1. குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 3.பெரியாரின் தமிழ்ப்பற்றும் தமிழ்ப்பழிப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2. வெருளி நோய்கள் 851-855: இலக்குவனார் திருவள்ளுவன்

2 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Dec 20, 2025, 4:26:34 PM (9 hours ago) Dec 20
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

வெருளி நோய்கள் 851-855: இலக்குவனார் திருவள்ளுவன்

 


ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்      21 December 2025      கரமுதல


(வெருளி நோய்கள் 846-850: தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 851-855

  1. குவளை வெருளி – Flitzaniphobia / Poculophobia

காழநீர்(காப்பி) முதலான குடிவகைகளுக்குப் பயன்படுத்தப்படும் நெகிழிக் குவளைகள் பற்றிய அளவுகடந்த பேரச்சம் நெகிழிக்குவளை வெருளி. சுருக்கமாகக் குவளை வெருளி எனலாம்.
சூடான பானங்கள் நெகிழிக் குவளைகளில் ஊற்றப்படுவது உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும். என்றாலும் இது குறித்து மிகையான பேரச்சம் கொள்ளாமல் தவிர்க்க வேண்டும். இப்பொழுது அரசே நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளதால் இத்தகைய வெருளி குறையும், மறையும். (பேரச்சம் காழநீர் மீது என்றால் காழநீர் வெருளி என்றே சொல்லலாம்.)
இப்பொழுது நெகிழி பயன்பாட்டிற்கே தடை விதிப்பதால் இனிக் குவளை வெருளி குறையலாம். என்றாலும் தாள் குவளைகளைப் பயன்படுத்தும் பொழுதும் இவ்வெருளி வரும்.
Poculum(poculo) என்னும் இலத்தீன் சொல்லிற்குக் குவளை என்று பொருள். பழைய உரோமன் மொழியில் ஏனம் என்று பொருள்.
00

  1. குழந்தை பாபன் வெருளி – Babybopphobia
    புனைவுரு பாத்திரமான குழந்தை பாபன் குறித்த வரம்பற்ற பேரச்சம் குழந்தை பாபன் வெருளி.
    செரீல் இலீச்சு(Sheryl Leach) இளஞ்சிறார்களுக்கு உருவாக்கிய ‘பாருனியும் நண்பர்களும்’(Barney & Friends) என்னும் அமெரிக்கத் தொலைக்காட்டிசித் தொடரில் இடம் பெறும் கற்பனைப்பாத்திரமே குழந்தை பாபன்(Babybop).
    00
  2. குழந்தை முத்த வெருளி – Baowenphobia
    குழந்தை முத்தம் குறித்த வரம்பற்ற பேரச்சம் குழந்தை முத்த வெருளி.
    குழந்தைகளை முத்தமிடும் பொழுது தலையின் உச்சியில் அல்லது பாதத்தின் மேற்பகுதியில்தான் முத்தமிட வேண்டும், உதட்டில் முத்தமிடக் கூடாது என்பன போன்ற சில வரைமுறைகள் உள்ளன. வாய் தூய்மையற்றிருப்பின் அப்பொழுது முத்தமிடுவதும் தவறாகும். இது போன்ற தகவல்களினால் குழந்தைகளுக்கு முத்தமிடும் பொழுது குழந்தைகளின் பெற்றோர்களுக்குத் தேவையற்ற பேரச்சம் எழுவது இயற்கையே.
    00
  3. குழப்ப வெருளி – Implexaphobia

கடுஞ்சிக்கலால் ஏற்படும் குழப்பநிலை தொடர்பான அளவற்ற பேரச்சம் குழப்ப வெருளி.
உணர்ச்சி வெருளி உள்ளவர்களுக்குக் குழப்ப வெருளி வரும் வாய்ப்புள்ளது.
00

  1. குழி அப்ப வெருளி – Vaflaphobia

குழி அப்பம்(waffle) குறித்த அளவுகடந்த பேரச்சம் குழி அப்ப வெருளி.
Vafla என்னும் நார்வே மொழிச்சொல்லின் பொருள் குழியப்பம்.
00

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன் 

வெருளி அறிவியல் 2/5

++

குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 3.பெரியாரின் தமிழ்ப்பற்றும் தமிழ்ப்பழிப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்      21 December 2025     அகரமுஐதல



(குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 2. இந்து மதத்தை மட்டும்தான் பெரியார் எதிர்த்தாரா? – தொடர்ச்சி)

குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 3.பெரியாரின் தமிழ்ப்பற்றும் தமிழ்ப்பழிப்பும்

பெற்றோர் தம் குழந்தையிடம் “வெளியே போனால் காலை உடைத்து விடுவேன்” என்று சொன்னால் வெறுப்பில் சொல்லும் சொற்களா இவை. அவர்கள் தம் பிள்ளையிடம் முட்டாளே என்று சொன்னால் உண்மையிலேயே அவ்வாறு கருதுகிறீர்கள் என்ற பொருளா? உண்மையிலேயே முட்டாளாக இருந்தாலும் அறிவாளியாக எண்ணுவதுதானே பெற்றோர் இயல்பு. அதுபோல்தான் சில நேரங்களில் பெரியார் தமிழைப்பற்றியும் தமிழர்களைப்பற்றியும் சொன்னவையும். எனினும் சில நேரம் அவர் சொன்ன சுடுசாெற்களுக்கு அவர மீது பற்றுள்ள தமிழன்பர்கள் சப்பைக் கட்டு கட்டினாலும்  உண்மையிலேயே அவர் சொன்னவை தமிழுக்கு எதிரான பழிப்புச் சொற்களே. எனினும்  தமிழ்ப்பற்றுமிக்க அவர், தமிழ் மேலும் மேன்மையடைய வேண்டும் என்றும் தமிழர்கள் விடிவைக் காண வேண்டும் என்றும் பெருவிழைவு கொண்டவர். அவற்றிற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டவர். எனவே, அவரிடம் காணும் செயற்பாடுகளில் மிக்கன கொண்டு, தக்கன போற்றி, அல்லனவற்றைப் புறந்தள்ளி அவரைப் போற்ற வேண்டும்.

பெரியார் தம் வாழ்நாளில் பயணம் மேற்கொண்ட தெ்ாலைவு 13,12,00 புதுக்கல்.இது பூமியின் சுற்றளவை விட 33 மடங்கு மிகுதி; இப்பயணத்தில் அவர் ஏறத்தாழ 10,700 பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார்; திருமணங்களில், கல்விக்கூடங்களில் என அவர் ஆற்றிய அரங்கு உரைகளைச் சேர்த்தால் இது மிகுதியாக இருக்கும்; எண்ணாயிரத்திற்கு மேற்பட்ட நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்; 21,400 மணி நேரம் உரையாற்றியுள்ளார்; 39 முறை வெளிநாடுகளுக்குச்சென்று பரப்புரை ஆற்றியுள்ளார். இவை  யாவும்  மக்கள் நலனுக்காக அவர் வாழ்வை ஒப்படைத்ததை மெய்ப்பிப்பனவே.

ஆனால், சிலர் தமிழ்த்தேசியப் போர்வையில் திராவிடத்தை ஏசுவதாகக் கருதி, ஆரியத்திற்குத் துணை நின்று பெரியாரை ஏசுகிறார்கள். பெரியாரின் தவறான கொள்கைகளையோ அவற்றின் அடிப்படையிலான செயற்பாடுகளையோ சுட்டிக்காட்டினால் தவறல்ல. அவ்வாறு எச்செயல் எத்தன்மையத்தாயினும் அச்செயலையும் செயலின் விளைவுகளையும் ஆராய்ந்து நடுநிலையுடன் பேசுவதும் எழுதுவதும் தவறல்ல. பெரியார் பெரியார்தான் என்பதை உணர்ந்து அவரின் பெருமைகளையும் போற்ற வேண்டும்.

இவைபோன்ற கருத்துகளைப் பெரியார் தம் குடியரசு இதழிலும் பகுத்தறிவு இதழிலும் வெளியிட்டுத தமிழுக்கு நலம் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.

தமிழறிஞர்கள் தமிழ்த்தூய்மையை வலியுறுத்தினர். பெரியாரும் , தமிழ்ப் புத்தகங்கள் தூய தமிழில் எழுதப்பட வேண்டும் என்றும் சமற்கிருதச் சொற்கள் தமிழில் கலந்தால் தமிழுக்குப் பெருமை குறைந்து போகாது என்பது தவறு என்றும், அப்படிக் கலப்பதுதான் மொழியின் முன்னேற்றம் என்று கூறுவதும் தவறு என்றும்   வலியுறுத்தியுள்ளார். தமிழின்மீதுள்ள பெரியாரின் பற்றுக்கு இவைபோன்ற கருத்துகளே சான்றாகும்.

தமிழுக்கு என்ன செய்ய வேண்டும் எனப் பெரியார் வலியுறுத்துவன யாவும் அவரின் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துவனவே. தமிழுக்காக என்ன செய்ய வேண்டும் எனப் பிறர் கூறுனவற்றைத் தம் இதழில் வெளியிட்டு அவற்றை மக்களிடையே பரப்பினார். சான்றுக்குப் பின்வருவனவற்றைப் பார்ப்போம்.

1. தமிழர் தமிழ்ப் பெயர் இட வேண்டும்.

2. தமிழ்நாட்டுப் பிரிவு, ஊர், தெரு, வீடு பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும்.

3. வீட்டிலும் கடைத்தெருவிலும், அலுவலகங்களிலும், வழிப் போக்கிலும் ஆங்கிலச் சொல்லும், சமஸ்கிருதமும் தமிழில் கலப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4. தமிழில் இல்லாதவற்றிற்கு ஆங்கிலச் சொல்லைக் கலக்கலாம்.

5. தமிழில் இல்லாதவற்றிற்குப் புதிய சொல் உருவாக்க வேண்டும். அறிஞர்கள் உருவாக்கும் புதுச் சொல்லைப் பொது மக்கள் பயன்படுத்த வேண்டும்.

6. கோயில்களிலும், விழாக்களிலும் தமிழே ஒலிக்க வேண்டும்.

7. தமிழைப் பிழைபட வழங்குபவரைத் திருத்த வேண்டும்.

ஆகிய, சென்னை தமிழறிஞர் கழகத்தின் கோரிக்கைகளை 04.12.1943 குடிஅரசு ஏட்டில் பெரியார் வெளியிட்டு அவற்றிற்கான தம் உடன்பாட்டைத் தெரிவித்தார்.

பெரியாரின் தமிழ்ப்பற்றிற்கான சான்றுகளைப் பார்த்த பின்னர் அவரது தமிழ் மீதான பழிப்புரைகளையும் பார்ப்போம்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்தான்!



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Seshadri Sridharan

unread,
Dec 20, 2025, 10:25:55 PM (3 hours ago) Dec 20
to tamil...@googlegroups.com

குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 3.பெரியாரின் தமிழ்ப்பற்றும் தமிழ்ப்பழிப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்      21 December 2025     அகரமுஐதல



(குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 2. இந்து மதத்தை மட்டும்தான் பெரியார் எதிர்த்தாரா? – தொடர்ச்சி)

குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 3.பெரியாரின் தமிழ்ப்பற்றும் தமிழ்ப்பழிப்பும்

பெற்றோர் தம் குழந்தையிடம் “வெளியே போனால் காலை உடைத்து விடுவேன்” என்று சொன்னால் வெறுப்பில் சொல்லும் சொற்களா இவை. அவர்கள் தம் பிள்ளையிடம் முட்டாளே என்று சொன்னால் உண்மையிலேயே அவ்வாறு கருதுகிறீர்கள் என்ற பொருளா? உண்மையிலேயே முட்டாளாக இருந்தாலும் அறிவாளியாக எண்ணுவதுதானே பெற்றோர் இயல்பு. அதுபோல்தான் சில நேரங்களில் பெரியார் தமிழைப்பற்றியும் தமிழர்களைப்பற்றியும் சொன்னவையும். எனினும் சில நேரம் அவர் சொன்ன சுடுசாெற்களுக்கு அவர மீது பற்றுள்ள தமிழன்பர்கள் சப்பைக் கட்டு கட்டினாலும்  உண்மையிலேயே அவர் சொன்னவை தமிழுக்கு எதிரான பழிப்புச் சொற்களே. எனினும்  தமிழ்ப்பற்றுமிக்க அவர், தமிழ் மேலும் மேன்மையடைய வேண்டும் என்றும் தமிழர்கள் விடிவைக் காண வேண்டும் என்றும் பெருவிழைவு கொண்டவர். அவற்றிற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டவர். எனவே, அவரிடம் காணும் செயற்பாடுகளில் மிக்கன கொண்டு, தக்கன போற்றி, அல்லனவற்றைப் புறந்தள்ளி அவரைப் போற்ற வேண்டும்.

 

தமிழ் வளர்ச்சிக்கு அவர் வெளிப்படையாக ஏதும் செய்யவில்லை. தமிழ் வளர்ப்போரை அவர் ஆதரிக்கவும் இல்லை. ஏதேனும் பண உதவி செய்தாரா? அதுவும் இல்லை. தமிழ் புலவர்களை பழித்தவர் ஈரோடு வேங்கட இராமசாமி 

ஆனால், சிலர் தமிழ்த்தேசியப் போர்வையில் திராவிடத்தை ஏசுவதாகக் கருதி, ஆரியத்திற்குத் துணை நின்று பெரியாரை ஏசுகிறார்கள். பெரியாரின் தவறான கொள்கைகளையோ அவற்றின் அடிப்படையிலான செயற்பாடுகளையோ சுட்டிக்காட்டினால் தவறல்ல. அவ்வாறு எச்செயல் எத்தன்மையத்தாயினும் அச்செயலையும் செயலின் விளைவுகளையும் ஆராய்ந்து நடுநிலையுடன் பேசுவதும் எழுதுவதும் தவறல்ல. பெரியார் பெரியார்தான் என்பதை உணர்ந்து அவரின் பெருமைகளையும் போற்ற வேண்டும்.

இவைபோன்ற கருத்துகளைப் பெரியார் தம் குடியரசு இதழிலும் பகுத்தறிவு இதழிலும் வெளியிட்டுத தமிழுக்கு நலம் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.

தமிழறிஞர்கள் தமிழ்த்தூய்மையை வலியுறுத்தினர். பெரியாரும் , தமிழ்ப் புத்தகங்கள் தூய தமிழில் எழுதப்பட வேண்டும் என்றும் சமற்கிருதச் சொற்கள் தமிழில் கலந்தால் தமிழுக்குப் பெருமை குறைந்து போகாது என்பது தவறு என்றும், அப்படிக் கலப்பதுதான் மொழியின் முன்னேற்றம் என்று கூறுவதும் தவறு என்றும்   வலியுறுத்தியுள்ளார். தமிழின்மீதுள்ள பெரியாரின் பற்றுக்கு இவைபோன்ற கருத்துகளே சான்றாகும்.

தமிழுக்கு என்ன செய்ய வேண்டும் எனப் பெரியார் வலியுறுத்துவன யாவும் அவரின் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துவனவே. தமிழுக்காக என்ன செய்ய வேண்டும் எனப் பிறர் கூறுனவற்றைத் தம் இதழில் வெளியிட்டு அவற்றை மக்களிடையே பரப்பினார். சான்றுக்குப் பின்வருவனவற்றைப் பார்ப்போம்.

1. தமிழர் தமிழ்ப் பெயர் இட வேண்டும்.

2. தமிழ்நாட்டுப் பிரிவு, ஊர், தெரு, வீடு பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும்.

3. வீட்டிலும் கடைத்தெருவிலும், அலுவலகங்களிலும், வழிப் போக்கிலும் ஆங்கிலச் சொல்லும், சமஸ்கிருதமும் தமிழில் கலப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4. தமிழில் இல்லாதவற்றிற்கு ஆங்கிலச் சொல்லைக் கலக்கலாம்.

5. தமிழில் இல்லாதவற்றிற்குப் புதிய சொல் உருவாக்க வேண்டும். அறிஞர்கள் உருவாக்கும் புதுச் சொல்லைப் பொது மக்கள் பயன்படுத்த வேண்டும்.

6. கோயில்களிலும், விழாக்களிலும் தமிழே ஒலிக்க வேண்டும்.

7. தமிழைப் பிழைபட வழங்குபவரைத் திருத்த வேண்டும்.

ஆகிய, சென்னை தமிழறிஞர் கழகத்தின் கோரிக்கைகளை 04.12.1943 குடிஅரசு ஏட்டில் பெரியார் வெளியிட்டு அவற்றிற்கான தம் உடன்பாட்டைத் தெரிவித்தார்.

பெரியாரின் தமிழ்ப்பற்றிற்கான சான்றுகளைப் பார்த்த பின்னர் அவரது தமிழ் மீதான பழிப்புரைகளையும் பார்ப்போம்.

 

இவை தமிழுக்காக சொல்லப்பட்டவை அல்ல மாறாக சமசுகிருத வெறுப்பை வளர்க்க அவர் செய்தது. 1943 க்கு பின் அவர் தமிழ் பற்றிய நிலைப்பாட்டை மாற்றி தமிழை, தமிழரை தொடர்ந்து பழித்தார்.


Reply all
Reply to author
Forward
0 new messages