யா என்பதற்கு வெண்மை கருத்து உண்டா?

75 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Nov 6, 2022, 11:27:32 AM11/6/22
to தமிழ் மன்றம்
அகராதிகள் அன்னை, ஆய், யாய் இவற்றுக்கு வேர் பொருள் தருகிறதா என்று ஆய்ந்த போது திரிபுகளை தான் தருகின்றன வேரைத் தரவில்லை.

எம்+ஆய் > எம்மாய் > யாய் பிறந்ததாக சொல்கிறது.  யாய் > ஞாய் என திரிந்தது என்கிறது. எனவே ஆய் > யாய் என்பதற்கு வெண்மை கருத்து உண்டா? என தேடினேன்.   

வெள்ளிய முலைப் பாலை தருபவள் என்பதால் அன்னை, ஆய், யாய் ஆகிய சொற்கள் உண்டாகி இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கு தக வெண்மைக் கருத்து இவற்றில் உள்ளதா என்று தேடினேன்.

ஆய் என்பதற்கு வெண்மையாய் இருப்பது என்கிறது செ சொ பி பே அகரமுதலி.  

யா, அல் இரண்டும் கருமை கருத்து கொண்டவை ஆனால் இங்கு தேவை என்னவோ வெண்மைக் கருத்து வேர். வெண்மை மஞ்சள் ஒளிர்வு கருத்தை தோற்றுவிப்பதால் அதை ஒட்டியும் தேடினேன்.

அல் வேர்

அன்னம் - தங்கம், மலம். 
அன்னல் - அனல், வெயில். 
அன்னார் - வெள்ளிய கல்நார். அன்னை - கொன்றை மரம்.
அரைவன் - வெண் காந்தள்.

யா வேர்:

யாக்கெடு - கொன்றை
யாகாட்டம் - வெள்ளை நாயுருவி.
யாசுசிதறாணி - கற்பூரம் (வெண்மையானது).

ஞ > ஞா வேர்:

ஞமலி - கள், ஞாளி - கள்.
ஞாலல் - மின்மினி, ஞலவல் - மின் மினி.
ஞேகிழி - தீ,  வெள்ளை சோளம்.
ஞான்று - பொழுது, நாள்

ஆக வெண்மை கருத்து வேர் அல்,  யா, ஞா இவற்றுக்கும் உள்ளது என்பது அன்னை, ஆய், யாய், ஞாய் என்பதற்கு வெண் பாலூட்டுவள் என்று கொள்ளலாமா?

Seshadri Sridharan

unread,
Nov 6, 2022, 12:05:48 PM11/6/22
to தமிழ் மன்றம்
ஏற்கனவே ப அருளி அம்மம் உண்ண அழைக்கும் பெரியாழ்வார் பாடலை எடுத்துக்காட்டி அம்மம் > மம்மம் என விரிவாக விளக்கி (mammal) என்று பாலூட்டியை சுட்டியுள்ளார்

Seshadri Sridharan

unread,
Nov 8, 2022, 12:34:17 AM11/8/22
to தமிழ் மன்றம்
நான் சிந்து முத்திரைகளை படிக்கின்ற போது சாமன் (chaman) என்ற பெயர் அடிக்கடி வரக் கண்டேன். இது ய > ச திரிபில் யாமன் > சாமன் என்றானது. யா கருமை கருத்து வேர் என்ற ஒற்றை எண்ணத்தில் இருந்ததால் யாமன், சாமன் என்பதற்கு கருப்பன் என்றே கருதி வந்தேன். ஆனால் யா என்ற திரட்சி, சேர்க்கை கருத்தில் யாக்கை, யாப்பு போன்ற சொற்கள் பிறந்துள்ளன என்பதை வைத்து திரட்சி கருத்து இருந்தால் அசையா கருத்தும் இருக்க வேண்டும். அதன் வழி காவல் கருத்தும் இருக்க வேண்டும் என்று தோன்றிற்று இப்போது. 

ஏமாப்பு - அரணாதல், security, ஏமம் - காவல், காப்பு. 

ஏமம்> யாமம் > யாமன் > சாமன் > ஆமன் என திரியும். என்றால் யாமன், சாமன் என்பன காவலன் என பொருள்படும் அன்றோ? 

இருள் கருத்துள்ள யாமம் > சாமம் என்பதோடு குழப்பிக்கொள்ள வேண்டாம்.  


திரட்சிக் கருத்து அசையா கருத்திற்கு இடம் தரும் என்பதை எண்ணத் தவறியதால் பல காவல் சொல்லின் கருத்தினை அறிஞரால் உணரமுடியவில்லை. நான் இப்போது முதல் அடி எடுத்து வைத்துள்ளேன். இனி பிறர் பின் தொடரட்டும்!!!!


Reply all
Reply to author
Forward
0 new messages