"வாழ்க வளமுடன்" என்பது தவறான சொல்லாட்சி அல்லவா?

26 views
Skip to first unread message

C.R. Selvakumar

unread,
Sep 11, 2011, 4:40:57 PM9/11/11
to தமிழ் மன்றம்
தமிழில் "வாழ்க வளத்துடன்!" என்றுதானே வர வேண்டும்?
"வாழ்க வளமுடன்" என்பது தவறான
சொல்லாட்சி அல்லவா? 
மரம் -> மரத்துடன்
அறம் - >அறத்துடன்
வளம் -> வளத்துடன்
இப்படித்தானே "அத்து" சாரியை சேர்ந்து வருதல் வேண்டும்?
 
நன்கு அறிந்த தமிழ் மன்றத்தினர் கருத்துரைக்க வேண்டுகிறேன்!
 
[திருச்செல்வம் ஐயா அவர்கள், "வளத்துடன்" என்னும் தொல்காப்பியச்
சொல்லாட்சியை முகநூலில் குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பாகவே
இக்கேள்வியும்]
 
நன்றி!
 
அன்புடன்
செல்வா
 
 

சி. ஜெயபாரதன்

unread,
Sep 11, 2011, 7:12:06 PM9/11/11
to tamil...@googlegroups.com
வளமோடு வாழ், இனமோடு சேர் என்று ஏன் சொல்லக் கூடாது ?  
 
அதுபோல்
 
வளமுடன் வாழ், இனமுடன் சேர் என்பதும் சரியல்லவா ?
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++++++++++++
 


 
2011/9/11 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

வேந்தன் அரசு

unread,
Sep 11, 2011, 7:23:13 PM9/11/11
to tamil...@googlegroups.com


11 செப்டெம்ப்ர், 2011 4:40 pm அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

தமிழில் "வாழ்க வளத்துடன்!" என்றுதானே வர வேண்டும்?
"வாழ்க வளமுடன்" என்பது தவறான
சொல்லாட்சி அல்லவா? 
மரம் -> மரத்துடன்
அறம் - >அறத்துடன்
வளம் -> வளத்துடன்
இப்படித்தானே "அத்து" சாரியை சேர்ந்து வருதல் வேண்டும்?
 
நன்கு அறிந்த தமிழ் மன்றத்தினர் கருத்துரைக்க வேண்டுகிறேன்!

தமிழ் எளிமையாதல் நன்மைதானே

வீட்டுக்கு ஒரு மரம் வளருங்கள்னு அரசு சொல்லுது

சாட்டிலைட் டவுன் என்பதை துணைக்கோள் நகரம்னு சொல்லுறாங்க

துணைநகரம்னு சொன்னால் குடிமுழுங்கிடுமோ?




--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

C.R. Selvakumar

unread,
Sep 11, 2011, 8:57:20 PM9/11/11
to tamil...@googlegroups.com


2011/9/11 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

வளமோடு வாழ், இனமோடு சேர் என்று ஏன் சொல்லக் கூடாது ?  
 
அதுபோல்
 
வளமுடன் வாழ், இனமுடன் சேர் என்பதும் சரியல்லவா ?
 
ஆம் சரியல்ல!
வளத்தோடு வாழ், இனத்தோடு சேர்!
 
வளமோடு என்றால் வளம் ஓடிவிடும்! :)
 
"அத்து" என்னும் சாரியை வருதல் வேண்டும்.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

N. Ganesan

unread,
Sep 11, 2011, 9:00:33 PM9/11/11
to தமிழ் மன்றம்

On Sep 11, 4:12 pm, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> வளமோடு வாழ், இனமோடு சேர் என்று ஏன் சொல்லக் கூடாது ?
>
> அதுபோல்
>
> வளமுடன் வாழ், இனமுடன் சேர் என்பதும் சரியல்லவா ?
>
> ஜெயபாரதன்.
>

செல்வா,

பொள்ளாச்சியில் தோன்றிய 'வாழ்க வளமுடன்' இயக்கம் பெரிய
பக்தி யோக இயக்கமாக தமிழர் வாழும் இடங்களில் எல்லாம்
வளர்கிறது.

இருந்த வளமுடையார், சிற்றம்பலமுடையான், ...
இவையெல்லாம் அத்துச் சாரியை பெறுதல் இல்லை.

சிவந்த பொன்மேனி மணி திருச்சிற்றம்பலமுடையான்
- திருக்கோவையார் (மாணிக்கவாசகர்)

நா. கணேசன்

> ++++++++++++++++++++++++++++++
>
> 2011/9/11 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>


>
>
>
> > தமிழில் "வாழ்க வளத்துடன்!" என்றுதானே வர வேண்டும்?
> > "வாழ்க வளமுடன்" என்பது தவறான
> > சொல்லாட்சி அல்லவா?
> > மரம் -> மரத்துடன்
> > அறம் - >அறத்துடன்
> > வளம் -> வளத்துடன்
> > இப்படித்தானே "அத்து" சாரியை சேர்ந்து வருதல் வேண்டும்?
>
> > நன்கு அறிந்த தமிழ் மன்றத்தினர் கருத்துரைக்க வேண்டுகிறேன்!
>
> > [திருச்செல்வம் ஐயா அவர்கள், "வளத்துடன்" என்னும் தொல்காப்பியச்
> > சொல்லாட்சியை முகநூலில் குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பாகவே
> > இக்கேள்வியும்]
>
> > நன்றி!
>
> > அன்புடன்
> > செல்வா
>
> > --
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் மன்றம்" group.
> > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to
> > tamilmanram...@googlegroups.com.
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/tamilmanram?hl=ta.- Hide quoted text -
>
> - Show quoted text -

C.R. Selvakumar

unread,
Sep 11, 2011, 9:03:03 PM9/11/11
to tamil...@googlegroups.com


2011/9/11 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
இதற்குக் காரணம் உண்மையான பயன்பாடு தெரியாமல் 
ஆங்கிலச் சொல்லை மொழி பெயர்த்தல். துணைநகரம் என்பதுதான்
பொருள் என்பதை அறிதல் வேண்டும், சாட்டிலைட் என்னும் சொல்லின்
பொருள் இங்கு என்ன என்று எண்ணுதல் வேண்டும். ஏன் சாட்டிலைட்டு என்னும் சொல்லைக் கண்டுதான்பொருள் கொள்ள வேண்டுமா? நமக்குத் தேவையானபடி பெயர் சூட்டி வளர்த்தெடுக்க வேண்டியதுதானே!
 
அன்புடன்
செல்வா
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

N. Ganesan

unread,
Sep 11, 2011, 9:21:57 PM9/11/11
to தமிழ் மன்றம், santhav...@googlegroups.com, mint...@googlegroups.com

On Sep 11, 6:00 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Sep 11, 4:12 pm, சி. ஜெயபாரதன்  <jayabarath...@gmail.com> wrote:
>
> > வளமோடு வாழ், இனமோடு சேர் என்று ஏன் சொல்லக் கூடாது ?
>
> > அதுபோல்
>
> > வளமுடன் வாழ், இனமுடன் சேர் என்பதும் சரியல்லவா ?
>
> > ஜெயபாரதன்.
>
> செல்வா,
>
> பொள்ளாச்சியில் தோன்றிய 'வாழ்க வளமுடன்' இயக்கம் பெரிய
> பக்தி யோக இயக்கமாக தமிழர் வாழும் இடங்களில் எல்லாம்
> வளர்கிறது.
>
> இருந்த வளமுடையார், சிற்றம்பலமுடையான், ...
> இவையெல்லாம் அத்துச் சாரியை பெறுதல் இல்லை.
>
> சிவந்த பொன்மேனி மணி திருச்சிற்றம்பலமுடையான்
>       - திருக்கோவையார் (மாணிக்கவாசகர்)
>
> நா. கணேசன்
>

A sangam example. From Paripadal 18,

valluppōr vallāy! malaimēl maram.
vaṭṭu uruṭṭu vallāy! malaiya--neṭṭuruṭṭuc
cīrtatumpum *aravamuṭaṉ* ciṟantu,
pōr tatumpum aravam pōl,
karuvi ārppa, karuvi niṉṟaṉa--kuṉṟam. 45

Many more throughout Tamil literature can be given.

N. Ganesan

>
>
> > ++++++++++++++++++++++++++++++
>
> > 2011/9/11 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
>
> > > தமிழில் "வாழ்க வளத்துடன்!" என்றுதானே வர வேண்டும்?
> > > "வாழ்க வளமுடன்" என்பது தவறான
> > > சொல்லாட்சி அல்லவா?
> > > மரம் -> மரத்துடன்
> > > அறம் - >அறத்துடன்
> > > வளம் -> வளத்துடன்
> > > இப்படித்தானே "அத்து" சாரியை சேர்ந்து வருதல் வேண்டும்?
>
> > > நன்கு அறிந்த தமிழ் மன்றத்தினர் கருத்துரைக்க வேண்டுகிறேன்!
>
> > > [திருச்செல்வம் ஐயா அவர்கள், "வளத்துடன்" என்னும் தொல்காப்பியச்
> > > சொல்லாட்சியை முகநூலில் குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பாகவே
> > > இக்கேள்வியும்]
>
> > > நன்றி!
>
> > > அன்புடன்
> > > செல்வா
>
> > > --
> > > You received this message because you are subscribed to the Google Groups
> > > "தமிழ் மன்றம்" group.
> > > To post to this group, send email to tamil...@googlegroups.com.
> > > To unsubscribe from this group, send email to
> > > tamilmanram...@googlegroups.com.
> > > For more options, visit this group at

> > >http://groups.google.com/group/tamilmanram?hl=ta.-Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -

C.R. Selvakumar

unread,
Sep 12, 2011, 6:15:51 AM9/12/11
to tamil...@googlegroups.com, santhav...@googlegroups.com


2011/9/11 N. Ganesan <naa.g...@gmail.com>

Many more throughout Tamil literature can be given.
 
தாருங்கள், பயனுடையதாக இருக்கும்.
அரவு என்பது வேறு.
 
மரம், அறம், வளம் முதலான சொற்கள் அத்து என்னும் சாரியையுடன்
சேர்ந்து மரத்துடன், அறத்துடன், வளத்துடன் என்று வரும்.
 
மரத்தில் செய்த நாற்காலி என்பீர்களா மரமில் செய்த நாற்காலி
என்பீர்களா?
 
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்!
 
செல்வத்தில் மிதந்தார் என்பீரா செல்வமில் மிதந்தார் என்பீரா?
வளத்தில் நல்லது அறிவு வளம் என்பீரா வளமில் நல்லது
அறிவு வளம் என்பீரா?
 
வாழ்க வளத்துடன்! என்பது சரியான சொல்லாட்சி!
 
மிகப்பலரும் "முயற்சித்தல்" என்று பிழைபட எழுதுவது போல
இதுவும் பெருகி வரும் வழு!!
 
(இரமண மகரிசி போன்றவர்கள் கூட நல்ல தமிழறிஞர்களிடம்
கேட்டு திருத்திக்கொண்டார் என்பர். எ.கா: கண்ண முருகனார்)
 
இந்த "முயற்சித்தல்", "வளமுடன்" ஆகிய இரண்டையும் தவிர்த்து
முயல்தல், முயற்சி செய்தல் என்றும் வளத்துடன் என்று எழுதப்
பரிந்துரையுங்கள்.
 
அன்புடன்
செல்வா
 

N. Ganesan

சி. ஜெயபாரதன்

unread,
Sep 12, 2011, 9:09:06 AM9/12/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
தமிழ்ப் புலவர் தமது பாக்களில் எதுகை, மோனை, தளைக்குத் ஏற்றபடி,  வளமொடு, வளமோடு, வளமுடன், வளத்தோடு, இனமொடு, இனமோடு, இனமுடன், இனத்தோடு என்று உரிமையாகப் பல இடங்களில் எழுதி  வந்துள்ளார்.
 
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம்போல் மேனியிற் பால்வெந்நீறும்,
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே ! 
 
அப்பர் இப்பாவில் உரிமையாய்ப் புகுத்திய  " குனித்த, பனித்த, இனித்த,  மனித்த"  இவற்றில் வரும் "அத்த"  ஏன் வந்தது என்று  விளக்க  முடியுமா ?
 
  
சி. ஜெயபாரதன்
 
+++++++++++++++++++++++

 
2011/9/12 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

--

C.R. Selvakumar

unread,
Sep 12, 2011, 9:20:43 AM9/12/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
அங்கு அது "அத்து" சாரியை அல்ல. பெயரெச்ச வடிவம்.
"படித்த பையன்", "குடித்த குவளையை வீசினான்" , 
"படித்து முடித்த நூல்"  என்பது போல.
 
அப்பர் பாட்டில் வருவது
"பால்வெண்ணீறும்" என்று இருக்க வேண்டும் என்று கருதுகின்றேன்.
"வளத்தோடு" என்று பிழையின்றி எழுதுவோம்! வளத்தை
ஓட விட வேண்டாம் வளமோடு என்று கூறி!!
 
அன்புடன்
செல்வா
2011/9/12 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Sep 12, 2011, 9:29:19 AM9/12/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
"பால்வெண்ணீறும்"  சரியே.  திருத்தி விட்டேன். 
 
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே ! 

//// வளத்தை ஓட விட வேண்டாம் வளமோடு என்று கூறி!!  ///
 
பிடிக்கா விட்டால் தமிழ்ச் சொல்லைக் கிண்டல் பண்ணுவது தர்க்கமில்லை !  குதர்க்கம் தனித்தமிழரே !!!
 
"சீச்சீ" இந்தப் பழம் புளிக்கும் என்ற கதை இது !!!!
 
 
சி. ஜெயாரதன்.
 
++++++++++++++++++++++++
 
2011/9/12 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
அங்கு அது "அத்து" சாரியை அல்ல. பெயரெச்ச வடிவம்.
"படித்த பையன்", "குடித்த குவளையை வீசினான்" , 
"படித்து முடித்த நூல்"  என்பது போல.
 
அப்பர் பாட்டில் வருவது
"பால்வெண்ணீறும்" என்று இருக்க வேண்டும் என்று கருதுகின்றேன்.
"வளத்தோடு" என்று பிழையின்றி எழுதுவோம்! வளத்தை
ஓட விட வேண்டாம் வளமோடு என்று கூறி!!
 
அன்புடன்
செல்வா
2011/9/12 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
தமிழ்ப் புலவர் தமது பாக்களில் எதுகை, மோனை, தளைக்குத் ஏற்றபடி,  வளமொடு, வளமோடு, வளமுடன், வளத்தோடு, இனமொடு, இனமோடு, இனமுடன், இனத்தோடு என்று உரிமையாகப் பல இடங்களில் எழுதி  வந்துள்ளார்.
 
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்

N. Ganesan

unread,
Sep 12, 2011, 11:25:15 AM9/12/11
to தமிழ் மன்றம்

On Sep 12, 3:15 am, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:
> 2011/9/11 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > Many more throughout Tamil literature can be given.
>
> தாருங்கள், பயனுடையதாக இருக்கும்.
> அரவு என்பது வேறு.
>

?

காட்டப்பட்ட பரிபாடல் வரி:
சீர்ததும்பும் *அரவமுடன்* சிறந்து

நா. கணேசன்

Deiva Sundaram

unread,
Sep 12, 2011, 12:23:59 PM9/12/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள பேராசிரியருக்கு,
தங்களது இலக்கண அறிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்
 

Date: Mon, 12 Sep 2011 09:20:43 -0400
Subject: Re: [தமிழ் மன்றம்] Re: "வாழ்க வளமுடன்" என்பது தவறான சொல்லாட்சி அல்லவா?
From: c.r.sel...@gmail.com
To: tamil...@googlegroups.com
CC: tamizh...@googlegroups.com; anb...@googlegroups.com

C.R. Selvakumar

unread,
Sep 12, 2011, 1:23:13 PM9/12/11
to tamil...@googlegroups.com


2011/9/12 Deiva Sundaram <ndsun...@hotmail.com>

அன்புள்ள பேராசிரியருக்கு,
தங்களது இலக்கண அறிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
மிக்க நன்றி ஐயா!

