விக்கிப்பீடியா - சமசுகிரதம் - தொல்காப்பியம்

52 views
Skip to first unread message

Mohamed Haneef

unread,
Aug 17, 2011, 11:16:00 AM8/17/11
to tamil...@googlegroups.com
தொல்காப்பியம் குறைந்தது 7000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட நூல் என்று 900க்கும் மேற்பட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி அறிஞர் குணா எழுதிய தொல்காப்பியத்தின் காலம் என்ற நூல் வெளியீட்டுவிழா திரு. அரிமாவளவன் தலைமையில் சென்னையில் நடந்தது.

இன உணர்வாளர் சென்னிமலை விசுவநாதன் நூலை வெளியிட தமிழர் சமயம் முனைவர் தெய்வநாயகம் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார். முனைவர் அருகோ, தமிழ் தேசியப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் மணியரசன், நகைமுகன், ம. பொன்னிறைவன், உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தலைமையுரையாற்றிய தமிழர்களப் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தன் உரையில், “தமிழர்கள் நாம் தொடர்ந்து இழந்து வருகிறோம்! கன்னடக் களப்பிரர்கள் 18 நூற்றாண்டுகளுக்கு முன்பாக இந்நாட்டை வன்கவர்பு செய்ததிலிருந்து இழப்புக்கு மேல் இழப்புதான். கண்டவனெல்லாம் வந்தான். வந்தவனெல்லாம் ஆண்டான்! ஆண்டவனெல்லாம் சுருட்டினான். களப்பிரர் முதல் கருணாநிதி வரை சுருட்டல்தான்! இன்னும் இழந்து கொண்டே இருக்கிறோம்.

கோடிக்கணக்கில் சுருட்டியவர்களுக்கு ஓராண்டு ஈராண்டு சிறைத் தண்டனை என்றால் எல்லாருக்கும்கூடத்தான் சுருட்ட ஆசை வரும். இழந்த சொத்துக்களை வட்டியும் முதலுமாக மீட்பதுதான் இயற்கை நீதி. ஆனால், தமிழர்கள் இழந்தவைகளைப் பற்றிக் கண்டுகொள்வதேயில்லை.

விக்கிப் பீடியாவில் தொல்காப்பியம் சமற்கிருதத்திலிருந்து பல சொற்களைக் கையாண்டுள்ளது என்ற பொய்யைப் போட்டு வைத்துள்ளான். சமற்கிருதத்தில் 5 சொற்களில் மூன்று தமிழிலிருந்து எடுக்கப்பட்டது என்று பாவாணர் மெய்ப்பித்திருக்கிறார். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதே சமற்கிருதம் என்று குணா மெய்ப்பிக்கிறார். சமற்கிருதம் என்ற சொல்ல “உருவாக்கப்பட்டது” என்றுதானே பொருள். தமிழரின் நான்மறையைத் தழுவித்தான் நான்கு வேதங்கள் உருவாக்கப்பட்டன என்று ஐயந்திரிபட ஆதாரங்களோடு மெய்ப்பிக்கிறார் குணா. ஆனால் அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழனின் ஆதாரங்களுக்கு யார் செவி மடுக்கப் போகிறார்கள்?

பத்மானபுரம் சொத்துக்கள் தமிழரின் சொத்துக்கள். ஆனால், இன்று தில்லியும் கேரளாவும்தான் அந்தச் சொத்துக்களுக்குப் போட்டி போடுகின்றன. இழந்த தமிழன் வேடிக்கை பார்க்கிறான். 1956ல் எல்லைகளை இழந்தோம். திருவனந்தபுரத்தை இழந்தோம், பெங்களூரை இழந்தோம், திருப்பதி இழந்தோம், எல்லைகளை இழந்தோம், காவிரி இழந்தோம், பாலாறு இழந்தோம், நொய்யலாறு இழந்தோம் இன்னும் பல ஆறுகளை இழந்தோம். இன்று அதன் விளைவுகளை அறுக்கிறோம். தமிழகம் பாலையாகிறது.

தமிழிசைதான் ஏழிசை! களவாடிச் சேர்த்தது கர்நாடக இசை! ஆனால், கர்நாடக இசை கோலோச்சுகிறது. ஏழிசை இருந்த இடம் தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் தமிழிசை விழாவில் தெலுங்கு கீர்த்தனைகள் பாடப்படுகின்றன. சமற்கிருதம் ஓதப்படுகிறது. தமிழில் பாடினால் தீட்டு என்று மேடையைக் கழுவுகிறான். ஆக நாம் உருவாக்கிய இசையை நாமே இழந்தோம்.

களறியின் அடிகளே பரதநாட்டியத்தின் அபிநயங்களாயின. களரி இல்லாது போனது. பரதநாட்டியம் தாம் தீம் என்று ஆரவாரமாய்ப் போடுகிறது!

அணுவியலின் தந்தை டெமாக்ரட்டசு என்கிறது இணைய உலகம். அவன் தமிழகம் வந்து அணுவியல் கற்றது தமிழறிஞர் கணிஆதனிடம். கணிஆதன் கற்றது நற்கணியாரிடம். ஆனால் ஏழை சொல் அம்பலம் ஏறுமா? தமிழரின் அணுவியல் ஏற்றம் பெறாததால் ராமர் பிள்ளையின் கன்னெய்யை இழந்தோம். ராமர் பிள்ளை உருவாக்கிய கன்னெய்க்கும் தண்ணீருக்கும் ஒரு மின்துகள் மாற்றம் இருந்தது. அது அணுவியல் மாற்றத்தால் நிகழ்ந்தது. அது தமிழரின் கலை. இந்தி விஞ்ஞானிகள் இயற்பியல் வேதியல் மட்டுமே அறிந்து வைத்தவர்கள். அவர்கள்தான், ராமர் பிள்ளையை பித்தலாட்டம் என்றார்கள். மாறணம் (ஆல்க்கமி) இழந்தோம். செம்பைப் பொன்னாக்கும் பொன்மாறணம் இழந்தோம். இன்று ஆலுக்காஸ் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இப்படித் தமிழர் இழந்தது எண்ணற்றவைகள். வந்தேறிகளின் சூழ்ச்சியால் இழந்தோம் இழந்தோம் எல்லாவற்றையும் இழந்தோம். இழப்பதற்கு இனி ஏதுமின்றி ஏதிலிகளாய் இன்று திரிகின்றோம். சொந்த மண்ணில் அன்னியப்பட்டுக் கிடக்கின்றோம். ஆட்சி இழந்து வந்தேறிகளிடம் கைகட்டி தமிழன் நிற்கிறான்.

கலைகளை இழந்தோம், மொழியை இழந்தோம், பண்பாட்டை இழந்தோம், வானியல் இழந்தோம், வரலாறு இழந்தோம். இறுதியில் முள்ளிவாய்க்காலோடு ஈழத்தில் 3 லட்சம் சொந்தங்களையும் இழந்தோம். கடற்கரையில் நம் மீனவர்களை இழந்தோம். இன்று அநியாயமாக மரண தண்டனை என்ற பேரில் மூன்று அப்பாவித் தமிழர்களையும் இழக்கப் போகிறோம்.

உலகில் நாம் 12 கோடித் தமிழர்கள் இருந்தும் ஒன்றரைக் கோடிச் சிங்களவரிடம் நாம் தோற்றோம். கர்நாடகத்தில் தமிழர்களை இழந்தோம். பர்மாவில் ஒன்றரை லட்சம் தமிழர்களை இழந்தோம். வரலாறு நெடுக சொந்தங்களையும் சொத்துக்களையும் பெண்டு பிள்ளைகளையும் இழந்தே வந்திருக்கிறோம். காரணம் நாடற்றவர்கள் நாம்! நாடற்றவர்களெல்லாம் இந்த நானிலத்தில் நாதியற்றவர்கள் என்பதை உணர மறுக்கிறோம்!

மீட்க வேண்டியவைகளை மீட்காமல் இனி தமிழனுக்கும் வாழ்வில்லை எதிர்காலமுமில்லை. அப்படி அனைத்தையும் மீட்க வேண்டுமென்றால், தமிழனுக்கு என்றொரு நாடு வேண்டும். 50 பேர் வாழ்கிற பிற்காரித் தீவுகளுக்கு ஒரு நாடு இருக்கும்போது 800 பேர் இருக்கிற வத்திக்கானுக்கு ஒரு நாடு இருக்கும் போது 12 கோடித் தமிழர்களுக்கு ஒரு நாடு அமைந்தால் அது என்ன பாவமா?

நாடற்ற குடிகள் என்போர் நாதியற்ற குடிகள் என்பதை உணர்வோம்! தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை உள்ளத்தில், இல்லத்தில் ஊரில், நாட்டில் பதியுங்கள்.”

விழா சென்னை சாந்தோம் அருகில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழர் பண்பாட்டுக் குழுவினரின் “வருவாண்டா பிரபாகரன்” உள்ளிட்ட பாடல்களால் விழா அரங்கமே முறுக்கேறியது.

http://www.tamilwin.com/view.php?22Gp7bc3BI34eO29303jQAdd3Qjv209923e4QLBcb2pGO2

Elangovan N

unread,
Aug 17, 2011, 11:26:56 AM8/17/11
to tamil...@googlegroups.com
இம்மடலுக்கு செய்திக்கும் நன்றி திரு.முகமது.
இந்நூலை எங்கு வாங்கலாம் என்ற செய்தி தெரிந்தால் அறியத்தரவும்.
அறிஞர் குணா தமிழர் என்பதால் திராவிடத்தால் வஞ்சிக்கப் பட்டவர்.

அன்புடன்
நாக.இளங்கோவ

2011/8/17 Mohamed Haneef <mhan...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

Mohamed Haneef

unread,
Aug 17, 2011, 12:42:20 PM8/17/11
to tamil...@googlegroups.com
அன்புடன் நாக. இளங்கோவன்

இந்த செய்தி தொடர்பில் சில கேள்விகளும் அவற்றையும் தெளிந்துக்கொள்ளும் நோக்கிலேயே இங்கிட்டேன்.

//விக்கிப் பீடியாவில் தொல்காப்பியம் சமற்கிருதத்திலிருந்து பல சொற்களைக் கையாண்டுள்ளது என்ற பொய்யைப் போட்டு...//

இது தொடர்பில் விக்கிப்பீடியர்களின் கருத்து என்ன?
 

//சமற்கிருதத்தில் 5 சொற்களில் மூன்று தமிழிலிருந்து எடுக்கப்பட்டது என்று பாவாணர் மெய்ப்பித்திருக்கிறார். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதே சமற்கிருதம் என்று குணா மெய்ப்பிக்கிறார்.//

இவை தொடர்பான விளக்கங்கள் பெற ஆவல் 

சமற்கிருதம் என்ற சொல்ல “உருவாக்கப்பட்டது” என்றுதானே பொருள். தமிழரின் நான்மறையைத் தழுவித்தான் நான்கு வேதங்கள் உருவாக்கப்பட்டன என்று ஐயந்திரிபட ஆதாரங்களோடு மெய்ப்பிக்கிறார் குணா. ஆனால் அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழனின் ஆதாரங்களுக்கு யார் செவி மடுக்கப் போகிறார்கள்?

பத்மானபுரம் சொத்துக்கள் தமிழரின் சொத்துக்கள். இது தொடர்பான தகவல்கள் ஆனால், இன்று தில்லியும் கேரளாவும்தான் அந்தச் சொத்துக்களுக்குப் போட்டி போடுகின்றன. இழந்த தமிழன் வேடிக்கை பார்க்கிறான். 1956ல் எல்லைகளை இழந்தோம். திருவனந்தபுரத்தை இழந்தோம், பெங்களூரை இழந்தோம், திருப்பதி இழந்தோம், எல்லைகளை இழந்தோம், காவிரி இழந்தோம், பாலாறு இழந்தோம், நொய்யலாறு இழந்தோம் இன்னும் பல ஆறுகளை இழந்தோம். இன்று அதன் விளைவுகளை அறுக்கிறோம். தமிழகம் பாலையாகிறது.

தமிழிசைதான் ஏழிசை! களவாடிச் சேர்த்தது கர்நாடக இசை! ஆனால், கர்நாடக இசை கோலோச்சுகிறது. ஏழிசை இருந்த இடம் தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் தமிழிசை விழாவில் தெலுங்கு கீர்த்தனைகள் பாடப்படுகின்றன. சமற்கிருதம் ஓதப்படுகிறது. தமிழில் பாடினால் தீட்டு என்று மேடையைக் கழுவுகிறான். ஆக நாம் உருவாக்கிய இசையை நாமே இழந்தோம்.

களறியின் அடிகளே பரதநாட்டியத்தின் அபிநயங்களாயின. களரி இல்லாது போனது. பரதநாட்டியம் தாம் தீம் என்று ஆரவாரமாய்ப் போடுகிறது

இதுவும் கட்டாயம் அறிந்துக்கொள்ள வேண்டியவை. 

Elangovan N

unread,
Aug 17, 2011, 1:10:34 PM8/17/11
to tamil...@googlegroups.com
விக்கிப்பீடியா பற்றிச் சொல்ல செல்வா மற்றும் பிற விக்கிப்பீடியர்களால்தான் இயலும்.
ஆயினும், பொத்தாம் பொதுவில் சொல்வது போல சொல்லியிருக்கிறார்கள். எந்தக் கட்டுரை எப்படிச்
சொல்கிறது என்று தெரியாமல் கருத்து சொல்வது கடினம்.  ஆனால், விக்கி பற்றி தவறான செய்திகளைச்
சிலர் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இது ஒரு வகை என்பது தெரிகிறது. 

//சமற்கிருதத்தில் 5 சொற்களில் மூன்று தமிழிலிருந்து எடுக்கப்பட்டது என்று பாவாணர் மெய்ப்பித்திருக்கிறார்.
//

இதைச் சுற்றிதான் இணையத்தில் அடிக்கடி கலவரம் ஏற்படுவதே :-)

ஒரு மொழியில், கால ஓட்டத்தில் சில சொற்கள் கலக்கின்றன; சில புகுகின்றன; சில திணிக்கப்படுகின்றன.
கடைசியில் அது ஒரு குப்பை மாதிரி ஆகிவிடுகிறது. அப்படி ஒரு சூழல் தமிழுலகில் நிகழ்ந்திருக்கிறது.
பல நூறு ஆண்டுகள், இது தமிழா அல்லது பிறவா? என்று கேள்வி கேட்பாரின்றி ஓடியது. அதனை ஆழ்ந்து
துணிவோடும் நுண்ணறிவோடும் சொன்னவர்கள் பாவாணர் மற்றும் மறைமலையடிகளார்.

தமிழ் மொழி வரலாற்றை வடக்கை மையமாக  வைத்தே ஆராய்ச்சி செய்பவர்களுக்கும்,
வடக்கு சொன்னதே சரி என்பவர்களுக்கும், "தெற்கை மையமாக வைத்து" உண்மைகளைப் பிட்டு வைத்ததோடு
வடக்குக்கு வால் பிடித்தவர்கள் தலையிலே குட்டும் வைத்தவர்கள் இவர்கள். அதனாலேயே வடசார் தமிழர்கள் இவர்களைத் தொடர்ந்து மட்டம் தட்டிக் கொண்டே இருப்பார்கள். அதுவே அடிக்கடி வல்லடி வழக்காக மாறும் :)

வடமொழி, உருது, பாலி போன்ற மொழிகளில் இருந்து தமிழ் மொழியில் புகுந்த சொல் என்று ஒரு சொல்லைச்
சொன்னால் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், தப்பித் தவறி இந்தச் சொல் தமிழில் இருந்து வடமொழிக்கோ பிறமொழிக்கோ சென்றது என்று சொன்னால் 100திகிரி சூடாகிவிடுவார்கள் இன்றைக்கும்.

பிறமொழியில் இருந்து தமிழுக்கு வரமுடியும் என்ற கருத்தைத் தொடர்ந்து நம்புபவர்கள், தமிழில் இருந்து
பிறமொழிக்குச் சென்றிருக்கக் கூடும் என்பதை சிந்திக்கக் கூட மறுப்பவர்கள் நிறைய இப்பொழுதும் உண்டு.
 
பாவாணர் கால சொல்லாராய்ச்சிக்குப்பின்னர் ஆராய்ச்சி நிலை, ஆதாரங்கள், புதுக் கண்டுபிடிப்புகள்
பெருகி வந்திருக்கின்றன. பாவாணரை விரும்புபவர்கள் கூட பாவாணர் விட்ட இடத்தையே பிடித்துக்
கொண்டு இருப்பதில்லை. வசதிகள் கூடிய இந்தக் காலத்தில் மேலும் மேலும் பெருக்குகின்றனர். பாவாணர் கருத்தில் கூட மாறுபட்டு எடுத்துரைக்கின்றனர். ஆனால், வடசார்பு என்ற ஒன்றில் மயங்கியிருப்பவர்கள்
பாவாணர் சொன்ன அத்தனையையும் பொய் என்று நிறுவுவதிலும், மேலாய்வு செய்யாமலும் காலம் கழிக்கின்றனர். ஆனால், சமகாலத்தில் வையாபுரிப்பிள்ளை சொன்ன அத்தனையையும் அப்படியே 
எடுத்துக் கொள்கின்றனர் :-) 

மொழியறிஞர்களே உங்களுக்கு நல்ல விளக்கம் தரமுடியும். ஆனால், வடமொழி, பிறமொழிகளில்
இருந்து தமிழுக்குச் சொற்கள் வருவது கால இயல்பு எனின், தமிழில் இருந்து பிறமொழிகளுக்கு, குறிப்பாக
வடமொழிக்கு ஏன் சொற்கள் போயிருக்க முடியாது? அதை ஏற்றுக் கொள்ள அவர்கள் மனம் ஏன் மறுக்கிறது? என்பதோடு நான் நிறுத்திக் கொள்கிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்


2011/8/17 Mohamed Haneef <mhan...@gmail.com>

Mayooranathan Ratnavelupillai

unread,
Aug 17, 2011, 2:41:19 PM8/17/11
to tamil...@googlegroups.com
//விக்கிப் பீடியாவில் தொல்காப்பியம் சமற்கிருதத்திலிருந்து பல சொற்களைக் கையாண்டுள்ளது என்ற பொய்யைப் போட்டு...//
 

இது தமிழ் விக்கிப்பீடியா பற்றிய கருத்து அல்ல. தமிழ் விக்கிப்பீடியாவில் தொல்காப்பியம் பற்றிய கட்டுரையில் அத்தகைய குறிப்பு எதுவும் இல்லை. இது ஆங்கில விக்கிப்பீடியாக் கட்டுரை பற்றியது. ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள தமிழர், தமிழ் தொடர்பான பல கட்டுரைகளில் இவ்வாறான பிரச்சினைகள் இருப்பதை முன்னரேயே கவனித்துள்ளோம். ஆங்கில விக்கிப்பீடியாவில் எல்லா மொழியினரும் கட்டுரைகளை எழுதுகிறார்கள், எழுதிய கட்டுரைகளில் திருத்தம் செய்கிறார்கள். எனவே, வெவ்வேறு மொழிகளைப் பேசுவோருக்கு இடையே இருக்கக்கூடிய கருத்து முரண்பாடுகள் ஆங்கில விக்கிப்பீடியாக் கட்டுரைகளில் வெளிப்படுகின்றன. ஆங்கில விக்கிப்பீடியாவில் தமிழர்களிலும் பார்க்க வேறு சில இந்திய மொழியினர் முனைப்பாகச் செயல்படுவதனாலும், இவ்வாறான கருத்துக்களைக் கவனித்து ஆவன செய்யப் போதியளவு  தமிழர் ஆங்கில விக்கியில் இல்லாதபடியாலும் நாங்கள் பிழை எனக் கருதும் விடயங்கள் ஆங்கில விக்கிப்பீடியாவில் இடம் பெறுவதைத் தடுக்க முடியாதுள்ளது.

இன்னொரு விடயத்தையும் நாங்கள் கவனிக்க வேண்டும். ஆங்கில விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதும்போது அதில் குறிப்பிடப்படும் விடயங்களுக்குச் சான்றுகள் தரவேண்டும். எங்களுடைய கருத்துக்களை மெய்ப்பிக்கக்கூடிய புதிய முறையிலான ஆய்வுகள் அதிகம் நடைபெறுவதில்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் மற்றப்பக்கத்தில் இருப்பவர்களுக்கு அந்தக்குறை கிடையாது. தமிழர்கள் முறையான ஆய்வுகளில் ஈடுபட்டுத் தமது கருத்துக்களுக்கு வலுவான சான்றுகளை வெளிக்கொண்டுவரத் தொடங்காதவரை நிலைமையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படுவதற்கு இல்லை.

நிற்க விக்கிப்பீடியா ஒரு குழுவினருக்கு உரியது அல்ல என்பதைப் பலர் உணரவில்லை அல்லது உணர மறுக்கிறார்கள். "விக்கிப்பீடியாவில் பிழையாக எழுதி வைத்துள்ளார்கள்" என்று சொல்வதில் எவ்வித பயனும் இல்லை. பிழை என உணர்பவர்கள் அதைத் திருத்துவதற்கு எல்லா உரிமையும் கொண்டுள்ளானர். எனவே அவர்கள் அதை ஏன் திருத்தக்கூடாது?
 
 
அன்புடன்,
 
இ. மயூரநாதன்
 
 
2011/8/17 Elangovan N <nela...@gmail.com>

Sri Sritharan

unread,
Aug 17, 2011, 5:54:10 PM8/17/11
to tamil...@googlegroups.com
ஆங்கில விக்கியில் ஆதாரங்களுடன் தரப்பட்டுள்ள சில தகவல்கள்:
 
http://en.wikipedia.org/wiki/Tolkappiyam#Opinions_on_the_influence_of_Sanskrit
 
Opinions on the influence of Sanskrit
According to a few scholars,[12] the grammar expounded by the Tolkappiyam owes a great deal to Sanskrit. The influence or relationship of various Sanskrit works like Manavadharmashastra, Arthashastra, Natyashastra[8][13] and grammarians like Pāṇini and Patanjali can be attributed in Tolkappiyam.[14] Some scholars feel that influence of Sanskrit texts are more pronounced in Collathikaram.[15] The eight feelings or meyppaadu mentioned in the Porulathikaram seem to agree with the eight rasas or the rasa theory of the Natyashastra.[8][16]
The relationship between the Tolkappiyam and the various Sanskrit grammatical schools has also been debated. The preface to the Tolkāppiyam says that its author was well versed in aintiram. Burnell takes this to be a reference to the Aindra school of grammar referred to by other Sanskrit grammarians. He suggests that this was a pre-Pāṇinian school, and argues that the first two books of the Tolkappiyam, the Vedic Pratisakhyas, a Sanskrit grammar called the Katantra from the 3rd or 4th century, and Kaccayana's Pali grammar show significant similarities in terms of their organisation and the terminology they use, suggesting that they all belong to the same school.[17] Takahashi, citing the views of Zvelebil and Vaiyapuri Pillai, suggests that the Aindra school is a post-Pāṇinian school, of which the Katantra is an example.[18] Rajam argues that these studies are methodologically flawed and, after re-examining the question in relation to the first book of the Tolkappiyam, comes to the conclusion that whilst the Tolkappiyam does share characteristics with various Sanskrit works indicating a relationship, it also shows dissimilarities which are significant enough to make it unlikely that they share a common source. Instead, she suggests that these are best viewed as individual nodes within a manifold grammatical tradition.[19]
 


அன்புடன்
சிறீதரன்
 

Date: Wed, 17 Aug 2011 22:41:19 +0400
Subject: Re: [தமிழ் மன்றம்] விக்கிப்பீடியா - சமசுகிரதம் - தொல்காப்பியம்
From: rmayoor...@gmail.com
To: tamil...@googlegroups.com

Mohamed Haneef

unread,
Aug 18, 2011, 1:20:14 AM8/18/11
to tamil...@googlegroups.com
சமசுகிரதம்
 
வடயிந்தியர்கள் பலர் எனது நண்பர்களாக உள்ளனர். இவர்களைப் பொறுத்தமட்டில் இந்தியாவின் ஆதிக்க மொழி இந்தி என்றும், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் சமசுகிரதத்தின் வழிவந்தவைகளே எனும் கொள்கையுடையோராகவே உள்ளனர். அவ்வாறே பிறமொழி நண்பர்கள் மத்தியில் பேசியும், கருத்துக்களை விதைத்தும் வருகின்றனர். 

  கேட்போர் எல்லாம் மொழி ஆய்வாளர்களோ, வரலாற்று ஆய்வாளர்களோ அல்ல. எனவே பலர் அக்கருத்துக்களை அப்படியே உள்வாங்கிக்கொள்வோரே அதிகம் எனலாம். பின்னர் ஆய்வுகளை மேற்கொள்வோரும் மேலுள்ள அதே எண்ணக்கருவை மனதில் கொண்டே தமது ஆய்வுகளை தொடர்வதால் தோன்றும் விளைவுகளே, தென்னாசியத் துணைக்கண்டத்தின் இருக்கும் இன்னுமொரு பழமையான மொழியின் (தமிழ்) பற்றிய ஆய்வுகளில் நாட்டம் கொள்ள முயலாமை தொடர்கின்றன என்றே கருதுகிறேன். 

தமிழரே எம் மொழி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு நிறுவியப்போதும், வடயிந்தியர் விதைத்து விட்ட ஆழ்மனக்கிடக்கையில் இருந்து விடுபட முடியாதவர்களால் அதனை ஏற்க முடியாமையினாலும், தமது வாதம் உடைப்பட்டுவிடும் எனும் அச்சத்தினால் மேலும் மேலும் சமசுகிரதம் ஊடான பார்வையூடாகவே தமது கருத்துக்களை விதைத்து வருகின்றனர்.

தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் அறிவாளர்கள்

இதற்கு தமிழ் ஆய்வாளர்களும் அறிவாளர்களும் தக்க சான்றுகளுடன் மேற்கோள் காட்டி நிறுவது தான் தீர்வாக முடியும். ஆனால் பலவேறு மொழியினரும் ஒருங்கிணைந்து பங்களிக்கும் விக்கிப்பீடியா போன்ற தளங்களில், தத்தமது கொள்கைக்கு அமைவாக எழுதுப்பட்ட மேற்கோள்களை காட்டி பலர் தொகுத்துவிடுகின்றனர். இவ்வாறான மேற்கோள்கள் பல முறையான ஆய்வுகளின் அடிப்படையிலோ, அல்லது நிறுவப்பட்ட கருத்துகளில் இருந்தோ காட்டப்பட்டதாக எல்லாம் இல்லை. 

எனவே வாசிப்போர் மேற்கோள்களுடன் ஒரு கட்டுரை வழங்கப்பட்டுள்ளது எனது கருதுபவர், அந்த மேற்கோள்கள் நிறுவப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் பெறப்பட்ட மேற்கோள்கள் தானா என்பதை அறியாமல் அல்லது கவனியாமல் ஏற்கும் அபாயத்தை தோற்றுவித்து விடுகிறது. 

இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால் கூகில், யாகூ போன்ற தேடுபொறிகள் விக்கிப்பீடியாவில் எழுதப்படும் ஆக்கங்களையே முதல் தெரிவாக வழங்குகின்றன. இது விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு நல்லது என்கின்ற போதும், முழுமையற்ற, தகவல் பிழைகளை கொண்ட கட்டுரைகள் தேடுவோருக்கு கிடைப்பதனால் அவர்கள் தாம் தேடிய விடயம் தொடர்பான பிழையான தகவலை பெற்றுக்கொள்வதும் ஆபத்தான விடயங்கள் தான்.

மயூரநாதனுக்கான பதில்

 மயூரநாதனின் கருத்துப்படி //"விக்கிப்பீடியாவில் பிழையாக எழுதி வைத்துள்ளார்கள்" என்று சொல்வதில் எவ்வித பயனும் இல்லை. பிழை என உணர்பவர்கள் அதைத் திருத்துவதற்கு எல்லா உரிமையும் கொண்டுள்ளானர். எனவே அவர்கள் அதை ஏன் திருத்தக்கூடாது?// கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு தகவல் தொடர்பான போதிய அறிவு பெற்ற ஒருவர், ஒரு கட்டுரையைப் பார்த்து அதில் பிழை கண்டால் அதனை திருத்தலாம். ஆனால் ஒரு ஆய்வுக்காக தகவலை தேடும் ஒரு மாணவன், குறிப்பிட்ட ஒரு கட்டுரையின் தகவல்கள் சரியானதா, பிழையானதா என தெரியாத நிலையில் எவ்வாறு திருத்துவான்? 

இன்னொன்றையும் விளங்கிகொள்ள வேண்டும் தகவல்களை தேடும் எல்லோரும் எழுதும் ஆற்றலும் ஆர்வமும் கொண்டோராக இருக்க முடியாது.

வேண்டுகோளும் எழும் கேள்விகளும்

இவ்வாறான நிலையில் விக்கிப்பீடியா போன்ற தளங்களில் தமிழ் மொழி தொடர்பில் தமிழ் அறிஞர்கள் பங்களிக்க வேண்டும். ஆனால் எனக்கு எழும் கேள்விகள் என்னவென்றால் மொழி தொடர்பில் கருத்துக்களை ஆணித்தரமாகவும் சிறப்பாகவும் முன்வைக்கும் இந்த மன்றத்தில் உள்ள தமிழ் அறிஞர்கள் பேராசிரியர்கள் (செல்வாவைத் தவிர) விக்கிப்பீடியாவில் பங்களிக்காததன் காரணம் என்ன?


குறிப்பாக மணி மு. மணிவண்ணன், இராம்கி ஐயா, நாக. இளங்கோவன், சி. ஜெயபரதன் போன்றோர் பங்களிக்காமையின் காரணம் என்ன?

iraamaki

unread,
Aug 18, 2011, 2:19:10 AM8/18/11
to tamil...@googlegroups.com
நண்பரே!
 
விக்கிப் பீடியாவிற் பங்களிக்கக் கூடாது என்றில்லை.  நேரடியாக இல்லாது சுற்றி வளைத்துப் பின்புலத்திற் பங்களித்திருக்கிறேன். . (விக்கிப் பீடியா/ விக்சனரி அன்பர்கள் என் மேல் இருக்கும் நேயத்தால் அவ்வப்பொழுது கேட்கும் கேள்விகளுக்கும் உதவிகளுக்கும் என்னால் இயன்றதைச் செய்திருக்கிறேன்.) 
 
இப்பொழுதெல்லாம் என்னுடைய ஆய்வு, படிப்பு, ஈடுபாடு இவற்றிலேயே என் நேரம் போய்விடுகிறது பல்வேறு கட்டுரைகள் என் வலைப்பதிவில் முடிவுறாது கிடக்கின்றன. நான் செய்யவேண்டும் என்று விருப்புற்று எண்ணியிருக்கும் புலனங்களும் மிகுந்து கிடக்கின்றன.   சிலம்பின் காலத்தைத் தொடர்ந்து மணிமேகலை காலம் என்ற தொடர் தொடப்படாமலே கிடக்கிறது. [கிட்டத்தட்ட 13, 14 ஆண்டுகள் இணையத்தில் வெறும் வறட்டு வாதங்களில் மாற்றார் நிகழ்ப்புகளுக்கு - agenda - ஆட்பட்டுப் போக்கிய நேரத்தை நான் இனித் திரும்பப் பெறமுடியாது.]  இனிமேலும் அப்படி அலைக்கழியக் கூடாது. செய்யும் வேலைகளைக் குறைத்துச் செய்தாலும், ஒழுங்குபடச் செய்ய வேண்டும், ஒருமுகமாய்ச் செய்ய வேண்டும் என்றே இப்பொழுதெல்லாம் முயலுகிறேன்.
 
எனக்கும் அகவை கூடிவருகிறதல்லவா?
 
அன்புடன்,
இராம.கி.    

Sent: Thursday, August 18, 2011 10:50 AM
Subject: Re: [தமிழ் மன்றம்] விக்கிப்பீடியா - சமசுகிரதம் - தொல்காப்பியம்

--

வேந்தன் அரசு

unread,
Aug 18, 2011, 6:10:40 AM8/18/11
to tamil...@googlegroups.com


18 ஆகஸ்ட், 2011 2:19 am அன்று, iraamaki <iraa...@bsnl.in> எழுதியது:

எனக்கும் அகவை கூடிவருகிறதல்லவா?
 
 
 
எனக்கு மட்டும் அந்த அருநெல்லி அகப்பட்டால் அது இராமகி ஐயாவுக்கே
 
 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Aug 18, 2011, 6:11:55 AM8/18/11
to tamil...@googlegroups.com
மாதவி போன்ற பரத்தையர் ஆடிவந்த நடனம் பரத்த நாட்டியம்


--

iraamaki

unread,
Aug 18, 2011, 6:43:39 AM8/18/11
to tamil...@googlegroups.com
கனிவிற்கு நன்றி வேந்தரே! 
 
அன்புடன்,
இராம.கி.
 
 

Sent: Thursday, August 18, 2011 3:40 PM
Subject: Re: [தமிழ் மன்றம்] விக்கிப்பீடியா - சமசுகிரதம் - தொல்காப்பியம்



Mayooranathan Ratnavelupillai

unread,
Aug 18, 2011, 11:17:55 AM8/18/11
to tamil...@googlegroups.com
//ஒரு தகவல் தொடர்பான போதிய அறிவு பெற்ற ஒருவர், ஒரு கட்டுரையைப் பார்த்து அதில் பிழை கண்டால் அதனை திருத்தலாம். ஆனால் ஒரு ஆய்வுக்காக தகவலை தேடும் ஒரு மாணவன், குறிப்பிட்ட ஒரு கட்டுரையின் தகவல்கள் சரியானதா, பிழையானதா என தெரியாத நிலையில் எவ்வாறு திருத்துவான்?
//
 
மொகம்மத்,
 
தகவல்கள் சரியானதா, பிழையானதா என தெரியாத நிலையில் இருப்பவர்களைத் திருத்தும்படி நான் சொல்லவில்லையே.
 
//விக்கிப் பீடியாவில் தொல்காப்பியம் சமற்கிருதத்திலிருந்து பல சொற்களைக் கையாண்டுள்ளது என்ற பொய்யைப் போட்டு வைத்துள்ளான்//
 
என்று கட்டுரையை எழுதியவர் எழுதியிருக்கிறார். அவ்வாறு பொய்யென்று தெரிந்த ஒருவர் அதைத் திருத்தி எழுதலாம் என்றுதான் சொன்னேன். நீங்கள் மேற்கோளாகக் காட்டியுள்ள,
 
 //"விக்கிப்பீடியாவில் பிழையாக எழுதி வைத்துள்ளார்கள்" என்று சொல்வதில் எவ்வித பயனும் இல்லை. பிழை என உணர்பவர்கள் அதைத் திருத்துவதற்கு எல்லா உரிமையும் கொண்டுள்ளனர். எனவே அவர்கள் அதை ஏன் திருத்தக்கூடாது?//
 
என்னும் எனது கூற்றில் "பிழையென உணர்பவர்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறேனே. விடயம் தெரிந்தவர்கள் கணடவுடன் திருத்தினால், விடயம் தெரியாதவர்கள் பார்க்கும்போது சரியான தகவல் கிடைக்கும்.
 
 
குறிப்பிட்ட ஆங்கில விக்கிப்பீடியாக் கட்டுரையில் மோசமாக எதுவும் எழுதியிருப்பதாகவும் தெரியவில்லை. இதுதான் முடிந்த முடிவு என்று கட்டுரை குறிப்பிடவில்லை. இரண்டு பக்கங்களிலிருந்தும் பலருக்கும் தெரிந்த ஆய்வாளர்களுடைய ஆய்வுகளை மேற்கோள் காட்டித்தான் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. விக்கிப்பீடியாக் கட்டுரைகள் பக்கச் சார்பின்றியே எழுதப்பட வேண்டும். ஒரு பக்கத்து நியாயங்களை மட்டும் எழுத முடியாது. குறித்த கட்டுரையில் ஒரு பகுதி ஆய்வாளர்களால் சரி என ஏற்றுக்கொள்ளப்படும் நமது பக்கத்து நியாயங்கள் தரப்படவில்லை என்று கருதுபவர்கள் அக் கருத்தையும் கட்டுரையில் சேர்க்கலாம். ஆனால், முடிந்த முடிவாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நிறுவப்பட்டாலேயொழிய "தொல்காப்பியம் சமற்கிருதத்திலிருந்து ஒரு சொல்லைக்கூடக் கையாளவில்லை" என்று எழுத முடியாது. "தொல்காப்பியம் சமசுக்கிருதத்தில் இருந்து கடன் வாங்கியது எனச் சிலர் கருதும் சொற்களில் பல தமிழ்ச் சொற்களே என வேறு சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்" எனப் பாவாணரையோ வேறு யாரையுமோ சான்று காட்டிக் குறிப்பிட முடியும்.
 
அன்புடன்,
 
இ. மயூரநாதன்
2011/8/18 Mohamed Haneef <mhan...@gmail.com>

--

Mohamed Haneef

unread,
Aug 19, 2011, 2:48:21 AM8/19/11
to tamil...@googlegroups.com
அன்புடன் இராமகி ஐயா,

 //விக்கிப் பீடியாவிற் பங்களிக்கக் கூடாது என்றில்லை.  நேரடியாக இல்லாது சுற்றி வளைத்துப் பின்புலத்திற் பங்களித்திருக்கிறேன். . (விக்கிப் பீடியா/ விக்சனரி அன்பர்கள் என் மேல் இருக்கும் நேயத்தால் அவ்வப்பொழுது கேட்கும் கேள்விகளுக்கும் உதவிகளுக்கும் என்னால் இயன்றதைச் செய்திருக்கிறேன்.) //

ஆம் ஐயா, நான் அவற்றை அறிவேன்.

விக்கிப்பீடியா பற்றி
விக்கிப்பீடியா என்பது ஒரு மூன்றாவது தரவுத்தளம் என்பதனையும் அறிவேன். அங்கே எழுதப்படும் ஆக்கங்கள், ஏற்கெனவே பிறதளங்களிலோ, நூல்களிலோ, ஆவணங்களிலே உள்ளவற்றை மேற்கோள் காட்டி, சான்றுகள் சுட்டி தொகுத்துவைக்கும் இடம் மட்டும் தான். அந்தவகையில் உங்கள் கடுமையான ஆய்வுகளின் பின்னர் நீங்கள் வழங்கும் அரிய தகவல்களை விக்கிப்பீடியாவில் எழுதினாலும், அங்கே அது "ஆய்வுகட்டுரைகள் பதியும் இடமல்ல" என்று கேள்விகள் எழலாம். அழிக்கவும் படலாம். 

எனவே உங்கள் அரும்பணியும் ஆய்வுகளின் அடிப்படையில் வழங்கும் தகவல்கள் வெளியில் இருப்பது தான் நல்லது. (இது எனது தனிப்பட்ட கருத்து) அதேவேளை தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களது பல ஆக்கங்களை மேற்கோள் காட்டியும் வெளியிணைப்பு வழங்கியும் வருவதை நான் பார்த்தேன். நிச்சயமாக இவை தமிழ் தொடர்பான ஆக்கங்களுக்கு வலு சேர்க்கும். வகையில் உள்ளது. 

மேலும் உங்களது ஆக்கங்களும் ஆய்வுகளும் நாளைய தலைமுறையினரும் மேற்கோளாக கொள்ளூம் வகையில் உங்கள் பணி தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பும் ஆகும்.

மேலும் விக்கிப்பீடியா பற்றி

அங்கே ஒரு கருப்பு யாணையின் நிறத்தை கருப்பு என்று தொகுத்துவைக்கும் போது, யாராவது அதனை பச்சை நிறம் என குறிப்பிட்டு ஒரு ஆக்கம் எழுதியிருந்தால், அதனையும் அங்கே மெற்கோளாக காட்டி (இப்படியான ஒரு கருத்தும் இருக்கிறது என) தொகுத்துவைக்கலாம்/ப்பார்கள். 

அங்கே யாணையின் நிறம் கருப்பா, பச்சையா என்பது முக்கியமல்ல. மேற்கோள்களுடன் தொகுத்து வைத்தலே முக்கியமாகிறது. அந்தவகையில் தமிழ் மொழி தொடர்பிலோ, சமசுகிரதம் தொடர்பிலோ என்ன கருத்துக்கள் உள்ளனவோ அவற்றையெல்லாம் தொகுத்து வைக்கப்பட்டுவிடும். 

தொல்காப்பியம் கட்டுரையிலும் அதுதான் நடந்துள்ளது. 

இங்கே இன்னொன்றும் உள்ளது. விக்கிப்பீடியா என்னதான் கட்டற்ற கொள்கைகளை கொண்டிருந்தப் போதும் தொகுத்தலின் போது, சக பயனர்களின் ஒத்திசைவுக்கு அல்லது எதிர்வுக்கு அமையவே தொகுத்தல் இடம்பெறுகின்றது.

அதிலும் ஒரே கட்டுரை வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு விதமாக தொகுத்து வைக்கப்படுகின்றன. (இங்கே எல்லா விக்கிப்பீடியாவும் நடுநிலை கொளகையை பின்பற்றுவதாக கொள்ளவதற்கில்லை) 

என்னால் சில ஆக்கங்களை சுட்டிக்காட்ட முடியும். 
//எனக்கும் அகவை கூடிவருகிறதல்லவா?//

இது வருத்தம் அளிக்கும் பதில் ஐயா. ஒரு மொழிக்கான அரும்பணி செய்வோரும், அறிஞர்களும் அம்மொழியினரின் சொத்து ஐயா! உங்கள் பணி மெம்மேலும் தொடரவேண்டும் என இறைவனை பிராத்திக்கின்றேன். 
 
அன்புடன்,
மொஹமட் ஹனீஃப்

Mohamed Haneef

unread,
Aug 19, 2011, 2:55:20 AM8/19/11
to tamil...@googlegroups.com
அன்புடன் மயூரநாதன்
 
//தகவல்கள் சரியானதா, பிழையானதா என தெரியாத நிலையில் இருப்பவர்களைத் திருத்தும்படி நான் சொல்லவில்லையே.//

  திருத்தும் படி நீங்கள் கூறவில்லை தான். ஆனால் திருத்தும் உரிமை இருப்பது பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த உரிமை அல்லது எவரும் தொகுக்கலாம எனும் கொள்கை இருப்பதனால் தான் எண்ணற்ற கட்டுரைகள் அரையும் குறையுமாக கிடப்பதற்கு காரணம். யாராவது தொகுப்பார்கள் என, தமக்கு தெரியாத விடயங்களையும் ஏதோ தெரிந்த வகையில் அல்லது தான் நினைக்கும் வகையில் சிலவரிகள் மட்டும் இட்டு வகைக்க காரணமாகின்றது என கொள்ளலாமா? இதில் நன்மை இருப்பது போலவே தீமையும் உள்ளதே!

Mayooranathan Ratnavelupillai

unread,
Aug 19, 2011, 4:21:27 AM8/19/11
to tamil...@googlegroups.com

//இதில் நன்மை இருப்பது போலவே தீமையும் உள்ளதே!//

உண்மை, உலகில் உள்ள மற்ற எல்லாவற்றிலும் இருப்பதைப் போலவே விக்கிப்பீடியாவிலும் நன்மை, தீமை இரண்டும் கலந்தே உள்ளன. ஆனால் உலக அறிவுச் செல்வங்களைத் தொகுப்பதில் இதுவரை காலமும் இல்லாதிருந்த பல வாய்ப்புக்ககள் விக்கிப்பீடியாத் திட்டத்தின் மூலம் கிடைத்துள்ளன. இவற்றை எவ்வாறு சிறப்பாகப் பயனடுத்தி நமது சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது என்பது நம்மைப் பொறுத்தது. ஆங்கிலேயர்களை விடத் தமிழருக்கு விக்கிப்பீடியாத் திட்டம் கூடிய முக்கியத்துவம் கொண்டது என்பது எனது கருத்து. கூடிய அளவில் பல்துறை அறிவு கொண்டவர்கள் பங்களிக்கும் போது தான் விக்கிப்பீடியாவில் நீங்கள் சுட்டிக்காட்டிய குறைபாடுகளைத் தவிர்த்துக் கூடிய நன்மைகளைப் பெறமுடியும். ஆனால், நம்மிற்பலர் விக்கிப்பீடியாவின் ஆற்றலையும் அதன் நடைமுறைகளையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. பத்திரிகைகள், சஞ்சிகைகள், வலைப்பூக்கள், போன்றவற்றில் வரும் கட்டுரைகளில் இடம்பெறுவதுபோல் அல்லது அச்சில் வரும் நூல்களில் இருப்பதுபோல் விக்கிப்பீடியாவின் உள்ளடக்கங்கள் ஒருவரதோ அல்லது குறிப்பிட்ட சிலரதோ அல்ல. அது ஒருவரையொருவர் அறிந்து கொள்ளாத பலருடைய கூட்டு முயற்சியாக இருக்கலாம். விக்கிப்பீடியாக் கட்டுரைகளை வாசிக்கும் விடயம் அறிந்த ஒவ்வொருவரும் தானும் அக்கட்டுரையின் ஆசிரியர்களுள் ஒருவர் என்று எண்ணிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அதன் குறைபாடுகளுக்கு என்ன செய்யவேண்டும் என்பதும், யாரைக் குற்றம் சொல்லலாம் என்பதும் விளங்கும்.

அன்புடன்

இ. மயூரநாதன்

2011/8/19 Mohamed Haneef <mhan...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages