சங்கப் புலவர்கள் பொன்னுரை – 19 : மக்களின் பொருள் அழியும்படி வரிப்பொருள் பெறாதே!-இலக்குவனார் திருவள்ளுவன்

2 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jul 31, 2025, 10:19:32 PM7/31/25
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 19 : மக்களின் பொருள் அழியும்படி வரிப்பொருள் பெறாதே!-இலக்குவனார் திருவள்ளுவன்

 


ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்      01 August 2025      கரமுதல


சங்கப் புலவர்கள் பொன்னுரை – 19

மக்களின் பொருள் அழியும்படி வரிப்பொருள் பெறாதே!


மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;
உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்
பொன்னும் கொள்ளார்

புலவர் கணி புன்குன்றனார்நற்றிணை 226.1-3

சிலர் புலவர் பெயரை “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பாடிய கணியன் பூங்குன்றனார் எனக் குறிப்பிடுகின்றனர்.

சொற்பொருள்: மரம் சா – மரம் சாகும்படி; உரம் சா – வலிமை குன்றும்படி: பொன்னுங் கொள்ளார் மன்னர் – ஆள்வோர் இறைப்பொருள் வாங்க மாட்டார்.

இலை, பூ, காய், கனி, வேர், பட்டை முதலான எல்லா வகையிலும் மருந்தாகப் பயன்படும் மருந்து மரத்தை அதன் சிறப்பான பயன் அனைத்தும் ஒருங்கே கிடைக்க வேண்டும் என்று மரத்தை வீழ்த்திப் பயன்படுத்துவார்களா? அல்லது மரத்தைப் பட்டுப்போகச் செய்வார்களா?

வலிமை பெறத் தவம் இருப்பவர்கள், தங்கள் வலிமை கெடும்படிப் பட்டினி கிடந்து வலிமை குன்றுவார்களா?

மக்களின் பொருள் வளம் அழியும்படி வரிப்பொருள் பெறுவார்களா?

இவ்வாறெல்லாம் செய்ய மாட்டார்கள் அல்லவா?

இப்பாடலின் மையப் பொருள் இக்கருத்துகள் அல்ல. இவற்றின் மூலம் பொருள் திரட்டச் சென்ற தலைவன் திரும்புவதற்குள் அதன் பயனைத் துய்க்கத், தான் இருக்க வேண்டுமல்லவா?

தானில்லாதுபோன பின்பு செல்வம் திரட்டி வந்து என்ன பயன்? எனத் தலைவி, தோழியிடம் உணர்த்துவதே! இருப்பினும் இவ்வுவமைகள் மூலம் மூன்று அறக்கருத்துகளைப் புலவர் குறிப்பிடுகிறார். அவற்றில் ஒன்றைத்தான் நாம் இங்கே பார்க்கிறோம்.

அரசன் எவ்வாறு வரி திரட்ட வேண்டும்?

“காய் நெல்லறுத்து” எனத் தொடங்கும் பாடலில் புலவர் பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பிக்கு வரியை அளவறிந்து பெற வேண்டும் என அறிவுரை கூறியுள்ளதை நாமறிவோம்.

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
                             (திருக்குறள், ௫௱௫௰௨ – 552)

என்கிறார் திருவள்ளுவர்.

ஆள்வோர் குடிமக்களிடம் முறை கடந்து வரி பெறுவது வழிப்பறிக் கொள்ளைக்குச் சமம் என்கிறார் இதில்.

அதேபோல் மக்களிடம் பொருளைப் பறித்துப் பொருளைத் திரட்ட மாடடார்கள் என்று அக்கால் ஆள்வோர் நடைமுறையைக் குறிப்பிடுகிறார். இதன்மூலம் மக்களிடம் பொருளைப் பறித்துப் பொருளைத் திரட்டாதே எனப் பிற்காலத்தவருக்கு அறிவுரை வழங்குகிறார் புலவர் கணி புன்குன்றனார்.

“வரியை அளவோடு! பெறுக! நாட்டை வளமாக ஆக்குக!” என்பதே தமிழ் நெறி.

எனவே, சங்கப் புலவர் பொன்னுரை வழி நடந்து ஆள்வோரிடம் மக்களின் பொருள் அழியும்படி வரிப்பொருள் பெறாதே! என்கிறோம் நாமும்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

தாய் 31.07.2025

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages