கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 57 : தமிழினமும் குரங்கினமும்

3 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jul 10, 2024, 5:57:05 PM (11 days ago) Jul 10
to thiru thoazhamai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Dr. Ku.Muthukumar, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, limra...@gmail.com, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, rajendran krishnan, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, Batchaa Thiruchi, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, H...@ammkitwing.in, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan s, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 57 : தமிழினமும் குரங்கினமும்

 


ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்      11 July 2024      கரமுதல


(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 56 : மலையுறையடிகள் வாழ்த்திய காதை-தொடர்ச்சி)

பூங்கொடி
மலையுறையடிகள் வாழ்த்திய காதை
தமிழினமும் குரங்கினமும்

 தமிழிற் பற்றுதல் தவறுவோர் தம்மையும்

தமிழினம் என்றே சாற்றுதல் கண்டோம்;
தாய்க்குரங் கொருகிளை தாவுங் காலைத்
தாய்மடி பற்றுதல் தவறுமேல் குட்டியைக் 75
குரக்கினம் தம்மொடு கொள்ளா தொழிக்கும்;
மரக்கிளை வாழும் மந்தியின் மானம்
நமக்கிலை அந்தோ! நாமோ மாந்தர்!

மானம் பரவுதற் கானவை இயற்றுக;

தாய்மையும் பொதுப் பணியும்

 பிணியுறு குழவியின் பெருந்துயர் கண்டு,   80
 தணிவறு காதல் தாய்மனம் உருகிப்

பிணியற மருந்துகள் பெட்புடன் ஈய,
அறியாக் குழவி அலறுதல் போல,
அறியா மைப்பிணி அகற்றுதல் வேண்டிப்
பெரியோர் நல்லுரை பேசுதல் கேட்டுச் 85
சிறியோர் மருளுவர் சீறுவர்; அவர்தமைப்
பொதுப்பணி புரிவோர் ஒதுக்குதல் இன்றித்
தாய்மைப் பண்பே தாங்குதல் வேண்டும்;
சேய்நலங் கருதிய தாய்,மருந் துணல்போல்
உலகம் நலம்பெற உறுதுயர் வரினும் 90
விலகா ததனை விழைந்திடல் வேண்டும்;


காணாப் புதுமை

 ஆய்பொற் றொடியே, அறிகதில் அம்ம!

தகுமிசை யரங்கில் தாய்மொழி விடுத்துப்
புகுமொழி இசைத்திடும் புன்மையை உலகில்

யாண்டுங் காண்கிலை ஈண்டுக் காண்குவை; 95

------------------------------------------------------- 
குரக்கினம் - குரங்கினம், குழவி - குழந்தை, தணிவறு - நீங்காத.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மீண்டுந் தமிழிசை வேண்டும் எனினோ
மொழிவெறுப் புணர்ச்சி என்றதை மொழிகுவர்;
பழுதுறு மதியர் பான்மையஃ தன்றோ?
அகப்பகை தமிழை அழிப்பதைக் காணுதி!
செகுத்ததை ஒழித்துச் செந்தமிழ் பேணுதி! 100

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages