--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
//// - விண்ணியல் அறிஞர் ச்*டீவன் ஆக்கிங் //////
//// -
தூய தமிழ்வாதிகளே,
மொழிக்கு முதலில் ஒற்றெழுத்து வாராது என்று இலக்கணத்தை சொல்லிக் கொண்டு ஏன் ச்*டீவன் ஆக்கிங் என்றெழுதி சரியென்று வாதாட வருகிறீர் ?விஞ்ஞானம், பிரபஞ்சம், சக்தி, யுகம். சூனியம், சூரியன், சந்திரன், வாயு, அக்கினி, தீபம், ஞானம், சிந்தனை, சித்தம், மனம், மனிதன் போன்ற வட சொற்கள் அனுதினத் தமிழ்ச் சொற்கள் ஆகிவிட்டன.
On Jan 3, 10:22 am, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> *மகா ஐக்கியப் பிரபஞ்ச நியதியை (Grand Unified Theory, GUT )
> *...
>
மக்களுக்கு எளிதில் புரியும்படி உங்கள் கட்டுரைகள் உள்ளன.
மகிழ்வான 2011!
நா. கணேசன்
> read more »
>
> 2011/1/3 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
>
>
> > *//// - விண்ணியல் அறிஞர் ச்*டீவன் ஆக்கிங் //////
>
> > ஸ்டீஃபன் ஹாக்கிங் மகா ஐக்கியப் பிரபஞ்ச நியதியை () உருவாக்க முயன்று
> > வருகிறார். *
> > **
> > *விண்ணியல் என்றால் என்ன அர்த்தம் ? விண்ணியல் பிரபஞ்சம் ஆகாது.*
> > **
> > *அறிஞர் என்றால் விஞ்ஞானியாகுமா ? அப்படியானால் அறிஞர் அண்ணா ஒரு
> > விஞ்ஞானியா ?*
> > **
> > *ஸ்டீஃபன் என்பதை ச்*டீவன் என்று எழுதுவது தமிழுக்கும் இழுக்கு !!! ஸ்டீஃபன்
> > ஹாக்கிங் என்னும் பெயர்ச் சொல்லுக்கும் இழுக்கு !!! *
> > **
> > *தூய தமிழ் என்று சொல்லிக் கொண்டு தமிழ் விஞ்ஞானப் படைப்புகள்
> > பிற்போக்குத்தனமாக ஆக்கப் படுகின்றன.*
> > **
> > **
> > *ஜெயபாரதன்
> > *
> >> "தமிழ் மன்றம்" group.- Hide quoted text -
>
> - Show quoted text -
On Jan 3, 12:48 pm, Govindasamy Thirunavukkarasu
<gthirunavukkar...@gmail.com> wrote:
> ஐயா,
> கோவிந்த் என்பது ஒரு கடவுளைக்குறிக்கும் சொல். தமிழின் உச்சரிப்புக்குஏற்ப
> கோவிந்த ஆகிறது. ஸ்வாமி என்பது சாமி ஆகியுள்ளது என்று சொல்ல வருகிறீர்கள்.
கோவிந்த் கோவிந்த என்று தமிழாகவில்லை.
வடமொழியின் சொல் கோவிந்த என்பதாகும்.
தமிழில் னகரமெய் ஈற்றில் பெறும்.
> சாமி
> வடசொல்லாகி ஸ்வாமியாக வடக்கு நோக்கி சென்று இருக்கலாம்.எபடியிருப்பினும்
> கோவிந்தசாமி என்ற உச்சரிப்பு கடாபுடா இல்லாத உச்சரிப்பு....
>
சாமி ஸ்வாமி ஆகவில்லை.
நா. கணேசன்
> read more »
>
> 2011/1/3 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
>
>
> > *நண்பர் கோவிந்தசாமி திருநாவுக்கரசு,*
> > **
> > **
> > *கோவிந்த சாமி என்பது வடசொற்கள் கலப்பு. தூய தமிழ்ச் சொல்லில் முதலில்
> > உங்கள் பெயரை மாற்றுங்கள்.
> > *
> > **
> > *ஜெயபாரதன்.*
>
> > +++++++++++++++++++++++
> > 2011/1/3 Govindasamy Thirunavukkarasu <gthirunavukkar...@gmail.com>
>
> > கிரந்த எழுத்துக்களை கலந்து எழுதுவதுதான் முற்போக்கு என்று பொருள்கொள்வதா?
> >> சிறீரமன சர்மா கூறும் ஏனைய 26 கிரந்த எழுத்துக்களை தமிழில் புழனக்கினால்
> >> இன்னும் பல சமற்கிருத உச்சரிப்புகளையும் நாம் எழுதிக்காட்டமுடியும்.
>
> >> எதற்காக்...என்பதுதான் கேள்வி?
> >> சீனத்தலைவர் மாசேதுங் என்றார்கள். ஆனால் அது சீன உச்சரிப்பில்லை.என்ன
> >> செய்வது. எமது மொழியில் உள்ள எழுத்துக்களைக்கொண்டு எழுதினால் போதும்.
> >> ஆங்கிலேயர்கள் "தமிழ் "என்ர உச்சரிப்பை தனக்கள் மொழியில்
> >> கொண்டுவரமுடியவில்லையேஎன்று கவலைப்படுவதில்லை. தமிழர்களுக்கு மட்டும் இந்த
> >> தலைவலி ஏனோ? இதைவைத்துத்தான் ஆரியன் கிரந்த வரிவடிவினையும் மணிப்பிரவாள
> >> நடைஅயையும் கொண்டு வந்தான். இன்று தமிங்கலம் சொறி சிரங்காய் ஒவ்வொரு தமிழன்
> >> வாயிலு நுழைந்து வருகின்ரது.
>
> >> அறிவு வளர்ச்சி எல்லாம் சரிதான்! கண்கலை விற்று சித்திரம் வாங்கிய அறிவும்,
> >> இருந்த கோவனத்தை இரணடாய் கிழிக்கிற வளர்ச்சிகளும் ஆதிக்கம் செய்வோருக்கு
> >> பயன்படலாம். அடிபட்டுக்கிடக்கிர இனத்திற்கு அல்ல.
>
> >> இப்படித்தான் எழுதுவேன் என்றால் எழுதிக்கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பம்.
> >> அதுதான் சரியென்று தமிழ் இலக்கணத்தை தூக்கிவீசக்கூடாது.
> >> அன்புடன்
> >> அரசு
>
> >> 2011/1/3 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
> >>> *//// -
> >>> *
> >>> **
> >>> *தூய தமிழ் என்று சொல்லிக் கொண்டு தமிழ் விஞ்ஞானப் படைப்புகள்
> >>> பிற்போக்குத்தனமாக ஆக்கப் படுகின்றன.*
> >>> **
> >>> **
> >>> *ஜெயபாரதன்
> >>> *
> >>> +++++++++++++++++++++++++
> >>> 2011/1/3 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>- Hide quoted text -
--
On Jan 3, 1:51 pm, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> *நண்பர் திருநாவுக்கரசு, செல்வா,*
> **
> **
> *விஞ்ஞானம், விஞ்ஞானி என்று நான் எழுதக் கூடாதென்று சொல்லிவிட்டு இப்போது என்ன
> அறிவுரை கூற வருகிறீர் இருவரும் என்பது எனக்குப் புரிய வில்லை !!!*
> **
> *விஞ்ஞானம் என்ற சொல்லில் என்ன கிரந்தம் உள்ளது ????*
> **
தமிழ் வாழுகிற ஒரு மொழி. அதில் தேவைக்கேற்ப பிற
மொழிகளில் இருந்து கடன் பெறுதல் இயற்கைதான்.
கடன்பெறும் வார்த்தைகளை அறபி, ஆங்கிலம், உர்து,
ஹிந்தி, ... எழுத கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தலாம்.
மாற்றாக, டையாக்ரிட்டிக்ஸ் பயன்படுத்தவும் கூடும்.
எல்லா வகைகளையும் பயனர் சமுதாயத்திற்கு அளிப்பது
எஞ்சினீயர்கள் பொறுப்பு.
நா. கணேசன்
> ****
> *ஜெயபாரதன்.
> *
> ++++++++++++++++++++++++
> 2011/1/3 N. Ganesan <naa.gane...@gmail.com>...
>
> read more »
> > > >> வாயிலு- Hide quoted text -
On Jan 3, 3:48 pm, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> *நல்ல விளக்கம் நாசா கணேசன்.*
> **
> **
நன்றி, ஐயா. அமெரிக்க விண்மையம் நான் பணிபுரியும் இடம்.
நா. கணேசன் என்று எழுதுங்கள், மகிழ்வேன்.
> *தமிழ்த் தாலிபான்களுக்கு வடமொழி, இந்தி, உருது, ஆங்கிலச் சொற்கள், கிரந்த
> எழுத்துள்ள சொற்கள் போன்றவை தீட்டுச் சொற்கள். *
> **
> *ஆங்கிலத்தில் கட்டுமரான், அரிசி, கர்ரி, யோகா, காம சூத்ரா, குரு போன்ற இந்திய
> மொழிச் சொற்கள், ஏராளமான கிரேக்க, லத்தீன் சொற்கள் பழக்கத்தில் உள்ளன.
> *
> *அவற்றால் ஆங்கிலம் செழிப்பானதே தவிர சிதைந்து போக வில்லை.*
> **
> **
> *ஜெயபாரதன்.*...
>
> read more »
>
> ++++++++++++++++++++++
> 2011/1/3 N. Ganesan <naa.gane...@gmail.com>
> > > > > > *நண்பர் கோவிந்தசாமி- Hide quoted text -
திருவிளையாடற் புராணத்தில்
சங்கப் பலகை தந்த படலம் சுவைமிக்கது.
ஸம்ஸ்க்ருதத்தின் 49 எழுத்துக்கள்
சிவபிரான் தலைமையேற்க தமிழ்ப் புலவோராக
வீற்றிருந்த கதையை பரஞ்சோதி முனிவர்
அழகாப் பாடியுள்ளார். தமிழின் அழகைக்
காட்டிநிற்கும் நூல்களில் பரஞ்சோதி படைப்பும்
ஒன்று. பேரா. ந. மு. வேங்கடசாமி நாட்டார்
உரையும் இணைத்துள்ளேன்.
http://nganesan.blogspot.com/2010/12/sangap-palakai-alittatu.html
படித்தபின் உங்கள் கருத்தை எழுதுங்கள்.
நா. கணேசன்
On Jan 3, 3:48 pm, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> **
> **
> *தமிழ்த் தாலிபான்களுக்கு வடமொழி, இந்தி, உருது, ஆங்கிலச் சொற்கள், கிரந்த
> எழுத்துள்ள சொற்கள் போன்றவை தீட்டுச் சொற்கள். *
> **
Thanks for the explanation.
> *ஆங்கிலத்தில் கட்டுமரான், அரிசி, கர்ரி, யோகா, காம சூத்ரா, குரு போன்ற இந்திய
> மொழிச் சொற்கள், ஏராளமான கிரேக்க, லத்தீன் சொற்கள் பழக்கத்தில் உள்ளன.
> *
> *அவற்றால் ஆங்கிலம் செழிப்பானதே தவிர சிதைந்து போக வில்லை.*
> **
> **
> *ஜெயபாரதன்.*...
>
> read more »
>
> ++++++++++++++++++++++
> 2011/1/3 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
> > > > > > *நண்பர் கோவிந்தசாமி- Hide quoted text -
Thanks for the explanation.
On Jan 3, 6:13 pm, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com> wrote:
> 2011/1/3 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > Thanks for the explanation.
>
> :)
>
> இதையெல்லாம் நீங்கள் கெட்டிக்காரத்தனமாக நினைக்கின்றீர்கள்
> போலும் !! :)
>
> செல்வா
ஜெயபாரதன் ஐயாவின் விளக்கத்திற்கு நன்றி சொல்வதில்
என்ன கெட்டிக்காரத்தனம் ஐயா?
அன்புடன்,
கணேசன்
ஆழ்வார்களும், நாயன்மார்களும், கம்பனும், தொல்காப்பியரும் வாழ்ந்த காலத்தில் ஸ்டீஃபன் ஹாக்கிங்கும், ஹிக்ஸ் போஸானும், ஐன்ஸ்டைனும், ஸ்டிரான்சியமும், ஹைடிரஜனும், ஹீலியமும் இல்லை.
சங்க காலத்துச் சுத்தத் தமிழில் விஞ்ஞானத்தை எழுதினால் சங்க காலத்து மக்கள்தான் புரிந்து கொள்வார்.
மாறிவரும் புது விஞ்ஞான யுகத்தில் பூர்வீகத் தமிழ் இலக்கண விதி விலக்குகள் வரவேற்கப் பட வேண்டும்.
தாலிபான்கள் ஆஃப்கானிஸ்தானில் 1500 ஆண்டுகள் நிலைத்த புராதனப் புத்தர் சிலையை ஏவுகணைகள் ஏவித் தகர்த்து உடைத்தனர்.
அதைப்போல சில தமிழ்த் தாலிபான்கள் கிரந்தங்கள் உள்ள உன்னத தமிழ் இலக்கியங்களைத் திருத்த அல்லது அழிக்கத் தற்போது முயல்கிறார்.
////ஏன் இசுட்டீவன் ஃகாக்கிங், அல்லது இசுட்டீவன் ஆக்கிங்கு,
ஃகிக்ஃசு அல்லது இக்ஃசு, போசான், ஐன்சுட்டீன் அல்லது ஐன்சுட்டைன்,எசுட்ரான்சியம், ஐதரசன், ஈலியம் என்று எளிதாகக் கூறலாமே,////தமிழ் மொழியில் ஆங்கிலப் பெயர்ச் சொற்களைச் செம்மையாய் எழுத முடியாது, எழுதக் கூடாது என்பது பிற்போக்குத்தனம்.
////பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும். ////பல்லார் முனையப் பயனுள பேசுவான்செல்வாவால் எள்ளப் படும்.
நீங்கள் குறிப்பிட்ட பெயர்கள் எவையும் தமிழ் இலக்கண விதிகளுக்குச்
சிக்கல் அளிப்பதில்லை.
ஹனுமன் ==> அனுமன் (கம்ப ராமாயணம்)
ஹுண்டாய் ==> யுண்டாய் ( நிறுவனத்தின் தமிழ்ப் பெயர்ப் பலகையிலிருந்து)
ஹாங் காங் (ஹாங் ஹாங் இல்லை) ==> ஆங் காங் (பல பத்தாண்டுகளாக வழங்கி வரும் பெயர்)
ஹாக்கிங் ==> ஆக்கிங்
இன்னொரு மொழியில் இருக்கும் எல்லா ஒலிகளுக்குமே தமிழில் வரி வடிவம்
இருக்க முடியாது. ஒவ்வொரு மொழியும் தன் மரபுக்கு ஏற்ற முறையில் மாற்ற
வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
ஆங்கிலத்திலேயே ஒரே ஒலிப்பும் வெவ்வேறு எழுத்துகளும், ஒரே எழுத்தும்
வெவ்வேறு ஒலிப்புகளும் உடைய சொற்கள் உள்ளன:
bear chested = கரடி மார்பினன்
bare chested = திறந்த மார்பினன் (ஒரே ஒலிப்பு, வெவ்வேறு எழுத்து)
bear = கரடி
bear = தாங்கு (ஒரே எழுத்து, ஒரே ஒலிப்பு, வெவ்வேறு பொருள்)
Cap = கேப்
Cape = கேப்
Gap = கேப் (தமிழில் ஒரே எழுத்து, வெவ்வேறு ஒலிப்புகள்)
ஒலிப்புத் துல்லியம் இருந்தால்தான் மொழி வளம் பெறும் என்பதற்குச்
சான்றுகள் ஏதும் இல்லை.
ஜப்பானிய மொழி, சீன மொழி இவற்றில் எல்லாப் பிற மொழி ஒலிப்புகளையும்
குறிக்கக் குறிகள் இல்லை. அதே போல், சீன மொழிகளின் தொனிகளைக் குறிக்க
ஆங்கிலத்தில் குறிகள் இல்லை.
ஒரு முப்பதாண்டுகளுக்கு முன்னர், நாட்டுப்புறத் தமிழகத்தில் உங்கள்
பெயரைச் செயபாரதன் (Cheyapaaradhan) என்றுதான் பலுக்கியிருப்பார்கள்.
அதுதான் தமிழ் மொழியின் தன்மை. எப்படி உங்களுக்கு உங்கள் பெயரை நீங்கள்
விரும்பும்படி எழுத வேண்டும், ஒலிக்க வேண்டும் என்ற விருப்பம்
இருக்கிறதோ, அதே போல் தங்கள் மொழியில் இல்லாத ஒலிகளைப் பலுக்க மாட்டோம்
என்பவர்களின் எண்ணத்தையும் மதிக்க வேண்டும். தங்கள் மொழியில் இல்லாத
ஒலிகளைப் பிறமொழி எழுத்துகளில் எழுதிப் பிறமொழி போல் பலுக்க வேண்டும்
என்று மற்றவர்களைக் கட்டுப்படுத்த முயல்வதும் ஆதிக்க எண்ணமே.
நமது பெயர்களை வட அமெரிக்கர்கள் சிதைத்து ஒலித்தால் ஏற்றுக் கொள்கிறோமே,
ஏன்? ஆனால், தமிழர்கள் அதை மாற்றி அவர்கள் மொழியின் தன்மையில் எழுதினால்
மட்டும் கடுஞ்சினம் கொண்டு அவர்களைத் தாக்குகிறோமே ஏன்?
எந்தக் கண்ணில் வெண்ணெய் எதில் சுண்ணாம்பு?
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன் ( அல்லது அமெரிக்க ஒலிப்படி மேந்நி மேநவேந்நந்!)
கொட்டிவாக்கம், தமிழ்நாடு
2011/1/4 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
என் பெயரை வேண்டுமென்றே செயபாரதன் என்று எழுதுவது போக்கிரித்தனம்.
On Jan 4, 11:31 am, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> என் பெயரை வேண்டுமென்றே செயபாரதன் என்று எழுதுவது போக்கிரித்தனம்....
>
> read more »
>
> ஜெயபாரதன்.
>
அன்பின் செல்வா,
இம்மன்றத்தில் இருப்பவர்கள் அனைவரும் முனைவர்கள், அறிஞர்கள்.
ஜெயபாரதன், செல்வகுமார் - இருவரும் தமிழ் வளர்ச்சியில்
பல பதினாண்டுகளாய் உழைப்போர். பொறுத்தார் பூமியாள்வார்
என்பது நீங்கள் அறியாததா? பண்பாடு மிக்க குழ்மம் இது.
நாக. இளங்கோவன் போன்றோர் எழுதுமிடம் அல்லவா?
ஜெயபாரதன் ஐயா விரும்புவதுபோல் அவரது பெயரை
நீங்கள் எழுதச் சித்தம் கொள்ளவேணும். ஒருவர் பெயரை
அவர் விருப்பபடி எழுதும் அறிஞர்கள் பலரை அறிமுகம்
இருக்கிறது.
ஜெயபாரதன் ஐயா, உங்கள் விருப்பம்போல் விஞ்ஞானம் போதியுங்கள்.
செல்வா ஐயா, உங்கள் விருப்பம்போல் தனித்தமிழ் பரப்புங்கள்.
இரண்டையும் வாசிக்க தமிழன்பர்கள் நாங்கள் என்றும்
காத்திருக்கிறோம்.
அன்புடன்,
நா. கணேசன்
> ++++++++++++++++++++++++++++++
>
> 2011/1/4 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
>
>
>
> > பண்பற்ற முறையில் உரையாடாவிடில் (தாலிபான்,
> > போக்கிரித்தனம்), அப்படிபட்ட மடல்களைத் தமிழ்
> > மன்றத்தில் இருந்து நீக்கப்படும். தேவை இருப்பின்,
> > உறுப்பியமும் நீக்கப்படும். எவ்வளவு கடுமையாக
> > வேண்டுமானாலும் எதிர்க்கருத்துகள் கூறலாம், ஆனால்
> > பெயர் சுட்டி இழிசொல் கூறுதலும், தமிழைப் பழிக்கும்
> > மொழிகளும் தமிழ் மன்றத்தில் வேண்டாம்.
>
> > நான் கூறிய கருத்துகளுக்கு எதிர்க்கருத்துகள்
> > இருந்தால் தாருங்கள். இது போக்கிரித்தனம்,
> > தாலிபானியம், போன்ற தகாத மொழிகள் தவிர்க்க
> > வேண்டுகிறேன். நான் கேட்ட கேள்விகளுக்கு
> > விடை பகருங்கள், முடிந்தால்.
>
> > புறப்பெயர் (exonym, எக்ஃசோனிம்) என்பதை
> > அறிவீரா? ஒவ்வொரு மொழியும் அதனதன்
> > இயல்பின்படியேதான் புறமொழிப்பெயர்களையும்
> > சொற்களையும் உள்வாங்கும். இருக்கும் ஒலியன்களாக
> > இருப்பினும்கூட மொழியின் இயல்பின்படியே தான் உள்வாங்கும்.
> > இதனாலேயே ஆங்கிலத்தில் London என்னும் சொல்லைப்
> > பிரான்சியத்திலும், போர்த்துக்கீசியத்திலும், எசுப்பானியத்திலும்
> > *Londres* என்கின்றனர் கிரேக்க மொழியில் *Londino* (Λονδίνο) என்கின்றனர்
> > இடச்சு (டச்சு) மொழியில் *Londen *என்றும் இத்தாலிய
> > மொழியில் *Londra *என்றும் கூறுகின்றனர். எழுத்துகளும்
> > ஒலிகளும் இருந்தபோதும்! ஆங்கிலத்தில்
> > பின்வரும் சொற்களில் உள்ள எல்லா
> > ஒலியன்களும் இருந்தும் திருவனந்தபுரம், தூத்துக்குடி
> > போன்றவற்றை மாற்றி வழங்குகின்றனர்
> > (Trivandrum, Tuticorin). ஞானபாரதி, அழகப்பன் என்பதை
> > எபப்டி ஆங்கிலத்தில் எழுதுவர்? helium என்பதை
> > இத்தாலியர் Elio என்கின்றனரே, Strontium என்பதை
> > எசுப்பானியர் *estroncio *என்கின்றனரே. இதெல்லாம்
> > போக்கிரித்தனமா? தாலிபானியமா?
>
> > கற்றவர்க்கு அழகு பண்புடனும் கருத்துடன்
> > உரையாடிப் பழகுதல் ஐயா!!
> > அகவையால் மூத்தவர் நீங்கள்.
> > இப்படியெல்லாம் பேசுவதால்
> > நீங்கள்தான் உங்களைத் தாழ்த்திக்கொள்கிறீர்கள்,
> > நீங்கள்தான் உங்கள் மதிப்பை இழக்கின்றீர்கள்.
>
> > செல்வா
>
> > 2011/1/4 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
> > *பேராசிரியர் செல்வா,*
> >> **
> >> **
> >> *ஹீலியம் ஈலியம் ஆனதுபோல்,*
> >> **
> >> *ஹாங்ஹாங் என்னும் பெயர்ச் சொல்லை ஆங்காங் என்று சொல்வீரா ? காங்காங்
> >> என்பீரா ? ஈங்காங் என்பீரா ? கீங்காங் என்பீரா ? எப்படிச் சொன்னாலும் அது
> >> உமது பெயர்ச்சொல். எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் ஓர் பொதுப் பெயர்ச்
> >> சொல்லாகாது. விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாமா ? அல்லது
> >> பேராசிரியர் செல்வாவின் தாலிபான் அகராதியைத் தேட வேண்டுமா ?*
> >> **
> >> *ஸ்டீஃபன் ஹாக்கிங் - ஹாக்கிங் என்னும் பெயர்ச் சொல்லை காக்கிங் என்பீரா ?
> >> **ஈக்கிங் என்பீரா ? ஆக்கிங் என்பீரா ? அல்லது கீக்கிங் என்பீரா ?
> >> இப்படித் திரித்து ஒரு பெயர்ச் சொல்லை விருப்பம் போல் எழுதுவது
> >> போக்கிரித்தனம், மூடத்தனம். பிற்போக்குத்தனம், *
> >> **
> >> **
> >> *ஜெயபாரதன்.*
> >> **
> >> *+++++++++++++*
>
> >> 2011/1/4 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
>
> >>> 2011/1/3 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
> >>>> *////ஏன் இசுட்டீவன் ஃகாக்கிங், அல்லது இசுட்டீவன் ஆக்கிங்கு,*
> >>>> *ஃகிக்ஃசு அல்லது இக்ஃசு, போசான், ஐன்சுட்டீன் அல்லது ஐன்சுட்டைன்,*
> >>>> *எசுட்ரான்சியம், ஐதரசன், ஈலியம் என்று எளிதாகக் கூறலாமே,////*
> >>>> **
> >>>> *தமிழ் மொழியில் ஆங்கிலப் பெயர்ச் சொற்களைச் செம்மையாய் எழுத முடியாது,
> >>>> எழுதக் கூடாது என்பது பிற்போக்குத்தனம்.*
> >>>> **
>
> >>> கொஞ்சம் புறப்பெயர் (exonym) என்றால் என்ன என்று
> >>> கற்றுக்கொள்ளுங்கள். அது முற்போக்குத்தனம்.
> >>> பல முறை கூறியும் தெரிந்துகொள்ள மறுக்கின்றீர்கள்.
> >>> ஒவ்வொரு இசைக்கருவியையும் அதன்
> >>> இயல்பின் படி இசைப்பது அறிவுடைமை. வீணையையோ, வயலினையோ
> >>> தவில் அடிப்பது போலவோ, போர் முரசு கொட்டுவது
> >>> போலவோ கொட்ட முடியாது. Stephen, Splash, Station, School ஆகிய
> >>> சொற்கள் ஒவ்வொன்றையூம் கண்ணை மூடிக்கொண்டு
> >>> இயல்பாய் 3-4 முறை நேர்மையாகச் சொல்லிப்பபருங்கள்.
> >>> சிரிதளவாவது முன்னே துணை உயிரொலி இல்லாமல்
> >>> ஒலிக்க முடிகின்றதா என. உங்களால் முடியாது என்று
> >>> ஆணித்தரமாகக் கூறுகின்றேன். இசுட்டீவன் என்பது தமிழில்
> >>> எழுதி வழங்கும் முறை இதன் அறிவுடைமையை உணருங்கள்!
> >>> ஞானசம்பந்தன், அண்ணாமலை, கண்ணம் என்பன போன்ற
> >>> சொற்களை ஆங்கிலத்தில் ஒலிக்க இயலாது (திரித்து வழங்குவர்).
> >>> ஆங்கிலத்தில் உள்ள ஒலியன்களால் வழங்கக்கூடிய மது, திலக்
> >>> முதலான சொற்களையும் அவர்களால் துல்லியமாக ஒலிக்கத் தெரியாது.
> >>> பிரான்சியச் சொல்லாகிய Jean, Paris போன்ற சொற்களை ஆங்கிலேயர்கள்
> >>> தக்கவாறு எழுதவோ ஒலிக்கவோ வழியில்லை. இதெல்லாம்
> >>> கற்று அறிவது முற்போக்குத்தனம்.- Hide quoted text -
ளகர, டகர மட்டுமல்லாமல் சகரத்திலும் தமிழ்ச் சொற்கள் தொடங்குவதில்லை
என்று படித்த நினைவு.
லகர, ளகர, ழகர - ணகர, நகர, னகர - றகர, ரகர - என்ற வேறுபாடுகளையும் மறந்து
வருகிறோம். நிலைநிறுத்த வேண்டியவற்றோடு ஏற்றுக்கொள்ளவேண்டியவைகளும் உள்ளன
என்பதை மறுக்கக்கூடாது.
அறிவியலும் தமிழும் கலந்த குழுமம் இது- பகை வேண்டாமே!!!!
அன்புடன்
பாரதி
On Jan 4, 11:02 pm, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:
> 2011/1/4 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
> > என் பெயரை வேண்டுமென்றே செயபாரதன் என்று எழுதுவது போக்கிரித்தனம்.
>
> நான் தமிழில் எழுதும்பொழுது தமிழ்முறைப்படியே
> கூடியமட்டிலும் எழுதுபவன்.
> தமிழ் மன்றம் தமிழையும், தமிழ் மரபுகளையும் பேணி நடக்கும்
> மன்றம். உங்கள் பெயரைத் தமிழில் செயபாரதன் என்றுதான் எழுதுதல்
> கூடும். ஏதோ சிறு வேறுபாடு காட்ட வேண்டும் என்று விரும்பினால்,
> செ'யபாரதன் என்று எழுத இயலும். தமிழ் உங்களுக்கு
> இழுக்காக இருந்தால் தாராளமாக விலகிக்கொள்ளுங்கள்.
> இனியொரு முறையும் தகாத சொற்களால் எழுதுவீர்கள் எனில்,
> உங்களை இந்த மன்றத்தில் இருந்து
> விலக்குவதைத் தவிர வேறு வழியில்லை. இப்படி நான்
> கூறுவதற்கும் வருந்துகிறேன். என் செய்வது?!!
>
> ஒழுக்கம், நல்லொழுக்கம் உயிரினும் மேலானது. தமிழையும்
> தமிழ்ப்பண்பாட்டையும் மதிக்காமலும், தகாத முறையிலும்
> நடந்து கொள்வோருக்கு இம்மன்றத்தில் இடம் இல்லை.
>
> செல்வா
> மட்டுறுத்துநர், தமிழ்மன்றம்
>
>
>
>
>
>
>
>
>
> > ஜெயபாரதன்.
>
> > ++++++++++++++++++++++++++++++
>
> > 2011/1/4 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
>
> >> பண்பற்ற முறையில் உரையாடாவிடில் (தாலிபான்,
> >> போக்கிரித்தனம்), அப்படிபட்ட மடல்களைத் தமிழ்
> >> மன்றத்தில் இருந்து நீக்கப்படும். தேவை இருப்பின்,
> >> உறுப்பியமும் நீக்கப்படும். எவ்வளவு கடுமையாக
> >> வேண்டுமானாலும் எதிர்க்கருத்துகள் கூறலாம், ஆனால்
> >> பெயர் சுட்டி இழிசொல் கூறுதலும், தமிழைப் பழிக்கும்
> >> மொழிகளும் தமிழ் மன்றத்தில் வேண்டாம்.
>
> >> நான் கூறிய கருத்துகளுக்கு எதிர்க்கருத்துகள்
> >> இருந்தால் தாருங்கள். இது போக்கிரித்தனம்,
> >> தாலிபானியம், போன்ற தகாத மொழிகள் தவிர்க்க
> >> வேண்டுகிறேன். நான் கேட்ட கேள்விகளுக்கு
> >> விடை பகருங்கள், முடிந்தால்.
>
> >> புறப்பெயர் (exonym, எக்ஃசோனிம்) என்பதை
> >> அறிவீரா? ஒவ்வொரு மொழியும் அதனதன்
> >> இயல்பின்படியேதான் புறமொழிப்பெயர்களையும்
> >> சொற்களையும் உள்வாங்கும். இருக்கும் ஒலியன்களாக
> >> இருப்பினும்கூட மொழியின் இயல்பின்படியே தான் உள்வாங்கும்.
> >> இதனாலேயே ஆங்கிலத்தில் London என்னும் சொல்லைப்
> >> பிரான்சியத்திலும், போர்த்துக்கீசியத்திலும், எசுப்பானியத்திலும்
> >> *Londres* என்கின்றனர் கிரேக்க மொழியில் *Londino* (Λονδίνο) என்கின்றனர்
> >> இடச்சு (டச்சு) மொழியில் *Londen *என்றும் இத்தாலிய
> >> மொழியில் *Londra *என்றும் கூறுகின்றனர். எழுத்துகளும்
> >> ஒலிகளும் இருந்தபோதும்! ஆங்கிலத்தில்
> >> பின்வரும் சொற்களில் உள்ள எல்லா
> >> ஒலியன்களும் இருந்தும் திருவனந்தபுரம், தூத்துக்குடி
> >> போன்றவற்றை மாற்றி வழங்குகின்றனர்
> >> (Trivandrum, Tuticorin). ஞானபாரதி, அழகப்பன் என்பதை
> >> எபப்டி ஆங்கிலத்தில் எழுதுவர்? helium என்பதை
> >> இத்தாலியர் Elio என்கின்றனரே, Strontium என்பதை
> >> எசுப்பானியர் *estroncio *என்கின்றனரே. இதெல்லாம்
> >> போக்கிரித்தனமா? தாலிபானியமா?
>
> >> கற்றவர்க்கு அழகு பண்புடனும் கருத்துடன்
> >> உரையாடிப் பழகுதல் ஐயா!!
> >> அகவையால் மூத்தவர் நீங்கள்.
> >> இப்படியெல்லாம் பேசுவதால்
> >> நீங்கள்தான் உங்களைத் தாழ்த்திக்கொள்கிறீர்கள்,
> >> நீங்கள்தான் உங்கள் மதிப்பை இழக்கின்றீர்கள்.
>
> >> செல்வா
>
> >> 2011/1/4 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
> >> *பேராசிரியர் செல்வா,*
> >>> **
> >>> **
> >>> *ஹீலியம் ஈலியம் ஆனதுபோல்,*
> >>> **
> >>> *ஹாங்ஹாங் என்னும் பெயர்ச் சொல்லை ஆங்காங் என்று சொல்வீரா ? காங்காங்
> >>> என்பீரா ? ஈங்காங் என்பீரா ? கீங்காங் என்பீரா ? எப்படிச் சொன்னாலும் அது
> >>> உமது பெயர்ச்சொல். எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் ஓர் பொதுப் பெயர்ச்
> >>> சொல்லாகாது. விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாமா ? அல்லது
> >>> பேராசிரியர் செல்வாவின் தாலிபான் அகராதியைத் தேட வேண்டுமா ?*
> >>> **
> >>> *ஸ்டீஃபன் ஹாக்கிங் - ஹாக்கிங் என்னும் பெயர்ச் சொல்லை காக்கிங் என்பீரா
> >>> ? **ஈக்கிங் என்பீரா ? ஆக்கிங் என்பீரா ? அல்லது கீக்கிங் என்பீரா ?
> >>> இப்படித் திரித்து ஒரு பெயர்ச் சொல்லை விருப்பம் போல் எழுதுவது
> >>> போக்கிரித்தனம், மூடத்தனம். பிற்போக்குத்தனம், *
> >>> **
> >>> **
> >>> *ஜெயபாரதன்.*
> >>> **
> >>> *+++++++++++++*
>
> >>> 2011/1/4 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
>
> >>>> 2011/1/3 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>
>
> >>>>> *////ஏன் இசுட்டீவன் ஃகாக்கிங், அல்லது இசுட்டீவன் ஆக்கிங்கு,*
> >>>>> *ஃகிக்ஃசு அல்லது இக்ஃசு, போசான், ஐன்சுட்டீன் அல்லது ஐன்சுட்டைன்,*
> >>>>> *எசுட்ரான்சியம், ஐதரசன், ஈலியம் என்று எளிதாகக் கூறலாமே,////*
> >>>>> **
> >>>>> *தமிழ் மொழியில் ஆங்கிலப் பெயர்ச் சொற்களைச் செம்மையாய் எழுத முடியாது,
> >>>>> எழுதக் கூடாது என்பது பிற்போக்குத்தனம்.*
> >>>>> **
>
> >>>> கொஞ்சம் புறப்பெயர் (exonym) என்றால் என்ன என்று
> >>>> கற்றுக்கொள்ளுங்கள். அது முற்போக்குத்தனம்.
> >>>> பல முறை கூறியும் தெரிந்துகொள்ள மறுக்கின்றீர்கள்.
> >>>> ஒவ்வொரு இசைக்கருவியையும் அதன்
> >>>> இயல்பின் படி
>
> ...
>
> read more »
நண்பர் மணிவண்ணன்,
///நல்ல அறிவியல் கட்டுரைகள் எழுதும் உங்களுக்குப் பிறமொழிப் பெயர்கள் அனைத்தையுமே ”சரியாக”த் தமிழில் எழுதத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. நான் சுட்டிக்காட்டினாலும் நீங்கள் திருத்திக் கொள்ளப் போவதில்லை. அதனால் உங்களை நான் தாலிபான் என்று சொல்ல முடியுமா என்ன? ////இது உங்கள் யூகம். இப்படி முன்கூட்டி முடிவெடுப்பது உங்கள் பழக்கம்.என்னை பின்பற்றித்தான் எழுத வேண்டும் என்று யாரையும் நான் கட்டாயப் படுத்தியதில்லை.ஐன்சுட்டீன் என்றும் சிடீவன் ஆக்கிங் என்றும் எழுதுவது அந்தப் பெயருடையோரை மிகவும் இழிவு படுத்துவது என்றுதான் எழுதி வருகிறேன்.
////நீங்கள் உங்களுக்குப் பிடித்த நடையில், உங்களுக்குத் தெரிந்த முறையில் கிரந்தங்களைத் தேவையோ இல்லையோ அள்ளித் தெளித்து எழுதுகிறீர்கள். அதுதான் சரி என்று நினைப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களும் அவ்வாறே எழுத வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்கள்.///இதுவும் உங்கள் அனுமானத் திரிபுக் கருத்து. இதை நான் எங்கே வலியுறுத்தி உள்ளேன் ?
நண்பர் மணிவண்ணன்,
///எடுத்துக் காட்டாக Giovanni Cassini ( http://jayabarathan.wordpress.com/2010/12/10/astronomer-giovanni-cassini/ ) என்ற பெயரை எடுத்துக் கொள்ளுவோமே. அதை நீங்கள் கியோவன்னி காஸ்ஸினி என்று எழுதியிருக்கிறீர்கள். ஆனால், அந்தப் பெயரை ஜ்யோவாநி கசினி என்று உச்சரிக்க வேண்டும். (http://www.pronouncenames.com/pronounce/giovanni, http://www.forvo.com/word/giovanni_cassini/). இது மட்டுமல்ல, வேறு பல பிறமொழிப் பெயர்களையும் நீங்கள் ஒலிபெயர்த்து எழுதுவதில் பிழைகளைப் பார்த்திருக்கிறேன்.////ஜியோவானி கஸ்ஸினி என்று நான் மாற்றிக் கொள்கிறேன். அதுபோல் ஐன்ஸ்டைன், ஸ்டீஃபன் ஹாக்கிங், ஹிக்ஸ் போஸான், ஐஸக் நியூட்டன் என்று நான் எழுதி இருப்பது சரிதானே.
----- Original Message -----From: சி. ஜெயபாரதன்Sent: Monday, January 03, 2011 9:52 PMSubject: Re: [தமிழ் மன்றம்] கண்ணெழுத்தும், வட்டெழுத்தும், கந்தெழுத்தும் - 1மகா ஐக்கியப் பிரபஞ்ச நியதியை (Grand Unified Theory, GUT )
2011/1/3 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
//// - விண்ணியல் அறிஞர் ச்*டீவன் ஆக்கிங் //////
ஸ்டீஃபன் ஹாக்கிங் மகா ஐக்கியப் பிரபஞ்ச நியதியை () உருவாக்க முயன்று வருகிறார்.விண்ணியல் என்றால் என்ன அர்த்தம் ? விண்ணியல் பிரபஞ்சம் ஆகாது.அறிஞர் என்றால் விஞ்ஞானியாகுமா ? அப்படியானால் அறிஞர் அண்ணா ஒரு விஞ்ஞானியா ?ஸ்டீஃபன் என்பதை ச்*டீவன் என்று எழுதுவது தமிழுக்கும் இழுக்கு !!! ஸ்டீஃபன் ஹாக்கிங் என்னும் பெயர்ச் சொல்லுக்கும் இழுக்கு !!!
தூய தமிழ் என்று சொல்லிக் கொண்டு தமிழ் விஞ்ஞானப் படைப்புகள் பிற்போக்குத்தனமாக ஆக்கப் படுகின்றன.ஜெயபாரதன்+++++++++++++++++++++++++
2011/1/3 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>
கண்ணெழுத்தும் வட்டெழுத்தும், கந்தெழுத்தும் - 1
”அறிவின் எதிரி அறியாமையல்ல; அது அறிந்ததாய் எண்ணிக் கொள்ளும் மயக்கம்
- விண்ணியல் அறிஞர் ச்*டீவன் ஆக்கிங்
”தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும்” என்ற தொடரை முடித்து, அடுத்த சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது ”கிரந்தவெழுத்து எப்படி எழுந்தது? அதன் பின்புலம் என்ன? இற்றைத் தமிழெழுத்து வடிவம் எப்பொழுது தோன்றியது? சங்க காலத் தமிழெழுத்தின் பெயரென்ன? அது நம் இலக்கியங்களிற் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? வட்டெழுத்து என்பது என்ன? அது எப்பொழுது புழக்கத்திலிருந்தது? ஏன் மறைந்தது? புள்ளியிட்ட தமிழியெழுத்து, வட்டெழுத்து, கிரந்தவெழுத்து என்ற மூவகை எழுத்துக்களுக்கும் இடையிருந்த ஊடாட்டு என்ன? - என்ற கேள்விகளுக்கு விடை சொல்லாது போனோமோ?” என்று தோன்றியது.
அதேபொழுது, ஒருங்குறி நுட்பியற் குழுவிற்கு முன், வந்த கிரந்த முன்மொழிவுகளை ஆழ்ந்து பயிலாது, வெறும் அரைகுறைப் புரிதலில், பொதுக்கைப் போக்கில் "கிரந்தம் x கிரந்த எதிர்ப்பு" என்று எளிமைப் படுத்தி, “தாம் பிடித்த முயலுக்கு மூன்றே கால்” என அடம்பிடித்து வறளி பேசுவோர் ஒருசிலர் இருக்கிறாரே? அவருக்கு இது போன்ற எழுத்துப் பின்புலங்களைச் சொல்வது தேவையா? இவருக்குச் சொல்லி என்ன பயன் விளையும்?” - என்று ஓரோவழி சலித்தும் போனேன். தமிழ்க்காப்பில் தாம் மட்டுமே முன்னிற்பதாய் முழங்கும் ஒரு சிலர், ”ஆ., இராம.கி கிரந்தத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்” என்று முற்றிலும் அவதூறாய்க் கைதூக்கும் நேரத்தில், ”இக் கேள்விகளுக்கு விடையிறுத்து என்னாகப் போகிறது?” என்று தயங்கியும் நின்றேன். அப்புறம், இச் சலிப்பையும், தயக்கத்தையும் தூக்கியெறிந்து, சொல்ல வந்ததைச் சொல்லத்தான் வேண்டுமென முடிவு செய்தேன். புரியாத நாலு பேர் அறியாது தொல்லை கொடுப்பதாலேயே நமக்குத் தெரிந்ததைச் சொல்லாதிருக்க இயலுமோ?
இற்றைத் தொல்லியல் வளர்ச்சியில் சிந்து சமவெளி எழுத்துக்களைத் தவிர்த்துப் பார்த்தால், இந்தியப் பொறிப்புகளிலேயே மிகவுந் தொன்மை வாய்ந்தவை, அசோகர் கல்வெட்டிற்கும் முந்தியவை, தமிழகத்திற்றான் கிடைக்கின்றனவாம். கொங்கு மண்டலக் கொடுமணலிற் கிடைத்த பானைப் பொறிப்புகள் கி.மு.4/5 ஆம் நூற்றாண்டுகளுக்குக் கொண்டு செல்லுகின்றனவாம். அவை அசோகருக்கும் முன்னால் குறைந்தது 100 ஆண்டுப் பழமை வாய்ந்தனவாம். இந்தக் கண்டுபிடிப்புகளின் முகன்மை இன்று இந்திய வரலாற்றையே மாற்றிப் போட்டிருக்கிறது. அந்தக் காலத்து தி,,நா. சுப்பிரமணியன், இந்தக் காலத்து கே.வி.இரமேஷ், கா.இராஜன் போன்றோர் தமிழி எழுத்துக்களில் இருந்தே அசோகனின் பெருமி எழுத்துக்கள் எழுந்திருக்கலாம் என்ற ஏரணங் காட்டி மாற்றுச் சிந்தனைக்கு நம்மை நகர்த்துவார்கள். அவர்களின் ஏரணம் இன்னும் ஆய்ந்து உறுதி செய்யப்படவேண்டியவொன்றாகும்.
[ஆனால், தொல்லியலையும், கல்வெட்டு எழுத்துக்களையும், தூக்கிப் போட்டு மிதிக்க முனைவோருக்கும், செஞ்சீனக் ”கலாச்சாரப் புரட்சி” போல் இடதுசாரி எக்கு வாதத்திற் (left wing extremism) தோய்ந்து, பழைய ஆவணங்களைத் தூக்கிக் கடாசுவோருக்கும், ”வரலாறா, வீசை என்ன விலை?” என்பவருக்கும் இந்த எழுத்துத் தோற்றங்கள் விளங்காது.]
இனிக் கட்டுரைக்கு வருவோம். என்னுடைய ”தொல்காப்பியமும் குறியேற்றங்களும்” என்ற தொடரின் 5-ஆம் பகுதியில் (http://valavu.blogspot.com/2006/11/5.html) பழம் எழுத்துமுறைகள் பற்றி ஒருசில பத்திகளிற் சொல்லியிருப்பேன். மேலும் அத்தொடரின் 6-ஆம் பகுதியில் (http://valavu.blogspot.com/2006/11/6.html) ஒரு படத்தொகுதியால் விளக்கியிருப்பேன். அவற்றைச் சில திருத்தங்களுடன் இங்கு மீண்டுந் தருகிறேன்.அன்புடன்,
இராம.கி.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
ஏதோ சிறு வேறுபாடு காட்ட வேண்டும் என்று விரும்பினால்,செ'யபாரதன் என்று எழுத இயலும்.
ஹனுமன் ==> அனுமன் (கம்ப ராமாயணம்)
ஹுண்டாய் ==> யுண்டாய் ( நிறுவனத்தின் தமிழ்ப் பெயர்ப் பலகையிலிருந்து)
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
ஹனுமன் ==> அனுமன் (கம்ப ராமாயணம்)
ஹுண்டாய் ==> யுண்டாய் ( நிறுவனத்தின் தமிழ்ப் பெயர்ப் பலகையிலிருந்து)
தமிழில் யு முதல் எழுத்தாய் வருமா?உண்டாய்?
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

அவரவர்க்கு இயன்றவரை கிரந்தம் தவிர்ப்பதும், பிறமொழிச்சொல் தவிர்ப்பதுமே நற்றமிழ்!
தமிழில் உரையாடி தமிழில் எழுதி தமிழை வாழ்மொழியாக்கிக் காப்பதே தமிழினத்திற்கான முதற் தேவை!
இயன்றவரை நல்ல தமிழ் எழுத முயல்வோம் என்ற உயரிய நோக்கம், உறுதி பெரும்பாலோர் மனதில், எழுத்தில் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

தமிழ் என்றாலே அது தனித்தமிழ்தான். ஏனையவை கலப்படங்கள்தான்.
--
அன்பிற்கினிய திருநாவுக்கரசு அவர்களுக்கு,
தமிழன்னை எனக்குத் தந்தது சில்லறைச் சலுகைகளையல்ல உயர்வான வாழ்க்கையையும் நிம்மதியையும். என் பண்பாடும் கலாச்சாரமும் தமிழ் தந்தது. என் அடையாளமும் இருப்பும் தமிழ் தந்தது.
என் பெயரின் உச்சரிப்பில் தமிழ் எனக்குச் சலுகை தந்தது என்றால் எனக்குத் தேவை ஒரு சலுகை அல்ல இரு சலுகைகள். ஒன்று ’ஹா’ என்ற உச்சரிப்பு. அடுத்தது ’Bu’ என்ற உச்சரிப்பு.
‘ஹா’ என்ற உச்சரிப்பை எழுத்தப்படாத ஆனால் ஒலிக்கப்படும் எழுத்தில் தமிழ் வைத்திருந்தது. அதை அடையாளம் கண்டதும் உடனே பயன்படுத்திக்கொண்டேன்.
இந்த B யின் ஓசை அன்பு என்று வரும்போது வந்துவிடும். ஆனால் சொல்லின் முதல் எழுத்தாக வரும்போது வர வழியில்லை. அதனால் நான் கவலைப்படவில்லை. எனக்கு முன்னரே பாரதிகளும் பாலுகளும் கவலைப்பட்டதில்லை. ஏனெனில் எழுத்தில் இருப்பதை வாசிக்கும்போது கற்றோர் பழகின பயன்பாட்டையே பின்பற்றுவர். அப்படித்தான் பாரதி பாரதிதாசன் என்ற பெயர்களெல்லாம் சரியாக உச்சரிக்கப்படுகின்றன.
’தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடியவர் பாரதிதாசன். ஆனால் அவர் பெயரை ஏன் தூய தமிழில் வைத்துக்கொள்ளவில்லை என்று அடிக்கடி யோசிப்பேன். தமிழ்மீதுள்ள பற்றைவிட பாரதியின் மீதுள்ள பற்றுதான் மிகுத்திருந்ததா அவருக்கு என்ற ஐயம் தோன்றும்.
பாரதி என்ற சொல்லும் தாசன் என்ற சொல்லும் தமிழ் மூலச் சொற்கள் அல்ல. தமிழனின் பெயர் என்ற அளவில் அது தூய தமிழாய் மட்டுமே இருக்கத் தேவையில்லை என்று அவர்கள் கருதியிருக்கலாம். ஆனால் அவர்களுடைய தமிழ்ப் பற்றைக் குறைத்துக்கூற முடியுமா?
அவ்வண்ணமே, பிறமொழிப் பெயர்களைக் கொண்டிருப்பதாலும், கிரந்தம் பயன்படுத்துவதாலும் ஒருவனின் தமிழ்ப்பற்றை இழித்துக்கூறுவது அறிவுடைமையாய் எனக்குப்படவில்லை.
ஆனால் வெறுமனே கிரந்தத்தை வலியப் புகுத்துதலும், பிறமொழிச் சொற்களிலேயே விருப்பம் மிகக் கொண்டுள்ளமையும் தமிழை அழிக்கச் செய்யும் அறியாமைச் செயலாகத்தான் இருக்கமுடியும்.
சேக்ஸ்பியர் காலத்து ஆங்கிலத்தைக் கட்டிக்கொண்டு, தனி ஆங்கிலமே தேவை என்று ஆங்கிலம் கொடிபிடித்திருந்தால் இன்று ஆங்கிலம் இந்த அளவிற்குப் பரந்து விரிந்து உலக மொழிகளின் முதன்மைக்குப் போட்டிபோட்டுக்கொண்டிருக்க வழியில்லை.
பிறந்த குழந்தை பிறந்ததுபோலவே இருப்பதுதான் சரி. அது வளர்ந்தால் கலப்படமாகிக் குரங்காகிவிடுகிறது என்று எண்ணுவது அறிவுடைமையா? ஓலைச்சுவடி தொடங்கி கணினி வரை குறைந்தது ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்துவிட்ட தமிழ் எத்தனை வளர்ச்சியினை அடைந்திருக்கும்?
தமிழின் வளர்ச்சி என்றால் என்ன? தொல்காப்பியனுக்குப்பின் இலக்கண இலக்கிய மாற்றங்களே இல்லாதிருப்பதா? என்றால் அது வாழ்தமிழ் இல்லை. வாழ்ந்த தமிழ். தொடர் தமிழ் இல்லை முடிந்த தமிழ்.
தமிழன் இன்று ஒரு கிணற்றுக்குள் வாழவில்லை. வடவேங்கடம் தென்குமரியை உடைத்துக்கொண்டு, பூமிப்பந்தையும் கடந்து சந்திரன் செய்வாய் என்று சென்று வாழும் நிலையில் இருக்கிறான். அவனது இன்றைய தேவைக்கேற்ப தமிழும் அவனுக்கு முன்சென்று பறக்கிறது. இது இனிப்பான ஒன்றல்லவா? ஏன் துக்கம்?
தமிழ் தமிழனின் அன்றாட பயன்பாட்டில் இல்லாதுபோனால்தான் எனக்குத் துக்கம் வரும். தமிழில் இதெல்லாம் சொல்லமுடியாது அதெல்லாம் செய்யமுடியாது என்று சொல்லும் தமிழனை நான் வெறுக்கிறேன். எதுவும் முடியும், தமிழ் எப்படியும் வளையும் என்று சொல்லுவோரால்தான் தமிழ் வாழும் வளரும்.
நான் ஊசுடன் என்று எழுதுவதைவிட ஹூஸ்டன் என்று எழுதுவதையே விரும்புகிறேன். அப்படி விரும்பும்போது நான் நற்றமிழுக்கு ஏதும் இழுக்கினைச் செய்துவிடவில்லை.
புழங்குதமிழே நற்றமிழ். புழங்கப்படாத தமிழ் அழியும் தமிழ். இன்றைய புழக்கத்தில் தமிழ்ச்சொற்களைக் கொண்டுவந்து சேர்ப்போர் நல்ல தமிழர்கள் என்று கொள்வேன். அதே சமயம் இன்றைய அறிவியல் தேவைகளையும் உலகத் தொடர்பு உரையாடல்களையும் கருத்தில் கொண்டு தனித்தமிழ்ப் பிடிகளைத் தளர்த்துவதே சிறப்பு என்றே கருதுகிறேன்.
தமிழில் உரையாடி தமிழில் எழுதி தமிழை வாழ்மொழியாக்கிக் காப்பதே தமிழினத்திற்கான முதற் தேவை!
வடமொழிச்சொற்கள் மட்டுமின்றி உலகின் பல பகுதியில் உள்ள சொற்கள் தமிழில் வந்து கலந்துள்ளன. இன்று ஏதும் புதிதாய் வடமொழிச் சொற்கள் வந்து சேரவில்லை. அவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்துசேர்ந்துவிட்டன. ஆனால் அது தமிழை அழிக்கும் ஈன எண்ணத்தோடு செய்யப்பட்டவை.
ஆகவே தமிழறிஞர்கள் தமிழை மீட்டெடுக்கத் தமிழ்ப்புரட்சி செய்தார்கள். மீண்டும் தமிழை உயர்த்திப் பிடித்தார்கள். இதன் பொருள் இனி ஒரு புதுச் சொல்லும் வேறு மொழியிலிருந்துதமிழுக்குள் வந்துவிடக்கூடாது என்பதல்ல. தமிழை அழிக்கும் முகமான எதுவும் இனி நிகழக்கூடாது என்பதே.
இன்றைய காலகட்டத்தில் தமிங்கிலம் வந்து தமிழுக்குள் குதியோ குதியென்று குதிக்கிறது. அதனை எதிர்த்தே நாம் போராடவேண்டும். அதைவிட்டுவிட்டு கிரந்தம் அழிப்பு தனித்தமிழ் ஒன்றே தமிழ் என்று கூறுவது போன்றவை நம்மை நாமே முடக்கிக்கொள்வது.
ஆங்கிலம் தமிழை மட்டும் தாக்கவில்லை. உலக மொழிகள் அனைத்தையும் தாக்குகின்றது. இந்தி பேசுவோர் நம்மைவிட மிக அதிகமாக ஆங்கிலம் கலந்து பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இப்படியே சைனா, ஜப்பான், கொரியா என்று பல நாட்டு மொழிகளும். உலகில் இன்று ஆங்கிலச் சொற்களைக் கலக்காமல் பேசுவோர் மிகக் குறைவு.
இன்றைய நாட்களில் மனித இனங்கள் எப்படி ஒன்றுடன் ஒன்று கலந்து ஒட்டு இனங்களாய் நிற்கின்றவோ அப்படியே மொழிகளும் நிற்கின்றன. கனடாவின் டொராண்டோ வந்தீர்களென்றால், எங்கும் கலப்பு எதிலும் கலப்பு என்பதுபோல், தமிழ்ப்பெண் ஆஃப்கானிஸ்தான் பையனை மணக்கிறாள். சைனாக்காரன் ஜெர்மானியப் பெண்ணை மணக்கிறான். கறுபர் வெள்ளையரை. வெள்ளையர் மஞ்சள் இனத்தவரை என்று மனித இனங்கள் பிணைந்து நிற்கின்றன. இவர்களெல்லாம் அந்த ஊரின் வட்டார மொழியே தம் புழங்குமொழியாய்க் கொள்கின்றனர். அது வேறென்ன ஆங்கிலம்தான்.
இதில் ஒரு தமிழ்ப்பெண் ஜார்ஜ் புஷ் என்ற ஆங்கில இளைஞனை மணந்தபின், சார்சு பூழ்சு என்று அழைத்தால் என்னாகும்? அதைப்போலவே ஒரு வெள்ளைக்காரன் காத்தாயியை மணந்தபின், ’கேட்டாய்’ என்றால் என்னாகும்? இளையவர்கள் நிறையவே வளைகிறார்கள். எல்லாவற்றையும் நேசிக்கிறார்கள். தன்னையும் தன் மொழியையும் நேசிப்பதுபோலவே பிறரையும் பிற மொழிகளையும் நேசிக்கிறார்கள்.
கிலோ மீட்டர், லிட்டர் என்பதையெல்லாம் தமிழாக்கவேண்டும் என்று நினைப்பது தேவையா? அதேபோல கணினி, இணையம், யுனித்தமிழ் போன்ற சொற்களைப் புழங்காமல் இருப்பது சரியா?
தமிழன் வேற்று மொழிப் பெண்ணை மணந்தாலும் தமிழை விடக்கூடாது. அப்பெண்ணின் மொழியை அறிந்துகொண்டு அதையும் பேசவேண்டும். அவளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்து அவள் தமிழையும் பேசவேண்டும். இரண்டு மொழிகளும் பிள்ளைகளின் மொழியாக வேண்டும். அதுதான் சிறப்பு. ஒரு மொழி அழியாமல் காக்கும் பண்பாடு. அந்தப் பண்பாட்டை வளர்க்கப் பாடுபடுவோம். அது தமிழின் தேவைமட்டுமல்ல உலக மொழிகளின் தேவை.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறையினர் எளிய வழிகளில் தமிழை உள்ளிழுத்துக்கொள்ள என்ன வழியென்று கண்டு அதனைச் செம்மையாக வளர்ப்போம்.
’என்னம்மா குஷ்புவை குசுபூங்கிற’ என்று மகள் கேட்டுச் சிரிக்காதவாறு தமிழ் வளர்ப்போம். குஷ்பு என்பதென்ன தமிழ்ச்சொல்லா, வெறும் பெயர்ச்சொல்தானே? அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே. இதனால் நற்றமிழ் எப்படி கெடும்?
வேட்டி என்பதை வேஷ்டி என்று கூறினால் நாம் திருத்துவோம். கனவு என்பதை ட்ரீம் என்று எழுதினால் வசைபாடுவோம். அப்படிச் செய்வதுதான் நற்றமிழுக்கு இழுக்கு.
பெயர்ச்சொற்களை அததன் வழியில் இயன்றவரை உச்சரிக்க முயல்வதில் தமிழ் ஒருக்காலும் கலப்படத்தமிழாய் ஆகிவிடாது.
புகாரி என்று எழுதி Buhari என்று வாசிக்கிறோம். பாரதி என்று எழுதி Bharathi என்று வாசிக்கிறோம். இதனால் தமிழ் அழிந்துவிடுமா? சார்சு பூழ்சு என்று எழுதி அதை ஜார்ஜ் புஷ் என்று வாசிக்க முடிந்தால் அப்படி எழுதுவதில் ஏதும் குழப்பம் இல்லைதான். ஆனால் அப்படி வாசிக்கமுடியுமா? முடியும் என்றால் அது வெற்று விவாதமாகவே ஆகும்.
உடனே, அழகிய தமிழ் எழுத்துக்கிடையில் உள்ள ஐந்து கிரந்தங்களை அழிக்கிறேன் பார் என்று கூறிக்கொண்டு தமிழ் எழுத்தின் இங்கும் அங்கும் கரும்புள்ளி செம்புள்ளி குத்துவதும் ஆப்பிரிக்க இன அடையாளக் கோடுகள் கிழிப்பதும் அருவருப்பைத் தருகிறது. அதற்குப் பதிலாக கிரந்தம் தவிர்ப்போம் என்று கூறுவதுதான் சரி.
கிரந்தம் தவிர்ப்பது என்றால் என்ன? புகாரி என்பதை புஹாரி என்று எழுதாமல், ஆனால் ஜார்ஜ் என்பதை சாருசு என்றும் எழுதாமல் நற்றமிழ் எழுதுவது. அதாவது அவசியம் இல்லாமல் பெயர்ச் சொற்களிலும் கிரந்தம் இடாமல் இருக்க உறுதி கொள்வது. இயன்றவரை உச்சரிப்பை முதன்மையாகக்கொண்டு பெயர்ச்சொற்களை அமைப்பது,
அன்புடன் புகாரி
அன்பிற்கினிய திருநாவுக்கரசு அவர்களுக்கு,
.
தமிழன் இன்று ஒரு கிணற்றுக்குள் வாழவில்லை. வடவேங்கடம் தென்குமரியை உடைத்துக்கொண்டு, பூமிப்பந்தையும் கடந்து சந்திரன் செய்வாய் என்று சென்று வாழும் நிலையில் இருக்கிறான். அவனது இன்றைய தேவைக்கேற்ப தமிழும் அவனுக்கு முன்சென்று பறக்கிறது. இது இனிப்பான ஒன்றல்லவா? ஏன் துக்கம்?
தமிழ் தமிழனின் அன்றாட பயன்பாட்டில் இல்லாது போனால்தான் எனக்குத் துக்கம் வரும்.
புழங்குதமிழே நற்றமிழ். புழங்கப்படாத தமிழ் அழியும் தமிழ்.
. இன்று ஏதும் புதிதாய் வடமொழிச் சொற்கள் வந்து சேரவில்லை. அவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்துசேர்ந்துவிட்டன. ஆனால் அது தமிழை அழிக்கும் ஈன எண்ணத்தோடு செய்யப்பட்டவை.
ஆகவே தமிழறிஞர்கள் தமிழை மீட்டெடுக்கத் தமிழ்ப்புரட்சி செய்தார்கள். மீண்டும் தமிழை உயர்த்திப் பிடித்தார்கள். இதன் பொருள் இனி ஒரு புதுச் சொல்லும் வேறு மொழியிலிருந்துதமிழுக்குள் வந்துவிடக்கூடாது என்பதல்ல. தமிழை அழிக்கும் முகமான எதுவும் இனி நிகழக்கூடாது என்பதே.
இன்றைய காலகட்டத்தில் தமிங்கிலம் வந்து தமிழுக்குள் குதியோ குதியென்று குதிக்கிறது. அதனை எதிர்த்தே நாம் போராடவேண்டும். அதைவிட்டுவிட்டு கிரந்தம் அழிப்பு தனித்தமிழ் ஒன்றே தமிழ் என்று கூறுவது போன்றவை நம்மை நாமே முடக்கிக்கொள்வது.
பெயர்ச்சொற்களை அததன் வழியில் இயன்றவரை உச்சரிக்க முயல்வதில் தமிழ் ஒருக்காலும் கலப்படத்தமிழாய் ஆகிவிடாது.
உடனே, அழகிய தமிழ் எழுத்துக்கிடையில் உள்ள ஐந்து கிரந்தங்களை அழிக்கிறேன் பார் என்று கூறிக்கொண்டு தமிழ் எழுத்தின் இங்கும் அங்கும் கரும்புள்ளி செம்புள்ளி குத்துவதும் ஆப்பிரிக்க இன அடையாளக் கோடுகள் கிழிப்பதும் அருவருப்பைத் தருகிறது. அதற்குப் பதிலாக கிரந்தம் தவிர்ப்போம் என்று கூறுவதுதான் சரி.
கிரந்தம் தவிர்ப்பது என்றால் என்ன? புகாரி என்பதை புஹாரி என்று எழுதாமல், ஆனால் ஜார்ஜ் என்பதை சாருசு என்றும் எழுதாமல் நற்றமிழ் எழுதுவது. அதாவது அவசியம் இல்லாமல் பெயர்ச் சொற்களிலும் கிரந்தம் இடாமல் இருக்க உறுதி கொள்வது. இயன்றவரை உச்சரிப்பை முதன்மையாகக்கொண்டு பெயர்ச்சொற்களை அமைப்பது,
அன்புடன் புகாரி