பழமைபேசி

unread,
Sep 12, 2011, 1:34:49 PM9/12/11
to தமிழ் மன்றம்
நாட்டாமை, தீர்ப்பை கால தாமதமின்றி உடனே கூறவும்.

ந்லமுடன், வளமுடன், முகமுடன், வரமுடன் எனப் பாவித்தே பழகிவிட்டேன்.

கள்ளமுடன்,
பழமைபேசி.

On Sep 12, 12:23 pm, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:
> 2011/9/12 Deiva Sundaram <ndsunda...@hotmail.com>


>
> >  அன்புள்ள பேராசிரியருக்கு,
> > தங்களது இலக்கண அறிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
>
> மிக்க நன்றி ஐயா!
>
> அன்புடன்
> செல்வா
>
> >  அன்புடன்
>
>  ந. தெய்வ சுந்தரம்
>
>
>
>
>
>
>
>
>
>
>

> >  ------------------------------


> > Date: Mon, 12 Sep 2011 09:20:43 -0400
> > Subject: Re: [தமிழ் மன்றம்] Re: "வாழ்க வளமுடன்" என்பது தவறான சொல்லாட்சி
> > அல்லவா?

> > From: c.r.selvaku...@gmail.com


> > To: tamil...@googlegroups.com
> > CC: tamizh...@googlegroups.com; anb...@googlegroups.com
>
> > அங்கு அது "அத்து" சாரியை அல்ல. பெயரெச்ச வடிவம்.
> > "படித்த பையன்", "குடித்த குவளையை வீசினான்" ,
> > "படித்து முடித்த நூல்"  என்பது போல.
>
> > அப்பர் பாட்டில் வருவது
> > "பால்வெண்ணீறும்" என்று இருக்க வேண்டும் என்று கருதுகின்றேன்.
> > "வளத்தோடு" என்று பிழையின்றி எழுதுவோம்! வளத்தை
> > ஓட விட வேண்டாம் வளமோடு என்று கூறி!!
>
> > அன்புடன்
> > செல்வா

> > 2011/9/12 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>


>
> > தமிழ்ப் புலவர் தமது பாக்களில் எதுகை, மோனை, தளைக்குத் ஏற்றபடி,  வளமொடு,
> > வளமோடு, வளமுடன், வளத்தோடு, இனமொடு, இனமோடு, இனமுடன், இனத்தோடு என்று
> > உரிமையாகப் பல இடங்களில் எழுதி  வந்துள்ளார்.
>
> > குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்,
> > பனித்த சடையும், பவளம்போல் மேனியிற் பால்வெந்நீறும்,
> > இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
> > மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே !
>
> > அப்பர் இப்பாவில் உரிமையாய்ப் புகுத்திய  " குனித்த, பனித்த, இனித்த,
> > மனித்த"  இவற்றில் வரும் "அத்த"  ஏன் வந்தது என்று  விளக்க  முடியுமா ?
>
> > சி. ஜெயபாரதன்
>
> > +++++++++++++++++++++++
>

> > 2011/9/12 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
>
> > 2011/9/11 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > Many more throughout Tamil literature can be given.
>
> > தாருங்கள், பயனுடையதாக இருக்கும்.
> > அரவு என்பது வேறு.
>
> > மரம், அறம், வளம் முதலான சொற்கள் அத்து என்னும் சாரியையுடன்

> > சேர்ந்து *மரத்துடன், அறத்துடன், வளத்துடன்* என்று வரும்.
>
> > *மரத்தில் செய்த நாற்காலி* என்பீர்களா *மரமில் செய்த நாற்காலி*


> > என்பீர்களா?
>

> > *செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்!*
>
> > *செல்வத்தில் மிதந்தார்* என்பீரா *செல்வமில் மிதந்தார்* என்பீரா?
> > *வளத்தில் நல்லது அறிவு வளம்* என்பீரா *வளமில் நல்லது*
> > *அறிவு வளம்* என்பீரா?
>
> > *வாழ்க வளத்துடன்!* என்பது சரியான சொல்லாட்சி!

C.R. Selvakumar

unread,
Sep 12, 2011, 1:44:16 PM9/12/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
2011/9/12 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
"பால்வெண்ணீறும்"  சரியே.  திருத்தி விட்டேன். 

 
நன்றி.
 
 
//// வளத்தை ஓட விட வேண்டாம் வளமோடு என்று கூறி!!  ///
 
பிடிக்கா விட்டால் தமிழ்ச் சொல்லைக் கிண்டல் பண்ணுவது தர்க்கமில்லை !  குதர்க்கம் தனித்தமிழரே !!!
 
அப்படி இல்லை ஐயா.  நான் சற்று வேடிக்கையாகத்தான் கூறினேன்.
ஆனால் அது அவையில் கூறத்தகுந்த நயம் என்றே கருதி
இட்டேன். நீங்கள் கருத்தை விட்டுவிட்டு "தனித்தமிழரே" என்கிறீர்கள்.
 
கீழ்க்காணும் கேள்விகளுக்கு உங்கள் விடையைத் தாருங்கள்:
 
[1] வளம் + உடன் என்பதில் உடன்  என்பது வேற்றுமை உருபா ?
 
   (மூன்றாம் வேற்றுமை என்பது பலரும் அறிந்தது; ஆல், ஆன். ஓடு, உடன்
    என்பன.)
 
[2} வேற்றுமை உருபு சேரும் பொழுது உருபுப் புணர்ச்சியால் "அத்து"
     என்னும் சாரியை வருமா வராதா?
     மரம் + ஐ = மரமை என்று கூறுவது தவறு அல்லவா? (மரத்தை - சரி)
     மரம் + ஆல் மரமால் என்று கூறுவது தவறு அல்லவா? (மரத்தால் - சரி)
     மரம் + உடன் = மரமுடன் என்று கூறுவது தவறு அல்லவா? (மரத்துடன்)
    
[3] மேலே உள்ளது போல் வளம் + உடன் = வளத்துடன் அல்லவா?
 
இதில் "பிடிக்காதது" எது ஐயா? இலக்கணப்படி "வளமுடன்" என்பது
வழு, பிழை. வளத்துடன், மரத்துடன், செல்வத்துடன், இன்பத்துடன்
என்று அத்து சேர்த்து எழுதுதலே சரியான வழக்கு.  வாழ்க வளத்துடன்!
என்று கூறுவது சரி.
    
 
"சீச்சீ" இந்தப் பழம் புளிக்கும் என்ற கதை இது !!!!
 
எது??!!

பழமைபேசி

unread,
Sep 12, 2011, 1:58:09 PM9/12/11
to தமிழ் மன்றம்
’உடன்’ மற்றொன்டுடன் உள்ள இணைப்பினைக் குறிப்பது போல் உளது.

//சீர்ததும்பும் *அரவமுடன்* சிறந்து //

இதற்கு முந்தைய வரியில் இருக்கும் யாதோ ஒன்று, சீர்ததும்பும் அரவமுடன்
சிறந்து எனப் பொருள் பொதிந்து வருகிறது.

நல்ல மனநிலையில் நலமுடன் இருக்கிறான் எனும் போது, நல்ல மனநிலையோடு நலமும்
உடன் இருக்கிறது என ஆகிறது.
வெறுமனே நலமுடன் இருக்கிறான் எனக் கூறும் போது, உடன் இருப்பது யாது எனும்
வினா பிறக்கிறது. நலத்தோடு இருக்கிறான் எனும் போது எனக்கு அவ்வினா
பிறக்கவில்லை.

நல்ல உள்ளமுடன் பழகினான்.
விருந்தோம்பல் அளித்து நல்ல உள்ளமுடன் பழகினான் எனும் போது,
விருந்தோம்பலும் நல்ல உள்ளமும் ஒட்டி இருக்கின்றன என ஆகிறது.
நல்ல உள்ளத்தோடு பழகினான். உடன் இருப்பது எதையும் நாம் சுட்டவில்லை.

ஆகவே, இனிமேற்கொண்டு நான் இப்படிப் பாவிக்க முயலுகிறேன்.


செல்வம் மிகுந்து, தமிழ்ப்பற்று பெருகி, உளம் கனிந்த உடல் நலமுடன்
இருக்கிறார்.

அவருக்கு செல்வம் இருக்கா, தமிழ்ப்பற்று இருக்கா, உளம் கனிந்து
இருக்கான்னு எல்லாம் தெரியாது. ஆனால், உடல் நலத்தோடு இருக்கிறார்.

#பழமை, நீயும் ஏரணம் கட்டுறே?!

C.R. Selvakumar

unread,
Sep 12, 2011, 1:59:01 PM9/12/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள பழமைபேசி,
 
நலத்துடன், வளத்துடன், முகத்துடன் என்று வருவதே
சரி. உறுதி செய்துகொள்ள கீழ்க்கண்ட வாறு எண்ணிப்பாருங்கள்:
நலம் + ஐ என்பதை நலத்தை என்பீரா, நலமை என்பீரா
முகம் + ஐ = முகத்தை என்பீரா, முகமை என்பீரா?
 
இதே போல ஆல், உடன் என்பனவற்றையும் எண்ணிப்பாருங்கள்
நலத்தால் என்பீரா நலமால் என்பீரா?
வளத்தால் என்பீரா வளமால் என்பீரா?
 
நான்காம் வேற்றுமை கு என்பதையும் எண்ணிப்பாருங்கள்
நலத்துக்கு, முகத்துக்கு, வளத்துக்கு என்பனவே சரி.
 
பல பிழையான வழக்குகளை ("முயற்சித்தல்" என்பன போன்று)
விடுவது நல்லது. முயல் - முயல்தல் எளிய சொல். இதை
விட்டுவிட்டு முயற்சித்தல் என்கிறார்கள். முயல் என்பதன்
பெயர்ச்சொல் வடிவம் முயற்சி. தளர் - தளர்ச்சி, உணர்-உணர்ச்சி,
வளர்-வளர்ச்சி. யாரும் தளர்ச்சித்தல், வளர்ச்சித்தல் என்றெல்லாம்
சொல்வதில்லை!
 
அன்புடன்
செல்வா


 
2011/9/12 பழமைபேசி <pazam...@gmail.com>

Jayabarathan

unread,
Sep 12, 2011, 2:07:09 PM9/12/11
to tamil...@googlegroups.com
இலக்கணத்தை விட்டுத் தள்ளி ஏன் இவற்றை எழுதக்கூடாது என்று சொல்லுங்கள்.
 
கவிதைகளில், வசனங்களில் வளமொடு, நலமொடு, பலமொடு, தரமொடு, வளமோடு, நலமோடு, பலமோடு, வளமுடன்,  நிறமுடன், சினமுடன்,   தனமுடன்  என்று  எழுதுவதில் தவறில்லை என்பது என் கருத்து. 
     
 
ஜெயபாரதன்.
 
 
-------Original Message-------

No virus found in this message.
Checked by AVG - www.avg.com
Version: 2012.0.1796 / Virus Database: 2082/4492 - Release Date: 09/12/11

 
FREE Animations for your email - by IncrediMail! Click Here!
grad.gif
image.gif
stampa_girl_line_en.gif

பழமைபேசி

unread,
Sep 12, 2011, 2:11:25 PM9/12/11
to தமிழ் மன்றம்
பழமை விடாதே.... நீர் சொல்லும் ஏரணமும் சிந்திக்கக் கூடியதுதான்
போலிருக்கு.

உடன், (p. 121) [ uṭṉ, ] s. A particle of time and place used in
combination with other words and expressing co-existence

மற்ற சொல்லுடன் சேர்த்துப் பாவிப்பதற்குத்தான் ‘உடன்’. நலமுடன்
வாழ்கிறார் என்பதன் மூலம், நலம் எனும் சொல்லையும் நலம் பொருந்திய
மாந்தனையும் பிணைக்கப்படக் கூடாது. நலம் எனும் சொல்லையும், மற்றொரு
சொல்லையும்தான் ‘உடன்’ சேர்த்து வைக்கப்படுதல் வேண்டும். ஆகவே, மனநலம்
பேணி உடல் நலமுடன் இருக்கிறார். இஃகி இஃகி!!

> > > > To post to this group, send...
>
> read more »

Jayabarathan

unread,
Sep 12, 2011, 2:13:27 PM9/12/11
to tamil...@googlegroups.com
இதே போல ஆல், உடன் என்பனவற்றையும் எண்ணிப்பாருங்கள்
நலத்தால் என்பீரா நலமால் என்பீரா?
வளத்தால் என்பீரா வளமால் என்பீரா?
 
ஆல் எல்லாவற்றுக்கும் பொருந்தாது !!!!  அதற்காக உடன், ஒடு, ஓடு உள்ளன. 
 
நலம் + உடன் = நலமுடன்
வளம் + உடன் = வளமுடன்.
 
நலம் + ஒடு = நலமொடு
வளம் +  ஓடு = நலமோடு
 
மாட்டு வண்டியில் குதிரை எப்படி மாட்டுவது கேட்காதீர் !!!
 
ஜெயபாரதன்
 
++++++++++++++++
 
-------Original Message-------

No virus found in this message.
Checked by AVG - www.avg.com
Version: 2012.0.1796 / Virus Database: 2082/4492 - Release Date: 09/12/11

 
grad.gif
image.gif
butterflies3_hyper+btn.gif

C.R. Selvakumar

unread,
Sep 12, 2011, 2:22:39 PM9/12/11
to tamil...@googlegroups.com
//இலக்கணத்தை விட்டுத் தள்ளி ஏன் இவற்றை எழுதக்கூடாது என்று சொல்லுங்கள்//
 
அப்பொழுது நலமை, வளமை என்று இரண்டாம் வேற்றுமை சேர்த்து எழுதுவீரா?
பொருள் மாறுபாடு வருமே!
நலத்தை, வளத்தை என்றுதான் எழுத வேண்டும்.
 
வளத்தோடு, நலத்தோடு, பலத்தோடு, தரத்தோடு என்று எழுதுதல்தான் முறை.
 
வளமோடு, நலமோடு என்றால் அவை ஓடிவிடும் :) :)
 
எல்லோரும் அவரவர் விருப்பம் போல் தாறுமாறாகச் செய்யலாம் எனில்
இலக்கணம் தேவை இல்லைதான்! இலக்கணம் தக்கவாறு பொருள் கொள்ள
ஒழுங்கு செய்து வைக்கப்பட்டது.
 
அன்புடன்
செல்வா

 
2011/9/12 Jayabarathan <jaya...@tnt21.com>
stampa_girl_line_en.gif
grad.gif
image.gif

C.R. Selvakumar

unread,
Sep 12, 2011, 2:38:29 PM9/12/11
to tamil...@googlegroups.com
செயபாரதன் ஐயா,
 
//ஆல் எல்லாவற்றுக்கும் பொருந்தாது !!!! 
அதற்காக உடன், ஒடு, ஓடு உள்ளன.//
 
என்னும் உங்கள் விளக்கம் உண்மையிலேயே சிரிப்பை
உண்டாக்கியது!  
 
நலம் + ஓடு = நலமோடு என்றால் நலம் ஓடும்!
வளம் + ஓடு = வளமோடு என்றால் வளம் ஓடும்!
 
