சொவ்வறை -1

150 views
Skip to first unread message

iraamaki

unread,
Nov 1, 2012, 1:05:10 AM11/1/12
to tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, gbin...@yahoogroups.com
சொவ்வறை -1
 
சொவ்வறை என்ற சொல் இன்று, நேற்றுப் பிறந்ததில்லை. 10/12 ஆண்டுகளுக்கு முன், ”மென்பொருள், மென்கலன்” போன்ற சொற்களை ஏற்கத் தயங்கி, நீண்ட விளக்கத்தின் பின், அடியேனாற் பரிந்துரைக்கப்பட்டது.  ”மென்மம், கணியம்” போன்றவை அப்போது எழுந்திருக்கவில்லை.  ”யம்மும், மம்மும் ஒட்டினால் தமிழில் எதுவும் பண்டம்/ ஆக்கம்/ விளை/ பொருள்/ சரக்காகி விடும்” என்ற சூழ்க்குமம் தெரியாக் காலமது:-).  சொவ்வறையின் பரிந்துரை கேட்டுச் சில சட்டாம்பிள்ளைகள் வீறுகொண்டு, கடைந்த சொற்களால் ’உள்ளுக்குள் துரோகம் செய்யும் இராம.கி”  என்று அருச்சிக்க முற்படுவதும் தெரியாது. ”இப்படிச் சொற்களை அமைக்கும் நெறி, மொழியை புற்றுநோய்போல் மறைந்திருந்து அடியோடு அழுகடிக்கும்” என்ற பேரழிவுக் கணிப்பும் அப்போது தெரியாது :-))))).
 
அண்மையில் நண்பரொருவர் கூறியதினுமிழிந்து வல்லடியாகக் குடத்தை வரிசையிலிருத்திக் குழாய்ச்சண்டை போட எனக்கும் நேரம் பிடிக்காது. ஒருவேளை இளந்திமிரில் 40/45 ஆண்டுகளுக்கு முன் செய்திருப்பேனோ, என்னவோ?. இப்பொழுது மூத்தகவையில், சற்று நாகரிகம் கற்றதாற் புன்சிரித்து நகர்கிறேன். 1000-ற்கும் மேற்பட்டு புதுச்சொற்கள் பரிந்துரைத்த நான், அவை நிலைக்க என்றும் முயன்றதில்லை. ஆணவம் தொனிக்க அரசியற் பண்ணியதில்லை. ”பயனர்க்கு எது உகப்போ, அது நிலைக்கும்” என்றே அமைந்திருக்கிறேன்.  நிலைத்தவை பல.  அழிந்தவை ஒரு சில. 
 
சொவ்வறை என்ற சொல்லெழுந்தது தமிழிணையம் மடற்குழுவிலா (ஆம், எல்லோரும் எளிதாய் மறந்துவிட்ட பாலாப் பிள்ளையின் tamil.net), அன்றித் தமிழுலகம் யாகூ மடற்குழுவிலா என்று நினைவில்லை, ஏதோவொன்றில் எழுதினேன். இரண்டு குழுக்களும் அன்று தகுதரத்தில் (TSCII இல்) இயங்கியன.  தமிழுக்கு வந்த போகூழ், அவ்விரு குழுக்களுமே இன்றில்லாது போயின. (’தமிழுலகம்’ ஒருங்குறியில் கூகுளில் இப்போது இயங்குகிறது.) இக்குழுக்களில் எழுதி இணையத்தில் அழிந்த கட்டுரைகள் ஏராளம். அவை என் கணி நினையங்களிலும் (memory devices) அழிந்துவிட்டன. அங்குமிங்கும் தேடி நண்பர்கள் பழையதை அனுப்ப, இப்போது சேர்த்துக் கொண்டிருக்கிறேன்.
 
அந்த ஊற்றுக் கட்டுரை மூலமும், குமுகக் கணுக்கத்தின் மூலமும் [ஒரு முரண்நகை தெரியுமோ? கணுக்கம் - connection - என்ற சொல்லைப் படைத்து விளக்கமெல்லாஞ் சொன்னவர், தான் படைத்த முறையை வசதியாய் மறந்து, இப்பொழுது அடம்பிடிக்கிறார்], என் வலைப்பதிவின் மூலமும், தமிழ்-விக்சனரியிற் பேசப்பட்டது மூலமும், சொவ்வறை என்ற சொல் தயக்கத்தோடு கொஞ்சங் கொஞ்சமாய்ப் பலருக்குந் தெரிய வந்தது.
 
”இராம.கி. பரிந்துரைத்த சொற்களெலாம் ஆங்கில ஒலிப்புக் கொண்டவை.” என்ற அவதூறை இணைய அரசியல்வாதி ஒருவர் ஓதி, இன்னுஞ் சிலரைத் துணுக்குற வைத்ததால், நான் கவன்றதில்லை. ஆங்கிலமும், சங்கதமும் உடன்பிறப்புக்கள் என்று (மாக்சு முல்லரோ, ஜோன்சோ) யாரோ ஒரு மேனாட்டார் சொன்னாராம்.  நம்மவரும் இக்கருதுகோளை ஏற்று உண்மையாக்கித் தமிழை ஆய்விலிருந்து விரட்டி அகற்றுவதிற் துணை நிற்கின்றனர்.  இந்தக் கருதுகோளின்படித் தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும், ”மிளகுத் தண்ணீர், கட்டை மரம்” போன்ற விரல்விடும் இணைகள் தவிர்த்து வேறு ஒட்டுதல் கிடையாதாம்.  இப்படிச் சில படித்தவர் செய்தது, மாற்றாருக்கு வசதியாயிற்று.  நூற்றுக்கணக்கில் தமிழ்ச் சொற்களை தன்மய ஒப்பீட்டிற் பார்த்து, முன்னுரிமையைச் சங்கதத்திற்கே கொடுத்து, 50%-க்கும் மேற் தமிழ், சொற்கடனுற்றதாய்க் காட்டி, நம் பெருமிதம் குலைத்தார். ”செம்மொழி” என்பதெலாம் முடிவிற் பாவனை தான் போலும்.
 
"எந்த முன்முடிவுமின்றி தமிழ்வேர்களின் வழி பாருங்கள்,  தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பியத்திற்கும் இடை ஏதோ உறவு தோற்றுகிறது" என்று கரட்டிக் கத்தியும் பலனில்லை;  மேலையர் கருதுகோளைச் சிக்கெனப் பிடித்து “எங்கெழுந்து அருளுவது இனியே!” என்று அமைகிறார். அறிவோட்டம் குறைந்து தொண்டூழியங் கூடி, மூதிகம் மூடி, தமிழர் உணராதிருக்கிறார். ”வறை”க்கும் ”ware”-க்கும் உள்ள உறவு புரியாது (புரிவது மட்டுமின்றி, மேலும் அதுபற்றி வியக்காது) குளிப்பாட்டிய குழந்தையை குழிதாடியோடு தூக்கியெறிகிறார்.  மொத்தத்திற் தமிழ்மூலம் காட்டுபவரைப் பித்தர், வெறியரென்று காட்சிப் பொருளாக்கி, மேனாட்டுக் கருதுகோளைப் பிடித்தாடுவாரை ”வல்லார்” என வியக்கும் பம்மாத்து குமுகாயத்திற் தொடர்கிறது.  கேட்கத்தான் ஆளில்லை.  கடக்கவேண்டிய தொலைவும் அதிகமாகிறது.  எவனொருவன் தன்வாழ்விற் பெருமிதம் தொலைத்தானோ, அவன் சொந்தச் சிந்தனை வற்றி அந்திநாள் அளவும் அடிமையாயிருக்கக் கடவன்.
 
வறை என்பது சரக்கு.  உலர்ந்த பண்டம். (பல தமிழிய மொழிகளுள் இந்தச் சொல் இருக்கிறது. த.சரக்கு, ம.சரக்கு, க.சரகு,சர்கு, தெ.து. சரக்கு) வேடுவச் சேகர (hunter - gatherer) வாழ்க்கையில், தொல்பழங்காலத்தில் இயற்கையில் உலரவைத்துக் கிட்டிய பொருட்களையே (பின் கிட்டாத நாட்பயன்பாட்டிற்காக) பண்டமாற்றி விற்றனர். கருவாடு, உப்புக் கண்டம், உலர்ந்த மீன், உலர்ந்த காய், பழங்கள் என வெய்யிலில் வற்றியவை இவற்றில் ஒருசில. இவற்றையே பின்னால் நாகரிகம் வளர்ந்த நிலையிற் காசுக்கும் விற்றார்கள். இப்படி உலர்பொருட்களிற்றான் மாந்தரின் முதல் வாணிகம் தொடங்கியது. மாந்தரின் செயற்கை ஆக்கம் பின்னாற் சேர்ந்துகொண்டது.
 
உணங்குகள் (உலர்ந்த பொருட்கள்)
கருவாடுகள் (கருத்து, உலர்ந்த, ஊன் தசைப் பிண்டங்கள்)
கண்டங்கள் (புலவின் உப்புக் கண்டங்கள்; கண்டுதல் என்பதும் வற்றுவதே; கண்டுமுதல் - களத்திற் காய்வதற்கு முன்னிருக்கும் ஈரமிலாக் கூலத்தை
வேளாண்மையிற் குறிக்கிறது.)
சருகுகள் (உலர் இலைகள், பூக்கள்; சருகிக் கிடந்தது சரக்கு),
சுக்குகள் (காய்ந்த இஞ்சி)
சுண்டுகள் (நீர்வற்றிச் சுண்டியது. சுண்டின் திரிவு சண்டு. ”சண்டும் சருகும்” என்பது தென்றமிழ் நாட்டுச் சொல்லிணை)
சுவறல்கள் (வற்றிக் கிடைத்த பொருள்)
துவட்டல்கள் (நீர் வற்றிய பொருட்கள்)
பண்டங்கள் (பண்டிக் கிடந்த பொருள் பண்டம்; பண்டு = உலர்ந்த பழம்),
பொருக்குகள் (காய்ந்த சோற்றுப் பருக்கைகள்)
வற்றல்கள் (வெய்யிலில் உலர்த்தி வற்றிய காய்கள்.)
 
எனப் பல்வேறு சொற்கள் தமிழில் உலர்பொருளைச் சுட்டின. இயலிரை கிடைக்காத காலத்தில் இவற்றில் பலவும் மாந்தருக்கு உணவுமாயின. நடையும் பயணமும் பண்டமாற்று வழியாகி, பாலைதாண்டும் பழக்கம் பண்டைத்தமிழர்க்கு ஏற்பட்டது. பாலையாகிய மொழிபெயர்த்தேயம் பெரும்பாலும் இற்றை இராயல சீமை தான். (சங்க இலக்கியத்தில் இராயல சீமையின் தாக்கத்தை நாம் இன்னும் உணர்ந்தோமில்லை.) 50%க்கும் மேற்பட்ட சங்கப்பாக்கள் பாலைத்திணையையே பேசுகின்றன. பாலைத்திணையில் வணிகம் பிணைந்தது பூகோளம் விதித்த கட்டுப்பாடு.  
 
இடைக்காலத்திற் சரக்காறு என்று ஆறுவகைச் சரக்குகளைக் குறிப்பார்கள். ஒவ்வொரு பகுதிக்கும், வெவ்வேறு வகைகள் முதன்மையாகின. சில பகுதிகளின் ஆறு சரக்குகளைச் சாம்பசிவம் மருத்துவ அகரமுதலி குறித்துள்ளது.
 
அ. வங்காள நாட்டின் அறுவகைச் சரக்குகள்:
 
1. இலிங்கம்: cinnabar
2. பச்சைக் கற்பூரம்: crude camphor
3. குங்குமப்பூ: European saffron
4. படிகாரம்: alum
5. சாரம்: sal ammoniac
6. சுக்கு: dried ginger
 
ஆ. மலையாள நாட்டின் அறுவகைச் சரக்குகள்
 
1. கொச்சிவீரம்: Cochin corrosive sublimate
2. மிளகு: black pepper
3. திப்பிலி: long pepper
4. ஏலம்: cardamon
5. கிராம்பு: clove
6. சிற்றரத்தை: lesser galangal
 
இ. கிழக்குக் கடற்கரையில் விளையும் அறுவகைச் சரக்குகள்
 
1. கல்லுப்பு: inslouble sea salt
2. இந்துப்பு: sindh slat
3. பொட்டிலுப்பு: nitre
4. அப்பளாகாரம்: sub-carbonate of soda
5. பலகறை: cowry
6. கடல்நுரை: sea froth
 
ஈ. வடமேற்குக் கடற்கரையில் விளையும் அறுவகைச் சரக்குகள்
 
1. கோதளங்காய்: fruit of common Indian rak
2. கடுக்காய்: gallnut
3. சீயக்காய்: soap pad
4. பொன்னங்காய்: soap-nut
5. தேற்றான்கொட்டை: water clearing nut
6. வலம்புரிக்காய்: Indian sarew tree (right)
 
உ. உள்ளூரின் (நமது நாட்டின்) அறுவகைச் சரக்குகள்
 
1. சவுரிப்பழம்: shavari fruit
2. தூதளம்பழம்: fruit of prickly shoonday
3. பிரண்டைப்பழம்: cissus fruit
4. கண்டங்கத்திரிப்பழம்: fruit of prickly birinjal
5. கோவைப்பழம்: red bitter-melon fruit
6. இந்திரகோபப்பூச்சி: leady's fly  
 
மேலேயுள்ளவை நீரின்றியோ, நீர்வற்றியோ, கிடைத்த இயற்பொருட்கள். வறட்டி என்பது வைக்கோலும் உலர்சாணமுங் சேர்ந்த கலவை.  வறுவல்- வினையையும் பெயரையும் குறிக்கும். வறல், வறழ், வறள், வறை எல்லாம் வறுத்தலிற் பிறந்த சொற்கள். ஈரமண்ணிற் செய்து உலரக் காயவைத்துச் சுட்ட கலமே வறையாகும். அது வெறுங்கலமல்ல. சுட்ட கலம். சுடாக் கலம் விலைக்கு வாராது; பயனுக்குமாகாது. ஆங்கிலத்திற் கூட ware, சுட்ட கலத்தையே பெரிதுங் குறித்தது. அதனாற்றான் மென்கலன் தவிர்த்து, ஆழ்ந்த சிந்தனையில் வறையில் முடியும் சொவ்வறையைப் பரிந்துரைத்தேன். 
 
[கலன், பொருள் என்பவை இங்கு சரிவராது. குறிப்பாகக் கலன், ”இன்னொரு பொருளைக் கொள்ளும்”வினையையே குறிக்கும். something to contain about. உண்கலன் = உணவிருக்கும் கலன், உண்ணப் பயன்படும் கலன்.  மின்கலன் = மின்வேதி இருக்கும் கலன், மின்னாக்கும் கலன்.  மட்கலன் = மண்ணாலான கலன். செப்புக்கலன் = செம்பாலான கலன். (பல்வேறு மாழைக் கலன்கள் உண்டு.) எனவே கலன் என்பது கொள்வினையையே குறிக்கிறது.  ware அப்படியிருக்கத் தேவையில்லை.  இன்னொரு சொல்லான மென்பொருளில் வரும் ”பொருள்” good ஆ, material ஆ, substance ஆ? தெரியாது.  தவிர, 2500 ஆண்டுகளாய் meaning எனும் பொருட்பாட்டையும் “பொருள்” சுமந்துவருகிறது. I don't know why do we have information overload on the word "பொருள்"?]
 
என்னுடைய ஒரு பதிவின் பின்னூட்டில், திரு. ஆறுமுகத் தமிழன், “வறை என்பது சுட்ட கலம் என்று நீங்கள் சொன்னதைக் கண்டபிறகுதான்
 
’ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே
   உதிரப்புனலில் உண்டை சேர்த்து
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
   வறையோட்டுக்கும் ஆகாதென்று ஆடு பாம்பே’
 
என்ற பாட்டில் வருகிற வறையோடு என்ற பதத்தின் பொருள் அடியோடு புரிந்தது” என்று கூறினார்.
 
வறை என்பது சித்தர் பாடலில் மட்டுமல்ல. ”நெய் கனிந்து வறையார்ப்ப” என்பதால், மதுரைக்காஞ்சி 756 -இல், ”நெய் போட்டு வறுக்கும் செயல்”  உணர்த்தப் படுகிறது. வறைமுறுகல் = அளவிற்கு மீறிக் கருகியது (”அது வறைமுறுகலாகையிலே பின்பு தவிர்த்தது” ஈடு 6.5.12) வறையல் என்ற சொல் திருவிளையாடற் புராணத்தில் வறையைக் குறித்திருக்கிறது.  வறையோடு -  பொரிக்கும் சட்டி/கலத்தைக் குறித்தது.  தென்பாண்டியிற் சருகச் சட்டி > சருவச் செட்டி என்பது (சருகுதலை நினையுங்கள்) frying pan ஐயே குறிக்கும். 
 
இங்கெல்லாம் வறையும் ware-உம் வேறுபடுகிறதா?  இல்லையே?  சரியாய்ப் பொருந்தாத ”கலத்தை” நாம் ஏற்போம்,  முற்றும் பொருந்தும் வறையை ஏற்கமாட்டோமா?  சரக்கு, கண்டம், சுண்டல், பண்டம், போன்ற சொற்களுக்கு எத்துணை ஏற்புண்டோ, அத்துணை ஏற்பு வறைக்கும் உண்டே? ”மற்றதெலாம் கொண்டு, வறைமட்டும் கொள்ளோமா?” அதுவென்ன பித்துக்குளித்தனம்?  ஒருகண்ணில் வெண்ணெய், இன்னொன்றிற் சுண்ணமா?  ”ஓ.,.பாழாய்ப் போன ஆங்கிலவொலி உள்ளே வந்து தொனிக்கிறதோ?” அந்த நாளில் எங்கள் கோவை நுட்பியற் கல்லூரி விடுதியில், புதிதாய்ச் சேர்ந்த நாட்டுப்புற இளைஞன் ஒருவன் வேளாண்மை மரபு பொருந்திய தன் தகப்பனை தன்னோடு படிக்கும் நண்பருக்கு அறிமுகஞ் செய்ய வெட்கி, ஒதுக்கிவைத்த மடமை எனக்கு நினைவிற்கு வருகிறது.
 
ஒலியொப்பீடு மட்டுமே நான் பார்ப்பதாய்ப் பரப்புரைக்கும் மெத்தப்படித்த மேதாவிகளே!  தொனி பார்க்காது, ஆழம் போய் வேர்ப்பொருளைக் காணுங்கள்.  ”எந்த ஆங்கிலச்சொல் ஊடே தொனிக்கிறது? அதைத் தவிர்க்க வேண்டுமே?” என்று குத்திக் கிளறுவது என் வேலையில்லை.  தொனித்தாற்றான் என்ன குறை? தமிழன்னை தவித்துப்போவாளா? தடுக்கிவிழுவாளா? தமிழ்ப்பொருள் உள்ளிருந்தால் எனக்குப் போதும்.
 
present- ற்கு இணையாய்ப் ”பரத்துதல்” தோன்றினால் தீண்டத் தகாததோ? "இராம.கி சொன்னானா? போட்டுச்சாத்து” என்ற முனைப்புடன் ”பரத்தீடு” கேட்டுக் கிடுகிப் பரந்த நண்பர், ஒரு பரிமானப் பார்வையிற் சாடாமல், பல்வேறு நாட்டுப் புறங்களையும் சற்று நுணுகி அறியலாமே? பரத்தியிடுதல் ஒப்பொலியா? தமிழன் பரத்தி இட்டதே இல்லையா? பரத்தும் வினை நெல்வயல், உப்புவயல்களில் உண்டு. நெற்களத்திற் பரம்புக் கட்டை என்றும், உப்பளத்திற் பரத்துக் கட்டை என்றுஞ் சொல்லுவர். அதற்குப் பரவுக் கட்டை> பலுவுக் கட்டை> பலுகுக் கட்டை என்ற பெயரும் உண்டு. பலுகுக் கட்டையை ஓரோவழி மொழுக்கு மரம் என்பர். [இச்சொற்களை உப்பளத்திலும், களத்துமேட்டிலும் நானே கேட்டிருக்கிறேன். எங்கள் உரச்சாலை யூரியாப் பரற் கோபுரத்தின் - Urea prill tower - அடியில் விளவப் படுகையில் (fluid bed) கட்டிகளை வெளிக்கிட்டிக் குருணைகளைப் (granular particles) பரப்பப் பரத்துக்கட்டையைப் பயன்படுத்தியும் இருக்கிறேன்.]
 
முகன்மை வாசகங்களை, படங்களை, கருத்துக்களை, விழியங்களை(videos)ப் பரத்திக் காட்டி விளக்குவதைப் பரத்தீடு என்று சொல்லக் கூடாதா? 
இங்கு தமிழ் முகன்மையா? இல்லை, மாக்சுமுல்லர், ஜோன்சின் தேற்றம்/கருதுகோள் முகன்மையா? 19 ஆம் நூற்றாண்டுத் தேற்றத்தைத் தலைமேற் சுமந்து பணிவோடு காப்பாற்ற, எம் நாட்டு நடைமுறை தவிர்க்க வேண்டுமா? நேரே தொடவேண்டிய மூக்கைச் சுற்றிவளைத்துத் தொடவேண்டுமா? நாம் எங்கே போகிறோம்? எனக்குப் புரியவில்லை.
 
ஈடு என்ற சொல் இடுதல் வினையினடிப் பெயராய் எழும். [விதப்பாக, விண்ணவர் (வைணவர்) வழக்கில், ஈட்டிற்குப் பல்வேறு விளக்கமுண்டு. ஈடு = கவசம் என்பது ஒரு பொருள், இடுதல் = எழுதுதல் என்ற அளவில், நம்பிள்ளை பேசியதை வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதிவைத்ததால், ஈடு என்று மணிப்பவள ‘வியாக்கியானத்தை’ச் சொல்லுவர்; ஈடு = ஒப்பு என்ற பொருளும் உண்டு; இறைவனோடு ஈடுபடச் செய்வதால் ஈடு என்பது இன்னொருவகைப் பொருளும் உண்டு.] இங்கு பரத்தி இடப்பட்டதால் பரத்து ஈடு (=பரத்தீடு) ஆயிற்று. 
 
வறு, வறல், வறள், வறழ் என்ற தொடர்ச்சியில் நூற்றுக் கணக்கான கூட்டுச்சொற்கள் இருக்கின்றன. எல்லாம் சேர்த்து ஆங்கில ஒப்பொலி கருதி, வங்காள விரிகுடாவிற் கொட்டிவிடலாமா? இப்படித்தான், ஒருகாலத்தில் சங்கத ஒப்பீடு பார்த்து ”இது தமிழில்லை, அது தமிழில்லை” என்று ஒதுக்கிய மூடத்தனம் எழுந்தது. இந்தக் காலத்தில் ஆங்கிலவொப்பீடு பார்த்து இன்னும் பல தமிழ்ச்சொற்களைத் தவிர்த்து விட்டால், முடிவில் எங்குபோய் நிற்போம்? ”உள்ளதும் போச்சுடா, தொள்ளைக்காதா.”
 
ஜியார்ச்சு ஆர்வெலின் ”1984” என்ற புதினத்தில் வரும் good, plus good, double plus good, double plus ungood என்பதுபோல் வெறும் 2000, 3000 சொற்களை மட்டும் வைத்து முன்னும், பின்னும் ஒட்டுக்களைப் பிதுக்கியொட்டிச் சரஞ்சரமாய் sausage மொழியாக்கி எதிர்காலத் தமிழ்ச் சொற்களை உருவாக்கலாமா? அப்படித்தானே படித்த மக்கள், வழக்குத்தமிழைப் புத்தாக்கஞ் செய்கிறோம்? பின்னொட்டு மரபு சுற்றரவாய் மாறி, சிறிது சிறிதாய்த் தமிழை முன்னொட்டு மொழியாக்குகிறோமே? [post-modernism பின்நவீனத்துவமாம்:-)))] கூடியமட்டும் பெயர்ச்சொற் சரங்களைத் தவிர்த்தால், அல்லது பெரிதுங் குறைத்தால், தமிழ், செருமன் மொழி மாதிரித் தோற்றம் காட்டாது
 
