Re: {தமிழாயம்} "சுவாரஸ்யமான" என்பதன் சரியான தமிழ்ச்சொல் என்ன ஐயா?

21 views
Skip to first unread message

C.R. Selvakumar

unread,
Jan 25, 2013, 1:50:42 PM1/25/13
to thami...@googlegroups.com, தமிழ் மன்றம்


2013/1/24 Almighty <almight...@gmail.com>
"சுவாரஸ்யமான" என்பதன் சரியான தமிழ்ச்சொல் என்ன ஐயா?
"அதிஷ்டம்" என்பதன் சரியான தமிழ்ச்சொல் என்ன ஐயா?

சுவாரஸ்யம், சுவாரஸ்யமான என்பன அருமையான சொற்கள். சுவாரஸ்யமான,
என்பதன் சரியான தமிழ் வடிவம் சுவாரசியமான (தமிழ்ப் பேரகராதி
சுவாரசியம் என்று குறிக்கின்றது) . இதன் பொருளும் 
ஈடான தமிழ்ச்சொல்லும் சுவையான என்பதாகும்ஆனால் இன்று
அதனோடு ஆர்வமூட்டும், ஆர்வமூட்டும்படியான, ஆர்வம்தூண்டும்,
என்பன போன்ற பொருள்களிலும் பயன்படுகின்றது. 
சுவாரசியமா இருந்தது என்பதை விறுவிறுப்பா இருந்தது
என்றும் சில இடங்களில் சொல்வது பொருத்தமாக அமையும். 

அதிர்ஷ்டம் என்பது எதிர்பாராது கிடைக்கும் (நல்ல) ஒன்று.
ஆகூழ்,  நற்பேறு, எதிர்பாராப் பேறு, நல்லூழ் எனலாம்.
எனக்கு அவரைப் 
பார்க்கக்கிடைத்தது  என் அதிர்ஷ்டம் = அவரைக்ப் பார்க்கக்கிடைத்தது எனக்கு நற்பேறு=
அவரைப் பார்க்கக்கிடைத்தது என் நல்லூழ்.

அதிட்டம், சுவாரசியம் என்று கிரந்தம் நீக்கியும் தமிழில் வழங்கலாம்.
தமிழ் அறிஞர்கள் இதனை வடவெழுத்து ஒரீஇ என்பார்கள்.
ஒரீஇ என்றால் நீக்கி என்று பொருள்.

அன்புடன்
செல்வா



--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
 
 



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

பழமைபேசி

unread,
Jan 25, 2013, 4:11:02 PM1/25/13
to தமிழ் மன்றம்
எங்கூர்ல நாங்க சொல்றது என்னன்னு கேட்டீங்ணா, ”பாக்குறதுக்கும்
கேக்குறதுக்கும் அது நெம்ப ஒணத்தியா இருந்துச்சாக்கு”.

On Jan 25, 12:50 pm, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:
> 2013/1/24 Almighty <almighty.spi...@gmail.com>


>
> > "சுவாரஸ்யமான" என்பதன் சரியான தமிழ்ச்சொல் என்ன ஐயா?
> > "அதிஷ்டம்" என்பதன் சரியான தமிழ்ச்சொல் என்ன ஐயா?
>
> சுவாரஸ்யம், சுவாரஸ்யமான என்பன அருமையான சொற்கள். சுவாரஸ்யமான,
> என்பதன் சரியான தமிழ் வடிவம் சுவாரசியமான (தமிழ்ப் பேரகராதி
> சுவாரசியம் என்று குறிக்கின்றது) . இதன் பொருளும்

> ஈடான தமிழ்ச்சொல்லும் *சுவையான *என்பதாகும்*. *ஆனால் இன்று

C.R. Selvakumar

unread,
Jan 25, 2013, 5:03:59 PM1/25/13
to tamil...@googlegroups.com, தமிழாயம்


2013/1/25 பழமைபேசி <pazam...@gmail.com>

எங்கூர்ல நாங்க சொல்றது என்னன்னு கேட்டீங்ணா, ”பாக்குறதுக்கும்
கேக்குறதுக்கும் அது நெம்ப ஒணத்தியா இருந்துச்சாக்கு”.

அன்புள்ள பழமைபேசி,

மிக அருமை! மிக்க நன்றி! இந்தச் சொற்களை நான் கேட்டு வெகுநாள்கள்
ஆகின்றன!  

உணர்த்தி என்பது ஒணர்த்தி என்று ஆகி ஒணத்தி ஆயிற்று என்று நினைக்கின்றேன்.
உணர்த்தியறுதல் என்பது நினைவற்று மயங்கிப் போதல். மெய்மறத்தல்
என்றும்பொருள். உணர்த்தியா இருந்தது என்றால் விறுவிறுப்பாக இருந்தது
மிக ஈர்ப்பா இருந்தது என்று பொருள். உணர்த்தியா இருந்தது--> ஒணர்த்தியா
இருந்தது--> ஒணத்தியா இருந்துச்சு என்பது பேச்சுவழக்கு.
நெம்ப = ரொம்ப = நிரம்ப (கொங்கு நாட்டு வழக்கு. பிற இடங்களிலும் இருக்கலாம்).

மீட்டுக்கொடுத்தமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி! உண்மையிலேயே
கேட்டு வெகு நாள்கள் ஆகிவிட்டன!
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.


இரா. செல்வராசு

unread,
Jan 25, 2013, 5:30:03 PM1/25/13
to tamil...@googlegroups.com

வியப்பு! சென்ற வாரம் தான் "ஒணத்தி" பற்றித் தேடிக் கொண்டிருந்தேன்.

Message has been deleted

இரா. செல்வராசு

unread,
Jan 25, 2013, 5:32:23 PM1/25/13
to tamil...@googlegroups.com

C.R. Selvakumar

unread,
Jan 25, 2013, 5:49:08 PM1/25/13
to tamil...@googlegroups.com


2013/1/25 இரா. செல்வராசு <ma...@selvaraj.us>

https://twitter.com/search?q=%E0%AE%92%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF


On Friday, January 25, 2013 5:30:03 PM UTC-5, இரா. செல்வராசு wrote:

வியப்பு! சென்ற வாரம் தான் "ஒணத்தி" பற்றித் தேடிக் கொண்டிருந்தேன்.


:) :) 
இப்படி நம் மக்கள் மிக உயிரான சொற்களை தொலைக்கின்றார்களே! உங்கள் வழக்குகள்
அனைத்தும் கேட்டவை  சுவைத்தவை. மீட்டுக்கொடுத்த பழமைபேசிக்கும் உங்களுக்கும்
மிக நன்றியன்!!

பழமைபேசி

unread,
Jan 25, 2013, 6:04:06 PM1/25/13
to தமிழ் மன்றம்
நெம்பவும் கெரக்கமாயிடிச்சுன்னா இப்பிடியுஞ் சொல்றதுதானுங்க. ”சொக்குப்
பயிரு தின்ன ஆடாட்டம் ஆயிட்டாம்பாரவன்”

MANICKAM POOPATHI

unread,
Jan 25, 2013, 7:46:26 PM1/25/13
to tamil...@googlegroups.com
உண்மைதான்..!


அத்தோடு.. உணத்தி /ஒணத்தி என்பதனை..
நாவின் சுவை குறித்தும் பேசுவதுண்டு..? :-)

நிரம்பவும் என்பது.. எமது வட்டார வழக்கில்
ரொம்பவும் அல்லது நொம்பவும் என'வும் வரும்..?

மற்றபடி..
இங்கே புதிதாகச் சொல்ல ஏதுமில்லை.
எல்லாம் நண்பர்கள் அறிந்ததுதானே..?
என்றாலும்.. ஒரு பதிவினுக்காக....

(பேச/கேட்க...) சுவராசியம்/சுராசியம்..
என்பதெல்லாம்... தமிழின் பெருவழக்கு.

[சுரம் = இசையோசை/சுரசதி + ஆசியம் = நகைச்சுவை...]

ஒருவேளை.. சுவாரஸ்யம் என்பது
அதனுடைய மணிப்பவள எச்சமோ.. என்னவோ..?

சுரம் => சுவரம் /ஸ்வரம் + ஆசியம் => ஹாஷ்யம் = சுவராசியம்/ சுவாரஸ்யம்

ஆசியம் : நவரசத்துள் முதலாவது நகைரசம் என்பார்கள் தானே..?


நன்றி.. வணக்கம்..! _/\_


அன்புடன்.../பூபதி
_________________
Reply all
Reply to author
Forward
0 new messages