1. வெருளி நோய்கள் 211 -215 : இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2. இனிதே இலக்கியம் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

7 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Aug 4, 2025, 5:52:57 PM8/4/25
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan

வெருளி நோய்கள் 211 -215 : இலக்குவனார் திருவள்ளுவன்

 


ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      05 August 2025      கரமுதல


(வெருளி நோய்கள் 206 -210 தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 211 -215

  1. அவாய் வெருளி – Hawaiiphobia

அவாய்த்தீவுபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் அவாய் வெருளி.
அவாய்(Hawaii) ஐக்கிய அமெரிக்காவில் 50 ஆவது மாநிலமாக 1959இல் இணைந்த தீவுக்கூட்டம். வட பசிபிக்கு கடலில் அமைந்துள்ள இதன்தலைநகரம ஆனலூலூ(Honolulu).
அவாய்த்தீவு, அதன் மக்கள், மொழி, கலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றின்மீது ஏற்படும் தேவையற்ற வெறுப்பினால் விளைவது.
00

  1. அவிழ்ப்பு வெருளி – Exuerphobia

மருத்துவ ஆய்விற்காக உடைகளைக் கழற்றச் செய்தல் அவிழ்ப்பு வெருளி.
வேறு காரணங்களுக்காக உடலை அம்மணமாக்குவதிலிருந்து வேறு பட்டது இது.
மறைவிடங்களில் நோய் இருந்தால் மருத்துவரிடம் ஆடையை அவிழ்த்துக் காட்ட வேண்டுமே என்று அஞ்சி மருத்துவரைப் பார்க்காமல் நோயை முற்ற விடுபவர்களும் உள்ளனர்.
தொடைப்பகுதிகள் அல்லது பின் பகுதிகளில் ஊசி செலுத்துவதற்காக ஆடையை ஒதுக்க அஞ்சி அது குறித்துக் கவலைப்பட்டே ஆடை வெருளிக்கு ஆளாவோரும் உள்ளனர்.
வீட்டைச் சுற்றி அம்மணமாக நடக்கும் இயல்பு உள்ளவர்களும் மங்கிய வெளிச்சத்தில் மருத்துவர் முன் ஆடையை அவிழ்க்க அஞ்சுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
exuer என்றால் சட்டை கழற்று என்பது பொருள்.
காண்க: அம்மண வெருளி – Dishabiliophobia/Gymnophobia /Nudophobia
00

  1. அவைக்கோ வெருளி-Papaphobia

போப்பாண்டவர் என அழைக்கப்பெறும் அவைக்கோ மீதான தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் அவைக்கோ வெருளி.
உரோமன் கத்தோலிக்க திரு அவையின் தலைவர் போப்பு அல்லது போப்பாண்டவர் என அழைக்கப்பெறுகிறார். திரு அவையின் தலைவர் என்ற முறையில் இங்கே அவைக்கோ எனச் சுட்டப்பட்டுள்ளது. திருத்தந்தை என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.
துறவியர் வெருளி(Hierophobia/hermitphobia) சமயவர் வெருளி(Ecclesiaphobia/Ecclesiophobia) தூயவர் வெருளி(Hagiophobia) போன்ற சமயத்தவர் சாரந்த வெருளி இது.
papa என்னும் இலத்தீன் சொல்லிற்குப் போப்பு எனப் பொருள்.
00

  1. அழகி வெருளி – Caligynephobia/Venustraphobia/Cligynephobia

அழகு மங்கை பற்றிய காரணமற்ற பேரச்சம் அழகி வெருளி.
அழகான பெண்கள், சூடேற்றும் அல்லது சிற்றின்ப எழுச்சியூட்டும் பெண்கள் ஆகியவர்களுடனான உறவு அல்லது தொடர்பு அல்லது நட்பு முறியும் பொழுது அழகி வெருளி உண்டாகிறது. அழகான பெண்களைத் தொலைவிலிருந்து கண்டாலே, அவர்களுடன் எவ்வகைத் தொடர்பும் ஏற்படாத பொழுதே இத்தகையோர் திகிலடைந்து அல்லது மலைத்துப்போய் அல்லது திகைத்துப்போய்த் துன்பத்திற்கு ஆளாகின்றனர். இதனால் மூச்சுத் திணறல், வேகமாக மூச்சு விடுதல், சீரற்ற இதயத் துடிப்பு, வியரத்தல், குமட்டல், ஒட்டுமொத்தப் பேரச்சம் ஆகியவற்றால் பாதிப்புறுகின்றனர்.
பெண் வெருளி(gynephobia), சிறுமி வெருளி(puellaphobia) வகையைச் சேர்ந்தது. அவற்றின்உட்பிரிவாகவும் கொள்ளலாம்.
cali என்னும் கிரேக்கச் சொல்லிற்கு அழகு என்றும் gyne என்னும் கிரேக்கச் சொல்லிற்குப் பெண் என்றம் பொருள்கள்.
காதல் தேவதையைக் குறிக்கும் Venus என்னும் சொல்லில் இருந்து venustraphobia சொல் உருவானது.
00

  1. அழகு விலங்கு வெருளி – Yattniphobia

அழகான விலங்குகள், பறவைகள் மீதான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் அழகு விலங்கு வெருளி.
அழகு துன்பம் தருவது என்ற எண்ணங்கொண்டவர்களுக்கு அழகான விலங்குகளையோ பறவைகளையோ கண்டால் பேரச்சம் வருகின்றது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

வெருளி அறிவியல் தொகுதி 1/5

++

இனிதே இலக்கியம் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

1. எங்கும் கலந்து

image.png

ள்ள இறைவன்

கண்ணில் கலந்தான்; கருத்தில் கலந்தான்-என்

எண்ணில் கலந்தே இருகின்றான்;-பண்ணில்

கலந்தான்;என் பாட்டில் கலந்தான் -உயிரில்

கலந்தான் கருணை கலந்து.

எல்லாச் சமயத்தவரும் ஏற்கும் வண்ணம் பொதுநோக்கான இறைநெறிப்பாடல்கள் தமிழில்தான மிகுதியாக உள்ளன. இப்பாடலும்  அனைவரும் பாடுவதற்குரிய பொதுநிலைச் சிறப்பு உடையது.

இறைவன்,  அருட்பார்வை உடைய கண்ணில் கலந்திருக்கின்றான்; நற்செயல்களுக்கு அடிப்படையான நல்ல கருத்துகளில் கலந்திருக்கின்றான்;  பிறர் நலம் பேணக்கூடிய உயர்ந்த எண்ணத்தில் கலந்திருக்கின்றான்; இசையாகிய பண்ணிலும் பாட்டிலும் கலந்திருக்கின்றான்;  அருள்உணர்வுடன் நம் உயிரிலும் கலந்துள்ளான்.

எல்லா இடங்களிலும் கலந்து இணைந்துள்ள இறைவனை வள்ளலார் இவ்வாறு வாழ்த்துகிறார்.

எனவே, நமக்கு அருள் பார்வையும் நற்செயலும் உயர் எண்ணமும் நல்லிசையும் தேவை என்பதை  வள்ளலார் உணர்த்துகின்றார்.

திருவருட்பிரகாச வள்ளலார் என அழைக்கப்பெறும் இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவில் இருந்து இப்பாடல் எடுக்கப்பட்டு உள்ளது.


– இலக்குவனார் திருவள்ளுவன்

மீள் பதிவு



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
h
Reply all
Reply to author
Forward
0 new messages