கோபாலின் நண்பர் வடிவேலுக்கும், கண்ணையாவுக்கும் நடக்கும் தகராறில்
கோபால் தலையிட வன்முறையில் முடிகிறது. கண்ணையாவை எதிர்ப்பவர்கள்
எல்லோரும் அவரின் ஆண்மையை மறைமுகமாகக் குறிப்பிடுவதில் ஆவேசமாகும் அவர்,
வயல் வேலைகளுக்கு வெளியாட்களைக் கொண்டு வருகிறார். அதன் பின் நடக்கும்
பல அசம்பாவிதங்களில் கிராமமே நிலைகுலைகிறது. இறுதியாக கண்ணையா நாயுடு
ஒரு குடிசைக்குள் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகளை அடைத்து எரிப்பதைப்
பார்க்கும் கோபால் தீவிர புரட்சியில் (நக்ஸலைட்?) இறங்குவதாக முடிகிறது.
ஆரம்பத்திலிருந்தே இ.பா. தமிழக அரசியலையும், அதைத் தொடரும் தமிழ்
சமூகத்தையும் ஒருவித அங்கதம் கலந்த எரிச்சலுடனேயே விவரிக்கிறார். இதைத்
தமிழகத்தை விட்டு வெளியே சென்ற பல பேரிடம் கண்டிருக்கிறேன். அவர்
கூற்றில் உண்மை இருந்தாலும் 50 பக்கங்களுக்குப் பிறகு ஆயாசம்
ஏற்படுகிறது. நாயுடுவின் ஆண்மைக் குறைபாடே கதையின் முக்கிய சம்பவங்களை
நிர்ணயிக்கிறது. இதை அப்போதைய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள்
சுட்டிக்காட்டியிருக்கின்றனர் (புத்தகத்தின் முன்னுரைபடி). இ.பா இதை
தீர்க்கமாக மறுத்தாலும் கதை வழிநடப்பில் பாலியல் நிகழ்ச்சிகள் பல
திருப்பங்களுக்குக் காரணமாகின்றன.
நாவல் களம் தமிழக வரலாற்றில் மிகத் தீவிரமான ஒன்று, ஆனால் இதை நோக்கி
செலுத்தும் சம்பவங்கள் எல்லாம் கோபாலுக்கும் நாயுடுவுக்கும் நடக்கும்
மோதலாகக் காண்பித்தது கதாசிரியரின் சறுக்கல்.
இந்த நாவல் பலராலும் குறிப்பிடப்படுவதற்குக் காரணம் வேறு யாரும் இந்த
நிகழ்ச்சியை வைத்து தமிழில் இன்னும் எழுதவில்லை என்பதாகவும் இருக்கலாம்
(நான் ‘செந்நெல்’ படிக்கவில்லை).
இந்தக் கொடூர சம்பவத்தை ஒரு அ-புனைவாக ஆ.சிவசுப்பிரமணியன் போன்ற
ஆராய்ச்சியாளர்கள் எழுதினால், எதற்காக உயிர் துறந்தோம் என்றே தெரியாமல்
இறந்த மக்களுக்கு அஞ்சலியாவது கிடைக்கும்.
பதிப்பகம்: கிழக்கு
கிடைக்கும் இடம்: உடுமலை (http://udumalai.com/?prd=Kuruthi
%20punal&page=products&id=919) அல்லது nhm.in
http://siliconshelf.wordpress.com/2010/09/16/இந்திரா-பார்த்தசாரதியின/
http://siliconshelf.wordpress.com/2010/12/15/கீழ்வெண்மணி/ - மேலும்
இரண்டு கீழ்வெண்மணி புத்தகங்கள் - செந்நெல், மற்றும் கீழைத்தீ