தமிழ்நடையின் சிக்கலே படித்தோரின் நினைவிற்கு வரும் சாத்தார (இது தான் சாதாரணம் என்ற சொல்லின் தமிழ்மூலம்.) வழக்குச் சொற்களை மட்டுமே வைத்துப் பூசிமெழுகி, இட்டவி கிண்டிய உப்புமா போலப் புரட்டியெடுத்து, புது/பழஞ் சொற்றொகுதியைக் கூட்டிக் கொள்ளாது, துல்லியம் பாராது, விதப்பு நோக்காது, பொதுச்சொற்களோடு முன்னும், பின்னும் ஒட்டுப்பெய்து, குண்டுசட்டிக்குள் குதிரையோட்டுவது தான். மேலைநாட்டுப் புலவுக்கடைகளில் மாலை மாலையாய் ஊன்சரம் தொங்குவது போலத் தமிழ்க் கலைச்சொற்கள் தமிழ்க் கடைகளிற் தொங்கிக் கொண்டிருக்கின்றன:-)))). வாங்கிப் புழங்கத்தான் ஆட்களில்லை.
 
show, exhibit, display, demonstrate, present என எல்லாவற்றையும் ”காட்டலாக்கி”, “ஷொட்டு”க் கொடுத்து ஒட்டுக்கள் பிசைந்து மழுங்க வேண்டியதன் தேவையென்ன? [example என்பதைக் கூடக் காட்டு என்று இக்காலத்திற் சொல்லுகிறோம். அப்புறம் எங்கே காட்டலின் பொருளை அகலப்படுத்துவது?] இவையிடையே பொருட்பாட்டில் வேறுபாடே கிடையாதா? எல்லாம் ஒரே களிமண்ணா? இடம், பொருள், ஏவல் பாராமோ? இவற்றை வேறுபடுத்த வெவ்வேறு சொற்கள் வேண்டாமா? ஆங்கிலம் அறிவுலகில் வெற்றிபெறுவது நுண்ணிய வேறுபாடு காட்டுவதிற்றானே?  தமிழ்நடை அதற்கு ஈடு கொடுக்காதெனில், துல்லிய விதப்புக் காட்டாதெனில், அப்புறம் ஏணிவைத்தாலும் நம் குறிக்கோளை எட்டுவோமோ?
 
அடுத்த பகுதியிற் தொடர்வோம். அதற்கு முன் சொவ்வறையை ஒட்டிய மற்ற வறைச் சொற்களை இங்கு மாதிரிக்குப் பட்டியலிடுகிறேன். இவற்றையெல்லாம் ஒருங்குபடச் சொல்ல நான் அறிந்தவரை மென்பொருள், மென்கலன் போன்றவை வாய்ப்புத் தரா. (ஒருபக்கம் அறைகலன் - furniture - என்று புதிய, ஆனாற் தவறான, முறையிற் சொல்லிக் கொண்டே, இன்னொருபக்கம் மென்கலன் என்றால் பொருந்துமா?) கலைச்சொற்கள் என்பவை துறைசார்ந்து தமிழ்நெறிப்படச் செய்யவேண்டியவை. இதை மறக்கக் கூடாது. பட்டியலுக்கு வருகிறேன்.
 
software = சொவ்வறை, [softness என்பது மென்மையா? கலன்/பொருளோடு சேரும்போது, என்ன பொருளில் மெல்லெனும் பெயரடை (adjective)
அமைகிறது? மெல்லுதல் வினையா? மெலிவு என்பதென்ன? thin, nice, smooth, tender, supple, fleecy, spongy, flexible, pliable, malleable, ductile, tractile, extendable, plastic, mellow - இவற்றிடையே நுணுகிய, அறிவியல் தழுவிய, பொருள் வேறுபாடு தமிழிற் காட்டவேண்டாமா? தமிழ்ச் சொற்களின் துல்லியம், கூர்மை எங்கே? soft - இன் அடிப்படை வறையறையை எங்கேனும் பார்த்தோமா? இராம.கி.யின் முதுகை மத்தளமாக்கிச் சாடுமுன், தமிழில் அடிப்படைச் சொற்களை ஆழப் பார்க்கலாமே? Have we got precision in our choice of words?
 
இன்னும் mass-க்கும் weight-க்கும் வேறுபாடின்றி, நிறை, எடையைக் குழப்பிக் கொள்கிறோமே? volume பற்றிச் சொல்வதிற் கனத்தின் குழப்பம் -  எண்ணிப் பார்த்தோமா? இயற்பு என்ற சொல் தமிழிலுண்டா? கேள்விப்பட்டிருக்கிறீர்களா? (இயல்பு உண்டு) physics ற்கு இணையாய் ”இயற்பியல்” புழங்குகிறோமே? Is it not meaningless? ”இயல்பியலை” முதலிற் பரிந்துரைத்தவன் இன்றைய ”இயற்பியல்” கண்டு வியக்கிறேன். வழக்குத் திரிவு என்பது எண்ணிப் பார்க்க முடியாத நேர்ச்சி போலும். முதற் கோணல் முற்றுங் கோணல். இன்னும் பல சொற்களின் பொருந்தாமையை எடுத்துரைப்பின். விரியும் என்றெண்ணி விடுக்கிறேன். soft-ஐ மட்டும் அடுத்த பகுதியில் நீளச் சொல்கிறேன்.]  
 
hardware = கடுவறை (இது கணி சார்ந்தது மட்டுமல்ல, இரும்புக்கடைச் “சாமான்”களையும் குறிக்கிறது. சாமான் என்ற கடன் சொல்லே எப்படிப் புழக்கத்திற்கு வந்தது? உரிய தமிழ்ச்சொல்லை நாம் பயிலாததற்றானே?)
 
shareware = பகிர்வறை, 
firmware = நிறுவறை (கணியாக்கர் நிறுவிய சொவ்வறைகள்)
freeware = பரிவறை, (பரிக்கு விளக்கம் வேண்டில் என் வலைப்பதிவிற்குப் போங்கள்.)
free software = பரிச் சொவ்வறை,
licensed software = உரி(ம)ச் சொவ்வறை
office software = அலுவச் சொவ்வறை
spyware = உளவறை (உளத்தல் = தோண்டியெடுத்தல். உளத்தலின் திரிவு உழத்தல். உழவும் போது நிலத்திற் தோண்டிக் கீறுகிறோம். இங்கே 
செய்தி, புலனங்களை, நம்மிடமிருந்து உளந்தெடுக்கிறார்.)
anti-spyware = உளவு ஒழிவறை (எதிர் என்ற முன்னொட்டுப் போடாது, ஒழி வினையாய்க் காட்டுவது தமிழ்நடைக்கு உகந்தது.) 
open source software = திறவூற்றுச் சொவ்வறை
pirated software = பறியாண்ட சொவ்வறை. 
warehouse = வறைக்கூடம் (இது சொவ்வறை பற்றி மட்டுமல்ல. எல்லாத் தொழிலங்கள், சேகரங்கள் போன்றவற்றிலிருக்கும் “வறைகள்
சேர்ந்துகிடக்கும் கூடம்”. மின்சாரத்திற் சாரம் போனது மாதிரி, தொழில்நுட்பத்தில் தொழிலைப் போக்கி நுட்பியல் ஆக்கியது மாதிரி, அலுவலகம், தொழிலகம் போன்ற சொற்களில் ”க” என்பது மறையவேண்டும்.)
data warehousing software = .தரவு வறைக்கூடச் சொவ்வறை  
 
வறையை வைத்து இப்படிப் பல்வேறு படியாக்கங்களை (applications) எளிதில் ஆளமுடியும்.
 
அன்புடன்,
இராம.கி.

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Nov 1, 2012, 5:31:34 AM11/1/12
to tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com, gbin...@yahoogroups.com
பிறர் தாக்கும் அல்லது தாங்கும் செ ய்திகளை விடுத்துக் கட்டுரை படைக்கலாமே. அவற்றை அறியாவதவர்கள் அவற்றில் கருத்து செ லுத்திக் கட்டுரை ப் பொருண்மை யில் இருந்து விலகி விடுவார்கள‌ே!  மூன்றாமவர் பார்வை யில் இருந்து  நோ க்குங்கள். அவை தே வை யற்ற குழப்பங்ளை ஏற்படுத்துவதை உணர்வீர்கள். பிறர் கருத்துகளில் ஏற்க வேண்டியவற்றை ஏற்றுக் கொண்டு தள்ள வேண்டியவற்றைப்புறந்துதள்ளி உங்களின் சொல்லாக்கப்பயணம் தடை யின்றிச் செல்ல வேண்டும்.

சொவ்வறை பற்றிய என் கருத்தையும் உங்கள் சிந்தனைக்காகப் பகிர விரும்புகின்றேன்.


வறை என்பது மணவறை பிண வறை என்பது போன்று கருதப்பட்டுப் பொருள் குழப்பம் ஏற்படுத்தும்.

நெய்கனிந்து வறையார்ப்ப (மதுரைக்காஞ்சி-756) என்னும்அடியில் வரும் வறை என்பது வறுவல் அடிப்படையில் பிறந்த சொல்;  பொரிக்கறி யைக் குறிக்கிறது.  அதே நேரம் வறைநாற்றம் என்னும் பொழுது தீய நாற்றத்தைக் குறிக்கிறது. வறையல் என்பது பிண்ணாக்கையும் வறையோடு என்பது குஞ்சு பொரிக்கப் பயன்படுத்தப்படும் சட்டியையும் குறிக்கிறது.
 
உலர்ந்த பண்டம் என்னும் பொருளில் வருமிடத்தைத் தெரிவிக்க வேண்டுகின்றேன். 

எவ்வாறிருப்பினும் கணியம்( சாஃப்ட்வேர்), கருவியம்(ஃஆர்டுவேர்) ஆகியவற்றிற்கு இச் சொல்லைப் பயன்படுத்துவது ஏற்புடைத்தல்ல என நான் எண்ணுகிறேன்.

2012/11/1 iraamaki <iraa...@bsnl.in>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com


iraamaki

unread,
Nov 4, 2012, 4:36:30 AM11/4/12
to tamil...@googlegroups.com
மணவறை, பிணவறை என்று சொல்லிருக்கிறீர்கள். சற்று அதிர்ந்து போனேன். இப்படிக் கூடவா சிந்தனையெழும்? என்னுடைய சிந்தனை மட்டுப்பட்டது போலும்.
 
மணவறை என்ற சொல்லை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். (அது மண அறை. வகரம் புணர்ச்சியால் வருவது. இது கூடத் தெரியாமலா, வறைக்கு விளக்கம் சொல்லப் போவேன்? அறைக்கு முன்னால் எந்த உயிர்மெய் வந்தாலும் உடம்படுமெய் வந்தே தீருமே? நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் புணர்ச்சி பழகுவதையே தமிழில் நிறுத்தவேண்டும் போலும்! இனித் தமிழ் அறிஞர்களிடம் சொல்லுவோம்.)
 
மணவறை என்று எங்கள் ஊர் திருமணத்திலும் சொல்லுவார்கள். மணவறைக்குத் திருமண மண்டபம், பள்ளியறை என்ற பொருட்பாடுகள் அகரமுதலியிலுண்டு. ஒருகாலத்தில் தாலிகட்டுதல் என்னுஞ் சடங்கு எல்லோரும் பார்க்க மண்டபங்களில் நடக்காது; மாறாக, வீட்டின் பூசையறையில் சாமி விளக்கின் முன்னால் சாமி கும்பிட்டு, மணமக்களின் மிக நெருங்கிய சுற்றத்தார் மட்டுமே பார்க்க (4,5 பேர் மட்டுமே பார்க்க, மணமக்களின் மாமன்மார் தாலி எடுத்துக் கொடுக்க - அப்பனுக்கு மரியாதையில்லை; தாய்மாமனுக்குத் தான் மரியாதை.) நடக்கும். அறைக்குள் நடக்கும் இந்தச் சடங்கு இப்பொழுது பலரும் அறிய மண்டபத்தின் மேடையில் நடக்கிறது. இருந்தாலும் இந்தத் தாலி கட்டும் நிகழ்விற்கு மேளம் ஒலிக்கக் கூப்பிடுவதை “மணமக்களை மணவறைக்கு அழைத்து வாருங்கள்” என்று சொல்லியே எங்கள் பக்கம் நடைமுறைப் படுத்துவர். கூர்ந்து கவனிப்போரே, ”மணவறை” என்ற சொல்லாடலின் பொருளை உணர்வர்.
 
பிணவறை நான் கேள்விப் பட்டதில்லை. பொதுவாகப் பிணங்கள் முற்றத்திலேயே ஊர்ப்பக்கம் போடப்படும். இந்தக் கால நகர்ப்புறத்து மருத்துவமனைகளில் உள்ள mortuary பிணவறை என்று சொல்லப் படுவது உண்மைதான். நாட்டுப் புறத்தார் கேட்டறிய மாட்டார். ஆனால் சொவ்வறை என்ற சொற்கேட்டால் மணவறை, பிணவறை என்ற குழப்பங்கள் வரும் என்பது எனக்கு மீமிகுந்த புரிகையாய்த் தோன்றுகிறது. தப்பாகப் புரிந்து கொள்ளத் தாங்கள் முடிவெடுத்த பிறகு நான் உங்களை மாற்ற முடியாது. 
 
நெய்கனிந்து வறையார்ப்ப (மதுரைக்காஞ்சி-756) என்னும் அடியில் வரும் வறை என்பது வறுவல் அடிப்படையில் பிறந்த சொல் - நானும் அப்படித்தானே சொல்லியிருக்கிறேன்? வேறு விளக்கம் தரவில்லையே?
 
வறையோடு என்பதன் பயன்பாட்டைப் பாம்பாட்டிச் சித்தரின் பாட்டைக் கொடுத்து ஆறுமுகத்தமிழன் கூறியதைக் குறித்திருந்தேனே? நீர் வற்றிய செயலையும் பண்டங்கள் பற்றியும் நீளச் சொன்ன பின்னும், சுட்டகலம் என்பதை விளக்கிய பின்னும் நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்றால் மேலும் உங்களுக்கு விளக்கி ஒன்றும் ஆகப் போவதில்லை நீங்கள் தீர்மானித்து விட்டீர்கள். நான் என்ன சொல்ல?
 
வறையோடு என்பது உலர்ந்த பண்டத்தைத்தான் குறிக்கிறது. பாம்பாட்டிச் சித்தரின் பாட்டிற்கு மேல்முறையீடு உண்டா?  (கணி என்ற சொல் வினையையும் பெயரையும் குறிக்க முடியும் என்றால், நடை என்ற சொல் வினையையும், பெயரையும் குறிக்க முடியும் என்றால், வறை என்ற சொல் வினையையும், பெயரையும் குறிக்க முடியும்.) 
 
கணியம், கருவியம் என்று உங்கள் பரிந்துரையைச் சொல்லிருந்தீர்கள். நான் ஏற்கத் தயங்குவேன்.
 
computing software
software computing
computer software
 
என்ற கூட்டுச் சொற்கள் இருக்கின்றன. கணியம் என்ற சொல்லை software க்கு இணையாகப் பயின்றீர்கள் என்றால், ஏற்கனவே computing என்பதற்குக் கணிமை இருக்கும் போது பயன்படுத்துவாருக்குக் குழப்பம் வராதா? (இப்படித்தான் இயக்குநர் என்ற சொல்லை 60, 70 களிற் பரிந்துரைத்தார்கள். நாங்கள் operatorக்கும் directorக்கும் இடையே நெடுங்காலம் தடுமாறிக் கொண்டிருந்தோம். இது போக operating director என்றும் executive director என்றும் உண்டு. இப்பொழுதெல்லாம் குழப்பமில்லாது, நெறியாளர் என்பதை director என்பதற்கும்,  இயக்குநர் என்பதை operatorக்கும் பயன்படுத்துகிறோம். இயக்க நெறியாளர் operating director; செயலூக்க நெறியாளர் - executive director, செயலுக்கா நெறியாளர் - non-executive director. இங்கு செயற்பாட்டு நெறியாளர் என்ற படியாக்கம் தடுமாற்றிவிடும்.)   
 
கணிமைக் கணியம்/கணிமம்
கணிய(ம)க் கணிமை
கணிக் கணியம்/கணிமம் அல்லது கணினிக் கணியம்/கணிமம்
 
என்றெல்லாம் படித்தால் புரியுமோ? இது அதாகுவியலாக (tautology) உங்களுக்குப் படவில்லையா?  தவிர computing என்பதை hardware மூலமும் செய்யமுடியும்; software மூலமும் செய்யமுடியும். analog computing, digital computing என்பவை அப்படித்தான் வேறுபடுகின்றன.  computing என்பதற்கும் software என்பதற்கும் கணித்தல் என்றே சொல் அடிப்படை என்று கொண்டால், அப்புறம் என்ன அளவு உயர்புரிதல் ஏற்படும்? வேறுபாடு காட்டவேண்டாமா?
 
