வணக்கம்:
அனைவருக்கும் தைத் தமிழ்ப் புத்தாண்டு மற்றும்
இனிய பொங்கல் புதுநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
அன்புடன்.../பூபதி
------------------------
பி.கு:
இந்த ஒருமை பன்மை பற்றி
பலமுறை எழுதியாகி விட்டது..
முதலாவது..
ஒருமை என்பது (singularity)
இறைப்பொருள் ஒன்றையே குறித்தானது..
ஆதலினால்தான்.. தமிழில்..
இறைப்பொருளை இறைவன்/இறைவி என்று
ஒருமையில் அழைக்கிறோம்..
ஈன்ற அம்மையையும் அப்படி
அழைப்பது வழக்கமும்கூட ..?
சரி..! கேள்விக்கென்ன பதில்..?
முதலாவது :
ஒரேழுத்து ஒருமொழியில்.. மிகும்.
உ-ம்: பூ (ஒருமை) பூக்கள் (பன்மை)
வெவ்வகாரம் என்னவென்றால்..
கண்ணடம்/தெலுங்கு போன்ற மொழிகளில்
பூ என்பது புவ்வு (பூவு) என்றாகும்
அப்படியான வு-கார விகுதியில்..
மிகவே மிகாது.. பூவுகள்'னுதான்
வரும்..வரணும்.? அதான்.
ஈரசை சொற்கள்:
குறில் <உ-ம்> பசுக்கள்
நெடில் <உ-ம்> மாடுகள்
மூன்றசை சொற்களில் ஒற்று மிகாது..?
<உ-ம்> தேர்வுகள்/தீர்வுகள்/பாடல்கள்
மேளகர்த்தாக்கள் எழுவத்திரண்டிலும்
தமிழ்பாடல்கள் படைத்த ஒரேயொரு பாரதி.. அதனால்தானோ
அவனை பாட்டுக்கொரு (பாட்டுக்களுக்கு அல்ல)
புலவன் பாரதி என்கிறோம்.. இல்லீங்களா..!?
(நம்ம சுத்தானந்த பாரதி'ங்க செர்..?) <வுட்டு ஜூட்டு>
நான்கசை சொற்களில்:
புள்ளி இ ரு ந் தா ல் மிகும்
<உ-ம்> வாழ்த்துக்கள்/எழுத்துக்கள்....
இருக்கும் பிரட்சனை..
தமிழன் தமிழில் சிந்திக்க வேண்டும். _/\_
எழுத்தாளனின் எழுத்தினை
எழுத்துகள் (writings) எனும் ஆங்கிலப் பன்மைப்போக்கு
நம்மிடையே இன்னுமே நிலவி வருகிறதோ..?
(எழுத்துக்கள் = அகரம் முதலிய எழுத்துக்கள் (letters))