'கம்பனின் மறுபக்கம்' - புலவர் ஆ.பழநி - நூல் அறிமுகம் சுப.வீ

110 views
Skip to first unread message

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 5, 2017, 1:08:07 AM11/5/17
to mintamil, தமிழ் மன்றம், vallamai, thamizhvaasal, N. Ganesan, தேமொழி, Hari Krishnan, Thenee MK, iraamaki
'கம்பனின் மறுபக்கம்' நூல் அறிமுக விழா
-------------------------------------
இன்று(4.11.2017) காரைக்குடி வி.கேன். மண்டபத்தில் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் பாவலர் மாமணி ஆ.பழநி அவர்கள் எழுதியுள்ள 'கம்பனின் மறுபக்கம்' நூல் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது. திரு சாமி திராவிடமணி தலைமை வகித்தார். நூலை அறிமுகம் செய்துவைத்துப் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஒரு மணி நேரம் ஆய்வுரை நல்கினார். நூலில் மூன்று கட்டுரைகள் கம்பனின் மறுபக்கத்தைச் சுட்டுவன. 

1.கம்பராமாயாணம் வேள்வியை ஆதரித்தோருக்கும் மறுத்தோருக்குமான கதை. விசுவாமித்திரன் வேள்வியைக் காக்கவே இராமனை வேண்டிப் பெறுகிறான். பிள்ளையைப் பெற வேள்வி செய்யச் சொல்கிறது இராமாயணம். 
2.கம்பன் வைணவ ஏற்றம் சொல்லவே காப்பியம் படைக்கிறான். சிவன் பல இடங்களில் திருமாலின் அடிபணிபவனாகக் காட்டப்படுகிறான். வேள்வியை அன்று மறுத்தவை சமண, பௌத்த நெறிகளே. அவற்றைச் சாட நினைத்த கம்பன் அதற்குப் பதிலாக அன்றைக்கு வலுப்பெற்றிருந்த சைவத்தைச் சாடுகிறான். அடுத்தவன் மனைவியரைக் கவர்ந்த இராவணைனையும், வாலியையும் சிவபக்தர்களாகக் காட்டிச் சிவநெறியின் பெருமை குறைக்கப்படுகிறது. வேள்வியை ஆதரித்த சைவத்தைச் சார்ந்தவராகிய
இராவணாதியர் வேள்விக்குப் பங்கம் விளைப்பது சிறந்த தீயாள் என்ற கம்பன் உவமை போல அழகிய முரண்.

3.தங்கையின் மூக்கையும் முலையையும் அரிந்தவர்கள் மீது இராவணனுக்கு வந்த சீற்றம் சரியே. ஆனால் செயல்பாடு விமர்சனத்திற்குரியது.
4.வறுமையில்லை கோசலத்தில் என்று பாடிய கம்பன் தயரதன் இரப்பார் கடலை ஈந்தே கடந்தான் என்று அடுத்த படலத்தில் அங்கிருந்த வறுமைக் கடலைக் கூறுகிறான். சீற்றமில்லை என்ற கம்பன் தான் சீற்றத்தோடு வந்த கூனியையும், இலக்குவனின் பெருஞ்சீற்றத்தையும் பகர்கிறான். இது நினைப்புக்கும் நிலைக்குமான மறுபக்கம்.

5.அடுத்து சிலப்பதிகாரம்  குறித்து நான்கு கட்டுரைகள். சிலப்பதிகாரம் சமணநூல் இல்லை. அது ஆசீவகம் சார்ந்தது. கவுந்தி அடிகளுடன் சென்ற கோவலன், கண்ணகி மாலவன், பௌத்த, சமண வழிபாட்டு இடங்களில் வழிபடவில்லை. ஆசிவக இடத்தை வலம் வந்து வழிபடுகிறார்கள். வினையிலிருந்து நல்ல காரியம் செய்து விடுபடலாம் என்பதனை மறுத்து விதியை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற ஆசீவக்கொள்கையை சிலம்பு வலியுறுத்துகிறது என்று எடுத்துக்காட்டுக் கூறினார்.

6. அடுத்த கட்டுரை திருக்குறள் ஆய்வாக மரண தண்டனையை திருக்குறள் ஆதரிக்கவில்லை என்பதாகும். (குறள் 550) களையை அப்புறப்படுத்தவே வள்ளுவர் கூறியுள்ளார். அவற்றைப் பிடுங்கி வரப்புக்களிலும் வேறு இடங்களிலும் உழவர்கள் வீசிவிடுவார்கள. அங்கு அவை வளர்வதும் உண்டு. (இதனைக் கேட்டதும் நண்பர் நா.கணேசனார் இதுபற்றி நிரம்பபப எழுதியது நினைவுக்கு வந்தது. முன்பே வெளிவந்துள்ள இக்கட்டுரை அவருக்கு இன்சிபிரேசனோ என்ற எண்ணம் எழுந்தது)

மேலே எழுதியுள்ளவை சுப.வீ ஆய்வுரையிலிருந்து நான் பெற்றுக்கொண்டவை. 

7.11.2017ல் 87 அகவையைக் கடக்கிற ஐயா ஆ.பழநி அவர்கள் மிகத் தகுந்த ஏற்புரை நல்கினார். என்.சி.பி.எச் வெளியிட்டுள்ள ரூ140 விலையுள்ள புத்தகம் ரூ100க்கு வழங்கபட்டது. முன்னதாக எழுத்தாளர் திரு கைவல்யம் அறிவழகன் விருது பெற்றார்.
நிறைவான விழாவில் பெருந்திரளாகப் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

எனக்குச் சில ஐயங்கள் எழுந்தன. ஐயா பழநி அவர்களைக் காணும்போது கேட்கவேண்டுமென்று எண்ணியுள்ளேன்.

நண்பர்கள் தங்களுடைய
எண்ணங்களைப் பதிவுசெய்ய வேண்டுகிறேன்.
வாழ்த்துக்களுடன்,
சொ.வினைதீர்த்தான்.
IMG_20171104_204849.jpg

வேந்தன் அரசு

unread,
Nov 5, 2017, 9:09:07 AM11/5/17
to தமிழ் மன்றம், mintamil, vallamai, thamizhvaasal, N. Ganesan, தேமொழி, Hari Krishnan, Thenee MK, iraamaki
<
இக்கட்டுரை அவருக்கு இன்சிபிரேசனோ என்ற எண்ணம் எழுந்தது>

என் புந்தியில் தோன்றியதுபோல் கணேசருக்கும் தோன்றியிருக்கலாம்.

4 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 10:08 அன்று, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 7, 2017, 12:11:46 AM11/7/17
to mintamil, vallamai, தமிழ் மன்றம்
கருத்துரைத்த சான்றோருக்கு நன்றி. புலவர் மாமணி ஆ.பழநி அவர்கள் முன்னுரையில் இந்நூல்  கம்பனின் புகழைக் குறைக்க எழுந்த நூல் இல்லை. அதனை யாராலும் குறைக்க முடியாது. இவை விமர்சனத்திற்குரிய சில ஆய்வுக் கட்டுரைகளே என்று முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதாகப் படித்தேன். அவருடைய முந்தைய கம்பன் காட்டும் போரற்ற உலம் நூல் மிகச் சிறந்த திறனாய்வு நூல் என்று போற்றப்படுகிறது. அவருடைய நூல்கள் இணையத்தில் தரவிறக்கத்திற்குக் கிடைக்கிறது.

அவரைக் குறித்த செய்திகள்:

புலவர். ஆ.பழநி – ஓர் அறிமுகம்
ஐயா திரு. ஆ.பழநி அவர்கள் 7.11.1931 அன்று ஆண்டியப்பன் – உமையாள் தம்பதியினருக்கு ஒன்பதாவது மகனாக காரைக்குடியில் பிறந்தார். ஐந்தாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்ட இவர், வட்டிக்கடை, துணிக்கடை, பெட்ரோல் விற்பனை நிலையம், பல்பொருள் அங்காடி எனப் பல இடங்களில் வேலை செய்து இறுதியாக குடும்பத்தொழிலான வேளாண்மையில் இறங்கினார். வட்டிக்கடை முதல் வயல்வெளித் தொழில் வரை ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் கண்டது கற்கும் தொழிலையும், கற்றவற்றைச் சிந்திக்கும் இயல்பையும் கை விடாமல் பற்றிக் கொண்டிருந்தார். 1950களில் தமிழர் உள்ளங்களில் விழுதை இறக்கிய திராவிட இயக்கம், கற்பதும் சிந்திப்பதும் இரு கண்ணெனக் கொண்ட ஐயா அவர்களை தன்வயப் படுத்திக்கொண்டது. படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது; சிந்தனையைக் கூர்மைப்படுத்திச் செழுமைப்படுத்தியது. திராவிட நாடு, போர் வாள், திராவிடன் போன்ற ஏடுகளை வேதப்புத்தகங்களாகவே கருதிப் படித்த ஐயா அவர்களை மீட்ருவாக்கம் செய்ததில் இவ்வேடுகள் கணிசமான பங்காற்றின. இதன் விளைவு தமிழ் மீது, தமிழ் இனத்தின் மீது, தமிழ் இலக்கியங்களின் மீது ஆராக் காதலாக உருமாறியது. தமிழ் இலக்கியங்களைக் கற்கும் நோக்கில் மேலைச்சிவபுரி, கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி இறுதியாண்டில் (1959) வால்குடல் அழற்சிநோய், வால்குடல் நீக்கப்பட்டவுடன் நுரையீரலில் கட்டி, அதன் தொடர்ச்சியாக ஒரு பக்க நுரையீரல் இழப்பு எனப் பல இன்னல்களைக் கடந்து, சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவையைப் போல, 1962ல் புலவர் பட்டம் பெற்றார். 1964ஆம் ஆண்டு முதல் காரைக்குடி மீ.சு. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.1997ல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் பணி புரிந்துள்ளார். நாடகம், உரை, திறன்நூல், காப்பியம், ஒப்பீட்டு நூல் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கிய ஐயா அவர்கள் பல்வேறு பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ளார்.

ஐயா திரு. ஆ.பழநி அவர்களின் நூல்கள்:

  1. அனிச்ச அடி (1973)– நாடகம்
  2. அன்னிமகள் – நாடகம்
  3. பண்டித மணியின் நாடகத்தமிழ் (1983) – திறன்நூல்
  4. சாலிமைந்தன் (1985) – காப்பியம்
  5. பாரதிதாசன் பாரதிக்கு தாசனா? (1989) – ஒப்பீட்டு நூல்
  6. கானல் வரியா ? கண்ணீர் வரியா ? (1990) – திறன்நூல்
  7. இளங்கோவடிகளின் காப்பியக் கலைத்திறன் (1991)
  8. கோவலன் வீழ்ச்சியும், இளங்கோ மாட்சியும் (1991)
  9. சிலம்பில் சில மறைப்புகள் (1993)
  10. பாண்டியன் பரிசில் வரலாற்றுப் பார்வையும் குறியீட்டுச் செய்தியும் (1994)
  11. கம்பன் காட்டும் போரற்ற உலகம் (2004) – திறன்நூல்
  12. காரல் மார்க்சு காப்பியம் (2005)
  13. சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு (2007)
  14. திருக்குறள் உரைகளும் சில குறைகளும் (2009)

ஐயா திரு. ஆ.பழநி அவர்கள் பெற்ற பரிசுகள் மற்றும் விருதுகள்:

  1. 1968 சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் திருவள்ளுவர் ஈராயிரமாவது ஆண்டினை ஒட்டி நடத்திய திருக்குறள் புத்துரைப் போட்டியில் பரிசு
  2. 1973 சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திய நாடகப் போட்டியில் முதல் பரிசு (அனிச்ச அடி நாடகம்)
  3. தமிழகத் தமிழாசிரியர் கழகம் நடத்திய செய்யுள் நாடகப் போட்டியில் மூன்றாம் பரிசு (அன்னிமகள் நாடகம்)
  4. 1974 நெல்லை தனித்தமிழ் இயக்கக் கழகத்தின் ‘பாவலர் மணி’ விருது
  5. 1980 தவத்திரு குன்றக்குடி அடிகளார் வழங்கிய ‘கவிஞர்கோ’ பட்டம்
  6. 1991 தமிழக அரசு பாவேந்தர் நூற்றாண்டு விழாவில் ‘பாவேந்தர் விருது’
  7. 1997 கோவில்பட்டித் திருவள்ளுவர் கழகம் வழங்கிய ‘திருவள்ளுவர் விருது’
  8. 1999 காரைக்குடி சுழற்குழு வழங்கிய ‘புலவர் மாமணி’ விருது
  9. 2002 பாரதிதாசன் தமிழ்ப்பேரவையின் ‘தமிழ்நெறிச் செம்மல்’ விருது
  10. 2007 மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் ‘தமிழ்ப்பேரவைச் செம்மல்’ பட்டம், பொற்பதக்கம், மற்றும் பொற்கிழி
தங்கள் எழுதும் கருத்துக்களை அவரிடம் கூறி அவருடைய பதிலை எழுத முயல்கிறேன்.
நன்றி

அன்புடன்

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 7, 2017, 12:15:28 PM11/7/17
to தமிழ் மன்றம்
புலவர் மாமணி ஆ.பழநி அவர்களின் பெரும்பாலான நூல்களும், மரணதண்டனை உட்படக் கட்டுரைகளும் கீழ்க்கண்ட தளத்தில் கிடைக்கின்றன.

iraamaki

unread,
Nov 8, 2017, 12:35:39 AM11/8/17
to tamil...@googlegroups.com
 
 
From: iraamaki
Sent: Wednesday, November 08, 2017 4:53 AM
Subject: Re: [தமிழ் மன்றம்] Re: [வல்லமை] Re: [MinTamil] Re: 'கம்பனின் மறுபக்கம்' - புலவர் ஆ.பழநி - நூல் அறிமுகம் சுப.வீ
 
நீங்கள் அனுப்பிய பட்டியல் வரிசையில் 6 –இலிருந்து 9 வரையுள்ள நாலு நுல்கள் “சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு” என்ற பெயரில் ஒருங்குசேர்த்து தமிழினிப் பதிப்பகத்தால் 2007 இல் வெளியிடப்பெற்றன. நாலும் அருமையான நூல்கள்.
 
அன்புடன்,
இராம.கி. 
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Oru Arizonan

unread,
Nov 11, 2017, 4:27:06 PM11/11/17
to vallamai, தமிழ் மன்றம், Hari Krishnan


2017-11-06 22:10 GMT-07:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
// திரு அரிசோனன். நூலில் குறிப்பிட்டிருந்த சிவனைக் குறித்த இரண்டு இடங்களில் உள்ள கம்பனின் பாடல்களைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
1.திருமால் அவதாரம் எடுக்க உறுதியெடுக்கும்போது சிவன் திருமால் அடிபணிதல்.
2.யுத்தம் முடிந்து இறுதியில் தயரதனை அழைத்துவர ஒரு பணியாளைப் போல சிவனை ஏவுதல். 

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்//

நண்பர் வினைதீர்த்தான் அவர்கள் கம்பராமாயண்த்தில் இரண்டு பகுதிகளை மேற்கோள் காட்டி பேச்சாளர் குறிப்பிட்டார் என்று எழுதியிருந்தார்.

முதல் விளக்கம் பாலகாண்டத்தில், திரு அவதாரப்படலத்தில், தயரதனின் அரசகுரு வசிட்டர் தன் அகக்கண்ணில் எண்ணிப்பார்ப்பதைக் குறிப்பிடுவது.

கடுதொழில் அரக்கரால் தொலைந்து வானுளோர்
கடுவமர் களனடி கலந்து கூறலும்
படுபொருள் உணர்ந்த அப்பரமன் யானினி
அடுகிலேனென மறுத்து அவரொடு ஏகினான்.  --1. 187

பொழிப்புரை:
"கொடுமையான செயலைத் தொழிலாகக்கொண்டு துன்புறுத்தும் அர்க்காரால் துன்புற்று சுவர்க்கத்தில் வசிக்கும் தேவர்கள் கொடிய் விஷம் அமர்ந்த[நீலகண்டன்]வனைச் சந்தித்து [இதுபற்றி] கூறவும், அடையப்போகும் பொருளை [தான் இராவணனுக்குக் கொடுத்த வரத்தால் விளையப்போவதை] உணர்ந்த அப்பரம்பொருள் [ப்ரமசிவன்], நான் [வரம் கொடுத்தமையால்] இனி [இராவணனை] அழிக்கமாட்டேன் என்று மறுத்து தன்னைச் சந்தித்து முறையிட்டவருடன் சென்றான். 

இங்கு கம்பன் எங்கு சிவபெருமானின் சக்திகுறைவு என்றோ, இராவணனி அழிக்கும்தன்மை தனக்கு இல்லை என்றோ சொல்கிறார்?  மானிடரைத்தவிர மற்றவரால் அழிக்கவியாதென்று இராவணனுக்குத் தானே வரம்கொடுத்துவிட்டு, அவ்வரத்தைமீறி, வரம்பெற்ற அரக்கனை அழிக்கமாட்டேன் என்றுதான் கூறுகிறார்.  மேலும், பிறப்பிலியான தான் மானிடனாக அவதரிக்கவும் மாட்டேன் என்றுதான் மறுக்கிறார்.  திருக்கயிலையைத் தனது தோளினால் அசைத்த இராவணனைத் தன் கால் பெருவிரலால் அடக்கிய சிவபெருமானுக்கு அவனை அழிக்கும் திறன் இல்லை என்று கம்பர் எப்படி எழுதுவார்? எனவே, "படுபொருள் உணர்ந்த" என்று இரு சொறகளின்மூலமும், அடுத்துவரும் "யானினி அடுகிலேன்" என்ற மற்றிரு சொற்களாலும் விளக்குகிறார்.

இருப்பினும் அரக்கன் அழிக்கப்படவேண்டியவன் என உணர்ந்ததால் இதைச் செய்யவல்ல, பல அவதாரங்கள் எடுக்கும்/எடுத்த திருமாலை மற்றவர்களுடன் அணுகுகிறார்.

இப்பொழுது திருமால்தான் அனைத்து வானவருக்கும் உதவவேண்டும்.  எனவே, தான் செய்ய ம்றுத்ததை, செய்யக்கூடாததை இன்னொருவர் செய்யவேண்டுமென்றால், அவர் அடியைப் பணியவேண்டும் என்பதே முறைமை. சான்றாக, வயது முதிர்ந்தவரும், கோவிலுக்குச் சென்றால், அங்கிருக்கும் அர்ச்சகரின் அடிபணிவதையும், தனக்கு வயதில் சிறிய சிவ/வைணவப் பெரியோர்களின் அடிபணிவதையும் நாம் பார்க்கிறோம்.  இப்பழக்கம் எங்கும் உண்டு.  இங்கிலாந்து அரசியைச் சந்த்திதால் அவருக்குமுன் மண்டியிட்டுத்தான் ஆகவேண்டும்.

இதைத்தான்,

எழுந்தனர் கறைமிடற்று இறையும் தாமரைச்
செழுந்தவிசு உவந்த அத்தேவும் சென்றெதிர்
விழுந்தனர் அடிமிசை விண்ணுளோ ரொடும்
தொழுந்தொறும் தொழுந்தொறும் கனி துளங்குவார். -- 1. 192

பொழிப்புரை:

[திருமால் தோன்றியதும்] கழுத்தில் [கருநீலக்]கறையுள்ள இறைவனும்[சிவன்], தாமரையை இருக்கையாக உடைய அத்தேவனும்[பிரம்மா], மற்ற விண்ணவர்களும் [திருமால்முன்] சென்று, [அவனுக்கு]  கால்முன்பு எதிரில் விழுந்தனர் [வணங்கினர்].  அப்படித் தொழும்போது மனக்களிப்புடன் மீண்டும் தொழுதெழுதனர்.

இங்கு சிவபெருமானின் ஒரு சிறப்பம்சத்தை நாம் நோக்கவேண்டும்.  பிரணவ மந்திரத்தின் பொருளறியாப் பிரம்மாவைச் சிறையிலடைத்த முருகனை, உனக்குப் பிரணவத்தின் பொருள்தெரியுமா, அதை எனக்குச் சொல் என்று சிவபெருமான் கேட்கவும், "நான் உங்களுக்கு அதைச் சொல்லவேண்டும் என்றால், நான் குருவாகிறேன், நீங்கள் எனக்குச் சீடன் ஆகிறீர்.  எனவே, சீடனின் பணிவுடன் அதைக் கேட்கவிரும்பினால் அதைச் சொல்வேன்," என்று மறுமொழி பகர்ந்தான் மயில்வாகனன்.

உடனே, தான் அவனது தந்தை என்ற எண்ணத்தை அகற்றி, மகனுக்கே சீடனாக அமர்ந்தான் பிரணவமாகிய, தானென்ற அகந்தையில்லா அப்பெருமான்.  ஆகையால் சிவன் திருமாலைப் பணிந்தது, உலகநன்மைக்காகவும், தான் என்ற அகந்தைகொள்வோர் இராவணனைப்போல் அழிவது நிச்சய்ம் என்பதை உலகுக்கு உணர்த்தவே என்பதையும் சொல்லாமல் சொல்லிச் சென்றிருக்கிறான் கம்பநாட்டான்.

அத்துடன் நிற்காமல் அனுமானாக இராவணனழிவுக்கு உதவும் அரும்பெரும் குரங்காகவும் தோன்ற வாக்கும் அளித்தான் என்கிறார் கம்பர்.

 சைவ-வைணவ ஒற்றுமைக்கான ஒரு மேடையாகத் தனது இராமகாதையைக் கம்பன் பய்ன்படுத்தினான் என்பதை விளக்கி அடுத்த கேள்விக்கான விளக்கத்தை ஓரிரு நாள்களில் அளிக்கிறேன். 

மறுமொழி, எதிர்மொழிகளையும் எதிர்நோக்குகிறேன்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 11, 2017, 11:50:16 PM11/11/17
to தமிழ் மன்றம், vallamai, Hari Krishnan
நன்று திரு அரிசோனன்
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
--
Reply all
Reply to author
Forward
0 new messages