1. தூய்மையே செல்வம் – இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2. தொல்காப்பியமும் பாணினியமும் – முன்னுரை: இலக்குவனார் திருவள்ளுவன்

3 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Aug 25, 2025, 12:19:00 AM (12 days ago) Aug 25
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan

தொல்காப்பியமும் பாணினியமும் – முன்னுரை: இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      25 August 2025      கரமுதல



தொல்காப்பியமும் பாணினியமும்

முன்னுரை

கனடாவில்  முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (2024-09-20, 2024-09-21, 2024-09-22) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் சிறப்பாக நடைபெற்றது. கனடாத் தொல்காப்பிய மன்றமும் (தமிழ்நாட்டின்) இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து இதனை நடத்தின. அதன் கருத்தரங்கத்தில் வாசிக்க நான் ‘தொல்காப்பியமும் பாணினியமும்’ என்னும் கட்டுரையை அனுப்பியிருந்தேன். நான் பொதுவாகக் கருத்தரங்கங்களில் பங்கேற்கும்போது விரிவான கட்டுரையை  அனுப்பிவிட்டு அதன் பின்னரே சுருக்கத்தை எழுதியனுப்புவது வழக்கம். ஏனெனில் பெரும்பாலோரின் கட்டுரைச் சுருக்கங்களுக்கும் முழுமையான கட்டுரைகளுக்கும் தொடர்பு இருப்பதில்லை. அவ்வாறு நேரக்கூடாது என்பதற்காக 46 பக்கக் கட்டுரை எழுதி அனுப்பியிருந்தேன். அதைப்படித்த ஒருவர் கனடாவிலிருந்து “நீங்கள் இலக்குவனாரின் மேற்கொள்களை மட்டும் குறிப்பிட்டுள்ளீர்களே! அவரைப்பற்றி மேலும் ஒருவர்தான் எழுதியுள்ளார்” என்றார். “என்னிடமும் சிலர் எழுத வேண்டும் என்பதற்காக அவரின் ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ நூலைக் கேட்டனர். என்னிடம் இன்மையால் வெளியீட்டகத்தின் பெயரைக் குறிப்பிட்டேன். அவற்றை அவர்கள் வாங்கியிருக்கலாம். ஆனால், வாங்கவில்லை. இதுபோல் நூல்கள் கிடைக்காமல் எழுதாமல் இருந்திருக்கலாம். இதனால் ஒன்றுமில்லை” என்றேன். “இல்லையில்லை! உங்கள் அப்பாவின் கருத்துகளில் இருந்து மட்டும் எடுத்தாண்டுள்ளீர்கள்” என்றார். (அப்பொழுது நான் அவ்வாறுதான் எழுதியுள்ளதாக எண்ணி விட்டேன். பொதுவாகக் கட்டுரை எழுதியவுடன் மறக்கும் பழக்கம் இருந்ததால் எனக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் பின்னர் நான் பார்த்த பொழுது முப்பதிற்கும் மேற்பட்டவர்களின் மேற்கோள்கள் இருந்தன.) “அப்பா என்று பார்க்காதீர்கள். அவர் படிக்கும் பொழுதே தொல்காப்பிய ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்; இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியர் என அழைக்கப்பெறுபவர்; ஆங்கிலத்தில் தொல்காப்பியத்தை மொழி பெயர்த்தவர்; தொல்காப்பியத்தை மக்கள் இலக்கியமாக மாற்றியவர். எனவே, அதில் தவறு இல்லை” என்றேன். மாற்றித் தருமாறு கேட்டார். “பொருண்மை குறித்துத் தவறான கருத்துகளைக் குறிப்பிட்டு அவை தவறு எனச் சொல்வதை விடச் சரியான கருத்துகளை மட்டும் எழுதினால் போதும் என எண்ணுபவன் நான். எனவே, அதற்கேற்ப எழுதியுள்ளேன். கருத்து மாறுபாடு இயற்கையே. கருத்தரங்கக் கலந்துரையாடலில் மாறுபாடாகக் கருதும் கருத்துகளைக் குறிப்பிட்டால் விளக்குகிறேன்” என்றேன். அவர் அவரது நிலையிலேயே நின்றார்.  “இக்கட்டுரை சரியில்லை என்றால்  நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டா. எனினும் இதை நான் அச்சிட்டு அனைவருக்கும் தருவேன்” என்றேன். காலங்கடந்து கட்டுரைச் சுருக்கத்தைத் தேர்ந்தெடுத்தனர். எனக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர் அயலகத் தமிழறிஞர் ஒருவர் சொன்னது நினைவிற்கு வந்தது. அவர் என் கட்டுரை ஒன்றைக் குறித்துச் சில ஐயங்களைக் கேட்டு இதற்கெல்லாம் சான்றுகள் உள்ளனவா என்றார். நான் குறிப்பிட்டுத் தெரிவித்தேன். அவர், உடனே “நான் பல ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு வந்துவிட்டேன். எனவே அண்மையக் கருத்துகளை அறிய முடியாமல் போய்விட்டது. எனவேதான் எனக்குப் புரியாமல் போய்விட்டது” என்றார்.. அதுபோல்தான் பேசியவருக்கும் அக்கருத்தை அவரிடம் தெரிவித்தவருக்கும் தவறான கருத்துகள் தெரிந்த அளவிற்கு தொடர்பான ஆய்வுரைகள் தெரிய வாய்ப்பில்லாமல் போயிருந்திருக்கும் எனக் கருதுகிறேன். இணையத் தேடலில் பல கருத்துகளை அறிய முடியும் என்றாலும் அவை பெரும்பாலும் தவறான கருத்துகளாகவே உள்ளன. நல்ல சரியான ஆய்வுரைகள் யாவும் இணையத்தில் இடம் பெற வேண்டும்.

ஆரிய நூல்களைக் காலத்தில் மூத்ததாகவும் தமிழ்நூல்களைவிட மிகவும் சிறப்பானதாகவும் திரித்துக் கூறுவோரும் அவற்றை அறிந்தும் அறியாமலும் பரப்புவோரும் உள்ளமையால் தொல்காப்பியத்தைவிடக் காலத்தில் பிந்தியதாகவும் அதனுடன் ஒப்பிட இயலா அளவிற்குத் தரம் குறைந்ததாகவும் உள்ள பாணினியத்தை உயர்வானதாகவும் காலத்தால் மூத்ததாகவும் பலரும் எழுதியும் பேசியும் வருகின்றனர். அவற்றை முறிடியடிக்க வேண்டும் என்று எழுந்ததே இக்கட்டுரை. 100 பக்கங்களுக்கு மேல் குறிப்புகள் எடுத்திருந்தாலும் ஏ 1 அளவில் ஏறத்தாழ 35 பக்க அளவில் விரிவுக் கட்டுரை அமைந்தது.

இவ்விரிவுக் கட்டுரையைத் தமிழன்பர்கள் பார்வைக்கு நூலாக  வெளியிட்டுள்ளேன். நூல் அட்டை வடிவமைத்த வடிவமைப்புத் தளத்தினருக்கும் அச்சிட்ட மாணவர் நகலகப் பார்த்திபன் நண்பர்களுக்கும் நூல் வெளியீட்டிற்கு உதவியாக இருந்த பொறி தி.ஈழமலர் பாலாசி, பொறி தி.ஈழக்கதிர், மலர்க்காெடி வெளியீட்டகத்தின் திருவாட்டி தி.அன்புச்செல்வி ஆகியோருக்கு நன்றி.

 கனடாத் தொல்காப்பிய மன்றத்தின் தலைவர் முனைவர் முனைவர் செல்வநாயகி சிரீதாசு தன் தலைமையில் ஆராய்ச்சி மாநாட்டைச் சிறப்பாக நடத்தியிருந்தாலும் அதுபோது இந்நூலை வெளியிட இயலாமல் போய்விட்டது. எனினும் இதன் தொடர்ச்சியாகச் சென்னையில்,  நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசி 26, 2055 / சனி / 12.10.2024 அன்று இலக்குவனார் இலக்கிய இணையம் விருதளிப்பு நிகழ்ச்சியை நடத்தியது.   இது போழ்து இந்நூலை வெளியிட்டுள்ளோம்.

சிறிய நூல் என்பதால் இதிலுள்ள கருத்துகளை முன்னுரையில் எடுத்துக் கூறத் தேவை எழவில்லை. எனவே அன்பர்கள் இந்நூலைப் படித்து ஆதரவு தர வேண்டுகிறேன்.

நன்றி.

சென்னை                                                          இலக்குவனார் திருவள்ளுவன் புரட்டாசி 25, 2055 /  11.10.2024                         thir...@gmail.com

++++

தூய்மையே செல்வம்  – இலக்குவனார் திருவள்ளுவன்

image.png

தூய்மையே செல்வம்  

மழலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் சில பாடல்களின் மெட்டுகளில் சில பாடல்களைப் பார்ப்போம். பொதுவாக ஆங்கில மழலைப் பாடல்கள் பல ஒலிக் குறிப்புகளை அறியவே கற்பிக்கப்படுகின்றன. சில மட்டுமே பொருள் உள்ள பாடல்களாக உள்ளன. ஆனால் தமிழிலுள்ள குழந்தைப் பாடல்கள் யாவும் அறிவுரையாகவோ அறவுரையாகவோ அறிவியலுரையாகவோ அமைந்துள்ளன. இருப்பினும் தெரிந்த மெட்டின் அடிப்படையில் பாடல்களை அறிவது குழந்தைகளை ஈர்க்கும் என்பதால் பின்வரும் பாடல்கள் குறிக்கப் படுகின்றன.

      வாழ்க்கைக்கு அடிப்படை தூய்மை. மனத்தூய்மை வாய்மையால் அமையும் என்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். சுற்றுப்புறத் தூய்மைக்கு அடிப்படை குப்பைக் கூளங்களைச் சுற்றிலும் பரப்பாமல் குப்பைக் கூடைகளைப் பயன்படுத்தல் ஆகும். அந்த வகையில் தூய்மையைப் பற்றியும் குப்பைத்தாள்களை அகற்றுவதும் குறித்தும் பின் வரும் பாடல்களைப் பாடி மகிழலாம்.

   “Baa, Baa, Black Sheep” என்னும் பாடல் 1731இல் இருந்து ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதே மெட்டில் பின்வரும் பாடலைப் பாடி மகிழுங்கள்.

     தூய்மை தூய்மை தூய்மையே செல்வம்

                        தூய்மை இன்றேல் நோய்தான் ஆளும்

                        நோயில் வீழ்ந்து நலிவது நன்றா?

                        தூய்மையாய் வாழ்ந்து பொலிவது நன்றா?

                        சொல்வீர் சொல்வீர் நல்லதைச் சொல்வீர்!

                        தூய்மையே நன்றெனத் தெளிவீர் இன்றே!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அல்லவா? நலமான வாழ்விற்குத் தூய்மையே அடிப்படை என்பதை வளரும் குழந்தைகளுக்கு உணர்த்துவோம்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

++




--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages