உயிரினும்! - சொ.வினைதீர்த்தான்

7 views
Skip to first unread message

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 15, 2025, 3:07:36 PM (5 days ago) Sep 15
to மின்தமிழ், vallamm...@gmail.com, vallamai, தமிழ் மன்றம், santhav...@gmail.com
உயிரினும்!
.......................

வள்ளுவர் வாய்மை அதிகாரம் தொடங்கும்போது "தீமை இலாத சொலல்" என்ற விளக்கமும் தவம் அதிகாரம் தொடக்கத்தில் "உற்ற நோய் நோற்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை" என்றும் சிறப்பான விளக்கம் தந்துவிடுகிறார். ஆயின் ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் ஒழுக்கம் உயர்ந்த சிறப்புத் தருதலால் அது உயிரை விடவும் மேலாகப் பாதுகாக்கப்பட வேண்டியது(131) என்று தொடங்குகிறார்.
பலகற்றுத் தெளிந்தாலும் ஒழுக்கமே வாழ்வுக்கு உற்ற துணையாக் இருப்பதால் ஒழுக்கத்தை விரும்பிப் பாதுகாக்க வேண்டும் (132) என்று தொடர்கிறார். 

ஒழுக்கமில்லான் கண் உயர்வு இல்லை (135), ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை (137), நன்றி எனும் நன்மை விளைய விதைக்க வேண்டியது நல்லொழுக்கம் (138) என்று உணர்த்துகிறார்.

ஒழுக்கத்தின் உயர்வுகளைக் கூறிச் செல்லுகிற வள்ளுவர் ஒழுக்கத்திற்கு வரையரை தரவில்லையே என்று எண்ணிப் பார்தால் அதிகாரத் தலைப்பு "ஒழுக்கம்" அல்ல "ஒழுக்கம் உடைமை" என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒழுக்கத்தை உடையவானக இருப்பது! எனவே ஒழுக்கம் உடையவனாக இருப்பதின் மேன்மை இவ்வதிகாரத்தில் உணர்த்தப்படுகிறது எனக்கொள்ளலாம்.

பிறகு ஒழுக்கம், ஒழுகலாறு, ஒழுகும் வழி எங்கு உரைக்கப்படுகிறது என்று நோக்கினால் ஒழுக்கமுடைமை அதிகாரத்திற்கு அடுத்து "பிறனில் விழையாமை" தொடங்கி 33 அதிகாரங்களில் ஒழுகும் வழிகள் உரைக்கப்படுகிறது. பொறயுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, வெகுளாமை, கள்ளாமை, பயனில சொல்லாமை என்று எத்தனை எத்தனை வழிகளில் அறம் உரைக்கிறார் என்பது நினைவில்கொண்டு பின்பற்ற வேண்டியவை.

ஒவ்வொரு உயிரும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எவ்வளவு பாடுபடகின்றது. உயிர் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயல்வது இயற்கையின் நியதி. அந்த உயிர் நீங்கினால் உடல் பிணமாகிவிடுகிறது. அந்த ஊனை மயக்கம் தெளிவின்மை ஆகிய குற்றம் நீங்கிய அறிவினார் உண்ண மாட்டர்கள்.

"செயிரின் தலைப்பிரிந்த காட்சியர் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்" (238)
அறிவினோர்க்கு இலக்கணம் "பிறிதின் நோய் தன் நோய் போல போற்றுதல்" என்பது வள்ளுவம். அன்பும், அருளும் ஓடிப் பெருகும் நெஞ்சு உடையோர் உயிர் நீங்கிய பிணம் என்னும் உடலை ஒருபோதும் உண்ணமாட்டார். ஆகச் சீராட்டிப் பாராட்டிப் பாதுகாக்கபட்ட உயிர் நீங்கினால் பிணம். அந்த உயிரை விடவும் பாதுகாக்கப்பட வேண்டியது ஒன்று உண்டா? உண்டு! அது என்ன? ஏன்?

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்" (131)
ஒன்றையொன்று ஒப்பிட்டு உயர்ந்ததின் இன்றியமையாமையை உணர்த்துவது மொழித் திறன் ஆற்றல் உத்திகளுள் ஒன்று. சிறப்பானதும் ஆகும். ஒருவன் வாழ்கிறான் என்பதை விடவும் ஒழுக்கத்துடன் வாழ்கிறான் என்பது மேன்மையானது. பெருஞ் சிறப்புக்கு என்ன காரணம்? ஒழுக்க நெறிகளுடன் வாழ்பவன் தானும் சிறப்பாக வாழ்ந்து சமுதாயமும் பயனுற வாழ்வான். ஈதல் இசைபட வாழ்தல், உலகத்தார் உள்ளத்தில் எல்லாம் உளன் என வாழ்தல், விட்டுச் செல்கிற சிறப்புடைய எச்சங்களால் வாழ்தல் என வாழ்க்கைக்குப் பிறகும் புகழ் வாழ்வு தொடர்கிறது. இவையனைத்தும் ஒழுக்கம் தருகிற பெரும் பயன்! விழுப்ப வாழ்வு!
எனவே உயிரை ஓம்புதல் இயற்கை நிலை! ஒழுக்க நெறியைக் கடைப்பிடித்துத் தொடர்ந்து அதில் நிலைத்துப் போற்றி நடத்தல் ஆவது அறியும் அறிவுடையோர் வாழ்வு!

நன்றி 🙂👍
சொ.வினைதீர்த்தான்
................................
பி.கு: இன்று ஒரு நிகழ்வுக்கு எழுதிய கட்டுரை. சற்று நீளமானது. நண்பர்கள் அன்புடன் படித்துக் கருத்திடுக! 🙏🏻

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Seshadri Sridharan

unread,
Sep 15, 2025, 10:10:34 PM (5 days ago) Sep 15
to tamil...@googlegroups.com
On Tue, Sep 16, 2025 at 12:37 AM சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> wrote:
உயிரினும்!
.......................

வள்ளுவர் வாய்மை அதிகாரம் தொடங்கும்போது "தீமை இலாத சொலல்" என்ற விளக்கமும் தவம் அதிகாரம் தொடக்கத்தில் "உற்ற நோய் நோற்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை" என்றும் சிறப்பான விளக்கம் தந்துவிடுகிறார். ஆயின் ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் ஒழுக்கம் உயர்ந்த சிறப்புத் தருதலால் அது உயிரை விடவும் மேலாகப் பாதுகாக்கப்பட வேண்டியது(131) என்று தொடங்குகிறார்.
பலகற்றுத் தெளிந்தாலும் ஒழுக்கமே வாழ்வுக்கு உற்ற துணையாக் இருப்பதால் ஒழுக்கத்தை விரும்பிப் பாதுகாக்க வேண்டும் (132) என்று தொடர்கிறார். 

அரிய முயற்சி பாராட்டு. 

வள்ளுவர் ஒரு தவ ஒழுக்கினர் என்பதால் அவருக்கு தவ ஒழுக்கம் பற்றி தெரிந்துள்ளது.  தவத்தின் வடிவம் யாதெனில் பிற உயிர்க்கு தீங்கு செய்யாது இருப்பதும் தவத்தின் ஒரு வடிவமாகும் எப்படி என்றால் தனக்கு வந்தால் நோயை எப்படி எதிர் கொள்வாரோ அப்படி கருதி செயற்படுவதே  தவம் (நோன்பு) என்கிறார் இதாவது பிறரது துன்பத்தையும் போக்க வேண்டும் என்கிறார். விழுப்பம் என்ற உயர்வு குறிப்பது மோட்சம் என்ற வீடுபேற்றை. எனவே ஒழுக்கம் இருந்தால் தான் அந்த வீடு பேற்றை அடைய முடியும் என்பதால் உயிர் போவதாய் இருந்தாலும் ஒழுக்கத்தை விடாமல் கடைபிடிக்க வேண்டும் என்கிறார். இக்காலத்தே 1950 க்கு பிறகு மக்கள் கற்பனையான சினிமா, நாவல் போன்றவற்றால் கற்பனை, பகல் கனவு ஆகியவற்றில் உழன்று ஒழுக்கத்தை தொலைத்து விட்டனர். அதனால் மனஅமைதியை  தொலைத்து விட்டனர். கற்பனை இல்லாவிடில் படுக்கையில் தூங்க கூட முடியாது என்ற நிலைக்கு மனநோயாளி ஆகிவிட்டனர். இது ஆன்மீக உயர்வுக்கு பெரும் தடை. 1950 முன் பல தவ யோகிகள் இந்தியாவில் இருந்தனர் ஆனால் அதன் பின் விறல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் தவ யோகிகள் உருவாகி உள்ளனர் என்று பிரபாது ரஞ்சன் சர்க்கார் கவலையுடன் கூறுகிறார்.

C.R. Selvakumar

unread,
Sep 17, 2025, 5:34:28 PM (3 days ago) Sep 17
to tamil...@googlegroups.com, tamil...@googlegroups.com
அன்புள்ள ஐயா! 
மிகச்சிறப்பாக எடுத்துரைத்துள்ளீர்கள் ஐயா! 
வள்ளுவப் பெருந்தகையின் உயர்தனிச் செங்கருத்துகள் நினைதொறும் நினைதொறும் இன்பூட்டுபவை! நன்றி ஐயா!
அன்புடன்
செல்வா
(குபெக்கு மாநிலத்தில் புனித இலாரன்சு ஆறு அட்டுலாண்டிக்கு மாக்கடலில் நுழையும் இடத்தில் அமைந்துள்ள இயற்கை சூழ்ந்த காடுகளில் கூடார முகாமிட்டிருந்தோம். கரட்டு அதனை சென்றோம் காணற்கரிய நீலத் திமிங்கிலம் கண்டோம். உலகிலேயே ஆகப்பெரிய விலங்கு! நிறைய பகிர உள்ளது. பின்னர்!! )
Sent from my iPhone

On Sep 15, 2025, at 10:10 PM, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj4MvKG5xuQkideC-yK9xF4qDM0F7%3D_2gvgC8fBv%2B39Hxg%40mail.gmail.com.

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 18, 2025, 6:23:07 AM (3 days ago) Sep 18
to தமிழ் மன்றம்
மகிழ்ச்சி. மகிழ்ச்சி ஐயா!
நன்றி.
உடனே பகிர்ந்துவிடுங்கள் பிறகு என்றால் விட்டுப்போய்விடுகிறது என்பது என் அனுபவம்!
 ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்பார்கள் என தாயார்.
படிக்கிறவருக்குப் புதிதாக இருந்தாலும் நமக்குப் பழசு என்பதால் விட்டுப் போய்விடுகிறது.
நன்றி

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 18, 2025, 6:23:53 AM (3 days ago) Sep 18
to தமிழ் மன்றம்
மகிழ்ச்சி.
நன்றி சார்

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
Reply all
Reply to author
Forward
0 new messages