இன்றைய அறிவியற் தமிழின் குறையை என் முதற்கட்டுரையில் விளக்கியிருந்தேனே? இப்படிப் பல்வேறு ஈறுகளை வைத்து கணி என்பதோடு பொருத்திச் சொல்லும் கணியம் போன்ற சொற்களிற் துல்லியம், கூர்மை, விதப்பு, இல்லை ஐயா. நான் பயன்பாட்டின் வழி சொல்லுகிறேன். software என்ற சொல்லையே ஏன் ஆங்கிலத்திற் படைத்தார்கள் என்று ஓர்ந்து பார்த்தீர்களா? அதையும் நீங்கள் செய்வது போல் ஈற்றை மாத்தி compute என்ற வினையடியைக் கொண்டு computitude, computon, computem என்று ஏதோவொன்றை ஆங்கில இலக்கணம் பொருந்தச் சொல்லலாமே? அவன் சொல்லவில்லையே? அது வேலைக்கு ஆகாது என்றுதானே அவன் வேறு சொல் ஏற்படுத்தியிருக்கிறான்? நாம் ஏன் இதை உணரமாட்டேம் என்கிறோம்? இந்த ஈறுகளை வைத்து விளையாடும் போக்கு நம்மை விடாது பிணிக்கிறதே? தமிழ்க் கலைச்சொற்கள் என்றால் எல்லோருக்கும் தெரிந்த சொற்களை வைத்து ஈறுகளை ஒட்டுவது தானா? யம்மும், மம்மும் போட்டால் எல்லாம் உருவாகிவிடுமா? இதுவென்ன பொம்மை விளையாட்டு? இதைத்தானே ”1984” புதினத்திற் சொன்னார்கள்? good, plus good, double plus good, double plus ungood........
 
இனிக் கருவியம் என்ற சொல்லிற்கு வருவோம். மீண்டும் கூர்மை, துல்லியம் விதப்பு என்பதே என் மன்றாட்டு. tool, device, instrument, implement, equipment, hardware என்று எல்லாவற்றிற்கும் கருவியை வைத்து ஈறுகளை மாற்றிச் சொற்களைப் படைப்பீர்களா? அறிவியல் ஏன் ஆங்கிலத்தில் வளர்கிறது தெரியுமா? இத்தனையும் வேறுபடுத்துவதாற்றான். சொல்லீறுகளுக்குள் சிக்கியிருக்கும் நிலையிலிருந்து நாம் வெளியே வந்தாற்றான் அறிவியல் தமிழ் வளரும்.    
 
உங்கள் பின்னூட்டிற்கு நன்றி.
 
அன்புடன்,
இராம.கி.

iraamaki

unread,
Nov 4, 2012, 4:43:28 AM11/4/12
to tamil...@googlegroups.com
மணவறை, பிணவறை என்று சொல்லிருக்கிறீர்கள். சற்று அதிர்ந்து போனேன். இப்படிக் கூடவா சிந்தனையெழும்? என்னுடைய சிந்தனை மட்டுப்பட்டது போலும்.
 
மணவறை என்ற சொல்லை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். (அது மண அறை. வகரம் புணர்ச்சியால் வருவது. இது கூடத் தெரியாமலா, வறைக்கு விளக்கம் சொல்லப் போவேன்? அறைக்கு முன்னால் எந்த உயிர்மெய் வந்தாலும் உடம்படுமெய் வந்தே தீருமே? நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் புணர்ச்சி பழகுவதையே தமிழில் நிறுத்தவேண்டும் போலும்! இனித் தமிழ் அறிஞர்களிடம் சொல்லுவோம்.)
 
மணவறை என்று எங்கள் ஊர் திருமணத்திலும் சொல்லுவார்கள். மணவறைக்குத் திருமண மண்டபம், பள்ளியறை என்ற பொருட்பாடுகள் அகரமுதலியிலுண்டு. ஒருகாலத்தில் தாலிகட்டுதல் என்னுஞ் சடங்கு எல்லோரும் பார்க்க மண்டபங்களில் நடக்காது; மாறாக, வீட்டின் பூசையறையில் சாமி விளக்கின் முன்னால் சாமி கும்பிட்டு, மணமக்களின் மிக நெருங்கிய சுற்றத்தார் மட்டுமே பார்க்க (4,5 பேர் மட்டுமே பார்க்க, மணமக்களின் மாமன்மார் தாலி எடுத்துக் கொடுக்க - அப்பனுக்கு மரியாதையில்லை; தாய்மாமனுக்குத் தான் மரியாதை.) நடக்கும். அறைக்குள் நடக்கும் இந்தச் சடங்கு இப்பொழுது பலரும் அறிய மண்டபத்தின் மேடையில் நடக்கிறது. இருந்தாலும் இந்தத் தாலி கட்டும் நிகழ்விற்கு மேளம் ஒலிக்கக் கூப்பிடுவதை “மணமக்களை மணவறைக்கு அழைத்து வாருங்கள்” என்று சொல்லியே எங்கள் பக்கம் நடைமுறைப் படுத்துவர். கூர்ந்து கவனிப்போரே, ”மணவறை” என்ற சொல்லாடலின் பொருளை உணர்வர்.
 
பிணவறை நான் கேள்விப் பட்டதில்லை. பொதுவாகப் பிணங்கள் முற்றத்திலேயே ஊர்ப்பக்கம் போடப்படும். இந்தக் கால நகர்ப்புறத்து மருத்துவமனைகளில் உள்ள mortuary பிணவறை என்று சொல்லப் படுவது உண்மைதான். நாட்டுப் புறத்தார் கேட்டறிய மாட்டார். ஆனால் சொவ்வறை என்ற சொற்கேட்டால் மணவறை, பிணவறை என்ற குழப்பங்கள் வரும் என்பது எனக்கு மீமிகுந்த புரிகையாய்த் தோன்றுகிறது. தப்பாகப் புரிந்து கொள்ளத் தாங்கள் முடிவெடுத்த பிறகு நான் உங்களை மாற்ற முடியாது. 
 
நெய்கனிந்து வறையார்ப்ப (மதுரைக்காஞ்சி-756) என்னும் அடியில் வரும் வறை என்பது வறுவல் அடிப்படையில் பிறந்த சொல் - நானும் அப்படித்தானே சொல்லியிருக்கிறேன்? வேறு விளக்கம் தரவில்லையே?
 
வறையோடு என்பதன் பயன்பாட்டைப் பாம்பாட்டிச் சித்தரின் பாட்டைக் கொடுத்து ஆறுமுகத்தமிழன் கூறியதைக் குறித்திருந்தேனே? நீர் வற்றிய செயலையும் பண்டங்கள் பற்றியும் நீளச் சொன்ன பின்னும், சுட்டகலம் என்பதை விளக்கிய பின்னும் நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்றால் மேலும் உங்களுக்கு விளக்கி ஒன்றும் ஆகப் போவதில்லை நீங்கள் தீர்மானித்து விட்டீர்கள். நான் என்ன சொல்ல?
 
வறையோடு என்பது உலர்ந்த பண்டத்தைத்தான் குறிக்கிறது. பாம்பாட்டிச் சித்தரின் பாட்டிற்கு மேல்முறையீடு உண்டா?  (கணி என்ற சொல் வினையையும் பெயரையும் குறிக்க முடியும் என்றால், நடை என்ற சொல் வினையையும், பெயரையும் குறிக்க முடியும் என்றால், வறை என்ற சொல் வினையையும், பெயரையும் குறிக்க முடியும்.) 
 
கணியம், கருவியம் என்று உங்கள் பரிந்துரையைச் சொல்லிருந்தீர்கள். நான் ஏற்கத் தயங்குவேன்.
 
computing software
software computing
computer software
 
என்ற கூட்டுச் சொற்கள் இருக்கின்றன. கணியம் என்ற சொல்லை software க்கு இணையாகப் பயின்றீர்கள் என்றால், ஏற்கனவே computing என்பதற்குக் கணிமை இருக்கும் போது பயன்படுத்துவாருக்குக் குழப்பம் வராதா? (இப்படித்தான் இயக்குநர் என்ற சொல்லை 60, 70 களிற் பரிந்துரைத்தார்கள். நாங்கள் operatorக்கும் directorக்கும் இடையே நெடுங்காலம் தடுமாறிக் கொண்டிருந்தோம். இது போக operating director என்றும் executive director என்றும் உண்டு. இப்பொழுதெல்லாம் குழப்பமில்லாது, நெறியாளர் என்பதை director என்பதற்கும்,  இயக்குநர் என்பதை operatorக்கும் பயன்படுத்துகிறோம். இயக்க நெறியாளர் operating director; செயலூக்க நெறியாளர் - executive director, செயலுக்கா நெறியாளர் - non-executive director. இங்கு செயற்பாட்டு நெறியாளர் என்ற படியாக்கம் தடுமாற்றிவிடும்.)   
 
கணிமைக் கணியம்/கணிமம்
கணிய(ம)க் கணிமை
கணிக் கணியம்/கணிமம் அல்லது கணினிக் கணியம்/கணிமம்
 
என்றெல்லாம் படித்தால் புரியுமோ? இது அதாகுவியலாக (tautology) உங்களுக்குப் படவில்லையா?  தவிர computing என்பதை hardware மூலமும் செய்யமுடியும்; software மூலமும் செய்யமுடியும். analog computing, digital computing என்பவை அப்படித்தான் வேறுபடுகின்றன.  computing என்பதற்கும் software என்பதற்கும் கணித்தல் என்றே சொல் அடிப்படை என்று கொண்டால், அப்புறம் என்ன அளவு உயர்புரிதல் ஏற்படும்? வேறுபாடு காட்டவேண்டாமா?
 
இன்றைய அறிவியற் தமிழின் குறையை என் முதற்கட்டுரையில் விளக்கியிருந்தேனே? இப்படிப் பல்வேறு ஈறுகளை வைத்து கணி என்பதோடு பொருத்திச் சொல்லும் கணியம் போன்ற சொற்களிற் துல்லியம், கூர்மை, விதப்பு, இல்லை ஐயா. நான் பயன்பாட்டின் வழி சொல்லுகிறேன். software என்ற சொல்லையே ஏன் ஆங்கிலத்திற் படைத்தார்கள் என்று ஓர்ந்து பார்த்தீர்களா? அதையும் நீங்கள் செய்வது போல் ஈற்றை மாத்தி compute என்ற வினையடியைக் கொண்டு computitude, computon, computem என்று ஏதோவொன்றை ஆங்கில இலக்கணம் பொருந்தச் சொல்லலாமே? அவன் சொல்லவில்லையே? அது வேலைக்கு ஆகாது என்றுதானே அவன் வேறு சொல் ஏற்படுத்தியிருக்கிறான்? நாம் ஏன் இதை உணரமாட்டேம் என்கிறோம்? இந்த ஈறுகளை வைத்து விளையாடும் போக்கு நம்மை விடாது பிணிக்கிறதே? தமிழ்க் கலைச்சொற்கள் என்றால் எல்லோருக்கும் தெரிந்த சொற்களை வைத்து ஈறுகளை ஒட்டுவது தானா? யம்மும், மம்மும் போட்டால் எல்லாம் உருவாகிவிடுமா? இதுவென்ன பொம்மை விளையாட்டு? இதைத்தானே ”1984” புதினத்திற் சொன்னார்கள்? good, plus good, double plus good, double plus ungood........
 
இனிக் கருவியம் என்ற சொல்லிற்கு வருவோம். மீண்டும் கூர்மை, துல்லியம் விதப்பு என்பதே என் மன்றாட்டு. tool, device, instrument, implement, equipment, hardware என்று எல்லாவற்றிற்கும் கருவியை வைத்து ஈறுகளை மாற்றிச் சொற்களைப் படைப்பீர்களா? அறிவியல் ஏன் ஆங்கிலத்தில் வளர்கிறது தெரியுமா? இத்தனையும் வேறுபடுத்துவதாற்றான். சொல்லீறுகளுக்குள் சிக்கியிருக்கும் நிலையிலிருந்து நாம் வெளியே வந்தாற்றான் அறிவியல் தமிழ் வளரும்.    
 
உங்கள் பின்னூட்டிற்கு நன்றி.
 
அன்புடன்,
இராம.கி.
Sent: Thursday, November 01, 2012 3:01 PM
Subject: Re: [தமிழ் மன்றம்] சொவ்வறை -1

வேந்தன் அரசு

unread,
Nov 4, 2012, 2:53:38 PM11/4/12
to tamil...@googlegroups.com
கலன், பொருள் என்பவை இங்கு சரிவராது. குறிப்பாகக் கலன், ”இன்னொரு பொருளைக் கொள்ளும்”வினையையே குறிக்கும். something to contain about. உண்கலன் = உணவிருக்கும் கலன், உண்ணப் பயன்படும் கலன்.  மின்கலன் = மின்வேதி இருக்கும் கலன், மின்னாக்கும் கலன்.  மட்கலன் = மண்ணாலான கலன். செப்புக்கலன் = செம்பாலான கலன். (பல்வேறு மாழைக் கலன்கள் உண்டு.) எனவே கலன் என்பது கொள்வினையையே குறிக்கிறது.  ware அப்படியிருக்கத் தேவையில்லை.  இன்னொரு சொல்லான மென்பொருளில் வரும் ”பொருள்” good ஆ, material ஆ, substance ஆ? தெரியாது.  தவிர, 2500 ஆண்டுகளாய் meaning எனும் பொருட்பாட்டையும் “பொருள்” சுமந்துவருகிறது. I don't know why do we have information overload on the word "பொருள்"?]

இராம்கி ஐயா

நீங்க கலம் என்பதை கலன் என்கிறீர்கள். 

கலம்செய்கோவே என்று அவ்வை பாடுவார். கலம் வேறு கலன் வேறு.  ஈற்றுப்போலியாக கலம் கலன் ஆகலாம். ஆனால் கொதிகலம், மின்கலம் என்பது சரி. கொதிகலன், மின் கலன் அறியாமையால் இடும் பெயர்கள்

அணிகலன் படைக்கலன் எனும் சொற்களில் வரும் கலன் என்ற பொருளில் மென்கலன்,

சங்க இலக்கியங்களில் கப்பலை கலன் என்றாலும், கலம் அணிகளை குறிக்குமாறு வரும் இடங்களை நான் கண்ணுற்றது இல்லை.

கலன் காண் படலம்


நல்குவது என் இனி? நங்கை கொங்கையைப்

புல்கிய பூணும், அக் கொங்கை போன்றன;

அல்குலின் அணிகளும், அல்குல் ஆயின;

பல் கலன் பிறவும், அப் படிவம் ஆனவே. 


விலங்கு எழில் தோளினாய், வினையினேனும், இவ்

இலங்கு வில் கரத்திலும், இருக்கவே, அவள்

கலன் கழித்தனள்; இது, கற்பு மேவிய

பொலன் குழைத் தெரிவையர் புரிந்துளோர்கள் யார்?




--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

திருவள்ளுவன் இலக்குவனார்

unread,
Nov 4, 2012, 5:26:16 PM11/4/12
to tamil...@googlegroups.com
புதிய சொற்கள் பலவற்றை ப் புனைகிறீர்கள் என்பதற்காக  உங்கள் கருத்து மட்டுமே சரியானவை என எண்ணும்  உங்களிடம்,

< தப்பாகப் புரிந்து கொள்ளத் தாங்கள் முடிவெடுத்த பிறகு நான் உங்களை மாற்ற முடியாது.   >
என்றெல்லாம் எழுதும் உங்களிடம்
விளக்கி என் நேரத்தை  வீணடிக்க விரும்பவில்லை.
என்றாலும் ஒன்றை மட் டும் குறிப்பிடுகின்றேன்.
ஆப்பரே ட்டர் - இயக்கியர் என்பதே சரி.

2012/11/5 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

iraamaki

unread,
Nov 6, 2012, 12:36:41 AM11/6/12
to tamil...@googlegroups.com
நண்பரே!
 
நானறிந்த வரை கலமும், கலனும் ஒன்றுதான். தமிழிற் பொருள்வேறுபாடு கிடையாது. அகரமுதலியில் அப்படித்தான் இருக்கிறது. மகரமும் னகரமும் பல சொற்களிற் போலிகள். இது போல வளம்/வளன், நலம்/நலன், நிலம்/நிலன், களம்/களன் எனப் பலவற்றைச் சொல்லலாம்.
 
கு.அரசேந்திரனின் “உலகம் பரவிய தமிழின் வேர் கல் -பகுதி 4” பாருங்கள். விவரமாகக் கலம்/கலன் பற்றிச் சொல்லுவார். நான் அவற்றை இங்கு கண்ணித்துப் (scan) போடவில்லை.  இந்தப் பொருட்பாடுகள் கல்லுதல் என்னும் துளைப்பொருள் வினையிற் தொடங்கிப் படைக்கலம், அணிகலன் போன்றவற்றிற்கும் ஆயின. அவர் நூலைப் படித்து விவரம் அறிந்தே கூறுகிறேன்.  மென்கலன்/மென்கலம் என்பதை ஏற்கத் தயங்குமுன் பல்வேறு ஆசிரியர்களைப் படித்தேன்.
 
அன்புடன்,
இராம.கி.
 
   

Sent: Monday, November 05, 2012 1:23 AM
Subject: Re: [தமிழ் மன்றம்] சொவ்வறை -1

iraamaki

unread,
Nov 6, 2012, 1:03:22 AM11/6/12
to tamil...@googlegroups.com
நண்பரே!
 
கோபப் பட்டுக்கொண்டீர்கள். அது தேவையில்லை. உங்கள் மேல் முழுமதிப்பும், கனிவும் கொண்டவன் நான். ”தப்பாகப் புரிந்துகொள்ள தாங்கள் முடிவெடுத்த பிறகு நான் உங்களை மாற்றமுடியாது” என்று இயல்பாகத்தான் சொன்னேன். அதில் எந்த உள்ளருத்தமும் கிடையாது. We agree to disagree. இதிற் தவறென்ன? ஒன்றைப் பற்றி இருவேறுபட்ட கருத்துக்கள் இருவர் கொள்ளக்கூடாதா, என்ன? அதைத்தான் சொன்னேன். என்னோடு பேசுவது வீண் என்று நீங்கள் எண்ணவேண்டியதில்லை. இருந்தாலும் ”இந்தப் புலனத்தில் அவரவர் நிலைப்பாடு அவரவருக்கு” என்று அமைவோமே? அதுவே நல்லது. இருவரும் கையைக் குலுக்கிக் கொள்வோம்.
 
இயக்கியர் என்பதும் இயக்குநர் என்பதும் ஒரே பொருள என்றே நான் புரிந்திருக்கிறேன். இயர், நர் என்ற இரு ஈறுகளின் வேறுபாடு இங்கு பொருளை வேறுபடுத்தித் தரவில்லை.  இயக்குதல் என்ற வினைப்பொருள் இரு பெயர்ச்சொற்களின் அடியிலும் இருக்கிறது.   
 
அன்புடன்,
இராம.கி. 

Sent: Monday, November 05, 2012 3:56 AM
Subject: Re: [தமிழ் மன்றம்] சொவ்வறை -1

புதிய சொற்கள் பலவற்றை ப் புனைகிறீர்கள் என்பதற்காக  உங்கள் கருத்து மட்டுமே சரியானவை என எண்ணும்  உங்களிடம்,
< தப்பாகப் புரிந்து கொள்ளத் தாங்கள் முடிவெடுத்த பிறகு நான் உங்களை மாற்ற முடியாது.   >
என்றெல்லாம் எழுதும் உங்களிடம்
விளக்கி என் நேரத்தை  வீணடிக்க விரும்பவில்லை.
என்றாலும் ஒன்றை மட் டும் குறிப்பிடுகின்றேன்.
ஆப்பரே ட்டர் - இயக்கியர் என்பதே சரி.
 


Mohamed Haneef

unread,
Dec 9, 2012, 2:08:11 PM12/9/12
to tamil...@googlegroups.com
அன்புடன் திருவள்ளுவன் இலக்குவனார்,

        நான் உங்களுடன் உரையாடுவது இது முதற்தடவையாக இருக்கலாம். ஆனால் உங்கள் உரையாடல்களை, உங்கள் பின்னூட்டங்களை, உங்கள் (வெட்டி ஒட்டல்) கட்டுரைகளை பலவிடங்களில் பார்த்துள்ளேன். தமிழ் கலைச்சொற்கள் தொடர்பில் தன்னிச்சையாக (எவருமே ஏற்காத, எவருமே பயன்படுத்தாத) பல சொற்களை வலைப்பதிவு பின்னூட்டங்களில் பரிந்துரைத்து (பரிந்துரையென்றும் சொல்லவியலாது, புகுத்த முனைந்து) வருவதனையும் இணையவெளியில் காணக்கிடைக்கின்றன. ஆனால் கொடுமை என்னவென்றால் உங்கள் பரிந்துரைகளை எவரும் ஏற்பதில்லை. தமிழ் இணையவுலகம் ஏற்கும் வகையான சொற்களும் உங்கள் பரிந்துரைகளில் ஒன்றேனும் இல்லை.

அதனைத் தவிர ஆங்காங்கே காணப்படும் பல கட்டுரைகளை வெட்டி உங்கள் வலைத்தளத்தில் ஏனைய குழுமங்களிலும் வெட்டி ஒட்டி வருவதனைத் தவிர வேறெந்த பாராட்டத்தக்க சொந்த இடுகைகளும் காண்பதிற்கில்லை. 

பின்னூட்டங்களின் "நன்றி" எனும் ஒரு வார்த்தையை இட்டுவிட்டு அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! / என பின்னூட்டங்களை காணும் போது எரிச்சலும் பட்டதும் உண்டு. கூடவே உங்கள் வெட்டி ஒட்டல் பதிவுகளுக்கான பின்வரும் பதிவுகளைக் காண்க:
http://semmozhichutar.com விளம்பரமும் செய்துக்கொள்வதனையும் பார்த்து நகர்ந்து விடுவதும் உண்டு. 
இதுதான் நான் இதுவரை உங்களிடம் பார்க்க கிடைத்த தமிழ் பணி.

ஆனால் இன்று இணையத்தில் புழங்கும் நூற்றுக்கணக்கான இனிய தமிழ் கலைச்சொற்கள் இராம.கி ஐயாவினால் உருவாக்கப்பட்டவைகள் ஆகும். இராம.கி ஐயாவின் பதிவுகளில் பல ஆய்வுகளின் அடிப்படையில் எவராலும் செய்யவியலாது/செய்யப்படாத பொக்கிசங்களாக இருப்பதனையும்  நாம் பார்த்துவருகின்றோம். மேலும் இராம கி ஐயா பரிந்துரைக்கும் சொற்கள் எவற்றையும் அவர் எங்கும் (தளங்களுக்கு சென்று உங்களைப் போன்று) புகுத்த முனைவதும் இல்லை. அவை காலத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்டு நிலைத்து நிற்கின்றன.

தயவுசெய்து இவரை குழப்பும் வகையில் உங்கள் உரையாடல்களை முன்வைக்காதீர்கள். மேலும் //அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.மேலும் போன்ற பச்சிலம்பாலகச் செயல்களையும் தொடராதீர்கள்.

 நன்றி!

Mohamed Haneef

unread,
Dec 9, 2012, 2:19:45 PM12/9/12
to tamil...@googlegroups.com
இலக்குவனார் திருவள்ளுவன் உங்களை நினைக்கவும் இந்த வரிகள் மனதில் வந்தன; நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி!
 
அடிக்கும் காற்றில் துரும்புகள் சிலநேரம் மலைமுகட்டின் மேல் பறக்குமாம்
அப்போது மலைகளை விடவும் துரும்புகள் உயரமானதாக கர்வம் கொள்ளுமாம். - ஆனால் மலைகள்
  அப்படியே அசையால் நிமிர்ந்திருக்க 
   ஆடி அல்லாடி துரும்புகள மீண்டும் தரையில் விழுமாம்

Mohamed Haneef

unread,
Dec 9, 2012, 2:20:23 PM12/9/12
to tamil...@googlegroups.com


2012/12/10 Mohamed Haneef <mhan...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages