
அனைவருக்கும் வணக்கம்
53 வாரமாக தொடராக வெளிவந்து குமுதத்தில் பொன்விழா காணும் முதல் மருத்துவ தொடர் எனும் சிறப்பை (உங்கள் ஆதரவால்) அடைந்த வாழ்க கொழுப்புடன் தொடர் இவ்வாரத்துடன் நிறைவு பெறுகிறது.
குமுதத்தில் தொடர் எழுத முனைகையில் ஆசான்கள் சுஜாதா,சாண்டில்யன் போன்றோர் தொடர் எழுதிய பத்திரிக்கை, அத்தகைய மேடையில் மேடையில் சொதப்பிவிடகூடாது எனும் எச்சரிக்கை உணர்வுடன் எழுத ஆரம்பித்தேன். ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மிக சிறப்பாக தொடர் முழுக்க வழிகாட்டி தொடரை வெற்றிகரமாக முடிக்க வழிவகுத்தார். தொடரை எழுதுவது மிக இனிய அனுபவமாக இருந்தது. வாரா, வாரம் தொடரை ஷேர் செய்தும், விமர்சனம் எழுதியும் ஊக்குவித்த நண்பர்கள் உதவியின்றி இது சாத்தியமில்லை, குறிப்பாக நண்பர் கண்ணன் அழகிரிசாமி அவர்கள் தொடர்ந்து தொடர் விமர்சனம் எழுதினார்.
தொடருக்கு நல்ல வாசகர் வரவேற்பு இருந்ததாக ஆசிரியர் குறிப்பிட்டது மிகுந்த மனமகிழ்ச்சியை அளித்தது. மெகா சீரியல் போல நீளக்கூடாது எனும் நோக்கிலேயே ஒரு வருடத்துடன் முடித்தோம். சில காலம் கழித்து தொடரின் இரண்டாம் பகுதி குமுதத்தில் வெளிவரும். தொடர் வெற்றி என்பதை விட மக்களுக்கு பட்டிதொட்டியெங்கும் தொடர் மூலம் பேலியோ சென்று சேர்ந்ததே மனநிறைவை அளிக்கிறது
குமுதம், ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன், நண்பர்கள், நம் குழு சொந்தங்கள் அனைவரின் அன்பிற்கும் இந்த தொடரை காணிக்கை ஆக்குகிறேன்
இவ்வாரம் சாமியார் யார் எனும் புதிர் தொடரில் விடுபடுகிறது. படித்து மகிழவும்.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்பயணி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilpayani...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilpayani.
For more options, visit https://groups.google.com/d/optout.