கல்லூரி

99 views
Skip to first unread message

iraamaki

unread,
Dec 4, 2012, 7:53:29 AM12/4/12
to tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com
கல்லூரி என்ற சொல் எப்படியெழுந்தது என்று தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் சரியாகப் புரிபடவில்லை.  கல்லுதல் என்னும் வினைச்சொல் (=ஒலித்தல்) விளங்குகிறது.  கல்வி, கற்றல், போன்ற சொற்கள் தொடர்பானவை.  
 
அந்தச்சொல்லில் பின்பகுதியாக வரும் ஊரி எதைக்குறிக்கிறது என்று தெரிந்தவர்கள் தங்கள் கருத்தை விவரிக்கலாமா?
 
அது திண்ணை பற்றியதாய் இருக்குமோ என்ற ஐயமும் எனக்கு உண்டு. 
 
அன்புடன்,
இராம.கி. 

Banukumar Rajendran

unread,
Dec 4, 2012, 10:54:14 PM12/4/12
to tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com
சீவக சிந்தாமணியில் கல்லூரி என்ற சொல் வருகிறது. கல்வி+இடம் என்ற பொருளில்! பாட்டின் எண் ஞாபகம் இல்லை.
பார்த்துவிட்டு எழுதுகிறேன்!

இரா.பானுகுமார்,
சென்னை


2012/12/4 iraamaki <iraa...@bsnl.in>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Dec 5, 2012, 6:55:06 AM12/5/12
to tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com
திரு இராம்கி அறிந்துதான் எழுதியிருப்பார் என எண்ணுகி்.றேன். சீவக சிந்தாமணி  995 ஆம் பாடல் வருமாறு( குணமாலையார் இலம்பகத்தில்) :
கலத்தல் காலம் கல்லூரி நல் கொட்டிலா
 முலைத் தடத்து இடை மொய் எருக் குப்பையா
 இலக்கம் என் உயிரா எய்து கற்குமால்
அலைக்கும் வெம் சரம் ஐந்து உடையான் அரோ

எனினும் இந்த இடத்தில் வில்வித்தை பயிற்றுவிக்கும்  படைக்கல்லூரிதான் குறிக்கப் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் அகராதியில் கல்விஊரி என்றால் கல்லூரி எனக் குறிக்கப் பெற்றுள்ளது.
ஊரி  என்பதற்கு இளமை என்றும் பொருள் உள்ளது. கல்வி பயிலும் இளைஞர்கள்  இருக்குமிடம் கல்லூரி எனப் பெற்றது போலும்.

2012/12/5 Banukumar Rajendran <banuk...@gmail.com>



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com


வேந்தன் அரசு

unread,
Dec 5, 2012, 7:21:01 AM12/5/12
to tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com
அப்படியே பள்ளி என்ற சொல்லில் தோற்றமும் சொல்லுங்க
பள்ளி எனில் படுக்கை என்றுதானே பொருள்
அது கல்வி பயிலும் இடமாகவும்,  மசூதிக்கும் பெயரான காரணம்?



5 டிசம்பர், 2012 6:55 am அன்று, திருவள்ளுவன் இலக்குவனார் <thir...@gmail.com> எழுதியது:

திரு இராம்கி அறிந்துதான் எழுதியிருப்பார் என எண்ணுகி்.றேன். சீவக சிந்தாமணி  995 ஆம் பாடல் வருமாறு( குணமாலையார் இலம்பகத்தில்) :
கலத்தல் காலம் கல்லூரி நல் கொட்டிலா
 முலைத் தடத்து இடை மொய் எருக் குப்பையா
 இலக்கம் என் உயிரா எய்து கற்குமால்
அலைக்கும் வெம் சரம் ஐந்து உடையான் அரோ

எனினும் இந்த இடத்தில் வில்வித்தை பயிற்றுவிக்கும்  படைக்கல்லூரிதான் குறிக்கப் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் அகராதியில் கல்விஊரி என்றால் கல்லூரி எனக் குறிக்கப் பெற்றுள்ளது.
ஊரி  என்பதற்கு இளமை என்றும் பொருள் உள்ளது. கல்வி பயிலும் இளைஞர்கள்  இருக்குமிடம் கல்லூரி எனப் பெற்றது போலும்.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

iraamaki

unread,
Dec 5, 2012, 8:06:10 AM12/5/12
to tamil...@googlegroups.com
இருவருக்கும் நன்றிகள்.
 
சீவக சிந்தாமணியில் இருப்பதாகக் கேல்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எந்தப்பாடல் என்று தேடிப் பார்க்கவில்லை. 
 
ஊரி என்பதற்கு உரிய பொருள் தான் புரியமாட்டேன் என்கிறது.  அது ஓர் இடமாக இருக்கவேண்டும் என்று மட்டும் தெரிகிறது. இளைஞர்கள் இருக்கும் இடம் என்பது நம்முடைய ஒரு ஊகம். அவ்வளவு தான். அந்தப் பொருளில் வேறு பயன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. கல்லூரியில் வரும் ஊரியை நான் அறிந்தவரை வேறு எங்கும் காணவில்லை.  [வில் வித்தை போன்ற போர்நுட்பங்கள் கற்கும் இடம் களரி என்றே குமரி மாவட்டத்தில் அழைப்பார்கள். கேரளத்திலும் அதே நிலை தான். களரிப்பயிற்றை இங்கு நினைவு கொள்ளுங்கள். (மற்ற இடங்களில் களரிப் பயிற்சியைத் தொலைத்துவிட்டு வெறும் சிலம்பம் மட்டுமே கற்றுத் தருகிறார்கள்.) களம், களரியானது எப்படி என்று பார்க்கவேண்டும். ]
 
கல்லூரி என்று இன்று நாம் சொல்லும் “உயர்கல்வி இடத்தை” பொ.உ.(C.E) 8 ஆம் நூற்றாண்டுச் சீவக சிந்தாமணிக்கு முன்னால் தமிழில் எப்படிக் குறித்திருப்பர்?  ”காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி” என்று இராசராசன் கல்வெட்டில் வரும் ”சாலை” இது போன்ற உயர்கல்வி இடம் என்று ஒரு கட்டுரையிற் படித்திருக்கிறேன். கலாசாலை என்னும் இருபிறப்பிச் சொல்லையும் இங்கு எண்ணிப் பார்க்கவேண்டும்.
 
ஊரி என்னுஞ்  சொல்லிற்கு திண்ணை என்ற பொருளிருக்குமோ? (நான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஓலையிற் படித்த ஆள். அங்குதான் எழுத்தும் எண்ணும் பல்வேறு நூல்களும் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். திண்ணைப் பள்ளிக்கூட மரபு ஆயிரங்காலத்து மரபு.) அது அகரமுதலிகளில் இடம்பெறாது போனதோ என்று ஐயம் எனக்குண்டு. 
 
திண்ணையின் வேர்ச் சொல்லோடு தொடர்பு கொண்டு அதே பொருளில் பல்வேறு சொற்களைத் தொகுத்து வருகிறேன். என்னுடைய சிந்தனையை இன்னுஞ் சில நாட்களிற் கட்டுரையாக்குவேன்.
 
இப்பொழுது வேறு பணிகளில் ஆழ்ந்திருக்கவேண்டிய சூழ்நிலைக் கட்டாயம்.   என்னைப் பொறுத்திருங்கள். அதே பொழுது உங்களுடைய கருத்துக்களை உங்களுக்கு இயலும் போது தெரிவியுங்கள். மற்றவர் கருத்துக்களுக்கும் காத்திருப்போம்.
 
இது அறிஞர் பலர் குழுமியிருக்கும் அரங்கு. நாம் பெரிதும் பயன்படுத்துகின்ற கல்லூரி என்ற சொல்லிற்குள் இப்படி ஒரு உட்பொருள் உறைந்திருக்கும் என்பது வியப்பே.  பல சொற்களின் சொற்பிறப்பு  தெரியாமலேயே புழங்கிக்கொண்டிருக்கிறோம் போலும். 
 
உறுதியாக உரையாடுவோம்.
 
[இன்னொரு வேண்டுகோள். ஒரு நாலைந்து பேரே இங்கு மடற்குழுவில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மற்ற  பலரும் வெறுமனே படித்துவருகிறார்கள். பொதுவாக, உரையாடுவது குறைந்திருக்கிறது. இது மடற்குழுவின் பயனை அளிக்காது.  ஒருவருக்கொருவர் உரையாடியே பலவற்றையும் தெரிந்துகொள்ளமுடியும்.  மடற்குழுவின் பங்களிப்பே அப்படிப் பெறுவதுதான். தமிழ்மன்றம் சிறப்பான மடற்குழுவாய் வளரவேண்டும்.]
 
அன்புடன்,
இராம.கி.     

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Dec 5, 2012, 10:32:56 AM12/5/12
to tamil...@googlegroups.com
  ஊரி என்றால் திண்ணை என்றும் பொருள் உண்டு.
கொட்டில் என்றால் விற்பயிற்சி நடை பெறும் இடம் என்பதைச் சீவக சிந்தாமணி உரையிலும் காணலாம்.
அதனுடன் இணைந்துதான் கல்லூரி இந்த இடத்தில் வந்துள்ளது.
" மொழிப்பொருள் காரணம் விழிப்பத் தோன்றா"  என்னும்  தொல்காப்பியர் நெறியை இங்கே நினைவு கொள்க.

2012/12/5 iraamaki <iraa...@bsnl.in>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

வேந்தன் அரசு

unread,
Dec 5, 2012, 9:43:36 PM12/5/12
to tamil...@googlegroups.com
ஊரி, (p. 165) [ ūri, ] s. A spiral shell-fish, or the empty shells, சங்கு. 2. Cloud, மேகம். 3. Juvenility, இளமை(p.)

C.R. Selvakumar

unread,
Dec 5, 2012, 10:57:37 PM12/5/12
to tamil...@googlegroups.com
அன்புள்ள இராம.கி ஐயா,
 
என்னால் திட்டவட்டமாக சொல்ல இயலாது. ஆனால் ஊரி
என்பதைப் பேரகரமுதலி
    n. < ஊர்-. 1. Species of Loranthus. See புல்லுருவி. உயர்மர முளைத்த வூரி போல (கல்லா. 37). 2. Conch; சங்கு. (அக. நி.) 3. Cloud; மேகம். (அக. நி.) 4.
 
என்று கூறுவதால், உயர ஏறும் கொடிவகை என்பதைக் கொண்டும், மேகம் போல் உயர உலவும் முகில் கூட்டம் போன்றும் பொருள் உள்ளதால், உயர இருப்பது உயரச்செய்வது என்னும் பொருளில் ஊரி என்றோ சேர்ந்திருப்பது என்னும் பொருளில் ஊரி என்றோ இருக்க வேண்டும் என்று கருதுகின்றேன். 

அதே பேரகராதி மற்றொரு பொருளாக

, n. < ஊர் + ஆள்-. An official who superintends the village affairs; ஊராட்சி செய்யும் ஓர் அதிகாரி. (T. A. S. iv, i, 10.

என்று குறிக்கின்றது. இதன்படியும் கல்வி கற்கின்ற, ஆட்சி நடைபெறுகின்ற இடம் என்றும். கல்வியாளர்கள் (கல்வி ஆட்சியர்) இருக்கும் இடம் என்றும் ஆகுபெயராக இருக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதுகின்றேன்.

இவை என் மேலோட்டமான கருத்துகள் மட்டுமே.

வேந்தன், பள்ளி என்பதும் சேர்ந்து கற்கும் இடம் என்னும் பொருள் கொண்டது என்று கருதுகின்றேன்.

பள்ளு பாடுதல் என்பதும் இங்கு கருதத்தகது. பள்ளி என்பது படுக்கும் இடம் மட்டும் அன்று. அது

சேரும் இடம் (ஆண் பெண் கூட்டமாக இருப்பினும், பலர் சேர்ந்து உறையும் இடமாக இருப்பினும்).

ஊருக்குப் பள்ளி என்பது சேர்ந்திருக்கும் இடம் என்பதால் ஏற்பட்டது எனப்து என் கருத்து. பள்ளிவாசமல் என்பதும்

பலர் சேர்ந்து தொழுகை செய்யும் இடம். இல்லறம் என்பதற்கே "சேர்தல்" கூடி வாழ்தல் என்னும் உட்பொருள் உண்டு.

தொழு என்றாலும் சேர்ந்து இருத்தல். தொழுவம் என்றால் மாடுகள் சேர்ந்திருக்கும் இடம். தொழுதெழுவாள் என்றால்

சேர்ந்து உள்ளெழுவாள் என்று பொருள்.. போதுமான நேரம் இல்லாததால் விரித்து எழுத இயலவில்லை...

ஆனால் என் கருத்துப்போக்கை உணர இவை உதவும் என்று கருதுகின்றேன்.. பின்னர் எழுதுகின்றேன்..

 

அன்புடன்

செல்வா

2012/12/5 iraamaki <iraa...@bsnl.in>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

Banukumar Rajendran

unread,
Dec 8, 2012, 10:09:32 AM12/8/12
to tamil...@googlegroups.com
கல்வி என்பது கல்லிலிருந்துத் தொடங்கியதே!  சமண முனிகள் (இங்கே ஜைனர்) ஊருக்கு வெளியே, மலைப் பகுதிகளில் தங்குவார்கள். (இவர்கள் அம்மணமாகயிருந்ததால் ஒதுக்குப்புறம் தேவையிருந்தது. பெளத்தர்களுக்கு அவ்வாறில்லை. சீவரம் அணிந்திருந்ததால், அவர்கள் மலையை நாடி செல்லும் வேலையில்லாமல் போனது). இவர்களை நாடி வந்த பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்ததனால். மக்களும் இவர்களுக்கு மலைகளில் பள்ளி (படுக்கை) அமைத்துக் கொடுத்தனர். இதனால் இம்மலைகளுக்கு பள்ளிகள் என்று நாளைடைவில் வழங்கப் பெற்றது. (காட்டு- திருச்சிராப்பள்ளி). பொது மக்களின் உணவிற்கு பிரதிபலனாக, சிறார்களுக்கு கல்வி (கல்+வி??) இம்மலைகளில் போதிக்கப்பட்டு வந்ததனால் கல்விக்கூடத்திற்கு பள்ளிக்கூடம் என்று அமைந்தது.


அற்றை நாளில், கல்விக்கூடம் என்றால் எண்ணும் எழுத்தும் மட்டுமல்ல வீரதீர விளையாட்டுக்களையும் சேர்த்தே சொல்லிக் கொடுக்கப்பட்டது. சீவகன் படித்ததும் இந்த வகை கல்லூரிகளிலே, சீவகன், போர்ப்பயிற்சியுடன், கல்வி, கலைகளிலும் சிறந்து விளங்கினான். சிந்தாமணியில்  கல்லூரி என்பதற்கு கல்வியுடன் அனைத்து கலைகளும் பயிற்றுவிக்கும் இடம் என்றுக் கொள்ளலாம்.

ஆயின், ஊரி என்பதற்கு பொருள் விளங்கவில்லை? எம் பெரியவரிடம் கேட்டுப்பார்க்கிறேன்!

(நேரம் இல்லாமையால் மிக சுருக்கமாக!)


இரா.பானுகுமார்,
கோவா :-)


2012/12/6 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

rajam

unread,
Dec 8, 2012, 3:22:54 PM12/8/12
to tamil...@googlegroups.com
"கற்பு" என்பதற்கும் "கல்வி" என்பதற்கும் வேர்ச்சொல் "கல்" என்பது. அதனால் "கல்வி" கல்லிலிருந்து தொடங்கியதாக இருக்கத் தேவையில்லை. ஒருவேளை ... அம்மி மிதித்து அருந்ததி காட்டி நடக்கும் திருமணச் சடங்குக்கும் "கற்பு < கல் + பு") என்பதற்கும் தொடர்பு இருக்க வாய்ப்புண்டு. 
"ஊரி ( < ஊர் +இ)" என்ற சொல் "எறும்பு ஊரக் கல்லும் தேயும்" என்ற தொடரை நினைவுபடுத்துகிறது. ஒருவேளை, பானுகுமார் சொல்வதுபோல, சமண/பௌத்த தங்குமிடங்கள்/படுக்கைகள் முதலியவற்றை அடைவதற்கு அவர்கள் ஊர்ந்து சென்றிருக்கலாமோ என்னவோ தெரியாது.

எனக்கு வேர்ச்சொல் ஆராய்ச்சியில் திறமை இல்லை, அதனால் ஒதுங்கிக்கொள்ளவேண்டும்போல! :-)

வேந்தன் அரசு

unread,
Dec 9, 2012, 10:06:04 AM12/9/12
to tamil...@googlegroups.com


8 டிசம்பர், 2012 10:09 am அன்று, Banukumar Rajendran <banuk...@gmail.com> எழுதியது:

கல்வி என்பது கல்லிலிருந்துத் தொடங்கியதே! 

ஆமாம். குரங்கு ஆயுதம் செய்ததும் கல்லால். கொட்டைகளை உடைத்ததும் கல்லால்.

கல் எனும் சொல்லை படைத்து தன் குட்டிகளுக்கு கல் கல் என்று கற்பித்தலை சொல்லி இருக்கும்
கல்  எனும் கிளவி பின் சில் எனும் சொல் ஆகி  இருக்கும் (சிலா= கல்)

. இரண்டு கல்= கல் கல் = கள்

குரங்குக்கு ககரம் ஒலிக்க வருமளவுக்கு சிகரம் வராது


நம் உடம்பின் பாகங்கள் பெரும் பன்மை ககரத்தில் தொடங்கும் காரணம் அதுவே.

ககரம் முதல தமிழ் எல்லாம்.

யாவும் என் புந்தியின்  கல்பனை.
Reply all
Reply to author
Forward
0 new messages