1. வெருளி நோய்கள் 366-370 : இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2.தொல்காப்பியமும் பாணினியமும் – 2 :பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

4 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Sep 9, 2025, 6:58:01 PM (13 days ago) Sep 9
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan

தொல்காப்பியமும் பாணினியமும் – 2 :பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

தொல்காப்பியமும் பாணினியமும்

image.png

2

பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள்

எட்டு அத்தியாயங்களை உடைய நூல் என்னும் பொருளில் பாணினி தன் நூலுக்கு அட்டாத்தியாயி என்று பெயர் வைத்தார். தமிழில் அட்டம் என்றால் எட்டைக் குறிக்கும். எட்டுபோல் காலைக் குறுக்கே மடக்கி அமர்வதை அட்டக்கால் என்று இன்றும் கூறிவருகிறோம். தமிழ் அட்டத்திலிருந்து வந்ததே சமற்கிருத அசுட்டம். எனவே, எட்டு அத்தியாயங்களைக் கொண்டது என்னும் பொருளில் அட்டகம் என்றும் கூறுகின்றனர்.  இதனைத் தமிழில் வேறுவகையில் குறிப்பிடுவதானால் எண்(8) இயல்கள் பகுக்கப்பட்டுள்ள நூல் என்ற பொருளில் எண்ணியல் என்றும் சொல்லலாம். இங்கே எண் என்பது எட்டு என்னும் இலக்கத்தைக் குறிப்பிடுவதே. ஒவ்வோர் அத்தியாயமும் 4 உட்பிரிவுகளை உடையது. மொத்தம் கிட்டத்தட்ட 4000 சூத்திரங்களை உடையது எனச் சொல்லப்பட்டாலும் இதில் 3,959 சூத்திரங்களே உள்ளன.

. ஒவ்வோர் அத்தியாயத்திலும் விளக்கவெடுத்துக் கொண்ட தலைப்பு, அத்தியாயங்கள் அமைக்கப்பட்டிருக்கும் வகைமுறை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வோர் அத்தியாயத்திலும் காணப்படும் சூத்திரங்களின் எண்ணிக்கை வேறுபடும். அவை வருமாறு:

அட்டாத்தியாயி சூத்திர எண்ணிக்கை

இயல் எண்முதல் பிரிவுஇரண்டாம் பிரிவுமூன்றாம் பிரிவுநான்காம் பிரிவுமொத்தம்
1 75 73 93110351
2 72 38 73 85268
3150188176117631
4178145168144635
5176146119160601
6223199189175736
7103118120 97438
8 74108119 68369
ஆக மொத்தம்4029

இஃது அதிகமாகக் கூறப்படும் எண்ணிக்கை. 5 ஆம் பிரிவில் 555 சூத்திரங்கள் உள்ளன என்றே பெரும்பான்மையர் கூறுகின்றனர். இதன்படி 3983 நூற்பாக்கள் உள்ளன என்றாகிறது. ஆனால், பழைய கணக்குப்படி 3959 நூற்பாக்கள்தாம் உள்ளன. பிற இடைச்செருகல்களே!

பாணினியத்தின் சூத்திரங்களோடு இணைந்தமையாத ஆனால், அச்சூத்திரங்களைப் புரிந்து கொள்ள இன்றியமையாதவையாகக் கருதப்படும் . தனித்தனியாக அமைந்துள்ள, சில துணை நூல்கள் வருமாறு (1)சிவசூத்திரம் (2)  தாதுபாடம் (3) கணபாடம் (4)உணாதிசூத்திரம் (5) பிட் சூத்திரம் (6) (இ)லிங்கானு சாசனம் (7) சிட்சா. இந்நூல்களின் ஆசிரியர் பாணிணியா அல்லது வேறு ஒருவரா என்று முடிவாக எதுவும் கூறமுடியாதபோதிலும் பாணினியின் இலக்கணத்தோடு இவற்றுக்குள்ள நெருங்கிய தொடர்பு பற்றியோ அவ்விலக்கணத்தை எளிதில் புரிந்து கொள்ள இந்நூல்களின் அவசியத்தைப் பற்றியோ எந்தவிதக் கருத்து வேறுபாடோ சந்தேகமோ இல்லை. (முனைவர் கு . மீனாட்சி)

பெயர்க்காரணம்

தொல்காப்பியம் எழுதிய நூல் தொல்காப்பியம் எனப் பெயர் பெற்றது என்று ஒரு சாராரும் தொல்காப்பியத்தை எழுதியமையால் தொல்காப்பியர் எனப் பெயர் பெற்றார் என ஒரு சாராரும் கருதுகின்றனர்.தொனமையான காப்பியக்குடியில் பிறந்தவர் என்பதால் தொல்காப்பியன் > தொல்காப்பியர் எனப் பெயர் பெற்றார் என்பர். காப்பிக்காடு என்னும் ஊரில் பிறந்ததால் இப்பெயர் பெற்றார் என்றும் சொல்வர். தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதிய இளம்பூரணர், தொல்காப்பியர் கூறும் ஆகுபெயர்களில் ஒன்றான ‘வினைமுதல் உரைக்கும் கிளவி’ என்பதற்குத் ‘தொல்காப்பியம்’ என்னும் எடுத்துக்காட்டினைத் தந்துள்ளார். (2-3-31) சிறப்புப் பாயிரத்தில் ‘தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி’எனப் பனம்பாரனார்  குறிப்பிடுகிறார். எனவே, தொன்மையைக் காத்து இயம்புவதற்காகப் புனை பெயராக தொல்காப்பியன் எனத் தன் பெயரை வைத்துக் கொண்டார் எனலாம்.

பாணின் என்பவின் மகன் அல்லது பணின் என்பவரின் பேரன் அல்லது பணி என்பவரின் மகன் எனப் பலவைகாயக் கூறுகின்றனர். தாட்சி என்பவரின் மகன் என்பதால் தாயின் பெயரால் தாட்சிபுத்திர என்றும் கூறுகின்ற்னர். சாலாதூர என்ற ஊரில் பாணினி பிறந்ததால் சாலாதூர அல்லது  சாலாதூரீய என்றும் அழைக்கப்படுகிறார். இவ்வூர் இப்போது பாக்கித்தானில் உள்ள இலாகூர் பகுதியாக இருக்கும் என்கின்றனர்.

(தொடரும்)

தொல்காப்பியமும் பாணினியமும்

இலக்குவனார் திருவள்ளுவன்

++

வெருளி நோய்கள் 366-370 : இலக்குவனார் திருவள்ளுவன்

image.png


(வெருளி நோய்கள் 361-365 – தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 366-370

  1. இறால் வெருளி- Garidaphobia

இறால் மீன்(shrimp) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இறால் வெருளி.
இறால் மீனைப் பார்த்தால் அல்லது சமைத்த இறாலைப் பார்த்தால் அல்லது இறால் மீனை உண்டால் பேரச்சம் வரும்.
விலங்கு வெருளி(Zoophobia) உள்ளவர்களுக்கும் இப்பி வெருளி (Ostraconophobia) வருபவர்களுக்கும் இறால் வெருளி வர வாய்ப்புண்டு. 00

  1. இறுதிச்சடங்கு வெருளி – Cedeiaphobia

இறுதிச்சடங்கு குறித்த வரம்பற்ற பேரச்சம் இறுதிச்சடங்கு வெருளி.
பிறரது இறுதிச்சடங்கைப்பார்க்கும் பொழுது அல்லது பிறரின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் பொழுது துயரம் வருவதாலும் தனக்கோ தன் வீட்டிலுள்ள மூத்த உறுப்பினர்களுக்கோ பிறருக்கோ இறுதிச்சடங்கு செய்யும் சூழல் வரலாம் எனப்பேரச்சம் வருவதுண்டு.
சாவு வெருளி(Necro Phobia/Thanato Phobia/ Thantophobia) வருபவர்களுக்கும் இறுதிச்சடங்கு வெருளி வருவதுண்டு.
00

  1. இறை நம்பிக்கையர் வெருளி – Theistophobia

இறை நம்பிக்கையர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இறை நம்பிக்கையர் வெருளி.
இறை நம்பிக்கை யுடையவர்களில் ஒரு பகுதியினர் மூட நம்பிக்கை உடையவர்களாகவும் உள்ளனர். இன்னின்ன செய்தால் அல்லது இன்னின்ன செய்யாவிட்டால் இன்னின்ன தீ வினை நிகழும் என்பதுபோல் சொல்லப்படும் அச்சுறுத்தல்களை நம்பும் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். இதே போல் இறைநம்பிக்கையர், அதனையே பிறருக்கும் தெரிவித்து மற்றவர்களையும் அச்சுறுத்துவர். இதன்காரணமாக இறைநம்பிக்கையருடன் பழகுவதற்கே பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00

  1. இறை மறுப்பர் வெருளி – Atheophobia

இறை மறுப்பர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இறை மறுப்பர் வெருளி.
இறை நம்பிக்கையரின் மூட நம்பிக்கைக்கு எதிரான கருத்துகளை இறை மறுப்பர் விரும்புவதில்லை. ஆனால் அவ்வாறு மறுப்பதை இறை நம்பிக்கையர் தெய்வ நம்பிக்கைக்கு எதிரானதாகக் கருதுகின்றனர். ஆதலின் இறை மறுப்பர் மீது இறை நம்பிக்கயருக்குத் தேவையற்ற பேரச்சம் ஏற்பட்டு வெருளிக்கு ஆளாகின்றனர்.
.
00

  1. இறைச்சி வெருளி – Carnophobia

இறைச்சி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இறைச்சி வெருளி.
இறைச்சி உண்டபின் நோய்க்கு ஆளாவது, இறைச்சிக்கூடத்திற்கு அல்லது இறைச்சி வெட்டும் இடத்திற்குச் சென்று அதிர்ச்சிக்கு ஆளாவது, இறைச்சி தொடர்பான எதிர்வினைகள் பற்றி அறிய வருவது, மரக்கறி உண்போர்(சைவம்) என்ற நிலையில் இறைச்சி உணவை வெறுப்பது போன்ற காரணங்களால் இறைச்சிமீதான பேரச்சம் வருகிறது.
karno என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் இறைச்சி.
00

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்,

வெருளி அறிவியல் தொகுதி 1/5

++


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages