நோக்கு வர்மம் என்னும் ஏமாற்றும் வேலை,
சில நாட்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சியில் நோக்கு வர்மம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடந்தது, தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் வர்மக்கலை கற்றுத்தருவதாகவும், மேலும் அவர் நோக்கு வர்மத்தில் சிறந்தவர் என்றும் அதற்கு உதாரணமாக காட்ட அவரின் சீடர் முதலில் நோக்கு வர்மத்தில் சிக்கிய பிறகு வீழ்வதாகவும் பிறகு டி வி குழுவினர் வீழ்வதாகவும் காட்டுவார்.
இது எப்போது வந்தது என்றால் போதி தருமரை காசுக்காக பயன்படுத்திய தமிழ்படமான 7-ம் அறிவு வந்தபிறகு இந்த நிகழ்ச்சி நடந்தது, அதாவது அந்த படத்தில் நோக்கு வர்மம் குறித்த காட்சிகளில் வில்லன் காமெடி செய்திருப்பார், ஒரு பார்வை பார்த்தவுடன் சாக்கடை அள்ளுபவர் சன்டைக்கு வருவாராம், ரோட்டில் செல்லும் பெண் குங்ஃபூ சண்டை போடுவாராம்,
லாஜிக் இல்லாத இந்த சீன்களை பொதுவாக யாரும் நம்புவது கிடையாது, ஆனால் அதை தொடர்ந்து நோக்கு வர்மம் என்ற பெயரில் டி வி செனல்கள் செய்யும் அக்கப்போர்களும் சில ஒலிபரப்புகளின் அதே போல் லாஜிக் இல்லாதது தான்,
நோக்கு வர்மம் என்றால் என்ன?
நோக்கம்+ வர்மம் =நோக்கு வர்மம்(அதாவது நமது ஆழ்மனதை பார்க்கும் வர்மம், இது ஒரு ஹிப்னாஸ்டிசம் தான், வேறு ஒன்றுமில்லை, ஹிப்னாஸ்டிசத்தின் தூய தமிழாக்கம் நோக்கு வர்மம் என்று கூறினாலும் தவறல்ல.
சரி இந்த நோக்கு வர்மம் கொண்டு நாம் என்ன செய்யலாம்,
ஒன்றும் செய்ய முடியாது, ஆமாம் ஒன்றுமே செய்ய முடியாது, இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை தவிர அத்தனை பேரும் ஏதாவது ஒரு தேடலில், சிக்கலில், வருத்ததில், அவசரத்தில், அழுத்ததில், எதிர்பார்ப்பில் மூழ்கி இருக்கிறார்கள், எ கா பொங்கலுக்கு ஊருக்கு போகும் போதே திரும்பி வருவதும் அலுவலகத்தில், தொழிலகத்தில் விட்டுச்சென்ற வெலைகள் பற்றி கவலைப்படுகிறார். இது போல் பலரும்,
முடியும்! எப்போது?
மிகவும் ஆழ்ந்த நிலையில் அமைதியாக இருக்கும் போது,
எகா கலங்கிய நீரில் நீங்கள் உங்கள் முகம் காண முடியுமா? கலங்கிய நீர் என்பது குழப்பமான மனது கண்கள் அதன் வழிகாட்டில்,
சரி, நோக்கு வர்மத்தால் யாருக்கு என்ன பலன் உண்டு,
மனவியாதிக்காரர்களுக்கும், அதீத மன அழுத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நோக்கு வர்மக்கலைஞர்களால் மனதளவில் சில சிகிச்சைகளை கொடுக்க முடியும் அல்லது அவர்களுக்குண்டான பாதிப்புகளை அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் இங்கு என்ன நடக்கிறது நோக்கு வர்மத்தால் ஆட்கள் வீழ்கிறார்கள், இதனால் என்ன பலன் அல்லது அந்த அன்பர் என்ன சொல்ல வருகிறார், ஒரு மனிதனை எதற்கு இவ்வளவு சிரமப்பட்டு கீழே வீழ்த்தினால் தான் நோக்கு வர்மம் குறித்து மக்கள் அறிந்து கொள்வார்கள் என்றால் மக்கள் எவ்வளவு அப்பாவிகளாக இருக்கிறார்கள் என்று தானே பொருள்,
இதில் சிலர் சித்தர்களின் பெயரை சொல்கிறார்கள், சித்தர்கள் என்ன நோக்கு வர்மத்தால் இப்படி ஆட்களை வீழ்த்திக்கொண்டு இருந்தார்களா? சித்தர்களுக்கு வேறு வேலை வெட்டி இல்லையா?
உலகிலேயே தலைசிறந்த நோக்குவர்ம கலைஞர் யார் தெரியுமா
அம்மா ஆம்?
காலையில் பால் கொடுத்து விட்டு பாட்டியிடம் அல்லது வேறு யாரிடமும் விட்டு விட்டு அலுவலகம் செல்லும் அன்னை மாலையில் வீடு திரும்ப சிறிது தாமதமாலும் அழுது புலம்பும் குழந்தை தனது அம்மாவின் முகம் பார்த்ததும் அழுகை மறந்து ஆனந்தமடைவது எப்படி அது ஒன்றும் மாயமந்திரமல்ல தாய் தன் கண்களின் மூலம் குழந்தைக்கு செலுத்தும் அன்பு பார்வை இந்த வர்மம் குழந்தையின் ஆழ்மனதை சாந்தப்படுத்துகிறது,
இது தான் நோக்கு வர்மம்,
நன்கு பயிற்சி எடுத்தால் சில விலங்குகள் கூட நமக்கு அடங்கிவிடும் (ஐந்தறிவு) புத்தபகவானை கண்டதும் யாணை அடங்குவது, பாம்பாட்டியின் பார்வையால் பாம்பு மயங்குவது, சிலரின் பார்வையை கண்டு கடுமையாக குறைக்கும் நாயும் அமைதியாவது,
இன்றும் ஒரு நால்
ஆனால் பிரச்சனையில் சிக்கி இருக்கும் மனிதனை எந்த நோக்கு வர்மம் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது,
ஒரு சின்ன உதாரனம் வட்டிக்கு ஒருவரிடம் கடன் வாங்குங்கள், சாதாரனமாக திரும்ப கேட்கவரும் போது சில விளைவுகளை சந்திக்கவேண்டி வரும் அதே நேரத்தில் உங்களுக்கு நோக்குவர்மம் தெரியும் என்று கதைகட்டி அவர் காதில் விழும்படி செய்து விடுங்கள் அப்போது உங்கள் நோக்கு வர்மம் பலிக்கும். புரிந்ததா நம்மவர்கள் பொய்களில் தான் இன்றும் வாழ்கிறார்கள்,
பார்வை> ஆழ்மனம்> அங்கிருந்து கிளம்பும் நரம்பு மன்டலங்கள்>, அதன் பாதிப்பு> இது தான் நோக்குவர்மத்தின் சூத்திரங்கள், இதை தவிர்த்து ஒன்றுமில்லை, நோக்கு வர்மம் என்ற பெயரில் மனிதர்களை வீழவைப்பது இது தான் அற்புத கலை என்றால் அப்படி ஒரு கலை இருந்து என்ன பயன்,
படம் கராத்தே கிட் என்ற படத்தில் ஒரு பாம்பை தனது பார்வை சக்தியால் கையாளும் மாஸ்டர்
--
MumbailiveFind mumbai follow mumbai
TPI-Mumbai
09819166850/
9029512535