சங்க இலக்கியம் போற்றும் வேதங்கள் !!

1,689 views
Skip to first unread message

இரவா

unread,
Jul 25, 2008, 12:43:50 PM7/25/08
to தமிழாயம்


"தமிழகத்தில் முதன்முதல் உழவுத் தொழிலைக் காணும் நுண்ணறிவும், அதனாற் கொலைபுலை தவிர்த்த அறவொழுக்கமும், அதனாற் பெற்ற நாகரீகமும் உடைய தமிழ் மக்கள் எல்லாரினுஞ் சிறந்து விளங்கித் தம்மினின்று அந்தணர், அரசர் எனும் உயர்ந்த வகுப்பினர் இருவரையும் அமைத்து வைத்து, அறவொழுக்கத்தின் வழுவிய ஏனைத் தமிழ் மக்களெல்லாந் தமக்குந் தமதுழவுக்கும் உதவியாம்படி பதிணென் டொழில்களைச் செய்யுமாறு அவர்களை அவற்றின் கண் நிலைபெறுத்தித் தமிழ் நாகரிகத்தைப் பண்டு தொட்டு வளர்த்துவரலாயினர்" என்பார்.
 
அப்பதிணென் வகுப்பினர் கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பர், பாகர், பறையர் ஆகியன.

 

"துடியன். பாணன். பறையன். கடம்பன் இந்நான்கல்லது குடியுமிலவே" என்கிறது புறநானூறு. ஆனால், வேளாளர்களோ பிற்காலத்தில் கரணம் அமைந்த பிறகுதான் குடியானார்கள் என்பதை தொல்காப்பியம் தெளிவுற எடுத்துரைக்கின்றது.
 
சங்க காலத்தில் பறையர்களில் ஒரு பிரிவான அறிவர்கள் அந்தணப் பிரிவில் இருந்துள்ளனர். ("பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே" - தொல்) குயவர் எனப்படும் மட்பாண்டக் கைவினைஞர்களை சங்க இலக்கியம் 'வேட்கோவர்' என்று குறிப்பிடுகிறது.
 
வேட்கோவர் என்போர் வேள்வி செய்யக்கூடிய தகுதியுடையோர். சங்க இலக்கியங்களின்படி கண்மாளர்கள் சூத்திரர் அல்ல.
 
விஸ்வகர்மா என தங்களைக் கூறிக்கொள்ளுகிற இவர்கள், தாங்களே உண்மையான அந்தணர் என்பதை நிரூபிப்பதற்காக மிகவும் பிற்காலத்திலும் கூட நீதிமன்றம் சென்று வழக்காடிய வரலாறு உண்டு.
 
அதுதான் புகழ்பெற்ற 'சித்தூர் ஜில்லா அதாலத்' எனப்படுகிறது. மேலும் தாங்களே சோழ அரசர்களின் குலகுருக்கள் என கம்மாளர்கள் தொடர்ந்து கோரிவந்துள்ளனர்.
 

நாவிதர் மற்றும் மருத்துவர் எனப்படுகின்ற சாதியினர், அம்பட்டர் என்ற பெயரில் அந்தணப் பிரிவில் இருந்துள்ளனர்.

 

இன்றைக்கும் வைணவக் கோயில்களின் பூசாரிகள் 'பட்டர்' என்றே அழைக்கப் படுகின்றனர்.

 

அமாத்தியரான அம்பட்டர்கள் குறித்து தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், "அமாத்திய நிலையும் சேனாபதி நிலையும் பெற்ற அந்தணாளர்க்கு அரசர் தன்மையும் வரைவில் வென்றவாறு" என்கிறார்.

 
வேளாளர்கள் காராளர்களாகி, களப்பிரர் ஆட்சிக்குப் பின்னர் நிலவுடைமையாளர்களாக ஆகிவிட்ட பின்னரும், வேளாளர் குலத்தில் உதித்து சோழ அரசனின் அமைச்சராக இருந்த சேக்கிழார், "நீடு சூத்திர நற் குலஞ்செய் தவத்தினால்" (இளையான்குடி நாயனார் புராணம்-1) எனவும் "தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல" (வாயிலார் நாயனார் புராணம்-6) எனவும் சூத்திரராகவே குறிப்பிட்டுள்ளார்.
 
வேளாளர்கள் எழுச்சி பெற்றுவிட்ட கி.பி.7 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தொகுக்கப்பட்ட நிகண்டுகள் வேளாளரை, 'சதுர்த்தர்' என்று குறிப்பிடுகின்றன. சேந்தன் திவாகரம், வேளாளர் அறு தொழிலில், 'இருபிறப்பாளர்க் கேவல் செயல்' என்கிறது.
 
வெள்ளாளர்கள் தாங்கள் சூத்திரர் என்பதை மறைப்பதற்காக, அக்னி குல க்ஷத்ரியர்களான வன்னியர்களையும், சங்க காலத்தில் அந்தணருக்குச் சமமாக இருந்த பறையர்களையும், கம்மாளர்களையும், வேட்கோவர்களான குயவர்களையும், செல்வச் செழிப்பில் இருந்த வைசியர்களான செட்டியார்களையும் இன்னும் சில சாதியினரையும் சூத்திரர் ஆக்கிவிட்டனர்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
 

ஊர்ப் பார்ப்பான்

அகநானூற்றில் "வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த வளை" என்ற 24 ஆம் செய்யுளுடக்கு, அந்நூல் பழைய அரும்பதவுரைக்கார்ர்வேளாப் பார்ப்பான்யாகம் பண்ணாத ஊர்ப் பார்ப்பான்; இவர்களுக்குச் சங்கறுக்கையுந் தொழில்" என்று எழுதியுள்ளார்.

இதனால், வைதிகச் சடங்கு நடத்தாத பிராமணரை "ஊர்ப்பார்ப்பான்" என்பது அக்கால வழக்கென்பது தெரியலாம். ஊர்ப்பார்ப்பான் என்பதனால், இவர்கள் மேற்கொண்ட தொழில், நகரவதிகார முதலிய இலௌகிக விருத்திகள் என்று சொல்லலாம். முதலிராசேந்திரன் காலத்தில் வரையப்பட்ட (தீர்க்காலிதிரு) வல்லத்துச் சாஸனமொன்றுஊரார் சொல்ல எழுதினேன்; இவ்வூர் "ஊர்க்காணத்தான்"  ஊர்ப்பார்ப்பான் பரதயன் கிழவன் ஈசுவரசன்மன்"(S,I.I.IV-90)எனக் கூறுவது மேலே நான் கூறிய கருத்தை நன்கு விளக்குதல் காணலாம்.

அகநானூற்றுக் கூற்றால், "சங்கறுப்ப தெங்கள் குலம்" என்று கூறிய நாக்கீரர், ஊர்ப்பார்ப்பார் குலம் இத்தகையது போலும். "சிறந்த கொள்கையொடு அணிவளை போழுநர்" என்று சாத்தனார் மணிமேகலையில் கூறுவது இவ்வூர்ப் பார்ப்பாரது குலவொழுக்கத்தை நினைத்தென்று கருத இடமுண்மையுங் காண்க.

ஐயங்கார்

வைஷ்ணவப் பிராமணர்களுக்கு இப்பட்டப் பெயர் வழங்குகிறது. இது 500 ஆண்டுகளுக்கு முன்னிருந்த வைஷ்ணவர்க்குள் வழங்குடைய தென்பதற்கு நூல்களிலேனும் சாஸனங்களினேனும் ஆதாரமில்லை. ஐயங்கார் வழக்கு வைஷ்ணவர்க்குரியதாக நான் பூர்வமாகக் காணும் சாஸனம் சகாப்தம் 1390-இல் (1468 பி.பி) திருப்பதி மலையில் உள்ளதாம்.
(இலக்கிய சாஸன வழக்காறுகள், இராகவையங்கார். பக்கம். 272.)


--
   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                                          
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

இரவா

unread,
Jul 26, 2008, 11:11:06 PM7/26/08
to தமிழாயம்





பூணூல் அணியும் பழக்கம் ஆரியர்களுடையது அல்ல. ஆப்பிரிக்காவின் எகிப்பது நாட்டிற்கு ஆரியர்கள் செல்வதற்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. அதில் உள்ள உருவங்கள் சிலவற்றில் பூணூல் போன்று மார்புக்குக் குறுக்கே வரையப்பட்டுள்ளது. அது பூசாரிகளின் ஓவியங்களாக இருக்கலாம் என அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், பூணூல் அணிதல் என்பது சூரிய வழிபாடு தொடர்புடைய ஒரு மதச் சின்னம். இஸ்லாமியர்கள் தலையில் குல்லாய் அணிவது போல இது ஒரு மதச் சின்னம் அவ்வளவே. இது குறித்து விரிவான விளக்கங்கள் உண்டு. மேலும் தமிழகத்தில் (ஆரியர்கள்) பார்ப்பனர்கள் மட்டும் பூணூல் அணிபவர்கள் அல்ல. தொல்காப்பியம் சொல்லுகின்ற முதல் மூன்று வர்ணத்தவருமே பூணூல் அணிபவர்கள்தான். இன்றைக்குத் தாழ்த்தப்பட்டவர்களாகச் சொல்லப்படும் பறையர் சமூகத்தவர், தாங்கள் பூணூல் அணிவது குறித்து இன்றுவரையிலும் பாடிவரும் பாடல்களை வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள்.

 

"முந்திப் பிறந்தவன் நான்
முதல் பூணூல் தரித்தவன் நான்
சங்குப் பறையன் நான்
சாதியில் மூத்தவன் நான்"
- என்கிறது அப்பாடல்.

 

மேலும், மரபாக இருந்துவரும் ஞானவெட்டியார் பாடல்கள்,

 

"... ... பூணூலந்
தரணிமுத லென்பறையில் தழைத்த தாண்டே"

"பூணூல் தரித்துக் கொள்ளுவோம் - சிவ சிவ
பொறியுமைம் புலனையுந் தொழுது கொள்ளுவோம்
வேண விருதுகளும் விகிதமாய்

வெண்குடை, வெண்சாமரமும் பிடித்துக் கொள்வோம்"

"பூணூல் பிறந்ததெங்கே -சிவசிவ"

 

இவற்றையும், 13-14 ஆம் நூற்றாண்டு தொடங்கி கிடைத்துள்ள வள்ளுவர் சிலைகள் பலவற்றிலும் பூணூல் வடிக்கப்பட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டே வள்ளுவரின் படங்கள் பூணுலுடன் வரையப்பட்டன. பறையர் சமூகத்தினர் மட்டுமின்றி, விஸ்வகர்மாக்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கின்ற கம்மாளர்களும் பூணூல் அணிபவர்கள்தான்.
 
விஸ்வபிராமணர்கள் எனப்படும் கம்மாளர்கள் தாங்களே உண்மையான பார்ப்பனர்கள் என்று நீதிமன்றம் சென்று வாதாடிய வரலாறுதான் 'சித்தூர் ஜில்லா அதாலத்' என்று புகழ் பெற்றது. அந்தக் கம்மாளர்கள் கிருஷ்ண யஜூர் வேதத்தின் தைத்ரிய சம்ஹிதையைப் பின்பற்றி வேத கர்மாக்களுடன், உபநயனம் எனப்படும் பூணூல் அணியும் சடங்கைச் செய்து கொள்பவர்கள் என்பதற்கு ஆதாரமாக ஆந்திர மாநிலத்தில் பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
 
நாட்டுக் கோட்டை நகரத்தார் என்று சொல்லப்படும் செட்டியார்கள் பூணூல் அணிபவர்கள். வன்னியர்களில் ஒரு பிரிவினர் முத்திரை போட்டுக் கொள்வது என்கிற பெயரில் பூணூல் அணிகின்ற சடங்கைச் செய்து கொள்கின்றனர்.

 

இரவா

unread,
Jul 26, 2008, 11:13:14 PM7/26/08
to minT...@googlegroups.com, தமிழாயம்

நான்கு வேதங்கள்

ஆதியில் வேதம் ஒன்றாக இருந்தது. அதற்கு இருக்கு என்று பெயர். இருக்கு வேதத்தில் 1028 பதிகஙகள் உண்டு. பதிகங்கள் என்பன பத்துப் பாடல்கள் கொண்டவை. வேதத்தில் உள்ள பதிகத்தில் பத்துக்குக் கூடியும் குறைந்தும் பாடல்கள் காணப்படுகின்றன. விளங்கும் இலகு நோக்கிப் பதிகம் என்னும் சொல் இங்குப் பயன்படுத்தப்படுகின்றது. இவைகளில் பதினொரு பதிகங்கள் வாலகில்லியராற் அவைகளை நீக்கிப் பார்த்தால் இருக்கு வேதத்திலுள்ளவை 1017 பதிகங்களே. 1017 பதிகங்களிலும் 10,600 பாடல்கள் உள்ளன. ஒரு பக்கத்தில் 33 வரிகள் அச்சிட்டால், இருக்கு வேத பாடல்கள் முழுமையும் 600 பக்கங்களில் அடங்கும். இது கிரேக்க கவியாகிய ஹோமாரின் இல்லியாட் என்னும் நூல் அளவு ஆகும்.

1. It is error to suppose that the pure Aryan race exists any where. The Aryans from very early time were extensively eclectic, and this eclecticism was the secret of their cultureal success. They freely mix with other races. This happened in Europe as well as in India-ibid.

இருக்குவேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மண்டலமல்லாமல் அட்டகம் என்னும் இன்னொரு பிரிப்பும் உண்டு. முதல் மண்டலத்திலுள்ள பாடல்கள் பல இருடிகளாற் பாடப்பட்டவை. இரண்டு முதல் எட்டுவரையில் உள்ள பதிகங்கள் ஒவ்வோர் இருடி குடும்பத்தினராற் பாடப்பட்டவை. ஒன்பதாம் மண்டலப் பாடல்கள், பல இருடிகளாற் பாடப்பட்டவை அப்பாடல்கள் முழுமையும் சோம இரசத்தைக் கடவுளாகத் துதிக்கின்றன. ஒன்பதாம் மண்டலத்துக்கும் பத்தாம் பதிகங்கள் காணப்படுகின்றன. பத்தாம் மண்டலப் பாடல்கள் பத்து இருடிகளால் செய்யப்பட்டவை. இப்பாடல்களின் நடை, பொருள்களைக் கொண்டு இவை பிற் காலத்தன என வேத ஆராய்ச்சியாளர் கூறியிருக்கின்றனர்.

இருக்குவேதத்தினின்றும் பல பாடல்களை எடுத்தும், அவைகளோடு பிற பாடல்களைச் சேர்த்தும் பின்னும் இரு வேதங்கள் செய்யப்பட்டன. அவை யசுர், சாமம் எனப்படும். யாகக் கிரியைகளிற் படிக்கும் பாடல்கள் அடங்கிய தொகுதி யசுர் எனப்பட்டது. யசுர் வேதத்திற் காணப்படும் பாடல்களில் பாதிவரையில் இருக்குவேதத்தில் உள்ளன.

சாமவேதத்தில் 1550 பதிகங்கள் வரையில் உள்ளன. இவைகளுட் பெரும்பாலான இருக்குவேதத்தின் ஒன்பதாவது பத்தாவது மண்டலங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. சாமவேதம் யாகங்களில் இசையோடு பாடப்படும் பாடல்கள் அடங்கிய பகுதி.

பாடல்களுக்கு நாலு அடிகள் உண்டு@ சில சமயங்களில் மூன்று அல்லது ஐந்து அடிகளும் காணப்படுகின்றன. ஒவ்வொரு அடிக்கும் எட்டு, பதினொன்று அல்லது பன்னிரண்டு அசைகள் உண்டு. அடிகள் பெரும்பாலும் ஒரே வகையாகவுள்ளன@ சில சமயங்களில் நீளமாகவும் காணப்படுகின்றன. இருக்குவேத பாடல்கள் செய்யப்பட்ட மொழி, மிகப் பழமையுடையது. அம்மொழியின் வளர்ச்சியாகிய பிற்கால இலக்கிய மொழிக்குப் பாணினி முனிவர் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் இலக்கணஞ் செய்தார்.

அதர்வண வேதம் நாலாவதாக உள்ளது. இதில் பில்லி சூனியம் போன்ற மந்திர வித்தைகள் கூறப்படுகின்றன. இதை வேதங்களுட் சேர்க்கலாமா, விடலாமா என்னும் கருத்து நீண்டகாலம் இருந்து வந்தது. ஆகவே சில இடங்களில் நான்கு வேதங்கள் என்றும் சில இடங்களில் மூன்று வேதங்கள் என்றும் கூறப்பட்டிருத்தலைக் காணலாம். மனுஸ் மிருதி மூன்று வேதங்களைப் பற்றிக் கூறுகின்றது.

வேதங்களிற் கூறப்படும் கடவுளர்


இருக்கு வேதத்திற் சொல்லப்படும் கடவுளர், இயற்கையின் உருவகங்களாவர். இறந்தவர் வணக்கமே இயற்கை வணக்கமாக மாறியுள்ளதென்பது பல்லோர் கருத்து.1 இராமாயணத்தின் சிக்கல்கள் (Riddles in Ramayana) என்னும் நூலில், ஆரியரின் தெய்வங்கள் அவர்களின் இறந்த முன்னோர்கள் என வைத்தியா என்னும் அறிஞர் கூறியுள்ளார். வேத பாடல்கள், சோமச்சாறு, நெய், மாமிசம் முதலியவைகளை நெருப்பில் பலியாக இட்டு யாகஞ் செய்யும் போது படித்தற்குரியன.

வேதங்களிற் கூறப்படும் தேவர்கள், தயஸ், வருணன், மித்திரன், ஆதித்தர், சூரியன், சாவித்தர், பூசன், விஷ்ணு, அஸ்வினிகள், உசாக்கள், இரதி, இந்திரன், உருத்திரன், மருத்துவர், வாயு, அல்லது, வாதா, பிருதுவி, அக்கினி, பிரகஸ்பதி, சோமன், சிந்து ஆறு, விபாஸ் ஆறு, சுதுட்ரி (Sutlej) ஆறு, சரஸ்வதி (ஆறு) முதலியோராவர். தேவுக்களும் முன்பு இறப்பவர்களாயிருந்தார்கள். சோம இரசத்தைப் பருகி அவர்கள் இறப்பை ஒழித்தார்கள். தெய்வங்கள், வடிவில் மனிதனைப் போன்றனவே. தீக்கடவுளின் நாக்கும் உறுப்புக்களும் நெருப்பின் சுவாலைகள். சிலர் போர்க்கடவுளர். இந்திரன், இவ்வகையினன். கடவுளர், குதிரை அல்லது வேறு விலங்குகள் பூட்டிய தேரில் வானத்தில் சவாரி செய்கிறார்கள். அவர்களுடைய உணவு, பால், நெய், இறைச்சி, தானியம் முதலியன. அவர்களுக்கு அவ்வுணவு பலிகள் மூலம் கிடைக்கின்றன. அக்கினி அவர்களுக்கு அவைகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறான். சில சமயங்களில் அவர்கள் தமது தேர்களில் வந்து பலிகளை ஏற்கின்றனர். அவர்களின் இருப்பிடம் வானத்திலுள்ள சுவர்க்கம். அவர்களுக்கு ஆற்றல் மிக உண்டு. அவர்களை மகிழ்விப்பதால் அவர்கள் மக்களுக்கு நேரும் இடையூறுகளைப் போக்குகின்றனர். உலகிலுள்ள எல்லா உயிர்களின் மீதும் அவர்கள் அதிகாரம் செலுத்துகின்றனர்.
 
--

இரவா

unread,
Jul 26, 2008, 11:14:20 PM7/26/08
to minT...@googlegroups.com, தமிழாயம்


வேதம் என்னும் பெயர்

ஆரிய மக்கள் தம்முன்னோர் கடவுளரைத் துதித்துப் பாடிய பாடல்களுக்கு வேதம் எனப் பெயரிட்டார்கள். வேதபாடல்கள் அறிவு வளர்ச்சிக்காகப் பாடப்பட்டனவல்ல. கடவுளின் மறைவான பெயர்களைக் கூறும் மந்திரங்களாகச் செய்யப்பட்டன. கடவுளின் மறைவான பெயர்களைக் கூறும் மந்திரங்களாகச் செய்யப்பட்டன. மந்திரம் என்பதற்கு மறைத்துச் சொல்லப்படுவது என்று பொருள். வேதம் என்பதற்கு அடி, 'வித்' எனப்படுகின்றது அது பொருந்துமாறில்லை. ஆரிய மக்கள் வருமுன்னரே இந்திய நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு மறையிருந்தது. மறை இருவகை@ கடவுளின் இரகசியமான பெயரைச் சொல்வதாகிய மந்திரம் ஒன்று@ மற்றது குரு மாணாக்கர் முறையில் உபதேசிக்கப்படும் உண்மை ஞானங்கள். தமிழர் தமது தத்தவ ஞானங்களையும் சமயக் கருத்துக்களையும் நூலாகச் செய்யும் வழக்கில்லை. இதனை, "அந்நிலை மருங்கின் அறமுதலாகிய மும்முதற்பொருட்கும்

1. The theory is that religion arose from the worship of deceased ancestors. This is usually held to be more convincing than the theory of nature worship, in that it gives a reason why man as a fact came to believe in divine or super human beings-Vedic Hymns - P.15-Edward T.Thomas.

உரிய என்ப" (தொல்.செய்.106) என்னும் தொல்காப்பியச் சூத்திரம் விளக்குகின்றது. இதனால் தமிழரின் சமய சம்பந்தமான கருத்துக்கள் மறை, வேதம் எனப்பட்டன. வேதம் என்பதற்கும் மறை என்னும் பொருளேயாகும். வேதம் என்னும் சொல், மற்றைய ஆரிய மக்களின் மொழிகளிற் காணப்படாமையால், அது தமிழ்ச்சொல் என்பது நன்கு துணிப்படும். வேதம் என்னும் சொல்லுக்கு உண்மையான அடியைக் காணமாட்டாத ஆரிய மக்கள், அதற்கு அடி, 'வித்' எனக் கூறலாயினர். தமிழிலிருந்து வேதங்களிற் சென்று ஏறியுள்ள பல தமிழ்சொற்கள் உள்ளன என்பதைக் கால்டுவெல், கிற்றெல் முதலிய ஆராய்ச்சி வல்லார் காட்டியுள்ளார். "தமிழ்ச் சொற் பிறப்பு ஒப்பியல் அகராதி" என, நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் வெளியிட்டு வரும் நூலில், தமிழிலிருந்து வடமொழியில் சென்று வழங்கும் பல தமிழ்ச் சொற்களுக்குத் தப்பாக வடமொழி மூலங்கள் கூறப்பட்டிருத்தல் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இன்று தமிழில் வழக்கொழிந்த அரிய தமிழ்ச்சொற்கள் பலவற்றை மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு முதலிய மொழிகள் காப்பாற்றி வைத்திருக்கின்றன. அவ்வாறே ஆரிய மொழியும் வழக்கிறந்த பல தமிழ்ச் சொற்களைக் குறிக்கும் சொற்கள், அப்பொருளின் வெவ்வேறு இயல்புகளைக் குறிக்கும் சொல் மூலங்கள் வாயிலாகப் பிறந்து வழங்கின. அவற்றுட் சில தமிழில் வழக்கிறந்துபோக, மற்றவை சில வடமொழியிற் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பாய் என்னும் அடியாகப் பரி என்னும் சொல்லும், அசை என்னும் அடியாக அசுவம் என்னும் சொல்லும் பிறந்தன. அசுவம் என்னும் சொல் தமிழில் வழக்கிறந்தது. அது இன்று வடமொழியிற் காணப்படுதலின், அது வடமொழிச் சொல் என்று கருதப்படுகின்றது. இவ்வாறே வேதம் என்பது மறை என்னும் பொருளில் வழங்கிய தமிழ்ச் சொல் என்பது திண்ணம். இப் பெயரையே ஆரியர் தமது பாடல்களுக்கு இட்டு வழங்கினர். வேதங்களில் மறைத்தற்குரியது யாதும் இன்மையால், அப்பெயர் இடுகுறிப்பெயராக அவைகளுக்கு இடப்படலாயிற்று. தமிழர் தமது சமயத் தொடர்பாக வழங்கிய பெயர்களை, ஆரிய மக்களும் ஆண்டமையின் பிற்காலங்களில் பெரும் மயக்கம் உண்டாவதாயிற்று.

இரவா

unread,
Jul 26, 2008, 11:16:31 PM7/26/08
to minT...@googlegroups.com, தமிழாயம்


ஆரியரின் சமயம். யாகம் செய்வது ஒன்றனையே குறிக்கோளாகக் கொண்டது. ஊன், தானியம், நெய், சோமச்சாறு முதலிய உணவுகளை யாகங்கள் வாயிலாகத் தேவர்களுக்குக் கொடுப்பதால், இம்மையில் தாம் விரும்பியவற்றைப் பெறுவார்கள் என்றும். மறுமையில் செம்மையுற்றிருப்பார்கள் என்றும் அவர்கள் நம்பினார்கள். இந் நம்பிக்கையினால் அரசரும் செல்வரும் யாகங்களைச் செய்தனர். பிராமணர் புரோகிதராக விருந்து யாகங்களை நடத்தி வைத்தனர். அதற்காக அவர்கள் மிக்க பொருளைத் தக்கணையாகப் பெற்றனர். தமக்கு மெய்வருத்தமின்றி எத்தொழிலினால் மதிப்பும் செல்வமும் கிடைக்கின்றனவோ, அத் தொழிலை நிலைப்படுத்தும் பொருட்டு அவர்கள் தாம் பயின்றுள்ள மந்திரங்கள் கடவுளாற் சொல்லப்பட்டன வென்றும், அம்மந்திரங்கள் செய்யப்பட்டுள்ள மொழி கடவுள் மொழி என்றும், அம்மொழியில் சொல்லப்படாதவைகளைக் கடவுளர் அறிந்து கொள்ளமாட்டார் என்றும் கூறி அரசர், பெருமக்கள், பொது மக்கள் எல்லோரையும் நம்பும் படி செய்தனர். முற்கால மக்கள் பொய்களிலிருந்து மெய்யைப் பிரித்து அறியும் ஆற்றல் இல்லாமல் இருந்தார்கள். அது பற்றியே ஒருபோதும் நிகழமுடியாத புராணக் கதைகளை மெய்யென நம்பி வந்தார்கள். இராமர் பதினோராயிரம் ஆண்டு அரசு புரிந்தார். தசரதன் அறுபதினாயிரம் ஆண்டு உயிர் வாழ்ந்தார் என்னும் கதைகளை மக்கள் நம்பி வந்திருக்கிறார்கள். மெகஸ்தீனஸ், ஹெரதோதஸ் (Heradotus) போன்ற ஆசிரியர்களும் நம்பத் தகாதவற்றை உண்மையென நம்பினார்கள். இந்தியாவில் சிலருக்குக் காது நீளமாக இருக்கிறது. அவர்கள் காதைப் பாயாக விரித்துக்கொண்டு அதன்மீது படுத்து நித்திரை கொள்ளகிறார்கள். சிலர் மூக்கினால் உணவ கொள்ளகிறார்கள் என்பனபோன்ற கதைகளை மெகஸ்தீனஸ் எழுதியுள்ளார். வரலாற்றாசிரியர்கள், முற்கால மக்களின் மனப்பான்மை இவ்வாறிருந்ததென்றும், ஆகவே பழங்கதைகளில் உள்ள உண்மைகளைப் பொய்களிலிருந்து பிரித்தறிதல் வேண்டுமென்றும், அது மிக வில்லங்கமான செயலென்றும் கூறியுள்ளார்கள்.1

1. Historians especially in writing of early ages, have copied down the traditions of real events so mixed up with myths that it is one of the hardest tasks of the student to judge what to believe and what to reject - Anthropology. E.B.Tylor.


இரவா

unread,
Jul 26, 2008, 11:17:44 PM7/26/08
to minT...@googlegroups.com, தமிழாயம்

தேவார திருவாசகங்கள் சொல்வதால்
வேதங்கள் கடவுள் வாக்காகுமா?

தேவார திரவாசகம். திருவாய்மொழி முதலியவைகளிலும் பிற தமிழ் நூல்களிலும், வேதங்கள் கடவுளாலருளப்பட்டன என்று கூறப்படுதலின், அவை கடவுளாற் சொல்லப்பட்டனவாகு மெனப் பலர் வழக்கிடகின்றனர்.

சமய குரவர்களும் பிறரும் சரித்திர ஆராய்ச்சியில் சென்றவர்களல்லர். வேள்விரியும் பிராமணர் தமக்கு மதிப்பை யுண்டாக்கி, அதனால் மிக்க பொருளைத் தானமாகப் பெற நினைந்து சூழ்ந்த கட்டிய கட்டுக் கதைகள் மக்களால் நம்பப்படலாயின. இவை மாத்திரமல்ல@ புராணங்களிற் காணப்படுவன போன்ற பல கற்பனைக் கதைகளும் மக்களால் மெய்போல நம்பப்பட்டு வந்தன. கடவுளின் பெருமையைப் பாடியவர்கள், கடவுளின் பெருமையை விளக்கும் பொருட்டு வழங்கிய கற்பனைக் கதைகள் பலவற்றையுமே எடுத்து ஆண்டுள்ளார்கள். இதனை ஒப்பவே, அவர்கள் வேதங்கள் கடவுள் வாக்கென ஓரோரிடத்துக் கூறியமை வியப்பன்று. சிவன் தக்கணா மூர்த்தி வடிவில் இரந்து சனகாதி நால்வர்க்கு நான்மறையின் உட்பொருள் ஓதினார் எனத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. வடமொழி வேதங்கள், பற்பல முனிவர்களால் பற்பல காலங்களில் பல சிறு தெய்வங்களைத் துதித்துப் பாடிய பாடல்களாகக் காணப்படுகின்றன. வேதங்கள் கடவுளாற் செய்யப்பட்டன என்று நாட்டமுயன்று வருவோர், அவ்வேத கடவுளாற் செய்யப்பட்டன என்று நாட்டமுயன்று வருவோர், அவ்வேத பாடல்களைக் கொண்டே அதனை நாட்டுதல் வேண்டும். ஒருவன் முயலுக்கு மூன்று கால்கள் எனக் கூறினால், அவனுக்கு ஒரு முயலை நேரில் காண்பித்து அதற்கு நான் கால்கள் என மெய்ப்பிப்பதே தகுந்த முறை. சாத்தன் முயலுக்கு மூன்றுகால் என்றான்@ ஆதலால் முயல்களுக்கெல்லாம் கால்கள் மூன்றே எனச் சாதிப்பாரு முண்டோ?

ஒவ்வொரு சமயத்தவரும், தத்தம் சமய நூல்கள் கடவுள் சம்பந்தமாக வெளிவந்தன வெனவே கூறுகின்றனர். சமய நூல்கள் மாத்திரமல்ல@ மொழிகளும் அம்மொழிகளுக்குரிய எழுத்தக்களும் கடவுளால் அருளிச் செய்யப்பட்டன என்று நம்பப்பட்டு வந்தன.

தமிழ்நாட்டில் இருக்கு முதலிய வேதங்களல்லாத பிற வேதங்கள், செவிவழக்கில் இருந்தனவென்பது பின்வருபவைகளால் அறியக் கிடக்கின்றது.

"நான்கு கூறாய் மறைந்த பொருளுடைமையான் நான்மறை யென்றார்@ அவை தைத்திரியமும், பௌடிகமும், தலவராகமும், சாம வேதமுமாம். இனி இருக்கும், எசுவும், சாமமும் அதர்வணமும் என்பாரு முளர். அது பொருந்தாது"

-நச்சினார்க்கினியர்


"இருக்கு முதல் வேதம் பௌடிகம் எனப்படும்"
"இரண்டாம் வேதம் தைத்திரிய மென்ப"
"மூன்றாவது சாமம் கீதநடை சாரும்"
"நான்காம் வேதம் அதர்வண மென்ப"

-திவாகரம்

"சாந்தோகா பௌழியா தைத்தியா சாமவேதியனே" (நாலாயிரப் பிரபந்தம் பெரிய திருமொழி). மொகஞ்சதரோப் புதைபொருள் ஆராய்ச்சியினால் ஆரியருக்கு முற்பட்ட தமிழர்களுக்கிடையில் ஆலமரத்தைச் சிவன் கடவுளின் புனித மரமாகக்கொள்ளும் சமயக் கொள்கையுள்ளதெனக் தெரிகின்றது. ஆரியருக்கு முற்பட்ட காலந்தொட்டு வரும் சில சமயக் கருத்துக்களையே தமிழர் இறைவன் கல்லாலின் கீழ் இருந்து அருளிச் செய்த நான்மறை என நம்பிவந்தார்கள் ஆகலாம். தமிழர் முறையைப் பின்பற்றியே ஆரியர் தமது வேதங்களையும் நான்காக்கினர் எனக் கூறுதல் பிழையாகாது. ஆரியருக்கு வேதங்களை நான்காக வகுத்துக் கொடுத்து அவைகளுக்குப் பெயரிட்டவர் பரதர் (தமிழ்) வகுப்பினராகிய வியாசரே யாவர். மனு, திராவிட அரசன் எனப் புராணங்கள் கூறுகின்றன. கி.மு. முதல் நூற்றாண்டு வரையில், பிராமணர் ஒரு சட்ட நூலைச் யெ;து அதற்கு மனு தரும சாத்திரம் எனப் பெயரிட்டனர். இவ்வாறு பொய்ப் பெயர்கள் புனைந்து நூல்களைக் கட்டினமையினாலேயே, தமிழ்நாட்டில் பெரு மயக்கம் நேர்ந்தது.


இரவா

unread,
Jul 26, 2008, 11:19:28 PM7/26/08
to minT...@googlegroups.com, தமிழாயம்

தமிழருக்கு ஆரிய வேதங்கள் முதல் நூல்களாகுமா?

இன்று, கிறிந்தவர்கள், மகமதியர் அல்லாத சிறுவர்களுக்குப் பள்ளிக் கூடங்களில் சைவ, வைணவர்களுக்குச் சமய முதல்நூல்கள் நான்கு வேதங்கள் என்றும், அவை இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களென்றும், ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கின்றனர். இருசாரரும் அவைகளைப் பெயரளவிலறிவார்களேயன்றி நூலளவில் அறியார்கள். ஆறுமுக நாவலரும் தமது சைவ வினாவிடையில், சைவ சமயத்தவர்களுக்கு முதல்நூல்கள் இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்கள் என்று கூறியுள்ளார்.

"வேதம் நித்தியனாகிய பரமசிவனாற் கூறப்பட்டமையினாலும், இறுதிக்காலத்துப் பரமசிவத்திலொடுங்கிப் படைப்புக்காலத்திற் றோன்றுமாதலானும் நித்தியமென உபசரித்துக் கூறப்பட்டது"

-சிவஞானபாடியம்

தமிழர், ஆரிய மக்களை மிலேச்சர் என்றே வழங்கினர். அவர்கள், ஆரியரையும் அவர்கள் நூல்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை. திவாகரத்தில் ஆரியருக்குப் பெயராக மிலேச்சர் என்னும் சொல் காணப்படுகின்றது. சமயகுரவர் காலங்களில் ஆரியர் தமிழர் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. இவ்விரண்டு மக்களையும் சந்து செய்யும் பொருட்டே, சமயகுரவர்.

"ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்"
"செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை"
"ஆரியந் தமிழோடிசை யானவன்"

என்பன போன்ற வாக்கியங்களைக் கூறுவராயினர். "ஆரியப் புத்தகப் பேய்கொண்ட புலம்பிற்று" என நக்கீரர் கோபப்பிரசாதத்தில் கூறியிருத்தலும் காண்க. இவை போன்ற பல காரணங்களால் தென்னாட்டவர், நான்மறை எனக் கொண்டவை வடமொழி வேதங்களல்ல எனவும் கருதப்படுகின்றன. பெயரொற்றுமைகளால் யாதும் துணிய முடியாது. பழைய பெயர்களுடன் புதிதாக ஊர் பேர் அறியாதவர்ளால் எழுதப்பட்ட நூல்கள் பல வெளிவந்துள்ளன. பேரிசைக் சூத்திரம், பரத சேனாபதீபம் போன்றன சில எடுத்துக்காட்டுக்களாகும்.

"மறைகள் ஈசன் சொல்" - அருணந்தி சிவம்
"சாத்திரமாவது வேதமன்றோ வதுதான் சுயம்பு" - நீலகேசி

வேதங்கள் கடவுளாற் செய்யப்பட்டன என்று நம்பி வந்தமையினால் அவர்கள் அவ்வாறு கூறுவாராயினர். வேதங்களை அவர்கள் பார்த்திருப்பின் அவ்வாறு ஒருபோதும் கூற உடன்பட்டிருக்க மாட்டார்கள். வேதங்கள் சைவ வைணவ சமயங்களுக்கு மாறானவை. சைவ வைணவ சமயங்கள் ஆகமங்களைப் பிரமாணமாகக்கொள்ளுகின்றன. வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேற்றுமை வடக்குக்கும் தெற்குக்கும் உள்ளது போன்றது என்று ஆராய்ச்சியாளர் நன்கு ஆராய்நது கூறியுள்ளார்கள். 1

வேத பாடல்கள் சில

வேத பாடல்கள் சிலவற்றின் மொழிபெயர்ப்பை இங்குத் தருகின்றோம். அவைகளை நோக்கினால் தமிழர் சமயத்துக்கும் வேதங்களுக்கும் யாதும் தொடர்பில்லையென்று நன்கு விளங்கும்.

(1) சோம இரசமே! இந்திரன் அருந்துதற் பொருட்டுப் பிழிந்தெடுக்கப்பட்ட நீ, மிக இன்சுவையோடு கூடியதும், மிகக் களிப்பைக் கொடுப்பதுமாகிய துளிகளாய் ஒழுகி நிறைவாயாக.

- சாமவேதம் பவமானகாண்டம்

(2) இந்திரனே! சோம இரசம் பிழிந்த எனது நண்பர்களாகிய அம்மனிதர்கள் மிகப்பற்றுடையவர்களாய்ப் பசுவைப்போல உன்னையே சிறப்பாகப் பார்க்கிறார்கள்.
(3) இந்திரன் கருத்துருவ இருடியாற் பிழியப்பட்ட சோம இரசத்தைப் பருகினான்@ பருகிய பின்னர் கத்திரவாகு என்னும் அரசனைப் கொன்றான் இதனால் இந்திரனுடைய விரத்தன்மை புலப்பட்டது.

1. When the subject matter and the contents of the Agamas and the Vedas are closely exmined and studied it will be found that the Agamas and the Vedas stand altogether apart as poles as under- Philosophy of the Lingayats P.279 Sakari.

(4) சோம இரசமே! மிகுந்த இன்சுவையோடு கூடிய நீ, ஆராதிக்கின்ற வேள்வியாகிய இடத்தைப் பற்றி விளங்குவதாய், மருத்துக்களோடு கூடிய இந்திரன் பொருட்டுக் காலத்தில் நிறைவாயாக.

-சாமவேதம் - ஐந்திரகாண்டம்

வேதபாடல்கள் என்பன இவ்வாறே இந்திரன், வருணன், சோமன், மருத்துவர் போன்ற பல தெய்வங்களைத் துதிக்கின்றன. இவ்வகைப் பாடல்களைக் கடவுள் செய்தார் எனக் கூறுதல் கடவுளை இழித்து உரைப்பதாக முடியுமன்றோ?

இரவா

unread,
Jul 26, 2008, 11:21:41 PM7/26/08
to minT...@googlegroups.com, தமிழாயம்


யாகங்கள்

யாகம் என்பது தெய்வங்களுக்கு உணவு கொடுத்தல். உணவு நெருப்பில் இடப்பட்டது. நெருப்பு அக்கினி என்னும் தெய்வமாகக் கொள்ளப்பட்டது. அது தன்னிடத்தில் இடப்பட்ட உணவுகளை ஏற்றுத் தேவர்களிடம் சேர்ப்பிக்கிறது என ஆரிய மக்கள் நம்பிவந்தார்கள். அக்கினியைத் துதித்துப் பாடப்பட்ட பல பாடல்கள். வேதங்களில் காணப்படுகின்றன. யாகத்தில் மந்திரங்களை ஓதித் தேவதையே அழைப்பவர் ஹோதா என்றும், பாட்டுக்களைப் பாடிக்கொண்டு சோமரசத்தைப் பலிசெலுத்துகின்றவர் உற்காதா என்றும், யாகக்கிரியைகளைச் செய்பவர் அத்வார்யு என்;றும், பெயர் பெறுவர். தலைமைப் பரோகிதராகிய பிரமா, யாகத்துக்கு இடையூறு நேராமல் தென்திசையில் இருந்து காவல் செய்வார். தெற்குத் திசை இயமனின் திசையாதலின், அங்கு நின்றும் துட்ட தேவதைகள் தோன்றி மக்களுக்குப் பயம் உண்டாக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. யாகங்களிற் பலவகை உண்டு. சோமயாகம், நரமேதம் (நரபலி) குதிரையாக்கம், பசுயாகம், ஆட்டுக்கடா யாகம் என்பன அவற்றுட் சில. தக்கனுடைய வேள்வியில் ஆட்டுக்கடாக்கள் வெட்டப் பட்டன என்று புராணங்கள் கூறும். "தக்கன் வேள்வித் தகர் நின்று" எனத் திருவாசகத்தில் வருதல் காண்க. யாகங்கள் வாயிலாகத் தேவர்களுக்கு அவர்கள் விரும்பும் உணவுகளையும், மதுவகைகளையும் கொடுத்தால், அவர்கள் அவ்வாறு செய்கின்றவர்களுக்குச் செல்வங்களையும். பிற இம்மைப்பயன்களையும் கொடுப்பார்கள் என அக்கால ஆரிய மக்கள் நம்பியிருந்தார்கள். யாகஞ் செய்வதே அக்கால மதத்தின் முடிவான கொள்கை. இதற்குமேல் மனிதன் இம்மையில் சமய சம்பந்தமாகச் செய்யக்கூடியது எதுவும் இருக்கவில்லை. யாகங்களில் கள்ளும் ஊனும் புசிக்கப்பட்டன. இதனைக் கைவல்லிய நவநீதமுடையாரும் "கள்ளுமூனும் விரும்பினால், நீ மகங்கள்செய்" என வேதங்கள் விதித்திருக்கினற்ன எனக் கூறியுள்ளார்.


சோமயாகம்

1 சோமம் என்பது ஒருவகைக் கொடி. அது இந்தியாவிலும் பாரசீகத்திலும் பெரும்பாலும் மலைகளில் படர்வது. சோமக்கொடிகளை இருகற்களினிடையே வைத்து நசுக்கிப் பிழிந்த சாற்றைப் பாலிற் கலந்து புளிக்கவைத்தபோது, அது மிகவும் வெறியைக் கொடுக்கக்கூடியதாயிருந்தது. சோமச்சாற்றைக் குடித்த கடவுளர் அதன் வேகத்தால் செயற்கருமம் செயல்களைச் செய்யும் ஆற்றலைப் பெற்றார்கள் என்று பழைய ஆரிய மக்கள் நம்பி வந்தார்கள். அவர்கள் சோமச்சாற்றைத் தெய்வமாகவும் வணங்குவாராயினர். இருக்கு வேதத்தின் ஒரு மண்டலத்திலுள்ள பாடல்கள் முழுமையும், சோமச்சாற்றை வழுத்திப் பாடப்பட்டுள்ளன. இன்னும் வேதத்தின் மற்றைய இடங்களிலும், இச்சோமச்சாறு துதிக்கப்படுகின்றது. இது மிகவும் சிறுபிள்ளைத் தனமான செயல் என்பதை உணர்ந்த பிற்காலத்தார் அவை "சோமன்" எனப்பட்ட சந்திரனைக் குறித்துப் பாடப்பட்டனவெனக் கூறுவாராயினர். இது சிறிதும் பொருத்த மற்றதென வேத பண்டிதர்கள் கூறியுள்ளார்கள். இன்று கள்ளை ஒழிக்க வேண்டு மென மக்கள் உணருகின்றார்கள். அதோடு கள் குடித்தல் கீழ் மக்களின் செயலென்றும் கருதப்படுகின்றது.

1. The transference of the same Some to the moon which appears in the latter history of this Indian religion, is hither to obscure; the Vedas hardly know it. Neither do they seem to prepare the way for - it - Oriental and linguistic studies P.10-William Dwight Whitney

அவ்வகையான சோமக் கள்ளைத் துதிக்கும் பாடல்களைக் கடவுள் செய்தார் எனக் கூற எவரும் உடன்படுவார்களா? அப்பாடல்கள்தான் தமது சமயத்துக்கு அடிப்படை எனக் கூறும் ஒரு கூட்டத்தினரைத் தமது சமயக் குருமார் எனக் கொள்ளும் மக்கள், பைத்தியக்காரர் போன்றவர்களாவர். இவ்வகையான பாடல்களைச் செய்தவர்களே தமது கோத்திர முதல்வர் என அன்னோர் கூறுகின்றனரன்றோ? என்ன அறியாமை!

"உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரா
லெண்ணப் படவேண்டா தார்"

-திருக்குறள்


நரமேதம்

நரமேதம் என்பது மனிதரைக் கொன்று செய்யப்படும் யாகம், இவ்வகையான யாகங்களைச் செய்யும் கிரியை முறைகளும், அப்போது பாடப்படும் பாடல்களும், சொல்லப்படும் மந்திரங்களும் வேதங்களிற் காணப்படுகின்றன. இது பிற்கால மக்களுக்கு மிகவும் காட்டு மிராண்டித் தனமாகத் தோன்றினமையால், அவர்கள் நரமேத யாகங்களில் மனிதன், யூபத்தில் (பலிமிருகத்தைக் கட்டிவைக்கும் தூண்) கட்டி வைக்கப்பட்டானல்லாமல் கொல்லப்பட்டானல்லன் என்று பலவாறு எழுதுவாராயினர். இது சோமன் என்றால், சோமக்கள் அன்று@ சந்திரன் எனக் கூறியவர்களின் கூற்றை ஒத்தது. மனிதனாயிருந்தாலென்ன, விலங்காயிருந்தாலென்ன, கொல்லப்பட்ட பலிகளின் இறைச்சி புரோகிதருக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது. ஆரியர் மாமிச உணவை விலக்கியிருந்த வரல்லர். மனுஸ்மிருதி ஆட்டுக்கடாக்களின் இறைச்சியைக் கொண்டு இறந்தவரின் "சிரார்த்தம்" செய்யும்படிக் கூறுகின்றது.

தைத்திரியப் பிராமணத்தில், பிராமண சாதித் தெய்வத்துக்குப் பிராமணனையும், சத்திரிய சாதித் தெய்வத்துக்குச் சத்திரியனையும், மருத்துக்களுக்கு வைசியனையும், தவங்களுக்குத் தலைமையாயுள்ள தெய்வத்துக்குச் சூத்திரனையும், இருள் தெய்வத்துக்குத் திருடனையும், நரகத் தெய்வத்துக்கு சூத்திரனையும், இருள் தெய்வத:தக்குத் திருடனையும், நரகத் தெய்வத்துக்கு வாத்தியக்காரனையும் பலியிட வேண்டுமெனக் கூறுகின்றது. இவ்வாற நூற்றெழுபத்தெட்டுத் தெய்வங்களுக்கும் பலியிட வேண்டிய 178 வகை நர பலிகளைப் பற்றி அந்நூல் கூறியுள்ளது. 1 "காளிக புராணம் என்னும் நூலில்," விதி முறைப்படி செய்யப்படும் நரபலியினால் தேவி ஆயிரம் ஆண்டுகள் நிறைவு அடைகின்றாள். மனிதத் தசைப் பலியினால் வயிரவர் மூவாயிரம் ஆண்டுகள் உவந்து நிறைவு அடைகின்றார். நைவேத்தியம் செய்யப்பட்ட மனித இரத்தம் உடனே அமுதமாக மாறுகின்றது. ஆகவே தேவியை வணங்கும்போது தலையும் இறைச்சியும் நைவேத்தியம் செய்யப்படவேண்டும்"2 எனக் கூறப்பட்டுள்ளன.

1. Indo- Aryans VOL 2 P.80 Rajendralala Mitra.
2. Ibid P. 106. Stone Age in India - P.21 P.T.S. Iyengar.

இந்தியாவிற்1 கற்காலம் என்னும் நூலில் கூறப்படுவது பின்வருமாறு "வேதகாலத்தில் நரபலி சர்வசாதாரணமானது. குறித்த கிரியை முறைகள், யசுர் வேத சங்கிதைகள், யசுர்வேதப் பிராமணங்கள், சாங்காயன வைதான சூத்திரங்களிற் கூறப்பட்டுள்ளன. யாகஞ் செய்பவனின் மனைவி பலியிடப்பட்டவனை (சவத்தைச்) சேர்தல் (அணைத்தல்) ஆகிய இடக்கரான கிரியையும் நடத்தப்பட்டது. அப்பொழுது மந்திரங்கள் தொடர்பாகக் கூறப்பட்டன. சில சமயங்களில் இவ்விடக்கரான கிரியைக்கு அனுமதிக்கப்படுவதைப் பற்றி அரசனின் மனைவியருக்கிடையில் போட்டியிருந்ததென்று சொல்லப்படுகின்றது." மக்கள் அறிவு வளர்ச்சிபெற்ற காலத்தில் மனிதனைப் பலியிடுவதற்குப் பதில் அவன், யூபத்தோடு கட்டிவைத்துப் பின் அவிழ்த்து விடப்பட்டான். நரபலி இடப்பட்ட காலத்தில் நரமாமிசம் புரோகிதரால் உண்ணப்பட்டதெனத் தெரிகின்றது.

அசுவமேத யாகம்

குதிரையைக் கொன்று செய்யும் யாகம் அசுவயாகம் எனப்பட்டது. மனிதனுக்குப் பதில் குதிரை பலியிடப்பட்டதாகத் தெரிகின்றது. யாகத்தில் மாத்திரமன்று, சாதாரணமாகக் குதிரை இறைச்சி ஆரிய மக்களால் உண்ணப்பட்டது. குதிரை யாகத்திலும் நர மேத யாகத்தில் செய்யப்பட்டது போன்ற இடக்கரான கிரியை செய்யப்பட்டது. விதவா விவாகத்தில் சொல்லப்படும் 'உதிர்ஷவ ஆரி (Udershava ari) என்னும் மந்திரம் பிணச் சடங்குகளிற் சொல்லப்படுகின்றது. அது இடக்கரான கிரியையின் பின்பு, குதிரையோடு படுத்திருக்கும் அரசியை, அவளுக்காகக் காத்து நிற்கும் அரசனை அடையும்படிச் சொல்லப்படும் மந்திரமாகப் பயன்படுத்தப்பட்டது.2

மனிதனுக்குப் பதில் குதிரையும் குதிரைக்குப் பதில். எருமை அல்லது பசுவும், பசுவுக்குப் பதில், ஆடும், பின்பு விலங்குகளுக்குப் பதில் பலகாரங்களும் பலியாகக் கொடுக்கப்படலாயின. வேதம் என்பது இவ்வகையான யாகங்களுக்காக மாத்திரம் எழுந்த நூலேயாகும்.

1. The rite includes such repulsive incidents as the introduction of the sepas of the medha into the yoni of the yajamana's chief wife, accompanied by the recitation of long strings of mantras - Ibid.
2. The people ate bothe animal and vvegetable food: horses (A. V. VI. 71. 1) bulls (R.V.i.164.4) buffaloes (R.V.V.29.7) rams (R.V. x 27. 17) and goats (R.V.I. 162.3) were killed on slaughter benches (suna) (R.V.X. 86.16) cooked in cold. Rons (R.V. iii 53.22) and eaten-Life in Ancient India P. 49 P.T.S. Iyengar.

The famous mantra beginning with udishva ari, now used in funeral ceremoness and hence interpreted to refer to widow remarriage, has really no such implication, because the proper use is in connection with the horse or the human sacrifice, where the queen was called upon by means of the mantra to rise from the side of the sacrfical victim, after the above - describle rite was over, and rejoin her living husband who was waiting for her - Stone age in India P.21.

இரவா

unread,
Jul 26, 2008, 11:25:18 PM7/26/08
to minT...@googlegroups.com, தமிழாயம்


வேத கால மக்கள் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்

சில பிராமணர், புரோகிதர், குருமார்களுக்கு அதிக நிலங்கள் இருந்தன. இருடிகள் பாடல்களைச் செய்தார்கள். அவர்கள் அதற்குக் கைம்மாறாகப் பொன்னாற் செய்த பூக்கள், கழுதைகள், கம்பளி ஆடு, எருது, மூங்கில், பதனிடப்பட்ட தோல்கள், அடிமைப்பெண்கள், முத்தினால் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், தேர்கள், வீடுகள் முதலியவற்றைப் பெற்றார்கள்.

போர் செய்யும் வகுப்பினரால் யுத்தம் செய்யப்பட்டது@ இருடிகளும், பிராமணரும் படைகளின் பின் போர்க்களத்திற்குச் சென்று போரில் பங்கு பற்றினார்கள். போர்க்கடவுளாகிய இந்திரனை வணங்குவோர் வெற்றியை வேண்டி, அவனுக்குச் சோமக்கள்ளையும், எருமை மாட்டு இறைச்சியையும் படைத்தார்கள்.

போரில் தோற்றவர்களுக்குக் கொடிய தண்டனை விதிக்கப்பட்டது. இந்திரன் விருத்திரனைத் தோற்கடித்து அவனுடைய விதையை அறுத்து விட்டான். தருணம் வாய்த்த போது பகைவருடைய விதைகளை அறுத்துவிட்டார்கள்.

மக்கள் சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். மணத்தைப் பற்றிய கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. ஒரு பெண் பிராமணரல்லாத பத்துக் கணவரை முன்வைத்திருந்தபோதிலும், ஒரு பிராணன் அவள் கையைப் பிடிப்பானாயின், அவள் அவனுடைய மனைவியாவாள். பிராமணப் பெண்கள் மற்றவர்களோடு இருந்தபோதும், குற்றமடைந்தவர்களாகக் கருதப்படமாட்டார்கள். அவர்கள் மறுபடியும் அவர்களின் கணவரிடம் சேர்க்கப்படலாம். பிராமணரின் மனைவியரை வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்தவர்கள் மீது திட்டிக்கூறும் மொழிகள் கூறப்பட்டன.

பிராமணர், தாம் மனித தெய்வங்கள் எனக் கூறினார்கள். அவர்களுக்குத் திங்கிழைத்தவர்கள் மேலேயிருக்கும் கடவுளரால் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். தங்களை மதியாதவர்களைப் பிராமணர் தண்டிக்கலாம். அப்பொழுது அவர்களுடைய நா, வில்லின் நாணாகின்றது@ சத்தம் அம்பாகின்றது. அவர்கள் மந்திர வித்தையில் வல்லவர்களாயிருந்தார்கள். பிராமணனின் பசுவைப் பிராமணரல்லாதார் உண்ணுதல் ஆகாது. அப்படிச் செய்தால் பொல்லாத பாவம் சூழும். அவன் மீது உமிழ்ந்தவன் இரத்த ஆற்றில் இருந்து மயிரைத் தின்பான். அரசர் திரவியங்களைப் பிராமணருக்குத் தானமாகக் கொடுத்தார்கள். இரட்டைக் கன்றுகள் ஈன்ற பசு, பிராமணனுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

மக்களின் மது வகைகள் சோமமும், சுராவும், சோமக் கொடி, கற்களால் நசுக்கி அரைக்கப்பட்டு கம்பளி ஆடையிலிட்டுப் பிழிந்து பாலிற் கரைத்துக் குடிக்கப்பட்டது. சோமம் இனிப்பானதென்றும், உண்டவர்களை நன்றாகப் பேசச் செய்யும் எனவும்படுகினற்து. வால் கோதுமை அல்லது அரிசியிலிருந்து இறக்கப்பட்ட சுரா. வாலையினால் வடிக்கப்பட்டது.

விதவைகளை மறுமணஞ் செய்தார்கள். விதவைகள் கணவனின் சகோதரனைச் சேருதல் குற்றமாகக் கருதப்படவில்லை. யுத்தத்தில் பெண்கள் வெற்றிப் பொருளாகக் கருதப்பட்டார்கள். பெண்களின் மனம் புலியின் மனத்துக்குச் சமமானது. ஆண்கள் பெண்களோடு போர் செய்தல் தகுதியில்லாத செயலென்று இருடிகள் கருதவில்லை. குருமார் தலையில் ஒருபிடி மயிர்விட்டுத் தலையைச் சிரைத்தார்கள். முனிவர்கள் தலைமயிரை வளரவிட்டிருந்தார்கள். அவர்கள் அழுக்கு நிறமான ஆடையை உடுத்தி அலைந்து திரிந்தார்கள். அவர்கள் கடவுளாகக் கருதப்பட்டார்கள்.

இல்லறத்தானுடைய தினசரி வாழ்க்கை மந்திர வித்தைகள் பலவற்றோடு தொடர்புடையதாயிருந்தது. ஒவ்வொரு வியாதியும் ஒவ்வொரு வகைக் கெட்ட தேவதையால் உண்டாகின்றது@ அல்லது பகைவரின் சூனிய வித்தையால் உண்டாகின்றதென்று கருதப்பட்டது. இந்திரன் ஒரு தாயத்து அணிந்திருந்தான். வருணனும் அவ்வாறு ஒன்று அணிந்திருந்தான். மந்திரங்களினால் அரசன் சிங்கத்தின் தன்மை அடைந்து மக்களை விழுங்கத்தக்கவர்களாகின்றான்.

சோமயாகத்தில் விலங்குகள் கொல்லப்பட்டன. விலங்கு கட்டி வைத்துக் கொல்லப்பட்டது. அதன் வெளியீரல் தெய்வங்களுக்குக் கொடுக்கப்பட்டது. பல் கொடுக்கும்போது தெய்வங்களின் இரகசியமான பெயர் உச்சரிக்கப்பட்டது. அல்லாவிடில் பலி அவர்களை அடையாது.

மந்திரகால இறுதிக்குமுன் கிரியைகள் முற்றாக வளர்ச்சியடைந்திருந்தன. சிறந்த பெரிய கிரியை சோம யாகமாகும். சோமப்பூண்டு சோம அரசன் அதற்குப் பல துதிகள் பாடப்பட்டன. ஏழு புரோகிதர்கள் தண்ணீர் தெளித்தாhகள். மாட்டுத் தோலின் மீது வைக்கப்பட்ட இரண்டு கற்களினிடையே வைத:து அசு நசுக்கப்பட்டது@ அல்லது உரலில் இட்டு உலக்கையால் இடிக்கப்பட்டது. பின்பு ஒரு தட்டில் வைத்துப் பிழிந்து சாறு எடுக்கப்பட்டது. சாறு கம்பளி ஆடையால் வடிக்கப்பட்டது. அதர்வண புரோகிதன் அதன் மீது பாலை ஊற்றி பத்து விரல்களால் கலக்கி ஆற்றினான். அது மரச்சாடிகளுக்குள் விட்டுப் பலி பீடத்தில் வைக்கப்பட்டது. கடவுளுக்கு வைத்த பின், அது புரோகிதருக்குக் குடிக்கக் கொடுக்கப்பட்டது. சோமச்சாறு ஒரு நாளில் மூன்றுமுறை கொடுக்கப்பட்டது. அதனோடு மாவினாற்செய்த பலகாரமும் வைக்கப்பட்டது. சில சமயங்களில் சோமச் சாறு உணவோடு சேர்த்துச் சமைத்துப் படைக்கப்பட்டது. இந்திரன் அளவில்லாத சோமச் சாற்றைப் பருகிய பெரிய கடவுளாவன். பிறந்த தினத்திலேயே இந்திரனுக்கு அவன் தாய் அதனைப் பருகக் கொடுத்தாள். அவன் முப்பது மிடாக்கள் நிறைந்த இரசத்தை ஒரே தடவையில் பருகினான். சோமன் இருடிகளுக்குப் பாடல்களைப் பாடும் ஆற்றலைக் கொடுத்தான். சோம யாகத்தில் நடப்படும் யூபம் வன அரசன் எனப்பட்டது. அது தருப்பைப் புல்லின் மீது வைக்கப்பட்டது. அதற்கு ஆபரணங்களும் மாலைகளும் சூட்டப்பட்டன. பலவகை நிறங்களாலும் அது அலங்கரிக்கப்பட்டது. அது யாகத்தீக்குக் கிழக்கே நடப்பட்டது. பலி விலங்கு அதில் கயிற்றாற் கட்டப்பட்டது. விலங்கின் தலை, அலை, கால்கள் என்பன கட்டப்பட்டன. அதன் ஒன்பது வாயில்களையும் அடைத்துப் பிடித்து, அது சாகும்வரை இரகசிய உறுப்பின் மீது அடிக்கப்பட்டது. மிருகம், பட்டையின்மீது வைத்து பக்குவமாக வெட்டப்பட்டது. வெட்டும்பொழுது ஒவ்வொரு உறுப்பின் பெயரும் சொல்லித் துதிக்கப்பட்டது. உறுப்புக்களின் மூட்டுக்கள் திறமையோடு பிரிக்கப்பட்டன. இறைச்சி சமைத்துத் தெய்வங்களுக்குப் படைக்கப்பட்டது@ பின்பு வழிபடுவோர் அதனை உண்டார்கள். பிற்கால அசுவ மேத யாகங்கள் போலல்லாது, முற்காலக் குதிரையாகம் மிகவும் சாதாரணமாக இருந்தது. குதிரைக்கு முன்னாள் புள்ளியள்ள ஆடு விடப்பட்டது. குதிரையும் பலிப் பொருள்களும் விலையுயர்ந்த போர்வையால் மூடப்பட்டன. ஆடும் குதிரையும் மூன்று முறை குண்டத்தைச் சுற்றிக்கொண்டு வரப்பட்டன. குருமார் யூபத்தையும் சமைக்கும் பாத்திரங்களையும் கொண்டு பின்னே சென்றார்கள், குதிரையைப் பலியிடும் இடத்தில் விட்டு அதற்குப் புல் கொடுக்கப்ட்டது. குதிரை கம்பத்தோடு கட்டிக்கொன்று, மற்ற மிருகங்களைப் போல உண்ணப்பட்டது. பலியிடப்பட்ட விலங்கு இறக்கவில்லை, கடவுளரிடம் சென்றது என்று கருதப்பட்டது.

இந்திரன் பெரிய கடவுளாயிருந்தபோதிலும் விலிஸ்தெங்கா என்னும் ஓர் அசுரப்பெண், அவனைக் கடவுளர்களின் இடத்திலிருந்து தன்னிடத்துக்கு மந்திரத்தால் இழுத்தாள். பின்பு அவன் பெண்களினிடையில் பெண்வடிவிலும். ஆண்கள் இடையில் ஆண் வடிவிலும் இருந்தான். மற்றக் கடவுளர்களைப் போல, இந்திரன் குணங்களில் மாத்திர மல்லாமல், வடிவிலும் மனிதனைப் போலவே இருந்தான். சௌத்திராமணி என்னும் கிரியையில் அவன் வடிவம் செய்து வைக்கப்படுகின்றது.


இரவா

unread,
Jul 26, 2008, 11:26:39 PM7/26/08
to minT...@googlegroups.com, தமிழாயம்
உருத்திரன்

ஆரியருடைய புயற்கடவுள், பிற்காலத்தில் உருத்திரன் என்னும் பெயரைப் பெற்றது. உருத்திரன் பிற்காலத்தில் சிவனைக் குறிப்பதாகக் கொள்ளப்பட்டு, உருத்திர சிவன் என்னும் பெயரைப் பெறுவதாயிற்று. ஆரியர், இந்திய நாட்டை அடைந்தபின் பழங்குடிகள் வழிபட்ட தெய்வங்கள் பலவற்றைத் தமது கடவுளர்களோடு சேர்த்துக் கொள்வாராயினர். பழைய ஆரியக் கூட்டத்தினின்றும் பிரிந்து சென்று ஆங்காங்கு குடியேறியுள்ள மற்றைய ஆரிய மக்களுக்கு அறியப்படாதிருந்தனவும் இந்திய ஆரியரால் வழிபட்டனவுமாகிய கடவுளரை அவர்கள் இந்திய நாட்டினின்றும் பெற்றார்களாதலால் துணியப்படுகின்றது.

அவ்வாறு பெற்ற கடவுளரில் சிவன் கடவுள் ஒருவர். சிவன் என்பதற்குச் சிவந்தவன் என்பது பொருள். சிவன் என்பதே சிவந்தவன் என மொழி பெயர்க்கப்பட்டு ஆரிய வேதங்களில் வழங்கப்படுவதாயிற்று. சிவனை ஒத்த கடவுளை மற்றைய ஆரிய மக்கள் அறியாதிருந்தனர். சிவன் என்பதற்கு இந்து ஐரோப்பிய ஆரிய மொழிகளில் உற்பத்தி காண முடியவில்லை. உருத்திரன் ஆரியரின் கடவுளல்லர் என, மேல் நாட்டுக் கீழ்நாட்டு ஆராய்ச்சி வல்லார் ஆராய்ந்து கூறியுள்ளார்கள்.

"வருணன், உருத்திரன், துவஷ்டா, அதிதி முதலிய கடவுளரைத் திராவிட மொழி வழங்கும் மக்களிடமிருந்து ஆரிய மக்கள் பெற்றுக் கொண்டனர். திராவிட மொழி, வேத மொழியைப் பெரிதும் மாற்ற மடையச் செய்ததெனக் காட்டியுள்ளோம். அதனை ஒப்பதேவ ஆதிக்குடிகள் வழிபட்ட கடவுளரின் பெயர்கள், ஆரியச்சொல் வடிவங்களை அடைந்து வேதகாலத்தெய்வங்களோடு இடம் பெற்றன. அக் கடவுளரின் பெயர்களுக்கு நேரானவை இந்து செர்மனிய மொழிகளில் காணப்படவில்லை@ அவ்வகையான பெயர்கள் இந்தியப் பெயர்கள் என்றே கொள்ளுதல் தகுதியுடையது." இவ்வாறு மந்திரகாலம் என்னும் நூலிற் காணப்படுகின்றது.1

மேற்கண்ட நூலில் உருத்திரனைக் குறித்துக் கூறியிருப்பது வருமாறு.

"உருத்திரன் திராவிட மொழி வழங்கும் மக்களின் இன்னொரு கடவுளாகத் தெரிகின்றது. அவர் மலைத் தெய்வமாகக் காணப்படுகிறார். அவருக்குப் பின்னிய சடை உண்டு@ நிறம் கபிலம் (மங்கிய சிவப்பு)@ உடைதோல்:……. இவ்வகையான கடவுள் இமயமலை, அல்லது விந்தியமலை இடங்களில் வாழ்ந்த மக்கள் இடையேதான், தோன்றி வளர்ச்சியடைந்திருத்தல் கூடும்@ சமவெளிகளில் வாழ்ந்த இருடிகளிடமன்று. உருத்திரன் என்பதற்குச் சிவந்தவன் என்பது பொருள். இது சிவன் என்னும் தமிழ்ப் பெயரின் மொழி பெயர்ப்பாகக் காணப்படுகின்றது. துவஷ்டா கைத்தொழிலாளரின் கடவுள், இக் கடவுளின் இடத்தை இந்திரன் எடுத்துள்ளான். அதிதி என்னும் சொல்லின் உற்பத்தி முற்காலத் தற்கால ஆராய்ச்சியாளருக்கு மயக்கத்தை உண்டு பண்ணிற்று. அப் பெயரின் மூலம், கண்டு பிடிக்கப்படவில்லை. விஷ்ணு என்னும் பெயர் விண் என்னும் தமிழ் அடியாகப் பிறந்தததாகலாம். சிவன், விஷ்ணு, அம்மன், என்போர் இன்று இந்திய மக்களின் சிறந்த கடவுளாராவர். இருடிகளுக்கு இவர்கள் சிறு தெய்வங்களாக்க காணப்பட்டனர்@ இருடிகள் விருப்பக் குறைவோடு இவர்களைத் தமது தெய்வங்களோடு சேர்த்தார்கள். ஆனால் மக்கள் அக்கடவுளரை வணங்கினர்@ அதனால் அவை பெரிய தெய்வங்களாயின.

1. The gods of the second group (i.e Varuna, Rudra Tvushta and Adite) seens to have been taken over from the Dravidian speaking tribe of India. It has been already pointed out that the Dravidian languages profoundly affected the Vedic language. Similarly the gods worshipped by the tribes that gradually accepted this language must have been 'Aryanized' and adopted into the Vedic pantheon. Those vedic gods the etymology of whose names is not patent and who have no analogue in other Indo - Germanic dialects must have been Indian gods to whom such treatment was accorded - The Age of the Mantras. P. 123-P.T.S. Iyengar.

இரவா

unread,
Jul 26, 2008, 11:27:48 PM7/26/08
to minT...@googlegroups.com, தமிழாயம்


பசு இறைச்சி குதிரை இறைச்சிகள் ஆரியருக்க விலக்கு இல்லை

வேதகால ஆரியர் இறைச்சி வகைகளைத் தாராளமாகப் புசித்தார்கள். அவர்களின் உணவில் இறைச்சி வகையே முதன்மையாயிருந்த தென்பதைப் பற்றி ஒருவரும் ஆச்சரியமுற வேண்டியதில்லை. வெள்ளாடு. செம்மறியாடு, பசுக்கள், எருமைகள் யாகங்களிற் கொல்லப்பட்டன. அக்கினி, பசுக்களைப் புசிப்பவன் என்று வேதம் கூறுகின்றது. பாரத்துவாசர் தமக்கு உணவு வேண்டுமென்ற இந்திரனைத் துதித்தார். அவன் உணவில் பசு முதன்மையுடையது. முக்கியமான விருந்து வந்தால், பெரியமாடு அல்லது பெரிய ஆட்டைக் கொல்லும்படி சதபதப் பிரமாணங் கூறுகின்றது. அரசன் அல்லது பெருமகன் ஒருவன் விருந்தாக வந்தால், பெரிய எருதை அல்லது மலட்டுப் பசுவைக் கொல்லவேண்டுமெனவும் அந்நூல் கூறியுள்ளது.

இந்திரனுக்கு எருதுகள் பலியிடப்பட்டன. சமைக்கப்பட்ட மாட்டு இறைச்சியில் இந்திரனுக்கு மகிழ்ச்சி உண்டு. எருமைகளும் அவனுக்குப் பலியிடப்பட்டன. அவைகளில் அவைகளின் இறைச்சியைச் சமைத்து இந்திரனுக்குப் படைத்தபின், வழிபடுவோர் அதனை உண்டனர். சில சமயங்களில் முந்நூறு எருமைகளுக்குமேல் பலியிடப்பட்டன. ஒருவர் இறந்தால் உடலைக் கொளுத்துவதன் முன் பசுவைக் கொன்று அதன் இறைச்சியால் அது மூடப்பட்டது. குதிரைகளும் யாகத்திற்குக் கொல்லப்பட்டன. அதன் இறைச்சியை வறுத்தும் அவித்தும் கடவுளுக்குப் படைத்தபின், அடியவர் அதனை உண்டு சோம இரசத்தையும் பருகினர். இறைச்சியை விற்பனை செய்யும் கடைகளும் இருந்தன. பாரதம், நாளொன்றுக்கு 2000 பசுக்களைக் கொன்று பலருக்கு விருந்து அறித்து வந்த இரந்தி தேவரைப் பற்றிக் கூறுகின்றது! புத்தர் தோன்றித் கொல்லாமையைக் கடியும் வரையில் ஊன் உணவு கொள்ளும் வழக்கு, வடநாட்டவர் எல்லோரிடையும் இருந்து வந்தது. வேதகால ஆரியர், மாட்டு மாமிசம் உண்ணுதல் இழிவு என்று கருதவில்லை. இருக்கு வேதக காலத்தின் கடைப்பகுதியில் பசு, எருதுகளைப் பலியிடுவதைப் பற்றி வெறுப்பு உண்டாயிருந்தது.


1. Ibid - P.125 & 126

Civa is a god unknown to the Vedas; his name is a word of not frenquent occurrence in the hymns, indeed, but means simply 'prosperous'; not even in the Atharvan it is the epithet of a particular divinity, of distinguished by the useage, from any other adjectives. The precise relation between Civa and Rudra is not yet satisfactorily traced out-

- Oriental and Llinguistic Studies P.30 - Willian Dwlight Whitney-
- A History of Indian literature - P.52- Herbert H. Goven

ஆரியர் இவ்வாறு செய்யும் யாகங்களுக்கு அசுரர் எதிராக இருந்து வந்தனர். அவர்கள் அவ்வகை யாகங்கள் வலிமையால் தடை செய்ய முயன்று வந்தார்கள். யூபத்தில் மிருகங்கள் கட்டப்பட்டதும், அசுரர் அதனை நோக்கி வந்தார்கள். ஆரியர் யாகச்சாலையைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக மதில்போல நெருப்பை வளர்த்து. அசுரரை அணுக முடியாமற் செய்தனர். இராவணனாதியோரும். ஆரிய முனிவர்கள் செய்யும் யாகங்களை அழித்து வந்தார்கள் என இராமாயணத்திற் படிக்கிறோம்.

இரவா

unread,
Jul 26, 2008, 11:28:42 PM7/26/08
to minT...@googlegroups.com, தமிழாயம்


கிருட்டிணர்கள்

வேத காலத்தில் இந்திரனுக்குப் பகைவராகிய கிருட்டிணர்கள் இருந்தார்கள். கிருட்டிணர் என்பது ஒரு மக்கட் கூட்டத்தினருக்குப் பெயராக விருந்தது. இக் கூட்டத்தினரிடையே தேவகியின் புதல்வனான கண்ணன் தோன்றியிருத்தல் கூடும். கிருட்டிணர்களுக்குத் தலைவனான கிருட்டிணன் அம்சுமதி (யமுனை) ஆற்றங்கரையில் பத்தாயிரம் வீரருடன் இருந்தான் என்று இருக்கு வேதம் கூறுகின்றது. ஆரியருக்காக, இந்திரன் கிருட்டிணராகிய பகைவரை அழித்தான். இந்திரன் 50,0000 கிருட்டிணரைக் கொன்றான் என்று வேதம் கூறுகின்றது. கிருட்டிண இந்திரரின் போர்கள், வேதகாலத்தில் தமிழருக்கும் ஆரியருக்கும் நிகழ்ந்த போர்களைக் குறிப்பிடுகின்றன.

தாசுக்கள்

தாசுக்கள் ஆரியரின் விரோதிகள் என்றும், அவர்களுக்கும் ஆரியருக்கும் போர்கள் நிகழ்ந்தன வென்றும் வேதங்களைக் கொண்டு அறிகின்றோம். தாசுக்கள் கறுப்பு நிறத்தினர் எனப்படுகின்றனர். இவர்கள் ஆரியரின் கடவுளரை வழிபட்டிலர். தாசுக்கள் என ஆரியராற் கூறப்பட்டோர் இந்தியப் பூர்வ மக்களே என ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள். தாசுக்கள் பட்டினங்களில் வாழ்ந்தார்கள். அவர்களுள் பல அரசர்கள் இருந்தார்கள். அவர்களிடத்தில் திரண்ட செல்வம் இருந்தது. பசுக்கள், குதிரைகள், தேர்கள் முதலியவை அவர்களின் செல்வங்கள். நூறு கதவுகளுள்ள நகர்களுள் வைத்துக் காக்கப்பட்டன. இந்திரன் அவைகளைக் கவர்ந்து, தன்னை வழிபடுவோராகிய ஆரியருக்குக் கொடுத்தான். தாசுக்கள் மிகவும் செல்வம் உடையவர்களாகவும் சமவெளிகளிலும், மலைகளிலும் நிலம் உடையவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பொன் அணிகளை அணிந்தனர். அவர்களுக்குப் பல கோட்டைகள் இருந்தன. தாசுக்கள் பொன் வெள்ளி இரும்பு முதலியவைகளாலமைத்த கோட்டைகளில் வாழ்ந்தார்கள். இந்திரன் தேவதாசர்களாகிய ஆரியருக்காகத் தாசுக்களின் நூறு கற்கோட்டைகளை அழித்தான். அக்கினி அவனுக்குத் துணையாகத் தாசுக்களின் பட்டினங்களை எரித்தான். ஆரியரிடமிருந்து கவர்ந்த மாடுகளை வைத்திருந்த மாறியற் கூடங்களைப் பிரகஸ்பதி உடைத்தெறிந்தார். தாசுக்கள் போரில் தேர்களைப் பயன்படுத்தினர். தாசுக்கள் ஆரியர் யாகங்களை அழித்து. ஆரியரின் தெய்வங்களுக்காக வைக்கப்பட்டிருந்த மதுவைப் பருகினார்கள்.

இரவா

unread,
Jul 26, 2008, 11:29:53 PM7/26/08
to minT...@googlegroups.com, தமிழாயம்


பாணியர் (PANIX)

பாணியர் என்னும் ஒரு வகுப்பினரைப் பற்றியும் வேதங்கள் கூறுகின்றன. பாணியர் என்போர் வணிகராகிய திராவிட மக்கள் எனப்படுகின்றனர். தாசுக்களை ஒப்ப, இவர்களும் ஆரியரின் பகைவராயிருந்தனர். பாணியர் எனப்பட்ட மக்களே மத்தியதரைக் கடலின் மேற்குக் கரை ஓரங்களிற் குடியேறிப் பினீசியர் என்னும் பெயர் பெற்றனர் எனச் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். பினீசியரின் எழுத்து மொகஞ்சதரோ எழுத்துக்களின் திரிபாகிய பிராமி எழுத்துக்களினின்றும் பிறந்தது என்று ஆராய்ச்சியாளர் கண்டுள்ளார்கள்.

பிராமணங்கள்

வேதங்களிலுள்ள பாடல்கள் மந்திரங்கள் எனப்படும், மந்திரங்களாகிய பாடல்கள் செய்யப்பட்டதன் பின்பு, கிரியைகள் வளாந்தன. ஆகவே மந்திரங்கள் கிரியைகளுக்கு ஏற்ற முறையில் பல தொகுப்புகளாகத் தொடுக்கப்பட்டன. அத்தொகுப்புகளுக்குச் சங்கிதை என்று பெயர். பிராமணங்கள் என்பன கிரியை முறைகளை விளக்கி எழுதப்பட்ட வசன பாகங்கள். இவைகளும் வேதங்களுட் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே வேதங்களில் மந்திரம் பிராமணம் என இரு பகுதிகள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளிற் சென்று குடியேறிய ஆரியர்களுக்கு வேதங்களும், மந்திரங்களும், பிராமணங்களும் இல்லை. இந்திய நாட்டுக்கு வந்த ஆரியருக்கு இவைகள் இருக்க வேண்டிய காரணம், அவர்கள் இந்தியாவில் வாழ்ந்த பூர்வ மக்களிடத்திற் காணப்பட்டன போன்றவற்றைத் தாமும் பின்பற்றிச் செய்து கொண்டமையினாலேயாகும்.

"நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகு மறிவு

(குறள். 452)

பிராமணக்கிரியை முறைகள், திராவிட மக்களின் ஆகமக்கிரியைகளைப் பின்பற்றிச் செய்யப்பட்டனவென்பது ஆராய்ச்சி வல்லர் கருத்து.1

1 "ஆரியர் சுற்லெச் என்னும் ஆற்றைக் கடப்பதன் முன் அவர்களின் சமயம் பூர்வமகள் கொள்கைகளோடு கலக்கவில்லை என்பது உண்மையே. பிற்காலச் சமகிதைகளையும் பிராமணங்களையும் குறித்து. அவ்வாறு கூற முடியாது." ஜி.ஆh. ஹன்ரர்.

பிராமணங்களைப் பயின்ற சிலர், அரசருக்கும் செல்வருக்கும் புரோகிதராயிருந்து யாகங்களை நடத்தினர். வேதபாடல்களை நோக்கும்

1. The living Hindu religions of today from Cape Comorin to the remote corners of Tibet is essentially Tantric. Even the genuine Vedic rites that are preserved and are supposed to be derived straight from the Vades e.g Samdya have been modifed by the addition of the Tantric practices - Outline of Philisopy - P. 130, P.T.S.Iyenger

போது அவை யாகங்களுக்காகவே செய்யப்பட்டனவாகத் தெரிகின்றது. யாகங்களைப் புரோகிதராக இருந்து செய்யும் மக்களே வேதங்களைப் பயின்றனர்@ பின்பு அத்தொழில் பரம்பரைத் தொழிலாக மாறியதால், அவர்கள் ஒரு சாதியாராகப் பெருகினர். அவர்களே பிராமணராவர். அவர்கள் மறுபிறப்பைப்பற்றி அறிந்திருக்கவில்லை. அகவே அதனை அடிப்படையாகக் கொண்ட தத்துவ அறிவும் அவருக்கும் தெரியாதிருந்தது.1

ஆரணியங்கள்

பிராமணங்கள் தோன்றியபின் ஆரணியங்கள் தோன்றின. ஆரணியங்கள் என்பவை. பிராமணர் காட்டில் வாசம் செய்யும் போது படிக்கவேண்டியவை. பிராமணங்களில் காணப்படும் கிரியைகளும் இன்னொருவகையான கருத்துக் கொடுக்கும் பொருட்டு இவை தொடக்கத்தில் எழுந்தவையாகத் தெரிகின்றன. பிரிண்ட ஆரணியத்தில் காணப்படும் ஒன்றை இங்கு எடுத்துக் காட்டாகத் தருகின்றோம். 2

ஓம், விடியற்காலம் யாகக் குதிரையின் தலை@ சூரியன் அதன் கண்@ வாயு அதன் மூச்சு@ அதன் வாய் எங்கும் நிறைந்த நெருப்பு@ ஆண்டுகள் அதன் உடல்@ வானம் முதுகு@ வெளி வயிறு@ பூமி பாதங்கள்@ துருவங்கள் இடுப்புக்கள்@ அதன் இடையேயுள்ளவை விலாக்கள்@ பருவகாலங்கள் உள் உறுப்புகள்@ மாதமும் அதன் பக்கங்களும் மூட்டுக்கள்@ இரவும் பகலும் கால்கள்@ நட்சத்திரங்கள் எலும்புகள்@ முகில்கள், தசை@ பாலைவனங்கள் உணவு@ ஆறுகள், குடர்@ மலைகள், பித்தப்பையும் மூச்சுப்பையும் @ பூண்டுகளும் மரங்களும், மயிர்கள்@ உதயமாகும் ஞாயிரு முன்பக்கம்@ படும் ஞாயி பின்பக்கம்@ அதன் கொட்டாவி மின்னல்@ கனைப்பு இடி@ மூத்திரம் மழை@ சத்தம் பேச்சு@ பகல் யாகப் பாத்திரம்போல் எழுந்து முன்னே நிற்கின்றது, அதன் பிறப்பிடம் கீழ்க்கடல்@ இரா யாகபாத்திரம்@ அதன் பிறப்பிடம் மேல் கடல்@ இராப்பகல் என்னும் யாகப்பாத்திரங்கள் குதிரையைச் சூழ்ந்துள்ளன@ பந்தயக் குதிரையைப் போல அது தேவரைக் கொண்டு செல்கின்றது@ போர்க் குதிரையைப் போலக் கந்தருவரைக் கொண்டு போகிறது@ வேகமான குதிரையைப் போல இராக்கதரைக் கொண்டு போகின்றது. சாதாரண குதிரையைப் போன்று மனிதரைக் கொண்டு செல்கினற்து. கடல் அதன் நண்பன். அது அதற்குப் பிறப்பிடம்.


1. Riddle of Mohanjo Daro - New Review VOL. III The Rig - Veda contains no traces of the beyond; a couple of passage in the last book which speak of the soul of the dead man as going to the waters on plants. It seems hardly likely that so far reaching a theory should have been developed from the stray fancies of one or two lager vedic poets. It seems more probable that Aryan settlers received the first impulse in the direction from the original inhabitants of India- Sanskrit Literature P.387. Prof Macdonell.

2. The System of the Vedanta - P.8 or Paul Deussen

பிராமணங்களில் கூறப்படும் கிரியைகளால் பயனில்லை எனக் கண்ட பிராமணர், ஆரணியங்கள் மூலம் பிராமணக் கிரியைகளுக்கு வேறு பொருள் கற்பிப்பாராயினர். இதனால் அவை பிராமணங்களுக்கு மாறுபட்டனவாயிருந்தன.1 ஆரணியங்கள் தோன்றிய பின்பு உபநிடதங்கள் எழுந்தன. இருக்கு வேத காலத்தில் காட்டில் சென்று தவஞ் செய்தலாகிய வழக்கு ஆரியருக்கிடையில் காணப்படவில்லையெனத் தத்தர் கூறுகின்றார். இவ் வழக்கம் ஆதிக்குடிகளிடத்திற் காணப்பட்டிருக்கலாம் அதனைப் பின்பற்றியே ஆரியப் பிராமணரும் முதுமைக் காலத்தில் காட்டில் சென்று தவஞ் செய்தாராகலாம். முதுமையில் தனிமையிலிருந்து தவஞ் செய்தல் தமிழர் வழக்கு எனத் தொல்காப்பியங் கூறுகின்றது. ஆரிய இருடிகள் காட்டிலிருந்து ஏதோ மந்திர வித்தை போன்றவைகளைப் புரிந்த அரசரையும் பொது மக்களையும் தமக்கு அஞ்சும்படி செய்தனர். இருடி, முனிவரைப் கண்டால் அரசரும் பிறரும் சாபங்களுக்கு அஞ்சி அவர்கள் வேண்டுவன புரிந்தார்கள் எனப் புராணங்கள் கூறுதல் காண்க. தென்னாட்டு முனிவர் வடநாட்டு முனிவர் போன்றவர்களல்லர் என்றும், அவர்கள் யாருக்கும் அஞ்சுவதில்லை என்றும், அவர்களைக் கண்டு எவருமஞ்சுவதுமில்லை என்றும், விண்டர் நிற்ச் (Winternitz) என்னும் செர்மன் ஆசிரியர் கூறுவர்.

இரவா

unread,
Jul 26, 2008, 11:31:53 PM7/26/08
to minT...@googlegroups.com, தமிழாயம்
உபநிடதங்கள்

உபநிடதங்களே தமிழர்களின் மறை. உபநிடதங்களிற் கூறப்படும் ஞானங்கள் ஏட்டில் எழுதப்பட்டிருக்கவில்லை. அவை குரு-மாணாக்கர் முறையில் தலைமுறையாக வந்தது. உபநிடதம் பொருள்களைப் பிராமணர் அறிந்திருக்கவில்லை. உண்மை ஞானத்தைத் தேடி அலைந்து திரிந்த பிராமணர் அரச வகுப்பினர் பாதங்களில் மாணாக்கராக இருந்து உபநிடத ஞானங்களைக் கற்றனர்.2 தாம் கற்றறிருந்த பொருள்களை அவர்கள் நூல்களாகச் செய்து அவைகளுக்கு உபநிடதம் எனப் பெயரிட்டனர். உபநிடதம் என்பதற்குக் கிட்ட இருந்து கேட்கப்படுவது என்று பொருள். இரகசியம் எனவும் அது வழங்கும். உபநிடதங்கள், உயிர், உலகம், கடவுள் என்னும் முப்பொருள்களைப் பற்றி ஆராயும் நூல்கள். உபநிடதங்கள் பிராமணங்கள் ஆரணியங்களை ஒப்ப வேதங்களோடு சேர்க்கப்பட்டது. உபநிடதங்களுக்கு வேத முடிவு என்பது பொருள். வேதங்களைப் பிராமணன் ஆசானாயிருந்து மற்ற உயர்ந்த வருணத்தவர்களுக்குக் கற்பிக்கலாம். பெண்களும் சூத்திரரும்


1. Wisdom of the East - P.13- L.D. Barnett.
2. Indications intimate that the real guardians of these thoughts were not originally the priestly caste, absorbed in the ceremonial, but rather the caste of the Kshatriyas. Again and again in the Upanishads we meet the situation that the Bahman begs the Kshatrya for instruction which the latter after several repre-sentations of the unseemliness of such a proceeding imparts to him-The system of Vedanta - Dr. Paul Deussen.

வேதங்களைப் படிக்கவும் கேட்கவும் ஆகாது. உபநிடத ஞானங்களின் அரச வகுப்பினரும், பிறரும், பெண்களும் திறமையுடையவர்களாயிருந்தனர். ஆராய்ச்சியாளர் உபநிடதங்கள் தமிழருடையதே என முடிவு செய்துள்ளார்கள். உபநிடத ஞானமே புத்த, சைன மதங்களுக்கும் சாங்கியம் முதலியவைகளுக்கும் அடிப்படை அக்பர் காலத்தில் 'அல்லா உபநிடதம்' என ஒரு உபநிடதமும் செய்யப்பட்டது. காலந்தோறும் பல உபநிடதங்கள் எழுதப்பட்டன.

புராணங்கள்

புராணங்கள் என்பன கோயிற் பூசகராலும், பிராமணராலும் பொது மக்களின் அறிவை மழுக்கித் தாம் நல்வாழ்வு அடையும்படி எழுதி வைக்கப்பட்ட பொல்லாத பொய் நூல்கள். இதனைப் பற்றி அதிகம் கூறவில்லை. எடுத்துக்காட்டாக இங்கு ஒன்று தருகின்றோம். இது மச்சபுராணத்தில் சிவன் கூறியதாகச் சொல்லப்படுகின்றது.

"இராக்கதர், அசுரர், தைத்தியர் தானவர் ஒரு புறமும், தேவர் ஒருபுறமுமாக நின்று பொருதபோரில் ஆயிரக்கணக்கான தானவர் அசுரர் முதலியோர் மாண்டனர். இந்திரன், தானவர் ஆகியோரின் மனைவியரை நோக்கிப் பின்வருமாறு கூறுகின்றான். நீங்கள் அரசரையும் உங்கள் எசமானரையும் சூத்திரரையும் ஒரே வகையாகக் கருதி ஒழுகவேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்குச் செல்வம் உண்டாகும். வறிய ஆடவராயினும் போதுமான பொருள் கொண்டுவந்தால் அவர்களுடன் கூடிக் குலாவவேண்டும்@ கெம்பீரமாக வருபவர்களுக்குப் போகம் கொடுத்தல் ஆகாது. நீங்கள் பிதிர்களையும் தேவர்களையும் வழிபடும்போது பொன், தானியம், பசு, நிலம் முதலியவைகளைப் பிராமணருக்குத் தானமாகக் கொடுக்கவேண்டும். பிராமணர் சொல்வது போல எல்லோரும் கேட்டொழுக வேண்டும். நீங்கள் கடைத்தேற வேண்டுமாயின், கட்டாயமாக ஒழுகவேண்டிய சில விதிகளையும் கூறுகின்றேன். நீங்கள் வாழ்க்கையின் துன்பக் கடலைத் தாண்டுவதற்கு வேதங்களைக் கற்றறிந்தவர் வகுத்துள்ள சட்டம் வருமாறு@ பெண்களாகிய நீவிர் ஞாயிற்று வாரத்தில் இலை குழை அவித்த நீரில் நீராடவேண்டும். பின்பு வேதாந்தம் அறிந்த கட்டழகனாகிய பிராமணனைச் சந்தனம், பூ, வாசப்புகை என்பவைகளை வைத்து வழிபட வேண்டும். பின்பு சில பிராமணருக்குப் பச்சை அரிசியும், முட்டி நிறைந்த வெண்ணெயும் கொடுக்க வேண்டும். முன் கூறிய வேதாந்தமறிந்த பிராமணனுக்கு நல்ல விருந்து இட்டு, அவனைக் காமனாகக் கருதி வழிபடவேண்டும். அப்பிராமணனுக்குப் போகத்தில் எப்படி இச்சையோ, அப்படியெல்லாம் புன்முறுவளோடு அவனைத் திருப்தி பண்ண வேண்டும். இவ்விரதம் பிடிப்பவள் பதின்மூன்று மாம் பிராமணருக்குப் பச்சையரிசியும், முட்டிநிறைந்த வெண்ணெயும் கொடுத்து வரவேண்டும். அக்கால முடிவில் மெத்தை தலையணை, படுக்கைக்கு விரிக்கும் துப்பட்டி, விளக்கு, மிதியடி, செருப்பு, இருப்பதற்குப் பாய் முதலியவைளைத் தானமாக வழங்க வேண்டும்.

பின்பு பிராமணனையும் அவன் மனைவியையும் அழைத்தப் பொன்ந}ல், மோதிரம், பட்டாடை, பொன் வளை, பூமாலை, சந்தனம் முதலியவைகளைக் கொடுத்து அவர்களைக் கனம்பண்ணி வழிபட வேண்டும். பின்பு தங்கத்தினால் கண்வைத்த காமன். இரதி என்னும் பாவைகளைத் தட்டத்தில் வைத்து. இனிப்புப் பண்டங்கள். பால் மாடு. வெண்கலப் பாத்திரம், கருப்பங்கழி, என்பவைகளை வைத்துக் கொடுக்க வேண்டும். அப்போது விட்டுணு மகிழ்ந்து வேண்டியவைகளைக் கொடுப்பார்.

பின்பு அவனைச் சுற்றி வந்து கும்பிட்டு அவனை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். படுக்கை முதலியவைகளை அவன் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதுமுதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் கூடிச் சுகம் அனுபவிக்க வரும் பிராமணனை மரியாதை செய்து கனம் பண்ண வேண்டும். இப்படிப் பதின் மூன்று மாதங்களுக்கு அவனை திருப்தி பண்ணவேண்டும். அந்தப் பிராமணனுடைய விருப்பத்தின்பேரில் இன்னொருவன் வந்தால் ஐம்பத்தெட்டு லீலைகளாலும் அவனை மகிழ்விக்க வேண்டும்.

வியபிசாரிகளுக்குப் பாவம் உண்டாக மாட்டாத அரிய விரதத்தைப் பற்றி உங்களுக்குச் சொன்னேன். இதனை இந்திரன் தானவர்களின் மனைவியருக்குச் சொன்னான் (என்று சிவன் சொன்னார்). ஓ அழகிய பெண்களே! இவ்விரதம் பாவங்களை ஒட்டிப் பல நன்மைகளைத் தரவல்லது. நீங்கள் நான் சொன்ன வண்ணம் செய்ய வேண்டும் என்று விரும்பகிறேன்.

அமாவாசையின் பின் ஆறாவது நாள் பிடிக்கும் விரதத்தில் பிராமணரைப் பக்தியோடு வழிபட வேண்டும். வழிபடுகிறவன் படுக்கைக்குப் போகுமுன் பசு மூத்திரங் குடிக்க வேண்டும். காலையில் எழுந்து குளித்துத் தோய்ந்தபின் பிராமணருக்கு விருந்திட வேண்டும். பின்பு அவர்களுக்குப் பொன்னாற் செய்த தாமரைப் பூ கொடுக்க வேண்டும். அதோடு ஒரு சிவப்புப் பட்டாடையும் தானம் பண்ண வேண்டும்.1 - மச்ச புராணம்.

இவ்வகையான விரதத்தை எவர் முன்னிலையிலாவது ஒருவர் இன்று சொன்னால், அவர் தண்டனையடையாமல் தப்பி வருவது அரிது. இவ் வகை நீதியையும் விரதத்தையும் கடவுள் சொனன்hர் எனக் கூறும் நூலைப் பற்றி நாம் கூறுவதற்கு ஒன்றுமில்லை.

கணவனிறந்த பெண்களை உயிரோடு கொளுத்தும்படி கூறும் வேத மதம்

இறந்தவர்களோடு அவர்கள் பயன்படுத்திய பொருள்கள், அடிமைகள், நாய்கள், குதிரைகளையும், உடன் வைத்துப் புதைத்தல் அல்லது கொளுத்தலாகிய வழக்கு இவ்வுலக மக்கள் பலரிடையில் காணப்பட்டது.

1. Matsya Purana chaper LXXI pp 213,213,222-Sacred books of the East edited by Basu.


இதற்குக் காரணம். அக்கால மக்கள் இறந்தவர்களின் மறு உலகத்துணைக்கு அப்பொருள்களும். பிறவும் பயன்படும் என்று கருதினமையாகும். மக்கள் அறிவு வளர்ச்சியடைத்த காலத்தில், பெண்கள் சிலர் கணவர் இறந்தபோது தீயில் பாய்ந்து தற்கொலை புரிந்து கொண்டார்கள். அவர்கள் தற்கொலை செய்ய வேண்டும் என்னும் கட்டாயம் இருக்கவில்லை. கிரியைகளையே தமது வாழ்க்கைப் பிழைப்பாகக் கொண்டிருந்த பிராமணர், கணவர் இறந்தபோது பெண்கள் சிலர் தற்கொலை புரிவதை வாய்ப்பாகக் கொண:டு. அவ்வாறு செய்வதற்குச் சில கிரியைகளை வகுத்துத் தமது சமய நூல்களிலும் அதனை வற்புறுத்தி எழுதிவைப்பாராயினர். அதனால் காலத்தில், கணவனை இழந்த பெண்கள், தற்கொலை புரிய வேண்டும் என்னும் கட்டாயம் உண்டாயிற்று. பெண்கள் தமது உயிருக்கஞ்சியும், தீயில் உயிரோடு வேகப்போகும் துன்பத்துக்குப் பயந்தும், கதறித் துடிக்கத் துடிக்க அவர்கள், வலிதில் பிடித்து இழுத்துக் கணவனின் பிரேதத்தோடு கிடத்தித் தீமூட்டிக் கொளுத்தப்பட்டார்கள். ஒருவனைக் கொலை செய்தால் இன்று ஆங்கில ஆட்சியில் என்ன தண்டனை விதிக்கப்படுகின்றதென எல்லோரும் அறிந்ததே. இக்கொடிய செயல்களை நேரில் பார்த்த மேல்நாட்டவர்கள் மிகவும் மனவேதனையோடு, பெண்களைப் பிராமணனர் தீயிலிட்டுக் கொளுத்தும் கொடுமையைப் பற்றி எழுதியுள்ளார்கள். முதற்கண் ஆரிய நூல்களில் பெண்களைக் கொளுத்துவதற்கு அனுமதிக்கும் சட்டங்கள் சிலவற்றை இங்குத் தருகின்றோம்.

1 சுருதி சங்கிரகம், என்பது பிராமணரின் சாத்திரங்களிலிருந்து திரட்டப்பட்ட சட்டங்கள். அந்நூலிலிருந்து 1799இல் விதவைகளைக் கணவனோடு உடன் கட்டை ஏற்றுவதற்கு அனுமதிக்கும் சட்டங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுட் சில பின் வருவன:

கணவன் இறந்த பின்பு அவனோடு நெருப்பில் எரிந்து இறக்கின்றவள் சுவர்க்கத்தை அடைகின்றாள். கணவன் இறக்கும்போது அவள் ஒருநாள் வழிப்பயணத்துக்கு அப்பால் இருந்தால் பிரேதத்தை எரிக்காமல் ஒரு நாள் பொறுத்திருக்கலாம். - அங்கீரர்.

மனைவி கணவனோடு உடன்கட்டை ஏறினால், அல்லது தற்கொலை செய்துகொண்டால், அவளுடைய சுற்றத்தினர் மூன்று நாள் தீட்டுக் காக்க வேண்டும். அதன் பின்பு சிரார்த்தம் செய்ய வேண்டும். அவள் உடனே கணவின் மரணத்தைப்பற்றி அறியாவிட்டாலும், உடன்கட்டை ஏறா விட்டாலும், தீட்டுக்குரிய நாள்கள் கழிந்த பின் நெருப்பில் விழுந்து இறந்து போகவேண்டும். அவள் அவ்வாறு தனியே இறந்தால் மூன்று நாட்கழித்து சிரார்த்த பிண்டம் போட வேண்டும்
- இருக்கு வேதம்.

1. The Burning of Windows - William Johns-1816

ஒருவன் வறியவனாக அல்லது பாவியாக இருந்த போதிலும் மனைவி உடன்கட்டை ஏறினால், அவளுடைய பாவங்கள் உடனே பறந்து போகும். மனைவி கருப்பமாக இருந்தாலும், குழந்தையுடைவளாயிருந்தாலும் அவள் கணவனுடன் இறக்கவேண்டியதில்லை. குழந்தையைப் பாதுகாப்பதற்கு வேறு யாரேனும் இருந்தால், அவள் உடனே உடன்கட்டை ஏறலாம். ஒருத்தி பிரேதத்தைக் கொளுத்தும் விறகின் மேல் ஏறிச் சாவுக்குப் பயந்து தப்பி ஓடினால், அவள் பிரசாபதியா என்னும் கடிய விரதம் பிடிக்க வேண்டும்.

இரவா

unread,
Jul 26, 2008, 11:34:02 PM7/26/08
to minT...@googlegroups.com, தமிழாயம்


ஆரிய வேதங்கள்

முன்னுரை

ஆரியர் தமிழரின் சமயம், ஆரியர் தமிழர், ஆரியம் தமிழ் என்பவைகளின் ஆராய்ச்சி, ஒரு கூட்டத்தவரின் வாழ்வைப் பாதிக்கின்றது. வேதங்கள் கடவுளாற் சொல்லப்பட்டவை@ பிராமணர் பிரமாவின் முகத்திலிருந்து தோன்றினோர்@ சமக்கிருதம் தேவர்கள் பேசும் மொழி@ அம்மொழியில் சொல்லாதவைகளைத் தேவர் அறிந்த கொள்ள மாட்டார்கள்@ ஆகவே மக்களின் எண்ணங்களைக் கடவுளருக்கு அவர் விளங்கக்கூடிய மொழியில் கூறுதல் வேண்டும். அவ்வாறு கடவுளர் எண்ணங்களைப் பொது மக்களுக்கும், பொதுமக்களின் எண்ணங்களைக் கடவுளுக்கும், உணர்த்துவேராகிய தாம் பூதேவர் என்பன போன்ற பொய்யான பொல்லாத கருத்துக்களை மக்களிடையே பரவச் செய்து, அவர்களின் அறியாமை மூலம் உலகில் மதிப்பும் நல்வாழ்வும் பெற்று வாழும் ஒரு கூட்டத்தினர், மேற்படி கருத்துக்களுக்கு மாறான ஆராய்ச்சிகளை வெளியிட விரும்ப மாட்டார்களல்லவா? ஆகவே அவர்களால் எழுதப்பட்ட, எழுதப்படும் நூல்களில் தமிழரின் உயர்வுகளைக் கூற வேண்டிய பகுதிகள் காணப்படுவதில்லை. அவர்களைப் பற்றிக் கூறவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டால், அவர்கள் அரக்கர், இராக்கதர், பேய்கள், பைசாசுகள் எனக் கூறப்படுவர். இதனால் தென்னிந்திய மக்களைப் பற்றிய உண்மை வரலாறுகள் வெளிவராதிருந்தன.1

மேல்நாட்டவர்கள் தென்னிந்திய மக்களின் மேலான நாகரிகத்தை விளக்கிப் பல ஆராய்ச்சிகள் செய்துள்ளார்கள். மொகஞ்சதாரோ அரப்பா முதலிய தமிழரின் பழைய நகரங்களின் நாகரிகத்தைப் பற்றி மேல்நாட்டு வெளியீடுகளில் பல ஆராய்ச்சிகள் வெளிவந்துள்ளன. அவைகள் போன்றவை தமிழ்நாட்டில் வெளிவருவதில்லை. இதற்குக் காரணம், தமிழர் நாகரிகம் ஆரிய நாகரிகத்திற்கு முற்பட்டதென்றும். அந்நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டே ஆரிய நாகரிகம் கட்டப்பட்டுள்ளது என்றும். பொது மக்கள் அறியின், அது ஒரு கூட்டத்தினரின் வாழ்வுக்குப் பங்கமாகு மென்பது பற்றி ஆகலாம்.

1. At any rate we may be on our guard against looking at everything through Aryan or Brahmanical Specatacles… that almost everthing has passed into written form has been cast in an Aryan mould. For real history the Brahmanic writers never cared anything…… everything about non-Aryan race is either omitted or only noticed the conquest of the 'twice born' over the 'demons' and barabarians. - Village Community. p.91-B.H. Barden Powell M.A.C.I.E.

நாம், உண்மையான தமிழர், ஆரியர் வரலாறுகளைப் படிகக் வேண்டுமாயின் மேல்நாட்டறிஞரால் எழுதப்பட்டவைகளையே படித்தல் வேண்டும். மேல்நாட்டறிஞரால் எழுதப்படும் உண்மை ஆராய்ச்சிக்கும், பிராமண வகுப்பினரால் எழுதப்படும் ஆராய்ச்சிகளுக்கும் வேறு பாட்டைக் காணலாம் பின்னவரிடத்தில் தமிழரிலும் பார்க்க ஆரியர் நாகரிகத்திற் சிறந்தவர்கள்@ அவர்களே தமிழருக்கு நாகரிகத்தைக் கற்பித்தவர்கள் எனக் கூறும் குறிக்கோள் இருப்பதை நாம் காணலாம்.1 ஆரிய வேதங்கள் என்னும் இச் சிறிய நூல், மேற்புல அறிஞர் பலர் வெளியிட்டுள்ள சிறந்த கருத்துகளைத் துணைக்கொண்டு எழுதப்பட்டதாகும். சிறுகுழந்தையும் ஒவ்வொன்றும் நியாயம் கேட்டு ஆராய்கின்ற காலம் இது@ ஆகவே பொய்க் கதைகளை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கைகள் இனி நெருப்பின் முன்வைத்த வெண்ணெய் போலாகி விடுமென்பதில் சந்தேகமில்லை.

பிராமண ஆசிரியர்கள், இந்திய மக்கள் ஆராய்ச்சித்துறையில் இருப்பது எப்படி இருக்கிறதென்றால், தமிழருடைய உண்மை வரலாறு வெளியில் வராதபடி, அவைகளை வடிகட்டி மறித்து ஆரியர் வரலாறுகளையே வெளியில் விடுவதற்கு இருப்பதுபோல வென்க.

ந.சி.கந்தையா

சென்னை
01.01.1947


1. History and philosophy of the Lingayat Religion - p.10 -M.R.Sakbare. M.A.T.D


ஆரிய வேதங்கள்

தோற்றுவாய்

நாம் தமிழர்; தமிழராகிய நாம் ஆரிய வேதங்களைப் பற்றியறிய வேண்டிய முக்கியம் யாது? எனப் பலர் வினாவலாம். நம்மவர் பலர் ஆரிய வேதங்களைப் பற்றி அறியார்@ அவை கடவுளாற் செய்யப்பட்டவை என நம்பி வருகின்றனர். இன்று ஆலயங்களில் சொல்லப்படுவன கடவுள் வாக்காகிய வேதங்கள் என நம்பப்படுகின்றமையினாலேயே, வடமொழி சமய மொழியாகவும் தமிழ் நாட்டில் இடம்பெற்றுள்ளது. இது நம்மவர் அறியாமையின் விளைவாகும்.

சில ஆண்டுகளின் முன் திரு. கா. சுப்பிரமணியபிள்ளை அவர்கள், திருநான்மறை விளக்கம் என்னும் கட்டுரைவாயிலாக ஆரிய வேதங்கள் காலந்தோறும் மக்கள் பாடிய பாடல்களின் தொகுதிகள் என எடுத்த விளக்குவாராயினர். அப்பொழுது நம்மவருள் ஒருவரே, வேதங்கள் கடவுளாற் செய்யப்பட்டவை எனக் கூறி முந்நூறு பக்கங்களுக்கு மேல் விரிந்த ஒரு புத்தகத்தை வெளியிடுவாராயினர். அதற்குப் பார்ப்பன வகுப்பினரின் ஒருவர் மதிப்புரையும் வழங்கியிருந்தார். வேதங்கள் கடவுளாற் செய்யப்பட்டன என்று நாட்டுவதற்கு அவ்வேத பாடல்களுள் ஒன்றேனும் அந்நூலில் எடுத்து ஆளப்படாதிருந்தமை இங்குக் குறிப்பிடத் தக்கது. இலங்கையில் வாழ்பவரும் பி.எஸ்ஸி. பட்டதாரியுமான, தமிழ்ப் பண்டிதருமாயுள்ள ஒருவரும், வேதங்கள் கடவுளாற் சொல்லப்பட்டனவே என்று சில திங்கள் வெளியீடுகளில் எழுதுவாராயினர். வட இலங்கையில் வாழ்பவரும் பி.ஏ. பட்டதாரியும் தர்க்க நூல் வல்லாருமாகிய இன்னொருவர் வேதங்கள் கடவுளாற் செய்யப்பட்டன என்று முழங்கிய அளவில் நின்றுவிட்டது. யாகத்தில் வெட்டப்பட்ட விலங்குகள் உயிர்பெற் றெழுந்தன என்று கூறி கந்த புராணத்தினின்றும் ஒரு பிராமணமும் எடுத்துக்காட்டியுள்ளார். ஆங்கிலமுந் தமிழும் ஒருங்கு பயின்ற பட்டதாரிகளே இவ்வாறு கூறுவார்களாயின் பொதுமக்களின் நிலைமை என்னாகும்? வேதம் கடவுளாற் செய்யப்பட்டது எனக் கூறுதல் நம்மவர் பலருக்குப் பழக்கமாக அமைந்துள்ளது. இப் பழக்கத்தை மாற்றுவது கடினமாயிருக்கின்றது. "பழக்கங் கொடிதுகாண்" என்றார் ஒழிவிலொடுக்க நூலுடை யாரும்.

ஆரிய வேதங்களிலுள்ள பாடல்களைச் செய்த புலவர்களின் (இருடிகள்) பெயர்கள் எல்லாம் காணப்படுகின்றன. புலவர்கள் பாடிய பாடல்கள், பாட்டின்நடை, பாடலில் துதிக்கப்பட்ட தெய்வம் முதலிய விவரங்கள் அடங்கிய நூல் வடமொழியில் உண்டு. அதற்கு அனுக்கிரமணி என்று பெயர்.1 ஆரிய வேதங்கள் ஒரு கூட்டத்தினருக்கு மாத்திரமே தெரிந்திருந்தன. மற்றவர்கள் அவைகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. மற்றவர்கள் அவைகளை ஓதவோ, கேட்கவோ கூடாது என அவர்கள் சட்டம் செய்திருந்தார்கள். அதற்குக் காரணம் அவை கடவுளாற் செய்யப்பட்டிருநத்தலும், அவை தேவர்கள் வழங்கும் தெய்வ மொழியில் உள்ளனவாதலும் என அக் கூட்டத்தினர் கூறுவாராயினர். அக்பர் காலத்திற்கூடப் பிராமணர் ஓதிவரும் வேதம் எவ்வகையினது என்று அறிய அவ்வரசன் முயன்று வந்தானென்றும், அவனுக்கு அது கைகூடவில்லை என்றும் அறிகின்றோம்.

மேல்நாட்டவர் இந்திய நாட்டுக்கு வரத் தொடங்கினார்கள். இந்திய நாட்டின் பல பகுதிகள் ஆங்கிலர் ஆட்சிக்கு உட்பட்டன. அப்பொழுது வழக்குகளை விளங்கித் தீர்ப்பளிப்பதற்கு இந்திய நாட்டில் வழங்கும் சட்டங்களையும் தேச வழக்குகளையும் அறியும் கட்டாயம் ஆங்கில நீதிபதிகளுக்கு ஏற்பட்டது. 1773 இல் வாரன் ஹேஸ்டிங்ஸ் என்பவர், வங்காளத்துக்குக் சுவர்னர் ஜெனரல் ஆக்கப்பட்டார். இந்தியாவிலுள்ள மற்றைய ஆங்கிலர் இராச்சியங்களுக்கும் அவரே தலைவராயிருந்தார். அவர், நியாயப்பிராமணங்கள் எல்லாவற்றையும் அறிந்த பிராமணரை அழைத்துச் சட்ட நூல் செய்யும்படி பணித்தார். அவர்கள் 'விவேதன்வசேது' என்னும் சட்ட நூல் செய்தார்கள். அதில் குடும்பச் சட்டங்களும், சொத்துரிமை பற்றிய காரியங்களும், இவைபோன்றவையும் அடங்கியுள்ளன. அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கக் கூடியவர்கள் ஒருவரும் இன்மையால், அது பாரசீகத்துக்குத் திருப்பப்பட்டு பின், பாரசீகத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. அது ('A Code of Gentoo') மேன் மக்களின் சட்டம் என்னும் பெயருடன் 1785-ல் அச்சிடப்பட்டது. இதுவே "இந்து லா" (Hindu Law) எனப்படுகின்றது. 1830 வரையில் வேதங்களைப் பற்றி மேல்நாட்டவர்கள் அறியவில்லை. வேதங்களின் ஒரு பகுதி 1838 இல் இலண்டனில் வெளிவந்தது. 1849-க்கும் 1875-க்கும் இடையில் மாக்ஸ்மூலர் இருக்குவேத பாடல்களைச் சாயணர் உரையோடு அச்சிற் பதித்தார். 1851-க்கும் 1863-க்குமிடையில் இருக்கு வேதமூலமும் முழுமையும் அச்சிடப்பட்டது. வேதமொழி செர்மன் மொழிக்கு (German language) இனமாயிருந்தமையின், மொழி ஆராய்ச்சியின் பொருட்டு மேல்நாட்டவர்கள் சமக்கிருதத்தைப் பயின்றார்கள். இலத்தின், செர்மன், பிரென்சு, ஆங்கிலம் முதலிய மொழிகளில் வேதங்கள் பலரால் மொழி பெயர்த்த அச்சிடப்பட்டன. இந்திய நாட்டிலுள்ள பிராமணரிலும் பார்க்க மேல்நாட்டவர்களே வேதங்களைப் பற்றி நன்கு அறிவார்கள். இன்று சரித்திர

1. Of the writings called Anukramani in which the metre, the deity and the authour of each song are given in their proper order - The History of Indian literature-P.61-A.WEBER

ஆராய்ச்சித் துறையில் வேலை செய்யும் பிராமண வகுப்பினரும், பிராமண வகுப்பினரல்லாதாரும் வேதங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகளையே எடுத்த ஆளுகின்றனர். மேல்நாட்டு நன்மக்களின் குன்றாத உழைப்புக். காரணமாக ஆரிய வேதங்களும் அவைகளைப் பற்றிய உண்மைகளும் முற்றாக வெளிவந்துள்ளன. அவைகளைப் பிராமணரல்லாதாரும், இன்று நன்கு கற்றறியலாம். ஆகவே இன்று அவை மறைக்கப்பட்டிருக்கவில்லை.

ஆரிய வேதங்களைப் படித்துப் பார்த்தால், அவை சாதாரண மக்களால் பாடப்பட்டவை என்று எளிதிற் புலப்படுத்தலுமல்லாமல், அவை அறிவுடைய மக்களின் சமய நூலாகா இருக்கத்தகாதன என்றும் தெள்ளிதிற் புலப்படும். தமிழ் மக்களுக்கும் ஆரிய வேதங்களுக்கும் யாதும் உறவு இல்லை. ஆரியரை எதிர்த்துப் போராடியவர்களும், தாசுக்கள் என்று அவர்களால் இழித்துக் கூறப்பட்டவர்களுமாகிய தமிழர், அழிந்து போக வேண்டுமென்று திட்டிப்பாடிய பாடல்கள் பல வேதங்களில் காணப்படுகின்றன. இவ்வுண்மைகளை எல்லாம் நம்மவர்கள் நன்கு அறிந்து உண்மை கடைப்பிடிக்குமாறே இந்நூல் வெளிவருகின்றது.

ஆரியர்

வேதங்களைப் பற்றி அறிந்து கொள்வதன்முன், நாம் ஆரியர் யார்? என்று அறிந்துகொள்ளுதல் வேண்டும். இரசியா நாட்டின் தென்கோடியில் ஒருவகை வெண்ணிற மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.1 அவர்கள் எப்பெயரால் அறியப்பட்டார்கள் என்று ஒருவராலும் அறிய முடியவில்லை. அம்மக்கள் பாரசீகம், இந்தியா, ஐரோப்பாவின் பல பகுதிகளில் சென்று வாழ்ந்து, பற்பல பெயர்களைப் பெற்றனர். பெயர் அறியப்படாத அம்மக்களின் ஒரு கூட்டத்தினர் 'ஆரிய' எனப் பாரசீக, ஆரிய வேதங்களிற் கூறப்பட்டுள்ளார்கள். இக் கூட்டத்தினருக்கு வழங்கிய 'ஆரிய' என்னும் பெயரே அவர் இனத்தவர்களாகிய எல்லாக் கூட்டத்தினருக்கும் பெயராக வழங்குவதாயிற்று. இந்தியா, பாரசீகம் ஐரோப்பாவின் பல பகுதிகளிற் சென்று வாழ்ந்து ஆரிய மக்களின் மொழிகளிலுள்ள பல சொற்கள், ஒரே வகையாக விருக்கின்றன. ஒரே வகையான அச்சொற்கள் பழைய ஆரியச் சொற்கள் எனத் துணியப்படுகின்றன. அவ்வகை ஆரியச் சொற்களைக் கொண்ட பழைய ஆரியர் வாழ்ந்த இடம், அவர்களின் நாகரிகம், அவர்கள் அறிந்திருந்த தொழில்கள், அவர் நாட்டிற் காணப்பட்ட பறவை, விலங்குகள், மரஞ்செடிகள், போன்றவை அறியப்படுகின்றன. அவ்வகை ஆராய்ச்சியினால் பழைய ஆரியர் இரசிய நாட்டின் தென்கோடியில் வாழ்ந்த கொண்டிருந்தார்கள் என்பது உறுதிப்படுகின்றது.

1. The original common name of the so called Aryan race is still unknown. One thing is certain that they were not called Aryans. For many other Aryan tribes had other names - Archaens, Celts, Italics, Tocharians, Phrygians etc. - The cradle of the Aryans - H. Heras - New Review VoL 5 P. 353.

கலப்பற்ற ஆரியர் உளரா?

ஆரியர் என்னும் மக்கள், சென்ற சென்ற இடங்களில் வாழ்ந்த மக்களோடு தாராளமாகக் கலந்து கொண்டார்கள். இன்று இவ்வுலகத்திலேயே கலப்பற்ற ஆரியர் இலராவர். இந்திய நாட்டிலே, காசுமீரத்தில் அதிகக் கலப்பற்ற ஆரியர் வாழ்கின்றார்கள் என்று கருதப்படுகின்றது. இன்று, மக்கள் தம்மை ஆரியர் எனக் கூறிக்கொள்வது நகைப்புக் கிடமானது. அதிலும் தென்னிந்திய பிராமணர் அவ்வாறு தம்மை அபிமானித்து வருவதுதான் வியப்புக்களுள் மிக வியப்புடையதாகும்.1

வேத பாடல்களின் தொடக்கம்

இரசிய நாட்டினின்றும் வந்து, இந்திய நாட்டிற் குடியேறிய மக்கள் வழிபட்ட கடவுளர், தமிழர் வழிபட்ட கடவுளரிலும் வேறானோர். அலைந்து திரியும் மக்களாக இருந்தமையின், அவர்கள் கோயில்களை அமைத்துக் கடவுளரை வழிபடவில்லை. கடவுளரைக் குறித்துப் பலியிடுதலே அவர்களின் சமயமும் சமயச் சடங்குமாயிருந்தது. பலியிடும் போது, தெய்வங்கள், தாம் விரும்பிய இவ்வுலக சுகங்களைக் கொடுக்கும் பொருட்டுச் சிலர் அவர்கள் மீது பாடல்களைப் பாடினர். அப் பாடல்களின் தொகை வேதம் எனப்பட்டது. ஆரியர் கி.மு. 2000 வரையில் இந்திய நாட்டை அடைந்தார்கள். வேதபாடல்கள் வியாச முனிவரால் நான்காக வகுக்கப்பட்டன என்று சொல்லப்படுகின்றது. வியாசர் பாரத காலத்தவர். பாரதம் கி.மு. 13 ஆம் நூற்றாண்டு வரையில் நிகழ்ந்ததெனப் படுகின்றது. ஆகவே கி.மு. 2000க்கும் கி.மு. 1300க்கும் உட்பட்ட காலங்களிற் செய்யப்பட்ட பாடல்கள், வேதங்களில் அடங்கியுள்ளன என்று விளங்குகின்றது.

வேதங்களிற் கூறப்படும் தேவர்கள், தயஸ், வருணன், மித்திரன், ஆதித்தர், சூரியன், சாவித்தர், பூசன், விஷ்ணு, அஸ்வினிகள், உசாக்கள், இரதி, இந்திரன், உருத்திரன், மருத்துவர், வாயு, அல்லது, வாதா, பிருதுவி, அக்கினி, பிரகஸ்பதி, சோமன், சிந்து ஆறு, விபாஸ் ஆறு, சுதுட்ரி (Sutlej) ஆறு, சரஸ்வதி (ஆறு) முதலியோராவர். தேவுக்களும் முன்பு இறப்பவர்களாயிருந்தார்கள். சோம இரசத்தைப் பருகி அவர்கள் இறப்பை ஒழித்தார்கள். தெய்வங்கள், வடிவில் மனிதனைப் போன்றனவே. தீக்கடவுளின் நாக்கும் உறுப்புக்களும் நெருப்பின் சுவாலைகள். சிலர் போர்க்கடவுளர். இந்திரன், இவ்வகையினன். கடவுளர், குதிரை அல்லது வேறு விலங்குகள் பூட்டிய தேரில் வானத்தில் சவாரி செய்கிறார்கள். அவர்களுடைய உணவு, பால், நெய், இறைச்சி, தானியம் முதலியன. அவர்களுக்கு அவ்வுணவு பலிகள் மூலம் கிடைக்கின்றன. அக்கினி அவர்களுக்கு அவைகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறான். சில சமயங்களில் அவர்கள் தமது தேர்களில் வந்து பலிகளை ஏற்கின்றனர். அவர்களின் இருப்பிடம் வானத்திலுள்ள சுவர்க்கம். அவர்களுக்கு ஆற்றல் மிக உண்டு. அவர்களை மகிழ்விப்பதால் அவர்கள் மக்களுக்கு நேரும் இடையூறுகளைப் போக்குகின்றனர். உலகிலுள்ள எல்லா உயிர்களின் மீதும் அவர்கள் அதிகாரம் செலுத்துகின்றனர்.




வேதம் என்னும் பெயர்

ஆரிய மக்கள் தம்முன்னோர் கடவுளரைத் துதித்துப் பாடிய பாடல்களுக்கு வேதம் எனப் பெயரிட்டார்கள். வேதபாடல்கள் அறிவு வளர்ச்சிக்காகப் பாடப்பட்டனவல்ல. கடவுளின் மறைவான பெயர்களைக் கூறும் மந்திரங்களாகச் செய்யப்பட்டன. கடவுளின் மறைவான பெயர்களைக் கூறும் மந்திரங்களாகச் செய்யப்பட்டன. மந்திரம் என்பதற்கு மறைத்துச் சொல்லப்படுவது என்று பொருள். வேதம் என்பதற்கு அடி, 'வித்' எனப்படுகின்றது அது பொருந்துமாறில்லை. ஆரிய மக்கள் வருமுன்னரே இந்திய நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு மறையிருந்தது. மறை இருவகை@ கடவுளின் இரகசியமான பெயரைச் சொல்வதாகிய மந்திரம் ஒன்று@ மற்றது குரு மாணாக்கர் முறையில் உபதேசிக்கப்படும் உண்மை ஞானங்கள். தமிழர் தமது தத்தவ ஞானங்களையும் சமயக் கருத்துக்களையும் நூலாகச் செய்யும் வழக்கில்லை. இதனை, "அந்நிலை மருங்கின் அறமுதலாகிய மும்முதற்பொருட்கும்

1. The theory is that religion arose from the worship of deceased ancestors. This is usually held to be more convincing than the theory of nature worship, in that it gives a reason why man as a fact came to believe in divine or super human beings-Vedic Hymns - P.15-Edward T.Thomas.

உரிய என்ப" (தொல்.செய்.106) என்னும் தொல்காப்பியச் சூத்திரம் விளக்குகின்றது. இதனால் தமிழரின் சமய சம்பந்தமான கருத்துக்கள் மறை, வேதம் எனப்பட்டன. வேதம் என்பதற்கும் மறை என்னும் பொருளேயாகும். வேதம் என்னும் சொல், மற்றைய ஆரிய மக்களின் மொழிகளிற் காணப்படாமையால், அது தமிழ்ச்சொல் என்பது நன்கு துணிப்படும். வேதம் என்னும் சொல்லுக்கு உண்மையான அடியைக் காணமாட்டாத ஆரிய மக்கள், அதற்கு அடி, 'வித்' எனக் கூறலாயினர். தமிழிலிருந்து வேதங்களிற் சென்று ஏறியுள்ள பல தமிழ்சொற்கள் உள்ளன என்பதைக் கால்டுவெல், கிற்றெல் முதலிய ஆராய்ச்சி வல்லார் காட்டியுள்ளார். "தமிழ்ச் சொற் பிறப்பு ஒப்பியல் அகராதி" என, நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் வெளியிட்டு வரும் நூலில், தமிழிலிருந்து வடமொழியில் சென்று வழங்கும் பல தமிழ்ச் சொற்களுக்குத் தப்பாக வடமொழி மூலங்கள் கூறப்பட்டிருத்தல் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இன்று தமிழில் வழக்கொழிந்த அரிய தமிழ்ச்சொற்கள் பலவற்றை மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு முதலிய மொழிகள் காப்பாற்றி வைத்திருக்கின்றன. அவ்வாறே ஆரிய மொழியும் வழக்கிறந்த பல தமிழ்ச் சொற்களைக் குறிக்கும் சொற்கள், அப்பொருளின் வெவ்வேறு இயல்புகளைக் குறிக்கும் சொல் மூலங்கள் வாயிலாகப் பிறந்து வழங்கின. அவற்றுட் சில தமிழில் வழக்கிறந்துபோக, மற்றவை சில வடமொழியிற் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பாய் என்னும் அடியாகப் பரி என்னும் சொல்லும், அசை என்னும் அடியாக அசுவம் என்னும் சொல்லும் பிறந்தன. அசுவம் என்னும் சொல் தமிழில் வழக்கிறந்தது. அது இன்று வடமொழியிற் காணப்படுதலின், அது வடமொழிச் சொல் என்று கருதப்படுகின்றது. இவ்வாறே வேதம் என்பது மறை என்னும் பொருளில் வழங்கிய தமிழ்ச் சொல் என்பது திண்ணம். இப் பெயரையே ஆரியர் தமது பாடல்களுக்கு இட்டு வழங்கினர். வேதங்களில் மறைத்தற்குரியது யாதும் இன்மையால், அப்பெயர் இடுகுறிப்பெயராக அவைகளுக்கு இடப்படலாயிற்று. தமிழர் தமது சமயத் தொடர்பாக வழங்கிய பெயர்களை, ஆரிய மக்களும் ஆண்டமையின் பிற்காலங்களில் பெரும் மயக்கம் உண்டாவதாயிற்று.

மந்திரங்கள் மறை ஆதல்

வரலாறு தொடர்பான உண்மை ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டுமாயின், நாம் உலகமக்களின் வரலாற்றை அறிய வேண்டும்.

எண்ணங்களே மொழியாக மாறுகின்றனவென்று நாம் எல்லோரும் அறிவோம். எண்ணங்களுக்கு ஆற்றல் உண்டு. ஒருவன் தும்மினால் அவனைப் பற்றி யாரோ நினைக்கிறார்கள் என்ற நம்பிக்கை, உலகமக்கள் எல்லோரிடையும் காணப்படுகின்றது. "வழுத்தினாள் தும்மினேனாக வழித்தழுதாள்-யாருள்ளித் தும்மினிரென்று" எனத் திருவள்ளுவனாரும் கூறுதல் காண்க. ஆப்பிரிக்காவிற் சில மக்கள் தமது உண்மைப் பெயரைப் பிறக்கு வெளியிடுவதில்லை. உண்மைப்பெயரை உச்சரித்துப் பிறர் தமக்குத் திங்கிழைக்க முடியுமென அவர்கள் நம்புகின்றார்கள். ஆகவே அவர்களின் உண்மையான பெயர், அவர்களின் கிட்டிய உறவினருக்கு மாத்திரம் தெரியும். தமக்குத் தீங்கு இழைக்கக்கூடிய விலங்கின் பெயரை அவர்கள் சொல்லார்கள். சொன்னால் அது வந்து உடனே தம்மைக் கொன்றுவிடும் என அவர்கள் நம்புகின்றார்கள். அவ்வாறு சொன்னமையால் அவ்விலங்கு வந்து அவர்களில் சிலரைக் கொன்று விட்டதென்னும் பழங்கதைக் அவர்களிடையே உள்ளன. இராக்காலத்தில் 'பாம்பு' என்று சொல்லுதல் ஆகாது என, முதியவர்கள் குழந்தைகளுக்குக் கூறியதை நாம் கேட்டுள்ளோம். இறந்தவனின் பெயரைச் சொல்லுதல் ஆகாது என்னும் நம்பிக்கை சில மக்களிடையே இருந்து வருகின்றது@ பெயரைச் சொன்னால் இறந்தவரின் ஆவி வந்து, தமக்குத் தொந்தரவு கொடுக்குமென்பது அவர்களின் நம்பிக்கை. இவ்வாறே தெய்வத்தின் உண்மையான பெயரைச் சொன்னால் தெய்வம் வந்துவிடும் என்னும் நம்பிக்கை மக்களிடையே இருந்து வந்தது. தெய்வங்களின் உண்மையான பெயர் சிலருக்கு மாத்திரம் தெரியும். யேகோவின் பெயரை கடவுளே மோசேய்க்குச் சொன்னார். அப் பெயர் மாத்திரமாகப் பயன்பட்டது. அப்பெயரை யாரும் வெளிப்படையாகச் சொல்லுதல் கூடாதென்றும் சட்டம் இருந்தது. அவ்வாறு சொல்பவருக்குக் கடுந்தண்டனை விதிக்கப்பட்டது. எழுதுங்கால் அப்பெயர் வேறு வகையாக எழுதப் பட்டது. இன்று மூல மந்திரங்கள் என வழங்குவன, கடவுளர்களின் பெயர்களே. கடவுளரின் மறைவான பெயர்களும், அப் பெயர்கள் அடங்கிய பாடல்களும், மந்திரங்கள் அல்லது மறைகள் எனப் பட்டன. அவை குரு மாணாக்க முறையில் சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்தன. மறை, மந்திரம், வேதங்கள் என்னும் பெயர்கள் தோன்றுவதற்குக் காரணம் இங்கு விளக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியில் இன்னபாடலுக்கு இன்ன ஆற்றல் உண்டு என்பதுபோன்ற கருத்துக்கள் உண்டாயிருந்தன. ஒருவன் யாது நிகழ் வேண்டுமென விரும்பாமலே அவ்வகைப்பாடல் ஒன்றைச் சொன்னால், அது அப்பாடலுக்குரிய பயனைத் தப்பாமற் பயந்துவிடுமென்னும் கருத்து உண்டாயிருந்தது. "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த - மறைமொழி தானே மந்திர மென்ப" (தொல் - செய் - 178) என்பது தொல்காப்பியம். "சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டும் பயக்கச் சொல்லும் ஆற்றல் உடையாராவார், ஆணையாற் கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப் புலனாகாமற் சொல்லும் சொற்றொடர்கள் எல்லாம் மந்திரம் என்ப" என அதற்குப் பேராசிரியர் உரை கூறியுள்ளார். இவ்வகைக் கருத்தே உலகின் மற்றைய இடங்களிலும் இருந்து வந்தது. நச்சுச்சொல், மங்கலச் சொல், அமுத எழுத்து, நச்செழுத்து, அறம்பாடுதல் போன்றவை முற்கால மந்திரங்களைப் பற்றிய கருத்துக்களின் நிழல்களேயாகும்.

தெய்வங்களை அழைப்பதற்காகச் சொல்லப்பட்ட பாடல்கள், மந்திரங்களாகக் கருதப்பட்டன. அப்பாடல்கள் தெய்வங்களைத் துதிக்கும் நோக்கமாகப் பாடப்பட்டனவல்ல. அவைகளை வரும்படி கட்டாயப்படுத்தும் பொருட்டே பாடப்பட்டன. இன்று வழங்கும் தோத்திரங்கள் தெய்வங்களை அழைக்கும் மந்திரங்களைப் பின்பற்றிச் செய்யப்பட்டவையாகும்.

இக்கருத்துப் பற்றியே ஆரிய வேதங்களிற் காணப்படும் பாடல்கள் 'மந்திரம்' என்னும் பெயரைப் பெறலாயின.

வேதங்கள் கடவுளாற் சொல்லப்பட்டன என்ற மயக்கம்



ஆரியரின் சமயம். யாகம் செய்வது ஒன்றனையே குறிக்கோளாகக் கொண்டது. ஊன், தானியம், நெய், சோமச்சாறு முதலிய உணவுகளை யாகங்கள் வாயிலாகத் தேவர்களுக்குக் கொடுப்பதால், இம்மையில் தாம் விரும்பியவற்றைப் பெறுவார்கள் என்றும். மறுமையில் செம்மையுற்றிருப்பார்கள் என்றும் அவர்கள் நம்பினார்கள். இந் நம்பிக்கையினால் அரசரும் செல்வரும் யாகங்களைச் செய்தனர். பிராமணர் புரோகிதராக விருந்து யாகங்களை நடத்தி வைத்தனர். அதற்காக அவர்கள் மிக்க பொருளைத் தக்கணையாகப் பெற்றனர். தமக்கு மெய்வருத்தமின்றி எத்தொழிலினால் மதிப்பும் செல்வமும் கிடைக்கின்றனவோ, அத் தொழிலை நிலைப்படுத்தும் பொருட்டு அவர்கள் தாம் பயின்றுள்ள மந்திரங்கள் கடவுளாற் சொல்லப்பட்டன வென்றும், அம்மந்திரங்கள் செய்யப்பட்டுள்ள மொழி கடவுள் மொழி என்றும், அம்மொழியில் சொல்லப்படாதவைகளைக் கடவுளர் அறிந்து கொள்ளமாட்டார் என்றும் கூறி அரசர், பெருமக்கள், பொது மக்கள் எல்லோரையும் நம்பும் படி செய்தனர். முற்கால மக்கள் பொய்களிலிருந்து மெய்யைப் பிரித்து அறியும் ஆற்றல் இல்லாமல் இருந்தார்கள். அது பற்றியே ஒருபோதும் நிகழமுடியாத புராணக் கதைகளை மெய்யென நம்பி வந்தார்கள். இராமர் பதினோராயிரம் ஆண்டு அரசு புரிந்தார். தசரதன் அறுபதினாயிரம் ஆண்டு உயிர் வாழ்ந்தார் என்னும் கதைகளை மக்கள் நம்பி வந்திருக்கிறார்கள். மெகஸ்தீனஸ், ஹெரதோதஸ் (Heradotus) போன்ற ஆசிரியர்களும் நம்பத் தகாதவற்றை உண்மையென நம்பினார்கள். இந்தியாவில் சிலருக்குக் காது நீளமாக இருக்கிறது. அவர்கள் காதைப் பாயாக விரித்துக்கொண்டு அதன்மீது படுத்து நித்திரை கொள்ளகிறார்கள். சிலர் மூக்கினால் உணவ கொள்ளகிறார்கள் என்பனபோன்ற கதைகளை மெகஸ்தீனஸ் எழுதியுள்ளார். வரலாற்றாசிரியர்கள், முற்கால மக்களின் மனப்பான்மை இவ்வாறிருந்ததென்றும், ஆகவே பழங்கதைகளில் உள்ள உண்மைகளைப் பொய்களிலிருந்து பிரித்தறிதல் வேண்டுமென்றும், அது மிக வில்லங்கமான செயலென்றும் கூறியுள்ளார்கள்.1

1. Historians especially in writing of early ages, have copied down the traditions of real events so mixed up with myths that it is one of the hardest tasks of the student to judge what to believe and what to reject - Anthropology. E.B.Tylor.



வேதபாடல்கள் எவ்வாறு பயன்படத்தக்கன

எகிப்திலே பல பழைய சமாதிகளும் கட்டங்களும் அழிந்தகிடக்கின்றன. மொகஞ்சதரோ அரப்பா என்னும் இடங்களில் பண்டைக் காலத்தியப் பழம்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகளைக் கொண்டு அக்கால மக்களின் வாழ்க்கை, நாகரிகம் ஆகியன அறியப்படுகின்றன. அவைகளை ஒப்ப, வேதங்களும், பழையபொருள் ஆராய்ச்சிக்குப் பயன்படுமேயன்றிச் சமய நூலாகக் கொள்வதற்குச் சிறிதும் பயன்படாவென்க. அவைகளைச் சமய நூலாகக் கொள்வது எவ்வாறிருக்குமெனில், இன்று உருக்கினால் செய்து பயன்படுத்தப்படும் செவ்விய கூறிய ஆயுதங்களைக் கைவிட்டுப், பிடி இறுக்காதனவும், கரடுமுரடான கற்களாற் செய்யப்பட்டனவுமாகிய பழைய கற்கால மக்கள் பயன்படுத்திய ஆயுதங்களைப் பயன்படுத்த முயன்றது போலவும், இன்று வழங்கும் சில்லுள்ள வண்டிகளையும், நீராவி, மின்சாரங்களால் இயக்கப்படும் வண்டிகளையும் கைவிட்டுச், சில்லில்லாத சறுக்கி வண்டிகளைப் பயன்படுத்த எண்ணியது போலவும் ஆகும்.

இவ்வுண்மையை அறிந்துகொள்ளமாட்டாத ஒருசிலர், வேதங்களே தமக்கு முதல் நூலெனக் கொள்வதாலும், ததம் அவ்வேத பாடல்களைச் செய்தவரின் மரபிலுள்ளவர்கள் எனக் கூறிக்கொள்வதாலும் தமக்கு உயர்வுண்டாகின்றது எனக் கருதிவருகின்றனர். இவ்வாறு கொள்ளும் ஒரு கூட்டத்தினருக்குப் பெருமை கொடுத்து அவர்களே சமயத்தைத் தாங்கி வருகிறார்கள் என நம்பியவரும் நம்மவர் செயல் மிக வியப்பு உடையதே! வேதங்களில் கூறப்படும் பொருள்கள் எவை என்பதை இனிச் சிறிது ஆராய்வோம்.

இந்திரன் பெரிய கடவுளாயிருந்தபோதிலும் விலிஸ்தெங்கா என்னும் ஓர் அசுரப்பெண், அவனைக் கடவுளர்களின் இடத்திலிருந்து தன்னிடத்துக்கு மந்திரத்தால் இழுத்தாள். பின்பு அவன் பெண்களினிடையில் பெண்வடிவிலும். ஆண்கள் இடையில் ஆண் வடிவிலும் இருந்தான். மற்றக் கடவுளர்களைப் போல, இந்திரன் குணங்களில் மாத்திர மல்லாமல், வடிவிலும் மனிதனைப் போலவே இருந்தான். சௌத்திராமணி என்னும் கிரியையில் அவன் வடிவம் செய்து வைக்கப்படுகின்றது.

ஆரியரின் வருணன் என்னும் கடவுட்பெயர், விரி என்னும் அடியாகப் பிறந்ததெனக் கூறுவர் கோவின் என்னும் ஆசிரியர்.1

ஆரியர் இவ்வாறு செய்யும் யாகங்களுக்கு அசுரர் எதிராக இருந்து வந்தனர். அவர்கள் அவ்வகை யாகங்கள் வலிமையால் தடை செய்ய முயன்று வந்தார்கள். யூபத்தில் மிருகங்கள் கட்டப்பட்டதும், அசுரர் அதனை நோக்கி வந்தார்கள். ஆரியர் யாகச்சாலையைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக மதில்போல நெருப்பை வளர்த்து. அசுரரை அணுக முடியாமற் செய்தனர். இராவணனாதியோரும். ஆரிய முனிவர்கள் செய்யும் யாகங்களை அழித்து வந்தார்கள் என இராமாயணத்திற் படிக்கிறோம்.



கிருட்டிணர்கள்

வேத காலத்தில் இந்திரனுக்குப் பகைவராகிய கிருட்டிணர்கள் இருந்தார்கள். கிருட்டிணர் என்பது ஒரு மக்கட் கூட்டத்தினருக்குப் பெயராக விருந்தது. இக் கூட்டத்தினரிடையே தேவகியின் புதல்வனான கண்ணன் தோன்றியிருத்தல் கூடும். கிருட்டிணர்களுக்குத் தலைவனான கிருட்டிணன் அம்சுமதி (யமுனை) ஆற்றங்கரையில் பத்தாயிரம் வீரருடன் இருந்தான் என்று இருக்கு வேதம் கூறுகின்றது. ஆரியருக்காக, இந்திரன் கிருட்டிணராகிய பகைவரை அழித்தான். இந்திரன் 50,0000 கிருட்டிணரைக் கொன்றான் என்று வேதம் கூறுகின்றது. கிருட்டிண இந்திரரின் போர்கள், வேதகாலத்தில் தமிழருக்கும் ஆரியருக்கும் நிகழ்ந்த போர்களைக் குறிப்பிடுகின்றன.

தாசுக்கள்

தாசுக்கள் ஆரியரின் விரோதிகள் என்றும், அவர்களுக்கும் ஆரியருக்கும் போர்கள் நிகழ்ந்தன வென்றும் வேதங்களைக் கொண்டு அறிகின்றோம். தாசுக்கள் கறுப்பு நிறத்தினர் எனப்படுகின்றனர். இவர்கள் ஆரியரின் கடவுளரை வழிபட்டிலர். தாசுக்கள் என ஆரியராற் கூறப்பட்டோர் இந்தியப் பூர்வ மக்களே என ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள். தாசுக்கள் பட்டினங்களில் வாழ்ந்தார்கள். அவர்களுள் பல அரசர்கள் இருந்தார்கள். அவர்களிடத்தில் திரண்ட செல்வம் இருந்தது. பசுக்கள், குதிரைகள், தேர்கள் முதலியவை அவர்களின் செல்வங்கள். நூறு கதவுகளுள்ள நகர்களுள் வைத்துக் காக்கப்பட்டன. இந்திரன் அவைகளைக் கவர்ந்து, தன்னை வழிபடுவோராகிய ஆரியருக்குக் கொடுத்தான். தாசுக்கள் மிகவும் செல்வம் உடையவர்களாகவும் சமவெளிகளிலும், மலைகளிலும் நிலம் உடையவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பொன் அணிகளை அணிந்தனர். அவர்களுக்குப் பல கோட்டைகள் இருந்தன. தாசுக்கள் பொன் வெள்ளி இரும்பு முதலியவைகளாலமைத்த கோட்டைகளில் வாழ்ந்தார்கள். இந்திரன் தேவதாசர்களாகிய ஆரியருக்காகத் தாசுக்களின் நூறு கற்கோட்டைகளை அழித்தான். அக்கினி அவனுக்குத் துணையாகத் தாசுக்களின் பட்டினங்களை எரித்தான். ஆரியரிடமிருந்து கவர்ந்த மாடுகளை வைத்திருந்த மாறியற் கூடங்களைப் பிரகஸ்பதி உடைத்தெறிந்தார். தாசுக்கள் போரில் தேர்களைப் பயன்படுத்தினர். தாசுக்கள் ஆரியர் யாகங்களை அழித்து. ஆரியரின் தெய்வங்களுக்காக வைக்கப்பட்டிருந்த மதுவைப் பருகினார்கள்.

-விட்டுணு புராணம்.

மனித உடலில் 35.000,000 மயிர்கள் உள்ளன. மனைவி கணவனோடு உடன்கட்டை ஏறினால், உடலில் எத்தனை மயிர் உள்ளனவோ, அவ்வளவு காலம் அவள் மோட்சத்தில் இருப்பாள். பாம்புப் பிடாரன் எப்படிப் பாம்பைப் புற்றிலிருந்து இழுத்தெடுக்கிறானோ, அப்படியே உடன்கட்டை ஏறிய பெண்ணுடைய குடும்பத்தினர், தாய், தந்தை முதலியவர்களைப் புனிதமடையும்படி செய்கிறாள். உத்தம பெண்ணுக்குக் கணவனோடு இறப்பதைவிடச் செய்யத்தக்க வேறு நல்ல செயல் யாதும் இல்லை. எல்லாப் பிறவிகளிலும் கணவனோடு இறப்பவள் பெண் விலங்காகப் பிறக்கமாட்டாள்.


- அங்கீரர்.

கணவன் இன்னொரு தேசத்தில் இறந்தானானால் மனைவி, அவனுடைய செருப்பை எடுத்து மார்போடு வைத்துக் கட்டிக்கொண்டு நெருப்பில் விழிக்கடவள்
- பிரம புராணம்.

ஒருத்தி கணவனோடு உடன்கட்டை ஏறினால் அவள் மூன்றரைக் கோடி ஆண்டுகள் சுவர்க்கத்தில் இருப்பாள். அப்படி அவள் சாகா விட்டால் அவள் தனது கற்பைக் காக்க வேண்டும். அல்லாவிடில் அவள் நரகத்துக்குப் போவாள்.

- ஆரிய நீதி சாத்திர பண்டிதர்.

