சிந்து எழுத்து, பிராமி எழுத்தில் உள்ள ஒப்புமை
அறியப்படாத காரணங்களால் சிந்துவெளி நாகரிகம் 3,800 ஆண்டுகள் முன் முற்றுப் பெற்றது. அங்கத்து மக்கள் பிற இடங்களுக்கு பெயர்ந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பின்பு பிராமி எழுத்து உருவானது. இது சிந்து எழுத்தினும் சுருக்கமானது, தெளிவானது. வடவருக்கு ஏற்ற சில கூடுதல் ஒலிகளை தன்னகத்தே கொண்டது பிராமி. சிந்து நாகரிக புலம்பெயர் மக்கள் தம் முன்னோர் பயன்கொண்ட மொழியையும் எழுத்தையும் மறந்திருக்க இயலாது. அந்த சிந்துவெளி எழுத்துகள் சில ஒலி மாறுபாட்டுடன், நிலை மாறுபாட்டுடன் (position change) பிராமி எழுத்தில் நேரடியாக கையாளப்பட்டுள்ளது அறிக. அவ்வாறு 8 எழுத்துகள் பிராமியில் எடுத்து ஆளப்பட்டுள்ளன. அவை என்ன என்பது இணைக்கப்பட்ட தாளில் சிந்து எழுத்து பச்சை வண்ணத்திலும் பிராமி எழுத்து சிவப்பு வண்ணத்திலும் எழுதிக் காட்டப்பட்டுள்ளன. கண்டு தெளிக. சிந்து எழுத்தை வணிகர்கள் காப்பாற்றி வந்தனர் என்பதால் அசோகர் கால பிராமிக்கு பிந்தைய கால சாதவாகனர் - குஷானர் ஆட்சியில் சில எழுத்துக்கள் பிராமியில் சேர்ந்ததாக தெரிகின்றது.