1.) வெருளி நோய்கள் 216 -220 : இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2. இனிதே இலக்கியம் 2 போற்றி! போற்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்

4 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Aug 5, 2025, 4:55:48 PM8/5/25
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan

வெருளி நோய்கள் 216 -220 : இலக்குவனார் திருவள்ளுவன்


ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன் 
     06 August 2025      கரமுதல


(வெருளி நோய்கள் 211-215 தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 216-220

  1. அழகு வெருளி – Callophobia

அழகு குறித்த வரம்பற்ற பேரச்சம் அழகு வெருளி.
அழகான பெண்கள் அல்லது அவர்களின் பெற்றோர் சிலர் அழகினால் தங்களுக்கு அல்லது தங்கள் மகளுக்குப் பேரிடம் ஏற்படும் என்று கவலைப்பட்டுப் பேரச்சம் கொள்கின்றனர். அழகிய பெண்களால் வீரர்கள் வீழ்ந்த வரலாறுகள் பல உண்டு. அழகு குறைந்தால் முதுமை வெளியே தெரியும் என்று அஞ்சி அழகினைப் பேணுவது குறித்துக் கவலைப்படுவோரும் உள்ளனர். அழகிய பெண்களுக்கு மட்டுமல்ல. அழகிய ஆண்களுக்கும் அழகு வெருளி ஏற்படுகிறது.
00

  1. அழி பொருள் வெருளி – Necrophobia

அழி பொருள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அழி பொருள் வெருளி
சாவு வெருளி எனவும் இதனைக் குறிக்கின்றனர். சாவு வெருளியை Thanato Phobia/ Thantophobia எனக் குறிப்பதால் பிண வெருளியாகவும் அழிபொருள் வெருளியாகவும் இதனைக் குறிக்கலாம்.
இறப்பு மட்டுமல்லாமல் இறப்பு தொடர்பான சவப்பெட்டி, நடுகல், கல்லறை, இடுகாடு,சுடுகாடு, ஈமச்சடங்கு, அமரர் ஊர்தி முதலியவற்றின் மீதும் பேரச்சம் ஏற்படுகிறது.
எனினும், கல்லறைவெருளி(Coimetrophobia / Koimetrophobia), நடுகல் வெருளி(Placophobia), புதைவு வெருளி(Taphephobia/Taphiphobia/Taphophobia / Taphosphobia), இறுதிச்சடங்கு வெருளிCedeiaphobia), இறுதிச் சடங்கு பொறுப்பு வெருளி (Gamocedeiaphobia) என இவை தனித்தனியாவும் குறிக்கப்பெறுகின்றன. ஆதலின் அழிவுற்ற உடல் அல்லது பொருளைப்பார்த்து ஏற்படும் பேரச்சம் எனக் கொள்ளலாம்.
nekros என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பிணம்.
00

  1. அழிப்பு வெருளி – Apollymophobia

அழிப்பு(destruction) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அழிப்பு வெருளி.
இயற்கையால் ஏற்படும் அழிவுகள் போல் விதிமுறையின்றிக் கட்டடம் கட்டி உரிய அரசுத்துறையின் அல்லது நீதிமன்றத்தின் ஆணையால் அழிக்கப்படுதல், வன்முறையாளர்களால் அழிவு நேர்தல் போன்றவற்றாலும் அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
காண்க: அழிவு வெருளி(Atephobia)
00

  1. அழிவு வெருளி – Atephobia

அழிவு(ruin) பற்றிய இயல்பிற்கு மீறிய பேரச்சம் அழிவு வெருளி
மனையியலில் destroy அழி, நிலைகுலை, தகர எனவும், பொறிநுட்பவியலில் destroyer அழிகலன் எனவும் பயன்படுத்துகின்றனர். எனினும் அழிவுபற்றிய பேரச்சம் குறித்த கலைச் சொல் இல்லை.
குறிப்பிட்ட நாளில் பெரு வெள்ளம் வந்து உலகம் அழியும், நிலநடுக்கத்தால் உலக மக்கள் அனைவரும் மடிவார்கள் என்றெல்லாம் அஞ்சுவது பலரின் வழக்கமாக உள்ளது. அவர்கள் அஞ்சும் நாள்வந்த பின்னரும் உலகம் இருக்கும். என்றாலும் வேறொரு நாளில் உலகம் அழியும் என மீண்டும் எண்ணத் தொடங்கிப் பிறரையும் அச்சுறுத்துவார்கள்.
காண்க: அழிப்பு வெருளி(Apollymophobia)
00

  1. அழுகை வெருளி – Dakrophobia

அழுகைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் அழுகை வெருளி.
பிறர் அழுவதைப் பார்த்து அல்லது திரைக்காட்சியிலோ தொலைக்காட்சியிலோ வரும் அழுகைக் காட்சிகளைப் பார்த்து, அழுகின்ற செய்திகளையோ கதைகளையோ படித்துப் பேரச்சம் கொள்கின்றனர்.
00

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

வெருளி அறிவியல் தொகுதி 1/5

++

இனிதே இலக்கியம் 2 போற்றி! போற்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்      13 September 2015      கரமுதல

பண்

image.png

ணினை இயற்கை  வைத்த
பண்பனே போற்றி போற்றி
பெண்மையில் தாய்மை வைத்த
பெரியனே போற்றி போற்றி
வண்மையை உயிரில் வைத்த
வள்ளலே போற்றி போற்றி
உண்மையில் இருக்கை வைத்த
உறவனே போற்றி போற்றி

இறைவனைப் பொதுவான பண்புகள் அடிப்படையில் போற்றும் தமிழ்ப்பாடல்கள் எச்சமயத்தவரும் எக்கடவுளை வணங்குவோரும் ஏற்கும் சிறப்பினைப் பெற்றுள்ளன. அந்த வகையில் தமிழ்த்தென்றல் திரு.வி.க. எனப்படும் திரு.வி.கல்ணயாண சுந்தரனாரால்  எழுதப்பெற்ற ‘பொதுமை வேட்டல்’ என்னும் நூலில்  இருந்து எடுக்கப்பட்ட பாடல் இது.

  இயற்கையோடு இயைந்ததாக இசையை அமைத்த பண்பாளரே போற்றி! பெண்மையின் சிறப்பாகத் தாய்மையை வைத்த பெரியோய் போற்றி!  வள்ளல் தன்மையை உயிரினங்களிடம் வைத்த வள்ளலே போற்றி! உண்மையை உள்ளத்தில் தங்க வைத்த  உறவாளரே போற்றி! உன்னை வணங்குகின்றேன்.

இயற்கையில் இருந்து இசை உருவான உண்மையையும் தாய்மையின் சிறப்பையும் எல்லா உயிரினங்களிடமும் வள்ளல் தன்மை என்பது இருக்கும் என்பதால் நாம் கொடைச்சிறப்புடன் வாழ வேண்டும் என்ற வலியுறுத்தலையும் உள்ளத்தில் உண்மை உடையவர்களுடன் இறைவன் உறவாக இருப்பான் என்பதால் நாம் உண்மையுடனே எப்பொழுதும் வாழ வேண்டும் என்ற இலக்கினையும்  தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்  நமக்குத் தெளிவாக்குகிறார்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

மீள் பதிவு



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages