குண நலன்கள் இன்னவாறு இருக்கும் என்றும் கூறியுள்ளனர். சான்றாக 'A' என்ற எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களின் குணங்கள் இவ்வாறு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும். ஏனென்றால் ஆங்கிலத்தில் ஒரு ஒலிக்கு இரண்டு வகையான வரி வடிவங்கள் உள்ளன. சான்றாக 'ஏ' என்ற ஒலிக்கு 'A' , 'a' என்று இரண்டு வரிவடிவங்கள் உண்டு. இவற்றில் ஒரு வடிவத்தின் அடிப்படையில் பலன்களைக் கூறினால் தவறாகும். இரண்டு வடிவங்களின் அடிப்படையில் இருவிதமான பலன்களைக் கூறுவது அறிவின்மை ஆகும். எப்படிப் பார்த்தாலும் இரண்டு வரிவடிவங்களைக் கொண்ட ஆங்கில மொழியில் வரிவடிவ அடிப்படையில் ஒருவரது குணநலன்களைக் கூறுவது பொருந்தா ஒன்றாகும். நடைமுறைச் சிக்கல்கள் மேற்கண்ட தவறுகள் மட்டுமின்றி, தமிழர்கள் இம்முறையினை பின்பற்றுவதில் கீழ்க்காணும் நடைமுறைச் சிக்கல்களும் உள்ளன. தமிழ் எழுத்துக்கள் பலவற்றிற்கு சரியான ஆங்கில எழுத்துக்கள் இல்லை. சான்று: த்,ச்,ற்,ங்,ஞ்,ண்,ந்,ழ்,ள் ஆகியவற்றுக்கு சரியான ஒற்றை ஆங்கில எழுத்துக்கள் இல்லை. இந்த சிக்கல் இருப்பதால், தமிழ்ப் பெயர்களை ஆங்கில எழுத்துக்களில் எழுதி மதிப்பெண் வழங்குவதில் தவறு நேர்கிறது. சான்றாக, முத்துக்கமலம் என்ற தமிழ்ப் பெயருக்கு மதிப்பெண் காணலாம். முத்துக்கமலம் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது 'muthukamalam' என்று எழுதுகின்றனர். இது தவறாகும். ஏனென்றால் இந்த ஆங்கிலப் பெயரின் உண்மையான ஒலிப்பு 'முட்ஹுகமலம்' ஆகும். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணருங்கள். ஒலிப்பு தவறாகும் போது ஒலிகளின் மதிப்பும் தவறாகி பெயருக்கான மதிப்பெண் முழுக்க முழுக்க தவறாகி விடுகிறது. இவ்வளவு சிக்கல்கள் நிறைந்த போலியான ஒரு எண்கணித முறையினை நாம் இன்னமும் ஏன் பின்பற்ற வேண்டும்?. வாருங்கள், நமது பண்பாட்டிற்கு ஏற்ற தமிழ் எண்கணித முறையினைப் பற்றி காணலாம். தமிழ் எண்கணித முறை இந்த முறைப்படி, தமிழ் ஒலிகளுக்கு கீழ்க்காணும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன. அ, ஆ, இ, ஈ, உ, ஊ - 3 (* இரண்டு எழுத்துக்களால் எழுதப்படுவதால் 'ஔ' என்னும் எழுத்துக்கு மதிப்பெண் இல்லை. இதனை 'அவ்' என்று எழுதி மதிப்பிடலாம்.) முத்துக்கமலம் = ம்+உ+த்+த்+உ+க்+க்+அ+ம்+அ+ல்+அ+ம் மேற்காணும் மதிப்பெண்களின் அடிப்படையில் வாரக்கோள்களின் தமிழ்ப் பெயர்களுக்கு கீழ்க்கண்டவாறு மதிப்பெண்கள் அமையும். ஞாயிறு - ஞ்+ஆ+ய்+இ+ற்+உ - 7+3+7+3+2+3 = 25 = 7 ராகுவும் கேதுவும் நிழல் கோள்கள் என்பதால் அவற்றுக்கு வேறுமுறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இனி தமிழ் முறைப்படி, எண் 1 க்கு ஆட்சிக்கோள் 'புதன்' என்றும் அடிப்படைகள் 1) தமிழ் ஒலிகளின் பிறப்பு முறைப்படி அவற்றுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஆதாரங்கள் தமிழ் எண்கணித முறையானது கீழ்க்காண்பவற்றை ஆதாரங்களாகக் கொண்டுள்ளது. 1) விண்வெளியின் பால் வீதி மண்டலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கோள்களின் இருப்பு நிலையினை இது முதன்மை ஆதாரமாகக் கொண்டுள்ளது. |