தாய்மாமன் உறவு .. ஒரு அற்புதம்.

351 views
Skip to first unread message

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 25, 2015, 5:45:00 AM7/25/15
to mintamil, vallamai, தமிழ் மன்றம், housto...@googlegroups.com
நண்பரொருவர் அனுப்பியிருந்த பதிவு கவர்ந்ததால் பகிர்ந்துள்ளேன்.
தாய்மாமன் உறவு குறித்த தங்கள் அனுபவங்களையும் உணர்வுகளையும் இந்த
இழையில் நண்பர்கள் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.


அழிக்க முடியாத உறவு - " தாய்மாமன் "
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள்
தாய்மாமன் உறவு என்று தான்.
பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும்
பசங்களிடம் ஒரு காலத்தில் ( தற்போது அல்ல ) எங்க மாமா வீட்டுக்குப்
போனேன் என்று தான் சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப் பொருள்
வைத்திருந்தால் யாருடா வாங்கிக் கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க
மாமா என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது
தாய்மாமா தான்.
எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே "வாழ்வாங்கு வாழ்வான்”
என்பது சொல்வடை.
உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை,
தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு
வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித முன் தொடுப்பும்
இல்லாது வருவது.
தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப் உற்ற பாதுகாவலனாய்,
நண்பனாக அந்த குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அதன் முகத்தில்
அதிக மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன் தான். இன்றும் மாமா வருகிறார்
என்றால் குழந்தையின் சந்தோசத்தை சொல்லிமாளது..
தன் தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல கவனிப்பான்.
அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று தமிழர்
பண்பாடு சொல்கிறது. காது குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை
எடுத்துக் கொடுப்பது வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும்,
கெட்டதற்கும் தாய்மாமனே முன்னிற்பான்.
தங்கையின் அல்லது அக்காவின் கணவருக்கு அதிக உதவிகள் செய்வது எங்கள் மாமா
என்று உரிமையோடு அவருக்கு துணையாக செல்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட தங்கையின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுபவன்,
அண்ணன் தனக்காக தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக வாழ
வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தாள் என்றால் அண்ணன் மாடி மீது
மாடி கட்டி வாழ்வான். எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ அவன்
எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது.
சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின் மகளோ இயற்கை குறையோடு
இருந்தால் தாய்மாமனுக்குத் தான் கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி
விட்டால் அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். தாய் மாமன்
உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை தந்தையோ, தனயனோ செய்ய
முடியுமா? அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும்
நிகரனாவன் அல்லவா?
உறவுகளில் மிகச் சிறந்த உறவு “ தாய்மாமன்” என்று அடித்துச் சொல்லலாம்.
ஆனால் இன்று குழந்தைகளின் பெற்றோர் தனது வேலை காரணமாக வெளியூர்களில்
இருப்பதால் குழந்தைகளும் அவர்களுடனே இருக்கும் அதனால் இப்போதெல்லாம்
தாய்மாமன் உறவு முறை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. குழந்தையும்
தாய்மாமனை மாதம் ஒரு முறை என்று பார்த்து மாமாவின் முகம் மறைகிறது
என்பதுதான் இன்றைய நிதர்சன உண்மை...
நண்பரின் அப்பா தனது அக்காள் குழந்தைகளை வளர்த்து இன்று அவர்கள் மரமாக
நிற்கின்றனர் அவர்களுக்கு விழுதாக இந்த தாய்மாமன் இருந்தேன் என்று பெருமை
பட நானும் அவரும் பேசிக்கொண்டு இருந்தோம் அப்படியே ஒரு கட்டுரையாக எழுதி
விட்டேன்.. அந்த அக்கா குழந்தைகள் அந்த தாய்மாமனுக்கு முன்னின்று 60ம்
கால்யாணம் செய்து வைக்க அடுத்த மாதம் வருகிறார்கள் என்று அவர்
சொல்லும்போது அவரின் கண்களில் அந்த தாய்மாமன் என்ற பாசம் தெரிந்தது.
நமக்கும் தாய்மாமன்கள் நிச்சயம் இருப்பர் ஆனால் நாம் நமது
வேலைப்பளுவாலும், கால ஓட்டத்தாலும் நாம் நம் தாய்மாமனை நிச்சயம்
மறந்திருக்க மாட்டோம் அது போல் நம் குழுந்தைகளுக்கும் மாமாவின் அருமை
பெருமைகளை சொல்லி வளர்க்க வேண்டும் என்பது என் அவா.

Kaviyogi Vedham

unread,
Jul 25, 2015, 7:10:35 AM7/25/15
to tamil...@googlegroups.com
ரொம்ப நல்ல (டச்சிங்) மனம்தொடும் கட்டுரை. வாழ்க,
யோகியார்
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to tamilmanram...@googlegroups.com.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
> For more options, visit https://groups.google.com/d/optout.
>


--
வாழ்க..!..
எமது ஆஸ்ரமத்தின்..அற்புத- ‘இலக்கியவேல்’
(மாதத்)தமிழ் ஏட்டை ரூ100- அனுப்பி(சந்தா)
வாங்கிப்பின்பு உங்கள், மிகப்புதிய ,இலக்கியப்படைப்பும்
அனுப்புங்கள். இரண்டாவது ஆண்டாக இது குருஜி அருளால்
சக்கைப்போடு போடுகிறது. No M. O pl.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
pl.See my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--
cel no=095000-88528

dr.ponmudi

unread,
Jul 25, 2015, 9:58:57 AM7/25/15
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, housto...@googlegroups.com, karu...@gmail.com
உண்மை!

நான்கூட பள்ளிவிடுமுறையில் மாமாவீட்டுக்குத்தான்போவேன். அங்கே எங்கள் அத்தை மீன்குழம்புவைத்து சுடச்சுடபோடும். நானும்
 மாமாவீட்டுப்பையனுடன் ஆற்றில் பாசியரிக்கச்செல்வேன். மெதுவாய்நகரும் நீருக்கடியில் ஓரடியீரடிக்குவளர்ந்திருக்கும் ஒருவகை பாசியை னீரில் மூழ்கியபடி கையால் அரித்துக்கொண்டுவருவோம். நூல்போல் மெலிந்திருக்கும் அந்த பாசியை காயவைத்து புகையிலைவிதைவிடுமிடத்தில் அந்த மேடையின்மேல் அதை தூவிவிடுவார்கள். நீர்தெளிக்கும்போது முளைத்துவரும் முளை பாதுகாப்பாயிருப்பதற்கு அது உதவும்.

மாமா எங்களோடு மிகவுமன்பாயிருப்பார். அவர் இருந்தவரை அம்மாவுக்கு சீர்கொண்டுவந்தார். வயிற்றுப்புற்றுநோயால் அவர் இறந்துவிட்டார். அதன்பின் அவரது ஒரேமகன் அம்மாவுக்கு அம்மா இறக்கும்வரை சீர்கொண்டுவந்துதந்துகொண்டிருந்தார். 

சென்றவாரங்கூட ஊருக்கு எங்கள் குலதெய்வத்துக்கு (நல்லவீரன்) கிடாவெட்டி பூசைபோடப்போயிருந்தபோது அவரும்வந்திருந்தார். "ஊருக்குப்போகும்போது வீட்டுக்குவந்துபோகவேண்டுமச்சான்!" என்றார். எங்கள் அக்காவீட்டுக்குப்போய்விட்டு அவர்வீட்டுக்கும்போய்வந்தோம். எல்லாம் பக்கத்துப்பக்கத்துக்கிராமங்கள். இருவரும் நிறைய கொடுத்தனுப்பினார்கள்!

இக்காலத்துப்பிள்ளைகள் நகரவாழ்க்கையிலிருப்பதால் சொந்தக்காரர்களைப்பற்றி அவ்வளவாக அக்கறைகொள்வதில்லை. நாம் அவர்கள்வீட்டுக்கு போகும்போதுகூட நம்மை கண்டுகொள்வதில்லை. விருந்தினர்வருவதெல்லாம் பெரியவர்களைப்பார்ப்பதற்கென்றும் நமக்கும் அதற்கும் தொடர்பில்லையென்பதுபோலுமிருக்கிறார்கள். உறவுகளின் பெருமையை சொல்லித்தான்வளர்க்கவேண்டும். 

ஆனால் சொன்னாலும் அவர்களுக்கெல்லாம் நம் பழையகாலத்தைப்போல் ஒட்டுறவெல்லாம் வருவதில்லை!

இறுதியாக சீர்தந்தகாட்சி. (மாமாமகன், அம்மா, தம்பி, நான்)

அன்புடன் பொன்முடி
IMG_20130114_121938.jpg

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 26, 2015, 11:27:19 AM7/26/15
to dr.ponmudi, மின்தமிழ், vall...@googlegroups.com, tamil...@googlegroups.com, housto...@googlegroups.com
On 7/25/15, dr.ponmudi <dr.pon...@gmail.com> wrote:
உண்மை!
நான்கூட பள்ளிவிடுமுறையில் மாமாவீட்டுக்குத்தான்போவேன்.
மாமா எங்களோடு மிகவுமன்பாயிருப்பார். அவர் இருந்தவரை அம்மாவுக்கு
சீர்கொண்டுவந்தார். வயிற்றுப்புற்றுநோயால் அவர் இறந்துவிட்டார். அதன்பின்
அவரது ஒரேமகன் அம்மாவுக்கு அம்மா இறக்கும்வரை
சீர்கொண்டுவந்துதந்துகொண்டிருந்தார்.
இறுதியாக சீர்தந்தகாட்சி. (மாமாமகன், அம்மா, தம்பி, நான்)
அன்புடன் பொன்முடி//

நெஞ்சத்தை தொடும் பதிவு திரு பொன்முடி. எங்கள் தாயார் பொங்கல் வரும்
நாட்களில் டென்சன் ஆகிவிடுவார்கள். எவ்வளவு இருந்தாலும் பொங்கல் பானைக்கு
அவர்கள் அண்ணன் மகன் அனுப்புகிற பத்து ரூபாய் மணியாடருக்குக்
காத்திருப்பார்கள். மணியார்டர் வந்ததும் அவர்கல் முகத்தில் மகிழ்ச்சி
பூரிப்பு காண கண் கோடிவேண்டும்.

கருத்திட்டமைக்கு நன்றி திரு தோத்திரி ஐயா,திரு யோகியார்,திருமிகு
பவளா,திருமிகு தேமொழி. பாசமலர் பாடலுக்கு ஈடில்லை.
Reply all
Reply to author
Forward
0 new messages