தூத்துக்குடி பட்டின மருதூர் சாணைக் கல்லில் ஈரெழுத்து

6 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Dec 3, 2025, 8:07:52 AMDec 3
to தமிழ் மன்றம்

பட்டின மருதூர் என்பது தூத்துக்குடி மாவட்டத்தில், ஒட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள ஒரு பகுதியாகும். தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இது பழங்கால பாண்டியர்களின் மதுரா நகரமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இங்கு அகழ்வாய்வின் போது கிடைத்த கத்தி தீட்டும் சாணைக் கல்லில் தமிழி சிந்து ஆகிய எழுத்து பொறுப்புகள் காணப்படுகின்றன. தமிழி உகரம் மாற்று திசையிலும் யகரம் கிடைமட்டமாகவும் எழுதப்பட்டுள்ளது. இவை பச்சை வண்ணத்தில் காட்டாப்பட்டுள்ளன. மற்ற எழுத்துகள் சிந்து எழுதுகளாகும். 


அதில் முதல் எழுத்து குளவியின் முதுகு பரப்பை ஒத்துள்ளது. அதில் இருந்து ககர மெய்  - க், அடுத்து தமிழி உகரம்  - , அடுத்ததாக தமிழி லகரம் - ல. இதை க்உல > குல என்று படிக்க வேண்டும். நாலாம் எழுத்து சிந்தின்  ⊂  - ப்,   - உ,  - ய,  / - ன், U - க, ʌ - ம். இதை ப்உயன்கம் > புயங்கம் என்று படிக்க வேண்டும். இதாவது, குல புயங்கம் என்று சாணைக் கல்லில் எழுதப்பட்டுள்ளது. இது 2,500 ஆண்டுகள் அளவில் சிந்து எழுத்தின் மீது தமிழி எழுத்தின் தாக்கத்தை அறிய உதவுகிறது.        



image.png      
image.png 
pattanamarudur.jpg

Seshadri Sridharan

unread,
Dec 10, 2025, 2:22:45 AM (11 days ago) Dec 10
to தமிழ் மன்றம்


On Wed, 3 Dec, 2025, 6:37 pm Seshadri Sridharan, <ssesh...@gmail.com> wrote:

பட்டின மருதூர் என்பது தூத்துக்குடி மாவட்டத்தில், ஒட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள ஒரு பகுதியாகும். தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இது பழங்கால பாண்டியர்களின் மதுரா நகரமாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இங்கு அகழ்வாய்வின் போது கிடைத்த கத்தி தீட்டும் சாணைக் கல்லில் தமிழி சிந்து ஆகிய எழுத்து பொறுப்புகள் காணப்படுகின்றன. தமிழி உகரம் மாற்று திசையிலும் யகரம் கிடைமட்டமாகவும் எழுதப்பட்டுள்ளது. இவை பச்சை வண்ணத்தில் காட்டாப்பட்டுள்ளன. மற்ற எழுத்துகள் சிந்து எழுதுகளாகும். 


அதில் முதல் எழுத்து குளவியின் முதுகு பரப்பை ஒத்துள்ளது. அதில் இருந்து ககர மெய்  - க், அடுத்து தமிழி உகரம்  - , அடுத்ததாக தமிழி லகரம் - ல. இதை க்உல > குல என்று படிக்க வேண்டும். நாலாம் எழுத்து சிந்தின்  ⊂  - ப்,   - உ,  - ய,  / - ன், U - க, ʌ - ம். இதை ப்உயன்கம் > புயங்கம் என்று படிக்க வேண்டும். இதாவது, குல புயங்கம் என்று சாணைக் கல்லில் எழுதப்பட்டுள்ளது. இது 2,500 ஆண்டுகள் அளவில் சிந்து எழுத்தின் மீது தமிழி எழுத்தின் தாக்கத்தை அறிய உதவுகிறது.


கத்தியை தீட்டு என்றால் தீ பறக்க தேய் என்று பொருள். குல் - எரிதல், சிவத்தல், உலர்தல், ஒளிர்தல் என பொருள். குய் - வேதல், எரிதல், குய்யன்/ குயவன் - மட்கலன் சுடுபவன். குய்+ சு= குசு - வெப்பக் காற்று. 
குலாலன் என்பதும் சுடுபவன் என்ற பொருளுடையது. பலரும் இது தமிழ் அல்ல என்று கருதுவது தவறு. குல குண்டலினி என்பதில் உள்ள குல வெப்பத்தை குறிக்கும். குண்டலினி என்றால் சுருள் வடிவ ஆற்றல். ஆக குல என்றால் வெப்பம், தீ என்று பொருள். புயங்கம் என்றால் வெளிப்படுவது என பொருள். இதாவது, தீயை வெளிப்படுத்தும் தீட்டுக்கல் என்பதே குல புயங்கம் ஆகும்.


PMR-Whetstone observation 01.12.2025.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages