எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. ‘காலனி’: சரிதானா? – இலக்குவனார் திருவள்ளுவன்

0 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Feb 4, 2026, 5:38:31 AM (4 days ago) Feb 4
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. ‘காலனி’:  சரிதானா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு : தொடர்ச்சி)

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. ‘

காலனி’:  சரிதானா?

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. ‘காலனி’:  சரிதானா?

???  ஐயா, ‘காலனி’ என்றாலும் குடியிருப்புதானே

அவ்வாறுதான் நாம் பயன்படுத்தி வருகிறோம். காலோனியா /colōnia  என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவானதே காலனி/colony என்னும் சொல். உண்மையில் ‘காலனி’ என்பது குடியேற்றப் பகுதியைக் குறிக்கும். அஃதாவது, குடியேற்ற ஊர், குடியேற்ற நகர், குடியேற்ற நாடு என எல்லாமே ‘காலனி’தான். பிரித்தானிய ஆட்சியில் இந்தியாவே அவர்களின் ‘காலனி’யாகத்தான் இருந்தது.

வேறொரு நாட்டால் உருவாக்கப்பட்டு  ஆளப்படும் பகுதியே ‘காலனி’ ஆகும். வெளிநாட்டினர் ஒன்றாக வாழும் வகையில் ஒரு குழுவைக் குடியேற்றும் ஒரு நிலம் என்றும் சொல்லலாம்.

குடியேற்ற நாடு, குடியேற்றம், புதுக்குடியிருப்பு, கடல் கடந்த குடியமைப்பு, நாடு கடந்த குடியினம், வந்தேறு குடி, நகரின் அயல்நாட்டுக் குடியிருப்பு, கட்டியாள்புலம், தொழிலாளர் தனிக் குடியிருப்பு, தனிக்குடியமைப்பு, குடியமைப்பிடம்,  கிரேக்கக் கடல்கடந்த குடியிருப்பு; குடியேற்ற நாடு, என்பவற்றுடன் இப்போதைய வழக்கத்தின் அடிப்படையில் குடியிருப்பு, கூட்டுவாழ்வு, சேரி, வாழிருப்பு  எனவும் இப்போது அகராதிகளில் குறிக்கப்பட்டுள்ளன.

colonial power – கட்டியாளும் வல்லரசு; colonialism – கட்டியாளுகை; colonialist laws – கட்டியாளும் சட்டங்கள்;  British colony – பிரித்தானியரின் கட்டியாள்புலம்;  என்று சொல்லப்படுகின்றன.

குடியேற்றப் பகுதி என்னும் பொருள் மாறி, இப்போது புதிதாக உருவாக்கப்படும் உள்நாட்டினருக்கான வாழ்விடமும் குடியிருப்பு என்றாகி விட்டது.சான்றாக

Labour Colony – தொழிலாளர் குடியிருப்பு,

Housing Board Colony – வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு என்பனபோல் பயன்பாட்டிற்கு வந்து விட்டன, பால இடங்களில் காலனி என்றே பதவிப்பெயரகளில் குறிக்கப்படுகின்ற தவறுகளும் இடம் பெறுகின்றன.

சான்றாகக் கலெக்டர் காலனி,டி.ஆர.ஓ.காலனி, ஆபிசர் காலனி, சர்வேயர் காலனி என்பனபோல் பயன்பாட்டில் உள்ளதைக் காணலாம். சில இடங்களில் காலணி எனத்தவறாகவும் பெயர்ப்பலகைகள் உள்ளன. காலில் அணியப்படும் காலணிக்கும் குடியிருப்புப் பகுதிக்கும் வேறுபாடு அறியாதவர்களாக மக்கள் உள்ளனர். எனவே, எல்லா இடங்களிலும் ஆட்சியர் குடியிருப்பு, மாவட்ட வருவாய் அலுவலர் குடியிருப்பு, அலுவலர் குடியிருப்பு, நில அளவையர் குடியிருப்பு என்பன போல் தமிழிலேயே பெயர்ப்பலகைகள் குறிக்கப்பெற்றுப் பயன்பாட்டிற்கும் வர வேண்டும்.

உயிரியலில் bee colony- தேனீக் கூட்டம்

                        colony –  வாக்கம், குடியிருப்பு

வனத்துறையில்   

  Forestry            colony          தோப்பு (விதை/ஒட்டுமுறை)

மனை அறிவியலில்   micro colony      நுண்ணுயிர்க் குழுமல்

           colony hybridization    கூட்டுக் கலப்பினமாக்கம்

மருந்தியலில்           colony / bacterial colony            வளர்திரள்

கால்நடை அறிவியலில்   colony counter      நுண்மத் தொகுதிமானி

எனத் துறைச் சொற்களாக உள்ளன.

‘காலனி’யைச் சேரி என்றும் குறிப்பிடுகிறார்கள் அல்லவா? சேரி என்பது மக்கள் சேர்ந்து வாழும் பகுதியைக் குறிக்கும் நல்ல தமிழ்ச்சொல்.

கம்மாளர் சேர்ந்து வாழிடம் – கம்மாணசேரி

ஈழவர் சேர்ந்து வாழும் குடியிருப்பு – ஈழச்சேரி

வண்ணார் சேர்ந்து வாழிடம் – வண்ணாரச்சேரி

பிராமணர் குடியிருப்புப் பகுதி – பார்ப்பனச் சேரி

ஊர்த்தொடக்கத்தில் உள்ள புறவழிச்சேரி – தலைவாய்ச்சேரி

என்பன போல் வழக்கத்தில் இருந்துள்ளன.

“ஆலஞ்சேரி”(செங்கல்பட்டு), “வேளச்சேரி” (சென்னை), “மேச்சேரி”(சேலம்), “மட்டஞ்சேரி”(கொச்சி), “இரவுச்சேரி”( சிவகங்கை), “சங்கனாச்சேரி”(கேரளா), “பெரும்பச்சேரி”(பரமக்குடி), “ஒழிகினச்சேரி”(நாகர்கோவில்) என்பன போல் இப்போதும் நூற்றுக்கணக்கான ஊர்கள் உள்ளன.

சங்க இலக்கியங்களில் சேரி என்பது, சிற்றூர், தெரு, முல்லை நிலத்தூர் என்ற பொருள்களிலும் குறிக்கப்பெற்றள்ளன.

ஆனால் இப்பொழுது ‘காலனி’ / சேரி என்றால்

ஏழை எளிய மக்களால் குடியிருப்பிடமாகக் கொள்ளப்பட்ட பகுதி. இப்பகுதி ஒழுங்கு குலைந்த குடும்பங்கள், தரக்குறைவான குணாதிசயங்கள், ‘சுகாதார’மற்ற நிலைகள். அதிக மக்கள் தொகை மற்றும் சமூக ஒழுங்கு முறையற்ற தன்மை ஆகியவற்றை உடையதாகக் காணப்படும் என்று அகராதிகளில் குறிக்கும் நிலைக்கு வந்துள்ளது.

மேலும், தீண்டப்படாதார் சேர்ந்து வாழிடம், தீண்டாச்சேரி என்றும் குறிக்கப்பெறும் இழிநிலைக்கு வந்துள்ளது. ஒரு புறம் அதிகாரிகள் குடியிருப்புப்பகுதி ‘காலனி’ என அழைக்கப்பெற்றாலும்  அதற்கு முன்னரே ‘காலனி’-சேரி என்றால் தீண்டாதவர் வாழும் பகுதி என்று பழக்கத்திற்கு வந்து மன்பதையில் ஒரு பகுதியினரை இழிவாகக் கூறும் பழக்கம் வந்து விட்டது. எனவேதான், தமிழ்நாடு அரசு ‘காலனி’ என்று சொல்லும் பழக்கத்தை முற்றாக்கும் ஆணை பிறப்பிக்க உள்ளது.

“மண்ணின் ஆதிக் குடிகள் குறித்துத் தவறாக விளக்கும் வகையில் காலனி என்ற சொல் இடம் பெற்றுள்ளது. ஆதிக்கம், தீண்டாமையின் அடையாளமாகக் காலனி என்ற சொல் இனி நீக்கப்படும்” எனத் தமிழ்நாட்டு முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அரிசனக் காலனி என்று இருந்தால்  பூக்கள், மரங்கள், வரலாறு, நிலமபோன்றவற்றின் பெயர்கள் சூட்டத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால், காலனி என்பதற்கு மாற்றான சொல்லைப்பற்றிக் குறிக்வில்லை. முதல்வர் ஆறிவித்து ஒராண்டாகியும் ஆணை பிறப்பிக்கவில்லை என்றும் இதகால், காலனி என்ற பெயரே நீடிக்கிறது. இது குறித்துத் தினமலர் நாளிதழும் கவலை தெரிவித்துள்ளது.

மக்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதிக்குக் காலனி என ஆங்கிலத்தில் குறிப்படும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். காலனி என்னும் பயன்பாட்டையும் நீக்க வேண்டும். ஆங்கிலத்திலும் தமிழிலும் காலனி என்றே குறிக்கப்பட்டிருப்பின்  அவற்றைக் குடிமனைகள் என்று மாற்ற வேண்டும்.

– இலக்குவனார் திருவள்ளுவன்


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages