ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 26 August 2025 அகரமுதல
(வெருளி நோய்கள் 311 – 315 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 316 – 320
புனைவுரு இயேன் இரீடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இயேன் இரீடு வெருளி.
ஆர்தர் என்பது மார்க்கு பிரவுன்(Marc Brown), கேத்தி வா(Kathy Waugh) ஆகியோரால் உருவாக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர்.
இதில் வரும் இயேன் இரீடு மீதான பேரச்சத்தையும் அதனால் வரும் வெருளியையுமே குறிப்பது இது.
00
புனைவுரு இரஃபேல்(Raphael) குறித்த வரம்பற்ற பேரச்சம் இரஃபேல் வெருளி.
பதினகவை சடுதிமாற்ற நிஞ்சா கடலாமைகள்(Teenage Mutant Ninja Turtles) உலகில், இரபேல் பெரும்பாலும் பூச்சிகள் மீது கடுமையான வெறுப்பைக் கொண்டவராகச் சித்தரிக்கப்படுகிறார். சில சமயங்களில் தீவிர அருவருப்பும் வெறுப்பும் கொண்டவராகக் காட்டப்படுகிறார். இவரால் எதிர்க்ப்படும் பூச்சிகளைக் கண்டு அச்சம் கொண்டும் பூச்சி மீதான வெறுப்பைப் பார்த்தும் வெருளி கொள்கின்றனர்.
00
இரட்டைப்படை எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் இரட்டைப்படை எண் வெருளி.
இரட்டைப்படை எண் வரும் நாளில் முதன்மைப் பணியை ஆற்றாதிருத்தல், இரட்டைப்படை எண் வீட்டிற்குக் குடிபோகாமல் இருத்தல் என எல்லா நேர்வுகளிலும் இரட்டைப்படை எண்களை இவர்கள் தவிர்ப்பர்.
omalos + numerus ஆகிய கிரேக்கம் + இலத்தீன் சொற்களுக்கு இரட்டைப்படை எண் எனப்பொருள்.
00
எண் இரண்டு குறித்த காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் இரண்டாம எண் வெருளி.
இரண்டு இரண்டாக உள்ள இணை, இரு கூறாக உள்ள பகுப்பு, இருமை வாதம் முதலியன மீதும் இத்தகையோருக்குப் பேரச்சம் வரும்.
00
இரண்டாம் நிலை குறித்த வரம்பற்ற பேரச்சம் இரண்டாம் நிலை வெருளி.
Deftero என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் இரண்டாவது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
மழை வீழட்டும்!
1744 இல் எழுதப்பெற்ற “London Bridge Is Falling Down” என்றொரு மழலைப் பாடலை அனைவரும் அறிவர். “வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்” என்னும் கலைஞரின் கருத்தை இப்பாடல் முறையில் பொருத்திப் பாருங்கள். பின்வரும் இனிய பாடல் கிடைக்கும்.
வேண்டிய மட்டும் வீழட்டும்! – மழை
வீழட்டும் வீழட்டும் – பாரில்
வேண்டிய மட்டும் வீழட்டும்!
மழை
எங்கெங்கும் வீழட்டும்!
நீயும் நானும் வீழ்ந்தாலும் – தமிழ்
வாழட்டும்! வாழட்டும்! – பாரில்
நீயும் நானும் வீழ்ந்தாலும் – தமிழ்
என்றென்றும் வாழட்டும்!
தமிழ்
என்றென்றும் வாழட்டும்!
“Rain Rain go away” என மழையை விரட்டாமல், பெய்தும் பெய்யாமலும் கெடுக்காமல், நமக்கு வேண்டிய அளவு மட்டும் மழை பொழிய வேண்டுவது பொருத்தமானதுதானே!
– இலக்குவனார் திருவள்ளுவன்