ஐயா குறிப்பிடுவது இதையா ?
Friday, July 15, 2005 2:18 AM
இந்தப் பட்டியலை அப்படியே மாணிக்கவாசகரின் யாப்புக் கைச்சாத்து (poetic
signature) என்று
சொல்லலாம். அவருடைய கைச்சாத்து ஆசிரிய விருத்தத்திற்கு மறுபக்கமாய்ப்
பெரிதும் சாய்ந்திருப்பதை
மேலே இருந்து அறியலாம். இத்தகைய கைச்சாத்து 9-ஆம் நூற்றாண்டு ஆக இருக்க
வாய்ப்பில்லை என்றே என்
சிற்றறிவிற்குப் படுகிறது.
அன்புடன்,
இராம.கி.
http://www.treasurehouseofagathiyar.net/36300/36373.htm
தேவ்
On Jul 30, 8:26 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> >>> மாணிக்க வாசகரின் பாக்களை வைத்து வகைப்படுத்தல் (typology classification) மூலம் அதை நான் நிறுவ முயன்றேன். <<<
>
யாப்பிலக்கணம் பற்றிய நூலை எழுதியவர் பேரா. சு. பசுபதி (யேல் பல்கலை
முனைவர்).
சந்தவசந்தக் குழுவில் அவர் புலமையை அறியலாம். அவரது மடலைப் பார்த்தேன்.
நன்றி.
மாணிக்கவாசகர் காலம் தேவார முதலிகளுக்குப் பிந்தையது என்பது எல்லோராலும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. மறைமலை அடிகள் சொந்தக் கருத்துக்கள் பல.
ஆராய்ச்சியில்
நிறுவாதவை அவை.
அவற்றுள் ஒன்று மாணிக்கவாசகர் 3-ஆம் நூற்றாண்டு!! அவருக்கு மகன்
முறையாகும்
முத்துக்குமார் திருப்புகழ்ச் சந்தம் பற்றிய ஆய்வு ஆங்கிலத்தில்
வெளியாகியது.
அதனை உங்களுக்கு அனுப்புகிறேன்.
பல்லவர் காலத்தில் சதாநிருத்த ஆனந்ததாண்டவ நடராஜமூர்த்தி உருவாகவே
இல்லை. சீயமங்கலத்தில் உள்ள நடேசர் (தூண் சிற்பம்) நடராஜர் அல்லர்.
பரதசாஸ்த்ரம் சொல்லும் புஜங்கத்ராசிதர் அவர். அதனைப் பாருங்கள்.
சோழர் கலைப்படைப்பான ஆனந்த நடராஜர் உருவான பின்னர் வாழ்ந்தவர்
மாணிக்கவாசகர்.
எனவே ஒன்பதாம் நூற்றாண்டு. திருவாசகத்தின் இண்டெர்னல் எவிடென்சும்
அதையே காட்டுகின்றன. நம் ஆசைக்கு வேண்டுமானால்
லக்ஷ்யம் < தமிழின் வேருள்ள இலக்கு + இயம், மாணிக்கவாசகர் 3-ஆம்
நூற்றாண்டு, ... என்று *தமிழில்* சொல்லிக்கொள்ளலாம்.
நா. கணேசன்
> ...
>
> read more »
மிக்க நன்றி. இதைத் தேடிக் கொண்டிருந்தேன். என்னுடைய பழைய கணியிலிருந்து
புதுக்கணிக்கு மற்றும் பொழுது தொலைத்த கட்டுரைகள் மிகப்பல. இப்பொழுது தங்கள்
முயற்சியால் ஒன்று கிடைத்தது
மீண்டும் நன்றி.
அன்புடன்,
இராம.கி.
--------------------------------------------------
From: "DEV RAJ" <rde...@gmail.com>
Sent: Saturday, July 30, 2011 6:56 PM
To: "தமிழ் மன்றம்" <tamil...@googlegroups.com>
Subject: [தமிழ் மன்றம்] Re: இலக்கியம் - இலக்கணம் - 3
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>
>
இராம.கி.
--------------------------------------------------
From: "iraamaki" <iraa...@bsnl.in>
Sent: Saturday, July 30, 2011 7:31 PM
To: <tamil...@googlegroups.com>
Subject: Re: [தமிழ் மன்றம்] Re: இலக்கியம் - இலக்கணம் - 3
ஆடவல்லான் உருவமைப்பு பிற்காலத்தது என்பதே
ஆராய்ச்சியாளர் கருத்தும் -
In fact, the earliest stone approximation to the Nataraja bronze is
found in a seventh
century Pallava cave temple at Siyamangalam (Plate 1) (ibid.: 193).
Here, a four-armed
Shiva dances in *bhujangatrasita karana* with right leg extended,
front right hand in the
protective gesture and rear right hand holding a lamp with fire;
however, the front left
hand is not crossed and the demon is missing. Executed on a pilaster,
it suggests a creative
portrayal inspired by a dancer rather than a worshipped icon. There
are few iconographic
parallels elsewhere save for a fine eighth-century Rashtrakuta cave
painting from Ellora,
Maharashtra (Vatsyayan 1982: 39). Additionally, Nagaswamy (1995: 113)
claims to have
identified a Pallava stone Nataraja in the Tirukkadaimudi Mahadeva
temple, Tirucchinampundi.
http://www.sharadasrinivasan.com/data/shivacosmicdancer.pdf
புஜங்கத்ராஸத்திற்கு அடுத்த கரணம் குஞ்சித பாதம் - தூக்கிய திருவடி.
’அரிமர்தனம்’ போன்ற சொல்லாட்சி 3ம் நூற்றாண்டில் இருந்ததா ?
தேவ்
> ...
>
> read more »
உறுதியாக உங்களுக்குச் சொல்லுவேன். மணிவாசகர் காலம் 9 ஆம் நூற்றாண்டில்லை.
கட்டுரையில் மாணிக்க வாசகர் காலத்தை இக்கு வைத்தே சொல்லியிருப்பேன். அவர்
களப்பிரர் காலத்தில் இருந்திருக்கலாம் என்பதே என் சிந்தனை. எந்த நூற்றாண்டு
என்று நான் ஆய்ந்தேனில்லை. அது 3 ஆம் நூற்றாண்டு என்பது மறைமலை அடிகளார்
கருத்து. அவருடைய “மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும் என்ற நூலை ஒரு முறை
படித்துப் பாருங்கள். (பூம்புகார் பதிப்பகம், சென்னை 600108). அதில் வரும் பல
தருக்கங்கள் கவனித்து ஓரும் படியாகவே உள்ளன.
அன்புடன்,
இராம.கி.
--------------------------------------------------
From: "DEV RAJ" <rde...@gmail.com>
Sent: Sunday, July 31, 2011 8:46 AM
To: "தமிழ் மன்றம்" <tamil...@googlegroups.com>
Subject: [தமிழ் மன்றம்] Re: இலக்கியம் - இலக்கணம் - 3
> Jul 30, 6:46 pm, "N. Ganesan"
இதையெல்லாம் முதலில் ஆராய்ந்து எழுதியவர் சி. சிவராமமூர்த்தி
(டில்லி நேஷனல் ம்யூஸியம் அமைத்தவர், அதன் முதல் டைரக்டர்,
நல்ல ஓவியர்). அவர் சகலர் டி. என். ராமச்சந்திரன். அவரது
மாணவர் ஆர். நாகசாமி.
ச. தண்டபாணி தேசிகர் நடராஜ வடிவங்களைப் பற்றி
அரிய நூலை எழுதினார். தருமபுர ஆதீன வெளியீடு.
அதனை எடுத்துக்கொண்டு நாடு முழுதும் ஆராய்ந்து
சிவராமமூர்த்தி எழுதியது நடராஜா என்னும் பெருநூல்.
ஜவஹர்லால் நேரு ஃபெலோவாக. இன்னொரு ஃபெலோ
ஐராவதம். சிந்து முத்திரை கன்கார்டன்ஸ் பணி.
------------------------------
பல்லவர்களின் பேத்தி ஒருத்தி ராஷ்ட்ரகூடர்களுக்கு வாழ்க்கைப்பட்டாள்.
கழுகுமலை வெட்டுவான்கோயில் மாடலில் உருவானது
எல்லோரா. அங்கே தட்சிணாமூர்த்தி உண்டு.
வைலக்ஷண்யம் - விளக்கத்திற்கு நன்றி
நா. கணேசன்
On Jul 30, 11:53 pm, Elangovan N <nelan...@gmail.com> wrote:
> முனைவர் கணேசன்,
>
> //பல்லவர் காலத்தில் சதாநிருத்த ஆனந்ததாண்டவ நடராஜமூர்த்தி உருவாகவே
> இல்லை.//
>
> அப்படின்னா அப்பர் பெருமானையும் ஒரு 15-16ஆம் நூற்றாண்டில்
> வாழ்ந்தவர் என்று அள்ளி விட்டா போச்சு!! நமக்கென்ன காசா பணமா? :-))
எனக்கு அப்பரைப் பற்றி ஒன்றும் தெரியாது.
> (என்ன விலை கொடுத்தேனும் தமிழ் தொடர்பான எதனையும்
> இழித்துவிடுவதுதானே நீங்கள் செய்யும் தொண்டு!)
>
> அப்பர் தேவாரம் - கோயில்பதிகம் - திருநேரிசை
> --------------------------------------------------------------------------- ------
>
> கருத்தனாய்ப் பாடமாட்டேன் காம்பன தோளி பங்கா
> ஒருத்தரால் அறியவொண்ணாத் திருவுருவுடைய சோதீ
> திருத்தமாந் தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
> **நிருத்தம்** நான் காண வேண்டி நேர்பட வந்தவாறே!!
>
> ....
> அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே......
>
> .....
> செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச் சிற்றம்பலத்தே
> **அந்தியும் பகலும் ஆட அடியிணை அலசுங் கொல்லோ.**
>
> ....
> கூத்தாவுன் கூத்துக் காண்பான் கூடநான் வந்தவாறே
>
> ....
> தினைத்தனை வேதங் குன்றாத் தில்லைச் சிற்றம்பலத்தே
> அனைத்து நின் **நிலயங்* *காண்பான் அடியனேன் வந்தவாறே
>
> இப்படியெல்லாம் அப்பர் மொகலாயர் காலத்திலோ,
> வெள்ளையர் காலத்திலோ எழுதியிருப்பாரோ?
>
> (ஆமாம் என்று நீங்கள் சொல்லவில்லை என்றால்தான் நான் அதிர்ச்சி அடைவேன்)
>
> அன்புடன்
> நாக.இளங்கோவன்
>
> 2011/7/30 N. Ganesan <naa.gane...@gmail.com>
> ...
>
> read more »
On Jul 30, 10:16 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
There is some discontinuity in Chidambaram history. After Chola
emperors imported
Dikshitars from the North (Kashi?) Ananda Tandava Natarajar seems to
have
gained major importance. Earlier 'Tillai vaazh antaNar'. who tended to
the
puuja kramam-s of Govindaraja, as mentioned by Azwars, also are
different.
From Madhyadesha, the Sivacharyars with their Agamas formed the
TirumuulaTTaanesvara temple. Umpati Sivacharyar, etc., are descendents
and the KoDikkavi refers to this temple with Linga in the garbhagrha,
Chola kings with the masterpiece of their regime, AnandatANdava
Nataraja
gave the maximum patronage to the metal image, and the older Linga
temple was reduced in prominence, a wall got erected.
N. Ganesan
இலக்கு / இலக்கியம் - சொற்றொன்மையே இவ்விழையின் இலக்கு என்பதையும்
நினைவில் கொள்க
தேவ்
> ...
>
> read more »
"முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே" என்பதையே அறிவுடையார்சிந்தை கொள்வார்.
On Jul 31, 3:41 am, Elangovan N <nelan...@gmail.com> wrote:
> திரு.கணேசன் அவர்களே,
>
[..]
> 1) அப்பர் பெருமான் "நிருத்தம் நான் காணவேண்டி நேர்பட வந்தவாறே"
> என்று சொல்வதில் அவர் தேடும் நிருத்தம் என்பது என்ன?
>
> 2) சதாநிருத்த ஆனந்தத் தாண்டவ நடராச மூர்த்தி என்று கணேசன் சொல்வதில்
> அந்த சதா நிருத்தம் என்பது என்ன?
>
> இந்த நிருத்தம் வேறு அந்த நிருத்தம் வேறுவா?
>
Best wishes, & I'm sure you can convince me & others that
Manikkavacakar is 3rd century. You are into your usual style.
N. Ganesan
On Jul 31, 3:57 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/7/31 Elangovan N <nelan...@gmail.com>
>
> > "முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே" என்பதையே அறிவுடையார்
> > சிந்தை கொள்வார்.
>
> நட்டம் நடமென்று நாடித் திரிவார்க்கோ
> இட்டம் இருக்குமிட மின்னொன்றே - எட்டித்
> திரிந்த தெலாமெஞ் சமணர்சேர் கூடம்
> தெரிந்ததெலாந் தீர்த்தங் கரர்,
>
> சிரமணக் கல்வெட்டு, அகழ்வு, எத்தையாவது கேட்டா பரவால்ல... ஆனாலும் நீங்க
> கேக்கறது அநியாயமுங்கண்ணா.... :))
>
நாக. இளங்கோவன் சொன்னால் போதும். எல்லாம் தமிழ்ச் சொல் ஆகிவிடும்.
இலக்கணம், இலக்கியம், தெறும துனைவியல், ... இப்படி வார்த்தைகளை
வைத்துக்கொண்டு *தமிழில்தான்* விஞ்ஞானம் போதிக்க அரசாங்கம்
முடிவெடுக்கும் நாளை எதிர்பார்த்துக்கொண்டுள்ளோம். வரலாறு
கற்பிக்கும் - மாணிக்கவாசகர் 3-ஆம் நூற்றாண்டு என - முனைவர் மறைமலை
அடிகள்,
அப்புறம் முனைவர் நாக. இளங்கோ, ...
வாழ்க தமிழ் ஆய்வு,
நா. கணேசன்
> இந்த நூற்றாண்டின் தலைசிறந்த அங்கத இலக்கியம்.
> உண்மை;வெறும் புகழ்ச்சியில்லை.
> இளங்கோவனுக்குள் ஒரு பெரும்பாவலர் உறைவது உண்மை.
> அன்புடன்,
> மறைமலை
> Please have a glance:
> www.ilakkuvanar.org
எப்படி ஆராய்ச்சி செய்வது? என்பதில் அங்கதத்தின் உச்சத்தைக்
காண மறைமலை அடிகள், சி. இலக்குவனார் நூல்கள்
முழுவதும் இணையத்தில் கிடைக்கும்வகை செய்ய வேண்டும்.
ழான் செவ்வியார் இலக்கணம், இலக்கியம் பற்றி எழுதியவையுடன்
சுவலெபில், வையாபுரிப்பிள்ளை ஒப்பிட்டு பார்க்க
வாய்ப்புக் கிடைக்கிறது.
ஆராய்ச்சி செய்வது எப்படி? என்று தமிழ்ப் பேராசிரியர்கள்
கற்றுக் கொடுக்க முன்வரவேண்டும். தமிழ்ப் பேராசிரியர்கள்
நிறையப் பேர் தங்கள் ஆராய்ச்சிகளை இணையத்தில்
எங்களைப் போன்ற தமிழ் மாணவர்களுக்கு பகிர்ந்துகொள்ள
முன்வருவதில்லை. அக்குறை போக்க கல்லூரிகள்,
ஆராய்ச்சி முனைவர்கள் இன்டெர்னெட் பக்கம் வர வேண்டும்.
அன்புடன்,
நா. கணேசன்
On Jul 31, 1:17 am, "iraamaki" <iraam...@bsnl.in> wrote:
> அன்பிற்குரிய இளங்கோ,
>
> இவரோடு பேசிக் கொண்டிருப்பதே வீண் என்று பலமுறை தோன்றுகிறது. இவர் மறைமலையடிகளாரின் “ மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்” என்ற நூலைப் படித்திருப்பாரா என்பதே ஐயமாக இருக்கிறது. எப்பொழுது பார்த்தாலும் கூட்டியள்ளி வீசியெறியும் கூற்றுக்கள் (sweeping statements), விளிம்புநிலை வாதங்கள், இரண்டாம் நிலை ஆசிரியர்களின் கருத்தோதல்கள், அரசியற் குமுகவியற் தமிழியற் கிண்டல்கள், தானிருக்கும் கூட்டத்திற்குத் தகுந்தாற்போல் தன் எழுத்து நடையை மாற்றிக் கொள்ளும் நடிப்பு எனப் பல்வேறு வகைகளில் ஓர் அரசியற் தனத்தோடு இவர் எங்கும் செயல்படுகிறார். (வடமொழி அன்பர்களா? இவருடைய நடையும் மேற்கோளும் வடமொழி கலந்து இருக்கும். ஆங்கில அன்பர்களா? அதற்குத் தக்க அமையும்.) இவருடைய அறிவுய்தி நேர்மையையும் கிரந்தக் குறியேற்றம் தொடர்பாக இவர் ஒருங்குறிச் சேர்த்தியத்தை ஏமாற்றிய முயற்சியில், ”ஸம்ஸ்க்ருத கிரந்த லிபி ஸபா” விற் பார்த்தாயிற்று. கணேசனைப் போன்றோர் தமிழாய்வைக் குலைத்துக் கொண்டே இருப்பர்.
>
> இதைத் தனிமடலிற் சொல்லாது பொதுமடலிற் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. இவருடைய மாயவலையில் இருந்து விடுபடாத பலர் இன்னும் இணையத்தில் இருக்கிறார்கள். இவர் தமிழுக்கு ஒரு disruptive force என்பதைப் பலரும் உணர வேண்டும். இவரோடு நிழற்போரிட்டுப் போரிட்டு இணையத்திற் பல ஆண்டுகளுக்கு மேல் காலங் கழித்துவிட்டோம்.
>
> இவர் போன்ற doubting Thomas களை கரைசேர்ப்பதிலேயே இனிமேல் நாட்களைப் போக்காது, அதற்கு மாறாக, நாம் செய்யவேண்டிய உண்மையான பணிகளைச் செய்வோம். அதில் ஒன்று. சிவநெறியாளர் ஓத்துக்களில் இருந்தே, திருமுறைகளில் இருந்தே, நடவரசனைப் பற்றிய குறிப்புக்களை ஓரிடத்தில் ஒருங்கு சேர்ப்பதாகும். உள்ளகச் சான்று (internal evidence) எந்த நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது என்பதை ஆய்ந்தறியவேண்டும்.
>
> நேரத்தைச் செலவழித்துச் சிலம்பின் காலத்தை வரையறை செய்தது போல, இதையும் செய்யவேண்டும்.
>
> அன்புடன்,
> இராம.கி.
>
தமிழ் ஆராய்ச்சி தனித்தீவாக, தனிநாடாக இருப்பதில்லை. இன்று பல
நாடுகளிலும்
நடக்கிறது. தமிழ் மாணவர்கள் உலகெங்கிலும் இருந்து மாணிக்கவாசகர்
காலம் 9-ஆம் நூற்றாண்டு என்று கணித்துவிட்டனர். அண்மையில் எழுதிய
முனைவர் பட்ட ஆய்வேடு சான்று. நீங்கள் சிலம்பின் காலம் என்ன
என்கிறீர்கள் என தெரியாது. சிலம்பு 5-ஆம் நூற்றாண்டு என்று சுவலெபில்,
ஆ. வேலுப்பிள்ளை ஆராய்ந்து சொன்னதை அறிவேன்.
இலக்கணம்-இலக்கியம் வடசொற்கள் (அது முதலில் பயில்வது
11-ஆம் திருமுறையில் என்று காட்டியுள்ளேன். அதற்கு முன்னர்
பௌத்தம் என்கிறார் சுவலெபில், சமண-பௌத்த நூல்கள்
அழிந்திருக்கலாம்), மாணிக்கவாசகர்
காலம் 9-ஆம் நூற்றாண்டு - பாசுபதக் கோட்பாடுகள் உள்ள தேவாரம்,
அருள் கோட்பாடு திருவாசகத்தில் வளர்ச்சி என்பதும் தெரிகிறது.
வேந்தன் ஐயா ஆங்கிலச் சொற்கள் போல் தமிழ் விஞ்ஞானச் சொற்கள்
படைத்தளிப்பதால் உள்ள குழப்பங்கள் நேரிடுதலை விளக்கினார்.
அதுவே என் கருத்துமாகும். தமிழ் மாணவர்களுக்கு எளிதில்
புரியும்படியாய் விஞ்ஞானச் சொற்கள் அமைந்தால் பரவாயில்லை.
பல இடங்களில் பணி செய்ய தேவை இருப்பதால் கல்லூரிகளில்
ஆங்கிலத்தில் விஞ்ஞானம், டெக்னாலஜி இருத்தலும் அவசியம்
என்று பெற்றோர்கள் கருதுகிறார்கள். இல்லாவிட்டால் அங்கில
வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்ட புதுமொழி ஒன்றை
ஃபேக்டரி மேன்யுஃபேக்சர் போல் செய்ததை மாணவர் சுமக்க
நேரிடும். எத்தனை பேர் அதற்கெல்லாம் தயார் என்று பார்க்கணும்.
நல்ல வேளையாக, தமிழ் ஆராய்ச்சி விரிந்து பல பல்கலைக்
கழகங்களிலும் இருக்கிறது. எனவே மறைமலை அடிகள்
கூறும் 3-ஆம் நூற்றாண்டு மாணிக்கவாசகர் போன்றவற்றின்
உண்மையை தெரிந்துகொள்ள முடியாது. சி. இலக்குவனார்
தரும் தொல்காப்பியர் காலம் பாணினிக்கு முந்தையதா?
என்றும் அறிய இயலாது.
நா. கணேசன்
இப்படிக் கால வரிசை பற்றி ஒழுங்கான கேள்விகளுக்கு வாராது இரண்டாம் நிலை இலக்கியங்களையே இவர் எடுத்து விட்டிக்கொண்டிருந்தால் எப்படி?மாணிக்க வாசகர் உறுதியாகத் தேவார மூவருக்கு முற்பட்டவர்.
வாதவூரர் சமணத்தைக் கண்டித்துச் சொல்லவில்லை;
விநாயகரைப் பாடவில்லை. பவுத்தம் செல்வாக்கோடு
இருந்த காலத்தில் வாழ்ந்திருக்கலாம். களப்பிரர் காலத்துக்குப்பின்
பாண்டியரும், பல்லவரும் தலைதூக்கிய காலத்தை ஒட்டித்
தேவார மூவர் காலத்துக்குமுன் தோன்றியவராக இருக்க வேண்டும்.
மன்னர்கள் அமாத்திய வகுப்பினரை அமைச்சர்களாக்கிக்
கொள்ளும் வழக்கமும் இக்காலத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும்.
அறுபத்து மூவர் தொகையில் வாதவூரரும், சேந்தனாரும் ஏன்
விடுபட்டுப்போயினர் தெரியவில்லை
தேவ்
களப்பிரர் காலத்திற்குச் சற்றுமுன் மணிவாசகர் இருந்திருக்க வேண்டும். இது
கி.பி.3 ஆம் நூற்றாண்டு அல்லது 4 ஆம் நூற்றாண்டாகத் தெரிகிறது. நான் இன்னும்
உறுதியாகச் சொல்ல இயலாதிருக்கிறது. களப்பிரர் காலத்தை உறுதி செய்தாற்றான் இது
முடியும். தமிழக வரலாற்றிற் களப்பிரர் பங்கு, காலம், எனப் பல்வேறு செய்திகள்
தெளிவில்லாது இருக்கின்றன.
உறுதியாக மணிவாசகர் கி.பி.570 முந்தியவர்.
அன்புடன்,
இராம.கி.
--------------------------------------------------
From: "DEV RAJ" <rde...@gmail.com>
Sent: Monday, August 01, 2011 1:42 PM
To: "தமிழ் மன்றம்" <tamil...@googlegroups.com>
Subject: [தமிழ் மன்றம்] Re: இலக்கியம் - இலக்கணம் - 3
பேரா. சி. இ. மறைமலை ஐயா எழுதுகிறார்:
> இந்த நூற்றாண்டின் தலைசிறந்த அங்கத இலக்கியம்.
> உண்மை;வெறும் புகழ்ச்சியில்லை.
> இளங்கோவனுக்குள் ஒரு பெரும்பாவலர் உறைவது உண்மை.
> அன்புடன்,
> மறைமலை
> Please have a glance:
> www.ilakkuvanar.org
எப்படி ஆராய்ச்சி செய்வது? என்பதில் அங்கதத்தின் உச்சத்தைக்
காண மறைமலை அடிகள், சி. இலக்குவனார் நூல்கள்
முழுவதும் இணையத்தில் கிடைக்கும்வகை செய்ய வேண்டும்.
On Aug 1, 6:13 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 31 ஜூலை, 2011 12:13 pm அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
>
> > பேரா. சி. இ. மறைமலை ஐயா எழுதுகிறார்:
>
> > > இந்த நூற்றாண்டின் தலைசிறந்த அங்கத இலக்கியம்.
> > > உண்மை;வெறும் புகழ்ச்சியில்லை.
> > > இளங்கோவனுக்குள் ஒரு பெரும்பாவலர் உறைவது உண்மை.
> > > அன்புடன்,
> > > மறைமலை
> > > Please have a glance:
> > >www.ilakkuvanar.org
>
> > எப்படி ஆராய்ச்சி செய்வது? என்பதில் அங்கதத்தின் உச்சத்தைக்
> > காண மறைமலை அடிகள், சி. இலக்குவனார் நூல்கள்
> > முழுவதும் இணையத்தில் கிடைக்கும்வகை செய்ய வேண்டும்.
>
> கணேசர்,
>
> இது காப்புரிமை மீறல் ஆகாதா?
>
> இல்லை எனில் தட்டச்சிட வழி உண்டு. ஏற்றிட தளம் இருக்கா?
>
நாட்டுடமை ஆனவை. யாரும் தட்டச்சலாம்.
நா. கணேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
On Aug 1, 7:32 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> மிக்க நன்றி.
>
20-ஆம் நூற்றாண்டு தமிழ் முனைவர்களின் ஆராய்ச்சி படித்துப்
பாருங்கள். நல்ல நகைச்சுவையான இடங்கள் பல இருக்கும்.
நா. கணேசன்
> 1 ஆகஸ்ட், 2011 8:24 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
சைவத்தின் தேவார காலத்திற்குப் பின் நடராச திருவுரு
ஏற்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் மாணிக்கவாசகர்.
எனவே, சுந்தரர் போன்றோர் மாணிக்கவாசகரை
திருத்தொண்டத் தொகையில் சேர்த்தவில்லை,
ஏனெனில் மாணிக்கவாசகர் காலம் சுந்தரர் போன்றோருக்குப்
பின்னால்.
யாப்பிலக்கண வளர்ச்சியை ஆய்ந்த பேரா. பசுபதி
கூறுவதையும் நோக்கவும்.
நா. கணேசன்
> தேவ்
On Aug 1, 2:01 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/1 iraamaki <iraam...@bsnl.in>
நரி, பரி பழைய நாட்டுப்புறக் கதை. இதை மாணிக்கவாசகர் மேலும்
ஏற்றிச் சொல்லியுள்ளார்கள். வேறு மாணிக்கவாசகர் ஒருவர்
இருந்ததாக ஆய்வுலகில் யாரும் சொல்வதில்லை.
சைவக் கோட்பாட்டு வளர்ச்சி, யாப்பு, 63 நாயன்மார்களில் இன்மை, ...
இவை மாணிக்கவாசகர் காலத்தைக் கணிக்க உதவுகின்றன.
நடராசர் வடிவத் தோற்றம் மாணிக்கவாசகர் சிதம்பரத்தில்
அவர் அருள் வேட்டலுக்கு முக்கியமானது.
நா. கணேசன்
> --
> > மாணிக்க வாசகர் உறுதியாகத் தேவார மூவருக்கு முற்பட்டவர்.
- இது திரு. நாக. கணேசனின் கூற்று. இதைத்தான் தான் அடிமடியில் கை வைப்பதென்று
சொல்லுவார்கள். நரி, பரி கதையை மாணிக்க வாசகரே தனக்கு நடந்ததாக திருவாசகத்தின்
பலவிடத்தும் பேசுகிறார். அது நடந்ததா? நடக்கவில்லையா? நரி பரியாவது
பகுத்தறிவிற்குச் சரிவருமா? அதற்கான அறிவுசார்ந்த விளக்கங்கள் என்னென்ன? -
என்பவை வேறு கேள்விகள். ஆனால் மாணிக்க வாசகருக்காக அது நடந்ததாக உடையவராற்
திருவாசகத்திற் சொல்லப்படுகிறது. மாணிக்க வாசகரின் நேர்மையை ஐயப்படுபவர்கள்
தான் மேலேயுள்ளது போற் சொல்லுவார்கள். இதையே ஐயுற்ற பின்னால் திரு. கணேசனிடம்
மாணிக்க வாசகர் காலம் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமேயில்லை.
(பின் ஏன் காலம் பற்றிக் கேள்வி எழுப்பினார்? அதுவா? வேறொன்றுமில்லை. இது
கணேசனின் வழக்கமான தந்திரம். எப்பொழுதெல்லாம் வாதங்களை எதிர்கொள்ள முடியாதோ,
அப்பொழுது வழிமாற்றுத் தந்திரத்தை அவர் பயன்படுத்துவார். இந்த வழிமாற்றுத்
தந்திரம் ஒரு 100 மின்னஞ்சல்களுக்கு வழிவகுக்கும். அவற்றின் முடிவில் தொடக்கக்
கேள்விகளைப் படித்தவர் மறந்து விடுவார். “இன்று புதிதாய்ப் பிறந்தோம்” என்று
100 மின்னஞ்சல்களுக்குப் பின் ஆகிவிடும். கணேசன் மறுபடியும் மடற்குழுக்களில்
வலம் வருவார். அவர் எந்தக் கேள்விகளுக்கும் மறுமொழி சொல்லி “நான் சொன்னது தவறு.
இன்னார் சொல்வது சரி” என்று வாக்குவாதத்திற்குப் பின் ஏற்றுக் கொண்டதே
கிடையாது. எல்லாமே மடைமாற்றுத் திருப்பல் தான்.)
”மாணிக்கவாசகரையே சந்தேகிப்பேன். நான் சொல்லுவது தான் சரி” என்று விதண்டாவாதம்
பேசுபவரிடம் என்ன சொல்ல முடியும்? கணேசனின் கூற்றுப் படி மாணிக்க வாசகர் ஒரு
கேடுகெட்ட பொய்யராய் இருந்திருக்க வேண்டும். அவரைப் போய்ச் சமயக் குரவர் என்று
சொல்லித் திரிகிறோமே?
திருவாசகத்தில் அல்லாது சிவநெறியாளர் நூல்களில் அல்லாது, வேறு எங்கு இந்தக் கதை
பொதுப்படையாக (நாட்டுப்புறக் கதை என்ற தோரணையில்) வந்திருக்கிறது? - எனக்குத்
தெரியவில்லை.
அன்புடன்,
இராம.கி.
--------------------------------------------------
From: "N. Ganesan" <naa.g...@gmail.com>
Sent: Monday, August 01, 2011 6:29 PM
To: "தமிழ் மன்றம்" <tamil...@googlegroups.com>
Subject: [தமிழ் மன்றம்] Re: இலக்கியம் - இலக்கணம் - 3
நரி, பரி பழைய நாட்டுப்புறக் கதை. இதை மாணிக்கவாசகர் மேலும்- இது திரு. நாக. கணேசனின் கூற்று. இதைத்தான் தான் அடிமடியில் கை வைப்பதென்று சொல்லுவார்கள். நரி, பரி கதையை மாணிக்க வாசகரே தனக்கு நடந்ததாக திருவாசகத்தின் பலவிடத்தும் பேசுகிறார். அது நடந்ததா? நடக்கவில்லையா? நரி பரியாவது பகுத்தறிவிற்குச் சரிவருமா? அதற்கான அறிவுசார்ந்த விளக்கங்கள் என்னென்ன? - என்பவை வேறு கேள்விகள். ஆனால் மாணிக்க வாசகருக்காக அது நடந்ததாக உடையவராற் திருவாசகத்திற் சொல்லப்படுகிறது. மாணிக்க வாசகரின் நேர்மையை ஐயப்படுபவர்கள் தான் மேலேயுள்ளது போற் சொல்லுவார்கள். இதையே ஐயுற்ற பின்னால் திரு. கணேசனிடம் மாணிக்க வாசகர் காலம் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமேயில்லை.
ஏற்றிச் சொல்லியுள்ளார்கள்.
On Aug 2, 6:50 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> இராம.கி ஐயா ஒன்றை கவனிக்கணும்
>
> இந்திய மரபில் கதைகளில் கதை ஆசிரியர்கள் பங்கு கொள்வார்கள்
>
> இராமாயணம்= வால்மீகி (நாரதர் சொன்ன கதையில் தன்னை சேர்த்துக்கிட்டார்)
> பாரதம் -வியாசர்
> சிலம்பு - இளங்கோ (அண்டை நாட்டின் தலைநகர் எரியூண்டதுனு இளங்கோ,
> செங்குட்டுவர்கள் அறியாது போனது ஏன்?)
>
> கம்பராமாயணம்- சடையப்பர் ( கம்பருக்கு தனனை சொல்லிட முடியாதுனு தெரியும்)
>
> அது போல் ஊர் அறிந்த கதையை தான் கொண்டதாக சொல்லி இருக்ககூடும்
>
> வேந்தன் அரசு
> வள்ளுவம் என் சமயம்
Yes. It was quite absurd on the part of munaivar Maraimalai Adikal to
claim nari-pari folk story
told by Manikkavacakar. As religious evangelists (e.g., Jehovah's
witnesses), Manikkavacakar
or Maramalai (read his books like Velalar Nakarikam, ... I've all of
his books in original
edition, ...) , they appropriate a folk story widely told to children
& claim as their own.
In spite of net twins trying to justify Manikkavacakar's date as 3rd
century or
Valluvar's birth day was 2042 years before, the prestigious
Universities of the World
have determined that Maramalai was wrong in his assertions. Now
Dharmapura Adheenam
has announced that Manikkavacakar belonged to times later than 8th
century, that's a good
thing on their part. Saivam has a future in Tamils once we incorporate
Scientific
thinking. For Vaishnavam, please listen to the link that Rajam Raghu
has posted
& let us determine if 4000 divya prabandhams are really 1000s of years
old,
as seem to be claimed in the audio. Once the religious speech gets
into Unicode,
Tamils can analyze the veracity in these religious claims using
scientific
principles:
http://groups.google.com/group/mintamil/msg/f6771cccff39d699
If you come to think about it, it is a good correction needed, take
the Lemuria legends, Sumero Tamil,
English words turned into Tamil neologisms etc., I don't know if
Tirunavukkarasu
has stopped Genetics engineering research in Labs and Universities,
but research
on Grantha script continues, TN & India govt.s say we can write
Dravidian
using Tamil letters, but how to implement it on Google Android (which
I have)
& problems faced by companies doing that, we'll work.
Have a good week,
N. Ganesan
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் .....
- அப்பரடிகள்
ஆடவல்லானுடன் பிரியாத தொடர்புடையோர் புலிக்கால் முனிவர்
(வ்யாக்ரபாதர்), பதஞ்ஜலி இருவரும் .
பூங்கொடி மடவாள் உமையொரு பாகம்
புரிதரு சடைமுடி யடிகள்
வீங்கிருள் நட்டம்* ஆடுமெம் விகிர்தர்
விருப்பொடும் உறைவிடம் வினவில்
தேங்கமழ் பொழிலிற் செழுமலர் கோதிச்
செறிதரு வண்டிசை பாடும்
ஓங்கிய புகழார் *ஓமமாம் புலியூர்*
உடையவர் வடதளி யதுவே.
- திருஞானசம்பந்தர்
அப்பர் தேவாரத்தில் ’ஓமாம்புலியூர்’ என உள்ளது; திருப்பாதிரிப்
புலியூர் நாவுக்கரசர் காலத்திலேயே உள்ளது; சம்பந்தர் தேவாரமும் உண்டு.
பெரும்பற்றப் புலியூர் தில்லையின் மறுபெயர். புலியூர் தமிழகத்தில் பல
இடங்களிலும் உள்ளது.
கேரளத்தில் ஆலப்புழை மாவட்டத்திலும் உண்டு.
பெரும்புலியூர் அடிகள் திருமழிசை ஆழ்வாருடன் தொடர்புடையவர். இவர்
ஆழ்வார்களுள் காலத்தால் முற்பட்டவர். சிறுபுலியூர் வைணவத் தலம்
(திருமங்கை மன்னன்).
ஆடவல்லான் திருவுரு ஆலய வழிபாட்டில் இடம்பெற்றபின் புலியூர் என்னும்
பெயரில் தலங்கள் ஏற்பட்டனவா ?
திருவிளமர் (விளமல்),
சுவாமி பெயர் - பதஞ்ஜலி மநோஹரேச்வரர் ;
சம்பந்தர் தேவாரம் உள்ளது
தேவ்
Yes. It was quite absurd on the part of munaivar Maraimalai Adikal to
claim nari-pari folk story
told by Manikkavacakar. As religious evangelists (e.g., Jehovah's
witnesses), Manikkavacakar
or Maramalai (read his books like Velalar Nakarikam, ... I've all of
his books in original
edition, ...) , they appropriate a folk story widely told to children
& claim as their own.
Natesa is quite different.
Nataraja (of Chidambaram) is an invention of the later Chola period.
Siva as a dancer (Natesa) is quite old (Stella Kramrisch books on
Siva)
N. Ganesan
|
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும், பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.
அப்பர்.
+++++++++++++++++++++++
சி. ஜெயபாரதன்
-------Original Message-------
|
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
|
-----
No virus found in this message.
Checked by AVG - www.avg.com
Version: 10.0.1390 / Virus Database: 1518/3805 - Release Date: 08/02/11
|
![]() |

> குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்
> பனித்த சடையும், பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
> இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
> மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.
ஜயபாரதன் ஐயா,
இதில் சொல்லப்படுவது பஞ்சக்ருத்ய பராயணராகிய
பரம சிவனார் (நடராஜன்) இல்லை; ஏதோ ஒரு மூடில் ஆனந்தமாக டான்ஸ் ஆடும்
நடேசர் என்கிறார், கணேசர் ஐயா.
ஆக்கம் அளவு இறுதிஇல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப்புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
- சிவபுராணம் 41-45
இவ்வரிகள் பஞ்சக்ருத்யத்தோடு ஒட்டியனவாக உள்ளன.
பெரியவர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்
தேவ்
> com/group/tamilmanram?hl=ta.
>
> -----
> No virus found in this message.
> Checked by AVG -www.avg.com
> Version: 10.0.1390 / Virus Database: 1518/3805 - Release Date: 08/02/11
>
>
>
> grad.gif
> 1KViewDownload
>
> image.gif
> 5KViewDownload
>
> stampa_girl_line_en.gif
> 61KViewDownload
நடேசரின் வரையறையையும், நடவரசரின் வரையறையும் தனித்தனியே எடுத்துக் கொடுக்கச்
சொல்லுங்கள். அவற்றின் வேறுபாட்டையும் பார்த்துவிடுவோமே?
யாருக்கு யார் சிவநெறி பற்றிச் சொல்லிக் கொடுப்பதென்று இவரைப் பொருத்தவரை
வரைமுறையில்லாது போயிற்று.
ஆழ்ந்த சிவநெறியாளர்கள் இவரின் மேம்போக்கான கூற்றுக்களை மறுக்காமலே இருக்கின்ற
காரணத்தால், அடுத்தடுத்து வாய்க்கு வந்தபடி ஏதேதோ கூறிக் கொண்டே போகிறார்.
It is time the experts confront him and expose his follies. Too long he has
posed as an expert on this and that. He is not. His half baked theories and
opinions are shallow.
அன்புடன்,
இராம.கி.
--------------------------------------------------
From: "DEV RAJ" <rde...@gmail.com>
Sent: Tuesday, August 02, 2011 10:51 PM
To: "தமிழ் மன்றம்" <tamil...@googlegroups.com>
Yes. It was quite absurd on the part of munaivar Maraimalai Adikal to
On Aug 2, 6:50 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> இராம.கி ஐயா ஒன்றை கவனிக்கணும்
>
> இந்திய மரபில் கதைகளில் கதை ஆசிரியர்கள் பங்கு கொள்வார்கள்
>
> இராமாயணம்= வால்மீகி (நாரதர் சொன்ன கதையில் தன்னை சேர்த்துக்கிட்டார்)
> பாரதம் -வியாசர்
> சிலம்பு - இளங்கோ (அண்டை நாட்டின் தலைநகர் எரியூண்டதுனு இளங்கோ,
> செங்குட்டுவர்கள் அறியாது போனது ஏன்?)
>
> கம்பராமாயணம்- சடையப்பர் ( கம்பருக்கு தனனை சொல்லிட முடியாதுனு தெரியும்)
>
> அது போல் ஊர் அறிந்த கதையை தான் கொண்டதாக சொல்லி இருக்ககூடும்
>
> வேந்தன் அரசு
> வள்ளுவம் என் சமயம்
claim nari-pari folk story
told by Manikkavacakar. As religious evangelists (e.g., Jehovah's
witnesses), Manikkavacakar
or Maramalai (read his books like Velalar Nakarikam, ... I've all of
his books in original
edition, ...) , they appropriate a folk story widely told to children
& claim as their own.
நண்பரே!மாணிக்க வாசகர் தவிர வேறு யாரும் இந்தக் கதை பற்றி அப்படிச் சொல்லிக் கொள்ளவில்லை. யாரேனும் பொய்யாக இப்படித் தனக்கு அந்தக் கதையில் தொடர்பு கொண்டதாகச் சொல்லிக் கொண்டால் இத்தனை காலம் மறுப்பு எழாது இருந்திருக்காது. நரி பரி கதையில்லையென்றால் மாணிக்கவாசகரேயில்லை. அதில் போய்ப் பொய் சொல்லியிருப்பாரா? [கடவுள் மறுப்பு வாதியான நீங்கள் அந்தக் கதை நடக்க வாய்ப்புண்டா என்று கேள்வி கேட்டால் அது வேறு கேள்வி. அந்தக் கேள்வி இங்கு பேசப்படவில்லை. If it has happened, has it occurred due to Manikka vaasagar or else? Pl discern the question. The question is about the veracity of the statement and not whether it is feasible.நண்பரே! அடிப்படையிற் பொய்சொல்லி யாரும் புகழ் பெற்றுவிட முடியாது. விளிம்பு நிலையில் கதை விட்டிருக்கலாம்.
வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
On Aug 4, 6:37 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 2 ஆகஸ்ட், 2011 8:56 am அன்று, iraamaki <iraam...@bsnl.in> எழுதியது:
>
>
> > **
அப்பர் சுவாமிகளின் தேவாரத்தில் வரும் ’நரியைக் குதிரை
செய்வானும்’ என்னும் தொடரை அதே செய்யுளின்
மற்றவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும். ஒன்றுக்கொன்று
எதிராக உள்ள இரண்டை இணைத்துச் செய்த
திருவாரூர்த் தேவாரம் அது. அதனை மதுரைக்கு
மாற்றியுள்ளார் மாணிக்கவாசகர் புராணம் எழுதியவர்.
புராணம் எழுதியவர் மாணிக்கவாசகருக்குப் பல
நூற்றாண்டுகள் பிற்பட்டவர். இந்தியாவில்
புராணக்கதைகள் பல, அவற்றில் இது ஒன்று.
இதைவைத்து தவறு செய்துவிட்டார் மறைமலை அடிகள்.
நான் சிடமில் லிஸ்ட்டில் எழுதிய மடல்:
In the patikam sung on TiruvArUr, Appar sings the capacities
of Sivan. When we read the poem, there is no hint of
Manikkavacakar story of connected with horses.
nariyaik kutirai ceyvāṉum, narakarait tēvu ceyvāṉum,
viratam koṇṭu āṭavallāṉum, viccu iṉṟi nāṟu ceyvāṉum,
muracu atirntu āṉai muṉ ōṭa, muṉ paṇintu aṉparkaḷ ētta,
aravu araic cātti niṉṟāṉum---ārūr amarnta ammāṉē.
Appar 4.4.2
The words, nari (jackal) & pari (horse) rhyme together
because of the second syllable, ri. This leads to
folk story popular connecting the opposites, and that
seems to be what Appar is singing when the poem
as a whole is looked at. The paired opposites are clear:
(1) nari to pari,
(2) those who live in the hell transformed into
living in the heavan (narakar > devas)
(3) The lover of Parvati can become the mahAvrati
(On Siva's 2 aspects combining opposites, W. Donger's book: Erotic
ascetic)
(4) Even without seeds, Siva creates nARRu (plant seedlings).
I don't know how this verse can refer to Manickavasakar's life
myths. First of all, this is on Tiruvarur & not on Madurai.
It looks the later purana authors took the nari-pari
children's play story & constructed a mythic account of
horse trade, those pari becoming nari and back to horses.
Manikkavacakar is usually dated to VaraguNa Pandya II (fl. 863 CE)
reign. By then, Govindaraja Perumal temple has been built
by the Pallava king. Both the Govindraja temple, and Varaguna
are referred to in his poems by Manickavasakar.
Any other instances of quotes involving nari & pari
from Tamil, e.g., Tevaram, Jaina literature, are much
appreciated.
Thanks for any references to nari:pari story in Tamil,
or any other Indian literature,
N. Ganesan
https://listes.services.cnrs.fr/wws/arc/ctamil/2011-08/msg00000.html
On Aug 4, 6:37 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> போர்க்களத்தின் இடை நின்று வேதம் புகன்ற கதையும்
> மலை உச்சியில் காப்ரியல் வேதம் ஒத கேட்ட கதையும்
> கடவுளின் பிள்ளை என சொல்லிக்கொண்ட கதையும்
> புகழ்வாய்ந்த கதைகள்
>
> அது தொன்மைக்காலம
> இன்றும் இயற்கை விதியை மீறி குண்டலினியை எழுப்பி காற்றில் மிதக்கலாம் எனும்
> கதையை நம்பி எம்பி எம்பி ஓய்ந்தாரை கண்டோமே
>
> ஏமாறுவோர் உளநாளும் ஏமாற்றுவோர் இருப்பர்
>
In TaniTamil country, anything will become research and established
fact.
For example, Manikkavacakar belongs to 3rd century :-)
Best wishes,
NG
*பொற்றில்லைக் கூத்தனை*
அற்புதக் கூத்தனை யார்அறி வாரே.
(ஒன்பதாம் தந்திரம் - 10. திருக்கூத்து)
திருமந்திரமும் 9ம் நூற்றாண்டா ?
நடேச கவுத்துவம், நடேச காயத்ரி எல்லாம் தில்லை நடராஜர்
தொடர்புள்ளவையே.
நடேச / நடராஜர் - பெயர் வேறுபாடு எங்கு முதலில் சொல்லப்படுகிறது ?
சைவநூல்கள் வேறுபடுத்திக் காட்டியுள்ளனவா ?
தேவ்
மாணிக்க வாசகரை மூவர் பாடாததன் காரணம் என்னவோ அதே காரணம் மாணிக்கவாசகரை மூவரை பாடாமல் இருந்து இருக்கலாம்
நாமாக எதையும் முடிவுகட்டக் கூடாது;
மூவர் தேவாரம் முழுமையாக நம்மிடம் உள்ளதா?
கிடைத்திருக்கும் எல்லாப் பதிகங்களும் முழுமையாக உள்ளன
என்றும் கூறமுடியாது. சில பதிகங்களில் சில பாடல்கள் இல்லை.
தேவார மூவர் காலத்துக்கு முற்பட்ட காரைக்கால் அம்மையார்
ஆடவல்லானின் அழலேந்திய கரத்தைப் பாடியுள்ளார் -
அழல் ஆட அங்கை சிவந்ததோ அங்கை
அழகால் அழல் சிவந்தவாரோ - கழல் ஆடப்
பேயாடு கானில் பிறங்க அனல் ஏந்தித்
தீ ஆடுவாய் இதனைச் செப்பு
தேவ்
On Aug 5, 3:25 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 5 ஆகஸ்ட், 2011 6:24 am அன்று, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com>எழுதியது:
இவ்விழா தில்லையை மையமாகக் கொண்டது.
மார்கழித் திருவாதிரை நாள் திருஞானசம்பந்தரால் மயிலையின் முதன்மையான ஒரு
திருவிழாவாகக்
குறிப்பிடப்படுகிறது -
“கபாலீச்சரம் அமர்ந்தான் ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்" (2ம்
திருமுறை, பாடல் 4, மயிலைப் பதிகம்)
மார்கழித் திருவாதிரை என்னும் குறிப்பு இப்பாடலில் இல்லையாயினும் இதற்கு
முந்தைய பாடலில் கார்த்திகை விளக்கீடு விழாவும், அடுத்த பாடலில் தைப்பூச
விழாவும் இடம்பெறுவதால் இப்பாடலில் குறிப்பிடப்படும் ஆதிரை நாள்
மார்கழித் திருவாதிரையே என முடிவு செய்யலாம்.
ஆடவல்லானுக்குரிய ஆதிரை நாள் வழிபாடு எல்லா சிவாலயங்களிலும் தொடர்ந்து
இருந்து வந்துள்ளது
தேவ்
> > மாணிக்க வாசகரை மூவர் பாடாததன் காரணம் என்னவோ.... <<
நாமாக எதையும் முடிவுகட்டக் கூடாது;
மூவர் தேவாரம் முழுமையாக நம்மிடம் உள்ளதா?
கிடைத்திருக்கும் எல்லாப் பதிகங்களும் முழுமையாக உள்ளன
என்றும் கூறமுடியாது. சில பதிகங்களில் சில பாடல்கள் இல்லை.
வேந்தன் அரசு
ஆடவல்லானுக்குரிய ஆதிரை நாள் வழிபாடு எல்லா சிவாலயங்களிலும் தொடர்ந்து
இருந்து வந்துள்ளது
--
--
வேந்தன் அரசுவள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
நடம், ஆட்டம் ரெண்டையுமே சேத்துச் சொல்லுறமே !
நடை : முதுமை காரணமாக அவரது நடமாட்டம் (நடம்+ஆட்டம்) குறைந்தது
நடனம் : மன்றிடை நடிக்கும் மணாளனை அல்லால்..... (திருவருட்பா)
நடிப்பு : அவர் நடிப்பில் சிறந்தவர்
नट् (நட்) - To dance; To make one dance; To act ; To drop or fall;
To shine; To injure; To imitate, copy
नट् naṭ : (page 874)
नञ् ind. The technical term for the negative particle; न hence नञः
(= A negative particle); द्वौ नञौ प्रकृतार्थं गमयतः.
नट् naṭनट् I. 1 P. (नटति, the न not changed to ण after प्र in the
sense of 'hurting'.) 1 To dance; यदि मनसा नटनीयम् Gīt.4.-2 To act.-3
To injure (by a deceptive trick). -Caus. (नाटयति-ते) 1 To act,
नट् naṭ : (page 874)
(in dramas); शरसंधानं नाटयति Ś.1. &c. -2 To imitate, copy;
स्फटिककटकभूमिर्नाटयत्येष शैलः... अधिगतधवलिम्नः शूलपाणेरभिख्याम् Śi.
4.65. (N. B. नट् forms नटयति in the sense of 'causing to dance';
नाट्येन केन नटयिष्यति दीर्घमायुः Bh.3.126.)-II. 1. U. (नाटयति-ते) -1
To drop or fall.-2 To shine.-3 To injure.
ஹிந்தி திரையுலகில் ’நடிக’ இல்லை;
’அபிநயம்’ எனும் சொல்லின் அடிப்படையில் நடிகர் அபிநேதா எனப்படுகிறார்;
நடிகைக்கு அபிநேத்ரி. நடிப்பில் முகபாவம்
முக்கியமாக இருப்பதால் இச்சொல் என நினைக்கிறேன்
தேவ்
On Aug 6, 12:02 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 6 ஆகஸ்ட், 2011 10:11 am அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
>
>
>
> > ஆடவல்லானுக்குரிய ஆதிரை நாள் வழிபாடு எல்லா சிவாலயங்களிலும் தொடர்ந்து
> > இருந்து வந்துள்ளது
>
> > தேவ ஐயா
>
> உங்களிடம் ஒன்று வினவனும்
>
> ராரா சரசுக்கு ராரா எனும் பாடலில்http://www.youtube.com/watch?v=ULvD8yAdFXE&playnext=1&list=PL8AEC55CD...
On Aug 7, 3:29 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> Aug 6, 12:02 pm, வேந்தன் அரசு
>
> >>>> ......நடனம், நடை இரண்டுக்கும் ஒரே வேர் என தோணுது <<<<
>
> நடம், ஆட்டம் ரெண்டையுமே சேத்துச் சொல்லுறமே !
>
> நடை : முதுமை காரணமாக அவரது நடமாட்டம் (நடம்+ஆட்டம்) குறைந்தது
> நடனம் : மன்றிடை நடிக்கும் மணாளனை அல்லால்..... (திருவருட்பா)
> நடிப்பு : அவர் நடிப்பில் சிறந்தவர்
>
> नट् (நட்) - To dance; To make one dance; To act ; To drop or fall;
> To shine; To injure; To imitate, copy
>
> नट् naṭ : (page 874)
>
> नञ् ind. The technical term for the negative particle; न hence नञः
> (= A negative particle); द्वौ नञौ प्रकृतार्थं गमयतः.
> नट् naṭनट् I. 1 P. (नटति, the न not changed to ण after प्र in the
> sense of 'hurting'.) 1 To dance; यदि मनसा नटनीयम् Gīt.4.-2 To act.-3
> To injure (by a deceptive trick). -Caus. (नाटयति-ते) 1 To act,
>
> नट् naṭ : (page 874)
>
> (in dramas); शरसंधानं नाटयति Ś.1. &c. -2 To imitate, copy;
> स्फटिककटकभूमिर्नाटयत्येष शैलः... अधिगतधवलिम्नः शूलपाणेरभिख्याम् Śi.
> 4.65. (N. B. नट् forms नटयति in the sense of 'causing to dance';
> नाट्येन केन नटयिष्यति दीर्घमायुः Bh.3.126.)-II. 1. U. (नाटयति-ते) -1
> To drop or fall.-2 To shine.-3 To injure.
>
> http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=ap...
>
> ஹிந்தி திரையுலகில் ’நடிக’ இல்லை;
> ’அபிநயம்’ எனும் சொல்லின் அடிப்படையில் நடிகர் அபிநேதா எனப்படுகிறார்;
> நடிகைக்கு அபிநேத்ரி. நடிப்பில் முகபாவம்
> முக்கியமாக இருப்பதால் இச்சொல் என நினைக்கிறேன்
>
> தேவ்
>
அன்பின் தேவ்,
நடனம், நாட்டியம், நாடகம் எல்லாவற்றுக்கும் வேர் நட- என்னும்
தமிழ்/திராவிடச் சொல்லே என்கிறார் பாவாணர்.
http://www.tamilvu.org/courses/degree/p203/p2034/html/p2034111.htm
‘நாடகம்’ என்ற சொல்லுக்கு வேர்ச்சொல் ‘நட’ என்று பாவாணர் கூறுகிறார்.
‘நட’ என்னும் வேர்ச் சொல்லிலிருந்து நடனம், நாட்டியம், நாடகம் என்பன
ஆட்டத்தை அறிவிக்கும் மறுபெயர்களாக வந்தன என்பார். நடம், நட்டம் என்ற
சொற்களும் ஆடலைக் குறிப்பன.
சம்ஸ்கிருத வேராக இல்லை என்பதற்கு சிவனின் நடனம் பற்றிய
குறிப்புகள் பழைய இலக்கியங்களில் பெரிதாக இல்லை
என்பதும் குறிப்பிடலாம். தாண்டி ஆடும் பலம் மிகுந்த
ஆடல் தாண்டவம். யாடு (ஆடு) மேய்க்கும் யாடவர் (> யாதவர்)
இதில் இருந்து யது என்ற குலத்தை கிருஷ்ணன் பரம்பரைக்கு
உருவாக்குதல் போல, காகந்தி என்றால் ‘direction crows' என்று
பொருள், கப்பல், படகுகளில் கடலாடும் போது உள்ளவை:
காகம் + அம்பி (படகு) = காகம்பி > காகந்தி (உ-ம்: சிலம்பி > சிலந்தி)
காகந்தியிலிருந்து ககந்தன் என்பவனைப் படைக்கிறது
மணிமேகலை. காகம்பி/காகந்தி படங்களை சிந்து
முத்திரைகளில் காண்க. காவேரி.காவிரி இதிலிருந்து
கவேர முனி என்ற புராண பாத்திரம் போல் ககந்தன் உருவாகிறது.
அதே போல, தாண்டவம் என்னும் தமிழ்ச் சொல் தரும்
சம்ஸ்க்ருத புராண கதாபாத்திரம் தண்டு முனி.
தண்டு முனிக்கு நடேசன் சொல்லியது பரத (நாட்ய) சாத்திரம்.
தண்டு முனியின் வடிவை மாமல்லபுரத்தில் காணலாம்.
புராணக் கட்டுக்கதைகளில் யது (குலம்), தண்டு முனி,
ககந்தன் (அரசன்), கவேர முனி (< காவேரி), என்பது போல,
யா மரங்கள் மிகுந்திருந்த தீவு யாவகம் (ஜாவா),
இதற்கு சம்ஸ்க்ருதத்தில் யவ = பார்லி தானியம்
என்று பொருள்கொண்டு, யவ தீவு (யவம் என்றால் பார்லி)
என்ற கதை உண்டு. யவம் = பார்லி, இதனை நெல் ஆக்கி
மதுரைக் காஞ்சி நெல்லின் ஊர் என்கிறது.
யா மரம் = சால் மரம், யாவகம் = சாலி தீவு என்பது
பொருத்தம். தண்டு < தாண்டவம் இதுபோல் யவ < யாவகம்.
யா மரத்தின் (சாலக மரத்தின்) பொருள் மங்கிவிட்டதால்
இப்படி மாற்றம். யா மரம் பற்றிச் சங்க இலக்கியத்தில்
நிறையச் செய்திகள் உள்ளன:
https://groups.google.com/group/mintamil/msg/ace95c4db8a853e2
நடனம், நாட்யம், நடிப்பு, நாடகம் - அடிப்படையில்
தமிழ்/த்ராவிட வேர் (நட- ) ஆகும்.
இன்னொன்று: அடிப்படையில் பிழைகள் பல உள்ள
கட்டுரை சாரதா சீனிவாசனின் பல்லவ நடராஜர்
படிமங்கள். பஞ்ச க்ருத்தியம் முழுதும் காட்டும்
காரைக்கால் அம்மை அடியில் கொண்டது கி.பி.
800 என்பது பிழையான தகவல். மெட்டலர்ஜிகல்
ஆய்வுமுடிவுகளை (Figure 1) கூர்ந்து பாருங்கள்
தெரியும். சுமார் 100 ஆண்டுகள் பின்னால் என்பது
கலைவரலாற்றறிஞர் வித்யா தெஹிஜியா (தமிழ்
பெண்மணி), நாகசாமி விளக்கினர். அதுபற்றி
இன்னொரு முறை விரிவாக எழுதுவேன்.
நா. கணேசன்
On Aug 7, 3:29 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> ஹிந்தி திரையுலகில் ’நடிக’ இல்லை;
> ’அபிநயம்’ எனும் சொல்லின் அடிப்படையில் நடிகர் அபிநேதா எனப்படுகிறார்;
> நடிகைக்கு அபிநேத்ரி. நடிப்பில் முகபாவம்
> முக்கியமாக இருப்பதால் இச்சொல் என நினைக்கிறேன்
>
தகவலுக்கு நன்றி. அபிநயத்தில் இருந்து அபிநேதா, அபிநேத்ரி (அபிநேதி)
உருவாவதாய் தெரியவில்லை.
spontaneous loss of cerebrals என்பது இங்கே செயல்படுகிறது எனக்
கருதுகிறேன்.
(1) கடம்பு (முருகனுக்கு விருப்பமான மலர்) கதம்ப என்று வடசொல் ஆதல் போல்,
(2) யாடுமேய் யாடவர் யாதவர் ஆதல் போல் (யது குலம் எவ்வாறு
சிருஷ்டிக்கப்பட்டது
என்று இதற்கு முந்தைய மடலில் விளக்கியுள்ளேன்)
நடி ( < நட-த்தல்) என்னும் சொல் நதி என்றாகிறது.
பேச்சு வழக்கில் ரெங்கன், ஜெயா, ... (schwa) போல, நடி நெடி ஆகும்.
ஹிந்தி, சம்ஸ்க்ருதம் தமிழ்/த்ராவிட குறில் எ, ஒ ஒதுக்குதலாம்,
நடி > நெடி/நெதி (கொச்சை) > நேதி (ஆணுக்கு நேதா) என்கின்றனர்.
அபி = மிகுதி. அபிநடி = அபி-நெடி அபிநேதா, அபிநேத்ரி என ஹிந்தி
எழுத்தில் ஆகிறது. இவற்றிலும் அடிப்படை திராவிட வேர் நட-த்தல்
உண்டு,
நா. கணேசன்
தேவ்
> தமிழ்/திராவிடச் சொல்லே என்கிறார் பாவாணர்.http://www.tamilvu.org/courses/degree/p203/p2034/html/p2034111.htm
’நய்’ வேர் - நயநம், நேதா (நேதாஜீ), நேத்ரி (dAtA, dAtri)
அபி - முன்னொட்டு.
முன்னொட்டுச் சேர்வதால் பொருள் மாறும்
தேவ்
வேந்தரின் உள்குத்து ரசிக்கும்படியாகத்தான் இருக்கிறது;
அனலிலும், புனலிலும் அழியாதிருந்ததும் உண்மை;
ஏதோ காரணத்தால் அழிந்ததும் உண்மை.
இறைவனின் சித்தம் எனக்கொள்ள வேண்டும்
தேவ்
On Aug 7, 11:07 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> Aug 7, 8:25 pm, "N. Ganesan">>> அபிநயத்தில் இருந்து அபிநேதா, அபிநேத்ரி (அபிநேதி)
>
> உருவாவதாய் தெரியவில்லை. <<<
>
> ’நய்’ வேர் - நயநம், நேதா (நேதாஜீ), நேத்ரி (dAtA, dAtri)
> அபி - முன்னொட்டு.
> முன்னொட்டுச் சேர்வதால் பொருள் மாறும்
>
ய எப்படி த ஆகிறது?
ட த நடி > நெதி முழுக்க விலக்க இயலுமோ?
நன்றி,
நா. கணேசன்
On Aug 7, 1:58 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> நேத்தாஜி - நேதா விளக்கம் என்ன?
>
> நன்றி,
> நா. கணேசன்
>
Madras Lexicon entry:
நேதா nētā
, n. < nētānētṛ. Ruler, master, lord; தலைவன். நினைந்ததளித் துயி
ரளிக்கு நேதா வாகி (வேதாரணி. பிரவர. 6).
நேதி¹ nēti
, n. < niyati. Routine duty; முறை. நேதிமதகலை யாரவார (திருப்பு. 394).
--------------
விழுப்புரம் என்னும் பெயரமையக் காரணமாய் இருந்த குடியினர்
அருகே (அண்ணம்ங்கலம்) காராணை விழுப்பரையர்.
சோழர் காலத்தில் தமிழ்நாடெங்கும் அரச அதிகாரிகளாய்
வீற்றிருந்தோர். சோழ இளவரசர் மதுரையில் இருந்தபோது
சோழபாண்டியர் எனப்பட்டனர். அப்படி இருந்த சோழனுக்கு
சேனாபதியாகவும், வேதநெறி தழைத்தோங்கவும்
முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் இருந்தவன்
காராணை விழுப்பரையன் ஆதிநாதன். இவனது கல்வெட்டுக்கள்
ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் கிடைக்கின்றன.
இவனைப் பாட்டுடைத் தலைவனாய்க் கொண்டு
பாடிய வளமடல் தமிழில் மூன்றாவது.
வளமடல்கள் மிக அபூர்வமான பிரபந்தம்.
தமிழில் மொத்தம் 5 தான். இவற்றில் 2-ஐக்
காப்பாற்றியவர் பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டரவர்கள்.
தமிழின் ஒரே லோகாயத நூலான காராணை விழுப்பரையன் வளமடலில்
நேதா = தலைவன் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது.
http://pm.tamil.net/pub/pm0060/valamatal.pdf
550 அடியிலும் நெடில்கீழ் தகர எதுகை தமிழின் அதிசயங்களில் ஒன்று.
நேதா, நேத்ரி - தலைவன் என்பதற்கும் ஹிந்தி
நடி(க/கை) தொடர்பில்லை. நடி/நெடி
கடம்பு > கதம்ப, யாடவ > யாதவ போல், நடி/நெடி > நேதா (நடிக)
என ஹிந்தியில் மாற்றுரு ஆனது என்ற கருத்தை முன்வைக்கிறேன்.
அடிப்படையில் த்ராவிட வேர் கொண்ட சொல்லிது.
நேதா - வழி நடத்துபவன், தலைவன்
நடக்கும்போது வழிநடத்துவதால் கண் நயநம் எனப்படுகிறது.
நேத்ருத்வம் - leadership
>> நேதி¹ nēti<<
நேதி, நியதி இத்தொகுப்பில் கிடையாது.
நேதி - பகுபதம் ,ந + இதி
நியதி, நியமம் (ஒழுங்குமுறை) - ‘யம்’ வேர், ’நி’ முன்னொட்டு
தேவ்
சொல்வீர்கள் என்று தெரியும்;
‘அபி’ முன்னொட்டால் பொருள் மாறும்
என்று தெரிவித்திருந்தேன்.
‘நய்’ ஒரே வேர்; ‘ப்ர’ முன்னொட்டு சேர்வதால்
‘ப்ரணய’ ஆகி மாறுபட்ட பொருளைத் தருகிறது.
வலிமையான விதியும், நீடித்த பயன்பாடும் இருப்பதால்
இதில் நம் கருத்துகள் செல்லுபடியாக.
வடமொழி விவரங்கள் தமிழ் ஆர்வலர்களுக்கு
வெறுப்பைத் தரக்கூடும்; அதிகம் விவரிக்கவில்லை
தேவ்
> நேதா = தலைவன் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது.http://pm.tamil.net/pub/pm0060/valamatal.pdf
தகவலுக்கு நன்றி. அபிநயத்தில் இருந்து அபிநேதா, அபிநேத்ரி (அபிநேதி)
உருவாவதாய் தெரியவில்லை.
மாணி பால் கறந்து ஆட்டி வழிபட
நீண் உலகு எலாம் ஆளக் கொடுத்த என்
ஆணியை, செம்பொன் அம்பலத்துள் - நின்ற
தாணுவை, தமியேன் மறந்து உய்வனோ?
முழுதும் வான் உலகத்து உள தேவர்கள்,
தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால்
எழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தனை
இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ?
நீதியை, நிறைவை, மறைநான்கு உடன்
ஓதியை, ஒருவர்க்கும் அறிவு ஒணாச்
சோதியை, சுடர்ச் செம்பொனின் அம்பலத்து
ஆதியை, அடியேன் மறந்து உய்வனோ?
மூலட்டான சிவலிங்கம் மட்டுமே 9ம் நூற்றாண்டுக்குமுன்
என்பதற்கான அகச் சான்றுகள் இல்லை.
’மாணி பால் கறந்து ஆட்டி வழிபட’ என்றதால் சண்டேச நாயனாருக்குப்பின்
நாவுக்கரசர் என்பதும் , தமக்கு முன் தோன்றிய அடியாரைப் பாடும் வழக்கமும்,
’தூய செம்பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலம்’ என்பதால் சிறிய ஆலயம்
பின்னாளில் பொன்வேயப்பெற்றுப் புகழடைந்தது என்பதற்கு மறுப்பும்
அகச்சான்று பெறுகின்றன.
இன்று நாம் காணும் நடராஜ வடிவம் மாணிக்க வாசகர் காலத்துக்குப்
பின்னால்கூட மெருகேறி வடிவம் பெற்றிருக்கலாம்.
தேவாரத்தில் திருப்பெருந்துறை வைப்புத் தலமாக மட்டிலும்
இடம் பெறுகிறது என்பதும் ஒரு செய்தி
தேவ்
On Aug 7, 11:59 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> Aug 8, 12:16 am, "N. Ganesan">>> நேதா, நேத்ரி - தலைவன் என்பதற்கும் ஹிந்தி
>
> நடி(க/கை) தொடர்பில்லை.<<<
>
> சொல்வீர்கள் என்று தெரியும்;
> ‘அபி’ முன்னொட்டால் பொருள் மாறும்
> என்று தெரிவித்திருந்தேன்.
>
> ‘நய்’ ஒரே வேர்; ‘ப்ர’ முன்னொட்டு சேர்வதால்
> ‘ப்ரணய’ ஆகி மாறுபட்ட பொருளைத் தருகிறது.
> வலிமையான விதியும், நீடித்த பயன்பாடும் இருப்பதால்
> இதில் நம் கருத்துகள் செல்லுபடியாக.
>
> வடமொழி விவரங்கள் தமிழ் ஆர்வலர்களுக்கு
> வெறுப்பைத் தரக்கூடும்; அதிகம் விவரிக்கவில்லை
>
> தேவ்
நன்றி, தேவ்.
நீடித்த பயன்பாடு சம்ஸ்க்ருதத்துக்கு நிறைய. இந்தியாவின்
எந்த பஷையும் பக்கம் வராது. ஆனால், அது மாத்திரம்
வேரைக் காட்டாது.
ப்ர - இதில் தமிழின் பெரு- ஒளிந்துள்ளதா?
ப்ர- இந்தோ-ஐரோப்பியன் இல்லை என்று விட்சல்
சொன்னார்,
அப்படி யார் சொல்கிறார்கள்? யானறியேன்.
மரத்தாலான் சிற்றம்பலத்தில் ஈசன் ஆடுவதாய்
மரத்தில் உருவங்கள் இருந்திருக்கும்.
அது என்ன வடிவம்?
> ’மாணி பால் கறந்து ஆட்டி வழிபட’ என்றதால் சண்டேச நாயனாருக்குப்பின்
> நாவுக்கரசர் என்பதும் , தமக்கு முன் தோன்றிய அடியாரைப் பாடும் வழக்கமும்,
> ’தூய செம்பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலம்’ என்பதால் சிறிய ஆலயம்
> பின்னாளில் பொன்வேயப்பெற்றுப் புகழடைந்தது என்பதற்கு மறுப்பும்
> அகச்சான்று பெறுகின்றன.
>
> இன்று நாம் காணும் நடராஜ வடிவம் மாணிக்க வாசகர் காலத்துக்குப்
> பின்னால்கூட மெருகேறி வடிவம் பெற்றிருக்கலாம்.
>
9-ஆம் நூற்றாண்டில் உருவெடுத்தது நடராஜர் வடிவம்.
வலக்கை - உடுக்கை - தோற்றம், இடக்கை - அக்கினி - சங்காரம்.
‘தோற்றம் துடியதனில் ...’ வலம் - உயிர்களின் தோற்றம்,
இடம் - அழிதல், வலக்கை, இடக்கை தொழில்கள் இந்தியாவில்
வேறுபாடுண்டு.
துடி/உடுக்கை வலக்கை, அக்கினி இடக்கை ஏந்துவதாக
தேவாரத்தில் பாட்டு இல்லை. இரண்டும் கொண்ட பாடல்
ஏதாவது இருந்தால் தாருங்கள்.
-----------------------------
தேவாரத்தில் அப்பர் பாடும் நடனம் என்ன?
முழுப் பதிகமும் படித்துப்பாருங்கள். த்ரிபுர சங்கார
நடனம். அவர் சிரித்தழிப்பது யார்? திரிபுர அசுராதிகளை.
தொல்காப்பியத்தில் வீரர்கள் காலில் கட்டியிருப்பது
கழல்கள். கழல்நிலை. இக் கழல்களை
நடேசரின் கால்களில் காணலாம். சீயமங்கலம்
சிற்பத்தில் கூட அதுதான் பிரதானம்.
ஏராள்மான பாடல்களில் அப்பர் குறிப்பது,
நடேசரின் பாதங்களில் வீரக் கழல்கள்
ஒலிக்கும் ஓசையே. துடியில் இருந்து ஒலி,
அதனால் உயிர்கள் தோற்றம் என்று அப்பர்
சொல்லவே இல்லை. வலக்கையில்
அக்கினி ஏந்துதல் (எரியாட்டு) திரிபுர தகனம்
காட்டும் சங்காரத் தொழில், இடக்கை மழுவேந்துவார்.
இத் தில்லை நடனம் விரிக்கும் அப்பர் தேவாரம்
காண்க.
நா. கணேசன்
நடராஜா concept இருந்து வந்துள்ளது என்பதே கருப்பொருள்.
ஒருவரைப் போலவே மற்றவரும் பாட வேண்டும் என்றில்லை.
சமய குரவர்களின் மனப்போக்கு வெவ்வேறு;
வாகீசர் தாஸ்யத்தையும், சுந்தரர் ஸக்யத்தையும்
மையமாகக் கொண்டு பாடினர்.
சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம்
தாதமார்க்கம் மென்றுஞ்சங் கரனை யடையும்
நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம்
நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர்
- சிவஞானசித்தியார்
காழிப்பிள்ளையார் தலங்களின் இயற்கை வனப்பைப் பாடுவார்;
சமண எதிர்ப்பு தவறாமல் இடம் பெறும். மணிவாசகப் பெருமானின்
பாடல்கள் வேறுபட்டவை. இவர் நடராஜரையும், லிங்கோத்பவரையும் வெகுவாகப்
பாடினார்.தென்பாண்டி நாட்டைச் சொல்லும் வாதவூரர் திருக்குற்றாலத்தை ஏன்
பாடவில்லை ?
தேவ்
Aug 6, 10:46 pm, வேந்தன் அரசு
>> இருந்தாலும் நால்வர் பெயர்தாங்கிய பாடல்கள்வேந்தரின் உள்குத்து ரசிக்கும்படியாகத்தான் இருக்கிறது;
அழியுமா என்பதை வியப்போம் <<
அனலிலும், புனலிலும் அழியாதிருந்ததும் உண்மை;
ஏதோ காரணத்தால் அழிந்ததும் உண்மை.
இறைவனின் சித்தம் எனக்கொள்ள வேண்டும்