நலத்தோடு, வளத்தோடு
நலத்துடன், வளத்துடன் என்பன சரியானவை.
 
நீங்கள் கூறுவது அடிப்படையில் வழுவானது, பிழையானது.
இது பற்றி தமிழ் இலக்கணம் தெளிவாகக் கூறியுள்ளது.
கற்றுக்கொள்வதும் கடைபிடிப்பதும் உங்கள் விருப்பம்.
நீங்கள் நலமை, நலமால், வளமால், வளமை, என்றெல்லாம்
எழுதிக் களிப்பதும் உங்கள் உகப்பு!
வேறு என்ன சொல்ல இயலும். வருந்துகிறேன், நீங்கள்
இப்படியெல்லாம் அடிப்படையைக் கூட மதிக்காமல்
முறைகொண்டும் அணுகாமல் பேசுவது!
 
தமிழை மதிப்பவர்கள் "வாழ்க வளத்துடன்!" என்பர்!
 
அன்புடன்
செல்வா
 
 
 
 
 


 
2011/9/12 Jayabarathan <jaya...@tnt21.com>
grad.gif
butterflies3_hyper+btn.gif
image.gif

பழமைபேசி

unread,
Sep 12, 2011, 2:41:31 PM9/12/11
to தமிழ் மன்றம்
//பல பிழையான வழக்குகளை ("முயற்சித்தல்" என்பன போன்று)
விடுவது நல்லது.//

அருமை. அண்மையில் இரு எழுத்தாளர் குழந்தைமை எனும் சொல்லாட்சியை
மேற்கொண்டிருந்தார்.

குழ(ழை)மை என்பதே, பேதமையுடன் கூடிய இளமைதான். குழ(ழை)மை பொருந்தியதுதான்
குழ(ழை)ந்தை. ஆக, குழைமை என்றே பாவிக்க வேண்டும். குழைந்தைமை என்பது வழு!
ஏன் அப்படிச் சொல்கிறோம்?!

குழைமை -> குழைந்தை-->குழைந்தைமை--> நாளைக்கு குழைந்தைமையை வராது என என்ன
நிச்சயம்?!

On Sep 12, 12:59 pm, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:


> அன்புள்ள பழமைபேசி,
>
> நலத்துடன், வளத்துடன், முகத்துடன் என்று வருவதே
> சரி. உறுதி செய்துகொள்ள கீழ்க்கண்ட வாறு எண்ணிப்பாருங்கள்:
> நலம் + ஐ என்பதை நலத்தை என்பீரா, நலமை என்பீரா
> முகம் + ஐ = முகத்தை என்பீரா, முகமை என்பீரா?
>
> இதே போல ஆல், உடன் என்பனவற்றையும் எண்ணிப்பாருங்கள்
> நலத்தால் என்பீரா நலமால் என்பீரா?
> வளத்தால் என்பீரா வளமால் என்பீரா?
>
> நான்காம் வேற்றுமை கு என்பதையும் எண்ணிப்பாருங்கள்
> நலத்துக்கு, முகத்துக்கு, வளத்துக்கு என்பனவே சரி.
>
> பல பிழையான வழக்குகளை ("முயற்சித்தல்" என்பன போன்று)
> விடுவது நல்லது. முயல் - முயல்தல் எளிய சொல். இதை
> விட்டுவிட்டு முயற்சித்தல் என்கிறார்கள். முயல் என்பதன்
> பெயர்ச்சொல் வடிவம் முயற்சி. தளர் - தளர்ச்சி, உணர்-உணர்ச்சி,
> வளர்-வளர்ச்சி. யாரும் தளர்ச்சித்தல், வளர்ச்சித்தல் என்றெல்லாம்
> சொல்வதில்லை!
>
> அன்புடன்
> செல்வா
>

> 2011/9/12 பழமைபேசி <pazamaip...@gmail.com>

> ...
>
> read more »

பழமைபேசி

unread,
Sep 12, 2011, 2:47:07 PM9/12/11
to தமிழ் மன்றம்
http://www.tamilvu.org/courses/degree/a021/a0211/html/a02115l1.htm

> > > > > For more options, visit this group at...
>
> read more »

Jayabarathan

unread,
Sep 12, 2011, 2:44:33 PM9/12/11
to tamil...@googlegroups.com
///நலம் + ஓடு = நலமோடு என்றால் நலம் ஓடும்!
வளம் + ஓடு = வளமோடு என்றால் வளம் ஓடும்! ////
 
நலமோடு,  நலமோடும் இரண்டும் ஒன்றா ?
 
என்னையா காதிலே குத்துறீங்க ?
 
ஜெயபாரதன்
 
++++++++++
grad.gif
grad1.gif
image3.gif
butterflies3_hyper+btn2.gif
image.gif
05_puppy_sticky_note_en.gif

Jayabarathan

unread,
Sep 12, 2011, 2:41:37 PM9/12/11
to tamil...@googlegroups.com
உயிர் + உடன் = உயிருடன்
உயிர் + ஓடு = உயிரோடு,
உயிர் + ஒடு = உயிரொடு
உயிர் + ஆல் = உயிரால்
 
மகன் + உடன் = மகனுடன்
மகன் + ஓடு = மகனோடு
மகன் + ஒடு = மகனொடு 
மகன் + ஆல் = மகனால் 
 
இவையெல்லாம் பிழையா ?
 
ஜெயபாரதன்
 
++++++
grad.gif
grad2.gif
image3.gif
stampa_girl_line_en1.gif
image.gif
monkey_line_hyper+btn.gif

C.R. Selvakumar

unread,
Sep 12, 2011, 3:13:53 PM9/12/11
to tamil...@googlegroups.com
செயபாரதன் ஐயா,
 
அத்து சாரியை எல்லா சொற்களுக்கும் அல்ல, மகர மெய் (ம்), அம் என்று முடியும் சொற்களுக்குத்தான். 
 
காதிலே குத்தவில்லை! வளமோடு என்றால் வளமே ஓடுக!
என்று பொருள் வரும் என்றேன். வளமோடும் என்பது
தொக்கி இருக்கும் எச்சமாக இருக்கும்.
வளமோடு வாழ்க்கை என்றால் வளம் விட்டு ஓடும் (ஓடுகின்ற, ஓடின)
வாழ்க்கை என்றாகும். ஊறுகாய் என்பது போல வினைத்தொகை
போல பொருள் கொள்ளலாம்.
வளத்தோடு வாழ்க்கை என்றால் வளம் நிறைந்து
இருக்கும் வாழ்க்கை என்று பொருள்.
 
இதெல்லாம் அடிப்படை இலக்கணம் தானே ஐயா?!
grad2.gif
image3.gif
grad.gif
monkey_line_hyper+btn.gif
image.gif
stampa_girl_line_en1.gif

C.R. Selvakumar

unread,
Sep 12, 2011, 3:29:04 PM9/12/11
to tamil...@googlegroups.com


2011/9/12 பழமைபேசி <pazam...@gmail.com>
http://www.tamilvu.org/courses/degree/a021/a0211/html/a02115l1.htm
 
 
ஆம், பழமைபேசி, இதோடு,
பார்க்கலாம்.
 
அதில் கீழ்க்காணும் பகுதியைப் பார்க்கலாம்:
 
<மேற்கோள் தொடக்கம்>

அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன என்ற பதினேழும், இவை போல்வன பிறவும் பொதுச்சாரியைகள் ஆகும்.

அன்ஆன் இன்அல் அற்றுஇற்று அத்துஅம்
தம்நம் நும்ஏ அஉ ஐகுன
இன்ன பிறவும் பொதுச் சாரியையே (நன்னூல், 244)

.....

  • உருபு புணர்ச்சி

    பதத்தின் முன்னர் வேற்றுமை உருபு வந்து புணர்வது உருபு புணர்ச்சி எனப்படும்.

    சான்று:

    1. மரம் + ஐ > மர + அத்து + ஐ
                                  = மரத்தை

    அத்து என்னும் ஒரு சாரியை வந்தது
         
    மரம் + ஐ > மர + அத்து + இன் + ஐ
                                  = மரத்தினை
    அத்து, இன் என்னும் இரு சாரியைகள் வந்தன
         
    மரம் + கு > மர + அத்து + இன் + + கு
                                    = மரத்தினுக்கு
    அத்து, இன், உ என்னும் மூன்று சாரியைகள் வந்தன

    இச்சான்றுகளில் பதத்தின் முன்னர் வேற்றுமை உருபு புணரும்போது இடையில் சாரியை ஒன்றோ பலவோ வந்தமை காணலாம்.

 
<மேற்கோள் முடிவு>

Jayabarathan

unread,
Sep 12, 2011, 3:37:20 PM9/12/11
to tamil...@googlegroups.com
வளமோடு வாழ்க்கை என்றால் வளம் விட்டு ஓடும் (ஓடுகின்ற, ஓடின)
வாழ்க்கை என்றாகும்.
 
வளமோடு வாழ்க்கை இதை ஒரு வாக்கியத்தில் எழுதுக
 
வளமோடு வாழ்க என்றால் அர்த்தமென்ன /
 
உயிர் + உடன் = உயிருடன்
உயிர் + ஓடு = உயிரோடு,
உயிர் + ஒடு = உயிரொடு
உயிர் + ஆல் = உயிரால்
 
மகன் + உடன் = மகனுடன்
மகன் + ஓடு = மகனோடு
மகன் + ஒடு = மகனொடு 
மகன் + ஆல் = மகனால் 
 
இவையெல்லாம் பிழையா ?
 
////அத்து சாரியை எல்லா சொற்களுக்கும் அல்ல /////, மகர மெய் (ம்), அம் என்று முடியும் சொற்களுக்குத்தான்.  ////
 
ஒப்புக் கொண்டதற்கு நன்றி
 
மாட்டு வண்டியில் குதிரையை மாட்ட முடியாது.  ஆல் ஓடு ஒடு, உடன் பொருத்தமான வெவ்வேறு புணர்ச்சி இணைப்புகள்.
 
 
ஜெயபாரதன்
grad.gif
grad3.gif
grad21.gif
image32.gif
stampa_girl_line_en16.gif
image5.gif
monkey_line_hyper+btn4.gif
image.gif
02_splash_emoticon_03b_en.gif

C.R. Selvakumar

unread,
Sep 12, 2011, 4:07:38 PM9/12/11
to tamil...@googlegroups.com
//வளமோடு வாழ்க என்றால் அர்த்தமென்ன //
 
வளமும் ஓடும் வாழ்க! சேரசோழன் வாழ்க!
வளத்தோடு வாழ்க என்பதே சரி! இது அடிப்படை
இலக்கணம். பள்ளிக்கூடத்தில் பயிற்றுவிக்கின்றார்கள்!
---------
////அத்து சாரியை எல்லா சொற்களுக்கும் அல்ல /////, மகர மெய் (ம்), அம் என்று முடியும் சொற்களுக்குத்தான்.  ////
 
ஒப்புக் கொண்டதற்கு நன்றி
 
மாட்டு வண்டியில் குதிரையை மாட்ட முடியாது.  ஆல் ஓடு ஒடு, உடன் பொருத்தமான வெவ்வேறு புணர்ச்சி இணைப்புகள்.
-------
 
ஒப்புக்கொண்டதற்கு நன்றியா? ஏதோ நீங்கள் அத்து சாரியை பற்றி ஏதும்
கூறியது போல?!! நேர்மையுடன் உரையாடுங்கள் ஐயா!!
 
//ஆல் ஓடு ஒடு, உடன் பொருத்தமான வெவ்வேறு புணர்ச்சி இணைப்புகள்.//
 
இப்படி யார் சொல்லி இருக்கிறார்கள். அப்போ வளம் + ஆல் = வளமால்
என்பீரா? நலம் + ஆல் = நலமால் என்பீரா?
மரத்துடன், வளத்துடன் என்று 2500+ ஆண்டுகளாகக் கூறிவந்தது
தவறு என்பீரா! பொறுப்புடன், அறிவுடன், நேர்மையுடன் உரையாடுங்கள்!
அத்து சாரியை பெற்று உருபு புணர்ச்சி கொள்ளும் சொற்களை
அறிந்து கொள்ளுங்கள்! மரத்தால், வளத்தால், மரத்தோடு, வளத்தோடு, மரத்துடன், வளத்துடன் என்பன சரியான வழக்கு! உங்கள் பிழையான
வழக்கைத் திருத்திக்கொள்ளுங்கள்!
 
தவறு எனில் நான் திருத்திக்கொள்ள அணியம்.
 
இனி வீணே நேரத்தை இதில் வீணாக்க விருப்பம் இல்லை!
image32.gif
grad21.gif
image5.gif
grad.gif
02_splash_emoticon_03b_en.gif
monkey_line_hyper+btn4.gif
stampa_girl_line_en16.gif
image.gif
grad3.gif

சி. ஜெயபாரதன்

unread,
Sep 12, 2011, 6:07:31 PM9/12/11
to tamil...@googlegroups.com

//// அப்போ வளம் + ஆல் = வளமால்
என்பீரா? நலம் + ஆல் = நலமால் என்பீரா? ///யில் குதிடர்
 
இதைத்தான்  மாட்டு வண்டியில் குதிரையை மாட்ட முடியாது என்று சொல்கிறேன் 
ஆல் ஓடு ஒடு, உடன் பொருத்தமான வெவ்வேறு புணர்ச்சி இணைப்புகள்.
 
வளமோடு வாழ்க்கை இதை ஒரு வாக்கியத்தில் எழுதுக
//வளமோடு வாழ்க என்றால் அர்த்தமென்ன //
 
வளமும் ஓடும் வாழ்க!   ///
 
உன்னத அர்த்தம் !!!!
 
வளத்தோடு வாழ்க என்றால் வளமையான தோடு வாழ்க வென்று அர்த்தமா ?
 
 
ஜெயபாரதன்

2011/9/12 Jayabarathan <jaya...@tnt21.com>
monkey_line_hyper+btn4.gif
grad3.gif
image32.gif
grad.gif
02_splash_emoticon_03b_en.gif
stampa_girl_line_en16.gif
image.gif
image5.gif
grad21.gif

வேந்தன் அரசு

unread,
Sep 12, 2011, 8:42:00 PM9/12/11
to tamil...@googlegroups.com


12 செப்டெம்ப்ர், 2011 1:59 pm அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

அன்புள்ள பழமைபேசி,
 
நலத்துடன், வளத்துடன், முகத்துடன் என்று வருவதே
சரி. உறுதி செய்துகொள்ள கீழ்க்கண்ட வாறு எண்ணிப்பாருங்கள்:
நலம் + ஐ என்பதை நலத்தை என்பீரா, நலமை என்பீரா
முகம் + ஐ = முகத்தை என்பீரா, முகமை என்பீரா?


பழக பழக வேம்பும் இனிக்கும்
 

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

C.R. Selvakumar

unread,
Sep 13, 2011, 6:36:20 AM9/13/11
to tamil...@googlegroups.com


2011/9/12 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
உண்மைதான் வேந்தரே. 
சீர்மை பேணுவதும் அபப்டித்தான்!
சீர்குலைவை ஊக்குவதும் அப்படித்தான்.
தமிழ்மொழி சீரோடும் சிறப்போடும் 2500+ ஆண்டுகள்
வாழ்ந்து வந்திருப்பது,நாம்  நம் தமிழ் முன்னோர்களின் அறிவார்ந்த
முறைகளைப் பின்பற்றியதால்தான்.
அவரவர் தம் விருப்பம் போல்
மாற்றிக்கொண்டிருந்தால் சீரழியும்,
திருவள்ளுவரின் குறள்களை இப்படி நான்
படித்து உடனுக்குடன் இன்புற முடியாது.
 
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்!!!
 
(நீங்கள் செல்வமுள், தங்கமுள் என்றெல்லாம்
கொள்வது உங்கள் உகப்பு. மொழியானது ஒரு பொதுச் சொத்தும்
என்பதனையும் கருத்தில் கொள்க! )
 
திரு செயபாரதன் ஐயா, "வளத்தோடு" என்பது
வளத்துடன் என்பதோடு வளமான தோடு
என்றும் பொருள் தரும். எம்மொழியாயினும் மரபு தெரிந்திருக்க
வேண்டும். நீங்கள் மாட்டுக்குட்டி என்றுதான் சொல்வேன் என்றால்
யான் ஏதும் சொல்ல இயலாது.
"மரபுநிலை திரியின் மிறிதுபிறிதாகும்" - என்றார் தொல்காப்பியர்.
 
வாழ்க! வளத்துடன்!! என்பதே சரியான வழக்கு!
"வாழ்க வளமுடன்" என்பது அடிப்படை வழுவானது, பிழையானது!
 
இது குறித்து மேற்கொண்டு எதுவும் சொல்லத் தேவை இல்லை.
 
அன்புடன்
செல்வா
 
 
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--

C.R. Selvakumar

unread,
Sep 13, 2011, 8:04:07 AM9/13/11
to tamil...@googlegroups.com
"மரபுநிலை திரியின் பிறிதுபிறிதாகும்"  என்று திருத்திப் படிக்கவும்.

2011/9/13 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Sep 13, 2011, 9:36:25 AM9/13/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
//// இரா. திருமுருகனார் விளக்குவதுபோல்,
உடன் என்னும் சொல்லுருபு அத்துச் சாரியை பெறாமலும்
இயங்கும் என்பதற்குப் பரிபாடலில் இருந்து பாரதி
வரை சில சான்றுகளைக் காண்போம். //////
 
நண்பர் செல்வா.
 
"முயலுக்கு மூன்று கால்கள் " என்று தர்க்கமிடுகிறீர்.  
 
நண்பர் நா. கணேசன் தந்த உதாரணங்களுக்கு உங்கள் பதில் என்ன ?
 
 
சி. ஜெயபாரதன்.
 
++++++++++++++++++  

2011/9/13 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
--

சி. ஜெயபாரதன்

unread,
Sep 13, 2011, 9:42:46 AM9/13/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
//// *வினா*: *வாழ்க வளமுடன், வாழ்க வளத்துடன் - இவ்விரண்டில் சரியானது எது?

*- புலவர் வீ. வில்வநாதன், வெங்காலூர் - 16
 
*விடை*: இரண்டும் சரியே. ஒடு உருபு பெயர்களுடன் புணரும்போது அத்துச்சாரியை பெறுவதும் பெறாமையும் மரபே.
தொல்காப்பியர் அகரமொடு (17) காலமொடு (683) என அத்துச்சாரியை இன்றியும் திறத்தொடு (984) என்று அத்துச்சாரியையுடனும் எழுதியிருக்கிறார் உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும் (132) என்று இலக்கணமும் கூறுகிறார்.  ////
 
 
செல்வா,
 
உங்களுக்குத்தான் இலக்கணம் தெரியும் என்று தலைக்கணத்தில் இருக்கிறீர்.
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++++
 
++++++++++++++++++++++

2011/9/13 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

DEV RAJ

unread,
Sep 14, 2011, 1:53:23 AM9/14/11
to தமிழ் மன்றம்
> தொல்காப்பியர் அகரமொடு (17) காலமொடு (683) என அத்துச்சாரியை இன்றியும்
> திறத்தொடு (984) என்று அத்துச்சாரியையுடனும் எழுதியிருக்கிறார்


அரிய தகவலுக்கு நன்றி

‘அகமுடையார்’ முக்குலத்தோரில் ஒரு பிரிவு.
முக்குலத்தோர், முக்குலத்தார் - எது சரி ?
முந்தையது பெரும்பான்மை வழக்கு


*துணைக்கோள் நகரம்*

உவவனம் - இலக்கியத்தில் உள்ளது;
அதையொட்டி ‘உவநகர்’ சரியாக இருக்கும்


தேவ்

On Sep 13, 6:42 pm, சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com> wrote:
> //// *வினா*: *வாழ்க வளமுடன், வாழ்க வளத்துடன் - இவ்விரண்டில் சரியானது எது?
>
> *- புலவர் வீ. வில்வநாதன், வெங்காலூர் - 16
> *விடை*: இரண்டும் சரியே. ஒடு உருபு பெயர்களுடன் புணரும்போது அத்துச்சாரியை
> பெறுவதும் பெறாமையும் மரபே.
> தொல்காப்பியர் அகரமொடு (17) காலமொடு (683) என அத்துச்சாரியை இன்றியும்
> திறத்தொடு (984) என்று அத்துச்சாரியையுடனும் எழுதியிருக்கிறார் உடைமையும்
> இன்மையும் ஒடுவயின் ஒக்கும் (132) என்று இலக்கணமும் கூறுகிறார்.  ////
>
> செல்வா,
>
> உங்களுக்குத்தான் இலக்கணம் தெரியும் என்று தலைக்கணத்தில் இருக்கிறீர்.
>
> ஜெயபாரதன்.
>
> ++++++++++++++++
>
> ++++++++++++++++++++++
>

> 2011/9/13 சி. ஜெயபாரதன் <jayabarath...@gmail.com>


>
> > //// இரா. திருமுருகனார் விளக்குவதுபோல்,
> > உடன் என்னும் சொல்லுருபு அத்துச் சாரியை பெறாமலும்
> > இயங்கும் என்பதற்குப் பரிபாடலில் இருந்து பாரதி
> > வரை சில சான்றுகளைக் காண்போம். //////
>
> > நண்பர் செல்வா.
>
> > "முயலுக்கு மூன்று கால்கள் " என்று தர்க்கமிடுகிறீர்.
>
> > நண்பர் நா. கணேசன் தந்த உதாரணங்களுக்கு உங்கள் பதில் என்ன ?
>
> > சி. ஜெயபாரதன்.
>
> > ++++++++++++++++++
>

> >   2011/9/13 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>


>
> >> "மரபுநிலை திரியின் பிறிதுபிறிதாகும்"  என்று திருத்திப் படிக்கவும்.
>

> >> 2011/9/13 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
>
> >>>  2011/9/12 வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com>


>
> >>>> 12 செப்டெம்ப்ர், 2011 1:59 pm அன்று, C.R. Selvakumar <

> >>>> c.r.selvaku...@gmail.com> எழுதியது:

> >>> *வாழ்க! வளத்துடன்!!* என்பதே சரியான வழக்கு!

C.R. Selvakumar

unread,
Sep 14, 2011, 10:02:21 AM9/14/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
திரு செயபாரதன்,
 
செப்டம்பர் 13 அன்று, பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்கள் எனக்குத்
தனி மடலில், கீழ்க்கண்டவாறு எழுதினார்:
 
<மேற்கோள் தொடக்கம்>
 
வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும்.
 
இது பதிப்பில் ஏற்பட்ட தவறா என்பது தெரியவில்லை. அல்லது ஒடு , ஓடு விகுதிகளுக்கு மட்டும் உள்ள விதிவிலக்கா என்பது தெரியவில்லை.
 
<மேற்கோள் முடிவு>
பேராசிரியரின் கூற்றில் எப்படியான அணுகுமுறை உள்ளது
என்றும் பாருங்கள். அதன் பின் நானும் தொல்காப்பிய உரையில்
இருந்தும் (முத்துவீரியம்) எடுத்துக்காட்டுகள் தந்து அவை சரிதாமா
என்றும் பேசியுள்ளோம்.
 
இரண்டாவதாக, ஒன்று விதியா, அது விதிவிலக்கா என்று அறிதல் வேண்டும், ஒடு என்பதற்கு இரண்டொரு எடுத்துக்காட்டுகள் இருப்பதால்
ஓடு, உடன் முதலான பிற வேற்றுமை உருபுகளுக்கும் பொருந்தும்
என்று கொள்ளுதல் இயலாது. அப்படியே எங்கேனும் ஒன்றிரண்டு
இருக்க நேரிடினும், அவை பொதுக்கூறா, விதிவிலக்கா என்று
உற்றறிதல் வேண்டும். புலவர் வீ.வில்வநாதன் அவர்கள் கூற்றில்,
"*விடை*: இரண்டும் சரியே. ஒடு உருபு பெயர்களுடன் புணரும்போது அத்துச்சாரியை பெறுவதும் பெறாமையும் மரபே."  என்பதில் பல
செல்லாமைகள் உள்ளன. ஒடு உருபு பெயருடன் புணர்வதைப் பற்றிக்
கூற வந்தவர், உடன் உருபுபற்றி கூற (நீட்டிக்க) எந்த ஏதும் தரவில்லை,
மேலும், "மரபே", என்று உறுதிவீச்சுடன் கூறியதைப் பார்க்கும் பொழுது,
மரபு என்பதற்கு அவர் என்ன பொருள் கொண்டாரோ என்று எண்ண
வேண்டியுள்ளது!! அவர் விதி விலக்காக இருக்குமா என்பதை எண்ணிப்
பார்த்தாரா என்றும் அவர் கூற்றில் இருந்து தெளிவாகவில்லை.
(பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களின் நேர்மையான, நடுநிலையான
அணுகுமுறையை ஒப்புநோக்குங்கள். மனிதர்களை ஒப்பிடச் சொல்லவில்லை, கருத்துகளையும், அணுகுமுறையையும் சொன்னேன்). 
 
வளம் என்னும் சொல்லோடு வரும் வளமுடன் என்னும் ஆட்சிக்கு
எடுத்துக்காட்டுகள் தாருங்கள்.
 
கடைசியாக, "உங்களுக்குத்தான் இலக்கணம் தெரியும் என்று தலைக்கணத்தில் இருக்கிறீர்" என்பது போன்ற தனிமனிதத்
தாக்குதல்களை வைக்காதீர்கள். என் வாதம் செல்லாது எனில்
செல்லாது என்று நேர்பட, தகுந்த காரணங்கள் இட்டுக் கூறுங்கள்.
நேர்மையுடன் ஏற்பேன். "எனக்குத்தான்" இலக்கணம் தெரியும் என்று
எங்கும், கூறியது கிடையாது, "தலைக்கனம்" ("தலைக்கணம்" என்றும் 
நிங்கள் வேறு பொருளுடன் கூறியிருக்கலாம்)  என்று கூறும்
உங்கள் வன்மொழி, வசைமொழியும் உங்கள் உளப்பாங்கைத்
தெரிவிக்கின்றதே அல்லாது என் நிலை அல்ல.
நான் செய்யும் இலக்கணப் பிழைகளைத் தொகுத்தால்
பல்தொகுதி ஆவணமே உருவாக்கலாம். எழுத்துப்பிழைகளைத்
தொகுத்தால் இன்னும் அதிகம் ஆக்கலாம். எனக்கு இலக்கண
அறிவு அதிகம் இருப்பதாக நான் நினைக்கவும் இல்லை.
கூடிய மட்டிலும், வரம்பு (இலக்கண வரம்பு) மீறாது,
எழுதும் மொழியை, அதன் மரபுகளை மதித்து எழுத
வேண்டும் என்னும் கருத்தினன்.
 
மிண்டும் கூறுகின்றேன், வாழ்க வளத்துடன் என்பதுதான்
சரியானது, மரபானது.
வாழ்க வளமுடன் என்பது வழுவானது,
வளம் என்னும் சொல்லொடு அத்து சாரியை இல்லாது
உடன் என்னும் உருபு சேர்ப்பதற்கு அண்மைய வழுவான
வழக்கு இன்றி ("முயற்சித்தல்" போல்)
எடுத்துக்காட்டுகள் இருப்பதாகத் தெரியவில்லை. 
 
வாழ்க வளத்துடன் என்று எழுதுதலும் பேசுதலுமே 
அறிவுடைமை.
தமிழ் போற்றுவோர், நேர்மை போற்றுவோர் எண்ணிப்பார்ப்பர்,
ஏற்பர்.
 
செல்வா

N. Ganesan

unread,
Sep 14, 2011, 10:33:12 AM9/14/11
to தமிழ் மன்றம், Santhavasantham, tamizh...@googlegroups.com

On Sep 12, 12:58 pm, பழமைபேசி <pazamaip...@gmail.com> wrote:
> ’உடன்’ மற்றொன்டுடன் உள்ள இணைப்பினைக் குறிப்பது போல் உளது.
>
>  //சீர்ததும்பும் *அரவமுடன்* சிறந்து //
>
> இதற்கு முந்தைய வரியில் இருக்கும் யாதோ ஒன்று, சீர்ததும்பும் அரவமுடன்
> சிறந்து எனப் பொருள் பொதிந்து வருகிறது.
>

அன்பு பழமைபேசி,

பரிபாடலில் முந்தையவரிகளைப் பார்த்தபின் தான் இந்தச் சங்க இலக்கிய
உதாரணம் பரிபாடலில் இருந்து தந்தேன். உறவினர்கள்
நிலமும் பொருளும் வழங்க பொள்ளாச்சியில்
வாழ்ந்த வேதாத்திரி மஹரிஷி தமிழ் நன்கறிந்தவர்.
’வளமுடன்’ என்பது பழைய தமிழ் மரபு, அதனால் குண்டலினி
யோகத்தை பொதுமக்களிடையே நல்ல தமிழில்
கொண்டுசெல்லும் இயக்கத்தை நிறுவி நடத்தினார்கள்.
’வாழ்க வளமுடன்’ பழந்தமிழ் யோகியர் மரபாகும்.

தமிழ் இலக்கணத்தை பேரா. பசுபதி, ஃழான், ... போன்றோர்
இவ்விழையில் காணலாம்.
http://groups.google.com/group/santhavasantham/browse_frm/thread/7593b9c82dcd73f4?scoring=d&
சில குறிப்புகளும் பார்க்கவும், உதவக்கூடும்.
http://groups.google.com/group/santhavasantham/msg/29ab5efda812b77d

வாழ்க வளமுடன்,
நா. கணேசன்

> ...
>
> read more »

சி. ஜெயபாரதன்

unread,
Sep 14, 2011, 10:40:40 AM9/14/11
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com

//// *வினா*: *வாழ்க வளமுடன், வாழ்க வளத்துடன் - இவ்விரண்டில் சரியானது எது?

*- புலவர் வீ. வில்வநாதன், வெங்காலூர் - 16
 
*விடை*: இரண்டும் சரியே. ஒடு உருபு பெயர்களுடன் புணரும்போது அத்துச்சாரியை பெறுவதும் பெறாமையும் மரபே.

தொல்காப்பியர் அகரமொடு (17) காலமொடு (683) என அத்துச்சாரியை இன்றியும் திறத்தொடு (984) என்று அத்துச்சாரியையுடனும் எழுதியிருக்கிறார் உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும் (132) என்று இலக்கணமும் கூறுகிறார்.  ////
 
++++++++++++++
 
இரா. திருமுருகனார் விளக்குவதுபோல்,
உடன் என்னும் சொல்லுருபு அத்துச் சாரியை பெறாமலும்
இயங்கும் என்பதற்குப் பரிபாடலில் இருந்து பாரதி
வரை சில சான்றுகளைக் காண்போம்.
 
 
(1) வில்லுச் சொரி பகழியின் மென் மலர் தாயின
வல்லுப் போர் வல்லாய்! மலைமேல் மரம்.
வட்டு உருட்டு வல்லாய்! மலைய நெட்டுருட்டுச்
சீர் ததும்பும் *அரவமுடன்* சிறந்து,
              - பரிபாடல் 18
 
(2) பொங்கரவர் *அங்கமுடன்* மேலணிவர் ஞாலமிடு பிச்சை
தங்கரவ மாகவுழி தந்துமெய் துலங்கியவெண் ணீற்றர்
கங்கையர வம்விரவு திங்கள்சடை யடிகளிடம் வினவிற்
செங்கயல் வதிக்குதிகொ ளும்புனல தார்திருந லூரே.
 
                   - சம்பந்தர்
 
(3) சிகார வகார யகார முடனே
நகார மகார நடுவுற நாடி
*ஓகார முடனே* ஒருகால் உரைக்க
மகார முதல்வன் மதித்துநின் றானே

             -     திருமந்திரம்
 
(4) 202. மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும்      1467-1
 *சுற்றமுடன்* களி கூரத் தொழுது எழுந்து சூழ்ந்து மொழிக்  1467-2
 கொற்றவரை அமுது செயக் குறை கொள்வார் இறைகொள்ளப்  1467-3
 பெற்ற பெரும் தவத் தொண்டர் திரு உள்ளம் பெறப் பெற்றார்   1467-4
 
                      - சேக்கிழார்
 
(5) *வஞ்ச முடன்*ஒருவன் வைத்த நிதிகவரத்
துஞ்சினனோ போயினனோ சொல்.
 
            - திருவருட்பயன்

(6) திருத்தி விடவிடாய் தீர்ந்தாள் - ஒருத்தி
உருவ வரிக்க ணொழுக வொழுகப்
*புருவ முடன்*போதப் போத - வெருவி
வனமுலை விம்மி வளர வளரப்
புனைத்தோள் புடைபோதப் போத - வினைவர்
அருங்கலை யல்கு லகல வகல
மருங்குபோ யுள்வாங்க வாங்க - நெருங்கு
பரவர ராச பயங்கரன்மேல் வேட்கை
வரவர வாற்றாத மங்கை - பொரவரு
 
                - ஒட்டக்கூத்தர் (குலோத்துங்கசோழனுலா)

(7) வேலியென எண்டிசையில் வாழும் உரகன் தளர
வே அழல் எனும் *சினமுடன்* படருமே
 
                    - மயில்வகுப்பு (அருணகிரி)
 
(8) வீழ்த்தல்பெறத் தருமமெலாம் மறமனைத்துங்
    கிளைத்துவர மேலோர் தம்மைத்
தாழ்த்ததமர் முன்னோங்க நிலைபுரண்டு
    பாதகமே ததும்பி நிற்கும்
பாழ்த்த கலியுகஞ்சென்று மற்றொருகம்
    அருகில்வரும் பான்மை தோன்றக்
காழ்த்தமன *வீரமுடன்* யுகாந்திரத்தின்
    நிலையினிது காட்டி நின்றான்.
 
                  - பாரதியார்.
 

அன்புடன்
நா. கணேசன்
 
++++++++++++++++++  

ஜெயபாரதன்.

2011/9/14 N. Ganesan <naa.g...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Sep 16, 2011, 1:35:28 AM9/16/11
to tamil...@googlegroups.com, Santhavasantham, tamizh...@googlegroups.com
அன்புள்ள தமிழ் மன்றம், சந்தவசந்தம் குழும நண்பர்களே,
 
வணக்கம்.
 
நான் தமிழ் மன்றத்தில் இட்ட ஒரு மடலின் கருத்தை
திரு கணேசன் சந்தவசந்தத்தில் இட்டு உரையாடினார் என்றும்
பேராசிரியர் பசுபதி அவர்களும்,  நண்பர் இராச தியாகராசன் அவர்களும்
முனைவர் ழான் அவர்களும், முனைவர் வவேசு அவர்களும்
இன்னும் பலரும் பங்கு பெற்றனர் என்றும் இப்பொழுதுதான்
அறிந்தேன்.
 
பேர்ராசிரியர் பசுபதி அவர்கள்,
 
"'வாழ்க வளமுடன்’ என்பது *தவறன்று.*
முனைவர் (அமரர்) இரா.திருமுருகன் தகுந்த ஆதாரங்களுடன் இதை நிரூபித்து இருக்கிறார்."
 
என்று கூறியுள்ளார்.
 
திரு கணேசன் ஏறத்தாழ 8 எடுத்துக்காட்டுகள்
இலக்கியத்தில் இருந்து தந்துள்ளார்.
 
அமரர் இரா. திருமுருகன் அவர்களின் இலக்கண அறிவை
அறிந்து போற்றாதார் யாரும் இருக்க மாட்டார்கள். அதே போல
பேராசிரியர் பசுபதி அவர்களின் ஆழ்ந்த அறிவும் புலமையும்
தமிழுலகம் நன்கறிந்ததே. எனினும் இக்கேள்வியில்
அவர்களின் கருத்தை நான் ஏற்க
இயலாதவனாய் உள்ளேன். என் ஏரணத்தில் அல்லது
கருத்தில் பிழை இருந்தால் நீங்கள் அருள்கூர்ந்து
எடுத்துரைத்து என்னைத்
திருத்த  அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.
 
வாழ்க வளத்துடன் என்பதுதான் சரியானது
வாழ்க வளமுடன் என்பது தவறானது, வழு வானது
என்பது என் முன் வைப்பு.
 
இதற்கான காரணத்தைக் கூறும் முன் ஒன்றைக் கூற விழைகிறேன்.
ஒன்றைச் சரியா தவறா என்று அறிய ஓர் அளவுகோல், விதிமுறை
வேண்டும். ஏன் விதிகள் வேண்டும், எப்படி ஏற்க வேண்டும்,
விதிகளையே மாற்றும் விதிகளும் உண்டா, விதிவிலக்குகள் உண்டா
(முரண்தொடை போல் இருந்தாலும்) விதிவிலக்குகளுக்கு
விதிகள்'உண்டா போன்ற அடிப்படைக் கேள்வி அடுக்குகளும் பின்
புலத்தில் உண்டு. இவற்றை விரிக்கப் புகுந்தால் மேலும் பல
சிக்கலான கேள்விகள் எழும். அது என் நோக்கமும் அல்ல.
 
விதி ஒன்று இருந்தால், அது எளிமை, சீர்மை தரும், சிக்கனம்
நல்கும். ஏதேனும்
காரணம் பற்றி விதிவிலக்குகள் இருந்தால் அவை சிறிய
எண்ணிக்கையில் இருப்பது நல்லது. தெளிபொருள் புலப்பாடு
போன்ற பலவற்றுடன் இது ஒர் அறிவாற்றல் சிக்கன ஏற்பாடு.
அறிவார்ந்த ஏற்பாடு. 100 தரவுகள் இருந்து, அதில் 20 மட்டும் 
ஒரு விதிக்கு உட்பட்டு வந்து,
மீதம் 80 உம் எந்த ஒரு விதிக்கும் உட்படாமல்
தனித்தனியே நின்றாலும், அதுவும் ஓர் ஒழுக்கம் பேணிய வகையே
(20%). ஆனால் விதி என்பது 100% (சீர்மை கொண்ட ஒன்று) ஆக இல்லாவிட்டாலும் அதற்கு
எத்தனை நெருக்கமாக இருக்கமுடியுமோ அத்தனை நெருக்கமாக இருக்குமாறு விதி அமைந்திருப்பது சிறப்பு.
பல்வேறு காரணங்கள் பற்றி சில இடங்களில் சில காரணங்களுக்காக
மட்டும் விதிவிலக்கு (அதுவும் மிகக் குறைந்த எண்ணிக்கையில்)
தேவை கருதி இருக்கலாம், ஆனால் அவை குறைவாக இருத்தல் சிறப்பு(காரணங்கள், தேவைகளாவன: இளக்கம், புதுமை, அழகுணர்ச்சி, இசை, யாப்பிலக்கணம், பொருள்திரியா ஓசை நயம். பிறபல
நுட்பக் காரணங்கள் ..).
 
இப்பொழுது என் மறுப்புக்குக் காரணங்கள்:
 
(1) வளமுடன் என்பதற்கு இலக்கிய சான்றுகள் யாரும் காட்டவில்லை.
 
(2) சினமுடன் என்னும் ஒரேயொரு எடுத்துக்காட்டைத் தவிர
மீதம் உள்ள ஏறத்தாழ 6 எடுத்துக்காட்டுகள் ஈரசைச் சொற்கள்.
ஓகாரம் மூவசைச் சொல்.
வளம், திறம்  போன்றவை ஓரசைச் சொற்கள் ஓரசைச்
சொற்களுக்கும் அத்து சாரியை வராமல் "உடன்" என்னும் உருபு
ஏற்பதற்கு நிரைய எடுத்துக்காட்டுகள் உள்ளனவா? இல்லை
என்றால் அது ஏற்புடைய விதி ஆகாது. ஈரசை மூவசைச் சீர்களுக்கும்
மிகச்சில எடுத்துக்காட்டுகளே இருக்கின்றன, எனவே அது பொது விதி
ஆகாது).
 
(3) முனைவர் இரா. திருமுருகன் கூற்றாக பேரா பசுபதி அவர்களின்
மடலில்:
 
<மேற்கோள்>
 
இன்னொரு சந்தர்ப்பத்தில் திருமுருகன் கீழ்க்கண்டவாறு  சொல்லியிருக்கிறார்.
*வினா*: *வாழ்க வளமுடன், வாழ்க வளத்துடன் - இவ்விரண்டில் சரியானது எது?  *- புலவர் வீ. வில்வநாதன், வெங்காலூர் - 16.
*விடை*: இரண்டும் சரியே. ஒடு உருபு பெயர்களுடன் புணரும்போது அத்துச்சாரியை பெறுவதும் பெறாமையும் மரபே.
தொல்காப்பியர் அகரமொடு (17) காலமொடு (683) என அத்துச்சாரியை இன்றியும் திறத்தொடு (984) என்று அத்துச்சாரியையுடனும் எழுதியிருக்கிறார். 
உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும் (132) என்று
இலக்கணமும் கூறுகிறார். உலக
மோடு (பதிற்றுப்பத்து 14, புறும் 56) என இலக்கியங்களிலும் வருகின்றன. ஒடுவுக்கு  கூறப்பட்டது
அப்பொருளுடைய உடன் என்ற சொல்லுருபுக்கும் பொருந்தும்.
<மேற்கோள் முற்றும்>
 
இது முனைவர் இரா. திருமுருகன் அவர்களின் கூற்று என்று
அறியாமலே, நான் இட்ட மறுமொழி இங்கே (என் மடல் செப்டம்பர் 13):
ஒடு, ஓடு ஆகியவற்றுக்கு இரண்டொரு எடுத்துக்காட்டுகள் தந்தவர்,
உடன் என்பதற்கும் நீட்டிக்க எந்த எடுத்துக் காட்டும் தரவில்லை.
"அப்பொருளுடைய உடன் என்ற சொல்லுருபுக்கும் பொருந்தும்"
என்று மட்டும் சொன்னார். அப்படியே வரும் இரண்டொரு இடங்கள்
விதி விலக்காக இருக்குமா என்று கருதி, எடுத்தோதி மறுப்பு ஏதும்
அவர் தரவும் இல்லை.
"மரபே" என்று அவர் உறுதி பயக்கக் கூறியதற்கு என்ன ஆதாரம்?
"ஆன்றோர்" கூறினர் என்று கொண்டாலும், சொன்ன ஓரிரு
சொற்களுக்கே ஏற்பு, பொது விதியாக ஏற்கவேண்டும் என்பது
ஏற்புடைத்தன்று. அப்படி ஏற்கப் புகுந்தால், சீர்மை கெடும்,
எளிமை கெடும், விதிகளின் எண்ணிக்கைக் கூடும். 
 
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்!
 
வாழ்க வளத்துடன்! என்பதே சரியான வாழ்த்து!
வாழ்க வளமுடன்! என்பது பிழையான, வழுவான வழக்கு!
 
"அப்படியும் கூறலாம்" என்று கொண்டால், பிறகு எப்படியும்
கூறலாம் என்று சிதைந்துகொண்டே போகும். விதிகள்
என்பன சீர்மை பேணவே, எளிமை பேணவே.
 
ஈரசைச்சீராக வரும் ஒரு சில சொற்களின் 
ஆட்சிகளை விதி விலக்காக அல்லது
உறழ்ச்சி உடையதாகக் கருதலாம்.
அதுவும் அச்சொற்களுக்கு மட்டுமே,
 
அன்புடன்
செல்வா
 
 
 
On Sep 12, 6:36 am, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> 'வாழ்க வளமுடன்’ என்பது *தவறன்று.*
> முனைவர் (அமரர்) இரா.திருமுருகன் தகுந்த ஆதாரங்களுடன் இதை நிரூபித்து

> இருக்கிறார்.
> தெரிந்தவர்கள் எழுதலாம். யாரும் எழுதவில்லை என்றால்,
> எனக்கு நேரம் கிட்டும்போது, இதற்குப் பதில் சொல்கிறேன்.


2011/9/14 N. Ganesan <naa.g...@gmail.com>


வேந்தன் அரசு

unread,
Sep 16, 2011, 6:18:19 AM9/16/11
to tamil...@googlegroups.com
தமிழ் எளிமையாக ஓரசை சொற்களுக்கு அத்து இட்டும் ஈரசை சொற்களுக்கு அத்து விட்டும்  எழுதலாம் என விதி செய்யலாம்

Hari Krishnan

unread,
Sep 16, 2011, 11:54:14 PM9/16/11
to தமிழ் மன்றம்
---------- Forwarded message ----------
From: Hari Krishnan <hari.har...@gmail.com>
Date: 2011/9/17
Subject: Re: [தமிழ் மன்றம்] Re: "வாழ்க வளமுடன்" என்பது தவறான சொல்லாட்சி அல்லவா?
To: santhav...@googlegroups.com




2011/9/17 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
ஈரசைக் காட்டுகள்  நிறைய உள்ளன:
அவசமுடன் ( “ துகிலு”), சையமுடன் ( “ பையரவு”) , வாரமுடன் ( “ஆரமுலை”), பெருக்கமுடன், கோலமுடன், மூலமுடன், கொற்றமுடன், மோகமுடன், .... என்று பல .

அத்துச் சாரியை இல்லாமல் வரும் பாடல்களை அவ்வப்போது கண்ணில் படும்போதெல்லாம் குறித்து வருகிறேன்.  ஏழெட்டு ஆண்டுகளாக எப்போதெல்லாம் பார்க்கிறேனோ அப்போதெல்லாம் குறித்துத் தொகுத்துக் கொண்டிருக்கிறேன்.  என் தொகுப்பிலிருந்து சில: 

பாரதி பாடல்களில் பற்பல காட்டுகள் கிடைக்கின்றன:

போற்றி! கலி யாணிபுதல்வனே! பாட்டினிலே 
ஆற்ற லருளி அடியேனைத் - தேற்றமுடன் 
வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய்! வாணியருள் 
வீணையொலி என்நாவில் விண்டு.
விநாயக நான்மணி மாலை

.................................................சித்தம் 
சக்தி தனக்கே உரிமையாக்கு - அதில் 
சார்வதில்லை அச்சமுடன் சூதும்.

இது தவிர:

தோய்ந்த விசும்பு எனும் தொல் நாட்டு அகம் தொழுது புலம்பு எய்தி மைந்தர் மாழ்க 
ஏந்து முலையார் இனைந்து இரங்கக் கொடும் கோல் இருள் பரப்பவே எபாவம் 
ஆய்ந்த குருகுலமாம் ஆழ் கடலின் உள் முளைத்த அறச் செங்கோலாய் கதிரினை 
வேந்தர் பெருமானைச் சச்சந்தனை மந்திரி மா நாகமுடன் விழுங்கிற்று அன்றே 

(சச்சந்தன் வீழ்கையில்)

--சீவக சிந்தாமணி, பாடல் 290

விதியொடு, முனிவரும், விண் உளோர்களும், 
மதிதெரி குலிசியும், மற்று உளோர்கள் உம், 
அதிசயமுடன் உவந்து அயல் இருந்துழி, 
கொதி கொள் வேல் அரக்கர்தம் கொடுமை கூறினார். 

--கம்பராமாயணம், திரு அவதாரப் படலம், பாடல் 17

'மஞ்சு அலங்கு ஒளியோனும், இம் மா நகர் வந்தான்,
அஞ்சலன்' என, வெங் கண் அரக்கர் அயிர்த்தார்;
சஞ்சலம் புரி சக்கரவாகமுடன், தாழ்
கஞ்சமும், மலர்வுற்றன; காந்தின காந்தம். 

--கம்பராமாயணம், சுந்தரகாண்டம், சூடாமணிப் படலம்

பொன்தேர், பரிமா, கரிமா, பொரு தார்
எற்றே படை வீரரை எண்ணிலமால்
உற்று ஏவிய யூகம் உலோகமுடன்
சுற்று ஆயிரம் ஊடு சுலாயதனை,

--கம்பராமாயணம், யுத்தகாண்டம், நிகும்பிலை யாகப் படலம்


இந்த மடலை எழுதும்போது அன்புமணியின் தேடு முகப்பைப் பயன்படுத்தி, ‘முடன்’ என்ற பயன்பாட்டைத் தமிழிலக்கியம் முழுமைபிலும் தேடினேன்.  139 இடங்கள் கிடைத்தன.  ஆனால், கிடைத்த விடைகளில் ‘எம்முடன்’ ‘தம்முடன்’ போன்ற பயன்பாடுகளும் கலந்திருப்பதால், இவற்றைத் தனியாகக் கணக்கிட்டுப் பிரித்த பிறகே, அத்துச் சாரியை பயிலாத இடங்கள் இவ்வளவு என்று சொல்ல முடியும்.

இந்தக் குறிப்பிட்ட வாழ்க வளமுடன் பயன்பாட்டைப் பற்றிய என் தனிப்பட்ட கருத்து:  இது வேதாத்ரி மகரிஷி அவர்களுடைய உபதேச மொழியாக அவரைப் பின்பற்றபவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒருவரை ஒருவர் பார்க்கும்போதெல்லாம், மனதார வாழ்த்துவதற்காகப் பயன்படுகிறது.  பாள்ஹெ ஸம்ருத்தியுந்திகே என்று கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.  இப்படியே ஒவ்வொரு மொழியிலும் அந்தந்த மொழிக்குத் தக பெயர்க்கப்பட்டுள்ளது.  

இனிமேல் இந்தப் பயன்பாட்டை மாற்ற வேண்டுமானால், வேதாத்ரி மகரிஷியே மீண்டும் வந்து ‘வளத்துடன்’ என்று சொல்லுங்கள் என அவரே அவருடைய அடியார்களுக்குச் சொன்னாலொழிய, இதை யார் எவ்வளவு வலியுறுத்தினாலும் மாறப் போவதில்லை.  அவருடைய அடியார்களுக்கு இது புனிதச் சொல்; மந்திரச் சொல்.  நமக்கு நம் கருத்தைப் பின்பற்ற எவ்வளவு உரிமையிருக்கிறதோ, அப்படியே மற்றவர்களுக்கும் உள்ளது.  என் கருத்தைப் பிறர் மதிக்கவேண்டும் என்று நான் எண்ணினால், பிறர் கருத்தை நான் மதிக்கப் பழகவேண்டும்.  

ஆகவே, வாழ்க வளமுடன் என்ற பயன்பாடு வழக்குக்கு வந்துவிட்டது; மாற்ற முடியாத நிலையில் புழக்கத்திலிருக்கிறது என்றால், அதனுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.  ‘கணிபொறி’ என்றெழுதப்பட வேண்டிய வினைத் தொகையை, ‘கணிப்பொறி’ என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  திருத்த முடிகிறதா?  பழகிக் கொண்டும் சீரணித்துக் கொண்டும்தானே இருக்கிறோம்?  நம்பிக்கை சார்ந்த விஷயங்களோடு விளையாடாமல் இருப்பது நல்லது.

இது என் தனிப்பட்ட கருத்து.  விருப்பமுடன் ஏற்றுக்கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளலாம்.  விருப்பத்துடன் நிற்பவர்கள் நிற்கலாம்.  எனக்கு மனத்தடை ஏதும் இல்லை. :)

--
அன்புடன்,
ஹரிகி.



--
அன்புடன்,
ஹரிகி.

செல்வா

unread,
Sep 17, 2011, 11:36:36 AM9/17/11
to tamil...@googlegroups.com, pas.pa...@gmail.com


---------- Forwarded message ----------
From: Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
Date: Sep 16, 5:48 pm
Subject: "வாழ்க வளமுடன்" என்பது தவறான சொல்லாட்சி அல்லவா?
To: சந்தவசந்தம்


அன்புள்ள செல்வா,...

read more »

ஓர் இலக்கண மாணவன் என்ற முறையில் என் கருத்துகளைத் தெரிவிக்கிறேன்.
மேலும்,
சுமார் எட்டு வருடங்களுக்கு முன்
இரா.திருமுருகனின் இந்தக் கருத்தை இங்கே எழுதினேன் என்பதால், இதை மேலும்
விளக்கும் கடமையும் எனக்கு உள்ளது என்று நினைக்கிறேன்.

ழான், தியாகராசன் உங்கள் கேள்விகளைப் புதுச்சேரித்  தமிழறிஞர்களிடம்
கொடுத்து,
அவர்களுடைய கருத்துகளை இங்கு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

 என் இந்தப் பதிலை ‘தமிழ் மன்ற’த்தில் வெளியிடுவது


உங்கள் விருப்பம்.

1) *இரா. திருமுருகனின் கருத்து மட்டுமன்று இது*. முதலில்
மறுப்புத் தெரிவித்த *முனைவர், தமிழறிஞர் தமிழண்ணலும்* இதை
ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

அவருடைய “*தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும்*”
என்ற 2002 நூலில் இருந்து ஒரு பகுதி:

” சில போது மூன்றாம் வேற்றுமை உருபுகள் (ஒடு, ஓடு, உடன் )
வரும்போது ‘அத்துச்’ சேர்த்தும், சேராமலும் வருகின்றன.


          வளமொடு, வளமோடு, வளமுடன்

          வளத்தொடு, வளத்தோடு, வளத்துடன்
’தாங்கள் நலமுடன் இருப்பதறிய அவா’ என மடல் எழுதுகிறோம்.
 இவ்வாறு இரண்டுவிதமாகவும் வருவதை ‘உறழ்ந்து வரும்” என்பது இலக்கணம்.
புதுச்சேரித் தமிழறிஞர் இரா.திருமுருகன் தக்க சான்றுகள் காட்டி ‘உறழ்ந்து
வரும்’ என்று எழுதியுள்ளார். ஆக்கமொடு, காலமோடு எனத் தொல்காப்பியத்திலும்
உலகமொடு,  நயமுடன் என் இலக்கியங்களில் வருகின்றமை காட்டப் பெற்றுளது

வளத்துடன் வாழ, நலத்துடன் செயற்படும் மனத்துடன் யாவரும் திகழ்ந்தால் ,
இனத்துடன் ஒற்றுமைப்படலாம்.

இதையே, “வளமுடன் வாழ, நலமுடன் செயற்படும் மனத்துடன் யாவரும்
திகழ்ந்தால் ,
இனத்துடன் ஒற்றுமைப்படலாம்” என்றும்
எழுதலாம். *இடம் நோக்கி - ஓசையினிமையும் பொருளுணர்ச்சியும் கெடாமல்
கருத்துப்
பரிமாற்றத்திற்கு உதவுவது மொழி. அதன் இயல்பு அறிந்தவர்கள், தம்மை
மறந்தும் தவறு
செய்ய மாட்டார்கள்* !

எனவே, வாழ்க நலமுடன் என யாவரும் நலமுடன் வாழ வாழ்த்துவோம். .....”

மேலும், *‘க்ரியா’ அகராதியில்* ‘வளம் ‘ என்ற சொல்லின் கீழ் “வாழ்க
வளமுடன்”
என்ற எடுத்துக்காட்டு வாக்கியம் கொடுக்கப் பட்டுள்ளது. அதனால், அகராதிக்
குழுவில் உள்ள முனைவர் அண்ணாமலை போன்றோரும் இந்தக் கருத்தை ஒப்புக்
கொண்டுள்ளனர் என்றும் நான் பொருள் கொள்கிறேன்.

2)  ”ஓரசைச் சொல்லுக்கு கணேசன் ஓர் உதாரணம் தான் கொடுத்தார்.
ஈரசைச் சொற்களுக்கும் அதிக காட்டுகள் இல்லை”  என்று கூறியிருக்கிறீர்கள்.

அவ்வளவு தானே? :-)) மேலும் பல காட்டுகள்
கொடுக்க முடியும். *ஒரே ஒரு* கவிஞரின் காட்டுகளை மட்டும் இங்குக்
கொடுக்கிறேன். அருணகிரியின் திருப்புகழிலிருந்து :

ஓரசைச் சொற்கள்:

 *தவமுடன் ( “உருக்கம் “ என்று தொடங்கும் திருப்புகழ்), சினமுடன்
( “புனமடந்தை
”), புரமுடன் ( “ சகுடமுந்துங்”),*
*வசமுடன் (” குருதி கிருமிகள்”) , கரமுடன் ( “ இலகியிரு குழை”),*
*புயமுடன் ( “ முருகு செறி குழலவிழ்”) , இடமுடன் (” குடமென வொத்த”),
சிரமுடன்
(” கலகமதன் “) , இதமுடன் ( “ வரிபரந்திரண்டு* )

அப்படியென்றால் , அருணகிரி ‘அத்து’ச் சாரியையைப் பயன்படுத்த வில்லையா?
அப்படி
அன்று.:

*தனத்துடன் ( ”பொருப்புறுங்”) , மனத்துடன் ( “ மருவுலாவிடு”), *
*சிரத்துடன் ( “வினைத்திரளுக் “)* ..என்றும் பாடி இருக்கிறார்.

ஈரசைக் காட்டுகள்  நிறைய உள்ளன:
அவசமுடன் ( “ துகிலு”), சையமுடன் ( “ பையரவு”) , வாரமுடன் ( “ஆரமுலை”),
பெருக்கமுடன், கோலமுடன், மூலமுடன், கொற்றமுடன், மோகமுடன், .... என்று
பல .

3) ‘உறழ்சி’ என்றால் என்ன? தமிழண்ணல் சொல்கிறார்.

“  பெரும்பான்மையான விதிக்கு மாறாகச் சில இடங்களில் மாறியும் வரும்.
அங்ஙனம்
சிறிய அளவில் மட்டும் மாறி வருவதைப் ‘புறனடை’ என்பர்.* சில சொற்கள்
இரண்டு
விதமாகவும் எழுதப் பட்டு, இரண்டும் தவறல்ல என ஏற்கப்பட்டால் அதற்கு
உறழ்ச்சி
என்று பெயர்*. அப்படியும் வரலாம், அல்லாவிட்டால் இப்படியும் வரலாம் என
ஏற்பது
 அது. .... அதற்காக எல்லா இடத்திலும் புறனடை வரலாம், உறழ்ச்சி வரலாம்
என்று நம்
விருப்பம்போல் மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. *பொருள் சிதையாமல்
இருக்குமிடங்களிலும், ஒலி இனிமை தருமிடங்களிலும் மட்டும் இவை
ஏற்கப்படும்*.

அதனால், ‘வாழ்க வளமுடன்’ ‘வாழ்க வளத்துடன்’ இரண்டு சரியே .

அன்புடன்,
பசுபதி

2011/9/16 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>

> அன்புள்ள தமிழ் மன்றம், சந்தவசந்தம் குழும நண்பர்களே,

> வணக்கம்.

> நான் தமிழ் மன்றத்தில் இட்ட ஒரு மடலின் கருத்தை
> திரு கணேசன் சந்தவசந்தத்தில் இட்டு உரையாடினார் என்றும்

> பேராசிரியர் பசுபதி அவர்களும்,  நண்பர் இராச தியாகராசன் அவர்களும்- Hide quoted text -

- Show quoted text -

வேந்தன் அரசு

unread,
Sep 18, 2011, 8:52:55 AM9/18/11
to tamil...@googlegroups.com
>மேலும், *‘க்ரியா’ அகராதியில்* ‘வளம் ‘ என்ற சொல்லின் கீழ் “வாழ்க வளமுடன்”
> என்ற எடுத்துக்காட்டு வாக்கியம் கொடுக்கப் பட்டுள்ளது. அதனால், அகராதிக்
> குழுவில் உள்ள முனைவர் அண்ணாமலை போன்றோரும் இந்தக் கருத்தை ஒப்புக்
> கொண்டுள்ளனர் என்றும் நான் பொருள் கொள்கிறேன்.


அஃஅஃஆ!!

”க்ரியா” வை ஏற்றவர்கள் வளமுடன் ஏற்பதில் வியமில்லை.
ஒரு படி இறங்கிவருக்கு அடுத்தபடி இறங்குதல் அரிதோ!

--

C.R. Selvakumar

unread,
Sep 19, 2011, 9:44:54 AM9/19/11
to tamil...@googlegroups.com, சந்தவசந்தம், pas.pa...@gmail.com
அன்புள்ள பேரா. பசுபதி,
 
முதற்கண் உங்களுக்கும் கருத்தளித்த
அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றி.
 
மேலும் பல எடுத்துக்காட்டுகள் தந்தது,
புரிந்துகொள்ள பயனுடையதாக இருந்தது.
நானும் ஓர் இலக்கண மாணவனே.
 
சிவசிவா அவர்களுக்கும், இலந்தையார் அவர்களுக்கும்,
"Harikrishnan" அவர்களுக்கும் என் நன்றி.
 
"த்துடன்" என்று இட்டுத் தேடிப்பார்த்து ஏறத்தாழ
எத்தனை விழுக்காடு "முடன்" என்று வருகின்றது என்று
பார்க்க விழைந்தேன். ஆனால் அதற்குள் காலம் ஓடி
விட்டது. வாழ்க வளத்துடன் என்று சொல்வதில் ஏதும்
பெரும் தடை இருப்பதாக, அதுவும் உரைநடையில் இருப்பதாக,
நான் உணரவில்லை. முன்னே குறிப்பிட்டது போல்
விதிவிலக்குகள் குறைவாக இருப்பது சிறப்பு.
இது ஆராயப்பட வேண்டியது.  இலந்தையார்
மிக நுணுக்கமாக கூறியவாறு "உடன்" என்பது
பிற பொருளில் வந்து வேறுபாடு காட்டுவதையும்
கருத்தில் கொள்ளலாம். "உளம் உடன் மகிழ்ந்தது,
சினம் உடன் கலைந்தது, தவம் உடன் கலைந்தது"
 
 
மேலும் இது பற்றி நினைத்துப்பார்க்க ஆசை உண்டு.
 
மீண்டும் அனைவருக்கும் நன்றி.
என் கருத்தைத் திருத்திக்கொள்கிறேன்.
அதாவது இன்னும் பொது விதியாக ("இரண்டும் சரியே")
என்பதை என்னால் ஏற்க இயலவில்லை, ஆனால்
பல இடங்களிலும் செய்யுள்களிலே பாடல்களிலே
இப்படி "முடன்" என்று "அத்து" சாரியை 
இல்லாமலும் வருகின்றது. பல பெரியோர்கள்
அப்படி ஆண்டுள்ளார்கள். ஓரசைச் சீரிலும் வரும்
("தவம், சினம், புரம்,வசம்,
கரம்,  புயம், இடம், சிரம், இதம்" என குறைந்தது 9 
சொற்களும்  இப்படி ஆளப்பட்டுள்ளன) என
அறிந்துகொண்டேன்.
 
அன்புடன்
செல்வா
2011/9/17 செல்வா <c.r.sel...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

Hari Krishnan

unread,
Sep 19, 2011, 11:59:17 AM9/19/11
to tamil...@googlegroups.com


2011/9/19 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

மீண்டும் அனைவருக்கும் நன்றி.
என் கருத்தைத் திருத்திக்கொள்கிறேன்.
அதாவது இன்னும் பொது விதியாக ("இரண்டும் சரியே")
என்பதை என்னால் ஏற்க இயலவில்லை, ஆனால்
பல இடங்களிலும் செய்யுள்களிலே பாடல்களிலே
இப்படி "முடன்" என்று "அத்து" சாரியை 
இல்லாமலும் வருகின்றது. பல பெரியோர்கள்
அப்படி ஆண்டுள்ளார்கள். ஓரசைச் சீரிலும் வரும்
("தவம், சினம், புரம்,வசம்,
கரம்,  புயம், இடம், சிரம், இதம்" என குறைந்தது 9 
சொற்களும்  இப்படி ஆளப்பட்டுள்ளன) என
அறிந்துகொண்டேன்.


நண்பரே செல்வா,

உங்களைப் பார்த்து உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.  தெரியவில்லை; தெரிந்துகொண்டேன் என்ற இரண்டு சொற்களையும் பயன்படுத்த அசாத்திய வாய்மை நாட்டமும், தெளிவும், உண்மை அறியும் மனப்பக்குவமும் வேண்டும்.  இப்படியொரு நண்பரைப் பெற்றேன் என்று பெருமைப்படுகிறேன் நண்பரே.

C.R. Selvakumar

unread,
Sep 19, 2011, 4:58:18 PM9/19/11
to tamil...@googlegroups.com


2011/9/19 Hari Krishnan <hari.har...@gmail.com>
மிக்க நன்றி நண்பரே!  :)
அறியாததை அறியத் தந்த தங்களுக்கும் தங்களை
போன்றவர்களுக்கும் நன்றி.
 
அன்புடன்
செல்வா
 
--
அன்புடன்,
ஹரிகி.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

MANICKAM POOPATHI

unread,
Sep 19, 2011, 5:54:24 PM9/19/11
to tamil...@googlegroups.com
வணக்கம் நண்பர்களே:

வாழ்க வையகம்  !
வாழ்க நிரந்தரம்  !
வாழ்க வளமுடன்  !
என.. அம்/அன் விகுதியுடன் மட்டுமல்ல..
 
உகர (வளமொடு) இகர (போற்றி போற்றி..!)
இன்னும்.. ஐங்கார நாதத்துடனும் முடியுமே..?
(எ.கா:  கண்டேன் சீதையை..!)

ஓரசை சொற்கள் மிகுந்த  தமிழில்..
சில சொற்றோடர்கள்.. அவ்வப்போது
தனித்தும் வருவதும்..  அதன்  தனிச் சிறப்பல்லவா..?

மற்றபடி வாக்கு என்பது வேறு (ஓரசை/ஈருறுப்பு?)
தனி வாக்கியம் என்பதும்  வேறு.. இல்லீங்களா ?

மிக்க நன்றி..!

அன்பொடு.../ பூபதி
_____________________
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ் மன்றம்" group.
> To post to this group, send email to tamil...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> tamilmanram...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
>



--
Self-righteous morality is jealousy with a halo.  -- HG Wells

செல்வா

unread,
Sep 20, 2011, 3:28:56 PM9/20/11
to சந்தவசந்தம், tamil...@googlegroups.com
அன்புள்ள பேரா. பசுபதி,

நீங்கள் முன்னர் சுட்டிய, இப்பொழுதும் சுட்டும் -ஆம் என முடியும்
சொற்கள் மிகப்பலவும் (அல்லது எல்லாமும்) தமிழல்லா சொற்கள்
என்று நினைக்கின்றேன்.

சிவசிவா கூறியது போல குழாம் போன்ற சொற்கள் சிலவே
தமிழாக இருக்கும்போல் தெரிகின்றது. குழாம் என்பது குழாத்துடன்
என வரும் என்றும் அவரே காட்டியுள்ளார்.

-ஆம் என்று முடியும் தமிழ்ச்சொற்கள் அதிகம் இருக்குமோ?
இல்லை என்றே தோன்றுகின்றது.

அறம்-அறன், திறம்-திறன், மரம்-மரன் போன்று வருவதாலோ
என்னவோ நலமுடன் வாழ்க்கை என்றால் ஏதோ நலம் இல்லாத
நலம் முடமாகிப் போன வாழ்க்கை என்பது போல் ஒலிக்கின்றதோ என்னவோ
தெரியவில்லை. உடல்நலமுடன் என்பதைக் காட்டிலும்
உடல்நலத்துடன் என்பது நன்றாக இருப்பது போன்ற நினைப்பு.
இது சரியான சிந்தனைப் போக்காக இல்லாமல் இருக்கலாம், எனினும்
என் எண்ணக்கீற்றைப் பகிர்கின்றேன்.

அன்புடன்
செல்வா

On Sep 19, 4:56 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> அன்புள்ள தியாகராஜன்,
>
> அப்படியே, புதுச்சேரி அறிஞர்களிடம் என் பழைய கேள்வியையும் கேளுங்கள்!
>
> தற்காலத்தில் தமிழ் உரைநடையில் வரும்..... ‘ம் ‘-இல் முடியும்  முகாம், இனாம்,
> கலாம், ராம், விக்ரம், ...போன்ற பல சொற்களுக்குத் தொல்காப்பிய
> ’அத்து’ விதி ஒத்து வருமா? ( “’ஏமிரா! இக்கட ‘அத்துச்’ சாரியை  ஒத்து!  ஒத்து”
> என்கிறார் என் தெலுங்கு நண்பர்!)
>
> 2011/9/19 Raja.Tyagarajan <thiaga...@dataone.in>
>
>
>
>
>
> > **
> > அன்புள்ள பாகி,
> >  இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
>
> > முதற்கண், “மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை"(185) என்பது நூற்பா.”  அஃதாவது
> > பெயருக்கும் (மகரவீற்றுப் பெயர்) வேற்றுமை உருபிற்கும் இடையில் வரும்
> > சாரியையின் பெயர் அத்துச்சாரியை.  எனினும் தொல்காப்பியர் தொகுத்தபடி வரும்
> > பாடலான,
>
> > கண்கால் புறம்அகம் உள்உழை கீழ்மேல்
> > பின்சார் அயல்புடை தேவகை எனாஅ
> > முன்இடை கடைதலை வலம்இடம் எனாஅ
> > அன்ன பிறவும் அதன்பால் என்மனார்  (தொல்.சொல். 82)
>
> > என்பதன்படி, ஏழாம் வேற்றுமை உருபுகள் இவையென்கிறார்.  ஆனால் சேனாவரையரோ, அகம்
> > புறம் என்பனவற்றை உருபுகளே இல்லையென உரைக்கின்றார்.  எடுத்துக் காட்டாக ஊர் +
> > அகம் + அத்து + இருந்தான்,  ஊர் + புறம் + அத்து இருந்தான் (ஊரகத்திருந்தான்,
> > ஊர்புறத்திருந்தான்).  எனவே இந்த குழப்பங்களும் அலம்பல்களும் அன்றிருந்தே
> > இருக்கின்றன.
>
> > தொல்காப்பியத்தின் காலம் கிமு 300 என்று உத்தேசமாகச் சொல்கிறோம்.
> > வீரசோழியத்தின் காலத்தினை 11 ஆம் நூற்றாண்டு என்றும், நன்னூல் இலக்கணம் எழுதிய
> > பவணந்திமுனிவரின் காலம் 13ஆம் நூற்றாண்டு என்றும் அறிகிறோம்.  உரைநடை உருவாகிய
> > காலம், 1800களிலிருந்தே..
>
> > எனவே தமிழிலக்கியத்தில் 1800 ஆம் ஆண்டுவரை எல்லாமே செய்யுளோத்துகளே.  எனவே
> > பெருவாரியான விதியென்று செய்யுள் வழக்குகளையே நாம் எடுத்துக் கொள்ள கடமைப்பட்டு
> > இருக்கிறோம்.  அதனாற்றான், உறழ்ச்சி, புறநடை என்ற இலக்கண விதிகளும் செய்யுள்
> > விதிகளில் இடம் பெற்றுள்ளன.
>
> > அத்துச் சாரியை அவசியம் வரவேண்டிய இடங்கள் இருக்கின்றன.  அவற்றை
> > இன்றியமையாச்சாரியை என்று புதுவைத் தமிழாசான்கள் உரைக்கின்றனர்.  மடத்தலைவர்
> > என்றவிடத்து மடத்துத் தலைவரே என்றுதான் வரவேண்டும். இல்லையெனில் மடமை உடைய
> > தலைவரே என்று விபரீத பொருளாகும்.  அதுபோலவே ”சிறையாரும் மடக்கிளியே வா”
> > என்ற பழந்தமிழ் பாடலில் வரும் மடக்கிளியே என்ற சொல்லாட்சி, மடப்பத்தை உடைய
> > கிளியே என்று பொருள் தருவதைக் காணலாம்.  எனவே வாழ்க வளமுடன், வளத்துடன் என்ற
> > இரு சொல்லாட்சிகளில் பொருள் மயக்கம் ஏதுமில்லையாதலால்,  இரண்டையுமே
> > பயன்படுத்தலாம் என்பது புதுவைத் தமிழறிஞர்களின் கருத்து.
>
> > அன்பன்
> > இராஜ.தியாகராஜன்.
>
> > ----- Original Message -----
> > *From:* Parthasarathy Krishnan <paakila...@gmail.com>
> > *To:* santhav...@googlegroups.com
> > *Sent:* Monday, September 19, 2011 5:29 PM
> > *Subject:* Re: "வாழ்க வளமுடன்" என்பது தவறான சொல்லாட்சி அல்லவா?
>
> > புலவர்கள் கவிஞர்களுக்கு லைசென்ஸ் உண்டு.
> > உதரணத்துக்கு
> > கள் என்ற விகுதியை பன்மைக்கும் சேர்த்திருக்கிறார்கள் கம்பனும், பாரதியும்
> > "ஆர்த்தனர்கள் தானவர்கள், வானவர் அழுங்க.." (கம்பன்)
>
> > "நிலம்
> > திரிவன ஊர்வனகள்" (பாரதி)
> > கவிதையில் வருவதைக் கொண்டு எடுத்துக் கொள்ளக் கூடாது.
> > வளமுடன் சரியன்று. வளத்துடன் என்பதே சரி.
>
> > முனைவர் பா கிருஷ்ணன்
>
> >   --
> > நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> > பெறுகிறீர்கள்:
> > இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
> > இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
> > santhavasanth...@googlegroups.com.
> > இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
> >http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>
> --
>
> பசுபதிhttp://groups.google.ca/group/yAppulagamhttp://s-pasupathy.blogspot.com/- Hide quoted text -

வேந்தன் அரசு

unread,
Sep 22, 2011, 6:49:37 AM9/22/11
to tamil...@googlegroups.com, சந்தவசந்தம்


20 செப்டெம்ப்ர், 2011 3:28 pm அன்று, செல்வா <c.r.sel...@gmail.com> எழுதியது:

அன்புள்ள பேரா. பசுபதி,

நீங்கள் முன்னர் சுட்டிய, இப்பொழுதும் சுட்டும் -ஆம் என முடியும்
சொற்கள் மிகப்பலவும் (அல்லது எல்லாமும்) தமிழல்லா சொற்கள்
என்று நினைக்கின்றேன்.

சிவசிவா கூறியது போல குழாம் போன்ற சொற்கள் சிலவே
தமிழாக இருக்கும்போல் தெரிகின்றது. குழாம் என்பது குழாத்துடன்
என வரும் என்றும் அவரே காட்டியுள்ளார்.

-ஆம் என்று முடியும் தமிழ்ச்சொற்கள் அதிகம் இருக்குமோ?
இல்லை என்றே தோன்றுகின்றது.

அறம்-அறன், திறம்-திறன், மரம்-மரன் போன்று வருவதாலோ
என்னவோ நலமுடன் வாழ்க்கை என்றால் ஏதோ நலம் இல்லாத
நலம் முடமாகிப் போன வாழ்க்கை என்பது போல் ஒலிக்கின்றதோ என்னவோ
தெரியவில்லை.


செல்வா

மரன் என்பதே அதன் இடுகுறியாக இருந்திருக்கலாம்

தெலுகு மொழியில் மரனை மான் (மானு) என்பார்கள்
தால மரன்=  தாட்டி மானு
(தமிழ் ஆய்வில் பிற திராவிடமொழிகளையும் கருத்தில் கொள்ளணும்)
லகரம் டகரம் ஆகும் மரபு ஆங்கிலத்திலும் (ஐரோப்பிய மொழிகள்) இருக்கு

உருள் என்பது உருட்டு என மாறுது
அதேபோல்
ரோல் என்பது ரோடேட் என மருவுது
அதனால் தமிழ் பால் பாத்தி என ஆனது போல்
ஐரோப்பிய மொழிகளில் பார்ட் ஆகி இருக்குமோ?

கருதவேண்டியவை:
பிள=ஸ்பிளிட்
பிரி = செப்பரேசன்??
ஐரோப்பாவில் எல்லா சொல்லுக்கும் இலத்தீன் மொழியின் மூலம் நாடுவார்கள். நம் பக்கமும் பார்க்கலாம்

C.R. Selvakumar

unread,
Sep 22, 2011, 9:59:05 AM9/22/11
to tamil...@googlegroups.com, சந்தவசந்தம்
இந்த உருள்-உருண்டை-உருட்டு பற்றி பல முறை வியந்துள்ளேன்.
 
ஆங்கிலத்த்ல் roll-round-rotate
தமிழில் ள் -> ண் -> ட் முறை உண்டு,
 
ஆனால் ஆங்கிலத்தில் அப்படி முறை ஏதும் இருப்பதாகத்
தெரியவில்லை. அவர்கள் அச்சொற்களை வெவ்வேறு சொற்களில்
இருந்து வெவ்வேறு வழிகளில் வருவிக்கின்றனர்.
 
roll என்பதற்கு ஆக்ஃசுபோர்டு அகரமுதலி கூறும் விளக்கம் (இது வினையாக வரும் சொல்லின் முதற்பொருள்):
< Anglo-Norman and Old French, Middle French roller (mid 12th cent. in Anglo-Norman), apparently < post-classical Latin rotulare ( < classical Latin rotula wheel: see rotula n.), although this is first attested later than the French verb (from early 13th cent., in British sources). Compare post-classical Latin rollare , (from early 13th cent. in British sources), rolliare (1311 in a British source).
 
