பிரதமருக்கு கொடுக்கும் ஒரு நினைவு பரிசு !
அதுவும் எகிப்தில் சிகைகொற்றான் எனும் தமிழ் பெயர் கிடைச்ச அப்புறம் கொடுக்கும் ஒரு நினைவு பரிசு !
இந்த ibis பறவை எகிப்தில் Thoth எனும் மாயாஜாலம், கல்வி இத்யாதிகளுக்கான கடவுள் !
மரணம்
& மறுபிறப்புக்கான கடவுளான Osiris யின் மகன் Horus க்கும் , Seth
எனும் Osiris தம்பிக்கும் நடக்கும் வாரிசு போரில் Horus யின் கண்களின்
பார்வைதிறனை Seth பறிச்சுடுவாரு, அதை Hathor எனும் கடவுளின் அருளால் அவளது
வாகனாமான கலைமானின் பாலினால் Thoth மீண்டும் கண் பார்வையினை கொண்டு
வந்துடுவாரு.
பானைஓட்டை
சிற்பத்துல் கவனிச்சா தெரியும், கலைமானுக்கு கீழே தலையனையால் தலை தூக்கி
படுக்க வைத்தபடி ஒரு உருவம் (Horus) இருக்கும் , அவர்களுக்கு அருகே ஹதோர்
தெய்வம் ! அருகே மூங்கிலில் Thoth எனும் கடவுளின் உருவமான Ibis பறவை.
இந்த
கதை Osiris Myth என Pyramid , அரசர்கள் , செல்வந்தர்களை புதைத்த இடங்களில்
புத்தகமாக , கல்வெட்டுக்களாக இருக்கு. எகிப்தியர்கள் மரணத்திற்ககு பின்
இந்த கதைகளின் படி அவர்களது வாழ்வு , உயிர் எல்லாம் எடைபோடப்படும் ன்னு
நம்பினாங்க. அதனால தான் மரணத்தில் இந்த கதைகளை கூடயே வைச்சுக்கிட்டாங்க,
ஆவியா வந்து படிச்சு தெளிஞ்சுக்கலாம் ன்னு.
அதாவது சிகைகொற்றன் இங்க இருந்து எகிப்து போனது போலவே , எகிப்திய கதைகள் நம்மூர் முதுமக்கள் தாழி வரை வந்து இருக்கு.
நாம இப்ப எகிப்து போய் தொடர்புகளை கண்டுபிடிக்க வேண்டாம் ! இருப்பதையாச்சும் சரியாக கையாள வேண்டாமா !?
இப்படியா , அந்த சிற்பத்தின் அடிப்படை பொருளையே மாற்றும்படியா தப்பா ஒரு நினைவு பரிசு கொடுக்குறது !?