தேவதானப்பட்டி பகுதியில் வெளவால்கள் அழிவாட்டத்தால் (அட்டகாசத்தால்) விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை, கெங்குவார்பட்டி, வைகை அணைப்பகுதியில் ஆயிரக்கணக்கான வெளவாலகள் கூட்டம் கூட்டமாக தங்கியுள்ளது. இவ்வகை வெளவால்கள் இப்பொழுது மழை இல்லாததால் பழங்கள் இருக்கும் பகுதியை நாடி இடம் பெயர்ந்து வருகின்றன. மேலும் இப்பொழுது நாவல் பழப் பருவம் தொடங்கியுள்ளதால் நாவல்மரங்கள் அடங்கிய பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன.
இவ்வாறு நாவல்மரங்களில் தங்களுக்குத் தேவையான உணவுகள் கிடைக்காவிட்டால் அண்மையில் உள்ள சீமையிலுப்பை(சப்போட்டா), வெள்ளரித்தோட்டம், முந்திரித்தோட்டம், பப்பாளித்தோட்டங்களில் நுழைந்து அவற்றை உணவாக உட்கொள்கின்றன.
ஏற்கெனவே மழை இல்லாமல் வாடும் உழவர்குடியினர் இருக்கின்ற தண்ணீரை வைத்துப் பயிர்த்தொழில் செய்து வருகின்றனர். இப்பொழுது அந்தப் பயிர்த்தொழிலையும் நசுக்கும் வகையில் வெளவால்கள் அழித்து வருகின்றன.
எனவே வனத்துறையினர் வெளவால்களை விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என உழவர் பெருமக்கள் வலியுறுத்துகின்றனர்
தேனிப் பகுதியில் கயிறு திரிக்கும் தொழில் மூடப்படும் பேரிடர்(அபாயம்) உள்ளது.
தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி பகுதிகளில் தென்னை மரத்தின் மட்டைகளில் இருந்து கயிறு தயாரிக்கும் தொழில் குடிசைத்தொழிலாக நடைபெற்று வருகிறது. இத்தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. தென்னை மட்டைகளின் நார்கள் வெளிநாட்டிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் செங்கல் போன்று கடினமாக்கப்பட்டு அதனையும் வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள்.
இதனால் அதிக விலை கொடுத்தும்முன் தொகை கொடுத்தும் தென்னை மட்டைகளை வாங்கிச்செல்கின்றனர். தற்பொழுது குடிசைத்தொழிலாக உள்ள இத்தொழில்போதிய மூலதனத்துடன் நடைபெறுவதில்லை. இவை தவிர கடந்த சில வருடங்களுக்கு முன்னர்க் கூட்டுறவு முறையில் கயிறு திரிக்கும் தொழில் நடைபெற்று வந்தது. தற்பொழுது தேவதானப்பட்டி பகுதியில் அந்தத் தொழிற்சாலையும் மூடப்பட்டு விட்டது.
இதனால் பலர் சேலம்ஓமலூர் பகுதிகளுக்கு வேலைக்குச் சென்றுவிட்டனர். இவை தவிர சீனாவில் இருந்து தரமான கயிறுகள் குறைந்த விலைக்குக் கிடைப்பதாலும் நொசிவிழை(நைலான்) மலிவாகக் கிடைப்பதாலும் அவற்றின் விலைக்கு இவர்களால் கொடுக்க முடியவில்லை. இதனால் கயிறு உற்பத்தி செய்யும் குடிசைத்தொழில் நாளுக்கு நாள் மூடப்பட்டு வருகிறது.
எனவே நலிந்த இத்தொழிலை மேம்படுத்த அரசு சார்பில் நல்கையுடன் கூடிய கடன்வழங்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அகரமுதல 44
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.