வில்லியம் யேம்ஸ் என்பவர் "விதவைகளைத் தீயிலிடுதல்" என்னும் நூலில் எழுதியிருப்பது வருமாறு:

"சில இடங்களில் கருப்பவதிகளும், பருவம் அடையாத பெண்களும் எரிக்கப்பட்டார்கள். அவர்கள் மயக்க மருந்து கொடுத்தபின், மயக்கத்திலிருக்கும் போதே கட்டையில் வைத்துக் கொளுத்தப்பட்டார்கள். உடன் கட்டை ஏற்றும்போது அவள் எழுந்து ஓடிவிடாதபடி, பிராமணர் அவள் அரையிற் கயிறுமாட்டிக் கட்டி விடுகிறார்கள். தீக்கொளுத்தும்படி கூறினதும், உடனே பிராமணர் தீக்கொளுத்தி விடுகிறார்கள். பக்கத்தே நிற்பவர்கள் எல்லோரும் நெய்யை நெருப்பில் சொரிவார்கள். எரிந்து முடிந்தவுடன் பிராமணர் சாம்பலைக் கிளிப் பெண் அணிந்திருந்த நகைகளைப் பொறுக்கி எடுத:தக் கொள்ளுவார்கள். அவை அவர்களுக்கே உரியது." 1924-ல் மார்வாரில் இராசா அசிற்சிங் இறந்தபோது அறுபத்து நான்கு பெண்கள் கட்டையில் ஏறினார்கள். இராசா பட்சிங் நீர்pல் அமிழ்ந்தியபோது 84 பெண்கள் கட்டையில் ஏறினார்கள். 1611 ஆம் 1620 ஆம் மதுரை நாய்க்கர் இறந்தபோது முறையே 400, 700 பெண்கள் கட்டை ஏறினார்கள். கட்டை கிடங்குக்குள் அடுக்கப்பட்டது. இவ்வாறு செய்வது உடன்கட்டை ஏற்றப்படும் பெண்கள் தப்பி ஓடாமல் இருப்பதற்காகும். கூர்ச்சரத்தில் 12 அடி சதுரமான கொட்டிலில், பிணம் கொளுத்தப்பட்டது. உடன்கட்டை ஏறும் பெண் கொட்டிற்கால் ஒன்றோடு கட்டப்பட்டாள். வங்காளத்தில் பெண்கள் தப்பி ஓடாமல் இருப்பதற்காகும். கூர்ச்சரத்தில் 12 அடி சதுரமான கொட்டிலில், பிணம் கொளுத்தப்பட்டது. உடன்கட்டை ஏறும் பெண்கள் கொட்டிற்கால் ஒன்றோடு கட்டப்பட்டாள். வங்காளத்தில் பெண்கள் தலையில் முளை அடித்துக் கட்டப்பட்டார்கள். சில சமயங்களில் உடன் கட்டை ஏற வரும் பெண்கள் முதுகு காட்டி ஓட்டம் எடுப்பதுமுண்டு அவ்வகையினர் தீண்டாதவர்களாகக் கருதப்பட்டனர். அவர்கள் குடும்பத்தில் மறுபடியும் அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு ஓடும் பெண்களைக் கொண்டு போவதற்குப் புலையர் கூட்டமாக வந்து நிற்பதுண்டு. சில ஐரோப்பிய வணிகர் அவ்வாறு ஓடுகின்றவரைக் காப்பாற்றி மணஞ்செய்து கொள்வதுண்டு. வில்லியம் பென்ரிக் என்பவர் இவ்வழக்கத்தைத் தடுக்கும் சட்டத்தை 1829-ல் வெளியிட்டார். 800 பிராமணர் இது சமயத்துக்கு மாறானது என்று சொல்லிக் கையெழுத்திட்டுப் பிரிவிக் கவுஞ்சிலுக்கு அப்பீல் செய்தார்கள். அவ்வப்பீல் 1832-ல் தள்ளப்பட்டது. பிராமணர் இவ்வழக்கத்தை வற்புறுத்தியது கணவனை இழந்த பிராமணப் பெண்களின் ஒழுக்கத்தைக் காப்பாற்ற முடியாமையால் ஆகும். 1 கேட்டால் திடுக்கிடும் பல நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன. அவைகள் இச் சிறு நூலில் எழுத இடம்பெறா. இராசா ராம் மோகன் ராய் என்னும் அறிவாளி இப் பைத்தியக்காரத்தனத்தை ஒழிக்கப் பெரிது முயன்று வெற்றி பெற்றார். ஆங்கில அரசாங்கம் உடன்கட்டை ஏறுவதோ, ஏற்றுவதோ சட்டத்துக்கு மாறு என்று விளம்பரஞ் செய்தது.

பிராமணர் தமது சமயம் கெட்டுவிட்டது என்று துடித்துக் கதறினார்கள். ஆங்கில அரசாங்கம் செவிகொடுத்திலது. இன்று கைம்பெண்கள் உடன் கட்டை ஏறாமையால் ஒன்றும் முழுகிப்போகவில்லை. அரசாங்கத்தை எதிர்க்க வலியற்ற பிராமணக் குழாம் உடன்கட்டைக்குப் பதில் தலையை மொட்டை தட்ட வேண்டும் எனச் சட்டம் செய்தது. இக்கொடிய சட்டத்தையும் "கிரிமினல் குற்றமாக"க் கொள்ளாமல் அரசினர் இருப்பது வியப்புக்குரியதே. மனித சமூகத்தைக் கெடுக்கும் செயல்கள் எல்லாம் "கிரிமினல்" குற்றங்களாகக் கொள்ளப்படுதல் தகுதியுடையதாகும்.

"வள்ளுவர் செய் திருக்கறளை மறுவற நன்குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி"



-மனோன்மணியம்.

1. The position of women in Hindu civilization - Dr. A.S. Altekar


The reasons for Brahman legislators gradually giving religious sanction to this horrible custom are that probably they found it more diffcult to prevent moral lapses in widowed women. The introduction.

 

இரவா

unread,
Jul 26, 2008, 11:42:05 PM7/26/08
to minT...@googlegroups.com, தமிழாயம்

ஆரிய வேதங்கள்

ந. சி. கந்தையா

ஆரிய வேதங்கள்.docx

இரவா

unread,
Jul 28, 2008, 2:14:33 AM7/28/08
to தமிழாயம்



ஆரிய வேதங்கள்

ந. சி. கந்தையா




ஆரிய வேதங்கள்.docx

இரவா

unread,
Jul 28, 2008, 8:53:52 PM7/28/08
to minT...@googlegroups.com, தமிழாயம்


ஆஹம சிற்ப சதஸ்?


ஆஹமம் என்றால் விக்ரகங்களை... தெய்வ சிற்பங்களை எப்படியெல்லாம் வழிபடவேண்டும் என்கிற சூத்திரங்களைச் சொல்லிக் கொடுப்பதுதான் ஆஹமம்.

சிற்பம்?

இன்றும் நாம் கோயில்களுக்குச் செல்கையில் கர்ப்ப கிரகத்தில் பார்க்கும் தெய்வச் சிற்பங்கள் தமிழ்நாட்டுக்கே உரிய தனிச் சிறப்பு. நீங்கள் வட இந்தியக் கோயில்களுக்கு சென்றால்கூட நமது தென்னிந்திய சிற்பங்களைப்போல நுட்பமும், அழகும் ஒரு சேர வாய்த்திருத்தல் கடினம்.


பழங்கால மன்னர்கள் ஆங்காங்கே பிரம்மாண்டமாக கட்டி வைத்த கோயில்களின் கோபுரங்களில்கூட சிறு சிறு சிற்பங்கள் தமிழர்களின் நுண்கலைத் திறத்தை எடுத்துக் காட்டும்.


இப்படிப்பட்ட சிற்பங்களையும், அவைகளை வழிபட வகுக்கப்பட்ட ஆஹமங்களையும் பற்றிய பெருமித உணர்வை எழுப்பிட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது தான் ஆஹம சிற்ப சதஸ்.


இந்த அமைப்பை நடத்தவேண்டியதற்கான பொறுப்பை காங்கிரஸ் முக்கியஸ்தரான சா. கணேசனிடம் ஒப்படைத்தார் மகாபெரியவர்.


ஆஹம சிற்ப சதஸ் அமைப்பு என்ன பண்ணியது?


கோயில் கோயிலாக போவோம். ஆலய தத்துவ பிரச்சாரம். பூஜாதத்துவ பிரச்சாரம். இவை இரண்டும்தான் நோக்கம். கோயிலின் பிரகாரத்தில்தான் கூட்டம் நடக்கும்.
கோபுரத்தின் அழகு. பிரகாரங்களின் அழகு. மதில் சுவர்களின் அழகு. கோயிலின் படிகளில் படிந்த அழகு, கர்ப்பக்ரஹத்தில் தெய்வச் சிற்பத்தின் தேக அழகு இவற்றைப் பற்றியெல்லாம் விளக்குவோம்.


இந்த இடத்தில் ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியை மகாபெரியவர் என்னிடம் சொன்னதுபோல நான் உங்களிடமும் சொல்கிறேன்.


"
ஆதிகாலத்தில்... அதாவது சிருஷ்டிக்கு முன்னால் உலகம் உருவம் இல்லாமல் இருந்தது. அப்போது பகவான் ஒரு தச்சனாக வந்தான். உலகத்துக்கு உருவமும், வடிவமும் கொடுத்தான். பகவான் உலகத்தை 'விஸ்வகர்மா'வாக வந்து வடிவமைத்ததுபோல... அவருக்கு நாம் சிற்பங்களைச் சமைத்து வைத்தோம். அதனால் சிற்பங்கள் எல்லாம் 'விஸ்வகர்மா'வாக வந்து பகவான் செய்தவற்றின் தொடர்ச்சிதான். எனவே, நாம் சிற்பங்களை பகவானாக பார்த்து ஆராதிக்கவேண்டும்" என ஆஹம சிற்ப சதஸ்-ஸின் கூட்டங்களில் பேசினோம். நாங்கள் மட்டுமல்லாது ஆஹமங்கள் அறிந்த பட்டாச் சார்யார்களாகவும் அழைத்து வந்த அக்கூட்டங்களில் பேச வைத்தோம்.


இந்த இறை இயக்கம் 15 ஆண்டுகளாய் வெற்றிகரமாக நடந்தது.


சனாதன தர்மசபையில் ஆரம்பித்து... வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை, ஆஹம சிற்ப சதஸ் என வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தாலும் மகாபெரியவருக்கு ஒரு மனக்குறை.


திருவிடைமருதூர் சத்திரத்தில் நானும், அவரும் ஒரு நாள் தங்கியிருந்தபோது அந்த மனக்குறையை என்னிடம் எடுத்து வைத்தார். "ஏன் தாத்தாச்சாரியாரே - நாம எவ்வளவோ சபை நடத்துகிறோம். உபன்யாஸம் பண்றோம். ஹோமம் பண்றோம். ஆனா...

பிராமணாளுக்கும், மத்தவாளுக்கும் இதனால நெருக்கம் உண்டாகியிருக்கோ? இல்லியே... அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு. இவா ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறா மாதிரி ஏதாவது பண்ணணுமே..." என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனைகளைத் தந்தேன்.


நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி? ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம்.

 

தமிழ்தானே!


ஆழ்வார்களோ பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள். இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ?"


திருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்த திட்டத்தை தெரிவித்தபோது அவருடைய கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.


"
இதப்பாரும் எல்லா கோயில்கள்லயும் திருப்பாவை திருவெம்பாவை உற்சவம் நடத்துவோம். இதுக்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாஸங்களைவிட இது இன்னும் நன்னா போய்ச் சேரும். ஏன்னா - நாம எடுத்துண்டதும் தமிழ். சொல்றதும் தமிழ் என்ன சொல்றீர்?"


என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள்மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.


நாங்கள் இப்படி பெரிய திட்டம்பற்றி சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தபோதும்... சத்திரத்தில் இருந்த மேலும் சிலருக்கு அது புரியவில்லை. ஏன் அவர்கள் செவிடா என்று கேட்காதீர்கள்.


அவர்கள் செவிடல்ல. நாங்கள் பேசிக்கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக்கூட நாங்கள் பேசிக் கொள்வது புரியாது.


"

ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?" என்று மகாபெரியவர் நகர்ந்த பிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்.


"

உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்துகொள்..." என்றேன். அப்போதும் அந்த கேள்வியைக் கேட்டவர்களுக்குப் புரியவில்லை.
உங்களுக்கு...?

 

இரவா

unread,
Jul 28, 2008, 9:03:33 PM7/28/08
to minT...@googlegroups.com, தமிழாயம்


 

"நீங்களும் மகா பெரியவரும் ஏன் சமஸ்கிருத்திலேயே பேசிக்கொள்கிறீர்கள்? இதை நாங்கள் கேள்வி கேட்டால்... ஸ்நானத்தை முடிச்சுப் போடுகிறீர்கள். பேசிக் கொண்டிருப்பதற்கும் குளிப்பதற்கும் என்ன சம்பந்தம்...?"


...
மறுபடியும் புரியாமல் என்னிடம் கேட்டார்கள். சத்திரத்தில் இருந்த சிலர் அன்று நான் அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டேன். அந்த பதிலை உங்களுக்குச் சொல்வதற்கு முன்... மகாபெரியவர் திருப்பாவை ...திருவெம்பாவை என்னும் கருத்துருவை தேர்ந்தெடுத்ததை அவர் மூலம் கேட்ட வழியில் சொல்கிறேன்.


தமிழ் மாதங்களில் ஆடி மாதம் முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்கள் தட்சணாயணம் என அழைக்கப்பெறும். அதாவது சூரியன் தென்திசை வழியாக பயணிக்கும் காலம் என இதற்குப் பொருள். (அயணம் என்றால் வழி என இங்கே அர்த்தப்படும்.!


தை முதல் ஆனி வரையிலான மீதமுள்ள ஆறு மாதங்களும் உத்தராயணம் என அழைக்கப்பெறும். அதாவது சூரியன் வடதிசை வழியே பயணிக்கும் என பொருள்.
தட்சணாயண காலத்தில் பகல்பொழுது சுருக்கமாகவும், ராப்பொழுது அதிகமாகவும் இருக்கும்.

உத்தராயண காலத்தில் ராப்பொழுது சுருங்கி பகல் பொழுது விஸ்தாரமாகும்.


இப்படிப்பட்ட தட்சணாயண காலத்தின் விடிகாலைகளில் தமிழச்சிகள் தங்களது தோழிமார்களை கூட்டிக்கொண்டு நதிக்கரைக்குச் செல்வார்கள். குளிர் கூத்தாடும் வைகறைப் பொழுதில் நதியோர சிலுசிலு நடுக்கத்தையெல்லாம் தங்களது மென்மையான பாதங்களால் மிதித்து ஈர வஸ்திரங்களோடு 'பாவை தெய்வம்' பேரை சொல்லி நீராடி தொழுதார்கள் தமிழச்சிகள்.


இப்பண்பாடு நீட்சியாகி... தங்களுக்கு சிறந்த கணவன் வேண்டி கடவுளை தொழுவதற்காக விடிகாலைகளில் நீராடினார்கள்.


இந்த நிலையிலிருந்தும் வளர்ந்து... 'நமது கோரிக்கைகளை விடிகாலையில் கடவுளிடம் சொல்கிறோம். நாம் எழுந்திருந்தது போல் கடவுளும் எழுந்திருப்பாரோ அவரை முதலில் எழுப்ப வேண்டும்' என எண்ணிய பக்தைகள் முதலில் கடவுளை எழுப்புகிறார்கள்.


கடவுளை மனித வழியில் அணுகுவது என்ற கலாச்சாரம் இது. பிற்பாடு... கடவுளையே கணவனாக அடையவேண்டும் என்ற 'நாயக' நாயகி பாவம்' வரை வளர்ந்தது இந்தப் பண்பாடு.


தொடர்ந்து அதிகாலைகளில் நீராடி... கடவுளை எழுப்புவதற்காக, கட்டுப்பாட்டோடு இதில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நோன்பு, அதாவது விரதமாக இதை அனுஷ்டிக்க ஆரம்பித்தனர். பாவையர் மட்டுமே பங்கு பெற்ற பக்தி நோன்பு, ஆதலால் 'பாவை நோன்பு' ஆயிற்று.


இத்தகைய தூய தமிழ் கலாச்சாரத்தைத் தான் சைவத்தின் மாணிக்கவாசகப் பெருமானும், வைணவத்தின் ஆண்டாள் சுடர்க்கொடியும் பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தினார்கள்.


திருப்பாவை, திருவெம்பாவை என தமிழ்ரசம் சொட்டும் பக்திப்பாக்கள் செய்தார்கள்.

இத்தகைய தமிழ் பாக்களைத்தான் சைவ-வைஷ்ணவ ஒற்றுமைக்கும், பிராமணர்-பிராமணர் அல்லாதார் நெருக்கத்துக்கும் பயன்படுத்த நினைத்தார் மகாபெரியவர்.


தமிழை, தமிழ்ப்பண்பாட்டு அடிப்படையிலான இலக்கியத்தை 'பாவைமாநாடு' என்ற பெயரில் உற்சவமாக தொடங்கி வைத்தார் மகா பெரியவர். அப்படிப்பட்டவர் ஏன் என்னோடு உரையாடும்போது சமஸ்கிருதத்தில் உரையாடுகிறார் என்ற சந்தேகம் உங்களுக்குள் உயிர்த்திருக்கும்.


இதே சந்தேகத்தைத்தான் அன்று திருவிடை மருதூர் சத்திரத்தில் உள்ளவர்களும் கேட்டார்கள். நான் சொன்ன 'ஸ்நான' பதில் அவர்களுக்கு புரியவில்லை.

அவர்கள் புரிந்து கொள்ளும்படியாக... மடத்தில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தையே அவர்களிடம் அறிவித்தேன். அது...

இரவா

unread,
Jul 28, 2008, 9:08:43 PM7/28/08
to minT...@googlegroups.com, தமிழாயம்


கும்பகோண மடம்... சூரியன் வானத்தின் மேற்குப் பக்கமாய் மேய்ந்து கொண்டிருந்தான். மஞ்சள் நிறக் கதிர்கள் பூமியின் மீது பொலபொலவென உதிர்கின்றன. ஒருவிதமான ஊதல் காற்று கும்பகோணத்தையே குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.


அந்த நாளுக்கான மாலைநேர பூஜைகளுக்காக மடம் தயாராகிக் கொண்டிருந்தது. மகாபெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார்.

மதியம் சிறிது நேரம் தூங்கினால் கூட 'மடி' அதாவது ஆச்சாரம் போய்விடும். மறுபடியும் குளிக்கவேண்டும். அந்த வகையில் குளித்து முடித்துவிட்டிருந்தார் மகாபெரியவர்.


அந்த நேரமாய் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப் பார்த்தே தீருவது, அருளாசி பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில்... நாட்டுக்கோட்டை செட்டிநாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர்... மகாபெரியவரை பார்த்து அவரிடம் அருள்மொழிகள் வாங்கிவிட்டுத்தான் போவது என்ற உறுதியோடு இருந்தார்.


அந்த நேரம் நானும் மடத்தில் இருந்ததால், அருணாசலத்திடம் சொன்னேன்... 'இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகாபெரியவரை பார்க்க முடியாது. நாளை வாயேன்..' என்றேன்.


'இல்லை சாமி இப்பவே அவரை பார்க்கணும்' என்றார் பக்தர்.


எங்கள் பேச்சுச் சத்தத்தை கேட்ட சிலர்... விஷயத்தை மகாபெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத்தார்.


போனேன். கேட்டார் சொன்னேன்.

'இதோ பாரும் தாத்தாச்சாரி... அவரை பாக்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை. பாத்தால் ஏதாவது கேப்பார். பதிலுக்கு நான் தமிழ் பேசவேண்டிவரும். நோக்குதான் தெரியுமே. தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணணும். பூஜைக்கு நேரமாயிடுத்துல்யோ... அதனால் நான் மௌனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்ச்சிடுங்கோ..." என என்னோடு சமஸ்கிருத சம்பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர்.


நானும் வெளியே வந்தேன். நான் சொன்னதுதானப்பா... சுவாமிகள் மௌனத்தில் இருக்கார். நாளைக்கு வாயேன்.. என்றேன்.


'அப்படியா? தெய்வத்தை இன்னிக்கே பார்க்கலாம்னு எதிர்பார்ப்போட வந்தேன். சரி...

நாளைவரை ஏதும் சத்திரத்தில் தங்கிவிட்டு வர்றேன்' என தாய்மொழியாம் தமிழில்'

மகாபெரியவரை தெய்வமாக மதித்து ஆதங்கப்பட்டுக் கொண்டே சென்றார் அருணாசலம்.

இரவா

unread,
Aug 1, 2008, 10:25:56 PM8/1/08
to minT...@googlegroups.com, தமிழாயம்
 
 

அன்பு ரங்கர்க்கு!

வணக்கம்.

         

          உங்களிடம்  ஒரு சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.

 

கேள்வி – 1.

 

வேதத்தின் கருத்துகள் பதியப்பட்டிருப்பதாக க் கூறுகின்ற, சங்க இலக்கியத் தொகை நூல் "பரிபாடல்" எந்த நூற்றாண்டைச் சார்ந்த்து?

 

கேள்வி – 2

 

தொல்காப்பியம் கூறும் கடவுளர்கள் எல்லாம் வேதக்கடவுளர்கள் என்றால், தொல்காப்பியக் காலத்தில் வடமொழி எழுத்து வடிவம் கொண்டிருந்ததா?

 

கேள்வி – 3

 

"பரிபாடலிலே,  "அந்தணர்  அருமறைப்  பொருள்" என்றும்,   "அந்தணர்  அருமறை"  என்றும்  "ஒரு  சார்  அறத்தொடு  வேதம்  புணர்  தவம்  முற்றி...திறத்தின்  திரிவு  இல்லா  அந்தணர்"

 

என்றும் கூறப்பட்டுள்ளது என்றால், பரிபாடலின் காலத்தில், வடமொழி தமிழகத்தில்  பேசப்பட்டதா?

 

கேள்வி - 4 

 

"நான்மறைக்  கேள்வி  நவில்குரல் எடுப்ப 

ஏம  இன்துயில் எழுதல்"

 

என்னும்  வரிகள், வேதபாடசாலையைத் தான் குறிபிடுகிறது! என்று எவ்வாறு நிறுவுகின்றீர்கள்?

 

கேள்வி – 5

 

எழுத்து வடிவமும் இல்லாத ஒரு மொழி. இலக்கணமும் இலக்கியமும் இல்லாத ஒரு குடியின் கருத்துகள், இலக்கிய வளமும் இலக்கண நலமும் பெற்று, நிலைத்த

குடியினயினரான தமிழர் இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கின்றன! என்று ஓயாமல் க்குறிக் கொண்டிருப்பது நகைப்பிற்குரியதாகத் தெரியவில்லையா?

 

கேள்வி – 6

 

வேதம் எப்போது எழுதப்பட்டது? எப்போது எழுதி முடிக்கப்பட்டது? எழுதியது யார்? அவற்றின் உள்ளடக்கம் எவ்வளவு?

 

கேள்வி – 7

 

தமிழில் உள்ள கருத்துகளைக் கேட்ட  பேச்சு மொழி வழக்கினர்,  பிற்காலத்தில் தங்கள் மொழியில் சேர்த்திருக்கலாம் அல்லவா?

 

கேள்வி – 8

 

தற்போது எழுத்து வடிவம் பெறாத மொழியைப் பேசும் நரிக்குறவர்கள், தங்கள் மொழி வரிவடிவம் பெற்ற பின்பு, அவர்கள் மொழியிலுள்ளவை தான் தமிழில் உள்ளன! என்று கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா?

 

மேற்காணும் கேள்விகளுக்கு சான்றுகளுடன் கூடிய பதில்களை எதிர்பார்க்கின்றேன்.

இரவா

unread,
Aug 14, 2008, 7:43:24 AM8/14/08
to minT...@googlegroups.com, தமிழாயம்

அன்பு ரங்கர்க்கு!

வணக்கம்.

         

          உங்களிடம்  ஒரு சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.

 

திரு  வாசுதேவன்,  என்ன  இது   ஒரு  முக்கியமான  நபரின்  குரல்  இதுவரை
கேட்கவில்லையே என்று
நினைத்தேன்.   வந்துவிட்டீர்கள்.   ஆனால்  இவ்வளவு  நாள்  விட்டுவிட்டு   நான்
மின்தமிழிலிருந்து  விலக  முடிவு
செய்துகொண்டிருக்கும்   இந்த  வேளையில்  வந்து   கேள்விகளை  அடுக்குகிறீர்கள்.
என்ன  செய்ய?   நீங்கள்
கேட்ட  கேள்விகளுக்கு  விளக்கமாக  நான்  பதில்  கூறினால்  அதுவே  ஒரு
புத்தகமாக  ஆகிவிடும்.  அதற்கான
பொறுமையும்  நேரமும்  இப்பொழுது எனக்கு  இல்லை.
மேலும்,  இந்த  இழை எழுதத்தொடங்கியதின்  நோக்கம்,  பெரும்  உழைப்பும்,  தம்
கொள்கைகளின்பால்  ஈடுபாடும்,
அதற்காக  தம்  குடும்ப  சொத்துக்களையே  சம்பிரதாயத்தின்  பொது  சொத்தாக  ஆக்கி
உழைத்துக்
கொண்டிருக்கும்   ஒரு  பெருமகனாரைப் பற்றி  இணைய  உலகிற்கு
சொல்வதற்குத்தான்.   ஸ்ரீவைஷ்ணவ
சம்பிரதாயத்தில்   பெரும்  பணிகள்  ஆற்றிக்  கொண்டிருப்பவரான  ஸ்ரீ உ வே  S
கிருஷ்ணஸ்வாமி
ஐயங்காரைப்பற்றித்தான்  குறிப்பிடுகிறேன். ஒருவருடைய  கருத்துகள் எத்துணை
முக்கியமோ  அத்துணை  முக்கியம்
அவரைப்  பற்றிய  விவரமும்,  நினைவும்.  ஏனெனில்  நம்மில்  பலர் ஏதோ
கருத்துகள்  பஞ்சுபோல்  காற்றில்
பறந்துகொண்டிருக்கின்றன,  அப்படியே  கையை  நீட்டி எடுத்துக்  கொண்டால்  போகிறது
என்ற எண்ணம்
கொண்டவர்களாக  இருக்கிறார்கள்.  அவர்களுக்கு  ஒவ்வொரு  கருத்தும்
சிந்திப்பவனின் எத்தகைய  நோவைப்  பெற்று
 வெளிவருகின்றன என்பதை  உணர  இயலாது.  இணையதளமும்  இத்தகைய  உழைக்காமல்
உட்கார்ந்து
வெறுமனே  பலனடையும்  போக்கை  ஒருவிதத்தில்  ஆதரிப்பதாக  உள்ளது. என்
கருத்துக்களையே  தங்கள்
கருத்துக்கள்  போல்  மற்ற  தளங்களில்  சென்று  கூசாமல்  எழுதியிருக்கும்
உதாரணங்களும்  உண்டு. என்ன
செய்வது?  பிச்சையிலும்  இழிந்து  திருட்டில்  புகுந்துவிட்ட  அந்த
ஆத்மாக்களைக்  கண்டு  அருவருப்பும்,  இரக்கமும்
 கொள்வதை  விட  வேறு  செயற்பாலது  இல்லை.  இது  போகட்டும்  முக்கியமற்ற
விஷயம்.  எனவே   திரு
ஐயங்கார் எப்படி  சங்க  இலக்கியங்களை  அணுகினார்,  திருமால்  நெறிக்கேற்ப
அமைந்த  பாடல்  பகுதிகளுக்கு
எப்படி  பொருள்  கண்டார்,  அதில் எத்தகைய  உண்மை  உள்ளது,  யாரும்
புகத்துணியாத  துறையில்,  அந்தக்
காலத்தில் எப்படி  இதனுள்  புகுந்தார் என்பதையெல்லாம்   காட்டத்தான்  எழுத
முயன்றேன்.  அந்த  முயற்சி  தவறு
என்று  உணர்த்தப் பட்டேன்.  சரி  கடையை  மூடுவோம்   வாழ்க  மனிதர்  என்று
புறப்படலாம் என்று  நினைக்கும்
போது  நீர்  வேறு  கேள்விகளை  வீசுகிறீர்?  டாக்டரும்  புலவருமான  நீங்கள்
மிரட்டினால்  சின்னவனான  நான்
எங்கே  போக?   இருந்தாலும்  என்னால்  முடிந்த  அளவு  விடை  கூற  முயற்சி
செய்கிறேன்.

பரிட்சை எழுதுவதுபோல்   கேள்வி  கேள்வியாக எடுத்து  பதில்  தரலாம்.  ஆனால்
எனக்கு  தேர்வு  பரிட்சை
என்றாலே  பிடிக்காது.  மேலும்  கால  ஆராய்ச்சி,  பனுவலின்  அடுக்குத்தரம்,
வாய்மொழி  இலக்கியம்  வரிவடிவ
இலக்கியம்  ஆகிய  இரண்டின்  ஊடாட்டம்,  இலக்கண  இலக்கியங்களின்  இணக்கமும்,
முரணும் என்று   பல
படிகளில்  உங்கள்  கேள்விகள்  போகின்றன.  இவையனைத்துக்கும்  நான்  அலசி
ஆய்ந்து  பதில்  கூறினால்,
நீங்களே  யோசித்துப்  பாருங்கள், எனக்கு  வேறு எதற்கும்  நேரமே  இருக்காது.
மேலும்  இவற்றையெல்லாம்
நீங்கள்  அறிந்திருக்க  மாட்டீர்கள் என்று  நான் எண்ணவில்லை.   நான் என்ன
அணுகுமுறையை  மனத்தில்
கொண்டிருக்கிறேன் என்றறியும்  உங்கள்  நோக்கத்தையே  இவை  சுட்டுவனவாகக்
கொள்ளலாம்.  அந்த
அடிப்படையிலேயே  பதில்  கூறுகிறேன்.  அதற்குமுன்  உங்கள்  அணுகுமுறை என்ன
என்பதைப்  பற்றி  நான் என்ன
புரிந்துகொண்டிருக்கிறேன் என்று  கூறிச்செல்லல்   பொருத்தம்.
'ஆரியர்  வெளியிலிருந்து  வந்தவர்கள்.  திராவிடர்  இங்கேயே  இருந்தவர்கள்.
தமிழ்  நாகரிகத்தை  ஊடுருவி  ஆரிய
நாகரிகம்  அதன்  கருத்துகளையும்,  பல  நலன்களையும்  தன்னுடையதாக
ஆக்கிக்கொண்டுவிட்டது.  அவ்வாறு  தான்
தமிழ்  நாகரிகத்திடமிருந்து  பெற்ற  பயன்களை  தன்னுடைய  சொந்த  வெளிப்பாடுபோல்
காட்டிக்கொண்டு
எங்கிருந்து  பெற்றோம் என்று  குறிப்பிடாமல்   கபளீகரம்  செய்துவிட்டது.
தமிழர்  கோட்டையும்  வயலும்
படையுமாக,  குடி  கூழ்  அமைச்சு என்று  நிலைத்த  நாகரிகத்  தன்மையர்.  தம்
மொழிக்கு எழுத்து  வடிவம்
ஏற்படுத்திக்கொண்டு  பல  கலைகளையும்,  இயல்களையும்  வளர்த்தவர்கள்.  ஆரியர்
இடம்  விட்டு  இடம்
பெயர்ந்துகொண்டு, வாய்மொழி  இலக்கியத்தையே  பேணிக்கொண்டு,  அங்கங்கு
இருக்கும்  இனங்களின்  சமுதாய
வாழ்வில்  உட்புகுந்து,  அவர்களின்  பயனைத்  தம்முடையதாக  ஆக்கிக் கொண்டு,
தம்மிடமிருந்தே  மற்றவர்
அனைத்தும்  பெற்றனர் என்று   ஒரு  மயக்கத்தை விடாமல்
தோற்றுவித்துக்கொண்டிருப்பவர்'  --  இதுவே  உங்கள்
அணுகலின்  சாரம் என்று  நினைக்கிறேன்.  உங்கள் கேள்விகளும்
நுணுகிப்பார்த்தால்  இந்த எண்ணமே
உங்களுடையது என்று  காட்டுகிறது.

அநேகமாக  இதற்குப்  பதில்  சொல்லிவிட்டால்  உங்கள்  பெரும்பான்மையான
கேள்விகளுக்குப்  பதில்  சொன்னதாக
 ஆகிவிடும்.   ஆரியர் என்போர்  எங்கோ  இருந்து  வந்தவர்,  துருவப்  பிரதேசமா,
மத்திய  ஆசியாவா என்றெல்லாம்
 கற்பனைக்  கொள்கைகளாகப்  பரப்பிவிட்டதற்கு  வேதங்களிலும்,
பிராம்மணங்களிலும்,  ஆரண்யகங்களிலும்,
உபநிஷதங்கள்,  காலத்தால்  முந்தைய  புராணங்கள்  ஆகியவற்றிலும்  அகச்சான்று
எதுவும்  இல்லை.  நூல்களின்
உட்சான்றுகளை  வைத்து  நோக்குழி,   ஆப்கானிஸ்தானத்தை உள்ளிட்டதும்,   சரஸ்வதி
கரையை  அகப்படுத்தினதுமான
  வடமேற்கு  நிலப்பரப்பில்   வாழ்ந்துவந்த  இனம்  தம்முள்  இரண்டுபட்டுப்
பிரிந்து  கங்கை  யமுனை  விந்தியம்,
என்ற  படித்தரஙகளில்  பரவிய  ஒரு   பிரிவாகவும்,  வடமேற்கு  நிலப்பரப்பில்
ஆர்யணம்  (இன்றைய  ஈரான்) என்ற
பகுதியை  மையமாக  வைத்து  மத்திய  தரைக்கடல்  பகுதி,  பாபிலோன்  முதலிய
இடங்களுக்குப்  பரவிய
பார்சிகர்களாகவும்   விரிந்ததைத்  தான்  நூல்களின்  அகச்சான்றுகள்  பலபட
தெரிவிக்கின்றன.  ஆனால்  சரஸ்வதியின்
 கரையைத்  தாண்டி  கங்கை  யமுனை என்று  பல  காலங்களில்  குடியேறி,  விந்தியம்
வரை  வந்த  இனம்
நெடுநாள்  விந்தியத்தின்  தெற்கில்  பரவாமல்  நின்றுவிட்டது என்பதற்கு  மூல
நூல்களின்  அகச்சான்றுகள்  திடமாக
உள்ளன.   ஆரியர்  வசிக்கத்  தகுந்த  பூமி என்பதின்  தெற்கெல்லை  விந்தியம்
என்று  மனுதரும  சூத்திரம்(II 21--24)
 தெளிவாகக்  கூறுகிறது.  மனுதர்மத்தின்  கட்டளை  ஆரிய  நாகரிகத்தின்
மீறமுடியாத  ஒன்று.  விந்தியம்  தாண்டி
தெற்கில்  உள்ள  இடங்கள்  மிலேச்ச  பூமி(புரியாத மொழி பேசுவோர் வசிக்கும்
இடம்) என்று  மனு  கூறுகிறார்.
பின்னர்  காலத்தின்  கட்டாயத்திலும்,  சமுதாய  மாற்றங்களாலும்   ஆரியர்
தெற்கிலும்  குடியேறியதை  அகத்தியர்
பற்றிய  கதைகளும்,  ஸ்ரீராமாயணமும்  தெரிவிக்கின்றன.  சங்கப்  பாடல்களிலும்,
தொல்காப்பியம்,  அதன்
இளம்பூரணர்  உரை,  பின்பு  நச்சினார்க்கினியர்  உரை  ஆகியவற்றிலும்  இதற்கான
குறிப்புகள்
காணக்கிடைக்கின்றன.
ஆரியர்,  தமிழர் என்ற  வேறுபாடும்,   சில  நேரங்களில்  அதன்  காரணமாக எழுந்த
பிணக்கமும்  நச்சினார்க்கினியர்,
பேராசிரியர்  உரைகளிலேயே  குறிப்பிடப்படுகின்றன. (தொல். செய்யுளியல் 490). அதை
திரு  வையாபுரிப்பிள்ளையும்
எடுத்துக்காட்டி எப்படி  யாரோ ஒருவன் ஆரியம்  நன்று  தமிழ்  தீது என்று  வாதாட
அது  கண்டு  வெகுண்டு  நக்கீரர்
அவன்  சாமாறு  பாட,  அந்தப்  பாடல்  மந்திரம் என்பதற்கு  உதாரணமாக
உரையாசிரியர்களால் எடுத்துக்காட்டப்
பட்டமையைத்  தெரிவிக்கிறார்.   எனவே  ஆரியம்  தமிழ் என்ற  வேறுபாடு  அந்நியர்
புகுத்திய  சூழ்ச்சி என்பது
பொருளற்ற  பேச்சு.   அகத்தியனாரும் ஏற்கனவே  இருந்த  மொழிக்கு  இலக்கணம்
கண்டார் என்று  கூறுவதனால்
அவருக்கும்  முன்னால்  தமிழின்  தொன்மை  அறியற்பாலது.  அதனால்தான்  12-13 ஆம்
நூற்றாண்டுகள்  கிபி இல்
ஆசாரிய  ஹ்ருதயம் என்ற  மிக  உயர்ந்த  நூலைச்  செய்த   ஸ்ரீஅழகிய  மணவாளப்
பெருமாள்  நாயனார்
'வடமொழி  போலே ஆகஸ்தியமும்  அனாதி.  தமிழை  அகஸ்தியர்  பரவச்  செய்தார்
என்பதனால்  தமிழுக்கு
அகத்தியம் என்ற  பேர் வந்ததே  அன்றி   அகத்தியர்  உண்டாக்கின  மொழி என்ற
அர்த்தத்தில்  அன்று.' என்று
திட்ட  வட்டமாக  தம் நூலான  ஆசார்ய  ஹ்ருதயத்தில்  கூறியிருக்கிறார்.
சங்க  காலத்தில்  காலத்தால்  பழைய  பாடல்களில்  அந்தணரின்  புலால்  உண்ணும்
பழக்கம்  குறிப்பிடப்படுகிறது.
வேள்விதான்  அவர்களின்  மிகுந்த  அக்கறைக்குரிய  ஒன்றாகக்  காட்டப்படுகிறது.
சங்கத்திலும்  பங்கு  கொண்டு
புலவர்கள்  அரசனைப் பாடிப்  பரிசிலாக  வேள்வி  இயற்றுவதற்கான  பொருள் பெற்ற
செய்தியும்  சங்கப்  பாடல்கள்
தெரிவிக்கின்றன.  அதற்கும்  பரிபாடலில்  திருமாலை  பாஞ்சராத்திர  ஆகமக்
கருத்துக்களோடு  புலவர்  பாடுவதற்கும்
பெரிய  மாற்றம்  தெரிகிறது.  வேள்வியில்  ஈடுபாடு  ஆகம  ரீதியான  வழிபாடாக
மாறியது என்பதற்குள்  பெரும்
சமுதாய  மாற்றம்  ஏற்பட்டது என்பது  வரலாறு  தரும்  செய்தி.  இந்த  மடை
மாற்றத்தின்  பெரும்  நாயகரே  புத்த
ர்தான்.  அவருடைய  ஆளுமை,  அவர்  தந்த  அறம்,  அவர்  நிறுவிய  பௌத்த  சங்கம்
மூன்றும் ஏற்படுத்திய  பூத
எழுச்சியான  திருப்பம்,  சமணர்களின்  அமைதியான  அதே நேரத்தில்  மிக  அழுத்தமான
'பிரதேச  மொழிகளில்
ஈடுபாடு என்பதன்  மூலம்  சமயப்  பிரசாரம்' என்ற  ஆழ்ந்த  நோக்கு  உள்ள  உத்தி
இவையெல்லாம்  சேர்ந்து
ஏற்படுத்திய  மாற்றத்தைத்தான்  பரிபாடல்  காட்டுகிறது.  எனவே  பரிபாடலின்
காலம் என்பது   முக்கியமாகிறது.

திரு  வையாபுரிப்பிள்ளை  அவர்கள்  பரிபாடலையும்,  கலித்தொகையையும்
பிற்காலத்திய  சங்க  இலக்கியமாகத்தான்
கருதுகிறார்கள்.  சங்க  இலக்கியத்தில்  வழங்காத  சொற்களை  நிரல்படுத்தி  அவரது
வாதம்  அமைகிறது.
உதாரணமாக  'நான்',  'ஆனால்'  'ஆமாம்' போன்ற  சொற்கள்  வரும்போது  அது
முற்சங்க  காலம் என்று  கொள்ள
இடமில்லை என்பது  அவரது  வாதம்.  அவரது  நூல்வரிசையின்  முன்பின்
காலத்தொடர்ச்சி  அசைக்க  முடியாத
ஒன்று.  கால  ஆராய்ச்சியில்  திரு  பிள்ளை  அவர்கள்  பரிபாடலை  6 --7 ஆம்
நூற்றாண்டு  கிபி என்கிறார்.
அவருடைய  கொள்கையை  திரு சக்கிரபாணி  அவர்கள்  நன்கு மறுத்திருக்கிறார் என்று
கேள்வி.(இன்னும்  நான்
பார்க்கவில்லை) எப்படியாயினும்  திரு பிள்ளை  அவர்கள்  கூறிய  காலத்தில்
இருநூறு  ஆண்டுகள்  முன்னர்
எனலாமேயன்றி  நிச்சயமாக  முற்சங்க  நூலாக  இருக்க  வாய்ப்பில்லை. எனவே
நீங்கள்  கூறவருவது  போல்
பரிபாடலின்  வரிகள் சங்க  காலத்திய  நிலையை பிரதிபலிக்கின்றது என்பதைவிட
பக்தி  இயக்கத்தின்  தோற்றுவாயைச்
 சேர்ந்த  காலத்தை  பிரதிபலிக்கிறது என்றும்  கூறலாம்.  அப்பொழுது
சிலப்பதிகாரத்தில்  காணும்  ஆய்ச்சியர்
குரவை  வரிகளில்  தெரியும்  பக்தி  இதற்கு  ஒரு முன்னோட்டமாக  அமையும்.  ஆனால்
நான்  இங்கு எடுத்துக்
கொண்ட  தலைப்போ,  அல்லது  திரு  ஐயங்கார்  நிறுவ  முற்படுகின்ற  கருத்தோ  சங்க
இலக்கியங்கள்
வேதங்களினின்றும்  வந்தது என்பதோ,  அல்லது  சங்க இலக்கியங்களில்  வேதக்
கருத்துக்கள்தான்  முழுக்க முழுக்க
நிரம்பியிருக்கின்றது என்றோ  அல்ல.   சங்க  இலக்கியங்கள் எப்படி  வேதங்களைப்
போற்றுகின்றன என்பதுதான்.
அதற்கு  பரிபாடலில்  மிகுதியும்,  பழம்  சங்க  காலத்திய  பாடல்களில்
அருகியும்  குறிப்புகள்  காணப்படுகின்றன.

அடுத்து  நீங்கள்  வேதத்தின்  வாய்மொழித்  தன்மையைப் பற்றி
குறிப்பிடுகிறீர்கள்.  சங்க  இலக்கியங்களே
வாய்மொழி  இலக்கியமாக  ஒரு  காலத்தில்  இருந்து  பின்னரே எழுத்து  வடிவம்
கண்டது என்று  திரு
கைலாசபதியின்  கருத்தும்,  அதற்கு  மாற்றுக்  கருத்தும்  நிலவுவதை  நீங்கள்
அறிந்திருக்கலாம்.  ஒரு  வேளை
சங்க  இலக்கியங்கள்  வாய்மொழி  இலக்கியமாக  இருந்தன என்று  முடிவாகி  விட்டால்
அப்பொழுது  சங்க
இலக்கியத்தின்  மதிப்பும்,  தூய்மைத்  தன்மையும்  குறைந்துவிடுமா?  மேலும்
வேதங்கள்  வாய்மொழி  இலக்கியமாக
வெறுமனே  பாடப்படவில்லை.   அதனுடைய  பாடவரிசையும்  நிரல்களும்  துல்யமாக
எண்ணிக்கை  இடப்பட்டு,  பதம்,
ஜடம்,  கிரமம்,  கனம் என்றெல்லாம்   மிக  நெடுங்காலமாக  பேணப்பட்டு
வந்திருக்கிறது.  ஒரு  சொற்கோவையைப்
பிரிப்பதானாலும்  இப்படித்தான்  பிரிக்க  வேண்டும் என்று  நியதிகள்
நெடுங்காலமாக  உண்டு.  உச்சரிப்பு
பிறழ்ந்துவிடும் என்பதற்காகவே  இடி  இடித்தாலோ,  மழைகாலத்திலோ,  துக்க
சம்பவங்கள்  மரணம்  போன்று
நடந்து  அந்த  உணர்ச்சிகள்  மலிந்து  இருக்கும்  நேரத்திலோ,  அல்லது  பாட்டு
பாடுகின்ற  இடத்திலோ
வேதத்தைச்  சொல்லக்  கூடாது என்றெல்லாம்  வரம்புகள்  பேணப்பட்டன. எனவே  அவை
வாய்மொழி  இலக்கியம்
என்றதனால்  மட்டும்  கட்டுக்கோப்பு  குலைந்தனவாக, கலப்படம்  நிறைந்ததுவாக எண்ண

முடியாது.

அடுத்து  நீங்கள்  கூறவருவது  தமிழிலிருந்து  வடமொழிக்குப்  போய்  தன்
அடையாளம்  இழந்து,  முகவரி  இழந்து,
பெற்றுக்கொண்டவர்கள்  தங்களுடையதாகக்  காட்டிக்  கொள்ளும்  சாத்தியப்பாடு.
இது  வேதங்களில்  சாத்தியம்
இல்லை என்பதைத்தான்  மேலே  விளக்கினேன்.  ஆனால்  காவியங்கள்,  நாடகங்கள்,
கூத்து,  கலைகள்,
தத்துவங்கள்  முதலியவற்றில்  இந்த  சாத்தியம்  இருக்கிறது.  அப்படிப்பட்ட  ஒரு
வினோதத்தைத்தான்   தமிழினி
இதழில்  நான் எழுதிய   கூத்து என்ற  கட்டுரையில்  காட்டினேன்.  அதாவது  பாணம்
என்ற    நாடக  வகை
தமிழிலிருந்து  வடமொழிக்குச்  சென்றிருக்கிறது.  ஆனால்  அதன்  மூலமொழிக்
குறிப்பு எதுவும்  நாடகக்  காரர்களால்
 தரப்படவில்லை.  பிறகு  நுணுகிச்  சென்று  பார்த்தால்  சங்க  இலக்கியத்தின்
பாணர்  அங்கு  நாடக  வடிவமாய்
ஆகியிருக்கிறார்.  அது  தமிழிலிருந்து  வந்தது என்று  சொல்லியிருந்தால்
பிரச்சனை  இல்லை.  ஆனால்  அதற்குப்
பதில்  பாண் என்றால்  பேச்சு என்று  பொருந்தாத  சொல்பிறப்பியல்  சாகசங்கள்
வடமொழி  அறிஞர்களால்
மேற்கொள்ளப்  படுகின்றன.  பிறகு  சங்கத்தமிழ் எதுவுமே  தெரியாத  நடனக் கலைஞர்
வந்து  பாணத்திலிருந்துதான்
பாணரே  தமிழில் ஏற்பட்டது என்று  கூறும்  அவலமும்  நடக்கும்.  ஆனால்  இதுபோன்ற
நிகழ்வுத்  துணுக்குகளை
நாம்  கவனமாக  இனம்  கண்டு  நிறுவுதல்தான்  அழகு.  அதை  விடுத்து எல்லாமே
இங்கிருந்து  போனதுதான்
என்று  மொட்டையாக எண்ணிக்கொண்டு  இருந்தோமானால்  நாம்  மீண்டும்  பிழையே
புரிகிறோம்.  அறிவின்  திறம்
முற்றிய  பண்டிதத்  தன்மையினால்தான்  ஆய்வின்  உண்மைகள்  அடையப்  படுகின்றன.
வெறும்  கோஷ்டிக்
கூச்சல்களினால்  ஒருவருக்கொருவர்  சொறிந்துவிடலாம்.  வேறு  ஒன்றும்  ஆகாது
என்பதை  நடுநிலை  மிக்க
நன்மதியாளர் எவரேனும்  இருப்பின்  அவர்கள்  நினைவில்  இருத்துவார்களாக.

Reply all
Reply to author
Forward
0 new messages