1. உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் -ப. மருதநாயகம் ++ 2. புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.26 – 1.7.30

20 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Oct 19, 2022, 5:05:40 PM10/19/22
to Akar Aadhan, muthun...@gmail.com, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsw...@gmail.com, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, limra...@gmail.com, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, antony louis, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, palanic...@gmail.com, HAMIDIA BROWSING CENTRE, rajendran krishnan, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, Batchaa Thiruchi, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, H...@ammkitwing.in, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan s, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, chitr...@gmail.com

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் -ப. மருதநாயகம்

 அகரமுதல



தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

பின்னிணைப்பு

உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்

1/5

செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வெளியீடாகப்(2022) பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகத்தின், ‘உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்’ நூல் வந்துள்ளது. இந்நூல் குறித்து அணிந்துரையில் நிறுவன இயக்குநர் பேரா.இரா.சந்திரசேகரன், “உயர்தனிச்செம்மொழித் தமிழின் உயர்வுக்கு உழைத்த சான்றோ்கள் பலராவர். அவர்களின் உண்மை உழைப்பை முறையாக எடுத்துச்சொல்ல வேண்டியது காலத்தின் தேவையாகும். அந்தத் தேவையை உரிய முறையில் செய்தளித்துள்ளார் பேராசிரியர் ப.மருதநாயகம் அவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூலில் தமிழ், செம்மொழியேயென்று முதற்குரல் கொடுத்த மூதறிஞர்கள் பதினால்வர் பங்களிப்பு குறித்தும் பதினைந்தாவதாக அகழ்வாராய்வாளர்கள் குறித்தும் நமக்கு நுண்மையாகவும் ஆழமாகவும் பேரா.ப.மருதநாயகம் விளக்கியுள்ளார்.

இந்நூலில் இடம் பெற்றுள்ள படைப்புகளுக்கான அறிஞர்கள் வருமாறு: -1. எல்லீசர், 2. போப்பு அடிகளார், 3. பரிதிமாற்கலைஞர், 4. மறைமலை அடிகள், 5. விபுலானந்த அடிகள், 6. திரு.வி.கல்யாணசுந்தரம், 7. தெ.பொ.மீனாட்சிசுந்தரன், 8. இலக்குவனார், 9. தனிநாயக அடிகள், 10. தேவநேயப் பாவாணர், 11. கைம் இராபின், 12. ஏ.கே.இராமானுசன், 13. பிரான்சுவா குரோ, 14. சியார்சு ஆர்த்து, 15. அகழ்வாராய்வாளர்கள்.

  1. அறிஞர் எல்லீசர்

காலுடுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை வெளியிடுவதற்கு அரை நூற்றாண்டிற்கு முன்னரே தமிழ்க்குடும்ப மொழிகளின் தனித்தன்மையை அறிவித்தவர் அறிஞர் எல்லீசர். திருக்குறளின் முதல் பதின்மூன்று அதிகாரங்களிலிருந்து தெரிந்தெடுத்த சில குறள்களுக்குக் கவிதை நடையில் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தந்துள்ளார். இவற்றை விளக்க அவர், தொல்காப்பியம், சங்க இலக்கியம், நீதி இலக்கியம், காப்பிய இலக்கியம், இலக்கணம், பிற்கால இலக்கியங்கள் எனப் பலவற்றிலிருந்தும் மேற்கோள்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கும் இவர் புலமை நயத்தை ஆசிரியர் பாராட்டுகிறார். 

புலமைத் திறனும் தமிழ்ப்பற்றும் இருப்பினும் அவற்றை விஞ்சிய சாதிப்பற்றும் இனப்பற்றும் உள்ளோர் உள்ளனர். எனவேதான், திருவள்ளுவர்,

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர் (திருக்குறள் 514)

என்றார். அவ்வாறு திகழும் அறிஞர்களுள் ஒருவராக எடுத்துக்காட்டாக அறிஞர் உ.வே.சா. விளங்குகிறார் என்பதை எல்லீசரின் மேற்கோள் பாடல் நமக்கு விளக்குகிறது.

அறம்பாடிற்றே ஆயிழை கணவ” என்னும் அடி வரும் புறநானூற்றுப்பாடலில் (361)

குரவர்த்தப்பிய கொடுமையோர்க்கும்

என இடம் பெற்றுள்ளது. ஆனால், உ.வே.சா. பதிப்பில்,

பார்ப்பார்த் தப்பிய” என இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் இடம் பெற்றுள்ள வேறு சில பாட பேதங்களைக் குறிப்பிடும் உ.வே.சா. குரவர் என்பது குறித்து ஒன்றும் குறிப்பிடவில்லை.

பரிமேலழகரின் உரையில் காணும் தவறுகளை அவ்வப்போது தயங்காது சுட்டிக்காட்டும் எல்லீசர், பரிமேலழகர் உரையில் வரும் அழகிய பகுதிகளை மதி நுட்பத்தோடு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் என இவரின் நடுவுநிலைமையைப் பாராட்டுகிறார்.

திருக்குறளில் இடம் பெறும் சில சொற்களையும் சில தொடர்களையும் கொண்டு கீழை மேலை மொழிகளின் தனித்தன்மைகளை விளக்குகிறார். எல்லீசரின் தமிழ் யாப்பிலக்கணம் குறித்த ஆங்கிலக் கையெழுத்துப்படி மூலம் அவரது இலக்கணப் புலமையையும் வியந்து போற்றுகிறார் ஆசிரியர். மொழியியல் வல்லுநர் ஏ.சி.பருனல், எல்லீசு உண்மையிலேயே ஒரு பெருங்கல்வியாளர் என்கிறார். போப்பு அடிகள், வியத்தகு திறன பெற்ற கீழ்த்திசையாளர் என எல்லீசைப்போற்றுகிறார். இவையாவும் உயர்வு நவிறசி அன்று என்று ஆசிரியர் கூறுகிறார்.

இவ்வாறு எல்லீசரின் திறனாய்வுத் திறனையும் மொழிபெயர்ப்புச் செம்மையையும் புலமைநயத்தையும் ஆசிரியர் நன்கு விளக்குகிறார்.

நிறைவாக, “எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லீசர் தமிழைச் செம்மொழித் தகுதியுடையதென்று கண்டு கொண்டதும், அதனை இந்திய நிருவாகப் பணித்துறைக்கு வரும் ஆங்கிலேயருக்கு நவீன மொழியாகவும் செம்மொழிகளில் ஒன்றாகவும் அறிமுகப்படுத்தியதும் வியற்து போற்றற்குரியதாகும்” என்கிறார் ஆசிரியர்.

  • போப்பு அடிகளார்

போப்பு அடிகளார் ஆக்குசுபோர்டு பல்கலைக்கழகத்துப் பேராசிரியராக இருந்தவர்; மொழிபெயர்ப்பு, அகரமுதலி, இலக்கணம், மொழியியல், வரலாறு, சமயம் ஆகிய துறைகளிலெல்லாம் அவர் இயற்றிய நூல்கள் தமிழ் அறிஞர்களுக்கு முன்மாதிரிகளாகத் திகழ்ந்தன என இரண்டாவது கட்டுரையில் போப்பு அடிகளார் குறித்து விளக்குகிறார்.

திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த போப்பு அடிகளார் தமிழின் தனித்தியங்கும் ஆற்றலையும் சொல்வளத்தையும் பாராட்டி தமிழ் செழுமையான, மூலச் சொற்களஞ்சியம் கொண்ட தனித்தியங்கும் மொழி (Tamil is an independent language with a copious and original vocabulary) என்று குறிப்பிடுகிறார்.

தமிழ் அறநூல்கள் கையாளும் வெண்பா யாப்பை சமற்கிருத யாப்புகளோடு ஒப்பிட்டுத் தமிழ்யாப்பிலக்கணத்தின் சிறப்பைப் போப்பு தெளிவாக எடுத்துக்காட்டுவதைக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.இலக்கண விளக்கங்கள், மொழிபெயர்ப்புகள் மூலம் போப்பு அடிகளாரின் சிறப்பை ஆசிரியர் நன்கு விளக்குகிறார்.

தனிப்பாசுரத் தொகையின் ஆங்கில மொழிபெயர்ப்பு முன்னுரையில் , ஆக்குசுபோர்டு பல்கலைக்கழகத்தில் நன்னூல், குறள், நாலடியார், திருவாசகம் ஆகிளவற்றை மொழிபெயர்த்து ஆய்வுப்பதிப்புகளாக வெளியிட்டதன் மூலம், அச்செவ்விலக்கியங்களை உலக இலக்கிய அரங்கிற்குக் கொண்டு செல்ல என்னால் ஆனதை எல்லாம் செய்துள்ளேன். தமிழ்க்கவிதை உலகில் ஓரளவு வெற்றியோடு நான் கால்பதிக்காத மூலை முடுக்கு ஏதும் இல்லை. தமிழ்மொழி, தமிழ்க்கவிதை, தமிழ் மக்கள் மீதெல்லாம் நான் பேரன்பு உடையேன் என்பது பொய்நடிப்பன்று. எனப் போப்பு அடிகள் குறிப்பிட்டதையே நிறைவாகத் தந்துள்ளார். அன்னார் தமிழுக்குச் செய்துள்ளது, இதனைப் போல்பல மடங்கு பாராட்டுக்குரியது என இக்கட்டுரையை ஆசிரியர் முடிக்கிறார்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

உயர்தனிச் செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்

ப.மருதநாயகம்

செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை 600 100

விலை உரூபாய் 500/-

(தொடரும்)

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.26 – 1.7.30

 அகரமுதல



(இராவண காவியம்: 1.7.21 -1.7.25. தொடர்ச்சி)

 

இராவண காவியம்

  1. தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம்
  1. துணையா நின்ற மறவோரைத் துணையாக் கொண்டே யுடனாகி
    இணையா நின்ற முன்னோனுக் கெதிரா வருமா கொடியோர்போல்
    அணியா நின்ற வணிகொண்டவ் வன்னைக் கெதிரா வவ்வணியே
    புணையா வந்த பாழ்ங்கடலே பொன்றா யோநீ யின்றோடே.

27. நன்றே பழகித் துணைசெய்யும் நல்லோர் போல நலஞ்செய்தே

ஒன்றார் போலப் பாழ்ங்கடலே உயிர்கொண் டொழிந்தா யோகெடுவாய்

என்றே புலம்பித் தமிழ்மக்கள் இடம்விட் டகலா விடரெய்தித்

தன்றா யிழந்த கன்றேபோல் தம்மூ ரிழந்து தவித்தாரே.

28.அன்னை புலம்பத் தந்தையழ ஆவா வென்றே மக்களழத்
தன்னை புலம்பத் தங்கையழத் தாவா நின்றே யொக்கலொடு
பொன்னை யிழந்துங் கைவந்த பொருளையிழந்தும் மணிமாடந்
தன்னை யிழந்தும் வடபாலி தன்னை யடைந்தார் தமிழ்மக்கள்.

ஷெ வேறு வண்ணம்

29.வேலியே பயிரை மேய்ந்தால் மேலொரு காப்பின் றேபோற்

கோலியே வேலி யாகக் குழவியைத் தாய்காப் பேபோற்

சாலவே காத்து வந்த தமிழ்க்கட லெனப்பேர் பெற்ற

வேலையே கொள்ளு மானால் வேறினிச் செய்வ தென்னே.

30. என்றவ ரமைதி கொண்டா ரென்னினு மிழந்த செல்வத்

தொன்றற வொன்று வந்தாங் கூசலாட் டுறவே யுள்ளம்

கன்றியே கதறி மேலோர் கழிந்ததற் கிரங்கே லென்னும்

நன்றியல் பொருளை யுன்னி நாள்கழிந் திருக்குங் காலை

         
குறிப்பு :
    26. அணியே புணை - தன்மீது பாடிய தமிழ்ப்பாட்டுக்களின் இனிமை கண்டே 

மேலும் காணப் பொங்கியது. 28. புலம்பல் – தனித்தல், அழுதல், தன்னை – அண்ணன்.
தாவா நின்று – தாவி, விரைந்து.

(தொடரும்)



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages