A STRUGGLE FOR FREEDOM IN THE RED SOIL OF SOUTH என்ற புத்தகம்
கிடைக்கப் பெற்றேன்;இதன் ஆசிரியர் திரு பாலகிருஷ்ணன். சிவகங்கையில் பள்ளி
தலைமை ஆசிரியராக பணி செய்து ஓய்வு பெற்றவர். இவரது ஆராய்ச்சியினைக் கண்டு
வியக்கின்றேன். இந்தப் புத்தகம் கவனிக்கப்பட வேண்டிய படைப்பு;சிவகங்கை
அரச பரம்பரையின் வரலாறு குறித்து ஒரு முக்கிய நூலாக இந்த நூல் வரும்
காலத்தே கருதப்படும் என்பதில் ஐயமில்லை
ஆராய்ச்சி ஆர்வமும் பண்டை சரித்திர நிகழ்வுகளை, ஆராய்ச்சி பாங்கில்
தகுந்த தரவுகளுடன் அறிந்து கொள்ள விழைபவர்களுக்கு இந்த புத்தகம் விருந்து
என்றே சொல்வேன்
இதனை இங்கு தமிழ் வாசகன் வழி இணைந்த நண்பர்கள், தங்கள் நட்பு
வட்டத்திலும் எடுத்துச் சொல்ல வேண்டும் என விழைகின்றேன்
நூலின் ஆசிரியர் பாலகிருஷ்ணன் அவர்களை 04575 242149 அல்லது 9791457625
என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்