வேண்டுகோள்

15 views
Skip to first unread message

சந்திரமௌளீஸ்வரன்

unread,
Aug 5, 2011, 2:34:22 AM8/5/11
to தமிழ் வாசகன்
ஃபேஸ் புக்கில் நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று இணைந்திருக்கும் நண்பர்களை
வரவேற்கிறேன்.

நண்பர்கள் அனைவரும் நூல்களையும், எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்ய
வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்.

இந்த தளத்தினை நூலக வாசல் போல் ஆக்க உங்கள் ஆதரவு தேவை

hemanthsrikrishna hemanthsrikrishna

unread,
Aug 5, 2011, 2:36:33 AM8/5/11
to தமிழ் வாசகன்
நன்றி அண்ணா .

Arvind Swaminathan

unread,
Aug 5, 2011, 4:48:56 AM8/5/11
to tamilv...@googlegroups.com
அழைப்பிற்கும் வேண்டுகோளுக்கும் மிக்க நன்றி! எல்லாவிதமான
படைப்புகளையும், எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தலாம் தானே! அல்லது
வெகுஜன எழுத்தாளர்கள் தேவையில்லை. இலக்கியம், இலக்கியவாதிகள் பற்றி
மட்டுமே எழுத வேண்டுமா? அறிவிப்பின் நலம்.

ஏன் கேட்கிறேன் என்றால் நான் மு.வ., அ.ச.ஞா. கி.வா.ஜ. ஜீவா,
பி.கே.பிரபாகர், யுவன், ஜெயமோகன், வடூவூரார், சுப்ரமண்ய சிவா, பூரம்,
நா.பா. வாமுகோமு, சாணக்யா என்றெல்லாம் கலந்து கட்டிப் வாசிப்பவன்

அறிவிப்பின் நன்றி

அன்புடன்
அரவிந்த்

> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் வாசகன்" group.
> To post to this group, send an email to tamilv...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilvasagan...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilvasagan?hl=en-GB.
>
>

சந்திரமௌளீஸ்வரன்

unread,
Aug 5, 2011, 9:44:50 PM8/5/11
to தமிழ் வாசகன்
அன்பின் அரவிந்த் ஸ்வாமிநாதன்,

தடையேதும் இல்லை, நீங்கள் படிக்கும் எவ்வகையான நூலையும் அறிமுகம்
செய்யலாம்

உங்கள் பங்களிப்பின் மூலம் நண்பர்களின் வாசிக்கும் எல்லைகள் விரிவடைய
வேண்டும்.

அன்புடன்
மௌளீ

On Aug 5, 1:48 pm, Arvind Swaminathan <swami...@gmail.com> wrote:
> அழைப்பிற்கும் வேண்டுகோளுக்கும் மிக்க நன்றி! எல்லாவிதமான
> படைப்புகளையும், எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தலாம் தானே! அல்லது
> வெகுஜன எழுத்தாளர்கள் தேவையில்லை. இலக்கியம், இலக்கியவாதிகள் பற்றி
> மட்டுமே எழுத வேண்டுமா? அறிவிப்பின் நலம்.
>
> ஏன் கேட்கிறேன் என்றால் நான் மு.வ., அ.ச.ஞா. கி.வா.ஜ. ஜீவா,
> பி.கே.பிரபாகர், யுவன், ஜெயமோகன், வடூவூரார், சுப்ரமண்ய சிவா, பூரம்,
> நா.பா. வாமுகோமு, சாணக்யா என்றெல்லாம் கலந்து கட்டிப் வாசிப்பவன்
>
> அறிவிப்பின் நன்றி
>
> அன்புடன்
> அரவிந்த்
>

Pushparaj

unread,
Aug 5, 2011, 10:36:51 PM8/5/11
to tamilv...@googlegroups.com
இந்தக் குழுவில் எப்போது இணைந்தேன் என்பது கூட இப்போது நினைவில்லை. இப்போது இதற்கு மீண்டும் உயிரூட்டப்பட்டுள்ள நல்ல விஷயம். 

நான் தற்சமயம் அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ வாசித்துக்கொண்டிருக்கிறேன். முடிந்ததும் அதன் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

புஷ்பராஜ்

Arvind Swaminathan

unread,
Aug 5, 2011, 11:52:48 PM8/5/11
to tamilv...@googlegroups.com
நன்றி. அப்படியே செய்வோம்.

அன்புடன்
அரவிந்த்

2011/8/6 சந்திரமௌளீஸ்வரன் <vcmowle...@gmail.com>

ശിവ്സങ്കര്‍ ശ

unread,
Aug 6, 2011, 12:10:52 AM8/6/11
to tamilv...@googlegroups.com
ஆங்கில நூல்களுக்கும் அனுமதி உண்டா?

2011/8/6 சந்திரமௌளீஸ்வரன் <vcmowle...@gmail.com>



--
S

ശിവ്സങ്കര്‍ ശ

unread,
Aug 6, 2011, 12:11:58 AM8/6/11
to tamilv...@googlegroups.com
"தமிழ்" வாசகனில் இப்படியொரு டப்சா கேள்வி என்று நினைத்தால், கேள்வி கேட்டதற்கு அடியேனை மன்னிக்கவும்!

2011/8/6 ശിവ്സങ്കര്‍ ശ <shivsa...@gmail.com>



--
S

சந்திரமௌளீஸ்வரன்

unread,
Aug 6, 2011, 12:20:54 AM8/6/11
to தமிழ் வாசகன்
you can notice this message in the group home page

நல்ல நூல்களையும் எழுத்தாளர்கள் பற்றியும் தெரிந்து கொள்ள ஒரு தளமாக இது
அமையும்.தமிழ், ஆங்கில நூல்களை /எழுத்தாளர்களை உறுப்பினர்கள் இங்கே
அறிமுகம் செய்யலாம்.

Shiv , hope this announcement answers your query

On Aug 6, 9:10 am, ശിവ്സങ്കര്‍ ശ <shivsanka...@gmail.com> wrote:
> ஆங்கில நூல்களுக்கும் அனுமதி உண்டா?
>

> 2011/8/6 சந்திரமௌளீஸ்வரன் <vcmowleeswa...@gmail.com>

Pushparaj

unread,
Aug 6, 2011, 12:24:11 AM8/6/11
to tamilv...@googlegroups.com
எழுதுவது தமிழில், வினவுவது ஆங்கில நூல்கள் பற்றி, பெயரை பொறித்துக்கொண்டிருப்பது மலையாளத்தில்... ! (மலையாளம் தானே?) பன்மொழித்திறன் எல்லோரும் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஆளுமை என்பதை நினைவுபடுத்துகிறீர்கள்.

ശിവ്സങ്കര്‍ ശ

unread,
Aug 6, 2011, 1:29:34 AM8/6/11
to tamilv...@googlegroups.com
அதை படித்தும் மறந்தது என்பிழையே.

ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றி! :-)

2011/8/6 சந்திரமௌளீஸ்வரன் <vcmowle...@gmail.com>



--
S

ശിവ്സങ്കര്‍ ശ

unread,
Aug 6, 2011, 2:07:29 AM8/6/11
to tamilv...@googlegroups.com
ஒரு உயர்ந்த நோக்கத்தை கற்பித்ததற்கு நன்றி, ஆனால் அவ்வாறெல்லாம் யோசித்து செய்யவில்லை.

நம் மொழியின்/மொழிக்குடும்பத்தின் இலக்கண வடிவமைப்புக்கு மாறுபட்டதொரு அமைப்புகொண்ட மொழியைக்கற்றால், ஒரு அபாரமான சிந்தனை விரிவாக்கத்தை தரும் என்பது உண்மையே. Such increase in cognitive ability happens when we learn any new thing, but it is more so when you learn music or a new language or anything similar that requires effort and discipline.

சம்ஸ்க்ருதம், எஸ்பானிய, அரபி, சீனம் போன்ற மொழிகள் மட்டுமல்ல; C, C#, PERL, Python போன்ற கணினி மொழிகள்; லோஜ்பன், எஸ்பெரான்ட்டோ ஆகிய கட்டமைத்த மொழிகள்; ஏன் க்ளிங்கான்(Star Trek), எல்விஷ் (பெருமதிப்புக்குரிய டாக்கியனார் அருளிச்செய்தது போக பலவுண்டு!) போன்ற புனைவு மொழிகள் என எதற்கும் அந்த ஆற்றலுண்டு.

மேலும் படிக்க -

http://news.bbc.co.uk/2/hi/health/3794479.stm
http://www.sfn.org/index.aspx?pagename=brainbriefings_thebilingualbrain

பி.கு: ஆம் மலையாளம் தான் (என் தாய்மொழி - அதற்கு மேல் ஒன்றும் தெரியாது!)

2011/8/6 Pushparaj <push...@gmail.com>



--
S

Vilvam Lingam

unread,
Aug 6, 2011, 2:56:21 AM8/6/11
to tamilv...@googlegroups.com
தோழர் புஷ்பராஜா ஈழப்போராட்டத்தின் வேராக இருந்தவர் .அவர் எழுதியுள்ள 'ஈழப் போராட்டத்தில்  எனது சாட்சி' என்ற நூல் அதன் வரலாற்றை புரிந் கொள்ளக் கூடிவர்களுக்கு உதிவிகரமாக இருக்கும் .
அடையாளம் பதிப்பு வெளீயீடு --விலை ரூ 175  

2011/8/6 Pushparaj <push...@gmail.com>
இந்தக் குழுவில் எப்போது இணைந்தேன் என்பது கூட இப்போது நினைவில்லை. இப்போது இதற்கு மீண்டும் உயிரூட்டப்பட்டுள்ள நல்ல விஷயம். 

நான் தற்சமயம் அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ வாசித்துக்கொண்டிருக்கிறேன். முடிந்ததும் அதன் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

புஷ்பராஜ்

--

Chandramowleeswaran. V

unread,
Aug 6, 2011, 3:16:42 AM8/6/11
to tamilv...@googlegroups.com
நண்பரே இதே இழையில் புத்தகம் அறிமுகம் செய்யாது தனி இழையில் இடவும். ஒரு புத்தகத்திற்கு ஓர் இழை என தயவு செய்து 
--
Contact Details:
V.Chandramowleeswaran
Mobile :+91 98406-56627



2011/8/6 Vilvam Lingam <vilva...@gmail.com>

Pushparaj

unread,
Aug 6, 2011, 10:22:01 PM8/6/11
to tamilv...@googlegroups.com
லோஜ்பன், எஸ்பெரான்ட்டோ ஆகிய கட்டமைத்த மொழிகள்; ஏன் க்ளிங்கான்(Star Trek), எல்விஷ் (பெருமதிப்புக்குரிய டாக்கியனார் அருளிச்செய்தது போக பலவுண்டு!) போன்ற புனைவு மொழிகள் என எதற்கும் அந்த ஆற்றலுண்டு.

யாகவா முனிவர் பரிபாலித்த இனான்ய மொழியை விட்டு விட்டீர்களே! :-) சும்மா நகைச்சுவைக்காகச் சொன்னேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள மேற்சுட்டியுள்ள மொழிகள் எனக்கு புது தகவல்கள் நன்றி. எனக்கு தமிழ், ஆங்கிலம் தெரியும். இந்தி அரைகுறை கால்குறை. திராவிட மொழிக்குடும்பங்களில் மலையாளம் மீது எனக்கு மயக்கம் உண்டு. அதைக் கற்க நூல் வாங்கி வைத்துள்ளேன். இன்னும் ஆரம்பிக்கவில்லை.

புஷ்பராஜ்

ശിവ്സങ്കര്‍ ശ

unread,
Aug 7, 2011, 12:28:08 AM8/7/11
to tamilv...@googlegroups.com
எனக்கும் தமிழ், ஆங்கிலம் மட்டும்தான் சிறிது தெரியும். மலையாளம் தாய்மொழி என்பதால் புரியும், படிக்கத்தெரியும், பேசுவது சிரமம். கல்லூரியில் சம்ஸ்க்ருதம் கொஞ்சம் கற்றதால் அதையும், "by extension" ஹிந்தியையும் (அதே லிபி - தேவநாகரி) படிக்கமுடியும்; அதற்குமேல் ஒன்றுமே தெரியாது. பெங்களூரில் முதுகலை படிக்க இரண்டு வருடம் இருந்ததால் கன்னடம் படிக்க வரும், கொஞ்சம் புரியும், சுத்தமாக பேசவராது!

மௌலி'ஜி போல் செந்தமிழ், வடமொழி நூல்களை படித்து, அப்படியே வெளுத்து வாங்கவேண்டும் என்று கனவெல்லாம் இருக்கிறது! கர்நாடக கீர்த்தனைகள் பலவும் சுந்தர தெலுங்கினில் உள்ளதால், அதையும் கற்கும் ஆவலுண்டு. ஜெர்மன், சீன/ஜப்பானிய மொழிகளையும் கற்கவேண்டும் என்ற ஆசையும் கூட (மொழிபெயர்ப்பாளர்கள் மூட்டைக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள் என்பது வேறொரு முக்கிய காரணம்!)

ஆனால் அதெல்லாம் ஏக்கப்பெருமூச்சுதான்!

இந்த Matrix படத்தில் வருவதுபோலிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! :-)

2011/8/7 Pushparaj <push...@gmail.com>



--
S

சந்திரமௌளீஸ்வரன்

unread,
Aug 11, 2011, 2:01:23 AM8/11/11
to தமிழ் வாசகன்
நண்பர்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை அறிமுகம் செய்வது மிகுந்த மகிழ்ச்சி
அளிக்கிறது
தொடரட்டும்...

Chandramowleeswaran. V

unread,
Aug 12, 2011, 1:53:11 AM8/12/11
to தமிழ் வாசகன்
மிக முக்கியமான ஒரு விஷயத்தை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த குழுமத்து உறுப்பினர்களின் அனைத்து மடல்களும் மட்டுறுத்தலுக்கு பின்னரே வெளியிடப்படுகிறது . எனது மடல் உட்பட

இந்த கட்டுப்பாட்டை நண்பர்கள் தவறாக கருத மாட்டீர்கள் என திண்ணமாக நம்புகிறேன்.

நான் இணையத் தொடர்பின்றி இருக்கும் சந்தர்ப்பம் வரும் போது தங்கள் மடல் வெளியாவதில் தாமதம் இருக்கலாம். அதன்றி வேறில்லை

Vilvam Lingam

unread,
Aug 12, 2011, 4:03:45 PM8/12/11
to tamilv...@googlegroups.com
நல்லதுதானே -vilvam

2011/8/12 Chandramowleeswaran. V <vcmowle...@gmail.com>

--
Reply all
Reply to author
Forward
0 new messages