[rotula இல் உள்ள t எப்படி மறைந்து l ஆயிற்று என்று அறிந்தவர்கள்
கூறலாம்; இங்கேயே ட்-ள் தொடர்பு உள்ளது. தமிழ் ட், ள் என்பன
நாவண்ண ஒலிகள் (retroflex) ஆனால் இந்திய-ஐரோப்பிய மொழிகளில்
அப்படி இல்லை. எனவே இவை வேறு என்றும் அவர்கள் கூறலாம்]
round என்பதற்கு நெடிய விளக்கம். அது ஆங்கிலோ-சாக்ஃசன் rund, என்பதில் இருந்து வந்தது என்கிறார்கள். இடைக்கால பிரான்சியத்தின் reond, reont  இல் இருந்து வந்தது  என்றெல்லாம் சொல்வர் (roll என்பதோடு எந்தத் தொடர்பும் இல்லை)
Etymology:  Partly (i) < Anglo-Norman rund , Old French, Middle French reond , reont , Middle French, French rond (masculine noun) circle (c1145 in en reont in a circular course; rare before late 15th cent.), denoting various circular objects, e.g. bud (13th cent.), ring-shaped object (1413), small coin (1461), environs of a town (end of the 14th cent.), partly (ii) < Anglo-Norman runde , Old French, Middle French reonde , Middle French, French ronde (feminine noun) circle (c1170 in a la reonde in a circle), denoting various circular objects (13th cent., earliest in specific sense ‘round cap’),
 
rotate என்பது rotāre  என்னும் இலத்தீன் வினையில் இருந்து வந்தது என்பர். Etymology:  < classical Latin rotāt- , past participial stem (see -ate suffix3) of rotāre to cause (something) to spin on its axis, to revolve, to whirl round, to swing round, to cause to roll or spin along, to form into the shape of a wheel ( < rota wheel: see rota n.), perhaps after rotation n.Compare French rouer (c1180 in Old French as roer , Middle French rouer ), Catalan rodar (13th cent.), Spanish rodar (14th cent.), Portuguese rodar (14th cent.), Italian ruotare (a1292 as rotare ). Compare earlier
 
ஆகவே ஆங்கிலச்சொற்களும் தொடர்பான இந்திய-ஐரோப்பிய சொற்களும்
வெவ்வேறு மூல வடிவங்களில் இருந்து வந்தன என்பர்.
தமிழில் உருள்-உருண்(டை)-உருட்டு என்று சீராக இருப்பதைப் பார்க்கலாம்
 
மொழியியலாளர்கள் இவற்றை தன்னேர்ச்சி என்று
கூறிவிட்டு நகர்வர் ??  :)
 
cry = கரை ?
bed = படு(க்கை) ?
 
பிள் (split), கிள்(ளு) (cleave), கரை (cry) இப்படி நூற்றுக்கணக்கான
சொற்கள் உண்டு. பாவாணர் முதற்கொண்டு இன்னும் எத்தனையோ
பேர்கள் இந்திய-ஐரோப்பிய மொழிச்சொற்களுக்கும்  திராவிட
மொழிச்சொற்களுக்கும் இடையே உள்ள நெருக்கத்தை, அண்ணுறவான
தன்மையை எடுத்துக் காட்டியுள்ளனர். ஆனால் மொழியியலாளர்கள்
இவற்றை ஏற்பதில்லை.  தமிழர்கள் இன்னும் இது பற்றி ஆய்வுகள்
முறைப்படி செய்து நிறுவவேண்டும்.
 
அன்புடன்
செல்வா
 
 
2011/9/22 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--

Jean-Luc Chevillard

unread,
Sep 22, 2011, 10:26:08 AM9/22/11
to tamil...@googlegroups.com, C.R. Selvakumar, சந்தவசந்தம்
Dear Selva,

you write

<QUOTE>

ஆனால் மொழியியலாளர்கள்
இவற்றை ஏற்பதில்லை.  தமிழர்கள் இன்னும் இது பற்றி ஆய்வுகள்
முறைப்படி செய்து நிறுவவேண்டும்.
</QUOTE>

As you (implicitly) rightly point out,
since Modern English
can be viewed
EITHER as a pidgin of Old English
OR as creole form of Old French,
anyone who does not know either of those two languages
(Old English and Old French)
cannot hope to make significant contributions
to the field of Historical linguistics
by making direct comparison between Modern English and other languagues.

I wonder whether you have read the (mock) article written by Franklin C. Southworth,
which I once mentionned on the MinTamil list.

The link is
"http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/21d7cfff242a6bf"

அன்புடன்

-- ழான் (currently in Paris, France)

வேந்தன் அரசு

unread,
Sep 23, 2011, 7:48:30 AM9/23/11
to tamil...@googlegroups.com, சந்தவசந்தம்


22 செப்டெம்ப்ர், 2011 9:59 am அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

இந்த உருள்-உருண்டை-உருட்டு பற்றி பல முறை வியந்துள்ளேன்.
 
ஆங்கிலத்த்ல் roll-round-rotate
தமிழில் ள் -> ண் -> ட் முறை உண்டு,
 
ஆனால் ஆங்கிலத்தில் அப்படி முறை ஏதும் இருப்பதாகத்
தெரியவில்லை. அவர்கள் அச்சொற்களை வெவ்வேறு சொற்களில்
இருந்து வெவ்வேறு வழிகளில் வருவிக்கின்றனர்.
 
roll என்பதற்கு ஆக்ஃசுபோர்டு அகரமுதலி கூறும் விளக்கம் (இது வினையாக வரும் சொல்லின் முதற்பொருள்):
< Anglo-Norman and Old French, Middle French roller (mid 12th cent. in Anglo-Norman), apparently < post-classical Latin rotulare ( < classical Latin rotula wheel: see rotula n.), although this is first attested later than the French verb (from early 13th cent., in British sources). Compare post-classical Latin rollare , (from early 13th cent. in British sources), rolliare (1311 in a British source).
 
[rotula இல் உள்ள t எப்படி மறைந்து l ஆயிற்று என்று அறிந்தவர்கள்
கூறலாம்; இங்கேயே ட்-ள் தொடர்பு உள்ளது. தமிழ் ட், ள் என்பன
நாவண்ண ஒலிகள் (retroflex) ஆனால் இந்திய-ஐரோப்பிய மொழிகளில்
அப்படி இல்லை. எனவே இவை வேறு என்றும் அவர்கள் கூறலாம்]
round என்பதற்கு நெடிய விளக்கம். அது ஆங்கிலோ-சாக்ஃசன் rund, என்பதில் இருந்து வந்தது என்கிறார்கள். இடைக்கால பிரான்சியத்தின் reond, reont  இல் இருந்து வந்தது  என்றெல்லாம் சொல்வர் (roll என்பதோடு எந்தத் தொடர்பும் இல்லை)
Etymology:  Partly (i) < Anglo-Norman rund , Old French, Middle French reond , reont , Middle French, French rond (masculine noun) circle (c1145 in en reont in a circular course; rare before late 15th cent.), denoting various circular objects, e.g. bud (13th cent.), ring-shaped object (1413), small coin (1461), environs of a town (end of the 14th cent.), partly (ii) < Anglo-Norman runde , Old French, Middle French reonde , Middle French, French ronde (feminine noun) circle (c1170 in a la reonde in a circle), denoting various circular objects (13th cent., earliest in specific sense ‘round cap’),
 
rotate என்பது rotāre  என்னும் இலத்தீன் வினையில் இருந்து வந்தது என்பர். Etymology:  < classical Latin rotāt- , past participial stem (see -ate suffix3) of rotāre to cause (something) to spin on its axis, to revolve, to whirl round, to swing round, to cause to roll or spin along, to form into the shape of a wheel ( < rota wheel: see rota n.), perhaps after rotation n.Compare French rouer (c1180 in Old French as roer , Middle French rouer ), Catalan rodar (13th cent.), Spanish rodar (14th cent.), Portuguese rodar (14th cent.), Italian ruotare (a1292 as rotare ). Compare earlier
 
ஆகவே ஆங்கிலச்சொற்களும் தொடர்பான இந்திய-ஐரோப்பிய சொற்களும்
வெவ்வேறு மூல வடிவங்களில் இருந்து வந்தன என்பர்.
தமிழில் உருள்-உருண்(டை)-உருட்டு என்று சீராக இருப்பதைப் பார்க்கலாம்
 
மொழியியலாளர்கள் இவற்றை தன்னேர்ச்சி என்று
கூறிவிட்டு நகர்வர் ??  :)
 
cry = கரை ?
bed = படு(க்கை) ?
 
பிள் (split), கிள்(ளு) (cleave), கரை (cry) இப்படி நூற்றுக்கணக்கான
சொற்கள் உண்டு.

வியல்- wide
வியப்பு- wonder
அயில் -அயஸ்- iron

வடமொழியின் சம்- அதன் திரிபு  கம் ரொம்ப அதிகம்

committee, community, assemble

ஐரோப்பிய ஆய்வர்கள் கிரேக்கத்தை தாண்டி போக காணோம்

C.R. Selvakumar

unread,
Sep 23, 2011, 8:50:51 AM9/23/11
to Jean-Luc Chevillard, tamil...@googlegroups.com, சந்தவசந்தம்
அன்புள்ள ழான்,
 
(சந்தவசந்தம் குழுவுக்கு இம்மடல் பொருந்தாது என்று
நினைக்கின்றேன்; பொறுப்பாளர்கள் அபப்டி நினைத்தால்
அருள்கூர்ந்து நீக்கிவிடலாம்)
 
நீங்கள் தந்திருந்த இணைப்பையும், சவுத்வொர்த் அவர்களின்
மிக வேடிக்கையான படைப்பையும் பார்த்தேன்.
மிக்க நன்றி.
சவுத்வொர்த்தின் நையாண்டி புரிந்தாலும்,
சில மெய்யான சொற்பிறப்பியலும் அப்படி இருப்பதாக
உணர்ந்துள்ளேன் :) கிரேக்க மொழியில் கிரேக்க மொழிச்சொற்கள்
ஏறத்தாழ 25% என்று எங்கோ படித்த நினைவு.
கிரேக்க மொழியில் மிகப்பல சொற்கள்
வேற்று மொழியினருடையது.
ஆனால் கிரேக்கத்தில் இருந்து பெற்றது என்று மட்டும்
சொல்வர் மொழியியலாளர்.
 
13 ஆம் நூற்றாண்டு முதல் ஆங்கிலத்தில் வழங்கும்
இன்றைய ஆங்கிலச் சொல்"rice" என்பது
அரிசி என்னும் தமிழ்ச் சொல்லில்
இருந்து வந்தது  என்னும் எளிய
முறையைக் கூட பா.கிருட்டிணமூர்த்தி (Bh.K) போன்ற
புகழ்பெற்ற திராவிட மொழியியலாளர்கள்  மறுக்கிறார்கள்,
ஏற்பதில்லை. சமசுக்கிருத vrihi என்பதில் இருந்து வந்தது என்பர்.
அதே நேரம் இன்னொரு புகழ்பெற்ற
இலைல் கேஅம்ப்பெல் ( Lyle Campbell) தமிழ் "அரிசி"யில் இருந்து
வந்தது என்பதை ஒப்புக்கொள்கிறார் (அல்லது என்பதை
ஏற்கிறார்). 
 
மெரியாம் (Merriam) அகராதி சொற்பிறப்பியலைக்
கீழ்க்கண்டவாறு சொல்கிறது:
"Middle English rys, from Anglo-French ris, from Old Italian riso, from Greek oryza, oryzon, of Iranian origin; akin to Pashto wriže rice; akin to Sanskrit vrīhi rice
First Known Use: 13th century"  (http://www.merriam-webster.com/dictionary/rice )
 
ஆக்ஃசுபோர்டு அகராதியில் மிக விரிவாக எழுதியுள்ளார்கள்.
அவர்கள் மெரியாம் போல "akin" (போல) என்பதைத் தாண்டி,
கடைசியாக "திராவிட" மொழி ஒன்றில் இருந்து வந்ததாகக் ககூறுகின்றனர்.
 
Etymology:  < Anglo-Norman and Old French, Middle French ris (Middle French, French riz ) rice (c1270), the plant which produces rice (1298) and its probable etymon post-classical Latin risa , risi , risia , risium , risum , risus , rizi , rizum (frequently from 13th cent. in British and Italian sources; the French word is probably, in spite of the chronology, partly via Italian riso rice (beginning of the 14th cent. or earlier), the plant which produces rice (c1350)), probably < Byzantine Greek ὀρύζιον (10th cent. denoting a food stuff; also attested in medical writers; compare the modern Greek form ῥύζι ), a diminutive formation (in -ιον : compare -y suffix4) < Hellenistic Greek ὄρυζα < an Iranian word (compare Pashto vrižē (feminine plural) rice; compare also Sanskrit vrīhi rice, although its exact relationship to the Iranian word is unclear), perhaps ultimately < a Dravidian language.
 
(நன்றி ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலி - OED- Oxford English Dictionary  
rice, n.2
Third edition, June 2010; online version September 2011. <http://www.oed.com/view/Entry/165522>; accessed 23 September 2011. An entry for this word was first included in New English Dictionary, 1909.)
 
அதாவது பல்வேறு கருத்துக்கோணங்கள் இருக்கின்றன. அதில்
அறிந்தோ, அறியாமலோ சாய்வுகள் சில நேரங்களில் செயற்படுகின்றன
(இது தமிழ் என்பாருக்கும் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்). பல நேரங்களில் "exact relationship to Iranian word is unclear",
"perhaps ultimately < a Dravidian language" என்று
ஆக்ஃசுபோர்டு அகரமுதலி குறிப்பது போல் தெளிவுபட உரைப்பதோ
ஒப்புக்கொள்வதோ இல்லை. பல நேரங்களில் ஏதோ முறைவகுத்து செய்வது போல் தோற்றம் அளித்தாலும்
சவுத்வொர்த் கூறிய நையாண்டித் தனமாகவே
சில நேரங்களில் "மெய்யான" மொழியியலாளர்களின்
சொற்பிறப்பியல் வருவிப்புகளும் இருப்பதாகத்
தோன்றுகின்றது :)
 
அன்புடன்
செல்வா
 
 
2011/9/22 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Sep 23, 2011, 8:00:10 PM9/23/11
to tamil...@googlegroups.com


23 செப்டெம்ப்ர், 2011 8:50 am அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

அன்புள்ள ழான்,
 
(சந்தவசந்தம் குழுவுக்கு இம்மடல் பொருந்தாது என்று
நினைக்கின்றேன்; பொறுப்பாளர்கள் அபப்டி நினைத்தால்
அருள்கூர்ந்து நீக்கிவிடலாம்)
 
நீங்கள் தந்திருந்த இணைப்பையும், சவுத்வொர்த் அவர்களின்
மிக வேடிக்கையான படைப்பையும் பார்த்தேன்.


ரொம்ப வேடிக்கைதான்

ஆனால் நான் அந்த வரைக்கு போகலை

ஆனால் இலை -leaf
பூ -flower
 பூப்பு -puberty
ஒன்று- one

இவற்றிடையே ஒற்றுமை காணலாம்
 ஆங்கிலம் தமிழ் போல் அஃறிணைகளுக்கு பால் வேறுபாடு காண்பது இல்லை.

பாம்ப்பே, இத்தாலியில் வழிகாட்டுநர் prostitute என்பதற்கு ஊர் சுற்றுபவர் என்று பொருள் சொனனார். ஆனால் அகராதியில் form of variant stem of statuere  to cause to stand  என சொல்லுது

அப்போ எனக்கு பரத்தைதான் நினைவுக்கு வந்தது

பாங்க் என்றால் வட்டிக்கடைக்காரனின் மேசை.
வங்கி முங்கிவிட்டால் மேசையை தெருவில் போட்டு உடைப்பார்களாம் அதுதான் பேன்க்ரப்ட்.

 வெள்ளை அங்கி அணிந்ததால் அரசியல்வாதிகளை கேண்டிடேட் என்பார்களாம். கேண்ட்டிட் எனில் வெண்மை




--
Reply all
Reply to author
Forward
0 new messages