எனது நூல் சீதாயணம் நாடகம்

73 views
Skip to first unread message

சி. ஜெயபாரதன்

unread,
Feb 9, 2016, 9:05:17 PM2/9/16
to tamilmantram, N D Logasundaram, mintamil, vallamai

சீதாயணம் (முழு நாடகம்)

Posted on January 16, 2016

https://jayabarathan.wordpress.com/seethayanam/

​ ​
[முழுநாடகம்]

அன்புள்ள நண்பர்களே,

“சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், சீதா, இராவணன், அனுமான், வாலி, சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாபச் சம்பவம் இது.

அன்புடன்,
ஜெயபாரதன், கனடா

+++++++++++++


~ சீதாயணம் ~

(ஓரங்க நாடகம்)

சி. ஜெயபாரதன், கனடா


முகவுரை: வாசகர்களே! இதை ஒரு கற்பனை நாடகமெனக் கருத வேண்டாம். இராமகதையில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது. நாடகத் தொடுப்புக்காக நிகழ்ச்சிகள் முன்னும் பின்னும் மாற்றப்பட்டு வசனங்கள் புதியதாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன. மனிதர் நெஞ்சைக் கீறும் சீதையின் இறுதிக் காலப் பேரவலத்தைக் கூறுகிறது எனது சீதாயணம். இராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால், பலரால், பலமுறை மாற்றப்பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க் கதையாய் மங்கிப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச்செருகல் நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் [Corrupted Manuscript] என்று அரசியல் ஆன்மீக மேதை இராஜ கோபாலாச் சாரியார் கூறுகிறார். வால்மீகி இராமாயணத்தை ஒன்பதாம் நூற்றாண்டிலே இந்திய மொழிகளில் முதன்முதலாகத் தமிழில் எழுதிப் பெருமை தந்தவர் கவிச்சக்ரவர்த்தி கம்பன்.

கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று மாற்றியுள்ளதாக இராஜாஜி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் தன் நூலில் இராஜாஜி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன் இராமனின் அவதாரப் பணி முடிந்துவிட்டது என்று சொல்கிறார். அயோத்திய புரியில் பட்டம் சூடிய இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுகிறார். சீதா பெற்ற துயர்களைப் போல இன்றும் நம் நாட்டுப் பெண்டிரில் பலர் இன்னல் அடைந்து வருகிறார்கள்.

உத்தரகாண்டத்தில் நளின மிருந்தாலும், சீதாவின் புனிதத்தை இராமனுக்கு நிரூபிக்க, இராமகதையில் வால்மீகி அக்கினிப் பரீட்சை வைப்பதாகக் காட்டுகிறார். ஆனால் அதுவும் இராமனின் பண்பு நெறிக்கு உடன்பாடாக வில்லை. உத்தர காண்டத்தைப் படிக்கும் போது மனம் மிகவும் வேதனைப் பட்டது என்று பின்னுரையில் [Epilogue] இராஜாஜி மனமுடைகிறார் (1). சீதையை இராமன் காட்டுக்கு அனுப்பும் உத்திர காண்ட அதிர்ச்சிக் காட்சியை நான் இராம கதையின் உச்சக் கட்டமாகக் கருதுகிறேன். தனித்து விடப்பட்ட சீதை குழந்தைகள் பிறந்த பிறகு மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு மரணம் அடைவது இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் உன்னத துன்பியல் வரலாறு என்பது என் கருத்து! இலங்காபுரியில் போரிட்டு சீதாவை மீட்ட காட்சியை நான் இராமகதையின் உச்சக் கட்டமாக எடுத்துக் கொள்ளவில்லை!

உண்மைக் கதையைத் திரித்து ஒருவனை இறைவன் அவதாரம் என்பதும், மற்றொருவனுக்குப் பத்துத் தலைகளை மாட்டி வைப்பதும், தென்னாட்டு மாந்தரில் சிலரை வானரங்களாகச் சித்தரிப்பதும் 21 ஆம் நூற்றாண்டில் கற்பனைக் கதையாகக் கூட கருதப்படாது! சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்குக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாயிரம் பாடி வணங்கி வருகிறது. காட்டுக்குத் துரத்தப்பட்ட கர்ப்பவதி சீதா, இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்று, வால்மீகி ஆசிரமத்தில் வாழ்ந்து இறுதியில் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் பாரத நாடு இராமனும் சீதாவும் இல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத தம்பதிகளாய்க் காட்டித் தொழுது வருகிறது! தெய்வ அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிடனாக மன்னனாக மீண்டும் மாற்றி என் சீதாயணம் எழுதப்படுகிறது! இது வால்மீகி இராமாயணம் அன்று! இதில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மாய மந்திர வித்தைகள் கிடையா! இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான் யாவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப்படுகிறார்கள்! விஷ்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை! பத்துத் தலை கொண்ட இராட்சதனாக இராவணன் இங்கே கூறப்பட வில்லை! தென்னாட்டுப் பிறவிகளான அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோர் குரங்கு முகமும், வாலும் கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மானிடர்களாக உலவி வருகிறார்கள்.

அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் கருத்து. பின்னால் அவரது சீடர்களோ அல்லது வேறு முனிவர்களோ மூலக் கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் வருடத்துக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்றுப் பேசும் குரங்குகள் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் எந்தச் சான்றுகளும் இல்லை! இராமன் காலத்தில் வாழ்ந்த அசுரர், இராட்சதர் போல் இன்றும் நாம் பயங்கரக் கொலைகாரரைக் காண்கிறோம். ஆறு மில்லியன் யூதர்களைக் கொன்று புதைத்த அடால்ஃப் ஹிட்லர், விஷ வாயுவிலும் மற்ற வழிகளிலும் பல்லாயிரம் பேரைக் கொன்று குழியில் மூடிய சடாம் ஹுசேன் போன்ற அரக்க வர்க்கத்தினர் உலகில் ஒவ்வொரு யுகத்திலும் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அரக்கர் அனைவரும் முழுக்க முழுக்க மனித உருக் கொண்டவரே! யாருக்கும் பத்துத் தலைகளோ, கொடிய தோற்றமோ, வெளியில் நீட்டிய பற்களோ கிடையா! வால்மீகி இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி வித்தைகள், மாய மந்திரங்கள், பத்துத் தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர வால்கள் ஆகியவற்றை வடிகட்டி, முக்கிய கதா நபர்களை மனிதராக கருதிக் கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சிகளாக மாற்றினால் இராம கதை இனியதாய் சுவைக்கக் கூடிய, நம்பக்கூடிய ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று எழுகிறது.

உயிரின மலர்ச்சி விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் நியதியைப் பின்பற்றி, இராமர் காலத்தில் வாழ்ந்திருந்தோரை மனிதப் பிறவிகளாகக் காட்டிச் சீதாவின் இரண்டாம் வனவாச சோக வரலாற்றை ஒரு நாடகமாகத் தமிழ் உலகுக்குக் காட்ட விழைகிறேன். இந்நாடகத்தில் வரும் முக்கிய நிகழ்ச்சிகள் வால்மீகி இராமாயணத்தில் காணப்பட்ட மெய்யான சம்பவங்களே! ஆனால் இந்த நாடகத்தின் கதாநாயகி சீதா! சீதாவின் மரணத்துக்கு முக்கிய காரணமான அவள் கணவன் இராமன் இங்கு கதாநாயகனாகக் கருதப் படவில்லை. வாழையடி வாழையாக இராமனைக் கடவுளாக வழிபட்டு வருபவரைப் புண்படுத்துவது இந்நாடகத்தின் குறிக்கோள் அன்று! இராமனை மனிதனாகக் காட்டியதற்கு, இராம பக்தர்கள் என்னை மன்னிக்க வேண்டும். இராமகதையில் அவதாரக் கடவுளாக இராமனை மாற்றியது சரியா அல்லது தவறா என்னும் வாதப் போருக்கு நான் வரப் போவதில்லை! மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமைபோல், அவனைக் கீழிறக்கி மீண்டும் மனிதனாய்க் கொண்டுவர எனக்கும் உரிமை உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுத ஆரம்பித்தேன்.

லவா, குசா சீதைக்குப் பிறந்து இளஞர்களாய் ஆனபின் அரண்மனைக்கு விஜயம் செய்து இராமனுடன் உரையாடியதாக ஒரு வரலாறு உள்ளது! வேறொன்றில் அசுவமேத யாகத்தின் போது லவா, குசா இருவரும் குதிரையைப் பிடித்து இலட்சுமனன், சத்துருகனன், பரதன் ஆகியோரோடு வில் போரிட்டதாக கூறப்படுகிறது. இரண்டு சம்பவங்களும் மெய்யாக நடந்தனவா அல்லது இவற்றில் ஒன்று மட்டும் நிகழ்ந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரண்டு நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நேர்ந்திருந்தால், எது முதலில் நடந்தது, எது பின்னால் நடந்தது என்பதும் இராம கதையில் அறிய முடியவில்லை. அதனால் லவா, குசா முதன்முதலில் இராமனைச் சந்தித்தது அரண்மனையிலா அல்லது அசுமமேதப் போரிலா என்னும் குழப்பம் பல வெளியீடுகளைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்டது. இந்த நாடகத்துக்காக அசுவமேத யாகத்தை எடுத்துக் கொண்டு, அரண்மனையில் லவா, குசா இராமனைச் சந்தித்த சம்பவத்தை நான் விட்டுவிட வேண்டியதாயிற்று.

ஆசிரமத்தில் இருந்த சீதா தன் கதையை நேராகச் சொல்லியதாலும், வால்மீகி லவா, குசா காண்டத்தில் தானே ஒரு கதா நபராக இருந்ததாலும், இராமகதைச் சம்பவங்கள் எல்லாம் குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும் தெளிவாகவும் உள்ளன. வாலியை இராமன் மறைந்து கொன்றது, மானைப் பிடிக்கப்போய் இராமன் மனைவியை இழந்தது, இலங்காபுரி செல்லப் பாலம் அமைத்தது, சீதாவைப் பற்றி வண்ணான் அவதூறு கூறியது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளாகத் தோன்றுகின்றன. கண்ணகி சேரநாட்டு மலையிலிருந்து குதித்து உயிர்விட்டதைத் தெரிந்து, இளவரசர் இளங்கோவடிகள் தகவல் திரட்டிச் சிலப்பத்திகாரக் காவியத்தை எழுதியதை நாமறிவோம். இராம கதையில் சீதாவும் இறுதியில் மலைமேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதுபோல் தெரிகிறது. கண்ணகி ஆருயிர்க் கணவனை இழந்தாள்! சீதா ஆருயிர்க் கணவனால் புறக்கணிக்கப் பட்டாள்! இருவரது கோர மரணங்களும் படிப்போர் கண்களைக் குளமாக்கும் கணவரால் நேர்ந்த துன்பியல் காவிய முடிவுகளே!

https://jayabarathan.wordpress.com/seethayanam/

​  [முழுநாடகம்]​

++++++++++++

rajam

unread,
Feb 9, 2016, 10:23:32 PM2/9/16
to தமிழ் மன்றம், N D Logasundaram, vallamai, ra...@earthlink.net
மதிப்பிற்குரிய திரு ஜெயபாரதன் ஐயா, வணக்கம்.

“சீதாயணம்”  … இது வல்லமை மின்னிதழில் வந்த தொடர்தானே? அத்தொடரை அவ்வப்போது படித்து மகிழ்ந்தவள் நான். 

“சீதாயணம்” என்பதில் உள்ள “ண” பற்றி நண்பரகள் எள்ளலாம். கவலற்க. 

சீதையின் நிலையில் என்னை நிறுத்தி இராமாயணத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு பெண்ணும் சீதையின் நிலையில் தன்னை நிறுத்திவைத்து இராமாயணக் கதையைப் பார்க்கவேண்டும். தனக்கு வாய்த்திருக்கும் கணவன் அந்த ஶ்ரீராமபிரானா என்று யோசிக்கவேண்டும்.

ஆணுக்குச் சிக்கலில்லை. தீக்குளிக்கத் தேவையில்லை. குளிக்கவே தேவையில்லை. எங்கே காட்டுங்கள் பார்ப்போம் … எந்த இலக்கியத்தில் அல்லது நடைமுறை வாழ்வில் ஒரு பெண்ணுக்காக, தன் கற்பை நிரூபிக்க ஓர் ஆண் தீக்குளித்ததாக.

வால்மீகியும் கம்பனும் துளசிதாசரும் பிறரும் என்ன சொல்லியிருந்தாலும் …

நிச்சயமாக … அந்த ராமன் படுபாவிதான். அன்னை சீதையைத் தீக்குளிக்கச் செய்த அவன் தெய்வமில்லை. பின்னாளிலும் வண்ணான் ஒருவன் சொன்னான் என்பதுக்காகக் கருவுற்றிருந்த சீதையைக் காணாமலே புறந்தள்ளிய அவன் நாட்டாண்மைப்பித்துப் பிடித்தவன். சீதையும் அவன் நாட்டில் ஒரு குடிமகள்தானே? இப்படியெல்லாம் என் சிந்தனையும் போகும்.

இதைக் குறிப்பிட்டு இராமனைப் ‘பாவி ராமன்’ என்று சொன்னதால் திரு ஹரியவர்களின் கம்பராமாயண முற்றோதல் குழு என்னை அப்படியே புறந்தள்ளிவிட்டது!!! 

நண்பர்களும் என்னைப் புறந்தள்ளிவிட்டார்கள். போகட்டும் … இழப்பு எனக்கில்லை. 

ராமபக்த ஹனுமான் கோஷ்டியில் உள்ள ஒவ்வொருவரும் … அன்னை சீதையின் நிலையில் தத்தம் வீட்டுப் பெண்ணை (அம்மா, அத்தை, மாமி, அக்கா, தங்கை, மருமகள், கொழுந்தி, சக்களத்தி, … ) நினைத்துப்பார்க்கவேண்டும். தன்னையும் வைத்துப்பார்க்கவேண்டும்.

அன்புடன்,
ராஜம்



Begin forwarded message:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Feb 9, 2016, 10:31:56 PM2/9/16
to தமிழ் மன்றம், N D Logasundaram, vallamai, rajam ramamurti

2016-02-10 8:53 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
இதைக் குறிப்பிட்டு இராமனைப் ‘பாவி ராமன்’ என்று சொன்னதால் திரு ஹரியவர்களின் கம்பராமாயண முற்றோதல் குழு என்னை அப்படியே புறந்தள்ளிவிட்டது!!! 

நண்பர்களும் என்னைப் புறந்தள்ளிவிட்டார்கள். போகட்டும் … இழப்பு எனக்கில்லை

அன்புள்ள அக்கா,

இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு.  நீங்கள் ராமனைப் பாவி என்று சொன்னதால் யாரும் உங்களைப் புறம் தள்ளவில்லை.  தயவுசெய்து இப்படி அடிக்கடி குத்திக்காட்டுவதைத் தவிர்க்கவும்.  எனக்கும் உணர்வுகள் உண்டு.  

இவையெல்லாம் முடிந்துபோனவை என்று நினைத்தேன்.  நான் எழுதின ஒவ்வொரு கடிதத்திலும் தரைக்கும் கீழே குனிந்தேன்--உங்கள்மேல்  இருக்கும் மதிப்பால், அன்பால் மட்டுமே.  இதற்கும்மேல் தொடர்ந்து இதைச் செய்யத்தான் செய்வேன் என்றால் பாதகமில்லை.

இழப்பு எனக்கும் இல்லை.  


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Feb 9, 2016, 10:36:42 PM2/9/16
to தமிழ் மன்றம், N D Logasundaram, vallamai, rajam ramamurti
2016-02-10 8:53 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
ராமபக்த ஹனுமான் கோஷ்டியில் உள்ள ஒவ்வொருவரும் … அன்னை சீதையின் நிலையில் தத்தம் வீட்டுப் பெண்ணை (அம்மா, அத்தை, மாமி, அக்கா, தங்கை, மருமகள், கொழுந்தி, சக்களத்தி, … ) நினைத்துப்பார்க்கவேண்டும். தன்னையும் வைத்துப்பார்க்கவேண்டும்.

அன்புடன்,
ராஜம்

எடுத்ததெற்கெல்லாம் ஸ்ரீராமஜெயம் போட்டுத் தொடங்கும் திருவாட்டி இராமமூர்த்தி இராஜம் அவர்களையும் உள்ளிட்டதுதானே இது?

இந்த மடலை எழுதத் தொடங்கும் முன்னர் ஸ்ரீராமஜெயம் போட்டிருப்பீர்களே?

இங்கே யாருக்கு உணர்வில்லை?  யாருக்கு சொரணையில்லை என்று தெரியவில்லை.  இதெல்லாம் அறியாதவர்கள் என்பது போன்ற எள்ளல் தேவையில்லாத ஒன்று.

Krishnamurthi, Kathir

unread,
Feb 10, 2016, 10:21:29 AM2/10/16
to tamil...@googlegroups.com, N D Logasundaram, vallamai, rajam ramamurti

இந்தியா முழுதும் பரவிக்கிடக்குது குல தெய்வ வழிபாடு. அதுக்குள் சிறு சிறு கதைகள் இருக்கு. அந்தந்த குலத்தை காத்த முன்னோர்களின் கதை பல ஆயிரம் இருக்கு; ஒவ்வொரு கதைக்குள்ளும் சில மிகைகளும் இருக்கலாம். இராமாயணம் என்பதே ஒரு தனிக்கதை அல்ல என்று அறிகின்றேன். வட்டாரத்துக்கும் கையாண்ட புலவனுக்கும் ஏற்றார்போல கதையில் மாற்றம் இருக்கும். ராக்கட் உட்டது, பறந்து வாலால் தீ வைத்து அழித்த்து போன்ற மிகையுள்ள அறிவுக்கு ஒப்பாத கதைகளும் இருக்கு.

 

இதை மதமாக்கி இன்றைக்கு மற்றொரு மதத்தவரோடு போரிட முரசம் கொட்டுது ஓர் அரசியல் கட்சி. அதை வச்சு பல ஆயிரம் சிறுபான்மையரைக் கொன்றும் உள்ளது. எவனுக்கும் தனி உரிமம் இல்லை இந்த கதைக்கு. ஒரிசாவில் ஒரு பழங்குடி இராவணனை குலதெய்வமாக வழிபடுது. ராமனை எதிர்த்து தங்களைக் காப்பாற்றியதாக நினைக்குது அந்த சிறுகுடி.

 

இப்படி இருக்க, என்னைப் போன்றோர்க்கு இலக்கியச் சுவைக்காக கதையை படித்து ரசிப்பது தவிர ஒன்னும் இல்லை. மதம் என்ற நோய் பரவாமல் இருப்பது நல்லது.

--

rajam

unread,
Feb 10, 2016, 11:03:16 AM2/10/16
to தமிழ் மன்றம், vall...@googlegroups.com, ra...@earthlink.net
ஹரியின் இந்த மடலுக்கு மறுமடல் அனுப்பினேன், இங்கே காணவில்லையே ஏனென்று தெரியவில்லை. போகட்டும்.

ஆம், ஹரி, இதோ இந்த மடலைத் தொடங்குமுன், ஏன் கணினியைத் திறக்கும்போது முதலில் தட்டிய சொல்லும் ஶ்ரீராமஜயம். அம்மாவிடமிருந்து கற்ற பழக்கம். ராமன் ராமன் என்று எப்போதும் சிந்தனை. யாருக்குத் தலவலி காய்ச்சல் என்று வந்தாலும் நூறு ராமஜயம் எழுதுகிறேன் என்று அந்த ஶ்ரீராமனிடம் நேர்ந்துகொண்டதும் வழக்கம். இப்போதெல்லாம் மனத்தில் வேண்டுதலோடு சரி. இப்போது காலையில் தண்ணீர்கூட் அருந்தாமல் முதலில் எனக்கு நெருங்கிய சிலருக்காக (உங்களுக்குத் தெரியும் அவர்களை!) ராமனையும் அனுமனையும், வீடணனையும், வேளாங்கண்ணியம்மனையும் வேண்டிக்கொண்டுதான் நாளைத் தொடங்கினேன். நானும் ராமபக்த அனுமன் கோஷ்டிக்காரிதான். அதனால்தான் எனக்கு ராமனிடம் அவ்வளவு உரிமை.

என் வீட்டில் யாராவது ஒருத்தர் செய்வது தவறு என்று எனக்குத் தோன்றினால் அதை எடுத்துக்காட்ட எனக்கு உரிமையில்லையா?

எழுத்தாளர் இரா.முருகன் தினமணியில் எழுதிய துப்ளே வீதி என்ற தொடரில் கதை சொல்லும் தலைவன் தன் தோழியை/காதலியை 'ராட்சசி' என்று சொன்னதாக நினைவு. இறுதியில் அவளையே திருமணம் செய்துகொண்டதாகவும் படித்த நினைவு. 

மற்றபடி உங்கள் குழுவினரை நான் திட்டவில்லை! அப்படி உங்களுக்குத் தோன்றியிருந்தால் வருந்தி மன்னிப்புக்கேட்கிறேன். என்னைப்புறக்கணித்துவிட்டார்கள் என்று சொனால் அது திட்டுதலா அல்லது என் மனக்குறையை வெளிப்படுத்தலா? 

Hari Krishnan

unread,
Feb 10, 2016, 11:16:39 AM2/10/16
to தமிழ் மன்றம், vallamai, rajam ramamurti

2016-02-10 21:33 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
என் வீட்டில் யாராவது ஒருத்தர் செய்வது தவறு என்று எனக்குத் தோன்றினால் அதை எடுத்துக்காட்ட எனக்கு உரிமையில்லையா?

:)

அதாவது ஒங்க ராமர நீங்க திட்டிக்கறீங்க.  அதுக்கு எதுக்கு அலைட் ஃபோர்ஸஸ் ஒத்தாசை?  நானும் என் குழுவும் தப்புன்னா எங்கிட்ட சொல்லுங்க.  அங்க என்ன முறையிடல்ங்கறேன்?  ம்ம்!

நன்றி.

காலையில் சென்னை புறப்படுகிறேன்.  ஒருவாரம் கழித்துதான் (17ம் தேதிக்குப் பிறகு) திரும்புகிறேன்.  இடையில் இணையத் தொடர்பு கிடைக்கின்ற நேரத்தில்தான் இருக்கும். எனவே உடனுக்குடனே பதில் சொல்ல முடியாமல் போய்விடும்.  நாசூக்கான :P அலட்சியம்னு நினைக்க வேண்டாம்.  திரும்பி வந்து நிதானமா பதில் போடறேன்.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 10, 2016, 11:37:54 AM2/10/16
to tamilmantram, mintamil, vallamai
////கம்பராமாயணத்தையும் வால்மீகி மூலத்தையும் பல்லாண்டுகளாகப் படித்து, ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவன் என்ற விதத்தில் சொல்கிறேன்.  அனுமன் போன்ற பாத்திரங்களை மனிதர்களாகப் பார்ப்பது சுத்தப் பேத்தல்.  அவர்கள் பேசியதற்கு விளக்கம் சொல்லிவிட்டார்கள்.  கடலைத் தாண்டிப் பறந்ததற்கும், சுந்தரகாண்ட மொத்த நிகழ்வையும் ஒரே நாளில் (சூரிய அஸ்தமனத்திலிருந்து சூரிய அஸ்தமனம்வரை) முடித்ததையும், இலங்கை மொத்தததுக்கும் தீ வைத்ததையும், ஆகாயத்தில் எழும்பிப் பறந்ததற்கும் என்ன விளக்கம் வைத்திருக்கிறீர்கள்?  அனுமன் கடல் தாண்டிப் பறந்திராவிட்டால் இராமயணமே இல்லை./////

இலங்கைக்குச் செல்ல அனுமன் கடலைத் தாண்ட பறக்க வேண்டியதில்லை.

கி.மு. 2015 இல் ( ?) சீதா தேவியை மீட்க பாரத நாட்டுக்கும் இலங்கா புரிக்கும் அனுமார் படையினர் கட்டிய முதல் புராதனப் பாலத்தைப் பற்றி வால்மீகியின் இராம காவியம் கூறுகிறது. பதினெட்டு மைல் தூரம் நீண்ட பாறாங்கல் பாலத்தை  (அக்டோபர் 2002) துணைக்கோள் மூலம் விண்வெளிப் படமெடுத்த நாஸா [NASA] 'இராம பாலம் ' [Adam 's Bridge] என்று அறிவித்து அகிலவலை முகப்புகளில் வெளியிட்டுள்ளது! பாக் நீர்ச்சந்தியில் [Palk Strait] (இராமேஸ்வரம்) தனுஷ்கோடி, தலைமன்னாரை இணைக்கும் இந்தப் பாறாங்கல் திட்டுகள் உச்ச அலை ஏற்றம் [High Tide] சமயத்தில் நாலடிக் கடல்நீரில் மூழ்கி விடுபவை! இவ்வூர்களுக்கு இடையில் பிரிட்டிஷ் இந்தியா முன்பு சிறிது தூரம் கட்டிய பாம்பன் பாலம், [Bamban Bridge] பலமுறைச் சூறாவளிப் புயல்களால் தகர்க்கப்பட்டுச் சாய்ந்து போனது!

NASA’s Picture Rama’s Bridge

​சி.. ஜெயபாரதன்​


rajam

unread,
Feb 10, 2016, 1:06:05 PM2/10/16
to Hari Krishnan, தமிழ் மன்றம், vallamai
///அதாவது ஒங்க ராமர நீங்க திட்டிக்கறீங்க. ///

ஆமாமா, நல்லாத்திட்டுவேன். அவனோ கணவனா வந்து எங்கைய்யெப்புடிச்சவனாச்சே; நானோ அவன் (இஷ்வாகு) குலம் தழைக்கச் சந்ததி வளர்த்தவளாயிற்றே. எனக்கில்லாத உரிமையா?


///அதுக்கு எதுக்கு அலைட் ஃபோர்ஸஸ் ஒத்தாசை?  நானும் என் குழுவும் தப்புன்னா எங்கிட்ட சொல்லுங்க.  அங்க என்ன முறையிடல்ங்கறேன்?  ம்ம்!///

நகைச்சுவை நம்பிக்கு நாலாயிரம் கூடை வாழ்த்து! இதோ இப்போதைக்கு இந்தப் பூ மட்டும். இணைத்துள்ள படத்தில் பார்க்கவும். 



அலைட் ஃபோர்ஸஸ் இல்லாம இவிடெ ஜோலி நடக்கில்லா! நொடிச்சிப்போன ஒரு தனிச்சிக்கு ஒரு துணைவேண்டாமா? :-( 


///…  நாசூக்கான :P அலட்சியம்னு நினைக்க வேண்டாம். ///

ஆகா! அடிக்கடி ஊர்வலம் போய்விட்டுத் தேர் நிலைக்கு வந்தபின்னும் இந்த நாசூக்கான அலட்சியம் நடப்பதில்லியாக்கும்! இங்கேயிருந்து அங்கே விடுத்த 2-வேண்டுகோள்களுக்கு இன்னும் செவிசாய்க்கலெ — ஒரு குறள் பற்றியும் அந்தகக்கவியின் ஒரு பாடல் பற்றியும். சரி, ஐயா ஏகப்பட்ட பிஸி-போல-னு இங்கேயும் விட்டாச்சு. 

Anyway … 

தங்கள் பயணம் நல்லபடியாக அமையும், ஹரி. தினமும் முதல் ஶ்ரீராமஜயம் தட்டச்சும்போது எம்பியை நினைத்துக்கொள்வேன், சரியா.

பட்டிமன்றம், நூல்வெளியீட்டு விழாக்கள் எல்லாமே மிகச் சிறப்பாக நடைபெற என் வாழ்த்து.

அன்பும் ஆசியும்,
ராஜம்

[இணைத்துள்ள படத்தில் காணும் கமீலியா (camellia) என்ற பூ ஆண்டுக்கு ஒருமுறைதான் பூக்கும். நவம்பரின் இறுதியில் மொட்டுவைத்து முழுமலராக விரிய 2-மாதம் ஆகிறது. கொடிக்குக் காய் பாரமா என்ற கவிஞரின் கூற்றைக் களவாடி … செடிக்கு மலர்கள் பாரமா என்று கேட்கத்தோணும். இது வளர்த்துவிட்ட தாய்க்குத் தரும் முத்தமா என்பதுபோல் செடிதாங்காமல் பூத்துத்தொங்கும்!]

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Feb 10, 2016, 4:05:23 PM2/10/16
to tamilmanram kuzhu, Hari Krishnan, vallamai, rajam ramamurti, thiru thoazhamai
அறிவியலர் சி.செயபாரதன் எழுதியுள்ள சீதாயனம் சிறந்த படைப்பாகும். இதனைக் கடந்த ஏப்பிரல் 2015 அகரமுதல இதழில் தொடர்ச்சியாக  வெளியிட்டு, இலக்கிய வலைப்பூத்தளத்திலும் பதிந்து மடலாடல் குழுக்களிடையே பகிர்ந்துள்ளேன். (பின் அவர் அனுப்பிய முழு நாடகத்தையும் மீண்டும் படித்துள்ளேன்.) இந்நாடகம் குறித்துச் சுருக்கமாக முன்னுரையில் குறிப்பிட்டதை இங்கே நினைவுகூர்கிறேன்.

[இன்றைக்கு நாடகங்கள் அருகிவிட்டன. மேடை நாடகங்களும் சூழலுக்கேற்ற புரிதலைஉடைய பேச்சு வழக்காக உள்ளனவே தவிர, எப்பொழுதும் புரியும் தன்மையில் இருப்பதில்லை. நகைச்சுவை என்ற பெயரில் துணுக்குத் தோரணங்களாகப் பெரும்பாலான நாடகங்கள் உள்ளன. ஆனால்,நல்ல நாடகங்களைப் படைத்துத் தருவோர் நம்மில் இல்லாமல் இல்லை. அவர்களில் ஒருவராகக் கனடா அறிவியலர் சி.செயபாரதன் விளங்குகிறார். சீதையின் பிற்கால வாழ்வை அடிப்படையாகக் கொண்டு சீதாயணம் என்னும் பெயரில் அருமையான நாடகத்தை உருவாக்கியுள்ளார். இராமனின் மறுபக்கத்தைப் பெரும்பாலோர் மறைத்திருக்க, அதனை வெளிக்கொணருவோர் வேறு கருத்துலகில் உழலுவதால் ஏற்கப்படாச் சூழலே உள்ளது. இந்நிலையில் இதற்கு முன்னர்ச் சிலர் எடுத்துரைத்து பாதையில் தன் கருத்தை வெளிப்படுத்த இந்நாடகத்தைப் படைத்துள்ளார். ஆனால், தன் கருத்து என்று திணிப்புத் தோற்றம் இல்லாமல் இராமன், சீதை, பரதன், சத்துருக்கணன், இலக்குமணன், இலவன், குசன் முதலான அவரவர் பார்வையில் அவரவர்கள் சொல்லியனபோன்றே படைத்துள்ளார் என்பதுதான் நாடகத்தின் சிறப்பு. ஓரங்க நாடகம் என இவர் குறித்திருந்தாலும் ஆறு காட்சிகள் உள்ளமையால் குறுநாடகம் என்றுதான் கூற வேண்டும். இராமன் புத்தருக்குப்பிற்பட்டவனே! ஆதலின் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னவன் என்பது தவறாக வழங்கிவரும் கருத்தின் அடிப்படையில் இவர் குறிப்பிட்டுள்ளதே! இராவணனை அரக்கன் என்பதும் தவறே! இலங்கைப்போர் எனச் சொல்லாமல் ஈழப்போர் எனக் குறித்துள்ளது ஏன் எனத் தெரியவில்லை. என்றபோதும், உளவியல் அடிப்படையிலும் பெண்ணுரிமை நோக்கிலும் மனித உரிமைகள் அடிப்படையிலும் ஏரண (அளவையியல்) நோக்கிலும் நன்கு அமைத்துள்ளார். நல்ல நாடகங்களை மக்களும் அரசும் ஊக்கப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் நாடகச் செம்மல்கள் உருவாவார்கள்; நல்ல நாடகங்கள் பெருகும். இந்நாடகத்தை இவர் எழுதி ஏழு ஆண்டுகள் ஆயிருக்கும் போலும்! விவரம் தெரியவில்லை் ஆனால், இப்பொழுதுதான் மின்குழுமத்தில் பகிர்ந்துள்ளார். நல்ல படைப்புகளைப் பிறருக்கு அறிமுகப்படுத்துவதும் நம் கடமைதானே! அந்த வகையில் இந் நாடகம் அகரமுதல இதழில் இடம் பெறுகிறது.நாடக இலக்கியர் செயபாரதன் பாரதத்தின் மறுபக்கத்தையும் தன் நாடகம் மூலம் காட்ட வேண்டும். – ஆசிரியர், அகரமுதல ]

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

சி. ஜெயபாரதன்

unread,
Feb 10, 2016, 5:09:15 PM2/10/16
to tamilmantram, mintamil, vallamai
நன்றி நண்பரே,

மகாபாரதம், இராமாயணம் இரண்டும் புத்தருக்கு முந்தவை [கி.மு. 1000 -1500] என்பது என்கருத்து.

இன்னும் நான்கு தமிழ் நாடகங்கள் உள்ளன.  அவை என் வலையிலும் உள்ளன.  வையவனிடம் நூல் வடிவில் கிடைக்கும். நீங்கள் விரும்பினால் பிடியெஃப் பைலாக அனுப்புவேன்.

1.  ஆபிரகாம் லிங்கன்.

2.  சாக்ரடிஸ் மரணம்

3.  நெப்போலியன்

4. ஜோன் ஆஃப் ஆர்க் 

சி. ஜெயபாரதன்

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Feb 11, 2016, 9:23:05 AM2/11/16
to tamilmanram kuzhu, vallamai, thiru thoazhamai
அன்புடையீர், 
நன்றி.

இராமாயணக் காலம் புத்தருக்குப் பிற்பட்டதே. ஆரியக்கதைகளின்காலங்களை கணக்கு வழக்கில்லாமல் தொன்மை வாய்ந்தாகக் காட்டுவர். அவற்றை உண்மை என நம்பிய தமிழறிஞர்களும் அவ்வாறே எடுத்தாள்வர். ஆனால், ஆராயும் பொழுதுதான் அவை பிற்பட்டன எனத் தெரியும்.  இராமர் காலம் புத்தருக்குப் பிற்பட்டது என்பதைப் பின்வரும் என் கட்டுரயிலும் குறிப்பிட்டுள்ளேன். 

அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன்


இராமாயண நிகழ்வுகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான கால அளவாக இதில் கூறப்பட்டுள்ளது. உண்மையில் தொல்காப்பியத்திற்கும் மிகவும் பிற்பட்டதே இராமாயணக் காலம். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” போன்ற பல ஆயிரம் சங்கப் பாடல்கள் தோன்றிய காலத்திற்கு மிகவும் பிற்பட்ட காலமே இராமனின் காலம். இதற்கான சான்றுக்கு வேறு எங்கும் போகவேண்டியதில்லை! வால்மீகி இராமாயணத்திலேயே உள்ளது. இராமன் ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்காக அயோத்திக்குத் திரும்புகையில் பல கோயில்களுக்கும் செல்வது போல் புத்தபீடத்திற்கும் செல்வதாக வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.(“சக்கரவர்த்தித் திருமகன் …. பவுத்த நினைவிடங்களையும் … வலமாய் வந்தான்.”- வால்மீகி இராமாயணம்- தமிழில்: குருவிக்கரம்பை வேலு. பக்கம் 64). இராவணன் சீதையைப் புத்தத் துறவி வேடத்தில் காண வந்ததாய்த்தான் வால்மீகி இராமாயணம் கூறுகிறது. மேலும், இலங்கையில், அனுமான் மாநகரைத் தீக்கிரையாக்கிய பொழுது, புத்த பீடங்களையும் எரித்ததாக வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.

     “என்னால் வனம் அழிக்கப்பட்டது. பவுத்த விகாரம் இடிக்கப்படவில்லை. அதனையும் நான் இடித்துத் தள்ளுகிறேன்” என்று மனத்தினுள் முடிவெடுத்து மேருமலை போல் தோன்றும் அழகான பவுத்த விகாரத்தின் மேல் தாவினான். எவராலும் சிதைக்க முடியாததும் மிகச் சிறந்ததுமான பவுத்த விகாரத்தை அடியோடு இடித்துத் தள்ளினான் மாருதி. (அதே நூல்:பக்கம் 160)

   இராவணன் தம் அமைச்சருடன் பேசுகையில், “ஓர் அற்பக் குரங்கு … புத்தருடைய நினைவிடத்தையும் அழித்து விட்டது” எனக் குறிப்பிட்டதாக வால்மீகி கூறுகிறார். (அதே நூல்: பக்கம் 176)

  இராமன் அயோத்தி திரும்புவதைக் குகனிடம் தெரிவித்துத் திரும்பும் அனுமன் புத்தரின் நினைவிடத்தையும் பார்த்ததாக வால்மீகி குறிப்பிடுகிறார். (அதே நூல்: பக்கம் 216)

  இராமன் திரும்புவதை அறிந்த பரதன் மகிழ்ந்து, “பெரியவர்கள், தெய்வங்கள் வசிக்கும் இடங்களையும் நகரிலுள்ள பவுத்த மடங்களையும் நல்ல மலர்களால் இசைவாணர்களுடன் சென்று அருச்சனை செய்யட்டும்” எனக் கட்டளையிடுகிறான். ( அதே நூல்: பக்கம் 217)

   புத்தரின் காலம் கி.மு. 560. எனவே புத்தரின் காலத்திற்கும் பிற்பட்டதே இராமனின் காலம். அவ்வாறிருக்க இதனைச் சிந்து வெளிநாகரிகத்திற்கும் முந்தையதாகக் குறிப்பிடுவது திட்டமிட்ட சதிச் செயலுக்கு இரையாகிய கட்டுரையாளர்களின் அறியாமையே என நன்கு புரிகிறது.



Krishnamurthi, Kathir

unread,
Feb 11, 2016, 11:13:37 AM2/11/16
to tamil...@googlegroups.com, vallamai, thiru thoazhamai

புளுகுகள் புதிதல்ல அய்யா. தியாகராயருக்கு முன் சீரிசையே இல்லை. அவர் வடமொழியிலும் தெலுங்கிலும் பாடியது போன்று தமிழிலே பாட முடியாது என்று சொன்னதும் நம்பும் தமிழர் இருக்கார்களே..அவர் ஏன் கோதாவரி ஆற்றங்க்கரையில் நின்று பாடாமல் காவிரிக்கு வர வேண்டும். அவருக்கு முன் தமிழின் இசை மரபு என்ன... என்றால்..உடனே....சாம வேதம் உனக்குத் தெரியுமா....10,000 ஆண்டுக்கு முன்னமே எல்லாம் எழுதி வச்சாகிவிட்ட்து.. தேடிப் படிச்சுப்பார் என்றால் தாழ்ந்து போவான்.

 

அப்படி பரத முனி சொல்லிக் கொடுத்தான் அதனால் ஆடுறாங்க பரத நாட்டியம்....எப்ப சொன்னார். கி.மு 2000 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன்....

 

ஒரு தெலுங்கு நண்பர் தன் மகளுக்கு அரங்கேற்றம் நடக்குது என்றார். வாழ்த்தினேன். எல்லாம் தெலுங்கிலே செய்கின்றோம் என்றார். நல்லது அய்யா என்றேன். “பாருங்க.. தமிழர்களால் தமிழில் செய்யமுடியாது.. ஏனென்றால் எல்லாம், தெலுங்கில்தான் இருக்கு” என்றார். முத்துத்தாண்டவர்தான் இந்த நாட்டியதுக்கென்றே ‘பதம்’ முதலில் எழுதினார் என்றேன்...தெரியாதே எப்போ? என்றார்.. தியாகராயருக்குமுன் என்றேன்.......புதிய செய்தி தெரிந்துகொண்டேன்.. நன்றி...என்று விடைபெற்றார்.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 11, 2016, 12:22:15 PM2/11/16
to mintamil, vallamai, tamilmantram, Oru Arizonan, Jay Jayabarathan, இலக்குவனார் திருவள்ளுவன்

2.  https://jayabarathan.wordpress.com/abraham-lincoln/  [ஆபிரஹாம் லிங்கன்]



5.https://jayabarathan.wordpress.com/joan-of-arc/  [ஜோன் ஆஃப் ஆர்க்]

+++++++++++++++++++++++++++++

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Feb 11, 2016, 4:31:12 PM2/11/16
to tamilmanram kuzhu, vallamai, thiru thoazhamai
அன்புடையீர், நீங்கள் கூறுவதும் உண்மைதாம்.
இவற்றை நான் தமிழிசை தொடர்பான என் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். நன்றி.
Reply all
Reply to author
Forward
0 new messages