Re: [MinTamil] திருவாசகம் முழுவதும் வடமொழியில் அச்சாகிறது

273 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
May 22, 2014, 11:14:17 PM5/22/14
to mintamil, வல்லமை, adi...@shaivam.org, Maravanpulavu K. Sachithananthan, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, Raji M, podhuvan sengai
பசவம் என்றால் எருது = நந்தி (ஆண்பால்,// பெண்பால் -நந்தினி= பால்  கொடுக்கும் பசு=கர்நாடக பால் வள நிறுவம் பெயர் நந்தினி ) 

கர்நாடாகாவில் லிங்காயத்துகள்  எனும் சைவ உட்பிரிவை தோற்றியவர் பசவண்ணா

வீரசைவம் எனபது அவர்களின் உட் பிரிவின் பெயர் = வீரம் எனும் ஆகமம் போற்றுபவர்கள் 
 
தமிழகத்திலும்அவர்கருத்து மிகவும் பரவலாகவே  வேரூன்றிஉள்ளது

பேரூர் மேடம் மதுரை ஆதீனம் மயிலம் ம டம் போன்றைவகள் சில
 
சைவத்தில் நந்தி பெரும் சிறப்புள்ள உருவம் ஆந்திரத்திலும் இந்த நந்திகண ஆதிக்கம் அதிகம் 

ஏன் மாணிக்க வாசகரே இந்த நந்திகண  வழியில் வந்த வரைத்தான் பெரிதும் பேசுகிறார்
கோகழி-கர்நாடகத்தில் உள்ள ஊர்=இன்றைய த மிழக சைவ உலகம் உணராதது  
ஆனால்அவர்களெல்லாம் முற்காலத்தவர்

 இத்துடன் நிறுத்த அனுமதிக்கவும்  கிளை பொருள்களில் விரித்தால் தெவிட்டும் 

பார்க்கலாம் http://en.wikipedia.org/wiki/Basava

அன்புடன் 
நூ த லோ சு 

மயிலை 




2014-05-22 12:50 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:



2014-05-22 5:49 GMT+02:00 Maravanpulavu K. Sachithananthan <tami...@gmail.com>:
​...


பசவ புராணம் என்ற பெயரில் தெலுங்கில் பெரிய புராணம் மொழிபெயர்ப்பாகி வெளிவந்தது. திருப்பதி வேங்கடவன் பல்கலைக்கழகப் பேராசிரியர் செயப்பிரகாசர் அதனைத் தமிழுக்கு மொழிபெயர்த்தார். படி ஒன்று என்னிடம் தந்தார்.

​உங்கள் தொடர் முயற்சிகளுக்கு என் நல்வாழ்த்துக்கள்.

பசவ என்பதன் பொருள் என்ன?
தெலுங்கிலும் புராணம் என்றேதான் புராணங்களை அழைப்பது வழக்கமா? இது தெலுங்குச் சொல்லா என அறிந்து கொள்ள ஆவல்.

சுபா ​

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Elangovan N

unread,
May 22, 2014, 11:20:47 PM5/22/14
to tamilmanram
//

ஏன் மாணிக்க வாசகரே இந்த நந்திகண  வழியில் வந்த வரைத்தான் பெரிதும் பேசுகிறார்
கோகழி-கர்நாடகத்தில் உள்ள ஊர்=இன்றைய த மிழக சைவ உலகம் உணராதது 
//

அன்பின் நூ.த.லோ.சு ஐயா,

கோகழி என்பது பெருந்துறையின் அருகில் ஆற்றுக் கழிமுகமாக இருக்கின்ற பகுதி
என்று முனைவர் இராம.கி ஐயா அவர்கள் தனது ஆய்வுக் கட்டுரையில் நிறுவியிருக்கிறார்.
அது, கோகழி என்ற ஒரு சொல்லுக்கு ஏன் கருநாடகம் வரை செல்ல வேண்டும் என்ற
செய்தியை ஆழ சிந்திக்க வைக்கிறது. தாங்களும் அக்கட்டுரையைப் பார்க்க வேண்டும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்





--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.

iraamaki

unread,
May 23, 2014, 1:05:35 AM5/23/14
to tamil...@googlegroups.com
அன்பிற்குரிய இளங்கோ,
 
இப்பொழுதெல்லாம் மாணிக்கவாசகர் பற்றிப் பேசுவதையே நான் விட்டுவிட்டேன். அவரை 9 ஆம் நூற்றாண்டிற்குக் கொண்டு போகுபவரும், கருநாடகத்திற்குப் பெயர்த்தெடுத்து வைப்பவரும் எனப் பலர் என் முடிவடையாக் கட்டுரைத்தொடரைப் படிப்பதுமில்லை. கிடுக்குவதுமில்லை. (அதை முடிப்பது என்று என்றும் எனக்குத் தெரியவில்லை.)  
 
அவர்கள் கூறுவதே அவர்களுக்கு முகன்மையாகத் தெரிகிறது. நாம் சொல்லும் புது வாதங்கள் அவர்களுக்கு விளங்குவதுமில்லை; உகப்பாயுமில்லை. மாணிக்க வாசகரோடு அவர்களுக்கு ஏதோ பிணக்கு என்று அமைவதே சரியாகத் தென்படுகிறது. மறைந்துபோன மறைமலை அடிகளாரோடு வாக்குவாதஞ் செய்துகொண்டு, பழைய குறிப்புகளோடே வாள்வீசிக் கொண்டிருப்பதே இவர்களின் இயல்பாகிற்று.  இவர்களோடு நிழற்போர் போடுவதில் என்ன விளையப்போகிறது?
 
சலித்துப் போனேன்.
 
11/12 ஆம் நூற்றாண்டுத் திருவாலவாயுடையார் புராணத்தை ஆழப் படித்தவர் மாணிக்கவாசகரை 9 ஆம் நூற்றாண்டிற்கும், கருநாடகத்திற்கும் கொண்டு போகமாட்டார்.  18/19 ஆம் நூற்றாண்டு  திருவிளையாடற் புராணத்தை நம்பிக்கொண்டு இவர்கள் ஏதேதோ தவறான முடிவுகளுக்கு வருகிறார்.
 
அன்புடன்,
இராம.கி.

N D Logasundaram

unread,
May 23, 2014, 12:54:10 PM5/23/14
to தமிழ் மன்றம், thamizayam, mintamil, வல்லமை, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai, Nagarajan Vadivel, Iyappan Krishnan, Raji M, Dev Raj, Maravanpulavu K. Sachithananthan
அன்புமிகு இளங்கோவன் 

நான் மதிக்கும் அறிஞரில் இராமகி ஒருவர் 

ஆனால் கோகழி எனும் பெயரிலேயே ஓர் ஊர் இருக்கும் போது இல்லாத   ஊரை 
சொல்லின் பொருள் கொண்டு தோற்றுவது தேவை அற்றது என்பது என் எண்ணம் 
கோகழி அறியாதபோது வந்த பகுப்பு நோக்கு   "ஆலை இல்லாத வூருக்கு இலுப்பைபூ சர்க்கரை" 
மேலும் பலமடல்களில்  காட்டியுள்ளேன் அந்த கோகழிய குறிக்கும் கல்வெட்டுகளின் பல . 

குதிரை தொடர்புடையது கர்நாடகம் தான deccan palatue அங்குதான் மேடு பள்ளம் அதிகம்
கேரளாவைப் போல் (ஆனால் இ ங்கோ  புவியியல் பழமை வேறு ) முற்காலத்தில் கர்நாடகாவில் 
குதிரைகளின் பயன் அதிகம். வசதி படைத்தவர் எவரும் வீட்டில் குதிரை வைத்திருப்பர்
இன்னாள் கார் போல. ஓசூரில் என்நண்பர் சிறிய கிராமத்திலேயே (கல்கொண்டபள்ளி)வீட்டில்  
குதிரை வைத்திருந்தார்   அதனால் அங்கு குதிரைகளின் எண்ணிக்கை மிக அதிகம்

பாதுகாப்பு துறைகாக மிகவும் பொருந்தும் உள்நாட்டு இனத்தில் பெருக்கவே முதல்  உலகப பெரும் போரின்
போதே  ஆங்கிலேயர்கள் ஓசூரில் குதிரைப் பண்னை ஒன்றைத் தொடங்கினர் என்பார் என் தந்தையர்
(இரண்டாம் உ லகப்போரில் பணியாற்றியவர் இப்போதும் இ ந்த ஓசூர்  பண்ணையில் குதிரைகள் 
வளர்க்கப்படுகின்றன 

"குதிரை கொண்டு குடநாடதன் மிசை சதுர்பட
சாரத்தை  " திருவாசகம் இதனில் குடாநாடு எது ??
மிசை என்றால் எ ன்ன பொருள் தங்களுக்கு விளக்கம் தேவையில்லை 

"பெருந்துறை 'வரை'யில் ஏறி "திருவாசகம் என்பதில் உள்ள 'வரை'. எது?
'வரை' உள்ள பெருந்துறை எது ??'வரை'= மூங்கில் வழி குன்று/ மலை களை க்குறி க்கும் எ ன்பதை அறிவீர் 

அதன்று  திருவாட்டி மார்கசீய காந்தி அவர்களின் கோகழி கட்டு ரை உள்ள து  நாகசாமியின் தளம் பார்க்க
இப்போது அதுவும் நகல் இப்போது நான் பயன் கொள்ளும் கணினியில் இல்லை அதனால் காட்டமுடியவில்லை
 TAMIL ARTS ACADEMY தளத்திலும் காணோம்  http://tamilartsacademy.com/journals/volume2/articles/kogali.html 
அவ்வளவு தூரம் செல வேண்டுமா என்பது ஏன் ஆ ய்வினுக்கு ஏதாவது  தூர எல்லா உள்ளதா.
மேலும் நன்றாகப் பொருந்தும் சான்றுதான் தேவை அன்றி தூரம் எப்படி பொருட்டாகும் அல்லது
தூரம் கூடாது என் பதற்கு இந்த இடத்தில் எதிர் சான்றுகள் கட்டவேண்டும் 

மாணிக்க வாசகர் புலம் பெயர்ந்த வழியினர். சிவ பாத்தியன் என்பார் நம்பி யாண்டார் நம்பி

திருவாசகத்தில் கூறுவதெல்லாம் குதிரை  மீது வந்த நிலையில் காட்சி  கொடுத்தார் என்பதுதான்
குரு ந்த மரத்தின் கீழ் காட்சி எனவும் உள்ளது அப்போது இருமுறை (அதற்கு மேலும் ) காட்சி  கொடுத்துக்
கொண்டே இருந்தார் என்றால் இறைவனா ? இது  வரலாற்று ஆய்வாளர் கொள்ளக்கூடியது அவர்க்கு
குருவாக வந்தவர் ஒரு பெரியவர் அல்லது அவர் மரபினர் (அல்லது நந்தி கணம்=மார்க்சீய காந்திகட்டுரை)
என்பதுதான் பொருள் எனக் கொள்ளவேண்டும்  அவ்வளவே 

ஆய்வோர் எப்போதும் சொற்களில் உள்ளதை அப்படியே  கொள்ளல் ஏலா து 
இரு வரிகளுக்கு இடையில் படிக்கவேண்டும் என்பார்கள்  (உணர்த்துவன) 

ராமனும் கிருஷ்ணனு ம் திராவிடர் (கருப்பு நிறத்தவர் என்றே எங்கும் எதனிலும் விடாமல் குறிக்கப்படு தலால் )
 திராவிடர்கள் என்பது உணர்த்துவது. எவ்வித்திலும் ஆரியர் (வெள்ளை) அல்லது மங்கோலியர்(மஞ்சள்) கறுப்பர் ஆகார் 
( என் கோவை  செம்மொழி மாநா ட்டு வெளிவராத கட்டு ரை) 


அன்ம்புடன் 
நூ த லோ சு 
மயிலை 


Elangovan N

unread,
May 24, 2014, 6:25:58 AM5/24/14
to tamilmanram, thamizayam

அன்பின் நூ.த.லோ.சு ஐயா,

வணக்கம்.

தங்கள் கருத்துகளை அறிந்தேன். எனது வினாக்கள், சிந்தனைகள், மறுமொழிகளை எழுதியிருக்கிறேன். தாங்கள் ஓர்ந்து பார்க்க வேண்டுகிறேன்.

1)    “கோகழி” என்று கருநாடகத்தில், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள இடத்தைத் தாங்கள் குறிப்பிடுவது புரிகிறது. இச்சொல்லை அவர்கள் குறிப்பது லகரத்திலா, ளகரத்திலா, அல்லது மாணிக்கவாசகர் குறிப்பிடும் சிறப்பு ழகரத்திலா? (கோகலி/ளி/ழி ? )

 2)    தாங்கள் மேற்காட்டிய http://www.whatisindia.com/.search?results_page=my_results.html&p=kogali&name=Searchhttp://www.whatisindia.com/.search?results_page=my_results.html&p=kogali&name=Search

இந்தச் சுட்டி வழியே நான் இரண்டு பக்கங்களைப் பார்த்தேன். ஒன்று இராட்டிரகூடர்கள் கோகலி(ளி/ழி)ப் பகுதியை ஆண்ட 10ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளையும், ஒய்சலர் ஆண்ட 12-13 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளையும் அவை கொண்டுள்ளன.

அக்கல்வெட்டுகளின் படத்தை அப்பக்கங்களிற் காணமுடியவில்லை. தாங்கள் இக்கல்வெட்டுகளைப் பார்க்க முடிந்திருக்கிறதா? அவற்றில் உள்ளன ழகரம்தானா? என்று உறுதி செய்திருக்கிறீர்களா என்று அறியத்தர வேண்டுகிறேன். 

3)     ஒலிப்பை வைத்து, கோகலி/ளி/ழியைத் தேடினால் கோகலி என்ற ஊர் கருநாடகத்தைத் தவிர, சுவீடன் நாட்டில் ஒன்றும், துருக்கி நாட்டில் ஒன்றும், பாக்கித்தான் நாட்டில் பஞ்சாபு மாநிலத்தில் ஒன்றும், இந்தியாவில் இராசத்தான், மாராட்டியம், குசராத்து மாநிலங்களிலும் ஒவ்வொன்று இருக்கின்றன. கோகலி/ளி/ழி ஆய்வாளர்கள் ஏன் கருநாடகத்தைத் தாண்டிப் போகவில்லை? ஏன் மாணிக்கவாசகர் குறிப்பிடும் இடம், குசராத்திலோ, துருக்கியிலோ இருந்திருக்கக் கூடாது? 1500-1600களில் இந்தியாவிற்கு வந்த துருக்கியரின் கோகலி/ளி/ழி ஊரை ஏன் மாணிக்கவாசகர் குறித்திருக்கக் கூடாது? திருவாசக ஆய்வாளர்கள் மாணிக்கவாசகரின் காலத்தை கி.பி 1800-1900த்திற்குத் தள்ளிவிட வசதியாக கோகலி/ளி/ழி ஊர் அங்கிருக்கிறதே!

ஆகவே, “கோகழி எனும் பெயரிலேயே ஓர் ஊர் இருக்கும் போது இல்லாத   ஊரை  சொல்லின் பொருள் கொண்டு தோற்றுவது தேவை அற்றது என்பது என் எண்ணம்” என்ற தங்கள் கருத்தைத் தாங்கள் மீள்பார்வை செய்ய வேண்டுகிறேன்.


4)   முனைவர் இராம.கி ஐயாவின் ஆய்வுக் கருத்து என்னவென்று காண்போம். கீழே அடர்பச்சை நிறத்தில் உள்ள மூன்று பத்திகள் இராம.கி ஐயாவுடையது.

(பார்க்க :- http://valavu.blogspot.in/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D   )

 பாண்டிய நாட்டையும் சோழநாட்டையும் பிரிக்கும் எல்லையாறான வெள்ளாறு, கடலோடு கலக்குமிடத்திற்கு மிக அருகில் இன்றிருப்பது மணமேற்குடி என்னும் ஊராகும். அதற்கு மேற்கில் ஆற்றையொட்டி இருப்பதை மணலூர் என்று சொல்லுவர். [இந்த மணலூர் பற்றி ஆயவேண்டும். பாண்டியர் மணலூர் இதுதானோ என்ற ஐயம் இவ்வாசிரியனுக்கு உண்டு.] ஆற்றோடு நடந்தால் ஆவுடையார் கோயிலுக்கும் - திருப்பெருந்துறைக்கும் - கடலுக்கும் இடைப்பட்ட தொலைவு கிட்டத்தட்ட 22/23 கி.மீ தொலைவாகும். 


திருப்பெருந்துறை ஓர் இயற்கைத் துறைமுகம் அல்ல. மரக்கலங்கள் அங்கு அணைந்து, குதிரைகள் இறங்க வேண்டுமானால் அத்துறை, ஆற்றோடு சேர்ந்த ஆழம் பெரிதில்லாக் கடலும் ஆறும் சேரும் செயற்கைப் பெருங்கழியிற் தான் இருக்க முடியும். [பாண்டியரின் கடல்முகத் தொண்டியிலில்லாது ஆற்றின் கழிமுகத்தில் இருக்கும் சோழர் பெருந்துறையிற் குதிரைகள் இறங்கியது நம் கவனத்தை ஈர்க்கிறது. ஒருவேளை தொண்டியின் அலைகள் குதிரைகளை இறக்க முடியாத அளவு சரவல் தந்தனவோ, என்னவோ? ஞாவகப் படுத்திக் கொள்ளுங்கள். தொண்டியிற் கழிகள் கிடையாது.] 

கழியும் துறையும் பொருளில் ஒன்றுதான். இதுபோலக் கோவும் பெருவும் ஒன்றுதான். பெருந்துறை தான் கோகழி, கோகழி தான் பெருந்துறை. கோகழி என்பதன் பொருளைப் பெருந்துறையிற் தேடாது கருநாடகத்திலும், திருவாவடுதுறையிலும் தேடிக் கொண்டிருப்பவர்கள் ஆள்வுடையார் கோயிலுக்கு வந்து, சுற்றியுள்ள ஊரின் நிலவமைப்பைப் பார்த்ததில்லை போலும். occam's razor என்ற சிந்தனைக் கூற்றையும் பற்றிக் கேள்விப் பட்டதில்லை போலும். கோகழி என்ற பெயரை திருவாசகப் பாட்டுக்களை அலசும் இடத்தில் இதுபற்றிப் பேசுவோம்.


5)    திருவாசக உரைகளில் மிகவும் புகழ்பெற்ற உரைகளுள் ஒன்று, அறிஞர் யி.வரதராசன் (G.Varadarajan) – (பழனியப்பா பிரதர்சு-1971) எழுதிய உரையாகும். சித்பவானந்தா எழுதிய உரையையும் திருவாசகம் அறிந்தோர் சொல்வர்.

திருவாசகத்தில் ஐந்து இடங்களில் கோகழி என்ற சொல்லை மாணிக்கவாசகர் ஆள்கிறார்.

            கோகழி ஆண்ட குருமணி தன்தாள் வாழ்க (சிவ),

            கோகழி மேவிய கோவே போற்றி (போற்றித்திரு..)

            கோகழி நாதனைக் கூவாய் (குயிற்பத்து)

            கோகழி எங்கோமாற்கு (பண்டாய நான்மறை) 

            கோகழிக்கரசை (பண்டாய நான்மறை) 

இந்த ஐந்து இடங்களுக்கும் வரதராசனார் பெருந்துறை என்றே பொருள் சொல்கிறார். சிறு ஐயம் கூட அவர்க்கில்லை. மிக இயல்பாக அவரின் உரை அமைந்திருக்கிறது.வரதராசனாரின் திருவாசக உரையும், திருமந்திர உரையும் மிகச்சிறந்தன. உள்ளார்ந்து படிப்போர் ஒத்துக் கொள்வர். புகழ்பெற்ற அவரின் திருவாசக உரையும், இராம.கி ஐயாவின் ஆய்வுக் கட்டுரையும் கோகழி என்பது பெருந்துறைதான் என்று சொல்கின்றன.  இராம.கி ஐயா மேலும் பரந்து போய் நிலவியல் வழியாக அதுதான் பெருந்துறை என்று விரிவாக விளக்குகிறார்.

ஆனால், பல திருவாசக ஆய்வாளர்கள், பெருந்துறையை விட்டு விட்டு, கோகழியை, கருநாடகத்தில் தேடிக் கொண்டிருக்கின்றனர். கருநாடகத்தில் தேடுவோர், துருக்கியிலும் குசராத்திலும் சுவீடனிலும் இதர நாடுகளில் உள்ள கோகலி/ளி/ழியைத் தேடிவிட்டு முடிவுக்கு வந்திருக்கிறார்களா என்று அறிய ஆவல்.  

6)    தங்களின் கூற்று:

குதிரை தொடர்புடையது கர்நாடகம் தான deccan palatue அங்குதான் மேடு பள்ளம் அதிகம்

கேரளாவைப் போல் (ஆனால் இ ங்கோ  புவியியல் பழமை வேறு ) முற்காலத்தில் கர்நாடகாவில் 

குதிரைகளின் பயன் அதிகம். ……அங்கு குதிரைகளின் எண்ணிக்கை மிக அதிகம்”

 

எனது கருத்து:

 எனக்கு கருநாடகத்தில் குதிரை அதிகமா என்பது பற்றித் தெரியாது. அங்கு ஒரு வேளை குதிரைகள் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரை குதிரை வாங்க மதிரை மன்னன் அனுப்பினான். அவர் குதிரை வாங்கத்தான் போனார். போகும்வழியில் பெருந்துறையில் இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறார். பெருந்துறை தமிழ்நாட்டில்தான் உள்ளது. பின்னர் குதிரை வாங்காமல் கோயில்/இறை என்று போய்விட்டதையறிந்து மாணிக்கவாசகரை வரவழைத்துத் தண்டனை தந்தான் அரசன். இதுதானே மாணிக்கவாசகர் ஆட்பட்ட வரலாறு? வெளிநாட்டில் இருந்து வரும் குதிரையை வாங்க, அருகில் இருக்கும் துறைமுகத்துக்குத்தானே போகவேண்டும்? பெல்லாரி-கோகலி/ளி/ழிக்கு ஏன் மாணிக்க வாசகர் போகவேண்டும்? மதிரையில் இருந்து 100-110கி.மீ தொலைவில் இருக்கும் பெருந்துறைக்குப் போய் அங்குக் கடற்கரையில் கப்பலில் நேரடியாக வந்திருக்கும் குதிரைகளை மன்னன் வாங்குவானா? அல்லது, மதிரையில் இருந்து 720 கி.மீ தொலைவில், அதுவும் சேரத்துறைமுகங்களில் இருந்து வெகுதொலைவு உட்தள்ளியிருக்கும் பெல்லாரி-கோகலி/ளி/ழிக்குச் சென்று குதிரைகளை மன்னன் வாங்கவிரும்புவானா?

 

ஆகவே, ஆய்விற்காக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்றாலும், பொருத்தமாகவும் இயல்பாகவும்  இருக்கின்ற செய்தியை நாம் தவற விடக்கூடாது. இங்கும் தங்கள் கருத்தைத் தாங்கள் மீள்பார்வை செய்ய வேண்டுகிறேன்.


7)    தங்கள் கூற்று:

"குதிரை கொண்டு குடநாடதன் மிசை சதுர்பட

சாரத்தை  " திருவாசகம் இதனில் குடாநாடு எது ?? “

 

எனது கருத்து:

இந்த இடத்தின் முழுமையான பாடல் வரிகளாவன.

“குதிரையைக் கொண்டு குடநாடதன்மிசைச்

சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்…”

 

இங்கே, “சாத்தாய்த் தான் எழுந்துஅருளியது” என்பது, குதிரை வணிகராக வேடம்பூண்டு, மாணிக்கவாசகரை மன்னனிடம் இருந்து காத்தற்பொருட்டு இறைவன் வந்ததாகும். (சாத்து, சாத்தன் = வணிகன்)

 “சதுர்பட” என்பது இறைவனின் அத்தோற்றத்தில் அழகும், மிடுக்கும் நிறைந்திருந்ததை எடுத்துச் சொல்வதாகும்.  (வெள்ளைக் கலிங்கத்தர், வெண்டிரு முண்டத்தர், பள்ளிக் குப்பாயத்தர், பாய்பரிமேற்கொண்டு….என்ற சொற்களை அன்னைப் பத்திற் காண்க)

குடநாடதன்மிசை = மேற்குநாடதன் மேல்: அஃதாவது, இறைவன் மாணிக்கவாசகரை ஆட்கொண்ட இடமான பெருந்துறையில் இருந்து புறப்பட்டு, மேற்கில் இருக்கும் மதிரை(-நாடு)க்கு மாணிக்கவாசகரைக் காத்தற்கு வருகிறான். அறந்தாங்கியில் இருந்து ஏறத்தாழ தொண்டி வரைக்கும் உள்ள நிலப்பரப்பிற்கு மதிரை மேற்குதானே? குட, குண, வட, தென் என்ற திசைப் பெயர்கள் கவனிக்கத் தக்கன.

பெல்லாரி-கோகலி/ளி/ழி என்றால் அது மதிரைக்கு வடக்காயிற்றே? குடநாடு (மேற்கு நாடு/ஊர்) என்று அதனைச் சொல்லமுடியாதே. 

குட என்பது குடகு நாட்டைக் குறிப்பதல்ல.

 

8)    தங்கள் கூற்று:

"பெருந்துறை 'வரை'யில் ஏறி "திருவாசகம் என்பதில் உள்ள 'வரை'. எது?

'வரை' உள்ள பெருந்துறை எது ??'வரை'= மூங்கில் வழி குன்று/ மலை களை க்குறி க்கும் எ ன்பதை அறிவீர் 

 

எனது கருத்து:

தாங்கள் திருஅண்டப்பகுதியில் வரும் வரிகளை மேற்கோள் காட்டுகிறீர்கள் என்று கருதுகிறேன். அப்பகுதியைச் சற்று விரிவாகத் தருகிறேன்:

 

61....புவனியிற்  சேவடி  தீண்டினன்  காண்க               

62....சிவனென  யானுந்  தேறினன்  காண்க               

63....அவனெனை  ஆட்கொண்  டருளினன்  காண்க               

64....குவளைக்  கண்ணி  கூறன்  காண்க               

65....அவளுந்  தானும்  உடனே  காண்க               

66....பரமா  னந்தப்  பழங்கட  லதுவே               

67....கருமா  முகிலின்  தோன்றித்                 

68....திருவார்  பெருந்துறை  வரையி  லேறித்                

69....திருத்தகு  மின்னொளி  திசைதிசை  விரிய               

70....ஐம்புலப்  பந்தனை  வாளர  விரிய               

71....வெந்துயர்க்  கோடை  மாத்தலை  கரப்ப               

72....நீடெழில்  தோன்றி  வாலொளி  மிளிர         

 

இப்பகுதியில் 68ஆம் அடியைத் தாங்கள் மேற்காட்டுகிறீர்கள்.  இந்தப் பதிகம், அண்டத்தில் சிவன் நீக்கமற, முழுமையாக நிறைந்து பரந்திருப்பதைச் சொல்லும் பதிகம்.

மாணிக்கவாசகர், சிவனின் பரப்பை வியந்து காணச்சொல்வது நோக்கத்தக்கது. அப்படி மிகவியப்பானவற்றை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி 63ஆம் அடியில் “அப்படியானவன் என்னை ஆட்கொண்டான்” என்ற செய்தியைச் சொல்கிறார். அவரை ஆட்கொண்டது உட்பட 40 வியப்பான செய்திகளை நம்மைக் காண்க! காண்க! என்று வியப்பில் ஆழ்த்துகிறார். அதுவும் எப்படியென்றால், "அவளுந் தானும் உடனே காண்க" என்றூ சொல்லி “அம்மையப்பன் என்ற பரமானந்தப் பழங்கடல்” தன்னை ஆட்கொண்டது என்று அறிவித்து, பின்னர் அவருக்கு எப்படி இறைவன் காட்சியளித்தான் என்பதைச் சொல்லும் வரிகள்தான் 67,68,69ஆம் அடிகள்.

இங்கே வரை= வரம்பு (வரப்பு, எல்லை - வரையறுத்து) என்ற பொருளில் மாணிக்க வாசகர் ஆள்கிறார்.  “கருமா முகிலின் தோன்றி  - கரிய அடர்ந்த மழை மேகங்களுக்கிடையே மின்னலாய்த் தோன்றிய இறைவன் – திரு கொழிக்கும் பெருந்துறையை வரம்பாகக் கொண்டு எழுந்தருளி (ஏறி) நின்றான். அப்படி எழுந்தருளி, தனது மின் போன்ற ஒளியை எல்லாத் திசைக்கும் விரித்தான்!” என்று சொல்லி, பல பெருமைகளைத் தொடர்ந்து சொல்லி, பின்னர் சிவபெருமானை வாழ்த்தி, போற்றி இப்பதிகத்தை நிறைக்கிறார் மாணிக்கவாசகர்.

 வரைபாய்தல் என்ற சொல்லாட்சியை நீங்கள் பேரகராதியில் காணலாம். அதற்கு "To fall down from top to down" என்று பொருள். கருமுகிலில் தோன்றி,

நிலவரையாய் பெருந்துறையைக் கொண்டான் என்று கருதலும் தகுமென்க.

ஆகவே, இங்கு வரை=மலை என்ற பொருள் பொருந்தாது. மாறாக, வரம்பு, எல்லை என்ற பொருள்கள்தான் பொருந்தும்.

 

9)    தங்கள் கூற்று:

மாணிக்க வாசகர் புலம் பெயர்ந்த வழியினர். சிவ பாத்தியன் என்பார் நம்பி யாண்டார் நம்பி

     எனது கருத்து:


            மாணிக்கவாசகரின் பரன்-பரை(பரம்பரை) வீரசைவப் பரன்பரை என்பார் உண்டு. இதுபற்றி நானும் படித்திருக்கிறேன். அவரின் பரன்பரைப் புலம்பெயர்வினால் கோகழி என்பது பெல்லாரியில் இருக்கிறது என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல. அப்படிப் பார்த்தால் சமயத்தை விட்டே பெயர்ந்த அப்பர் பாடிய பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பல தலங்களை, அவர் சமயம் பெயர்ந்த நினைவாக இத்தலங்களையெல்லாம் பாடினார் என்று கொள்ள முடியுமா?



ஐயா, அடியேனுக்குத் தோன்றிய மேற்கண்ட விளக்கங்களை அளித்துள்ளேன். ஓர்ந்து பார்க்க.
திருவாசகத்தை ஆய்பவர்களில் இரண்டு வகையுண்டு. ஒன்று, உள்ளார்ந்து உண்மையைத் தேடுநர். இரண்டு - உங்களுக்கே தெரியும்.
இரண்டாவது வகையரின் குழப்படிகள் சிக்கல்களிலேயே போய்முடியும். முதல் வகையரின் தேடல் மெல்லச் சென்றாலும் சேரவேண்டிய இடத்தில் சேர்ந்து விடும். தாங்கள் அறியாததல்ல. தங்களின் அன்பான மடலுக்கும் விளக்கங்களுக்கும் மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

N D Logasundaram

unread,
May 24, 2014, 6:52:00 PM5/24/14
to தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A

அன்பின் இளங்கோவன் 

1)    
“கோகழி” என்று கருநாடகத்தில், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள இடத்தைத் தாங்கள் குறிப்பிடுவது புரிகிறது. இச்சொல்லை அவர்கள் குறிப்பது லகரத்திலா, ளகரத்திலா, அல்லது மாணிக்கவாசகர் குறிப்பிடும் சிறப்பு ழகரத்திலா? (கோகலி/ளி/ழி ? )

இந்த இணைய தளத்தில் ESTEMPAGES காட்டுவதில்லை ஏன் எனில்  ASI யினரும் காட்டவில்லை
 மேலும் MER  போல் TRANSLITERATION  கொடு க்கவில்லை அதனால் எந்த லகரம் ளகரம் ழகரம் தெரியாது 
கன்னடத்தில் தெலுங்கில் ள கரமும் ழகரமும் உள்ளது 
நீங்கள் அறியாதது நான் கேட்டது மராத்தியிலும்  ழகரம் உண்டு ஆனால் இரண்டிற்கும்எழுத  ளகரம் பயன் கொண்டு வருகின்றனர்
 ஓர் ஊர் பெயர் எழுத்தில் சித் தாளி  ஆனால் ஒலிப்பது சித்தாழி நான் நினைக்கின்றேன் தெ லுங்கும் மராத்தியும் பிரகிரதத்துடன்  தொடர்பு அதிகம்  

நிற்க 

எல்லோரும் வடமொழி வடமொழி என்றே தொடர்பு காட்டுகின்றனர் பிராகிருதம் பற்றி பார்ப்பதே இல்லை ஆனால் பிராகிருதம் தானே மக்கள் 
வாய் வழி ழங்கும் மொழி 

2)
பற்பல கல்வெட்டுகளில் காணலாம் கோகழி அந்தப்பகுதியில்  தலைமைப் பதியாக உள்ளது வெளிப்படை 
மாணிக்க வாசகரும் கோகழி ஆண்ட குருமணி தன தாள் வாழ்க எனத்தான் அங்கு ஆட்சி செய்த ஒருவராய் குருவாக கொண்டவரை குறிக்கின்றார்
குதிரைஉடையவர் அதன் மேல் வந்தவர் அல்லவா? 

3)
, சுவீடன் நாட்டில் ஒன்றும், துருக்கி நாட்டில் ஒன்றும், பாக்கித்தான் நாட்டில் பஞ்சாபு மாநிலத்தில் ஒன்றும், இந்தியாவில் இராசத்தான், மாராட்டியம், குசராத்து மாநிலங்களிலும் ஒவ்வொன்று இருக்கின்றன

தூரம் பார்க்கவேண்டாம் என்றால் உலகம் முழும் பார்க்க எனக் கொள்வது ஏற்புடையதல்ல 
madras என்று அமெரிக்காவில் 6 இடங்கள் உள்ளன அவற்றை நாம் எப்போதாவது நாம் பேசும் madras  கொள்வோமா ? 

மேலும் அவையெல்லாம் பழங்கால( எட்டாம் நூற்றாண்டு)  ஊர்கள்  என சொல்ல நினைகின்றீர் களா? 

4)& 5)
அய்யா பெருந்துறை என்று கொண்டவர்கள் கோகழி பற்றி அறியா யத போது  என்றவுடன்
இவ் வரிகள் பற்றி பதில்  தேவை யில்லை  எனநினைக்கின்றேன் 

(6)
மன்ன னின்  அமைச்சர் குதிரை வாங்க அனுப்ப ப பட்டார் பின்வரும் கோயில் கட்டினார் குதிரை நரியகியது 
 என்பதெல்லாம் கற்பனையில் விளைந்த புராணக்கதை அய்யா எங்காவது அவர் அமைச்சர் என திரு  வாசகத்தில் உள்சான்று உள்ளதா? 
நரி பரியாகியது  அப்பர் கூட ப்பா டுகிர்ரர் ஏனோ அவரை இனத்து புராணம் ஏதும் பாடப்படவில்லை 
வி வேக முள்ள ஆய்வாளர்   வெறும் கட்டுக்கதைகலான  புராணங்களில் நம் புவதில்லை (அவை உணர்த்துவன வேறு 

(7)
இங்கும் பெருந்துறை மையமாகக் கொண்ட புரானக்கதையிளிருந்து தானே பேசுகிறீர் 
நா ன்  முன்பு ஓர் மடலில் காட்டிய வரி இப்போது நினைவிற்கு வருகின்றது 

பாண்டியன் தனக்கு பரிமா விற்று 
ஈண்டுகனகம்  இசையப்பெராது 39கீ ர்த்தித் திருவகவல் 

பாண்டியனுக்கு  பரிமா விற்றார் வாங்கப்போகவில்லை 

இந்த பொருள் பரிமாற்றத்தில் பாண்டியனுடன் ஆன வாணிபத்தில்  ஏ தோ இசையப்பெறா 
தது நடந்தது  புராணக்கதை இதனை மாற்றி எழுதியது எனலாம் 

பாட்டுடைத் தலை வனை போற்றுதல் தானே மரபு (இன்றுள்ள தமிழ் ஆங்கிலம் எதுவாகினும் திரைப்படத்தில் 
தலைவன் கற்பனைக்குப் பொருந்தாதவற்றை காட்டி நாமும் ரசிக்கின்றோமல்லவா?? ) 

(8)
அய்யா ஏறி எனும் சொல் இருக்கும் போது எப்படி எல்லையாகும் 
அடுத்து முகிலின் காண்க 

மேலும் கீர்த்தித் திருவகவலில் வரும் வரிகள் சிவனின் பல  திருவிளையடல்களைத்தான்  பேசுகின்றது அவற் றில் சிலவற்றை
 மாணிக்க வாகரின் மேல் ஏற்றித்தான் புராணம் இயற்றப்பெர்ருள்ளது 

9)
வழியினர் எ ன்று  குறித்துள்ளேன் காண்க நான் வீரசைவர் எனச் சொல்லவில்லையே 
வீரசைவர் என்பார் மறைமலை அடிகள்தாம்  1966 ல் அவரது மாணிக்க வாசகர் வரலாறும் காலமும் 
இரு பாகங்களாக் வந்த கழகப்பதிப்பு படித்துள்ளேன் அய்யா 
நீங்கள் அந்த மார்க்சீய காந்தி அம்மையாரின் கட்டு டிரைப்பார்க்க வேண்டும் 
அதனில் எவ்வாறு  மணிவசகத்ர் குறிக்கும் குருவினை சைவ மடத் தலைவரை/கணத்தினை 
 அவரின் தொடர்பினை காணலாம் 

அதான்று

குடநாடு என்றால் குடகு (கர்நாடகம்) அல்ல என்கிறீர்களே மிசை என்பது உயரத்தில் உள்ள இடத்தை அல்லவே குறிக்கும் 
அங்கு சதுர பட குதிரையின்(சதிராடுதல்) மீது மலை நாட்டில் வந்ததை அல்லவா குறிக்கின்றது 
அ தாவது அவரது குரு(குருவாக ஏ ற்றவர்)வந்த நிலையைக் காட்டுகிறார் 

JJ 
அம்மையார் செல்வதும் ஓர்  குடநாடல்லவா? உயரமான இடம்தானே 


மேலும் 
பாண்டிய நாட்டு பெருந்துறையை தொடர்புபடுத்திக் காண்போர் 
கட ல் வழி  வந்த குதிரை என எங்காவது உள்ளதா
கிடைத்தால் உள்நாட்டுக் குதிரைகளை வங்கக் கூடாதா? 
அந்தஅபுரணம் பாடியவரின் எண்ணத்தில் கடல் வழி என மனம் வந்தது அவ்வளவே 

தேவாரத்தில் பேணு பெருந்துறை என ஓர் தல ம் சோழ நாட்டில் உள்ளது அய்யா 

மணிவாசகரும் பேணு பெருந்துறையை குறித்துள்ளார்(8-4 ம்மனை )அய்யா 

கொங்கு நட்டு பெருந்துறை குடாநாட்டிலிருந்து வரும் குதிரைகளின் இறக்குமதியாகும் வழியில் உள்ள ஓர் ஊர் எனல்லம் 

அங்கு அருகு குன்று /  மலை உள்ளது 

மேலும் பேசுவோம் 

நூ த  லோ சு 

மயிலை 

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

Elangovan N

unread,
May 25, 2014, 5:14:54 AM5/25/14
to tamilmanram, thamizayam
அன்பின் நூ.த.லோ.சு ஐயா,

1)   கல்வெட்டைப் பார்த்ததில்லை.
     அதில் என்ன இருக்கிறதென்றே தெரியாது.
     அதன் ஆங்கிலக் குறிபெயர்ப்பையும் பார்த்ததில்லை.
     எனது ழகர வினாவுக்கும் விடை இல்லை.

    ஆனால் அந்த ஊர்தான் கோகழி என்று தீர்ப்பை மட்டும் எழுதிவிடுகிறீர்கள். 

    இது எந்த விதத்தில் ஏற்கத் தக்கது? நான் ஏற்கமாட்டேன்.
   

2)  தங்கள் கூற்று: 
   //எல்லோரும் வடமொழி வடமொழி என்றே தொடர்பு காட்டுகின்றனர் பிராகிருதம் பற்றி பார்ப்பதே இல்லை ஆனால் பிராகிருதம் தானே மக்கள் 
வாய் வழி ழங்கும் மொழி //

    எனது மறுமொழி:
    இது என் வினாக்களுக்குத் தொடர்பில்லாத செய்தி.

  
3) தங்கள் கூற்று:
 // கன்னடத்தில் தெலுங்கில் ள கரமும் ழகரமும் உள்ளது 
நீங்கள் அறியாதது நான் கேட்டது மராத்தியிலும்  ழகரம் உண்டு
//

எனது மறுமொழி:
கன்னடத்தில் ஒரு காலம் வரை ழகர, றகரங்கள் இருந்து பின்னர் மறைந்தன. தெலுங்கில் நானறிந்தவரை ழகரம் இல்லை.
கடம்ப எழுத்துகள், அல்லே-கன்னடம், தற்காலக் கன்னடம், அல்லே-கன்னடத்தில் இராட்டிர கூடர்களின் தாக்கங்கள், 
பழங்கன்னடமான அல்லே-கன்னடம் ஏன் கன்னட-தெலுங்கு வரிவடிவமாகச் சொல்லப்பட்டது போன்ற செய்திகளை ஆயாமல்
வெறுமே கோகலி/ளி யை அங்கே சுட்டிக் கொண்டிருப்பதில் எந்த ஆய்வும் இருக்கமுடியாது.

4) தங்கள் கூற்று:

// கோகழி ஆண்ட குருமணி தன தாள் வாழ்க எனத்தான் அங்கு ஆட்சி செய்த ஒருவராய் குருவாக கொண்டவரை குறிக்கின்றார் //
 
  எனது மறுமொழி:

ஐயா, இங்கே இரண்டு செய்திகளை நான் கூறவேண்டும்.

ஒன்று - பெல்லாரிக் கோகலியைத் தாங்கள் மறுக்கவொண்ணாத ஆதாரங்களுடன் நிறுவினாற்றான் இவ் அடி பற்றி மேலும் பேச முடியும்.
அதுவரை இதைப் பேசிப்பயனில்லை.

இரண்டு - கோகலி நாட்டை ஆட்சி செய்த ஒருவரைக் குருவாகக் கொண்டவரை மாணிக்கவாசகர் குறிக்கிறார்
என்று நீங்கள் கூறுவது மிகவும் தவறு ஐயா.
மாணிக்கவாசகரின் குரு, ஆட்சி செய்த மனிதனல்ல.

"அரு பரத்தொருவன் அவனியில் வந்து
 குரு பரனாகி அருளிய பெருமை...."  
என்று போற்றித் திருவகவலில் மாணிக்கவாசகர் குறிப்பிடுவதைக் காண்க.

"நானேயோ தவம் செய்தேன்? சிவாயநம எனப் பெற்றேன்!
 தேனாய் இன்னமுதாய்த் தித்திக்கும் சிவபெருமான்
 தானே வந்து எனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள் செய்தான்...."
 என்று வேசறவில் அறிவிப்பதைக் காணக.

  "அன்பராகி மற்று அருந்தவம் முயல்வார்,
  அயனும் மாலும் மற்று அழல் உறு மெழுகாம்,
  என்பராய் நினைவார்,
     எனைப் பலர் நிற்க, "இங்கு எனை எற்றினுக்கு ஆண்டாய்?"  "
  என்று உருகி உருகி இந்தக் கேள்வியைக் கேட்பார் செத்திலாப்பத்தில். இன்னும் இது போலப் பல இடங்கள் உண்டு.
 
குரு, சீட உறவையும், தன்மையையும் ஆழச் சொல்லித்தருவது திருவாசகமும் தேவாரமும்.
என்னால் இப்படியான நேரடி அறிவிப்புகள் அல்லாத பல நுண்மையான குரு-சீடர் பண்புகளையும்
திருமுறைகளில் எடுத்துக் காட்ட முடியும்.

ஆகவே, மாணிக்கவாசகரைப் பற்றியும் அவரின் குரு பற்றியும் தெளிவான புரிதல் இல்லாமல்
திருவாசக ஆய்வுகளில் புகுவார்க்கு எண்ணியது கிடைக்காது என்பதை மட்டும் என்னால் தெளிவாகச் சொல்லமுடியும்.
அருள்கூர்ந்து இப்பொருளையேனும் தாங்கள் ஆழ்ந்து பார்க்க வேண்டுகிறேன்.

5) தங்கள் கூற்று:

//

தூரம் பார்க்கவேண்டாம் என்றால் உலகம் முழும் பார்க்க எனக் கொள்வது ஏற்புடையதல்ல 
madras என்று அமெரிக்காவில் 6 இடங்கள் உள்ளன அவற்றை நாம் எப்போதாவது நாம் பேசும் madras  கொள்வோமா ? 

மேலும் அவையெல்லாம் பழங்கால( எட்டாம் நூற்றாண்டு)  ஊர்கள்  என சொல்ல நினைகின்றீர் களா?
//

எனது மறுமொழி:
 ஏன் என்பதுதான் எனது கேள்வி. மதிரையில் இருந்து 700 கி.மீ தொலைவில் உள்ள கோகலிக்கு எந்த ஓர் ஏரணமும்
இன்றிச் செல்கையில், இன்னும் கொஞ்ச தூரம் போய் மாராட்டியத்தில் ஆயலாமே?

மாராட்டியத்திலும் கோகலி என்ற ஊர் உண்டு. கருநாடகத்திலும் கோகலி என்ற ஊர் உண்டு. மாராட்டியத்தில் இருந்து
வந்த இராட்டிரகூடர்கள்தான் கருநாடக-பெல்லாரியை ஆண்டார்கள் என்று நீங்கள் கொடுக்கும் ஆதாரச் சுட்டிகளே
சொல்கின்றன?

நான் ஏன் "இந்த இரண்டு கோகலிக்கும் தொடர்புண்டு என்று கருதக் கூடாது?" - அப்படியென்றால், கருநாடகக் கோகலியை
பரிந்துரைப்பவர்கள் இந்த இரண்டுக்கும் தொடர்பில்லை என்று சொல்ல வேண்டுமல்லவா? அதுபோல மற்ற கோகலிகளுக்கும்
தொடர்பில்லை என்றும் அவற்றின் காலக்கட்டம் என்ன என்றும் அவர்கள்தான் சொல்லி நிறுவவேண்டுமே அன்று அடியேனின்
வேலை இல்லை. வெறும் ஒன்னரைப் பக்கத்தில், குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று யாரும் ஆராய்ச்சி செய்து
சொல்லி விடவில்லை. அதனால் இந்தக் கருத்தைப் பரப்பும் ஆராய்ச்சியாளர்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்லவேண்டியது இது.

6) தங்கள் கருத்து:

//

மன்ன னின்  அமைச்சர் குதிரை வாங்க அனுப்ப ப பட்டார் பின்வரும் கோயில் கட்டினார் குதிரை நரியகியது 
 என்பதெல்லாம் கற்பனையில் விளைந்த புராணக்கதை அய்யா எங்காவது அவர் அமைச்சர் என திரு  வாசகத்தில் உள்சான்று உள்ளதா? 
நரி பரியாகியது  அப்பர் கூட ப்பா டுகிர்ரர் ஏனோ அவரை இனத்து புராணம் ஏதும் பாடப்படவில்லை 
வி வேக முள்ள ஆய்வாளர்   வெறும் கட்டுக்கதைகலான  புராணங்களில் நம் புவதில்லை
//

 எனது மறுமொழி:
 
  புராணம் என்றால் என்ன?
  புராண, நய/நயா என்பர் வடக்கே. உருதிலும், இந்தியிலும் இந்தச் சொல்லாட்சியை நிறைய கேட்டிருக்கிறேன்.
  புராண என்றால் பழையது. நயா என்றால் புதியது.
  புராணக்கதை என்றால் பழங்கதை. புராணம் என்றால் பழமை. இவ்வளவுதானே! 
  மாணிக்கவாசகரே "புராண காரண!" என்பார்.
 
  புராணங்கள் எல்லாம் கட்டுக்கதைகள் என்றால் - பழமை எல்லாமே கட்டுக்கதைகள் என்று கருதுகிறீர்களா?
  பழையன எலலாம் கட்டுக்கதை என்றால், வரலாறு, தொன்மம் என்ற ஒன்றையுமே ஆராய்ச்சி செய்யத் தேவையில்லையே?
  கோகழி எங்கிருக்கிறது என்று கூட நோக்க வேண்டியதில்லையே?
  பழைமை எல்லாம் கட்டுக்கதை என்றால் விவேக-ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் "புதுமைகள்" மட்டும் கட்டாத கதைகளா?
  என்ன ஐயா - ஞாயமே இல்லாமற் சொன்னால் எப்படி :-)
 
  புராணங்கள் எல்லாம் கட்டுக்கதைகள் என்றால், இராமாயணம், மகாபாரதம் எல்லாமே கட்டுக்கதைகளா?
  ஏன் சிலப்பதிகாரத்தில் எத்தனையோ புராணக் கதைகள் உண்டு. அவற்றையெல்லாம் விட்டெறிந்து விடலாமா?
  மன்னிக்க - தங்களின் இந்த வாதம் ஏற்புடையது அல்ல.

  சிலப்பதிகாரத்தில் "வியன்நிலம்  ஆண்ட  ஒருதனிச்  செங்கோல்  ஒருமகன்  ஆணையின்..."
  என்று இளங்கோவடிகள் சொல்வார். வியன்நிலம் என்பதற்கு ஒலிப்பின் அடிப்படையில்,
  வியன்னா என்றும் வரும்.

  வியன்னாவை ஆண்ட சிறந்த அரசன் ஒருவனை இளங்கோவடிகள் இங்கே குறிப்பிடுகிறார் என்று சொன்னால்
  எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது கருநாடக-கோகலி ஆய்வு.

7)   தங்கள் கூற்று:

//

இங்கும் பெருந்துறை மையமாகக் கொண்ட புரானக்கதையிளிருந்து தானே பேசுகிறீர் 
நா ன்  முன்பு ஓர் மடலில் காட்டிய வரி இப்போது நினைவிற்கு வருகின்றது 
பாண்டியன் தனக்கு பரிமா விற்று 
ஈண்டுகனகம்  இசையப்பெராது 39கீ ர்த்தித் திருவகவல் 
பாண்டியனுக்கு  பரிமா விற்றார் வாங்கப்போகவில்லை 
//

    எனது மறுமொழி:

 இங்கே திருவாசகம் பற்றிய மிகத்தவறான புரிதலை தங்கள் எழுத்துகள் காட்டுகின்றன.
 
 மன்னன் ஆணையால் குதிரை வாங்கப் பெருந்துறை சென்றவர் மாணிக்கவாசகர்.
 மாணிக்கவாசகர் குதிரைகளை வாங்காமல் பணத்தையெல்லாம் கோயில் கட்டவும், சிவமயக்கத்திலும்
 கழித்துவிட, மதிரைக்கு அழைக்கப்பட்டு அரசனால் தண்டனைக்குள்ளாகிறார். அப்போது,
 மாணிக்கவாசகரைக் காக்கும் பொருட்டு, குதிரை வாணிகன் வேடமணிந்து, சிவபெருமான் நரிகளைப் பரிகளாக்கி
 அந்தப் பரிகளை மன்னனிடம் கொண்டுசென்று அணிவகுத்து நிற்க வைக்கிறார்.

 ஆகவே,
 பாண்டியனுக்காக பரிமா வாங்கப்போனவர் மாணிக்கவாசகர். அவர் வாங்கவில்லையதனால்
 பாண்டியனிடம் பரிமா விற்றவர் சிவபெருமான்.
 இதுதான் திருவாசகம் முழுதிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

 மேலும், "ஈண்டு கனகம் இசையப் பெறாது" என்றது,
சாத்தாய் வந்த சிவனிடம் குதிரைகளைப் பெற்றுக் கொண்ட பாண்டியன்,
குதிரைகளுக்கான பணத்தைச் சிவனிடம் கொடுக்க (சிலர் அதிகப்படியான குதிரைகளுக்கு என்று சொல்வர்)
 சிவன் அதை வாங்க மறுத்து விடுகிறார். இதைத்தான் அவ்வரி சொல்கிறது.

  எப்படி வாங்குவார்?. இவர் நரிகளைத்தானே பரிகளாக்கி நாடகம் நடத்தினார் :-)
  அதுதானே அந்தத் திருவிளையாடல்? மறுநாள் எல்லாப் பரிகளும் நரியாகி ஊளையிட வைக்க இருந்தவர் பணம் வாங்குவாரா?
  அப்புறம் மதிரை மக்களுக்கெல்லாம் அடி வாங்கிக் கொடுத்தத் திருவிளையாடலுக்கும் இதுதானே அடிப்படை!

  8) தங்கள் கூற்று:

    //   ஏறி எனும் சொல் இருக்கும் போது எப்படி எல்லையாகும்  //
   //   குடநாடு என்றால் குடகு (கர்நாடகம்) அல்ல என்கிறீர்களே மிசை என்பது உயரத்தில் உள்ள இடத்தை அல்லவே குறிக்கும்  //

  எனது மறுமொழி:


   என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஐயா,

   குட என்பதைப் பற்றி நான் விளக்கி விட்டேன். அதற்கு மேல் சொல்ல வேறொன்றுமில்லை.
   கழி, மிசை, வரை, ஏறி போன்ற சொற்கள் தங்களை வாட்டுகின்றன. கழி என்ற சொல்லை சங்க இலக்கியங்களில்
   இருங்கழி, பெருங்கழி, கொடுங்கழி, வாங்குகழி போன்ற எத்தனையோ சொல்லாட்சிகளில் "துறை" என்ற பொருளில் காணலாம்.
   அதை விரித்தல் தேவையில்லை என்றே விடுக்கிறேன்.

   வரை என்பதற்கு "இடம்" என்ற பொருளுமுண்டு. வரை என்றால் மலை என்று கருதவேண்டாம்.
   இன்னுஞ் சொல்லப்போனால் - நீங்கள் சொன்ன பொருள்களில் "மூங்கில்" என்ற பொருளைக் குறித்தீர்கள்.
   இறைவன் பெருந்துறையில் உள்ள ஒரு மூங்கிலில் ஏறி நின்று மின்னொளி காட்டினான் என்று கூடப் பொருள் கொள்ளலாமே!
   வரை என்றால் மலைதான் என்ற நிலைப்பாட்டை நீங்கள் மாற்றிச் சிந்தித்தால் நான் சொல்லவருவதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
   இங்கே ஏறுதல் என்பது எழுதல், எழுந்தருளுதல் என்பதாகும். பத்தி இலக்கியம், மாந்தக் காதல் இலக்கியம், புற இலக்கியம் போன்ற  
   ஒவ்வொன்றிலும் பொருளின் தன்மைகளில் மாற்றம் உண்டு என்பதை நீங்கள் அறியதாவரல்ல.

   ஒருத்தன் மேல் வேலன் வந்து ஏற, வேலனாட்டம் ஆடினார் என்றால், அந்த ஆள் மேல் முருகன் ஏறியா நிற்கிறான்.
   ஏறி விளையாடு என்ற வழக்கில் பேசுகிறோமே - அங்கெல்லாம் உயரம் வருவதில்லை என்பதையும் காணவேண்டும்.

   "குடநாடதன் மிசை" என்பதை குடகு மலைக்கு மேலே என்று நீங்கள் படிக்கிறீர்கள்.
   அது அல்ல என்பதும் குட என்பதும் திசையைக் குறித்தது என்பதும், மிசை என்பது "அந்த இடத்தில்"
   என்றும் பொருளாகும்  என்பது என் கருத்து. நிலத்தில் நடக்கிறோம். நிலமிசை நடக்கிறோம் என்று சொல்வதன்
   தன்மையே அங்குப் பொருந்தும்.   "சிந்துநதியின்மிசை நிலவினிலே"  என்ற பாரதியாரின் சொற்களையும் காண்க.
  
   
   9)

 //
கொங்கு நட்டு பெருந்துறை குடாநாட்டிலிருந்து வரும் குதிரைகளின் இறக்குமதியாகும் வழியில் உள்ள ஓர் ஊர் எனல்லம் 
//

கோகழி - கருநாடக நாடு, பெருந்துறை-கொங்கு நாடு என்ற நிலையில் இருந்து நீங்கள் மாறமாட்டீர்கள். தமிழ்நாட்டில்
ஆராய்ச்சியாளர்கள் பெருகி, நல்ல ஆராய்ச்சி மன்றங்கள் உருவாகி நமக்கு நல்வழி காட்டுதல் வேண்டும்.

//

கட ல் வழி  வந்த குதிரை என எங்காவது உள்ளதா
கிடைத்தால் உள்நாட்டுக் குதிரைகளை வங்கக் கூடாதா?
//

ம்ம்ம்ம்... நான் போய், கோச்சடையான் படம் பார்க்கப் போகிறேன். அதில் கூட குதிரைகள் அரேபியா/பெர்சியா பகுதியில் இருந்து
பெருவாரியாகக் கப்பலில் இறக்குமதியானதை ஒத்துக்கிட்டாங்களாம் :-))

தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஐயா. வணக்கம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

பி.கு: இது பொதுக்கருத்து. இந்த இழைக்கும்  அன்பிற்குரிய நூ.த.லோ.சு ஐயாவுடனான மடலாட்டிற்கும் தொடர்பில்லை.
இது இந்த இழைக்கு வெகுதொலைவிற்கு உரியது.

ஆதாரமும், ஏரணமும் இல்லாத தமிழ் ஆராய்ச்சிகளின் பெருக்கங்களைப் பார்க்கும் போது
பல நேரங்களில் இரசினிகாந்தின் படத்துக்குப்  பாலாபிசேகம் பண்ணிட்டு நிம்மதியாக இருப்பவர்களைக் கண்டு
மனம் பொறாமைப்படுகிறது. "மதலையாஞ் சார்பிலார்க்கு இல்லை நிலை" என்ற குறள் வரிதான் நினைவுக்கு வருகிறது.
முனைவர் இராசம் அம்மா, இராம.கி ஐயா போன்றோரின் அண்மைய மடல்களைப் படித்த போதும் எனக்கு இந்தக் குறள் வரிதான் நினைவுக்கு வந்தது.கும்பல் கும்பலாகத் தத்திகள் தமிழ் அரசு நிறுவனங்களின் பதவிகளில் அமர்ந்து,  பரமார்த்த குருக்களாய் அவர்கள் படைக்கும்
ஆராய்ச்சியுலகமும், நவீனத் தமிழ் உலகமும் அவர்களின் சீடர்களையேக் கொண்டிருக்கும். அந்நிலை ஓரளவேனும் அவியும்வரை
என்னைப் போன்றோரும் நூ.த.லோ.சு ஐயா போன்றோரும் கோகழிக்காக வாதிட்டுக் கொண்டே இருப்போம் :) :)

Elangovan N

unread,
May 26, 2014, 1:36:03 AM5/26/14
to thamizayam, tamilmanram
அன்பின் நூ.த.லோ.சு ஐயா,

தங்களின் மடல்கள், கருத்துகள் குழப்புதற்காக எழுதப்பட்டன
என்று ஒரு போதும் நான் கருத மாட்டேன். இணையத்தில்
எழுதுபவர்களில் மிகவும் பொறுப்பு மிகுந்த தங்களை நான்
நன்கு அறிவேன். நான் எழுதியிருப்பவை யாவும் கருநாடகக் கோகலி
என்ற கருத்தியலை முழுமையாக மறுப்பதற்காகவே.
தாங்கள் கூறியது போல பின்பொருமுறை மீண்டும் பேசுவோம்.

//சைவ சித்தாந்த கருத் துப்படி ஆணவம் தன்னுடையது எனக்காட்ட ஆர் வம் அவ்வளவே
இது இல்லாமலும் வாழ்க்கை இல்லை என அறிவீர்கள்
//

100% எனக்கும் இது பொருந்தும். எனக்கும் சேர்த்தே நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.
அகவையிலும், அன்பிலும்  முதிர்ந்த தங்களின் இச்சொற்களைப்
பொன்மொழியாகக் கருதுவேன்.

மிக்க நன்றி. வணக்கம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்


2014-05-25 19:00 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
அன்பு மிகு நாக இளங்கோவன் அவர்களுக்கு,

அடிப்படையில் நா ம் பரிமாறிக்கொண்ட மடல்களில் 

(1)
நான் திருவாசக நூலில் வந்துள்ள வரிகளைத்தான் காட்டியுள்ளேன் 
(2)
அதற் கு தமிழ் மொழியில் உள்ள பொருள்களை த்தன் வைத்துள்ளேன் 
(3)
மாணிக்க வசகரைப்ப்ற்றி நான்  பலர் வழி அறிந்துள்ள செய்திகளை (புராணக்கதைகள்  என சொல்லவில்லை) 
எதனையும் இணை த்துப்பார்காமல் அதாவது முன் சாய்வு எதுவும் இல்லாமல் உள்சான்று மட்டும் கொண்டு என் அரிவில் நோக்கியது 

உங்கள் கருத்தில் உள்ளவை 

(1)ஐயம் 
 பெல்லாரி மாவட்டம் அற்பன அ ல்லி தாலுக்க வில் உள்ள  கோகழி எனும் இடப்பெயரில் உள்ள கடைசி எழுத்து,  வரிவடிவத்திற்கும் ஒலி  வடி வத்திற்கும்  கற்பு நிலை அற்ற ஆ ங்கிலத்தி ல் உள்ளதால் வந்துள்ள ஐயம் மட்டுமே 

(2) தமிழ் மொழியில் நான் காட்டிய பொருளல்மால் அதே சொற்களுக்கு வேறு உள்ள பொருள் கொள்ளுதல் 
வரை, மிசை,விற்று ஆண்ட  என்பன சில (இதுவும் ஓர் வகையில் ஐயப்பாடே)

(3)
மாணிக்க வா சகரைப்ப்றி முன்பே அறிந்த செய்திகளை உண்மை எனு ம் அடிப்படையில் நோக்கியவை 


பொதுவான கருத்து 

ஆய்வு என வந்தால்  
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு 
எப்பொருள் எ த்தனமைதாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு 

எனும் கருத்தில் ஆய்தலில் தவறொன்றுமில்லை எனக் கொள்கிறேன் 

ஒர்   எடுத்துக்காட்டு 

சேக்கிழார் மிகப்பெரிய புராண ஆசிரியர் நான் மிகவும் மதிப்பவன் தான் 
ஆனால் நான் கற்கும் பொது என அறிவுக்குப் சரிய்கப்பட்டதை ஆ னால் அந்த ஆசிரியர் தன்  விள க்க ம் தவறா கப்பட்டதை ஏற்க மறுக்கின்றது 

காண்க 

கலலாடம் மதுரையில் பெரிய கோயிலாம் ஆலவாயில் சுற்றி உள்ள  கோயில்களை நிரல் படுத்துகின்றது  அதனில் ஒன்று நள்ளாறு 
(1)
வடதிரு ஆலவாய் திருநடு வூர்
வெள்ளி யம்பலம் நள்ளாறு இந்திரை
பஞ்சவ னீச்சரம் அஞ்செழுத்(து) அமைத்த
சென்னி மாபுரம் சேரன் திருத்தளி                              25
கன்னிசெங் கோட்டம் கரியோன் திருவுறை
விண்ணுடைத்துண்ணும்கண்ணிலிஒருத்தன்
மறிதிரைக்கடலுள்மாவெனக்கவிழ்ந்த
களவுடற்பிளந்தஒளிகெழுதிருவேல்
பணிப்பகைஊர்திஅருட்கொடிஇரண்டுடன்               30
முன்னும்பின்னும்முதுக்கொளநிறைந்த
அருவிஅம்சாரல்ஒருபரங்குன்றம்
சூழ்கொள இருந்த கூடலம் பெருமான்

(2)
தேவாரத்தில் அடுத்தடுத்து உள்ள தல ங்களை சேர்த்தே ஓர் பதிக ம் பாடியவை  உண்டு 

1.4 திருப்புகலியும்-திருவீழிமிழலையும்
1.6 திருமருகலும்-திருச்செங்காட்டங்குடியும்
3.90 திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்
6.073 திருவலஞ்சுழியும்-திருக்கொட்டையூர் கோடீச்சரமும்
என நான்கு உள்ளன அவ்வழியில் 
1.7 திருநள்ளாறும்-திருஆலவாயும் அருகருகுள்ள தல ங்களாகும் 

(3)
3.87.திரு நள்ளா ரற்று ப்பதிக கடை11 வது பாடல் 

சிற்றிடை அரிவைதன் வனமுலை யிணையொடு செறிதரு
நற்றிற முறுகழு மலநகர் ஞானசம் பந்தன
கொற்றவன் எதிரிடை எரியினில் இட இவை கூறிய
சொற்றெரி யொருபதும் அறிபவர் துயரிலர் தூயரே 11

மிகத்தெளிவாக அரசனின் எதிரில் தீயில் இட இப்பபதிகம் பாடப்பட்டது 
எனவே உள்ளபோதும்  ஏனோ சேக்கிழார் காரைக்கால் அருகு உள்ளது நள்ளாறு
 அதன் பதிகப்பாடல் சுவடியில் கயிறு சாற்றி வந்ததை வாதத்தில் எரியினில் இட்டார்
என ஆவணப் படுத்துகிறார்  அவர் காலத்தில் மதுரை நள்ளாறு மறைந்து காரைக்கால் நள்ளாறு
தோன்றி உள்ளதிற்காக புராணக்கதை  இயற்றப்படுகின்றது ஆ னால் தேவாரப்படி வா தம் நடந்த
இடமே திருநள்ளாறு தான் 

மற்றொன்று 

இப்போதுதான் பெருந்துறை பற்றி தவல்கள் சேகரித்தேன் அப்போது கண்டது காண்க 

கலயநல்லூர் தேவார வரி . . . . . .
.. . . . . .
அகிலொடுசந் துந்திவரும் #அரிசிலின்றென் கரைமேல் . . . . . .
. . . . . . . .
அந்த  தேவாரப் பதிப்பில் காணும் அடிக்குறிப்பு 
#விஷ்ணுவினால் சொல்லப்பட்டுவந்தமையால் அரிசொல்
நதியென்று பெயர். அது அரிசில் என மருவியிருக்கின்றது
இதனைக் கும்பகோணப்புராணத்திற் கண்டுகொள்க. 7.16.6

இப்படி பரந்த அறிவு கொள்ளாத பல  ஆசிரியர்களளால்  மிகச் சாதாரண மக்களு லுக்கவே 
இயற்றபட்ட  தலபுராணங்கள் பலப்பல 
தே ள் வழிபட்டது என்றால் அந்த வூரில் அக்கா லறத் தே புற்றில் வாழும் கருந்தேள் மிக்கு இருந்தது அவ்வளவே
தலமரம் என்றால் அந்த தளத்தின் நிலா வகு அரியபொபடுகின்ரடஹௌஆ  

 
இளங்கோவன் அவர்களுக்கு 

நான் புராணங்கள் எல்லாம் கற்பனை மிகுந் தது என்றபோது அந்த மாணிக்க வாசகர் பற்றிய
கதைகளைக் கொண்ட  திருவாதவூரர் புராணம் பறித்தான் குறி த்தேன் 
இருந்தாலும் புராணக்கதைகள் உணர்துவதைத் தான் பார்க்க வேண்டுமே அன்றி அதில் வரும் சொற்களையோ விவரங்களையோ அப்படியே ஏற்கத் ஆய்வாளர்களுக்குத் தேவையில்லை எம்பதுதான் யதார்த்தம் அய்யா

அந்தந்த ஆசிரியர்கள் தனக்குத் தெரிந்தவற்றை எழுதினர் அவ்வளவே அதுதானே எ ப்பொருள் யார்யார் வாய் 

திரு வள்ளுவர் சமயம்  சிலப்பதிகாரம் களப்பிரர் மாணிக்க வாகார் காலம்  ஆத்தி சூடி யாரைகே குறிக்கின்றது ஔவையார் எத்தனை போன்றவை எல்லாம் முடிவில்லாத விவாதம் தான்  இன்றல்ல் நேற்றல்ல பலகாலம் கடந்துவரும் மெய்ப்பொருளே அய்யா நக்கீரர் சங்கரர பண பத்திரர்  வாதிட்டன ர்   அருணகிரியார் காளமேகம் 
முதல் நேற்றைய சாலமன் பாப்பையா பட்டிமன்றம் எல்லாம் தொடர் கதை தானே. இதனில் தவறில்லை சலிபடைன்ய்தால் சீசீ இந்த பழம் புளிக்கும் எனும் தன அறிவு நிலை யில் தேக்கத்தைக் கா ட்டும்
எனக்கு குழப்பம் ஏற்படுத்த வேண்டும் எனும் குறு ம்புத் தனம் இல்லை  சைவ சித்தாந்த கருத் துப்படி ஆணவம் தன்னுடையது எனக்காட்ட ஆர் வம் அவ்வளவே இது இல்லாமலும் வாழ்க்கை இல்லை என அறிவீர்கள் 

மடல் நீண்டு விட்டது மேலும் பிறகு பேசுவோம் 

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages