நக்கீரரின் நடைப்பயணம்

723 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Feb 25, 2013, 9:34:34 AM2/25/13
to tamil...@googlegroups.com
அன்புடையீர்,
வணக்கம். நான் மின் தமிழில் சங்க இலக்கியம் - படவிளக்க உரை என்ற தலைப்பில் அகநானூற்றுப் பாடல்களுக்கு எழுதிக்கொண்டு வரும் படவிளக்க உரைகளைப் போல (illustrated commentary). தமிழ் மன்றத்தில், நக்கீரரின் நடைப்பயணம்' என்ற கட்டுரைத் தொடர் எழுத விரும்புகிறேன். முதலில் நெடுநல்வாடை பற்றிய ஒரு முன்னுரை. நெடுநல்வாடை என்பது சங்க இலக்கியங்களுள் ஒன்றான பத்துப்பாட்டு என்ற நூல்தொகுப்பில் உள்ள ஒரு பாடல். 
 

நெடுநல்வாடை

 

 

நீண்ட நல்ல வாடை என்ற பொருள் கொண்ட தலைப்பிலுள்ள இப்பாடலை மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர் என்பவர் பாடியுள்ளார். இப் பாடலின் தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன் என்பர். நக்கீரர் என்ற பெயருடைய புலவர் பலர் பலகாலத்தும் இருந்திருக்கின்றனர். திருமுருகாற்றுப்படையின் ஆசிரியரான நக்கீரர் என்பவரும் இவரே என்ற கருத்து உள்ளது. இவரது இயற்பெயர் கீரன் என்றும், மரியாதை ஒட்டாக நல்' என்ற முன்னொட்டுடன் நல்+கீரர் என்று கொண்டு, அதுவே நக்கீரர் என்றானது என்றும் கூறுவர். இவரது தந்தை மதுரையைச் சேர்ந்த கணக்காயனார் என்பவர். கணக்காயனார் என்பதற்கு ஆசிரியர் என்று பொருள். நெடுஞ்செழியன் என்ற பெயரில் பல மன்னர்கள் இருந்திருக்கின்றனர். மதுரைக்காஞ்சியின் தலைவனான தலையானங்கானத்துச் செருவென்றவன் இவனே என்று கூறுவர்.

இப்பாடல் நெடுஞ்செழியனைப் போற்றிப் பாடப்பட்டது அல்ல. ஒரு கூதிர்காலத்து வாடையில், தலைவனைப் பிரிந்து வாடும், ஒரு மன்னனின் மனைவியான தலைவியின் நிலையையும், அதே நேரத்தில், போர்ப்பாசறையில் இருக்கும் மன்னனின் நிலையையும் கூறுகிறது. இம் மன்னனின் மெய்க்காப்பாளன் தன் வேலின் உச்சியில் வேம்புமாலை-யைக் கட்டியிருந்தான் என்று புலவர் கூறுகிறார். இதை வேண்டுமென்றே புலவர் கூறுகிறாரா அல்லது slip of the tongue என்பார்களே அதுபோல் கைதவறி வந்ததா? கைதவறி வந்திருந்தால் அது புலவருக்கு இழுக்கு. வேண்டுமென்றே கூறியிருந்தால் பாட்டுக்கு இழுக்கு. இதில் என்ன இழுக்கு என்கிறீர்களா? வேம்புமாலை பாண்டிய மன்னர்களுக்கு உரியது. அகப்பாட்டுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர்,

மக்கள் நுதலிய அகனைந் திணையும்

சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர் - தொல் - 1000

என்று கூறியிருக்கிறார். அதாவது, அகப்பாடலின் தலைவனை இன்னார் என்று கூறக்கூடாது. எனவே, இது பொதுவான அகப்பாடலாக ஆகாமல், தனிப்பட்ட ஒரு மன்னனைப் பற்றிய புறப்பாடல் ஆகும் என்பர். எனவே இது விவாதத்திற்குரிய ஒரு தலைப்பாகிவிட்டது. இருப்பினும் பொதுவான ஒரு நிலை எடுத்து, இப் பாடல் ஒரு அகப்புறப்பாடல் என்றும் கூறுவர். பாலையாகிய அகத்தையும், வாகையாகிய புறத்தையும் பாடுவதால் இது அகப்புறம் எனப்படும் என்றும் கூறலாம். எனினும், இதே போன்று, முல்லையாகிய அகத்தையும், வஞ்சியாகிய புறத்தையும் பாடும் முல்லைப்பாட்டையும் அகப்புறம் என்னாமல், அகப்பாட்டு என்றே கூறுகிறோம். எனவே, வேம்பு மாலைதான் கருத்து வேறுபாட்டுக்குரிய பொருள் ஆகிறது. வேம்பு பாண்டிய மன்னனுக்கு உரியதுதான் என்றாலும், எந்தப் பாண்டியன் என்று குறிப்பிடப்படவில்லை. எனவே அவன் பெயர் சுட்டப்பெறவில்லை என்று கொண்டு, இப் பாடல் அகப்பாட்டுதான் என்று கூறுவோரும் உளர். இப் பாடலில் மொத்தமுள்ள 188 அடிகளில், முதல் 168 அடிகள் அகப்பொருளையே சுட்டி நிற்கின்றன. இறுதியில் உள்ள 20 அடிகளே மன்னனைப் பற்றிக் கூறுகின்றன. எப்படியாயினும், சிறந்த அகப்பாடல்களுள் ஒன்றான இப் பாட்டு விவாதத்திற்குரிய பொருளாக ஆனது போகூழே. (போகு+ஊழ்தூபோகூழ்=துரதிர்ஷ்டம், ஆகு+ஊழ்தூஆகூழ்=அதிர்ஷ்டம்)

வாடை என்பது வடக்கிலிருந்து வரும் காற்று. தமிழில் ஒவ்வொரு திசையிலிருந்தும் வரும் காற்றுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. வடக்கத்திக் காற்று வாடை என்றால், தெற்கத்திக் காற்று தென்றல். மேற்கு என்பது குடக்கு எனப்படும். குடக்குக் காற்று கோடை. கிழக்கு என்பது குணக்கு எனப்படும். குணக்குக் காற்று கொண்டல். வாடை கூதிர்காலக் காற்றாகும். கூதிர்காலம் என்பது ஐப்பசி (October middle to November middle)), கார்த்திகை (November middle to December middle) மாதங்களைக் கொண்ட குளிர்காலம். இக் காலத்தில் வடகிழக்குப் பருவக்காற்று தமிழகத்தில் வீசும். மிகுந்த குளிர்கொண்டது. பாடலைப் படிக்கும்போதே தெரிந்துகொள்வீர்கள். இது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது. எனவேதான், வடக்கு நோக்கிய வாசலைக் கொண்ட வீட்டை வாங்குவதற்குச் சிலர் தயங்குவர். இருப்பினும், இவ் வாடையை நல்ல வாடை என்கிறார் புலவர். ஏன் என்பதையும் பின்னர் தெரிந்துகொள்வீர்கள்.

அகத்துறையில் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் என்பது பாலைத் திணையைக் கொண்டது. இதற்கு நேரான புறத்திணை வாகைத்திணை ஆகும். இத் திணைக்குரிய துறைகளில் கூதிர்ப்பாசறை என்ற துறையே முதலில் கூறப்படுகிறது. ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் கொண்ட அடைமழைக் காலத்திலும் மன்னன் போர்மேல் சென்றிருக்கிறான் என்றால் அவனுக்கு ஒரு தவிர்க்க இயலாத காரணம் இருந்திருக்கிறது. எனவே, இப் போர் கடுமையானதாக இருக்கும். அதனால், நீண்ட காலம் இது நடைபெறலாம்.  எனவே, தலைவி-தலைவன் பிரிவும் நீண்டதாக இருக்கும். பிரிவு துயரமானது. ஆற்றாத் துயர் அளிப்பது. எனவே, மீண்டும் அதே கேள்வி. இது எப்படி நல்ல வாடை ஆகும்? பொறுத்திருந்து பாருங்கள்.

இப்பாடலில் உள்ள 188 அடிகளில், 11 உவமைகளே காட்டப்பட்டுள்ளன. உவமைகள் அதிகம் இல்லாமல் காட்சிகளை நேரிடையாக நம் கண் முன் உயிரோவியங்களாகக் காட்டுவதில் நக்கீரர் வல்லவர். இந்த உவமைகளிலும் 7 உவமைகள் அரசியின் படுக்கையறை பற்றிக் கூறும் உள்-அறைக் காட்சிகளே (in door scenes). பெரும்பாலும் வெளிப்புறக் காட்சிகளே (out door scenes) நிறைந்த இப் பாடல், ஒரு தேர்ந்த திரைப்படத்தின் அத்தனை நுணுக்கங்களையும் கொண்டிருக்கிறது. பாடல் முழுவதுமே கண்ணுக்கு விருந்தாகும் காட்சிகளே. It is just a visual delight.

கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, பாடல்கள், ஒலிப்பதிவு, படத்தொகுப்பு என அத்தனை துறைகளிலும் துறைபோகிய ஒரு மிகச் சிறந்த தயாரிப்பாளரால் மிகவும் கவனத்துடனும், கலைநயத்துடனும், கலைநுணுக்கத்துடனும் தயாரிக்கப்பட்ட ஓர் அருமையான திரைப்படத்தைக் காணத் தயாராகுங்கள்.

இதில் ஒவ்வொரு சொல்லும் சுவைத் தேன் மாங்கனி; ஒவ்வோர் அடியும் அடிவேர்ப் பலா; ஒவ்வொரு காட்சியும் கனிநிறை பனிக்கூழ் (fruit salad with icecream); மொத்தத்தில் பாடல் முழுதுமே ஒரு பழத்தோட்டம். அதைக் கண்டு களித்துப் பூரிப்பீர்; மண்டிக் குடித்துக் மகிழ்வீர்; விண்டுரைத்துக் களிப்பீர்.

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

சரி, கட்டுரைத் தொடரின் தலைப்புக்கும், இதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்கிறீர்களா? அதுதான் சொன்னேனே! கட்டுரைத் தொடரின் தலைப்பு, ‘நக்கீரரின் நடைப் பயணம்’. நெடுநல்வாடையின் ஆசிரியர் நக்கீரர். ‘அதனால் என்ன?’ என்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள்.

மேலும் விபரங்கள் மார்ச் 1-ஆம் நாள் வரும். அன்றைய நாளுக்கு அப்புறம் ஒவ்வொரு மாதமும்  5, 10, 15, 20, 25, 30 ஆகிய நாள்களில் இக் கட்டுரைத் தொடரின் பகுதிகள் வெளிவரும் (தொடர் முடியும் வரை!).

வேறு ஏதாவது ஐயங்கள் இருந்தால் தயங்காமல் கேளுங்கள். அவற்றுக்கும் சேர்த்து வெள்ளியன்று மேலும் சில விளக்கங்கள் தருகிறேன்.

நன்றி,

அன்புடன்,

ப.பாண்டியராஜா

iraamaki

unread,
Feb 25, 2013, 10:01:52 AM2/25/13
to tamil...@googlegroups.com
தொடக்கமே அருமை. தொடருங்கள். படிக்கக் காத்திருக்கிறோம்.
 
அன்புடன்,
இராம.கி..

கவியருவி ம. ரமேஷ்

unread,
Feb 25, 2013, 10:09:36 AM2/25/13
to tamil...@googlegroups.com

2013/2/25 iraamaki <iraa...@bsnl.in>

வேம்பு பாண்டிய மன்னனுக்கு உரியதுதான் என்றாலும், எந்தப் பாண்டியன் என்று குறிப்பிடப்படவில்லை. எனவே அவன் பெயர் சுட்டப்பெறவில்லை என்று

தமிழ்க் காதலிலும் நிறுவுகிறார் வ.சுப. மாணிக்கனார் அவர்கள்.


நன்று. தொடருங்கள்.


--


ஏழு  ஜென்மம்

உண்மையோ  பொய்யோ

வா,  இந்தப்  பிறப்பை

புனிதப்  படுத்துவோம் 

Pandiyaraja

unread,
Feb 25, 2013, 10:59:50 AM2/25/13
to tamil...@googlegroups.com
நன்றி, ரமேஷ் அவர்களே!,
நான் வ.சு.ப. அவர்கள் எழுதியுள்ள தமிழ்க்காதல் என்ற நூலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதைப் படித்ததில்லை. வேறு யாருடைய கருத்தைக் கூறினாலும் தவறாமல் அவர் பெயரைக் குறிப்பிட்டுவிடுவேன். I am honest in this, please believe me.
நன்றி,
ப.பாண்டியராஜா

Bala Swaminathan

unread,
Feb 25, 2013, 11:39:10 AM2/25/13
to tamil...@googlegroups.com
போகூழ், ஆகூழ், கூதிர்காலம் - நிறைய கற்றுக்கொண்டேன்.

"... ஒவ்வொரு சொல்லும் சுவைத் தேன் மாங்கனி; ஒவ்வோர் அடியும் அடிவேர்ப் பலா; ஒவ்வொரு காட்சியும் கனிநிறை பனிக்கூழ் (fruit salad with icecream); மொத்தத்தில் பாடல் முழுதுமே ஒரு பழத்தோட்டம்."

நெடுநல்வாடையில் 11 உவமைகள், உங்களின் விளக்கத்தின் தொடக்கத்திலேயே உவமைகள் பொழிகின்றன. நல்லது!
தொடருங்கள், ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நட்புடன்,
பாலா


From: iraamaki <iraa...@bsnl.in>
To: tamil...@googlegroups.com
Sent: Monday, February 25, 2013 10:01 AM
Subject: Re: [தமிழ் மன்றம்] நக்கீரரின் நடைப்பயணம்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 


rajam

unread,
Feb 25, 2013, 12:13:31 PM2/25/13
to tamil...@googlegroups.com
அன்புள்ள முனைவர் பாண்டியராஜா,

வ.சு.ப அவர்களின் "தமிழ்க்காதல்" நூலை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து நீங்கள் படித்தேயாகவேண்டும்! மிக இனிய நூல். நாங்கள் முதுகலை வகுப்பில் படித்த அந்தக் காலத்தில், அந்த நூல் வெளிவந்தபோது ... எங்கள் எல்லாருக்கும் அது "திருக்குறள்/வேத நூல்" போல! அப்புறம், எல்லாரும் கைலாசபதியின் நூலுக்குத் தாவிவிட்டார்கள்! அப்புறம் எல்லாரும் அமேரிக்கரின் ஆய்வுக்குக் கூத்தாடத் தொடங்கிவிட்டார்கள். நம்மைப் போன்ற பழையவர்களே நம்மவர்களின் நல்ல நூல்களை மீட்டெடுக்க வேண்டும். 

பிற பின்னர்.

அன்புடன்,
ராஜம் 



Pandiyaraja

unread,
Feb 25, 2013, 12:32:19 PM2/25/13
to tamil...@googlegroups.com
என்னைப் பொருத்தவரையில் எதிர்பாராத ஓரிடத்தில், சத்தம்போடாமல் பின்னே வந்து, வாய்ச்சொல்லால் கிள்ளிவிட்டால், இனி, திரும்பிப் பார்க்காமல் சொல்லிவிடுவேன், அது அம்மையார் என்று. மிக்க நன்றி, அம்மையீர். அடுத்த முறை, மதுரை செல்லும்போது எப்படியாவது வாங்கிப் படிக்க முயல்கிறேன். சென்னையில் கிடைக்காத நேரம், மதுரையில் போகமாட்டேன் என்கிறது - internet இல்லாமல்.
மீண்டும் மிக்க நன்றி (இது வரப்போகும் 'பிற பின்னருக்கு'),
ப.பாண்டியராஜா

Karuannam Annam

unread,
Feb 25, 2013, 12:48:24 PM2/25/13
to tamil...@googlegroups.com
வணக்கம் அம்மா.
திரு பாண்டியராஜா அவர்களின் நடைப்பயணத்தொடரைப் பின் தொடர்கிறேன்.
அண்மையில் அறிஞர் வ.சுப அவர்களின் தமிழ்க்காதல் தரவிறக்கிப் படித்தேன். அதன் PDF 50MB வருகிறது. கூகுள் குழுமத்தில் 25 MB மட்டுமே அனுப்ப இயலுகிறது. தனி மடலில் அனுப்ப முடியுமென எண்ணுகிறேன். இருவருக்கும் அனுப்புவதற்கு முயல்கிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

2013/2/25 Pandiyaraja <pipi...@gmail.com>

Mani Manivannan

unread,
Feb 25, 2013, 1:00:57 PM2/25/13
to tamil...@googlegroups.com
முழுநூலும் தமிழ் இணையக் கழகத்தின் வலைநூலகத்தில் கிடைக்கிறது.


அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
கொட்டிவாக்கம், தமிழ்நாடு

2013/2/25 Karuannam Annam <karu...@gmail.com>

Karuannam Annam

unread,
Feb 25, 2013, 1:03:47 PM2/25/13
to tamil...@googlegroups.com

தனி மடலிலும் இணக்க முடியவில்லை.

கீழே தொடர்புச்சுட்டி கொடுத்துள்ளேன்
அன்புடன்
சொ.வி



தமிழ்க்காதல் » Open Reading Room

www.openreadingroom.com/.../தமிழ்க்காதல்-வ...Share
Nov 152011. Download தமிழ்க்காதல். November 15, 2011; படைப்புகள், வ.சுப.மாணிக்கம்; Tagged with: வ.சுப. மாணிக்கம் .

2013/2/25 Karuannam Annam <karu...@gmail.com>

rajam

unread,
Feb 25, 2013, 1:09:00 PM2/25/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja
அடடே, சில நாட்களுக்குமுன்தான் இங்கே கலிபோர்னியாவின் குளிரில் நம்ம ஊர் நெடுநல்வாடை பற்றிச் சொல்லலாமே என்று என் வலைத்தளத்தில் சில பதிவுகளை எழுதிவைத்தேன்; பிறகு, புத்தக வேலை காரணமாக அதைத் தள்ளிவைக்கவேண்டி வந்தது. உங்கள் தொடர் பற்றிக் கேட்க மிக்க மகிழ்ச்சி!


ஆ, எத்தனை ஆண்டுகள் இந்த நெடுநல்வாடையை வகுப்பில் விளக்கும் நல்ல இனிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது, தெரியுமா! அதுவும், மதுரைப் பாத்திமா மகளிர் கல்லூரி வளாகத்தில் பல அறைகள் கட்டப்படாத நிலையில் ... திறந்த வெளியில், குடிசை (ஆம், உண்மையாகவே ஓலை வேய்ந்த குடிசை) வகுப்புகளில் ... நெடுநல்வாடையைச் சிறப்புத்தமிழ் மாணவியர்க்கு (உங்கள் துணைவி அங்கே இல்லை, அவர் பொதுத்தமிழ் வகுப்பு மாணவி) அந்த ... "குரூஉத் துளி தூங்க" என்ற வரியை விளக்க உதவியவை வெளியில் நின்ற மரங்களின் இலைகளின் நுனியில் சொட்டியும் சொட்டாமலும் மினுமினுத்த அந்த மழைத்துளிகளே!! 

இப்படியே ஒவ்வொரு வரியையும் நான் சுவைத்தும் விளக்கியும் என் காலம் கழிந்தது. இப்போதும் ஒவ்வொரு செடியும் கொடியும் மரமும் பூவும் மழையும் ... என்னை அந்தக் காலத்துக்கு இட்டுச் செல்வது இயற்கையே! 

******************** 

அந்த "இது அகமா? புறமா? அகப்புறமா?" விவாதம் பற்றி. இது பொருள் இலக்கணம் பற்றிய விவாதம். நம்மவர்களுக்கு வேண்டா விவாதம் மிகவும் பிடிக்கும், இல்லையா? 


1. இலக்கியத்தைச் சுவைக்க வேண்டுமானால் இந்த வகைக் குழப்படி ஆய்வு தேவையில்லை. 


2. இலக்கண ஆய்வில், அது எந்த வகை ஆய்வானாலும் (எழுத்து, சொல், பொருள் என) ஈடுபட்டால், இலக்கியச் சுவையைத் தள்ளி வைக்கவேண்டும். 


3. எப்போதாவது மேற்சொன்ன இரண்டு வகை ஆய்வும் குறுக்கிடவேண்டிய தேவை ஏற்படும். அப்போது மட்டும் அங்கேயும் இங்கேயுமாக எட்டிப் பார்த்தால்  போதும். 

மற்றபடி, அன்புகூர்ந்து இந்த இரண்டுவகை ஆய்வு நிலைகளையும் குறுக்குக் கோடுகளாகக் கருதாமல் இணைகோடுகளாகவே கொண்டு செலுத்துங்கள். 

********************

நெடுநல்வாடையின் உத்தி மிக அழகியது, சிறந்தது, தனித்தன்மை வாய்ந்தது -- அண்டவெளியிலிருந்து தொடங்கி, பல நிலப் பரப்பில் ஊடுருவி, செயற்கைப் படிவங்களைக் கடந்து மீண்டும் அண்ட வெளிக்கே செல்லும் வாடையின் உலாவை மிக அழகாகச் சொல்வது. 
 

இதை நக்கீரரின் "நடைப் பயணம்" என்று கொள்வதைவிட 'வாடையின் உலா' என்று கொள்ள எனக்கு விருப்பம். "ஆடவர் குறுகா அருங்கடிக் காப்பு" உடைய அரண்மனையில் நக்கீரர் நடைப்பயணம் கொண்டிருக்க முடியாது, இல்லையா? 


இடையில் குறுக்கிடும் செயற்கை அமைப்புகள் -- பாண்டியன் அரண்மனை, பாண்டிமாதேவியின் கட்டில் ... இன்ன பிற -- பல வரலாற்று உண்மைகளைப் பொதிந்துவைத்திருக்கின்றன, இல்லையா! 

*********************** 

இந்த அழகியலை உங்கள் பார்வையிலும் தொடர்வேன்! 

அன்புடன்,
ராஜம்



Bala Swaminathan

unread,
Feb 25, 2013, 2:27:44 PM2/25/13
to tamil...@googlegroups.com
முழு நூலினையும் தரவேற்றியுள்ளனர் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வலைத்தளத்தில்:

நட்புடன்,
பாலா


From: Karuannam Annam <karu...@gmail.com>
To: tamil...@googlegroups.com
Sent: Monday, February 25, 2013 12:48 PM
Subject: Re: [தமிழ் மன்றம்] நக்கீரரின் நடைப்பயணம்

Pandiyaraja

unread,
Feb 25, 2013, 2:30:41 PM2/25/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja
ஐயையோ (அய்யய்யோ-வா? நீங்கள் எந்தக் கட்சி?) கொல்லன் பட்டறையில் "ஊசியோ ஊசி". நான் நெடுநல்வாடையைப் பலமுறை படித்திருக்கிறேன். ஆனால், தாங்களோ பலமுறை பாடம் எடுத்திருக்கிறீர்கள். எனவே, நான் எழுதப்போவது தங்களைப்போன்றவர்களுக்காக அல்ல என்பதை முதலிலேயே தெளிவுபடுத்திவிடுகிறேன். 'இளைஞருக்கான பத்துப்பாட்டு' என்ற என் நூலில் (இன்னும் வெளிவரவில்லை) நான் எழுதியுள்ள நெடுநல்வாடைப் பகுதியை 'அனைவருக்குமான நெடுநல்வாடை'-யாக மாற்றி எழுதும் கட்டுரைத் தொடரே இது. சொல்லப்போனால், நான் இங்கு கொடுத்திருக்கும் முன்னுரை, அந்தப் புத்தகத்துக்காக எழுதப்பட்டதுதான். பொதுவாகவே எனக்குச் சொன்னதையே சொல்லப் பிடிக்காது என்பதனால், இத் தொடர் சற்று வேறுபட்டதாகவே இருக்கும்.
>>
அந்த ... "குரூஉத் துளி தூங்க" என்ற வரியை .....
>>
இதை இதனுடன் இணைத்திருக்கும் படத்தில் பாருங்கள்!
 
>>
"ஆடவர் குறுகா அருங்கடிக் காப்பு" உடைய அரண்மனையில் நக்கீரர் நடைப்பயணம் கொண்டிருக்க முடியாது, இல்லையா?
>>
நக்கீரர் நுழையாத இடமா? எப்படி நுழைகிறார் என்று பாருங்கள்!
எனக்குத் தெரிந்ததை நான் சொல்லப்போகிறேன். அப்புறம் எனக்கு என்ன ப ~~~~ ய ~~~~~~ம்?
ப.பாண்டியராஜா
 
kurUuththuLi.jpg

rajam

unread,
Feb 25, 2013, 5:58:03 PM2/25/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja
ஆ, அஆ, எங்கள் முனைவ பாண்டியராசா, 

என் கருத்தை இடைச்செருகலாகக் கீழே காண்க, ஐயனே! ;-) 



On Feb 25, 2013, at 11:30 AM, Pandiyaraja wrote:

ஐயையோ (அய்யய்யோ-வா? நீங்கள் எந்தக் கட்சி?)


தமிழன்னை கட்சி! ;-) 



கொல்லன் பட்டறையில் "ஊசியோ ஊசி".


அச்சச்சோ, தெரியாதையா, அப்ப நான் என் விற்பனையை வேறு பட்டறைக்கு உருட்டுகிறேன் ஐயா! ;-) 



நான் நெடுநல்வாடையைப் பலமுறை படித்திருக்கிறேன். ஆனால், தாங்களோ பலமுறை பாடம் எடுத்திருக்கிறீர்கள். எனவே, நான் எழுதப்போவது தங்களைப்போன்றவர்களுக்காக அல்ல என்பதை முதலிலேயே தெளிவுபடுத்திவிடுகிறேன்.


இது நல்லாருக்கே! நான் படிக்கக்கூடாது என்று தடை செய்கிறீர்களா? இது முறையா?! 



'இளைஞருக்கான பத்துப்பாட்டு' என்ற என் நூலில் (இன்னும் வெளிவரவில்லை) நான் எழுதியுள்ள நெடுநல்வாடைப் பகுதியை 'அனைவருக்குமான நெடுநல்வாடை'-யாக மாற்றி எழுதும் கட்டுரைத் தொடரே இது. சொல்லப்போனால், நான் இங்கு கொடுத்திருக்கும் முன்னுரை, அந்தப் புத்தகத்துக்காக எழுதப்பட்டதுதான். பொதுவாகவே எனக்குச் சொன்னதையே சொல்லப் பிடிக்காது என்பதனால், இத் தொடர் சற்று வேறுபட்டதாகவே இருக்கும். 


நாங்க மட்டும் என்னா அரைச்ச மாவெயேவா அரெக்கிறோம்?! உளவியல், இயற்பியல், வேதியியல், வரலாறு ... இவற்றை இளங்கலை வகுப்புகளில் பாடம் சொல்லும் ஆசிரியர்கள்தான் அப்படிச் செய்வார்கள்! தமிழைச் சரியாகப் புரிந்துகொண்ட ஆசிரியர்கள் அப்படிச் செய்யமாட்டார்களாக்கும்! என் வகுப்புலெ வந்து படிச்சிருஞ்சாதானே தெரிஞ்சிருக்கும்! 


அது கிடக்கட்டும். நாமெல்லாம் அந்தக் காலத்துலெ ... வடக்கு ஆடி வீதிய்லெ போய் உக்காந்து ... எத்தினி வாட்டி அரைச்ச மாவுக் கதெகளெக் கேட்டு ஆகா, ஓகோ-னு தலெயெ ஆட்டியிருக்கோம்! இப்ப ஒங்களுக்கு அதெச் செய்ய முடியலெயா! அச்சச்சோ! 

வேணுமின்னா கட்டளெ போடுங்க -- 'வாயெத் தொறக்காம ஓரமா இரு'-னு.  இருக்க முடியுதா-னு பாக்குறேன்! ;-) 



>>
அந்த ... "குரூஉத் துளி தூங்க" என்ற வரியை .....
>>>
இதை இதனுடன் இணைத்திருக்கும் படத்தில் பாருங்கள்! 


நாங்களும் படம் போடுவோமில்லெ!  (http://viruntu.blogspot.com/2010/10/blog-post_21.html) ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டெ! ;-) 




 
>>
"ஆடவர் குறுகா அருங்கடிக் காப்பு" உடைய அரண்மனையில் நக்கீரர் நடைப்பயணம் கொண்டிருக்க முடியாது, இல்லையா?
>>
நக்கீரர் நுழையாத இடமா? எப்படி நுழைகிறார் என்று பாருங்கள்!
எனக்குத் தெரிந்ததை நான் சொல்லப்போகிறேன். அப்புறம் எனக்கு என்ன ப ~~~~ ய ~~~~~~ம்? 



வூட்டு மாப்பிளெக்கி ... மாமியாகிட்டெ பயமா? ஊர்லெ சிரிக்கப்போறாக! 



ப.பாண்டியராஜா 



கேலிப்பேச்சு நிற்க. அன்புள்ள முனைவ, தங்கள் கட்டுரையைப் படிக்க மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள். ஆர்வத்துடன் படிப்பேன். 
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 
<kurUuththuLi.jpg>

கவியருவி ம. ரமேஷ்

unread,
Feb 25, 2013, 9:27:56 PM2/25/13
to tamil...@googlegroups.com

2013/2/25 Pandiyaraja <pipi...@gmail.com>

நான் வ.சு.ப. அவர்கள் எழுதியுள்ள தமிழ்க்காதல் என்ற நூலைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதைப் படித்ததில்லை. வேறு யாருடைய கருத்தைக் கூறினாலும் தவறாமல் அவர் பெயரைக் குறிப்பிட்டுவிடுவேன். I am honest in this, please believe me.

நான் தவறாக நினைக்க வில்லை... முடிந்தால் படித்துப் பார்க்கவும் என்ற எண்ணத்தில்தான் கருத்து தெரிவித்தேன். நண்பர்கள் தமிழ்க்காதலுக்கான லிங்க் கொடுத்துள்ளார்கள். நல்ல புத்தகம். தங்கள் இத்தொடருக்கும் உதவும். நன்றி.

C.R. Selvakumar

unread,
Feb 25, 2013, 10:03:16 PM2/25/13
to tamil...@googlegroups.com
ஆகா அருமை ஐயா!! அருமை!

"இதில் ஒவ்வொரு சொல்லும் சுவைத் தேன் மாங்கனிஒவ்வோர் அடியும் அடிவேர்ப் பலாஒவ்வொரு காட்சியும் கனிநிறை பனிக்கூழ் (fruit salad with icecream); மொத்தத்தில் பாடல் முழுதுமே ஒரு பழத்தோட்டம். அதைக் கண்டு களித்துப் பூரிப்பீர்மண்டிக் குடித்துக் மகிழ்வீர்விண்டுரைத்துக் களிப்பீர்."

இப்பொழுது மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றோம்!! இப்போ மார்ச்சு 5, 10, 15, 20, 25, 30 கட்டாயம் காத்திருப்போம் ஆவல் பொங்க!

அன்புடன்
செல்வா

2013/2/25 Pandiyaraja <pipi...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

Pandiyaraja

unread,
Feb 25, 2013, 11:50:10 PM2/25/13
to tamil...@googlegroups.com
அன்புடையீர்,
அனைவருக்கும் மிக்க நன்றி. உங்களின் ஆர்வப் பெருக்கைப் பார்க்கும்போது மிகுந்த எச்சரிக்கை உணர்வு கொள்கிறேன். தண்ணீரில் இறங்குமுன் கோலைவிட்டு ஆழம்பார்ப்பது போல்தான் என் முன்னுரையை அமைத்தேன். நான் எதிர்பார்த்ததுக்கு மேலேயே ஆழமாய் இருக்கும்போல் தெரிகிறது.  வெள்ளத்தனைய மலர் நீளவேண்டுமே என்பதுதான் என் இறைவேண்டல்.
அன்புடன்,
ப.பாண்டியராஜா

Pandiyaraja

unread,
Mar 1, 2013, 1:56:10 AM3/1/13
to tamil...@googlegroups.com

 

 

 

அன்புடையீர்,

நடைப்பயணத்துக்குச் சில முன்னேற்பாடுகள் செய்யவேண்டியுள்ளது. ஆங்காங்கே விளக்கிக்கொண்டிருந்தால் பயணத்தின் வேகம் தடைப்படும். எனவே இப்போதைக்குத் தேவையானவற்றைத் தொகுத்துத் தந்திருக்கிறேன். இத் தொகுப்பில் சில படங்களும் (.jpg files) இருக்கின்றன. எல்லாமே சேர்ந்து .doc file-ஆக இருக்கிறது. கட்டுரையையும், படங்களையும் பிரிக்க மனமில்லை. எனவே கட்டுரையையே இணைப்பாக அனுப்பியுள்ளேன். சிலர் அனுப்பும்  மடல்களில் படங்களும் காணப்படுகின்றன. அவ்வாறு அனுப்புவது எப்படி எனத் தெரியவில்லை. அப்படிச் செய்ய முடிந்தால் இவ்வாறு  ஒவ்வொரு முறையும் இணைப்புகள் தேவையில்லை. யாராவது சொல்லுங்கள்.

நன்றி,

பயணம்-01.doc
பயணம்-01.pdf

கவியருவி ம. ரமேஷ்

unread,
Mar 1, 2013, 5:02:02 AM3/1/13
to tamil...@googlegroups.com
நான் இணைத்துள்ளேன் பாருங்கள்... ஆனால் படம் வருமா என்றுதான் தெரியல... தங்களின் மூன்று படங்களையும் நான் Copy & paste செய்திருக்கிறேன். இமேஜாக தங்கள் அனுப்பிய படங்கள் காப்பி ஆக மாட்டேன் என்கிறது. 

பயண முன்னேற்பாடுகள்

கிடை என்றால் என்ன?

நான் பிறந்து வளர்ந்து, படித்தது எல்லாம் தேனி மாவட்டம் (அன்றைய மதுரை மாவட்டம்), சின்னமனூருக்குக் கிழக்கில் சுமார் 5 மைல் தொலைவில் இருக்கும் ஓடைப்பட்டி என்ற சிறிய ஊர். என் பெற்றோர் அங்கு தொடக்கநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர். அந்த ஊரில் ஒக்கலிகக் கவுண்டர் எனப்படும் மக்கள் நிறையப் பேர் உண்டு. அவர்கள் விவசாயப் பெருங்குடி மக்கள்; கடினமான உழைப்பாளிகள். ஆழமாகக் கிணறு தோண்டி, மாடுகள் கொண்ட கமலைகளால் நீர் இறைத்துச் சோளம், கேப்பை, மிளகாய் போன்றவற்றை விளைவிப்பர். ஊருக்கு வெளியில் வானம்பார்த்த பூமியில் காடுகள் இருக்கும். அங்கு நிலக்கடலை, கம்பு, குதிரைவல்லி, சாமை போன்றவற்றை மானாவாரியாகப் பயிர்செய்வர். இந்தத் தோட்ட, காட்டு வெள்ளாமைகளுக்கு உரம் வேண்டுமே! எனவே, பணக்காரர்கள் நூற்றுக்கணக்கில் பசுமாடுகள் வளர்ப்பர். கூடவே ஒன்றிரண்டு முரட்டுக் காளைகளும் இருக்கும். ஊரை ஒட்டிய பகுதியில் மொட்டைச் சுவர் எழுப்பி, அவற்றுக்குள் மாடுகளை அடைத்திருப்பர். இதைத் தொழு என்பர். இத்தனைக்கும் உணவுக்கு எங்கே போவது? எங்கள் ஊருக்குக் கிழக்கே, நீண்ட மலைத்தொடர் உண்டு. எங்கள் பகுதி மலைக்குத் தம்பிரான் ஊற்று மலை என்று பெயர். அதுவே தெற்குப் பக்கம் நீண்டு, மேகமலை, பச்சக்கூமாச்சி மலை, சுருளி மலை என்று நீண்டு குமுளி வரை செல்லும். இந்தப் பசுக்களைப் பராமரிப்போர், அவற்றைக் காலையில் மலைக்கு ஓட்டிச் செல்வர். பகல் முழுக்க அங்கு மேய்ந்துவிட்டு மாலையில் மாடுகள் ஊர் திரும்பும். அவை கழுத்து மணியை ஆட்டி ஒலித்துக்கொண்டு, கூட்டங் கூட்டமாய்ப் புழுதியைக் கிளப்பிக்கொண்டு வருவது கண்கொள்ளாக் காட்சி! ஆனால் ஆண்டு முழுக்க இவ்வாறு நடக்காது. தை முதல் ஆனி முடிய ஆறுமாதங்களுக்கு மாடுகளுக்குத் தினந்தோறும் நடைப்பயணம்தான். பின்னர், ஆடி முதல் மார்கழி முடிய ஆறுமாதங்களுக்கு மாடுகளை மலையிலேயே தங்கவைத்துவிடுவர். முல்லைக் காடுகளில் பயிர்,பச்சை நிறைந்திருக்கும்போது, மாடுகள் அவற்றைத் தாண்டி தினமும் மலைக்குப் போய்வர முடியாதல்லவா! எனவே, மலை ஆறுமாதம் – தொழு ஆறுமாதம் என்பதுவே இந்த மாடுகளின் வாழ்க்கை முறை. இவற்றைப் பராமரிப்போருக்கும் இதே வாழ்க்கைதான். இவ்வாறு மாடுகளை மலையில் தங்கவைத்து வளர்ப்பதைக் கிடைபோடுதல் என்பர்.

பானாள் என்றால் என்ன?

பால் நாள் பானாள் ஆனது. பால் என்றால் நடு, பாதி என்ற பொருள் உண்டு. எனவே, பானாள் என்பது நடுநாள். இதை நள்ளிரவு என்று அகராதிகள் சொல்கின்றன. அரைநாள் என்ற இன்னொரு சொல் உண்டு. இதனை, நடுராத்திரி என்று அகராதிகள் சொல்கின்றன. நடுநாள் என்ற இன்னொரு சொல்லும் உண்டு. இதனை, நண்பகல், நள்ளிரவு என்று அகராதிகள் சொல்கின்றன. பாதி, அரை, நடு எல்லாம் ஒன்றுதானே? ஏனோ நடுநாள் மட்டும் நண்பகலையும் குறிக்குமாம்! ஆனால், ஓர் அரைநாளில் ஞாயிறு தோற்றுவிக்கும் நிழலைப் பற்றி நெடுநல்வாடை பேசுகிறது. நடுராத்திரியில் சூரியன் ஏது? எனவே அரைநாளுக்கும் நள்ளிரவு, நண்பகல் என்று இரண்டு பொருளும் கொள்ளலாம் என்பது நெடுநல்வாடை மூலம் தெரிகிறது. அப்புறம் பானாள் மட்டும் என்ன பாவம் செய்தது? அதனையும் நள்ளிரவு, நண்பகல் என்று சொல்லிவிடலாமே? சங்க இலக்கியங்களில் 41 முறை பானாள் வருகிறது. எல்லா இடங்களிலும் அது நடு இரவையே குறிக்கிறது. எனவே பானாள் என்பது நள்ளிரவு மட்டும்தான் என்று அகராதிகள் கூறுகின்றனவோ? பார்க்கலாம்!!

அன்றைய மதுரை

முதலில் இன்றைய மதுரையைப் பார்ப்போம். மதுரைக்கு நடுநாயகமாக இருப்பது மீனாட்சி அம்மன் கோவில். என்ன கோவில்? மீனாட்சி அம்மன் கோவில். (ஹூம், எல்லாம் காலம்!!) அதென்ன பெருமூச்சு என்கிறீர்களா? இந்தத் தொடர் முடியும்போது தெரியும். கோவிலைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் தெருக்கள் உண்டு. அவை ஆடிவீதி எனப்படும். கிழக்கு ஆடிவீதி, மேற்கு ஆடிவீதி, இவ்வாறாக. இந்த ஆடிவீதிகளை ஒட்டி, வெளிப்புறமாக உயரமான கோட்டை மதில்கள் உண்டு. இந்த மதில்களின் இடையே நான்கு பக்கமும் கோபுர வாசல்கள் உண்டு. ஆனால், கிழக்குப் பக்கத்தில் இரண்டு வாசல்கள் உண்டு. ஒன்று சொக்கநாதருக்கு. அதன் வழியே கொவிலுக்குள் செல்வோர் மிகச் சொற்பம். (ஹூம்…..). அம்மன் சன்னதிக்குச் செல்லும் வாசல் முக்கியமானது. கோட்டைச் சுவரை ஒட்டி, நான்கு பக்கமும் தெருக்கள் உண்டு. அவை சித்திரை வீதிகள். கிழக்குச் சித்திரை வீதி, மேற்குச் சித்திரை வீதி, இவ்வாறாக. அம்மன் சன்னதியிலிருந்து வெளியே சென்றால் சித்திரை வீதியை அடுத்துக் கடைகளுக்குப் பின்னர் வருவது ஆவணிமூல வீதி. அதென்ன ஆவணி மூல வீதி? மூலம் என்பதற்கு original என்ற ஒரு பொருள் உண்டு. கிழக்காவணி மூல வீதியை அடுத்து அம்மன் சன்னதித் தெருவில் ஒரு உயரமான வாயில் உண்டு. உயரம் 20 அடிக்கு மேலேயே இருக்கும். இப்போது மதுரையின் தளம் 10 அடி உயர்ந்திருக்கிறது என்பர். எனவே, அந்த வாயில் கட்டப்பட்ட காலத்தில் அது எவ்வளவு உயரமாக இருந்திருக்கும்?. அதின் பக்கச் சுவரில் ‘இது பாண்டியர் கோட்டை வாயில்’ என்ற கல்வெட்டு உள்ளது. ஆங்கிலேய அரசால் நிறுவப்பட்டது. எனவே, நான்கு ஆவணி மூல வீதிகளுக்குள் அமைந்து இருந்ததுவே அந்தக் கால மதுரை. பிற்காலப் பாண்டியருக்குப் பின்னர், வடநாட்டுப் படையெடுப்புகளால் சிதறிப்போய், சின்னாபின்னமாய்க் கிடந்த மதுரையை மீட்டெடுத்தவர்கள் நாயக்க மன்னர்கள். அவர்கள் சிதிலமடைந்து நின்ற கோட்டைச் சுவர்களை இடித்துவிட்டு, கோட்டைக்கு வெளியிலிருந்த அகழியை நிரப்பி மேடாக்கி வீதிகள் அமைத்தார்கள். இன்றைக்கும், மேலாவணி மூல வீதியை ஒட்டி, மேலப் பாண்டியன் அகில் தெரு என்று ஒன்று உண்டு. இது அகழித் தெரு. நாயக்கர்கள் அகழியினின்றும் வேறுபடுத்திக் காட்ட, இதைப் பாண்டியன் அகழி என்றார்கள். அதை மூடிவிட்டு அகழித்தெரு ஆக்கினார்கள். மேற்குப் பக்கம் இருப்பது மேலப் பாண்டியன் அகில் தெரு. இதே போல் மற்ற பக்கங்களிலும் இருந்த தெருக்கள் இப்போது வெவ்வேறு பெயர்களைச் சுமந்து நிற்கின்றன. பாண்டியன் அகழியைத் தூர்த்து அகலமாக்கியவர்கள் அந்தத் தெருக்களை மாசிவீதி என்றனர். இந்த நான்கு மாசிவீதிகளைச் சுற்றிலும் வெளிப்பக்கம் நாயக்கர்கள் கோட்டை இருந்தது. நாயக்கர்கள் வீழ்ச்சிக்குப் பின்னர், மதுரை ஆங்கிலேயர் வசம் வந்தபின்னர், மதுரையின் கலெக்டர் நாயக்கர் கோட்டைகளை இடித்து, அவற்றின் அகழிகளை மூடித் தெருக்கள் உண்டாக்கினார். இவையே இன்று வெளிவீதி எனப்படுகின்றன. இதைச் செய்தவர்கள் மாரட்டு என்ற வெள்ளைக்காரப் பொறியாளரும், பெருமாள் மேஸ்திரி எனப்படும் கொத்தனாரும் தான். கோட்டைச் சுவர் இருந்த பகுதி தெருக்களாக்கப்பட்டு மாரட்டு வீதி, பெருமாள் மேஸ்திரி வீதி என மதுரையின் நான்கு பக்கங்களிலும் இன்றைக்கும் இருக்கின்றன.

மேலக் கோபுரத் தெருவழியே வெளியே நேரே சென்றால் மேலவெளிவீதிக்கு வருவோம். அதற்கு அப்புறம் மதுரை புகைவண்டி நிலையம் இருக்கிறது. மதுரைக்குப் புகைவண்டித் தடம் போடப்படுவதற்கு முன்னர் மேலக்கோபுரத்தெரு நேராக நிலையத்துக் குறுக்காகச் சென்று வெளியூர்களுக்குப் போகும். புகைவண்டி நிலையத்தை அடுத்து மூலையில் இன்று Madura coats எனப்படும் நூற்பாலை இருக்கிறது. அதனுடைய மூலப் பெயர் ஹார்வி மில்ஸ். இந்த ஆலையை அமைக்க வாணம் தோண்டியபோது அங்கே ரோம நாணயங்கள் கிடைத்துள்ளன. எனவே அங்கு யவனர் குடியிருப்பு அல்லது வணிக வளாகம் இருந்திருக்கவேண்டும்.

நக்கீரரின் நடைப்பயணத்தின்போது இவற்றையெல்லாம் பார்க்கப்போகிறோம். மதுரைக்காரர்களுக்கு இது மனப்பாடமாய்த் தெரிந்த செய்தி. மற்றவர்களுக்காக ஒரு முன்னோட்டம்.

இந்த முன்னோட்டம் இந்த அளவுக்கு இப்போதைக்குப் போதும். இன்னும் வரும் – தேவைப்படும்போது.

அடுத்து 5-ஆம் தேதி நமது பயணத்தின் முதல் கட்டம். ஆயத்தமாகுங்கள்.

கீழே நினைவில் இருத்திக்கொள்ளவேண்டிய இரண்டு படங்கள்.

 

நெடுநாளைக்கு முன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கொவில் என்று இன்று அழைக்கப்படும் கோவிலுக்கு முக்கிய கிழக்கு வாசல் எங்கு இருக்கிறது பார்த்தீர்களா?

கீழே: மதுரை – ரயிலுக்கு முன் – ரயிலுக்குப் பின்

முதல் படம்:

ஆங்கிலேயர்கள் சிதிலமடைந்த நாயக்கர் கோட்டையை இடிப்பதற்கு முந்தைய படம் (ஆண்டு 1763). நகரைச் சுற்றிக் காண்பது நாயக்கர் கோட்டை. ஆற்றைக் கடந்து மதுரைக்குள் நுழையும் வழி எங்கே இருக்கிறது கவனித்தீர்களா? புகைவண்டிப் பாதை போடப்படாத காலம். இன்று புகைவண்டி நிலையம் இருக்குமிடம் பெரிய தோப்பு. மேலவாசலிலிருந்து அரசரடி போய், இடதுபக்கம் திரும்பி, நேரே கோச்சடை செல்லும் சாலை அன்றும் இருந்திருக்கிறது.

நமது பயணத்துக்கு இதெல்லாம் தேவை.

 



2013/3/1 Pandiyaraja <pipi...@gmail.com>



--

Pandiyaraja

unread,
Mar 1, 2013, 6:30:08 AM3/1/13
to tamil...@googlegroups.com
படங்கள் தெரியவில்லை. என்னுடைய கட்டுரையிலும், தேவையான இடங்களில் அந்தப் படங்களை (.jpg) copy and paste செய்துதான் இணைத்தேன். பின்னர் ஒட்டுமொத்தக் கட்டுரையையும்  copy and paste செய்து இங்கு கொண்டுவர முயன்றேன். படங்கள் வரவில்லை. நீங்கள் அனுப்பிய பகுதியில் ஒரு கட்டம் மட்டும் தெரிகிறது. படங்கள் வரவில்லை. எனினும் தங்கள் முயற்சிக்கு நன்றி. உதயனுக்குத் தெரிந்திருக்கலாம்.
ப.பாண்டியராஜா

Pandiyaraja

unread,
Mar 2, 2013, 1:16:55 AM3/2/13
to tamil...@googlegroups.com

நெடுநல்வாடை

மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர் வழங்கியது.

போர்மேல் சென்றிருக்கும் தலைவனின் பிரிவினால் துயருற்று வருந்தும் தலைவியை ஆற்றுவிக்க, அவளின் தோழி “தலைவனுக்கு வெற்றி கிட்டி அவன் விரைவில் வீடு திரும்பவேண்டும்” என்று கொற்றவையை வேண்டிக் கூறிய தோழியின் கூற்றாக இப் பாடல் அமைந்துள்ளது. எனவே இது அகத்திணையுள் பாலைத்திணைப் பாடல் ஆயிற்று.

பாடல் தலைவனைப் பற்றிக் கூறும்போது, அவனது வேலின் தலையில் வேம்பு மாலை சூட்டியிருப்பதாகத் தோழி கூறுகிறாள். வேம்பு பாண்டிய மன்னர்களுக்கு உரியது. எனவே, இப்பாடல் பாண்டிய மன்னனின் வெற்றிக்காகப் பாடப்பட்டது என்ற வகையில் புறப்பொருளில் வாகைத்திணையின்பாற்படும். அந்தப் பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் ஆவான். எனவே தலைவி பாண்டிமாதேவி ஆகிறாள். அவளது இருப்பிடம் பாண்டிய மன்னனின் அரண்மனையைச் சேர்ந்த அந்தப்புரம் ஆகிறது.

கூதிர்காலத்தில் ஒரு நாள் நள்ளிரவில் அந்தப்புரத்தில் தூக்கம் வராமல் துயருற்றுப் படுத்துக்கிடக்கும் அரசியின் நிலையையும், அதே நேரத்தில் துயில் கொள்ளாது வீரர்களின் பாசறைகளைப் பார்வையிட்டு வரும் அரசனின் நிலையையும் இரண்டு ஒப்புமைக் காட்சிகளாகப் புலவர் படைத்திருக்கிறார். 188 அடிகள் கொண்ட இப் பாடலில் 167¾ அடிகள் தலைவியின் நிலையையும், மீதி 20¼  அடிகளில் பாசறைப் பாண்டியனின் நிலையையும் புலவர் வருணிக்கிறார். இதில் தலைவிக்காகப் புலவர் கொண்ட அடிகள் 12-தான். தலைவி படுக்கையில் மலரணையில் புனையா ஓவியம் போலச் சாய்ந்திருக்கிறாள். பேர் அளவு எய்திய பெரும் பெயர்ப் பாண்டிலாகிய அந்தக் கட்டில், அந்தப்புரத்தின் உள்ளே படுக்கை அறையில் இருக்கிறது. கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் ஆகிய அந்த அந்தப்புரம் திரு நிலை பெற்ற தீது தீர் சிறப்பின் அரண்மனைக்குச் சற்று அயலே இருக்கிறது. அந்த அரண்மனை குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயிலுக்குள் இருக்கிறது. வாயிலுக்கு வெளியே மதுரை மக்கள் அன்றைய பகல் முழுக்க விட்டுவிட்டுப் பெய்த மழையால் குளிரில் நடுங்கிக்கொண்டே இரவுத் தூக்கத்துக்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அவர்கள் மாலையில் தங்கள் அருகே தேறல் மாந்தி மதுரையின் வெளிவீதிகளில் வேண்டுவயின் திரிதரும் முழுவலி மாக்களை விட்டு விலகிப்போய், வேறோரிடத்தில் நெல்லும் மலரும் தூவிக் கைதொழுது மாலை அயர்ந்துவிட்டார்கள். இந்த மாடம் ஓங்கிய மல்லல் மதுரை வயல்களாலும் தோப்புகளாலும் சூழப்பட்டது. இந்த நளிகொள் சிமைய விரவுமலர் வியன் சோலைகளுக்கும் அப்பால் முசுண்டையும் பீரமும் பூத்துச் சிரிக்கும். நாரையும் கொக்கும் அறல் எதிரும் கயல்களை மென்பறையாய்ப் பறந்து எவ்வாயும் கவர்ந்து திரியும். அவற்றுக்கும் அப்பால் ஆநிரைகள் குளிரால் மேயவும் மறந்து நிற்கும். அவற்றை மேய்க்கும் கோவலர்கள் விடியும் முன்னர் குளிர்காய்ந்து, பற்கள் பறைகொட்ட நொந்துபோயிருப்பர். காரணம் – மழை, மழை, மழை.

நண்பர்களே!

ஒரு ஹெலிகாப்டரில் ஏறிச் சென்று, முதலில் ஒரு போர்க்களப் பாசறை நள்ளிரவுக் காட்சியைப் பார்த்தோம். அதன் பின்னர், அந்த ஹெலிகாப்டர் சடுதியில் ஓர் அரண்மனைக்கு வந்து அங்கு அந்தப்புறத்திலிருக்கும் ஓர் அரசியைக் காட்டிவிட்டு, அதன் பின்னர் காலச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழலவிட்டு, பல இடங்களை ஒரு பறவைக் கண்ணோட்டத்தில் (bird’s eye view) பார்க்கவிட்டு, ஒரு மலைச் சரிவில் நம்மை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டது. இதுவும் நள்ளிரவுதான். ஆம், ஒரு நாள் முழுக்கப் பறந்திருக்கிறோம். இனித் திரும்பிச் செல்ல எத்தனை நாள் ஆகுமோ? பயப்படவேண்டாம். ஒரே நாளில் கடந்துவிடலாம். வழி தெரியுமா? அச்சமே தேவை இல்லை. நமக்குத் துணைக்கு ஒரு பெரியவர் இருக்கிறார் – இந்த நடைப்பயணத்தில் நம்மை நடத்திச் செல்ல. அவர் தமிழறிந்த பெரும் புலவர். தமிழ்ச்சங்கத் தலைவர். நக்கீரன் S/O கணக்காயன் என்பது அவர் பெயர். தூய தமிழில், மரியாதைப் பன்மையில், கணக்காயனார் மகனார் நக்கீரனார். இதோ நக்கீரருடன் நம் நடைப் பயணம் ஆரம்பிக்கிறது.

-    தொடரும் மார்ச் 5

 

C.R. Selvakumar

unread,
Mar 2, 2013, 8:26:18 AM3/2/13
to tamil...@googlegroups.com
என்ன இனிய விருந்து ஐயா! நன்றி! 
உங்கள் சொற்கள் பன்னிற ஓவியம் தீட்டுகின்றன! 
கண்முன் காட்சிப்படுத்துகின்றன!

அரசியாரின் புனையா ஓவியம் பற்றிக் கூறவந்த நீங்கள் தீட்டும் ஓவியம் அழகு!
பற்கள் பறைகொட்ட என்னும் சொல்லாட்சி குளிர்நாட்டில் வாழும் நான்
உணர்ந்து போற்றுகின்றேன் :) 

[நீங்கள் உலங்கூர்தியை (எலிக்காப்டரை) ஹெலிக்காப்டர் என்று எழுதியிருந்தீர்கள்.
உரோமன் எழுத்தில் எழுதும்  இத்தாலியர் elicottero என்று எழுதுகின்றனர் [1]என்று
தெரிவித்துக்கொள்கின்றேன். எனவே
தமிழில் தமிழ் இயல்பின்படி எலிக்காட்டர் அல்லது எலிக்காற்றர் என்றோ அலல்து
சிறிது பிறழ்வுடன் எலிக்காப்டர் (தமிழில் -ப்ட்- மெய்யொலிக்கூட்டம் கூடாது), என்றோ
எழுதலாம் என்பது என் கருத்து. இப்படிக் கூறுவதால் எளிமையாகவும், 
எல்லோராலும் ஒலிக்கக்கூடியதாகவும் மூச்சு வீணாகமலும்,
தமிழின் இயல்பை ஒட்டியும் இருக்கும் என்று நினைக்கின்றேன்]

அன்புடன்
செல்வா

Pandiyaraja

unread,
Mar 2, 2013, 12:49:10 PM3/2/13
to tamil...@googlegroups.com
மிக்க நன்றி திரு.செல்வா. தங்களின் அப்பழுக்கற்ற ஆழ்ந்த தமிழ்ப்பற்றுக்கு என் தலைசாய்த்த வணக்கம். தாங்கள் இந்தத் தளத்தின் மட்டுறுத்துநர். மட்டுறுத்தத் தங்களுக்குத் உரிமை உண்டு. 'அந்த' மாதிரி சொற்கள் இல்லாமல் என்னால் எழுத முடியும். எனினும் நான் வேண்டுமென்றே அவ்வாறு எழுதுவது இல்லை. எனக்கு இயல்பாக வருவதை அப்படியே எழுதுகிறேன். ஆனால், ... வேண்டாம், இதில் யாருக்கேனும் வருத்தம் இருந்தால், நான் இனிமேல் அத்தகைய சொற்களைத் தவிர்த்துவிடுகிறேன். ஒரு கடிதத்தில் தூய பவுல் அடியார் கூறுவார், "உன்னுடைய வெளிப்பாடுகள் முக்கியம் இல்லை. நம்பிக்கைதான் முக்கியம். ஆனால் உன்னுடைய வெளிப்பாடுகள் உன் அருகிலிருப்போருக்கு உறுத்தலாய் இருந்தால் அவற்றைத் தவிர்த்துவிடு".
நன்றி,
ப.பாண்டியராஜா

Bala Swaminathan

unread,
Mar 2, 2013, 3:04:22 PM3/2/13
to tamil...@googlegroups.com
அருமையாக எண்ணத்தில் படங்கள் வரைவதற்கு எளிதாக மதுரையை விவரித்திருக்கிறீர்கள். ஓடைப்பட்டியை அறியாவிடினும், சின்னமனூரை அறிவேன். ஆண்டிபட்டிக்கருகில் உள்ள தி.சுப்புலாபுரம் எமக்கு சொந்த ஊர். கோரிப்பாளையத்தில் வளர்ந்துவந்தபோது, மதுரை வடக்குமாசி வீதிக்கு மற்றும் கோயிலை ஒட்டிய இடங்களுக்கு அடிக்கடி வருவேன். நல்ல ஞாபகங்களைத்தூண்டியமைக்கு மிக்க நன்றி.

பாண்டியர் காலத்துத் தெருப் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாகவே பெரும்பாலும் இருந்துள்ளன. தமிழராண்ட ஊர்களிலெல்லாம் அவ்வாறே இருந்திருக்கவேண்டும். ஒரு மனிதரின் பெயரிலோ, கடவுளரின் பெயரிலோ கட்டிடங்களுக்கும் மற்ற இடங்களுக்கும் பெரிடும் முறை வடவரின் வரவிற்குப் பின் தானோ?

இருக்கட்டும், உங்களின் அடுத்த தவனை வரும் வரை....
நட்புடன்,
-பாலா




From: Pandiyaraja <pipi...@gmail.com>
To: tamil...@googlegroups.com
Sent: Friday, March 1, 2013 1:56 AM
Subject: Re: [தமிழ் மன்றம்] நக்கீரரின் நடைப்பயணம்

C.R. Selvakumar

unread,
Mar 2, 2013, 3:23:21 PM3/2/13
to tamil...@googlegroups.com


2013/3/2 Pandiyaraja <pipi...@gmail.com>

மிக்க நன்றி திரு.செல்வா. தங்களின் அப்பழுக்கற்ற ஆழ்ந்த தமிழ்ப்பற்றுக்கு என் தலைசாய்த்த வணக்கம். தாங்கள் இந்தத் தளத்தின் மட்டுறுத்துநர். மட்டுறுத்தத் தங்களுக்குத் உரிமை உண்டு. 'அந்த' மாதிரி சொற்கள் இல்லாமல் என்னால் எழுத முடியும். எனினும் நான் வேண்டுமென்றே அவ்வாறு எழுதுவது இல்லை. எனக்கு இயல்பாக வருவதை அப்படியே எழுதுகிறேன். ஆனால், ... வேண்டாம், இதில் யாருக்கேனும் வருத்தம் இருந்தால், நான் இனிமேல் அத்தகைய சொற்களைத் தவிர்த்துவிடுகிறேன். ஒரு கடிதத்தில் தூய பவுல் அடியார் கூறுவார், "உன்னுடைய வெளிப்பாடுகள் முக்கியம் இல்லை. நம்பிக்கைதான் முக்கியம். ஆனால் உன்னுடைய வெளிப்பாடுகள் உன் அருகிலிருப்போருக்கு உறுத்தலாய் இருந்தால் அவற்றைத் தவிர்த்துவிடு".
நன்றி,
ப.பாண்டியராஜா


அன்புள்ள ஐயா,

நீங்கள் அருள்கூர்ந்து அப்படி எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு எது உவப்போ, 
எது இயல்போ அப்படியே எழுதுங்கள்.  அதுவே நல்லது.

நான்  உலங்கூர்ந்தி, எலிக்காற்றர், எலிக்காப்டர்  பற்றிய என் சிறு கருத்தை  முன் வைத்தேன்.
சிலர் Robert என்னும் பெயரை றாபட் என்று எழுதுகின்றார்கள். இராமன்
இரணியன், இராவணன் என்று எழுதுவது போல் இராபர்ட்டு என்று எழுதினால்
தவறில்லை என்று பல இடங்களில் கூறி வருகின்றேன். ஏன் றாபட், ராபர்ட்
என்று எழுதக்கூடாது என்றும் கேட்கின்றார்கள். எனக்குத் தெரிந்த விளக்கங்களை
அளித்து வருகின்றேன்.  அதுபோல இதுவும். அருள்கூர்ந்து தவறாக எடுத்துக்கொள்ள
வேண்டாம். 

Pandiyaraja

unread,
Mar 3, 2013, 12:31:37 PM3/3/13
to tamil...@googlegroups.com
அன்புள்ள செல்வா அவர்களுக்கு,
நான் தவறாக எதனையும் புரிந்துகொள்ளவில்லை. நான் உறுப்பினராயுள்ள cTamil குழுமத்தில் எனக்கு வந்த நகல் மடல் ஒன்று - . Prof.George Hart எழுதியது. "tholkAppiyam is mostly a descriotive rather than a prescriptive one but after some time it has been made a prescriptive one". எனினும் என்னைப் பொருத்தவரையில், இதற்கு ஏற்பு - மறுப்புக் கூற்றுகள் தேவையில்லை. அவரவர் உணர்வுகள்தான் முக்கியம். உங்கள் உணர்வுகளை நான் பெருமளவு மதிக்கிறேன்.
நன்றி,
P.Pandiyaraja

C.R. Selvakumar

unread,
Mar 3, 2013, 2:30:43 PM3/3/13
to tamil...@googlegroups.com


2013/3/3 Pandiyaraja <pipi...@gmail.com>

அன்புள்ள செல்வா அவர்களுக்கு,
நான் தவறாக எதனையும் புரிந்துகொள்ளவில்லை. நான் உறுப்பினராயுள்ள cTamil குழுமத்தில் எனக்கு வந்த நகல் மடல் ஒன்று - . Prof.George Hart எழுதியது. "tholkAppiyam is mostly a descriotive rather than a prescriptive one but after some time it has been made a prescriptive one". எனினும் என்னைப் பொருத்தவரையில், இதற்கு ஏற்பு - மறுப்புக் கூற்றுகள் தேவையில்லை. அவரவர் உணர்வுகள்தான் முக்கியம். உங்கள் உணர்வுகளை நான் பெருமளவு மதிக்கிறேன்.
நன்றி,
P.Pandiyaraja


மிக்க நன்றி ஐயா! :)

Pandiyaraja

unread,
Mar 5, 2013, 6:25:51 AM3/5/13
to tamil...@googlegroups.com
அன்புடையீர்,
இதோ நம் பயணம் ஆரம்பித்துவிட்டது.  படங்களை இடைச்சேர்த்து அனுப்புவதில் சில தடங்கல்கள் ஏற்பட்டதால் கட்டுரைக்கான கோப்பை .doc, .pdf ஆகிய இரு வடிவங்களில் தனியே இணைத்திருக்கிறேன்.
நன்றி,
ப.பாண்டியராஜா
 
பயணம்-1.doc
பயணம்-1.pdf

Pandiyaraja

unread,
Mar 10, 2013, 7:12:07 AM3/10/13
to tamil...@googlegroups.com
அன்புடையீர்,
நமது பயணத்தின் இரண்டாம் பகுதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி,
ப.பாண்டியராஜா
பி.கு
தொடர்ந்துவரும் வேலைப்பளுவால் தொய்ந்துபோன உடலுக்குத் தொடர்ந்து இரண்டு நாட்கள் ஓய்வு கொடுக்க வேண்டியிருந்ததால், நினைத்த அளவுக்குக் கட்டுரையை முழுமையாக்க முடியவில்லை. மேலும், நான் முன்பு கூறியுள்ளபடி 5 நாட்களுக்கு ஒருமுறை தொடரை எழுதி அனுப்ப இயலாது என நினைக்கிறேன். The spirit is willing, but the flesh is weak. எனவே, கட்டுரைத் தொடர், 10, 20, 30 ஆகிய நாட்களில் வரும். இனி அடுத்த கட்டுரை மார்ச் 20-ஆம் நாள்.
நன்றி.
பயணம்-2.doc
பயணம்-2.pdf

Karuannam Annam

unread,
Mar 10, 2013, 7:57:06 AM3/10/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja Paramasivam
வணக்கம். இரண்டு எண்ணங்கள்.
1. பறவைகளின் கால் விரல்கள் குளிரில் மரத்துப்போய் பிடி விலகிக் கீழே விழுந்தன என்பது கொஞ்சம் அதிகம் போலத் தோன்றுகிறது. பனிப்பிரதேசங்களில்கூட விழுவதாகப் படித்ததில்லை. பறவைகள் இடம்பெயர்தலும் காப்பும் இயல்பு.
2. நள்ளிரவுக் குளிர் நண்பகல் குளிரை விட அதிகமிருப்பதால் பானாள் என்ற சொல்லுக்கு நள்ளிரவு பொருந்தும்.
நன்றி
சொ.வினைதீர்த்தான்.


Hari Krishnan

unread,
Mar 10, 2013, 8:10:19 AM3/10/13
to தமிழ் மன்றம், Pandiyaraja Paramasivam

2013/3/10 Karuannam Annam <karu...@gmail.com>

வணக்கம். இரண்டு எண்ணங்கள்.
1. பறவைகளின் கால் விரல்கள் குளிரில் மரத்துப்போய் பிடி விலகிக் கீழே விழுந்தன என்பது கொஞ்சம் அதிகம் போலத் தோன்றுகிறது.

நான் இதற்கு முந்தைய மடலைப் பாரக்கவில்லை.  மழைக்காலத்தில் இப்படி பறவைகள் கீழே விழுவது சகஜம்தான்.  உடனடியாக நெடுநல்வாடைதான் நினைவுக்கு வருகிறது:

மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்

கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க

மாமேயல் மறப்ப மந்தி கூரப்

பறவை படிவன வீழக்


மா, மேயல் மறப்ப, மந்தி கூர, பறவை, படிவன வீழ.


நம்ம ஊர் மழைக்கே இந்தப் பாடாம். :)
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

C.R. Selvakumar

unread,
Mar 10, 2013, 8:18:28 AM3/10/13
to tamil...@googlegroups.com
ஆகா மிக அருமை ஐயா! உங்கள் பானாள் விளக்கமும் அருமை. 

உங்கள்  எழுத்து ஈர்ப்பூட்டும் அழகு அருமை ஐயா!

பகல் என்பதே கூட ஒரு மொழு நாளை இரண்டாகப் பகுத்து வெளிச்சம் உள்ள பகுதியைக் 
கூறியதாகவே நான் கருதுகின்றேன். பால் < பகல் 
பால் என்றால் பகுதி, பிரிவு, பிரிந்த பகுதி என்று பொருள் அல்லவா? 
ஒருபால் கோடாமை என்பது ஒரு பக்கம் சாயாமை. (பக்கம் என்பது பகுப்பு; புண் காய்ந்து உதிர்வதும் பக்கு)

உங்களின் பால் + நாள் விளக்கமும் அருமை. 
நாள் என்னும் சொல் முழுநாளைக் குறிக்கும் என்பது பொதுப்பொருள் 
(60 நாழிகை ஒரு நாள் என்பதாக).னானால் நாள் என்பது இரவைக் குறிக்கும்
என்பதும் ஒரு கருத்து  (நாள் என்றாலே இரவு என்று கொள்வாரும் உண்டு), 
இன்னும் சில இடங்களில் பகலைக் குறிக்கும்
 (நாள்மலர் = நாண்மலர்; நாளெல்லாம் வீணாக்கிவிட்டு இப்போ வருந்தி என்ன பயன்?! )
 எனவே இந்த நாள் என்பதையே திறனாய்வு செய்ய வேண்டும் (சிலர் முன்னரே செய்திருக்கக்கூடும்)).

அப்புறம் ஐயா, உங்களுக்கு இயலும் விதமாக  10 நாளுக்கு ஒரு முறையோ 
அல்லது இன்னும் கூடுதலாகவோ ஆனாலும் பொருட்டன்று. 
நீங்கள் பெறும் இன்பத்தையும்
ஆய்வுக் கருத்துகளையும் உங்கள் எழுத்தால் பகிருங்கள். நன்றி

அன்புடன்
செல்வா

2013/3/10 Pandiyaraja <pipi...@gmail.com>

Hari Krishnan

unread,
Mar 10, 2013, 8:36:59 AM3/10/13
to தமிழ் மன்றம், Pandiyaraja Paramasivam

2013/3/10 Hari Krishnan <hari.har...@gmail.com>
மா, மேயல் மறப்ப, மந்தி கூர, பறவை, படிவன வீழ.


நம்ம ஊர் மழைக்கே இந்தப் பாடாம். :)

ஓகோ... விவாதமே நெடுநல்வாடையைப் பற்றிதானா!
பால்நாளைப் பார்த்ததும்தான் புரிந்தது.  குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்.   அதுதானே?

வேந்தன் அரசு

unread,
Mar 10, 2013, 7:49:32 PM3/10/13
to tamil...@googlegroups.com
காட்சிப்படுத்தியது மிக அருமை

புலம்பு எனும் சொல்லுக்கு  தனிமை தரும் வருத்தம் எனும் பொருள் பொருந்தும்.
தலவனை பிறந்த தலைவிக்கும் புலம்பு.

10 மார்ச், 2013 7:12 AM அன்று, Pandiyaraja <pipi...@gmail.com> எழுதியது:

அன்புடையீர்,
நமது பயணத்தின் இரண்டாம் பகுதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி,
ப.பாண்டியராஜா



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Pandiyaraja

unread,
Mar 19, 2013, 1:33:06 AM3/19/13
to tamil...@googlegroups.com
மொத்தத் தமிழகமே இன்றைக்குக் கொந்தளித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், இலக்கிய இன்பம் பற்றிப் பேசும் மனநிலையில் நான் இல்லை. இந்த எழுச்சி நிறை  போராட்டம் மென்மேலும் வலுப்பெறவேண்டும் - நல் வழிப்பட வேண்டும் - நல் முடிவு எட்டும் வரை நல் உறுதியுடன் நிற்கவேண்டும் - என்ற தவிப்புடன் கைகளைப் பிசைந்துகொண்டு காத்திருக்கும் சூழ்நிலையில் வேறு எதனைப் பற்றியும் சிந்திக்கவோ, எழுதவோ தூண்டுதல் இல்லாத நிலையில், நெடும்பயணத்தைச் சிறிது காலம் நிறுத்தி வைத்திருக்கிறேன்.
அன்புடன்,
ப.பாண்டியராஜா
 

Pandiyaraja

unread,
Mar 25, 2013, 2:26:56 AM3/25/13
to tamil...@googlegroups.com
அன்புடையீர்,
உணர்ச்சிக் கொந்தளிப்பு ஓரளவு அடங்கிவிட்டது. இனி அறிவார்ந்த செயல்முறைகள் ஆயப்படும் - ஆயப்படவேண்டும். முனைகளில் முன்னணியில் நிற்போருக்கு எம் முழுமையான வாழ்த்துகள்.
தொடர்கிறது நம் நடைப் பயணம். இது மார்ச் 20-ஆம் நாள் வந்திருக்கவேண்டியது. பயணத்தின் அடுத்த பகுதி - பயணம் 2அ - இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது - வழக்கம்போல் .doc. .pdf ஆகிய கோப்புகளில். அடுத்தது வரும் நாள் மார்ச் 30.
நன்றி,
ப.பாண்டியராஜா
பயணம்-2அ.doc
பயணம்-2அ.pdf

C.R. Selvakumar

unread,
Mar 25, 2013, 9:08:35 AM3/25/13
to tamil...@googlegroups.com


2013/3/19 Pandiyaraja <pipi...@gmail.com>

மொத்தத் தமிழகமே இன்றைக்குக் கொந்தளித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், இலக்கிய இன்பம் பற்றிப் பேசும் மனநிலையில் நான் இல்லை. இந்த எழுச்சி நிறை  போராட்டம் மென்மேலும் வலுப்பெறவேண்டும் - நல் வழிப்பட வேண்டும் - நல் முடிவு எட்டும் வரை நல் உறுதியுடன் நிற்கவேண்டும் - என்ற தவிப்புடன் கைகளைப் பிசைந்துகொண்டு காத்திருக்கும் சூழ்நிலையில் வேறு எதனைப் பற்றியும் சிந்திக்கவோ, எழுதவோ தூண்டுதல் இல்லாத நிலையில், நெடும்பயணத்தைச் சிறிது காலம் நிறுத்தி வைத்திருக்கிறேன்.
அன்புடன்,
ப.பாண்டியராஜா
 

ஆம் ஐயா, இதே நிலையிலேயே நானும் இருக்கின்றேன். இன்று இரவிக்குமார் அனுப்பிய ஓர் ஆவணத்தில் கண்டவை
தாங்கொணா துன்பம் தருகின்றது. 

அன்புடன்
செல்வா

 
On Monday, March 11, 2013 5:19:32 AM UTC+5:30, வேந்தன் அரசு wrote:
காட்சிப்படுத்தியது மிக அருமை

புலம்பு எனும் சொல்லுக்கு  தனிமை தரும் வருத்தம் எனும் பொருள் பொருந்தும்.
தலவனை பிறந்த தலைவிக்கும் புலம்பு.

10 மார்ச், 2013 7:12 AM அன்று, Pandiyaraja <pipi...@gmail.com> எழுதியது:

அன்புடையீர்,
நமது பயணத்தின் இரண்டாம் பகுதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
நன்றி,
ப.பாண்டியராஜா



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Pandiyaraja

unread,
Apr 10, 2013, 1:19:39 AM4/10/13
to tamil...@googlegroups.com
அன்புடையீர்,
கொந்தளிப்பான சூழ்நிலையில் நடைப்பயணம் - பகுதி 2அ அனுப்பப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இத்துடன் பயணம் - பகுதி-3 அனுப்பப்பட்டுள்ளது - வழக்கம் போல் இரு கோப்புகளில் - .pdf and .doc
நன்றி,
ப.பாண்டியராஜா
பயணம்-3.doc
பயணம்-3.pdf

வேந்தன் அரசு

unread,
Apr 10, 2013, 8:21:56 PM4/10/13
to tamil...@googlegroups.com

பாண்டியராஜா ஐயா

மிக மிக அருமை. 

நெடுநல்வாடையை  நானும் வாசித்தது உண்டு. ஆனால் இந்த சுவையை உணரலை


குரூஉ துளி என்பது  முளைக்கின்ற துளி எனலாம், துளி சிறிதாக இருந்து ஈரம் சேர்த்து  பெரிதாகி வீழும் வரி கிளையில் ஒட்டிக்கொண்டு இருக்கும்.

குரூ= குருத்து = வாழையின் குருத்து. அந்த பொருளில் கருதலாம்


பாராட்டுகள்.

Pandiyaraja

unread,
Apr 11, 2013, 3:18:59 PM4/11/13
to tamil...@googlegroups.com
மிக்க நன்றி, திரு.வேந்தன் அரசு. தொடர்ந்துவரும் தங்கள் பாராட்டுக்கும் பின்னூட்டத்துக்கும் மீண்டும் நன்றி. குரூஉ என்பதற்கு நிறம் என்ற பொருளே கொள்ளப்படுகிறது. குரூஉப் பருந்து, குரூஉத் திரள், குரூஉத் திரை, குரூஉச் சுவல், குரூஉப் புனல், குரூஉக் குய்ப்புகை, குரூஉப் புலி எனவரும் இடங்களில் இதனை நிறம் என்றே கொள்வது சிறப்பு. எனினும் குரூஉக் கொடி, குரூஉத் தளிர் போன்ற இடங்களில் நிறம், முளைக்கின்ற ஆகிய இரு பொருள்களும் பொருந்தும். இது போன்ற வித்தியாசமான அணுகல் இலக்கியங்களுக்குத் தேவை. தங்களின் அணுகல் புதியது. மிக்க நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா

Pandiyaraja

unread,
Apr 20, 2013, 12:56:36 AM4/20/13
to tamil...@googlegroups.com
அன்புடையீர்,
இத்துடன் பயணம் -4 -க்கான கட்டுரை இணைத்து அனுப்பப்பட்டுள்ளது - வழக்கம்போல் .doc, .pdf ஆகிய இரு கோப்புகளில். இந்தத் தவணைக்காக நிறைய வலைத்தளத் தேடல்கள் தேவைப்பட்டதால் நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.
படித்தவர்கள் தங்கள் பின்னூட்டங்களை இட்டால், என்னுடைய ஆய்வுக்கு மிக்க ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா
பயணம்-4.doc
பயணம்-4.pdf

C.R. Selvakumar

unread,
Apr 20, 2013, 10:07:07 PM4/20/13
to தமிழ் மன்றம்
அன்புள்ள ஐயா,

மிக அருமை! மிகவும் சிறப்பான படங்களுடன், உங்களுக்கெ உரித்தான
எளிமையான நன்னடையில் செறிவான கருத்துகளடன் மிக அருமையாக விளக்கி
எழுதி இருக்கின்றீர்கள். இருகோட்டு அறுவை பற்றி அறிந்து மகிழ்ந்தேன். 
முழுவலி மாக்கள் என்று குறிப்பிடப்படுவர் யவனர் (உரோமானியர்) என்னும்
உங்கள் விளக்கம் அருமை. யவனர் என்னும் சொல்லாட்சியைக் கிரேக்கர்
(இயோனியர் ionians) என்றும் அராபியர் என்றும் பலவாறு கேள்விப்பட்டிருக்கின்றேன்.
பொதுவாக மேற்கு உலக மாந்தர்களை யவனர்கள் என்றனரா? என்றெல்லாம்
ஐயுற்றிருக்கின்றேன். இந்த நெடுநல்வாடையில் உரோமானியரைத்தான்
குறிப்பிடுகின்றார்கள் என்பது தெளிவு.

நன்றி

அன்புடன்
செல்வா



2013/4/20 Pandiyaraja <pipi...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Rajam

unread,
Apr 20, 2013, 10:18:19 PM4/20/13
to tamil...@googlegroups.com
இந்தப் பகுதி எனக்கும் பிடித்தது. மேற்கொண்டு சில கருத்துகளை விரைவில் பகிர்ந்துகொள்கிறேன். 

இப்படிக்கு,
ராஜம் 

Pandiyaraja

unread,
Apr 21, 2013, 1:28:52 AM4/21/13
to tamil...@googlegroups.com
திரு.செல்வா அவர்களுக்கும், அம்மையாருக்கும் மிக்க நன்றி. தொடக்கத்திலேயே கூறியிருந்தேன். நெடுநல்வாடையைப் பலகாலம்கல்லூரி அளவில் கற்பித்த அம்மையார் முன்வரிசையில் அமர்ந்திருக்க ஒருவித நடுக்கத்துடன்தான் இதனை எழுதுகிறேன் என்று.  எனவே அம்மையாரின் கருத்து எப்போது வெளீப்படும் என்று ஆவலுடன் காத்திருந்தேன். மோதிரக்கை அல்லவா? குட்டு விழுமோ? இப்போது ஒரு ஷொட்டு விழுந்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. 'மேற்கொண்டு சில கருத்துகளை'-யும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
மீண்டும் மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

Rajam

unread,
Apr 21, 2013, 8:37:05 PM4/21/13
to tamil...@googlegroups.com, pipi...@gmail.com
என் கதை
---------------
1. உங்கள் படத்தில் "பாண்டியர் கோட்டை" என்று குறித்திருக்கும் பகுதிக்குள் Ayira Vaisya Higher Secondary School என்பது நான் 2-ஆ ம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு முடியப் படித்த காலத்தில் (1946-1950) "ஆயிர வைசிய எலிமென்டரி பாடசாலை" என்ற ஆடம்பரமில்லாத மிகச் சிறந்த பள்ளிக்கூடம். (என்னை உருவாக்கியது அன்றோ!) சொக்கன் செட்டியார் தலைமையில் மிகச் சிறப்பாக நடந்த பள்ளி. முகவரி: 23 தெற்குச் சித்திரை வீதி என்று நினைவு. நாங்கள் குடியிருந்த வீட்டின் முகவரி: 27 தெற்குச் சித்திரை வீதி! மீனாட்சி கோயிலுக்கும் பள்ளிக்கும் எவ்வளவு அண்மை என்று பாருங்கள்!  அல்லும் பகலுமாக அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆட்டம் போட்டது மறக்க முடியாது. சித்திரைத் திருவிழா நாட்களில் பள்ளி அடைப்பு! ஆனாலும், கோட்டைக் கதவின் திட்டி வாசல் வழியாக உள்ளே நுழைந்து புது மணல் பரப்பிய முன் வாசலில் வாழைப் பந்தலைப் பிடித்துக்கொண்டு தட்டாமாலை சுற்றி ஆடியதும், பிற்பகலில் பட்டர்கள் வந்து சுவாமிக்கு அலங்காரம் செய்ய வேண்டும் என்று எங்கள் கழுத்தைப் பிடித்துத் தள்ளியதும் மறக்க முடியாதவை! 


2. அரசரடியிலிருந்து ஆரப்பாளையம் போகும் வீதி நாங்கள் அங்கே ஆர்வி நகரில் (Harvey Nagar) வசித்த காலத்திலும்கூட (1968-1975) நல்ல அகலமான வீதியாக இருந்தது. வலது புறம் மத்திய சிறைச்சாலை, இடது புறம் புதிதாக உருவாகிய ஆர்வி நகர். பிறகு கிறித்துவக் கோயில் + பிற கட்டிடங்கள் புறப்பட்டன. ஆனாலும் எனக்குத் தெரிந்து 1975 வரை அந்த வீதி மிகவும் நன்றாக அமைதியாக இருந்தது. இரண்டு புறமும் வாகை மரங்கள். சிலர் அந்த வீதியைக் "காதலர் நடைபாதை" என்று சொல்லிக் கேள்வி. இப்போது எப்படி இருக்கிறதோ தெரியவில்லை. 


பொதுக் கருத்து 
---------------------- 
1. எங்கள் காலத்தில் வீதி, தெரு, சந்து என்று மதுரையில் திட்டமான பிரிவுகள் இருந்தன. எடுத்துக்காட்டு: தெற்கு ஆடி வீதி, … சின்னக்கடை வீதி, மேல மாசி வீதி, … தெற்கு வெளி வீதி; கோபாலக் கொத்தன் தெரு, கான்சா மேட்டுத் தெரு, வளையற்காரர் தெரு, … புதுத்தெரு; தொட்டியன் கிணற்றுச் சந்து, பூக்காரச் சந்து, … இப்படி.


2. வீதிகளே தெருக்களைவிட அகலமாகவும் தேரோடும் இடங்களாகவும் இருந்தன. தெருக்கள் வீதிகளை இணைக்கும். சந்துகள் வீதிகளிலிருந்தும் தெருக்களிலிருந்தும் குறுக்காக அமைந்து ஒற்றைவழி உடையதாக இருக்கும். இப்போ எப்படியோ தெரியாது. 


3. தேறல் மாந்திய யவனர்கள் "தன்வசம் இல்லை" என்று திட்டவட்டமாகச் சொல்ல இயலாது. உரோம/கிரேக்க இனத்தவருக்குத் தேறல் என்பது மிகவும் சாதாரணப் பொருள். நம் தமிழகம் போல் இல்லை -- இங்கே ஒரு சிறு அளவு "கள்/தேறல்" அருந்திவிட்டாலே … தேவதாஸ் நிலைதான்! விக்கி விக்கிச் சாவதுபோல் திரைப்படக் காட்சி அமைந்துவிடும். அதெல்லாம் அயல்நாட்டவரிடம் பார்க்க முடியாது. அதோடு, ஒரு குறிப்பிட்ட திருவிழா நாளில்தான் தேறல் அருந்தவேண்டும் என்பதும் அயலவருக்கு விதியாக இருந்திருக்க முடியாது. 


4. "இரு கோட்டு அறுவையர்" "வேண்டுவயின் திரிதர" என்ற தொடர்களுக்கு வேறு வகையான படங்கள் தேவை. "இரு கோட்டு அறுவையர்" என்பதை நான் எப்படிப் புரிந்துகொள்கிறேன் என்றால் … நம்ம சாதாரணத் துண்டு ஒன்று கழுத்தைச் சுற்றிப் போடப்பட்ட நிலை. இரண்டு நுனியும் இரண்டு தோளையும் சுற்றிக் கீழே தொங்கும் நிலை. "வேண்டுவயின் திரிதர" என்பதுக்கு வேறு படம் கண்டுபிடிக்கவேண்டும். உங்கள் படத்தில் அந்த ஆள் வேண்டும் இடங்களில் திரிகிற மாதிரியில்லை! 


5. இங்கே சான் ஓசேயில் (San Jose) எகிப்தியப் பொருள்களைக் கொண்ட ஓர் அருங்காட்சியகம் இருக்கு. அங்கே வைத்திருக்கும் ஒரு கண்ணாடிப் பெட்டியில் அந்தக் கால எகிப்திய வாழ்க்கையின் சில கூறுகளைப் பொம்மை வடிவில் பார்த்தேன். ஏற்றம் இரைத்தல், தச்சுத் தொழில், வயலில் உழுதல் … இப்படிச் சில தொழில் செய்யும் பொம்மைகளைப் பார்த்து அசந்துவிட்டேன். உடையும் சூழலும் தமிழக வயற்புறத்தையும் தச்சுத் தொழிலையும் போலவே இருந்தன. இயன்றால் நீங்கள் வந்து பார்க்கவேண்டும். விவரத்துக்கு: 


6. மதுரை பற்றிய என் இடுகைகள் சில இங்கே: 

http://viruntu.blogspot.com/2010/12/blog-post_15.html (மதுரை அன்றும் இன்றும்)
http://viruntu.blogspot.com/2011/08/blog-post_08.html (மாறிய மதுரையும் … சென்னைக் கொசுறும்)


On Apr 20, 2013, at 7:18 PM, Rajam wrote:

இந்தப் பகுதி எனக்கும் பிடித்தது. மேற்கொண்டு சில கருத்துகளை விரைவில் பகிர்ந்துகொள்கிறேன். 

இப்படிக்கு,
ராஜம் 


On Apr 20, 2013, at 7:07 PM, C.R. Selvakumar wrote:

அன்புள்ள ஐயா,

மிக அருமை! மிகவும் சிறப்பான படங்களுடன், உங்களுக்கெ உரித்தான
எளிமையான நன்னடையில் செறிவான கருத்துகளடன் மிக அருமையாக விளக்கி
எழுதி இருக்கின்றீர்கள். இருகோட்டு அறுவை பற்றி அறிந்து மகிழ்ந்தேன். 
முழுவலி மாக்கள் என்று குறிப்பிடப்படுவர் யவனர் (உரோமானியர்) என்னும்
உங்கள் விளக்கம் அருமை. யவனர் என்னும் சொல்லாட்சியைக் கிரேக்கர்
(இயோனியர் ionians) என்றும் அராபியர் என்றும் பலவாறு கேள்விப்பட்டிருக்கின்றேன்.
பொதுவாக மேற்கு உலக மாந்தர்களை யவனர்கள் என்றனரா? என்றெல்லாம்
ஐயுற்றிருக்கின்றேன். இந்த நெடுநல்வாடையில் உரோமானியரைத்தான்
குறிப்பிடுகின்றார்கள் என்பது தெளிவு.

நன்றி

அன்புடன்
செல்வா



2013/4/20 Pandiyaraja <pipi...@gmail.com>
அன்புடையீர்,
இத்துடன் பயணம் -4 -க்கான கட்டுரை இணைத்து அனுப்பப்பட்டுள்ளது - வழக்கம்போல் .doc, .pdf ஆகிய இரு கோப்புகளில். இந்தத் தவணைக்காக நிறைய வலைத்தளத் தேடல்கள் தேவைப்பட்டதால் நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.
படித்தவர்கள் தங்கள் பின்னூட்டங்களை இட்டால், என்னுடைய ஆய்வுக்கு மிக்க ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா

-- 


--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

-- 

C.R. Selvakumar

unread,
Apr 21, 2013, 9:05:15 PM4/21/13
to தமிழ் மன்றம், pipi...@gmail.com
மிக அருமையான கருத்துகள்!  மதுரையை பற்றியும்
அக்கால வாழ்க்கையைப் பற்றியும் நீங்கள் கூறும்பொழுது ஏதோ
நேரில் காண்பதுபோல் உணர்வு!! 

நீங்கள் மாறுபடும் இடங்கள் (இருகோட்டு அறுவை..) பற்றி பாண்டியராசா
என்ன சொல்லப்போகின்றார் என்று அறிய ஆவலாக இருக்கின்றேன்.

// அந்தக் கால எகிப்திய வாழ்க்கையின் சில கூறுகளைப் பொம்மை வடிவில் பார்த்தேன். ஏற்றம் இரைத்தல், தச்சுத் தொழில், வயலில் உழுதல் … இப்படிச் சில தொழில் செய்யும் பொம்மைகளைப் பார்த்து அசந்துவிட்டேன். உடையும் சூழலும் தமிழக வயற்புறத்தையும் தச்சுத் தொழிலையும் போலவே இருந்தன. இயன்றால் நீங்கள் வந்து பார்க்கவேண்டும். விவரத்துக்கு: //

நானும் இதைப்போலவே உணர்ந்தேன்! சில ஆண்டுகளுக்கு முன்பு
இராயல் ஒன்றாரியோ கண்காட்சியகத்தில் (Royal Ontario Museum) எகித்திய
சிறப்புக் காட்சி ஒன்றை ஒரு மாதகாலமோ என்னவோ வைத்திருந்தார்கள்
அப்பொழுது பார்த்த போது இதே போலவே உணர்ந்தேன்.
இதே போல சான் பிரான்சிசிக்கோ கண்காட்சியகத்திலும் பார்த்தேன் (2010
என்று நினைவு). 

அன்புடன்
செல்வா



2013/4/21 Rajam <ra...@earthlink.net>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Pandiyaraja

unread,
Apr 22, 2013, 3:30:24 PM4/22/13
to tamil...@googlegroups.com, pipi...@gmail.com
அம்மையார் அவர்களுக்கும், திரு.செல்வா அவர்களுக்கும் மிக்க நன்றி. திரு.செல்வா ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் எனது பதிலை வழக்கம்போல் இணைப்பாக்வே அனுப்பியுள்ளேன்.
மீண்டும் தங்கள் இருவருக்கும் மிக்க நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா
Mrs.Rajam Feedback.doc
Mrs.Rajam Feedback.pdf

Rajam

unread,
Apr 22, 2013, 5:53:31 PM4/22/13
to tamil...@googlegroups.com, pipi...@gmail.com
அன்புள்ள முனைவர் பாண்டியராஜா,

வணக்கம். 

ஆயிர வைசிய எலிமென்டரி பாடசாலையில் நான் ஓடி ஆடித் திரியாத பகுதி இருக்க முடியாது! என் கால் படியாத இடமும் இருக்க முடியாது! :-) 

1. நான் படித்த காலத்தில் ஆயிர வைசிய எலிமென்டரி பாடசாலையில் "அறைகள்" இல்லை!! முன்னால் ஒரு பெரிய, மணல் பரப்பிய, திறந்த வெளி -- அதுதான் எங்கள் விளையாட்டரங்கம் -- 2-ஆம் வகுப்பிலிருந்து 5-ஆம் வகுப்பு வரை அவரவர் வகுப்புக்கு எனப் பிரிக்கப்பட்ட இடத்தில் விளையாடவேண்டும். 

சித்திரைத் திருவிழா நாட்களில் -- அந்தத் திறந்த வெளியில்தான் "சாமி இறங்கும்." அதாவது, மாலை/இரவு திருவீதி உலா போவதற்கு முன்னும் பின்னும் சாமி உருவச் சிலைகளை வைக்கும் பல்லக்குகளை நிறுத்தி வைத்திருப்பார்கள். அங்கேதான் அந்தப் பல்லக்குகளைச் சுற்றிவந்தும் அவற்றின் உள்ளே நுழைந்தும் காலை முதல் பிற்பகல் பட்டர்கள் வந்து விரட்டும்வரை விளையாடுவோம்! சாமிபோலப் பல்லக்குகளில் உட்கார்ந்ததும் உண்டு! 

அதை அடுத்து உள்ளே சின்ன மண்டபம் மாதிரி ஓர் இடம். அதுதான் எங்கள் பொது மன்றம், இறைவணக்கத்துக்காகக் கூடும் இடம், "assembly hall" எல்லாம்!

அதை அடுத்து உள்ளே போனால் ஒரு பெரீஈஈஈய திறந்த முற்றம். அதைச் சுற்றி, எல்லாப்புறமும் (4) அகலமான பட்டாசாலைகள். அந்தப் பட்டாசாலைகளைத்தான் வகுப்புகளாகப் பிரித்து எங்களை உட்காரவைத்திருந்தார்கள். 4-ஆம் வகுப்புக்கும் (அதுகூடச் சந்தேகம்) 5-ஆம் வகுப்புக்கும் மட்டும் "பெஞ்சு." மத்த வகுப்பு எல்லாம் தரை டிக்கட். வகுப்புகளுக்கு இடையே தடுப்பு இல்லை! 

அந்த முற்றத்தை அடுத்துப் பின்புறம் ஒரு திறந்த வெளி. அங்கேதான் கழிவறைகள், குடிநீர்க் குழாய் (ஒன்றே ஒன்று), சில தங்கரளிப்பூ மரங்கள். 

அவ்வளவே. அறைகள் என்ற தடுப்பு இல்லை, மாடி இல்லை! மிக எளிய அழகான சூழல். அந்தக் கடைசிப் பகுதியில் உள்ள தங்கரளிப்பூ மரங்களுக்கு என்னை மிகவும் நன்றாகத் தெரியும்!  உதிர்ந்த தங்கரளிப் பூக்களை மடி நிறையத் திரட்டி வைத்துக்கொண்டு "பலூன்" வெடிப்பது ஒரு விளையாட்டு. தினமும் காலையில் நான்தான் பள்ளிக்கு முதலாவதாகப் போவேன்! பக்கத்து வீடில்லெ! நண்பர்களுக்கும் சேர்த்துத் தங்கரளிப் பூக்களைப் பொறுக்கி வைத்திருப்பேன். கொஞ்ச நேரம் கழித்துப் போனால் அந்த உதிர்ந்த பூக்களைப் பெருக்கி எடுத்துத் தூரப் போட்டுவிடுவார்கள். அவர்களுக்கு முன்னால் எனக்குத்தான் அந்தப் பூக்கள்! அந்த மரங்கள் இன்றைக்கு இருக்கோ, வெட்டிவிட்டார்களோ. 


2. போதைக்காகவும் வெறிக்காகவும் யவனர்கள் குடித்திருப்பதைப் பற்றிச் சொல்ல எனக்கென்ன தெரியும்? நேரில் பார்த்ததில்லை. 


3. திருவிழா நாட்களுக்காகக் காத்துக்கொண்டிருந்து அந்த நாட்களில் மட்டுமே தேறல்  அருந்தியிருப்பார்களா என்பதுவே என் ஐயம்.


4. ஆம், துப்பட்டாவின் இரு முனையும் கழுத்தைச் சுற்றி இரு புறமும் தொங்குவதுதான் என் மனக்கண்ணில் தோன்றுகிறது. சில படங்களில் ஆண்டாளுக்கு மாலை இருக்குமே, அதுபோல. 


5. "இருகோட்டு அறுவையர்" என்பதின் உட்பொருள் எனக்குப் புலப்படவில்லை. 


6. "வேண்டுவயின் திரிதர" என்ற தொடரில் நக்கீரர் பாண்டியனின் அரசியல் சிறப்பைக் காட்டுகிறார் என்று நினைக்கிறேன். அயல் நாட்டவர், பிறமொழி பேசுகிறவர், தாங்கள் விரும்பிய வண்ணம் தேறல் அருந்தி மதுரைத் தெருக்களில் வேண்டிய இடங்களில் தடையில்லாமல் அலைந்து திரிந்தார்கள் என்பதைச் சுட்டுவதாகத் தோன்றுகிறது. 

7. யவனர்கள் அவர்கள் நாட்டில் எப்படி எந்த வழக்கத்தைப் பின்பற்றியிருந்தாலும், மதுரையில் அவர்கள் பழக்கம் சிறிதாவது மாறியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். 


8. புதிதாக அனுப்பியிருக்கும் படம் முன்னதைவிடப் பரவாயில்லை என்று தோன்றுகிறது. 


9. நீங்களோ நானோ அந்தக் காலத்தில் இல்லை. இப்போது பின்னோக்கிப் பார்க்கும்போது அவரவர்க்குத் தோன்றும் கருத்துகள் எல்லாமே உண்மை, எல்லாமே பொய் என்பதுவே உண்மை! :-) ஊகம் என்பது ஒரு விளையாட்டே. 

அன்புடன்,
ராஜம் 

DEV RAJ

unread,
Apr 23, 2013, 11:48:32 PM4/23/13
to tamil...@googlegroups.com
'புன்கொடி முசுண்டை பொறிப்புற வான்பூ’ விளக்கம்  மிக அருமை.
வான்புகழ், வான்பலி, வான்பணயம் வரிசையில் ’வான்பூ’


தேவ்

Elangovan N

unread,
Apr 25, 2013, 7:23:00 AM4/25/13
to tamilmanram
அன்பின் முனைவர் பாண்டியராசா அவர்களுக்கு
வணக்கம்.

நெடுநல்வாடையை அப்படியே உணர வைக்கிறீர்கள்.
கவிதையும் கருத்தும் காட்சியும் அலைமோதுகின்றன.
அடுத்தது எப்போதென்றே காத்திருக்கிறேன். 

1) வாடை துவக்கத்தில் "ஏறுடை நிரை" மேய்ச்சலில்
இருக்கும் காட்சியும், பின்னர் அது கடுமழையால்
புலம் பெயர்கின்ற காட்சியும் வருகின்றன. அத்துடன்
மேய்ச்சலுக்காகவே புலம் பெயர்ந்து ஊரை 
விட்டு வந்த நிரைகள்+இடையர்கள் காட்சியையும் தருகின்றது.

வாடையின் காலம் ஐப்பசி மாதத் துவக்கத்தைக்
குறிப்பதையும், தற்போது குறுவைச் சாகுபடி
என்று நாம் சொல்கின்ற பருவத்தை ஒத்து இருக்கிற
காட்சியையும் காணமுடிகிறது 
(வண் தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க).

ஆனால், இந்தக் காலக் கட்டத்தில் மேய்ச்சலுக்காக
நிரைக்கூட்டம் செல்ல வேண்டிய தேவை என்ன?

இப்படி வெள்ளாமை நிறைந்து இருக்கும் பருவத்தே
மேய்ச்சல் ஆகக்கூடியதா? வேளாளர் மேய்ச்சலை
அனுமதிப்பார்களா?

அதுவும், *புலம் பெயர்ந்து* இடையர்கள் கிடை போட்டு
மேய்ச்சலுக்குச் செல்ல வேண்டிய காரணம் என்ன?

மருத நிலப் பகுதியில்,  (அது குறிஞ்சியை ஒட்டி இருந்தாலும்)
பெருவாரியான மேய்ச்சல் என்பது தை அறுவடைக்குப் பின்னர்
தொடங்கி மாசி, பங்குனி, சித்திரை, ஆனி வரை போகும்.

இங்கே காட்டப் படுகின்ற மேய்ச்சல் எவ்வகையான பொருளியல்
காரணம் உடையது என்பதை எண்ணித் தோன்றிய தேட்டம் இவை.
தங்கள் கருத்தறிய ஆவல்.

2) மழை பொழிகிறது. கடுங்குளிர்.
கோவலர் என்பது இடையரைக் குறிக்குமானால்,
அவர்கள் நிரைக்கூட்டத்தை புலம் பெயர்க்கிறார்கள்.
இங்கே ஏன் நக்கீரர் "கொடுங்கோல்" என்ற சொல்லாட்சியைப்
பயன்படுத்துகிறார்? மாட்டுக் கூட்டத்தை மேய்ப்பவர்கள்
கோல் வைத்திருப்பார்கள். அது நீளமானதாகவும் இருக்கும்.
ஆனால் அதனைக் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?
மாடுகளைக் காக்கப் புலம் பெயர்க்கும் இடையரின் கோல் கொடும் கோலாகச்
சொல்லப் படவேண்டியதன் தேவை என்ன என்றும் மனம் தேடுகிறது.

3) முழுவலி மாக்கள் என்பது நன்கு தின்று, பயிற்சி செய்து மறமேறிய
உடலமைப்பு கொண்டவர்களைச் சொல்வதாகவே இருக்கிறது.
முழுவலி என்பது யாரிடமும் இருக்கலாம். பலவான்களைக் (பயில்வான்?)
குறிக்கிற சொல்லாக மட்டுமே தெரிகிறது. உரோமானியர்களின் காசு
அந்த இடத்தில் கிடைத்தது என்பதற்காக அந்த முழுவலி மாக்கள் உரோமானியர்களாக
இருப்பார்கள் என்று கருதுவது கடினம் என்றே தோன்றுகிறது. 

ஏனெனில் இருகோட்டு அறுவை என்ற அந்த உடுப்பு விளக்கம் சற்று பொருந்தவில்லையோ
என்றே கருதுகிறேன். முழுவலி மாக்களின் பயன்பாடு முகன்மையாக காவல், அரணம்,
அடியாள், மெய்க்காப்பாளர் போன்ற பணிகளுக்காகவே. அப்படியான காவற் பணியில்
இருப்பவர்கள் 20 அடி நீள உடுப்பை உடுத்தியிருப்பார்கள் என்று எண்ணுவது சற்று 
கடினமாக இருக்கிறது. தடுக்காத, பணிக்கு இடையூறு இல்லாத, இழுத்துக் கட்டிய உடுப்பே காவலர் உடுப்பு.அதனால் அந்த நீள உடுப்பு முழுவலி மாக்களுக்குப் பொருந்தவில்லை என்று
கருதுகிறேன். இதில், அம்மா இராசம் அவர்களின் கருத்தோடும் எனக்கும் ஒப்புமை உண்டு. தங்கள் விளக்கத்தையும் பார்த்தேன். 

அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்











2013/4/20 Pandiyaraja <pipi...@gmail.com>

Elangovan N

unread,
Apr 25, 2013, 9:50:54 AM4/25/13
to tamilmanram
//படலைக் கண்ணி பரேர் எறுழ்த் திணி தோள்
முடலை யாக்கை முழுவலி மாக்கள்
//

ஐயா, இன்னோர் ஐயம்.

படலைக் கண்ணி என்பது "பரந்த பார்வையையுடைய" - அதாவது
காவலாளி என்ற பொறுப்பில், காவல் நோக்கில் அங்கும் இங்கும்
அகண்டு விழிப்புடன் பார்க்கும் பார்வையை யுடைய தோள் வலி  மிகுந்து
முறுக்கேறிய உடலினைக் கொண்ட முழுவலி மாக்கள்

என்று பொருள் கொள்ள ஏலுமா?

இந்த இரண்டு அடிகளில் சொல்லப் படுபவர்களும், 
இதற்கு அடுத்த அடிகளில் சொல்லப்படுபவர்களும் (தேறல் மாந்தி...)
வேறு வேறு வகையானவர்களோ என்ற ஐயத்தில் இத்தேட்டம்!

அன்புடன்
நாக.இளங்கோவன்



2013/4/25 Elangovan N <nela...@gmail.com>

Pandiyaraja

unread,
May 18, 2013, 2:21:45 AM5/18/13
to tamil...@googlegroups.com
அன்புடையீர்,
பின்னூட்டம் இட்ட அம்மையார், திருவாளர்கள் தேவ், இளங்கோவன் ஆகியோருக்கு மிக்க நன்றி. நான் எழுதுவது சரியானதுதான் என்பதில் எனக்கு முற்றிலும் நம்பிக்கை உண்டு. ஆனால், இதுதான் சரி என்று கூறமாட்டேன். அப்படிச் சொன்னால் எழுதிய புலவருக்கே அது இழுக்காகும். அம்மையார் சொன்னதுபோல ஒவ்வொரு  புரிதலும் சரியே. எல்லாருடைய புரிதலைப் போல என்னுடையதும் அமைந்தால் இக் கட்டுரைக்கே அவசியம் இல்லை. எனினும் எழுப்பப்படும் ஐயங்களுக்கு விடையிறுக்கவேண்டியது என் கடமை.
நான் எனது 70-ஆவது பிறந்தநாளைக் கழிப்பதற்காக, நான் பிறந்து வளர்ந்த ஊரான ஓடைப்பட்டிக்குச் சென்றிருந்தேன். பல உறவினர்களும் நண்பர்களும் வந்திருந்தனர். அதன்பின்னர் ஒரு சுற்றுலாவும் போனோம். பின்னர் மதுரை திரும்பி, பல சொந்த அலுவல்களைக் கவனித்துவிட்டு இன்று காலைதான் சென்னை திரும்பினேன். இந்த இடைப்பட்ட காலத்தில் (25-4 முதல் 17-5 முடிய) எனக்கு வலைத்தளத் தொடர்பு இல்லை. எனவே பதில் மடல்களை இப்போதுதான் பார்க்கிறேன். நண்பர் இளங்கோவன் எழுப்பியுள்ள ஐயங்களுக்கு விடை எழுத விளக்கமான கட்டுரை தேவை. எழுதியதும் அனுப்புகிறேன்.
வருகிற 20 முதல் பத்து நாட்கள் இடைவெளியில் பயணக்கட்டுரைகள் தொடரும்.
அனைவருக்கும் மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா
 

Pandiyaraja

unread,
May 18, 2013, 10:47:51 AM5/18/13
to tamil...@googlegroups.com
அன்புடையீர்,
இது திரு. நாக. இளங்கோவன் எழுப்பியிருக்கும் சில ஐயங்களுக்கான விடை.
இளங்கோவன் எழுப்பிய ஐயங்கள் என்னைத் திவிரமாகச் சிந்திக்கத் தூண்டின. எனவே அவருக்கு மிக்க நன்றி. வேறு இன்னும் ஐயங்கள் இருந்தால் தவறாமல் எழுப்புங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.
மிக்க நன்றி,
அன்புடன்,
ப. பாண்டியராஜா
 
எனது பதில்
 

1) வாடை துவக்கத்தில் "ஏறுடை நிரை" மேய்ச்சலில்

இருக்கும் காட்சியும், பின்னர் அது கடுமழையால்

புலம் பெயர்கின்ற காட்சியும் வருகின்றன.

ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்

புலம்பெயர் புலம்பொடு கலங்கி –

என்ற அடிகளுக்கு உரைகள் இவ்வாறுதான் அமைந்திருக்கின்றன. இங்கே புலம்பெயர் புலம்பொடு என்று சொல்லப்பட்டிருப்பதைக் கவனிக்கவேண்டும். மாடுகளைக் கிடைபோடுவதற்காக அவர்கள் ஏற்கனவே புலம்பெயர்ந்து (தமது ஊரை விட்டு) வெகுதொலைவுக்கு வந்திருக்கிறார்கள். அந்தப் புலம்பு – தனிமையால் அவர்கள் கலங்கியிருக்கிறார்கள். அதோடு இப்பொழுது பெய்கின்ற மழையாலும் இப்போது வேறு புலம் செல்லநேரிட்டதால் மிகவும் கலங்கி என்ற பொருள்தான் நான் கொள்வது. வேறுபுலம் பரப்பி என்பதிலேயே புலம்பெயர்தல் அடங்கிவிடுகிறது. மீண்டும் புலம்பெயர் புலம்பு என்று சொல்லவேண்டிய தேவை இல்லை. வேறுபுலம் என்பதில் உள்ள புலம் இப்போதுள்ள மேய்ச்சல் புலம். புலம்பெயர் என்பதில் உள்ள புலம் அவர்கள் வாழும் ஊர். புலம்பு என்பதற்கு துயரம் என்பதைக் காட்டிலும் தனிமைத்துயரம் என்பதுவே பொருந்தும் புலம்பு என்பதுவே தனிமையைக் குறிக்கும். மலையில் ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்துக்கும் போவது எப்படிப் புலம்பு ஆகும்? எனவே அது ஊரைவிட்டு வந்த புலம்புதான். அந்தப் புலம்பொடு இப்பொழுது வேறுபுலம் பரப்புதலும் சேர்ந்துகொண்டது.

அத்துடன்

மேய்ச்சலுக்காகவே புலம் பெயர்ந்து ஊரை விட்டு வந்த நிரைகள்+இடையர்கள் காட்சியையும் தருகின்றது.

வாடையின் காலம் ஐப்பசி மாதத் துவக்கத்தைக்

குறிப்பதையும், தற்போது குறுவைச் சாகுபடி

என்று நாம் சொல்கின்ற பருவத்தை ஒத்து இருக்கிற

காட்சியையும் காணமுடிகிறது.

(வண் தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க).

 

ஆனால், இந்தக் காலக் கட்டத்தில் மேய்ச்சலுக்காக

நிரைக்கூட்டம் செல்ல வேண்டிய தேவை என்ன?

 

இப்படி வெள்ளாமை நிறைந்து இருக்கும் பருவத்தே

மேய்ச்சல் ஆகக்கூடியதா? வேளாளர் மேய்ச்சலை

அனுமதிப்பார்களா?

 

அதுவும், *புலம் பெயர்ந்து* இடையர்கள் கிடை போட்டு

மேய்ச்சலுக்குச் செல்ல வேண்டிய காரணம் என்ன?

 

மருத நிலப் பகுதியில்,  (அது குறிஞ்சியை ஒட்டி இருந்தாலும்)

பெருவாரியான மேய்ச்சல் என்பது தை அறுவடைக்குப் பின்னர்

தொடங்கி மாசி, பங்குனி, சித்திரை, ஆனி வரை போகும்.

 

இங்கே காட்டப் படுகின்ற மேய்ச்சல் எவ்வகையான பொருளியல்

காரணம் உடையது என்பதை எண்ணித் தோன்றிய தேட்டம் இவை.

தங்கள் கருத்தறிய ஆவல்.

நான் பிறந்து வளர்ந்த ஊர் மதுரைக்கு மேற்கே சுமார் 100 கி.மீ தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள சின்னமனூர் அருகே இருக்கும் ஓடைப்பட்டி என்ற சிறிய கிராமம். அங்கு முல்லை நில வாழ்க்கைதான். கிணறுதோண்டிக் கமலை வைத்து நீர் இறைத்துச் வெள்ளைச்சோளம், மிளகாய் போன்றவை பயிர்செய்வார்கள். ஆனால் ஊருக்குக் கிழக்கே வானம்பார்த்த பூமிதான். சுமார் இரண்டு மைல் தொலைவில் மலை உண்டு. மலை அடிவாரம் வரை காட்டு வெள்ளாமையில், கடலை, வரகு, சாமை, குதிரைவாலி போன்றவை பயிர்செய்வார்கள். எனவே உரத்துக்கு நிறையச் சாணம் தேவைப்படும். பணக்காரர்கள் தொழுக்கள் கட்டிப் பசுமாடுகள் வளர்ப்பார்கள் – கூடவே ஒன்றிரண்டு காளைமாடுகளும் இருக்கும் -(ஏறுடை இன நிரை).  இந்தத் தொழுக்கள் ஊரை ஒட்டி இருக்கும். காலையில் வேலைக்காரர்கள் இந்த மாடுகளை (சுமார் நூறு இருக்கும்) அருகிலிருக்கும் மலைக்கு ஓட்டிச் செல்வார்கள் – தம்பிரான் ஊற்று என்று பெயர். மாலையில் திரும்பவும் மாடுகள் மொத்தமாகத் தம் கழுத்துமணிகளை ஆட்டிக்கொண்டு ஊர் திரும்பும் – முல்லைப்பாட்டு இடைப்பெண் – ‘இன்னே வருகுவர் தாயர்’ – படிக்கும்போது எனக்கு அக் காட்சி நினைவுக்கு வரும். இவ்வாறு தை முதல் ஆனி வரை – 6 மாதங்கள் - நடைபெறும். ஆடி தொடங்கியவுடன் காட்டு வெள்ளாமை தொடங்கிவிடும். அப்புறம் மாடுகள் இந்த முல்லைக்காடுகள் வழியே மலைக்குச் செல்லமுடியாது. எனவே ஆடி முதல் மார்கழி முடிய மாடுகள் மலையிலேயே தங்கிவிடும். இதனையே ‘கிடை போடுதல்’ என்பார்கள். மாட்டு இடையர்களும் மாடுகளுடன் தங்கிவிடுவர் – புலம்பெயர் புலம்பு என்பது இதனையே குறிக்கிறது என்பது என் கருத்து. எனவே கூதிரின் தொடக்கமாகிய ஐப்பசியில் கோவலர்கள் மலையில்தான் கிடைபோட்டு இருப்பர்.

      இது எனது சொந்தப் பட்டறிவு. ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால்தான் இந்தப் பேரிலக்கியங்களை நன்கு புரிந்துகொள்ளமுடிகிறது – இதற்காகப் பலமுறை நான் இறைவனுக்கு நன்றி சொல்வது வழக்கம்.

மதுரை நகர் அருகில் இத்தகைய பழக்கம் இருந்திருக்கும். அது எந்தக் காலத்தில் நடைபெறும் என்று விராட்டிபத்து, கோச்சடை, துவரிமான் பகுதிகளின் பெரியவர்களைச் சந்தித்துத் தகவல் பெற ஆவல். மிக வயதானவர்களுக்கே இது தெரியும். சீக்கிரம் செய்யவேண்டும். நண்பர் உதயன் போன்றவர்களின் உதவியைக் கேட்டுள்ளேன். இந்த முறை மதுரை சென்றிருந்தபோது அடித்த அக்கினி நட்சத்திர வெயிலின் கொடுமையைத் தாங்கமுடியாமல் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வெளியில் தலைகாட்டமுடியவில்லை.

என்னுடைய கருத்து – மதுரையை ஒட்டிய நாகமலைத் தொடரின் வடக்குச் சரிவில்தான் நெடுநல்வாடை குறிப்பிடும் கிடை போடப்பட்டிருக்கவேண்டும். மதுரையின் புறநகர் ஆயர்களும், மதுரையைச் சுற்றியிருக்கும் சிற்றூர்களின் ஆயர்களும் இந்தப் பகுதியில் அந்தக் காலத்தில் கிடை போட்டிருக்கலாம்.

திரு.இளங்கோவன், தங்களுடைய இந்தப் பகுதி கேள்விகள் அனைத்துக்கும் இது பதிலாய் அமையும் என நினைக்கிறேன்.

2) மழை பொழிகிறது. கடுங்குளிர்.

கோவலர் என்பது இடையரைக் குறிக்குமானால்,

அவர்கள் நிரைக்கூட்டத்தை புலம் பெயர்க்கிறார்கள்.

இங்கே ஏன் நக்கீரர் "கொடுங்கோல்" என்ற சொல்லாட்சியைப்

பயன்படுத்துகிறார்? மாட்டுக் கூட்டத்தை மேய்ப்பவர்கள்

கோல் வைத்திருப்பார்கள். அது நீளமானதாகவும் இருக்கும்.

ஆனால் அதனைக் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?

மாடுகளைக் காக்கப் புலம் பெயர்க்கும் இடையரின் கோல் கொடும் கோலாகச்

சொல்லப் படவேண்டியதன் தேவை என்ன என்றும் மனம் தேடுகிறது.

 

மாட்டு இடையர்கள் நீண்ட கழியை வைத்திருப்பர். அதன் தலைப்பகுதி வளைவாக இருக்கும். அதனால் உயரமான மரங்களின் கிளைகளை வளைத்து இலைதழைகளை இணுங்கிப்போட்டு மாடுகளுக்கு இரையாகப் போடுவர். அதுவே கொடுங்கோல் (கொடும் = வளைவான) எனப்படுகிறது என்பது என் கருத்து. சமயத்தில் மாடுகளை அச்சுறுத்தவும், மறித்து வழிநடத்தவும் இது பயன்படுத்தப்படும். அதனாலும் கொடுங்கோல் எனப்பட்டது என்பர் உரையாசிரியர் (கொடும் = கொடிய). முல்லைப்பாட்டும் கொடுங்கோல் கோவலர் பின்னின்று உய்த்தர – 15 என மாட்டு இடையர்களைப் பற்றிக் கூறுவதைக் கவனிக்க.

 

3) முழுவலி மாக்கள் என்பது நன்கு தின்று, பயிற்சி செய்து மறமேறிய

உடலமைப்பு கொண்டவர்களைச் சொல்வதாகவே இருக்கிறது.

முழுவலி என்பது யாரிடமும் இருக்கலாம். பலவான்களைக் (பயில்வான்?)

குறிக்கிற சொல்லாக மட்டுமே தெரிகிறது. உரோமானியர்களின் காசு

அந்த இடத்தில் கிடைத்தது என்பதற்காக அந்த முழுவலி மாக்கள் உரோமானியர்களாக

இருப்பார்கள் என்று கருதுவது கடினம் என்றே தோன்றுகிறது. 

 

------------------  -------------------    வெருவரும் தோற்றத்து

வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் –

என்ற முல்லைப்பாட்டு அடிகளை (60,61) நினைவுகூருங்கள்.

இந்த ‘முழுவலி’ என்பது யவனருக்கே உரித்தானது என்று நான் கூறவில்லை. தமிழரிலும் நல்ல உடற்கட்டு மிக்கவர்கள் அன்று இருந்திருப்பர். அந்த முழுப் பகுதியின் ஒட்டுமொத்தப் பொருளைக் கூர்ந்து நோக்கும்போது இவர்கள் யவனராகலாம் என்பது என் கருத்து.

ஏனெனில் இருகோட்டு அறுவை என்ற அந்த உடுப்பு விளக்கம் சற்று பொருந்தவில்லையோ

என்றே கருதுகிறேன். முழுவலி மாக்களின் பயன்பாடு முகன்மையாக காவல், அரணம்,

அடியாள், மெய்க்காப்பாளர் போன்ற பணிகளுக்காகவே. அப்படியான காவற் பணியில்

இருப்பவர்கள் 20 அடி நீள உடுப்பை உடுத்தியிருப்பார்கள் என்று எண்ணுவது சற்று 

கடினமாக இருக்கிறது. தடுக்காத, பணிக்கு இடையூறு இல்லாத, இழுத்துக் கட்டிய உடுப்பே காவலர் உடுப்பு.அதனால் அந்த நீள உடுப்பு முழுவலி மாக்களுக்குப் பொருந்தவில்லை என்று

கருதுகிறேன். இதில், அம்மா இராசம் அவர்களின் கருத்தோடும் எனக்கும் ஒப்புமை உண்டு. தங்கள் விளக்கத்தையும் பார்த்தேன். 

வணிகத்துக்காக வந்த யவனர்கள் தங்களுடன் காவலுக்கு யவன வீரர்களையும் அழைத்துவந்திருக்கலாம். எனவே வணிக யவனர்களும், யவனப் போர்வீரர்களும் தங்கும் பகுதியாக அது இருந்திருக்கலாம். அந்த வணிகர்கள் சாதாரண உடையே (civil dress) அணிந்திருப்பர். இந்த நெடுநல்வாடை யவனர்கள் வணிகர்களாக இருந்திருக்கலாம். மேலும் போர்வீரர்கள் தங்கள் சீருடையில் எப்போதும் இருந்திருக்கமுடியாது. காவல் காக்கும் நேரத்தில் சீருடையில் இருந்திருக்கலாம்.

மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை

மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து

வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் – முல்: 59-61

 

என்ற முல்லைவரிகள் அரசனின் போர்க்களத்தில் பணியாற்றிய யவனர்களைப் பற்றிக் கூறுகிறது. இதுதான் அவர்களின் பணிக்கான சீருடை. ஆனால் நெடுநல்வாடை யவனர்கள் அன்றைய மாலைநேரத்தில் பணியில் இருக்கவில்லை. குடித்து வெறித்து இருந்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் கண்ணி - தலைமாலை (head wreath) அணிந்து, சாதாரண உடையில் இருந்திருக்கிறார்கள். அதுதான் இருகோட்டு அறுவையர் எனச் சிறப்பாக நம் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் நக்கீரரால் சொல்லப்படுகிறது என்பது என் கருத்து. இருகோட்டு அறுவையர் என்ற தொடர் அவர்களைத் தமிழரினின்றும் வேறுபடுத்திக்காட்டவே நக்கீரரால் தெரிவுசெய்யப்பட்டு அழுத்தமாகக் குறிக்கப்படுகிறது என்பது என் கருத்து. அதற்குரிய சரியான படம் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் விளக்கத்தைக் கட்டுரையில் கொடுத்திருக்கிறேன்.

      அடுத்து இந்த முழுவலிமாக்கள் ஏன் தமிழராக இருக்கமுடியாது என்று கேட்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இந்த யவனர்களின் குடியிருப்பு இன்றைய Madura coats ஆலை அருகே இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தேன். இதன் வழியாகத்தான் நக்கீரர் நம்மை மதுரை நகருக்குள் அழைத்துச் செல்கிறார். 18-ஆம் நூற்றாண்டு மதுரைப் படத்தில் இதனைக் காணலாம். இந்த ஆலைக்கு மிக அருகில் இருப்பது கரிமேடு என்ற பகுதி. மிகவும் துடிப்பான, வீரம் மிக்க, போர்மறத்துக்கு அஞ்சாத மக்கள் இவர்கள். இவர்கள் ஆலைக்காக அங்கு பின்னாளில் குடியமர்த்தப்பட்டவர்களா, தொன்றுதொட்டு இருப்பவர்களா என ஆயவேண்டும். தொன்றுதொட்டு இருப்பவர்களாயின் இந்தக் கரிமேட்டுக்காரர்கள் நக்கீரரின் முழுவலி மாக்களாக இருக்கலாம். இப்பகுதி கவனமாக ஆயப்படவேண்டியது.

அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

மிக்க நன்றி ஐயா!

 

Other recipients:

//படலைக் கண்ணி பரேர் எறுழ்த் திணி தோள்

முடலை யாக்கை முழுவலி மாக்கள்

//

 

ஐயா, இன்னோர் ஐயம்.

 

படலைக் கண்ணி என்பது "பரந்த பார்வையையுடைய" - அதாவது

காவலாளி என்ற பொறுப்பில், காவல் நோக்கில் அங்கும் இங்கும்

அகண்டு விழிப்புடன் பார்க்கும் பார்வையை யுடைய தோள் வலி  மிகுந்து

முறுக்கேறிய உடலினைக் கொண்ட முழுவலி மாக்கள்

 

என்று பொருள் கொள்ள ஏலுமா?

 

படலை என்பது ‘பரந்த’ என்ற பொருள் தருமா? கண்ணி என்பது பார்வை என்ற பொருளில் சங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளதா?

பெரும்பாணாற்றுப்படை அடிகளைக் காண்க:

கோட்டிணர் வேம்பின் ஏட்டிலை மிடைந்த

படலைக் கண்ணிப் பரேரெறுழ் திணிதோள்

முடலை யாக்கை முழுவலி மாக்கள்

சிறுதுளைக் கொடுநுகம் நெறிபட நிரைத்த

பெருங்கயிற் றொழுகை மருங்கிற் காப்ப – 59 – 63

நக்கீரரின் அதே அடிகள்! இங்குக் கூறப்படுவோர், உமணரின் உப்புவண்டிகளின் தொடருக்குப் (caravan) பக்கவாட்டில் நடந்துசென்றவண்ணம் காவல் காத்துச் செல்கின்றனர். இவர்கள் அணிந்திருந்த ஆடை பற்றிய குறிப்பு இங்கு இல்லை. இவர்களும் யவனர்களா அல்லது இவர்கள் நம்மவர்களா – தெரியவில்லை. எனவேதான் இதனை நான் என் கட்டுரையில் சுட்டிக்காட்டவில்லை.

அடுத்து,

கோட்டவும் கொடியவும் விரைஇக், காட்ட

பல்பூ மிடைந்த படலைக் கண்ணி

ஒன்றமர் உடுக்கைக் கூழ் ஆர் இடையன் – பெரும்: 173-175

என்ற அடிகளிலும் படலைக் கண்ணியைப் பார்க்கலாம். இவர்கள் நம் ஊர் இடையர்கள். கூழ் குடிப்பவர்கள் - வண்டு மூசு தேறல் அல்ல. ஒன்று அமர் உடுக்கையர்கள் – இருகோட்டு அறுவையர் அல்லர்.

இந்த மூன்று இடங்களைத் தவிர படலைக் கண்ணி சங்க இலக்கியங்களில் வேறு பாடல்களில் காணப்படவில்லை. படலை உண்டு – கண்ணியும் உண்டு – ஆனால் படலைக் கண்ணி இந்த மூன்றும்தான்.

 

இந்த இரண்டு அடிகளில் சொல்லப் படுபவர்களும்

இதற்கு அடுத்த அடிகளில் சொல்லப்படுபவர்களும் (தேறல் மாந்தி...)

வேறு வேறு வகையானவர்களோ என்ற ஐயத்தில் இத்தேட்டம்!

இது ஒரே தொடர்தான் என்பது என் கருத்து. முழுவலி மாக்கள் – தேறல் மாந்தி – தண்துளி பேணார் – வேண்டுவயின் திரிதர – என்பது ஒரே தொடர்தான் அன்றோ. ஒரு தொடர்ச்சி இங்கு காணப்படுவதைக் கவனிக்க. எனினும் தங்களின் தேட்டம் வேறு பொருள் தந்தால் நல்லது – ஒரு புதிய பொருள் கொடுக்கும்.

 

அன்புடன்

நாக.இளங்கோவன்

 

மிக்க நன்றி நாக.இளங்கோவன் அவர்களே!

அன்புடன்,

C.R. Selvakumar

unread,
May 18, 2013, 1:10:03 PM5/18/13
to தமிழ் மன்றம்
//நான் எனது 70-ஆவது பிறந்தநாளைக் கழிப்பதற்காக..//

அன்புள்ள ஐயா! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 

அன்புடன்
செல்வா


2013/5/18 Pandiyaraja <pipi...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

வேந்தன் அரசு

unread,
May 18, 2013, 7:24:14 PM5/18/13
to tamil...@googlegroups.com


20 ஏப்ரல், 2013 12:56 AM அன்று, Pandiyaraja <pipi...@gmail.com> எழுதியது:

அன்புடையீர்,
இத்துடன் பயணம் -4 -க்கான கட்டுரை இணைத்து அனுப்பப்பட்டுள்ளது - வழக்கம்போல் .doc, .pdf ஆகிய இரு கோப்புகளில். இந்தத் தவணைக்காக நிறைய வலைத்தளத் தேடல்கள் தேவைப்பட்டதால் நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.
படித்தவர்கள் தங்கள் பின்னூட்டங்களை இட்டால், என்னுடைய ஆய்வுக்கு மிக்க ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா


மிக அருமை ஐயா. உங்கள் விளக்கவுரை சிக்கனமா ஆனால் தெளிவாக இருக்கு.

இருகோட்டு அறுவை என்பது தோள்மேல் துண்டு என கருதி இருந்தேன்.

வண்டு மூசு தேறல் என்பதால் அது நம்ம  ஊர் கள்ளு என கொள்ளலாம்.  

Elangovan N

unread,
May 19, 2013, 5:12:46 AM5/19/13
to tamilmanram
அன்பின் முனைவர் பாண்டியராசா அவர்களுக்கு
வணக்கம்.

முதற்கண் தங்களுக்கு 70வது பிறந்த நாள் வாழ்த்துகள்.
ஐயா, பல்லாண்டு பல்லாண்டு வாழிய நீவிர்!

தங்களின் நெடிய விளக்கத்திற்கு மிக்க நன்றி.
தங்களின் பயணம் தொடரட்டும். நல்ல தேடல்களைத்
தங்கள் கட்டுரை ஏற்படுத்துகிறது.  

என்னுடைய பட்டறிவு காவிரிக் கரை மருத நிலங்களிலே
கிராமங்களில் அமைந்தது. நீங்கள் சொல்வதுபோலவே
நானும் அதனால் பாக்கியவாளனாகவேக் கருதுகிறேன்.
கருத்துகளில் சிறிது மாறு இருப்பினும் உங்களின் தொடரை விரும்பிப்
படித்துக் கொண்டிருப்பேன். அடுத்த கட்டுரைகளை அனுப்பி வையுங்கள்.

மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்



2013/5/18 Pandiyaraja <pipi...@gmail.com>

Pandiyaraja

unread,
May 20, 2013, 2:25:09 AM5/20/13
to tamil...@googlegroups.com
அன்புடையீர்,
பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்னவர்களுக்கும், பின்னூட்டம் இட்டவர்களுக்கும் மிக்க நன்றி. இவை இந்தப் பயணத்தை இன்னும் சிறப்பாக எடுத்துச்செல்ல மிகவும் உதவியாகவும் ஊக்கப்படுத்துவதாகவும் அமையும்.
இத்துடன் பயணம்-5-க்கான கட்டுரை இணைப்பாக அனுப்பப்பட்டுள்ளது - வழக்கம்போல் .doc, .pdf ஆகிய இரு வடிவங்களில்.
நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா
பயணம்-5.doc
பயணம்-5.pdf

Pandiyaraja

unread,
May 30, 2013, 2:47:25 AM5/30/13
to tamil...@googlegroups.com
அன்புடையீர்,
இத்துடன் பயணம்-6-க்கான கட்டுரை இணைப்பாக அனுப்பப்பட்டுள்ளது - வழக்கம்போல் .doc, .pdf ஆகிய இரு வடிவங்களில்.
நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா

பயணம்-6.pdf
பயணம்-6.doc

வேந்தன் அரசு

unread,
May 30, 2013, 5:46:15 AM5/30/13
to tamil...@googlegroups.com
சூப்பர் !

30 மே, 2013 12:17 PM அன்று, Pandiyaraja <pipi...@gmail.com> எழுதியது:

அன்புடையீர்,
இத்துடன் பயணம்-6-க்கான கட்டுரை இணைப்பாக அனுப்பப்பட்டுள்ளது - வழக்கம்போல் .doc, .pdf ஆகிய இரு வடிவங்களில்.
நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா

Rajam

unread,
May 30, 2013, 6:52:41 PM5/30/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja
அன்புள்ள முனைவர் பாண்டியராஜா,

வணக்கம். வகுப்பில் எப்போதும் ஆர்வமுள்ள மாணவரைத் தேடுவேன் என்றீர்களே, இதோ 'உள்ளேன் ஐயா,' என்று ஆஜர் சொல்லிவிட்டேன்! :-) 

நெடுநல்வாடையில் எந்த வரியில்தான் அழகில்லை? எந்த வரிதான் சுவை தாராதது? 

என் இந்தப் பதிவு 'ஆஜர்' சொல்ல மட்டும். பயணம் 6 பற்றிச் சில கருத்துகளை முன்வைக்க விருப்பம். இப்போது கொஞ்சம் 'வசக்கேடு. (== சுகமில்லை).' கூடிய விரைவில் மீண்டும் வருகிறேன். 

ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள். இந்தப் பகுதியில் "கையற்று" என்ற சொல்லுக்கு நேரடிப் பொருள்  தருவீர்களா? நன்றி. 

தொடருங்கள், யானும் தொடர்வேன். 

அன்புடன்,
ராஜம் 



<பயணம்-6.pdf><பயணம்-6.doc>

Pandiyaraja

unread,
May 31, 2013, 3:50:58 AM5/31/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja
அன்புடை அம்மையீர்,
நான் இப்போது வகுப்பு எடுக்கவும் இல்லை - நீங்கள் என்னிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய மாணவரும் அல்லர். எனக்குத் தெரிந்ததை நான் சொல்லும்போது 'கண்கள் மின்னுபவரை'-க் கண்டால் மகிழ்ச்சி. அவ்வளவுதான்.
கையற்று என்பதற்கான நேரடிப் பொருள் - பேரகராதி கூறுவது:
1. To be laid prostrate, overcome, as with pity;
செயலற்றுப்போதல். காணா வுயிர்க்குங் கையற் றேங்கி (மணி. 3, 89).

2. To be laid prostrate, overcome, as with pity;
மனமழிதல். கையற் றின்ன லெய்தலும் (ஞானா. 31, 22).

இன்னும் பல தொடர்கின்றன. ஆனால் இந்த இடத்தில் பொருந்துவன இந்த இரண்டுமே. இரண்டுக்கும் ஆங்கிலத்தில் ஒரே சொற்றொடர் கொடுக்கப்பட்டுள்ளது தட்டச்சுப் பிழை போல் தோன்றுகிறது. ஆனால் தமிழில் கொடுக்கப்பட்ட பொருள்கள் சரியாகத் தோன்றுகின்றன. முதலில் இருக்கும் பொருள் ஒரு State of the body. அடுத்த பொருள் state of the mind.

தேறா நெஞ்சம் கையறுபு வாட - நற்.345/8

கையறு நெஞ்சிற்கு உயவு துணையாக - ஐங்.477/3.

கையறு நெஞ்சம் கனன்று தீமடுக்கும் - கலித்.103/10

கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க - அகம் 113/22

கையறு நெஞ்சினள் அடைதரும் - அகம் 279/16

போன்ற பயன்பாடுகள் கையறுநிலை என்பது ஓர் மனநிலை என்றும் வலியுறுத்துகின்றன.

இரண்டாவது பொருளை எடுத்துக்கொண்டால், மனம் செயலிழந்துபோனாலும் உடல் வழக்கமான செயல்களைச் - by reflex action - An automatic instinctive unlearned reaction - செய்துகொண்டுதான் இருக்கும். இந்த மனநிலையில் வேறு ஒன்றும் செய்யத் தெரியாத நிலை என்று கூறலாம். பாரி இறந்தவுடன் கலங்கிக் கையற்றுப்போன கபிலர் கூறுகிறார்:

பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று

நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்

சேறும்! வாழியோ! பெரும்பெயர்ப் பறம்பே!

கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்

நாறிருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே. ( புறம் 113:5-9

எனவே, கலங்கிக் கையற்ற கபிலர் கைகாலை முடக்கிப் படுக்கவில்லை.

பழனுடைப் பெருமரம் தீர்ந்தென கையற்றுப்

பெறாது பெயரும் புள்ளினம் போல - புறம்: 209:9,10

கனி கிடைக்காமல் கையற்ற பறவைகள் துவண்டுபோய்விடவில்லை - இன்னும் தொலைவு நோக்கிப் பறக்கின்றன.

 

கையறு என்ற சொல்லை அடியாகக் கொண்ட 7 சொற்கள் மொத்தம் 52 முறை சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பெருவாரியான இடங்களில் உரைகளில் செயலற்று வருந்த என்ற பொருளைத்தான் தருகின்றன.

எனவே மதுரை மாளிகை மதலைகளில் பள்ளிகொண்டுள்ள புறவுகள் இரவும் பகலும் மயங்கிக் கையற்று, மதலைப் பள்ளிகளில் மாறிமாறி அமர்கின்றன என்று நான் கொண்ட பொருள் சரி என்றே எனக்குத் தோன்றுகிறது. இதற்கு, நச்சினார்க்கினியர், பெருமழைப் புலவர் ஆகியோர் கொண்ட பொருள் இங்கு பொருந்தாது என்பது என் கருத்து.

>> பயணம் 6 பற்றிச் சில கருத்துகளை முன்வைக்க விருப்பம். இப்போது கொஞ்சம் 'வசக்கேடு. (== சுகமில்லை).' கூடிய விரைவில் மீண்டும் வருகிறேன். 

தங்களுக்கு மீண்டும் நல்ல சுகம் கிட்ட இறைவனை வேண்டுகிறேன். அந்தக் 'கூடிய விரைவில்' என்பது எப்போது வரும் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறேன்.

மிக்க நன்றி,

அன்புடன்,

ப.பாண்டியராஜா

 

 

C.M உதயன்

unread,
May 31, 2013, 4:06:37 AM5/31/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja
நலமா அம்மா,
பாண்டியராஜன் அய்யாவை ஒரு முறை வீட்டில் சந்தித்தேன், மதுரையை பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் பேச்சு நீண்டது.
நெடுநல்வாடை பற்றி அய்யா விளக்கியவிதம் அப்படியே நக்கீரரின் உடன் நடப்பது போன்று இருந்தது. படவிளக்க உரைக்கு அவர் படும் சிரத்தை ரொம்ப கஷ்டம்.

இவைகள் புத்தகமாக வந்தால் கண்டிப்பாக என்போன்றோருக்கு பேருதவியாக இருக்கும்

2013/5/31 Rajam <ra...@earthlink.net>



--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

Pandiyaraja

unread,
Jun 8, 2013, 1:16:56 AM6/8/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja
அம்மையீருக்கு ஒரு நினைவூட்டல்!
>>
>>என் இந்தப் பதிவு 'ஆஜர்' சொல்ல மட்டும். பயணம் 6 பற்றிச் சில கருத்துகளை முன்வைக்க விருப்பம். இப்போது கொஞ்சம் >>'வசக்கேடு. (== சுகமில்லை).' கூடிய விரைவில் மீண்டும் வருகிறேன். 
>>
அந்தக் 'கூடிய விரைவில்'-ஐத் தினமும் எதிர்பார்த்தேன். இன்னும் வராததால் பல கவலைகள்:
Case 1. வசக்கேடு இன்னும் சரியாகவில்லையோ?
Case 2. உடல்நலம் பெற்றிருப்பினும், இங்கு எழுதமுடியாத அளவுக்கு வேலைப்பளுவோ?
Case 3. கருத்துகளை முன்வைக்கும் விருப்பம் மாறிவிட்டதோ?
Case 4. Else தள்ளிக்கொண்டே போகிறதோ?
அடுத்த கட்டுரை - பயணம் 7 - due on 10th. கட்டுரை தயார். பயணம் - 6 பற்றிய தங்களின் கருத்தால் 7-இல் மாற்றங்கள் செய்யநேர்ந்தால் செய்யக் கொஞ்சம் அவகாசம் தேவை அல்லவா!
 
>> தொடருங்கள், யானும் தொடர்வேன்
 
எனவே, தொடரலாமா?
நன்றி,
ப.பாண்டியராஜா
On Friday, May 31, 2013 4:22:41 AM UTC+5:30, rajam wrote:

Pandiyaraja

unread,
Jun 8, 2013, 1:29:37 AM6/8/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja
அன்புடையீர்,
நேற்று நான் தமிழ் virtual Academy நூலகத்தில் (http://www.tamilvu.org/library/libindex.htm)முனைவர் இராஜமாணிக்கனாரின் நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்களைப் பற்றிப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவற்றில் கால ஆராய்ச்சி என்ற நூலில் பத்துப்பாட்டு நூல்களின் காலத்தைப் பற்றிய ஆய்வில், நெடுநல்வாடையில் அடி 31-இல் யவனர்களைப் பற்றிய குறிப்பு இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். இதுதான்
படலைக் கண்ணி பரேரெறுழ் திணிதோள்
முடலை யாக்கை முழுவலி மாக்கள் -
 
எனவே, இதுபற்றி ஏற்கனவே அறிஞர்கள் கூறியிருப்பதை ஒட்டியே எனது கட்டுரை அமைந்திருப்பது கண்டு மிகவும் மகிழ்ந்தேன். இது என்னுடை வெறும் யூகமல்ல - முன்னோடிகள் இருக்கிறார்கள்.
அன்புடன்,
ப.பாண்டியராஜா

Pandiyaraja

unread,
Jun 10, 2013, 12:57:46 AM6/10/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja
அன்புடையீர்,
இத்துடன் பயணம்-7-க்கான கட்டுரை இணைப்பாக அனுப்பப்பட்டுள்ளது - வழக்கம்போல் .doc, .pdf ஆகிய இரு வடிவங்களில்.
பயணம்-6 ஐப் படித்தோருக்கும், படித்துப் பின்னூட்டம் இட்டோருக்கும் மிக்க நன்றி.
நன்றி,
அன்புடன்,
ப.பாண்டியராஜா

பயணம்-7.doc
பயணம்-7.pdf

Pandiyaraja Paramasivam

unread,
Jun 19, 2013, 11:07:57 PM6/19/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja
அன்புடையீர்,
இத்துடன் பயணம்-8-க்கான கட்டுரை இணைப்பாக அனுப்பப்பட்டுள்ளது - வழக்கம்போல் .doc, .pdf ஆகிய இரு வடிவங்களில்.
அன்புடன்,
ப.பாண்டியராஜா
பயணம்-8.doc
பயணம்-8.pdf

Pandiyaraja Paramasivam

unread,
Jun 29, 2013, 2:52:25 PM6/29/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja
அன்புடையீர்,
இத்துடன் பயணம்-9-க்கான கட்டுரை இணைப்பாக அனுப்பப்பட்டுள்ளது - வழக்கம்போல் .doc, .pdf ஆகிய இரு வடிவங்களில்.
அன்புடன்,
ப.பாண்டியராஜா
 
பயணம்-9.doc
பயணம்-9.pdf

C.R. Selvakumar

unread,
Jun 29, 2013, 4:51:54 PM6/29/13
to தமிழ் மன்றம், Pandiyaraja
பேராசிரியரே,

மிக அருமையான கட்டுரை! பல முறை படித்துப் படித்து சுவைத்து சுவைத்து
நுணுகியறிய வேண்டிய கட்டுரை. தினமணியில் நீங்கள் எழுதியிருந்ததை
இராம.கி ஐயா சுட்டியவுடைனேயே, நான் முகநூலிலும் பதிவு செய்திருந்தேன்
உங்கள் கட்டுரையை. அருமையான ஆய்வு ஐயா!!

[முன்னர் படிக்காத நண்பர்களுக்காக தினமணி கட்டுரையின் தொடுப்பு: http://dinamani.com/weekly_supplements/tamil_mani/2013/06/09/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/article1626550.ece ]

அன்புடன்
செல்வா


2013/6/29 Pandiyaraja Paramasivam <pipi...@gmail.com>

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

Pandiyaraja Paramasivam

unread,
Jul 10, 2013, 2:05:20 AM7/10/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja
அன்புடையீர்,
இத்துடன் பயணம் - 10-க்கான கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் .doc, .pdf ஆகிய கோப்புகளில்.
இப் பகுதியில் நாம் பாண்டிய மன்னனின் அரண்மனைக்குள் நுழைகிறோம். மன்னன் அங்கு இப்போது இல்லை என்பது தெரியும்தானே! எனவே அடுத்து இருக்கும் அரசியின் அந்தப்புரத்திற்குள் சென்று பார்க்க விழைகிறோம். நமக்கு அனுமதியில்லை. எனில் புலவர் எவ்வாறு அழைத்துச் செல்லப் போகிறார்? அது அடுத்த பகுதியில்.
இப்போது உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகமே சங்க காலப் பாண்டிய மன்னர்களின் உறைவிடமாக இருந்திருக்கிறது என இலக்கிய அறிஞர்களும், தொல்லியலாரும் கருதுகின்றனர். அரசியின் அந்தப்புரத்தில் இருக்கும் அவளது படுக்கை அறையைப் புலவர் நக்கீரர் கருவறை என்கிறார். இவற்றின் அடிப்படையில் அன்றை பாண்டிய மன்னனின் அரண்மனையின் முழு வரைபடம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
அன்புடன்,
ப.பாண்டியராஜா
பயணம்-10.doc
பயணம்-10.pdf

Karuannam Annam

unread,
Jul 10, 2013, 5:45:01 AM7/10/13
to தமிழ் மன்றம், Pandiyaraja
எதிர்பார்ப்பு ஏற்றித் தொடரை நிறுத்தியுள்ளீர்கள்!

கோவிலின் பகுதி அரண்மனையாக இருந்திருக்கலாம் என்ற செய்தி முன்பு அறியாதது.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2013/7/10 Pandiyaraja Paramasivam <pipi...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Jul 10, 2013, 10:13:50 AM7/10/13
to தமிழ் மன்றம், Pandiyaraja
அன்புள்ள பேராசிரியரே,

சங்க இலக்கியப்பாடல்களுக்குத் தங்களைப்போல் அறிவார்ந்த நோக்கில் புதிய கருத்துகளையும்
படங்களையும் யாரும் இதுவரை தரவில்லை என்றே நினைக்கின்றேன்! நீங்கள் எழுதும் 
அழகுப்பாங்கும், அப்படியே அழைத்துப்போய் அந்தக் காலத்தில் நிகழ்ந்ததை அப்படியே
காண்பது போல் இனிய நடையில் எழுதியிருப்பதையும் காண்கையில் நெஞ்சம் பெரிதும்
இனிக்கின்றது ஐயா! வாழ வாழ்க உங்கள் தேனினிய பகிர்வுகள்!
உங்கள் படம் ஒன்றை மற்றவர்களின் ஆர்வத்தை ஈர்ப்பதற்காக 
இணைக்கின்றேன்:

Inline image 1

அன்புடன்
செல்வா

2013/7/10 Pandiyaraja Paramasivam <pipi...@gmail.com>
image.png

Pandiyaraja Paramasivam

unread,
Jul 20, 2013, 2:15:19 AM7/20/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja
அன்புடையீர்,
அனைவருக்கும் மிக்க நன்றி. ஊக்கமளிக்கும் பின்னூட்டங்களுக்கு மீண்டும் நன்றி.
இத்துடன் பயணத்தின் அடுத்த கட்டத்திற்கான கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. இதில் நாம் பாண்டிமாதேவியின் அந்தப்புரத்தின் வெள்ளிப்புற, உட்புறக் காட்சிகளைக் காண்கிறோம். அதுதான் ஆடவர் குறுகா அருங்கடியினது ஆயிற்றே என்ற ஐயம் எழலாம். இந்த ஐயத்தையும் இக் கட்டுரை தீர்க்கும்.
அன்புடன்,
ப.பாண்டியராஜா

செல்வா

2013/7/10 Pandiyaraja Paramasivam <pipi...@gmail.com>


2013/6/29 Pandiyaraja Paramasivam <pipi...@gmail.com>


2013/5/18 Pandiyaraja <pipi...@gmail.com>


2013/4/25 Elangovan N <nela...@gmail.com>
ஆனால், இந்தக் காலக் கட்டத்தில் மேய்ச்சலுக்காக</di
...
பயணம்-11.pdf

C.R. Selvakumar

unread,
Jul 20, 2013, 9:45:25 AM7/20/13
to தமிழ் மன்றம், Pandiyaraja
அன்புள்ள பேராசிரியர் ஐயா!

உங்களோடு தமிழ்ப்பயணம், அறிவுப்பயணம் செய்வது இனிதாக இருக்கின்றது!
நீங்கள் கூறுவதுபோல்,

"புலவர் என்ன சொன்னாலும் அது சரியாகத்தான் இருக்கும் 
என்று வாளாவிருந்துவிடுவதைவிட அவரைக் கேள்விகள் கேட்டு, 
அவற்றுக்கான பதிலை அவர் கூற்ரிலிருந்தே பெறும்போதுதான் 
புலவரின் முழுத்திறனையும் நம்மா ஓரளவு புரிந்துகொள்ள முடிகின்றது!"

என்பதைப் பற்பல முறை உணர்ந்திருக்கின்றேன் (குறிப்பாகத் திருக்குறளை
நான் பயின்ற போது). முற்றிலும் உண்மை! பல நேரங்களில் வியப்பே
மேலிடுகின்றது! 

நான் இந்த முறையை நமக்கு அடுத்து வரும் சில தலைமுறைகளுக்கு (இரண்டு
தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களுக்கு) கற்றுத்தர வேண்டும் அலல்து
சுட்டிக் காட்ட வேண்டும். இம்முறையை முன்னைய தமிழறிஞர்களும்,
ஏன் தற்கால பன்னாட்டு நல்ல அறிவியல் அறிஞர்களும் பின்பற்றுகின்றார்கள்.
இவற்றோடு தக்கவர்கள் நேர்மையான முறையும் உண்மை அறியும் முகமாகக்
கலந்துரையாடவும் வேண்டும். இது பல்லாயிரக்கணக்கானோர் செய்யும் ஒன்றன்று,
ஆனால் ஒவ்வொரு தமிழ்த் துறையிலும், இலக்கிய ஆர்வலர் குழுக்களிலும் நிகழ்
வேண்டிய ஒன்று. கொஞ்சம் கொஞ்சம் பரவலாக்கமும் செய்தல் வேண்டும்.
போன முறை படித்த போதே ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பு  என்பது பற்றிக்
கேட்க இருந்தேன்! அருமையான விளக்கம்!

அன்புடன்
செல்வா


2013/7/20 Pandiyaraja Paramasivam <pipi...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

வேந்தன் அரசு

unread,
Jul 20, 2013, 11:31:57 AM7/20/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja


29 ஜூன், 2013 2:52 PM அன்று, Pandiyaraja Paramasivam <pipi...@gmail.com> எழுதியது:

அன்புடையீர்,
இத்துடன் பயணம்-9-க்கான கட்டுரை இணைப்பாக அனுப்பப்பட்டுள்ளது - வழக்கம்போல் .doc, .pdf ஆகிய இரு வடிவங்களில்.
அன்புடன்,
ப.பாண்டியராஜா
 

பாண்டியராஜன் ஐயா

நடுநாள் அமையம் எப்படி அறிவது என இரு கோல் குறிநிலை  கொண்டு அறியும் முறையை விளக்கினீர்கள்.
அத்துடன் இந்த முறையால் நான்கு திசைகளையும் சரியாக அறுதியிடலாம் என்பதை சற்று கூடுதலாக விளக்கி இருக்கலாம்.
சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்றால் அது +/- 23 பாகை மாறுபடலாம். அந்த மாற்பாட்டை தவிர்க்கவே இந்த இரு கோல் குறிநிலை பயன்பாடு என் விளக்கலாம்

சுவையூறும் கட்டுரைக்கு நன்றி

Anna Sundaram

unread,
Jul 20, 2013, 11:19:57 PM7/20/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja
பாண்டிய ராஜன் அய்யா அவர்களின் வேறுபட்ட மற்றும் மாறுபட்ட காலத்திற்கு ஏற்ற சிந்தனை வரும் கால சந்ததிகளுக்கு தமிழில் உள்ள நல்ல பல வளங்களை வாரி வழங்கும் 
அய்யா வளர்க உங்கள் தமிழ்த் தொண்டு 

Thank You 

With Regards
Anna Sundaram 
VAP Australia Pty Ltd
Mob: 0411242134 
VAP means Value Adding Professionals 
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.

Pandiyaraja Paramasivam

unread,
Jul 29, 2013, 11:00:10 PM7/29/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja
அனைவருக்கும் மிக்க நன்றி. 
தங்களின் பின்னூட்டங்கள் 'நக்கீரர் நடைப்பயணம்' முடிந்த பின்னர் அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்கத் தூண்டியிருக்கிறது.
இத்துடன், பயணம் 13-க்கான கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. பாண்டிமாதேவி படுத்துறங்கும் கட்டிலைப் பற்றிய வருணனையை இதில் காணலாம். அரண்மனை மட்டும் அல்ல - அதில் உள்ள ஒவ்வொரு பொருளும் உருவான கதை எனக்குத் தெரியும் - என்ற குறிப்புடன் நக்கீரர் இந்த வருணனையைப் புனைந்துள்ளார் எனலாம் - பலவித ஐயங்களைத் தீர்ப்பதற்காக அவர் தொடுத்திருக்கும் pre-emptive strike இது.
அன்புடன்,
ப.பாண்டியராஜா
பயணம்-12.doc
பயணம்-12.pdf

வேந்தன் அரசு

unread,
Jul 30, 2013, 8:14:58 PM7/30/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja
நன்றி ஐயா

புரிதல் அரிதான வரிகள் இவை என்றாலும் விளங்கும் வண்ணம் சொல்லி இருக்கீங்க

தூங்கு இயல் மகளிர்= அதன் விளக்கம் சரியா என ஆயவும். துளங்கியல் மகளிர் எனும் சொல்லாட்சி உண்டு. அது அசையும் இயல்பை உடைய மகளிர் எனும் பொருள். அதே பொருளிலும் இருக்கலாம்.


29 ஜூலை, 2013 11:00 PM அன்று, Pandiyaraja Paramasivam <pipi...@gmail.com> எழுதியது:

Pandiyaraja Paramasivam

unread,
Aug 20, 2013, 12:32:04 AM8/20/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja
அன்புடையீர்,
சொந்த அலுவல் காரணமாக மதுரைக்குச் செல்லவேண்டியிருந்ததால் 10-ஆம் தேதிக்குரிய பகுதியை அனுப்ப இயலவில்லை. சென்னை வந்த பின்னரே திரு.வேந்தன் அரசுவின் கேள்வியைப் படித்ததால் அதற்குரிய பதிலை இப்போது எழுத நேரமில்லை. பின்னர் எழுதுகிறேன்.
இத்துடன் பயணம்-13-க்குரிய பகுதி இணைக்கப்பட்டுள்ளது.
பாண்டிமாதேவி  படுக்கையில் அமர்ந்திருக்கும் காட்சியைப் புலவர் நம் கண்முன் கொண்டுவந்து காட்டுகிறார். மீண்டும் பழைய ஐயம். ஆனால் விடை வேறு. அது இதில் இல்லை!! இன்னமும் ஐயங்களை உச்சத்துக்குக் கிளப்பி அவற்றுக்கு ஒரேயடியாகத் தீர்வு - இறுதிக்கட்டத்தில். சில ஓமியோபதி மருந்துகள் கிளப்பிவிட்டுத் தணிப்பதைப்  போல.
அன்புடன்,
ப.பாண்டியராஜா
 
 
பயணம்-13.doc
பயணம்-13.pdf

Pandiyaraja Paramasivam

unread,
Aug 27, 2013, 12:54:46 PM8/27/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja
அன்புள்ள வேந்தன் அரசு அவர்களுக்கு,
தங்கள் ஐயம் பற்றி ஆய்ந்தேன். துளங்கு என்பது பொதுவாக அசை என்ற பொருள் தந்தாலும் தளர், சோர்வடை என்ற பொருளும் அதற்கு உண்டு என அறிகிறேன். இங்கே தூங்கு இயல் என்பதற்கு அசையும் இயல்புடைய மகளிர் என்றே உரைகள் கூறுகின்றன. அசை என்பதற்கும் தளர்,ஓய்வெடு என்ற பொருள் உண்டு. பொதுவாக தூங்கு என்பதற்குச் சங்க இலக்கியங்களில் மிகப் பெரும்பாலும் தொங்கு என்ற பொருளே கொள்ளப்படுகிறது. ஒரோவழி அசை, தளர் (தூங்கு நடைக் குழவி) என்ற பொருளும் உண்டு. ஆனால் தூங்கு என்பதற்கு படுத்து உறங்கு என்ற பொருளும் ஒரு இடத்தில் கையாளப்பட்டுள்ளது.
பந்தர் வேண்டா பலர் தூங்கு நீழல் - புறம் 320/2 என்ற அடிக்கு, பலரும் கள்ளுண்டு கிடந்துறங்கும் நிழலிடம் என்று ஔவை.சு. உரை கூறியுள்ளார்.
கட்டில் காலின் தலையில் புடை திரண்டு இருந்த குடத்த என்று புலவர் கூறியுள்ளார். குடம் என்பதுவே அகன்ற அடிப்பகுதியும் குவிந்த வாயும் கொண்டதுதானே. அது புடைதிரண்டுதானே இருக்கும். எனவே புடைதிரண்ட குடத்த என்பது தேவையற்றதன்றோ? ஆனால் தூங்கியல் மகளிர் வீங்கு முலை  கடுப்பப் புடை திரண்டு இருந்த குடம் என்கிறார். எனவே  இது குடத்தின் வழக்கமான புடை திரட்சி அல்ல. அது perfect semicircular symmetry. ஆனால் கட்டில் கால் குடம் சிறிது அடிப்பக்கம் சலிந்து இருக்கும். சில வெந்நீர்ச் செப்புக்குடங்கள் இவ்வாறு இருக்கும். மல்லாக்கப் படுத்திருக்கும் (சூல்கொண்ட!) மகளிரின் மார்பகத்தைப்போல் என்று புலவர் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது என நினைக்கிறேன். இவ்வாறு இல்லாத மகளிரின் மார்பகத்தில் perfect symmetry இருக்குமா? அடிப்பகுதி அளவுக்கு அதிகமாய்ப் புடைத்து (சலிந்து) இருக்கும் மகளிரின் மார்புக்கே தூங்கியல் மகளிர் வீங்கு முலை என்கிறார் புலவர் என நினைக்கிறேன். தூங்கு நிலை என்று சொல்லியிருந்தால் ஐயத்துக்கு இடமிருந்திருக்காது. எனினும் தூங்கியல் என்பது தளர்ச்சியோடு படுத்திருக்கும் நிலையிலுள்ள மகளிரின் புடைத்த மார்பகம் என்ற பொருள் மிகச் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். இதற்கு சூல்கொண்ட மகளிர் என்பதுவும் தேவை இல்லை. இதற்குமேல் இதுபற்றிச் சொல்லச் சற்று தயக்கமாக இருக்கிறது.
நன்றி,
ப.பாண்டியராஜா
 
On Wednesday, July 31, 2013 5:44:58 AM UTC+5:30, வேந்தன் அரசு wrote:

rajam

unread,
Aug 27, 2013, 3:32:59 PM8/27/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja, C. R. Selvakumar
அன்புள்ள முனைவர் பாண்டியராஜா அவர்களுக்கு, வணக்கம். 

கிட்டிய குறுகிய நேரத்தில் இந்தப் பிசிறு மடல். 

1. "துளங்கியல் மகளிர்" என்ற சொல்லாட்சியைச் சங்கப்பாடல்களில் கண்டேனில்லை. எடுத்துக்காட்டி உதவினால் நலம். 

2. "தொங்கு" என்பதைக் காட்டிலும் "அசையாமல் திண்ணென இருக்கும் நிலை (still)" என்பதே "தூங்கு" என்பதை விளக்குவதாக நான் புரிந்துகொள்கிறேன். 

3. "தூங்கு"வதற்கும் "உறங்கு"வதற்கும் உள்ள வேறுபாட்டை மதுரைக்காஞ்சி வரி ஒன்று தெளிவாக்கும்: "தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க"

4. "தூங்கு"வதற்கும் "துயில்"வதற்கும் உள்ள வேறுபாட்டை மணிமேகலை வரி ஒன்று தெளிவாக்கும்: "தூங்கு துயில் எய்திய சுதமதி"

+++++++++++++++++++++ 

//இதற்கு சூல்கொண்ட மகளிர் என்பதுவும் தேவை இல்லை. //

ஆம், ஆம்! 


//இதற்குமேல் இதுபற்றிச் சொல்லச் சற்று தயக்கமாக இருக்கிறது.//

அன்புள்ள முனைவர் பாண்டியராஜா, இங்கே, இந்தத் தமிழ்மன்றம் குழுமத்தில், உங்கள் கருத்தைச் சொல்லத் தயக்கமே தேவையில்லை என்பது என் கருத்து. மிக மிக நயத்தக்க நாகரிகத்துடன் விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள், இதற்கு யாராலும் தடை சொல்ல முடியாது. செல்வாவின் தலைமையில் செவ்வனே இயங்கும் இந்தக் குழுமத்தில் ... "க்ளுக் ப்ளுக்" என்று கிளூகிளுத்து வெறுமே பொழுதுபோக்குக்காக ... "டமாசு"க்காக ... பாலியல் வக்ரம் நிறைந்த பொருளுடன் ... எழுதும் 'முதிர்ந்தும் முதிராத' உறுப்பினர்/எழுத்தர் இங்கே இருப்பதாகத் தெரியவில்லை. 

+++++++++++++++++++++  

அன்புடன்,
ராஜம் 

வேந்தன் அரசு

unread,
Aug 27, 2013, 10:19:45 PM8/27/13
to தமிழ் மன்றம், Pandiyaraja, C. R. Selvakumar
------------...............................-மென் தோள்
துகிலணி அல்குல் துளங்கியல் மகளிர் 
அகிலுண விரித்த அம்மென் கூந்தலின்
மணிமயில் கலாபம்= சிறு பாண் ஆற்றுப்படை.

இந்த காலத்திலும் புணர்ச்சி  மகிழும் புலவர்களாதான் தேடு பொறிகள் செவ்வணே பணி செய்ய இயலவில்லை

யன்றே விடுக்குமவன் பரிசின் மென்றேட்
டுகிலணி யல்குற் றுளங்கியன் மகளி
ரகிலுண விரித்த வம்மென் கூந்தலின்
மணிமயிற் கலாப மஞ்சிடைப் பரப்பித்
துணிமழை தவழுந் துயல்கழை நெடுங்கோட்  265

rajam

unread,
Aug 27, 2013, 11:05:12 PM8/27/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja, C. R. Selvakumar
"மறந்தேன் அதன் திறம், மகிழ்ந்தேன் எடுத்து அதை உரைத்தனை" வேந்தே, மகிழ்ச்சி, நன்றி!! ஏதோவொன்றுறுத்திக்கொண்டிருந்ததனையெடுத்துவிட்டென்றுயர்களைந்தனிர்! புணர்ச்சி மகிழும் புலவர் பட்டியலில் யாம் இல்லையென்பது குறித்துப் புலனாகா மகிழ்ச்சி மட்டுமே!!! 

Pandiyaraja Paramasivam

unread,
Aug 28, 2013, 12:54:21 AM8/28/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja, C. R. Selvakumar
அன்புடை அம்மையீர், வணக்கம்.
தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.
 
1.துளங்கியல் மகளிர் பற்றி வேந்தன் அரசுவைத்தான் துணைக்குக் கூப்பிட்டவேண்டும் என்றிருந்தேன். அவரே குறுக்கிட்டு ஏற்ற பதிலையும் கொடுத்துவிட்டார். எனக்கு வேலையும் மிச்சம். திரு.வேந்தன் அரசு அவர்களுக்கு மிக்க நன்றி.
 
2. தூங்கு என்பதற்கு (அசைவுடன் கூடிய) தொங்குதல் என்ற பொருளும் வருமிடங்கள் உண்டு.
துளை அரை சீறுரல் தூங்கத் தூக்கி - பெரும்.54 -இல் மாட்டுவண்டியின் கீழ் கட்டப்பட்ட உரல் பற்றிக் காண்கிறோம். வண்டி போகும்போது  இது வலதும் இடதுமாய் ஆடிக்கொண்டே இருக்கும். எங்கள் ஊர்ப்பக்கம் மண்ணெண்ணெய் விளக்கைக் கட்டித் தொங்கவிட்டிருப்பார்கள்.
பைங்காய் தூங்கும் பாய்மணற் பந்தர் - பெரும்.267-இல் வருமிடத்திலும் தொங்கும் என்பது பொருந்தும் என நினைக்கிறேன்.
பந்தலிலே பாவக்கா - தொங்குதடி டோலாக்கு!!!
 
3. தூங்குவனர் உறங்கும் என்ற மதுரைக்காஞ்சி அடியை முதலில் பார்த்ததும் தூக்கிவாரிப்போட்டது. இளைஞருக்கான பத்துப்பாட்டு என்ற என் நூலுக்காக, மதுரைக்காஞ்சி பற்றி எழுதும்போது இதனைக் கண்டேன். அப்போதுதான் தூங்கு பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டேன். அப்போது நான் புரிந்துகொண்டது:- நாம் படுக்கும்போது பெரும்பாலும் முதலில் முதுகுப்பக்கம்தான் சாய்வோம் - அதாவது மட்ட மல்லாக்க. பின்பு புரண்டு படுக்கும்போது இந்த நிலை மாறும். பெரும் அலுப்பினால், படுத்தவுடன் தூங்கிவிட்டால் - மல்லாக்கவே அசைவின்றி தூங்கிப்போவோம். அதுவே தூங்குவனராய் உறங்க என்பதன் பொருள் - என நினைக்கிறேன்.
 
4.வௌவால்கள் தூங்கிக்கொண்டே  துயில்வதை நற்றிணை கூறுகிறது.நற்.87/1,2
இங்கும் தொங்கிக்கொண்டு என்ற பொருள் பொருந்தும் என நினைக்கிறேன். அந்த நிலையில் காற்றடித்தால் சிறிது அசையாதா எனப் பார்க்கவேண்டும்.
 
மற்றபடி, அசையாமல் திண்ணெனப் படுத்திருக்கும்  மகளிர் என்ற பொருள்தான் நெடுநல்வாடையில் இந்தவிடத்தில் பொருந்தும் என நானும் நினைக்கிறேன்.
 
ஆம், ஆம் என்று நான் நினைத்ததைச் சரியென்று சொன்னமைக்கு நன்றி. தயக்கம் என்பது கூச்சத்தினால் ஏற்பட்டது. பலரும் படிக்கின்ற இழையில் பிசகுகள் நேர்ந்துவிடக்கூடாதே என்ற அச்சமும்கூட. இல்லையென்றால் படங்களைப் போட்டுக் காட்டியிருப்பேன் - இத்தனை விளக்கங்கள் வேண்டா.
மீண்டும் இருவருக்கும் மிக்க நன்றி.
அன்புடன்,
ப.பாண்டியராஜா
 
 

வேந்தன் அரசு

unread,
Aug 28, 2013, 6:54:44 AM8/28/13
to தமிழ் மன்றம், Pandiyaraja, C. R. Selvakumar
> தூங்குவனர் உறங்கும்

ஊயலில் ஆடிக்கொண்டே உறங்குபவர்கள்

> தூங்கு என்பதற்கு (அசைவுடன் கூடிய) தொங்குதல் என்ற பொருளும் வருமிடங்கள் உண்டு.

இதுவே முதற்பொருள்.

மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே. கம்பனும் தொங்குகின்ற  என்ற பொருளில்தான் பாடியுள்ளார்.
கொலையாளிகளை தூக்கில் இட வேண்டும்
தூக்குப்போசி என ஒரு கலம் உண்டு.



பெண்கள் கச்சு அணியும் வழக்கம் தொன்று தொட்டு இருந்தது. அதனால் பெண்கள் உறங்கும் நிலையில்தான் இருக்க வேண்டும் என்றில்லை.
”வம்பு விரித்தன்ன வார் மணல் எக்கர்”. ஆற்று மணலின் மேடுகள் கச்சு விரித்து கிடந்தது போல இருக்கும் என்பது பொருள்.

அதனால் பெண்கள் நின்றாலும் உறங்கினாலும் தோற்றம் ஒன்றே.

தூங்கு இயல் மகளிர்”  ஆடிக்கொண்டு இருப்பது மகளிரின் இயல்பு. எந்நேரமும் உறங்கிக்கொண்டு என்றால் சினவ மாட்டாரா?



28 ஆகஸ்ட், 2013 12:54 AM அன்று, Pandiyaraja Paramasivam <pipi...@gmail.com> எழுதியது:


Pandiyaraja Paramasivam

unread,
Aug 30, 2013, 3:15:41 AM8/30/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja, C. R. Selvakumar
மிக்க நன்றி திரு.வேந்தன் அரசு.
மதுரை நகரில் அல்லங்காடியில் தெருவோரத்தில் கடைபோட்டுத் தின்பண்டங்கள் விற்கும் அப்ப வாணிகர், அரவம் அடங்கிய பின்னர் அங்கேயே படுத்துத் தூங்கிப்போவதையே புலவர் தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க - (மதுரைக் காஞ்சி 627) என்று கூறுகிறார். எனவே அவர்கள் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே உறங்கினர் என்ற பொருள் இங்கே பொருந்தாது என நினைக்கிறேன். நடைபாதைவாசிகள் பெரும்பாலும் மல்லாக்கத்தான் படுத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
எனக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த என் அத்தையும், மற்றும் பல மிக நெருங்கிய உறவினர்களும் எப்போதும் சேலை மட்டுமே அணிந்திருப்பர் - ரவிக்கை கிடையாது. அப்படியிருக்க ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் ரவிக்கையில்லாப் பெண்டிரே மிகுதி என்பது என் கருத்து. இதற்கு மேல் இதுபற்றி வேண்டாமே, please!
ப.பாண்டியராஜா
 

Pandiyaraja Paramasivam

unread,
Aug 30, 2013, 3:32:09 AM8/30/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja, C. R. Selvakumar
அன்புடையீர்,
நமது பயணம் இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இப் பகுதியில் அரசி நள்ளிரவிலும் தூங்காமல் கட்டிலில் அமர்ந்தவாறே விட்டத்தை வெறித்துநோக்கிக்கொண்டிருக்கிறாள். மேல் விதானத்தில் வரையப்பட்டிருக்கும் உரோகிணி விண்மீன், திங்களைச் சேர்ந்திருக்கும் வானவியல் காட்சியைப் பார்த்துப் பெருமூச்சு விடுகிறாள். ரோகிணி மங்கை திங்கள் கணவனுடன் சேர்ந்திருக்கும் செய்திகள் அவள் நெஞ்சைப் பிசைகின்றன. செவிலியருக்கோ வேறு வழியில்லை. சொல்லிச்சொல்லிப் பார்த்தும் அரசி கேட்காததால் இப்போது direct appeal to GOD. "சாமி புண்ணியத்துல புண்ணியவான் சீக்கிரன் வீடுவந்து சேரணும் - அதுக்கு, போன காரியம் 'சட்டுபுட்டுன்னு' முடியணும்".
இப்போது மணி 12. நள்ளிரவு. நினைவிருக்கிறதா? நாம் நம் பயணத்தைத் தொடங்கி சரியாக அறுபது நாழிகை ஆயிற்று. இது one-day tour. பயணம் முடிந்துவிட்டது. இன்னும் ஒரே ஒரு காட்சிதான் பாக்கி. அதை இங்கிருந்தவாறே காண்போம். அடுத்த பகுதியுடன் தொடர் நிறைவுபெறும்.
நன்றி,
ப.பாண்டியராஜா
 
 
பயணம்-14.doc
பயணம்-14.pdf

Pandiyaraja Paramasivam

unread,
Sep 10, 2013, 8:54:37 AM9/10/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja, C. R. Selvakumar
அன்புடையீர்,
நமது பயணத்தின் இறுதிப்பகுதி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு பாண்டியன் நெடுஞ்செழியனின் பாசறைக் காட்சி இடம்பெறுகிறது. அத்துடன் முடிவுரையாக எனது கருத்துக்கள் சிலவற்றையும் கொடுத்திருக்கிறேன். இதுவரை பயணத்தில் உடன் வந்த உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.
வணக்கம்,
ப.பாண்டியராஜா
 
பயணம்-15.doc
பயணம்-15.pdf

Rajam

unread,
Sep 10, 2013, 1:44:20 PM9/10/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja, C. R. Selvakumar
நக்கீரரின் நடைப்பயணத்தில் நம் எல்லாரையும் பங்குகொள்ளச் செய்து நெடுநல்வாடையைப் புதிய கோணத்தில் படக்காட்சிகளுடன்  விளக்கிய முனைவர் பாண்டியராஜாவுக்குப் பாராட்டு! சித்திரை வீதி, மேலமாசிவீதி, திண்டுக்கல் ரோடு, வெளிவீதி, ஆரப்பாளையம் … இப்படியாகப்பட்ட வீதிகளில் வளர்ந்து, பிற பல வீதிகளில் (ஆடி, ஆவணி, சின்னக்கடைத்தெரு, …) ஓடியும் ஆடியும் திரிந்த எனக்கு … இந்த விளக்கங்கள் இனித்தன. [அட, என்னிடமும் அரசி போட்டிருக்கிற மாதிரி ஒரு செங்கேழ் வாளை வணக்குறுத்த மோதிரம் இருக்கு -- இப்போ வங்கியில் இருக்கு! ;-) ] 

ஒரு கேள்வியும் சில கருத்தும்:

1. பாண்டிமாதேவி கட்டிலில் உட்கார்ந்திருக்கிறாள் என்று சொல்லக் காரணம் என்ன?  'புலம்பொடு வதியும்' அவள் உட்கார்ந்திருந்தால் என்ன, படுத்திருந்தால் என்ன, ஒன்றும் குடி முழுகிப் போய்விடாதுதான். என்றாலும் … உடலியல் நோக்கில் … படுத்திருக்கும்போது தனிமைத்துயர் மிகவும் படுத்தும்! பெண்களுக்கு இது புரியும்.  [ஐந்தவிக்கும் ஆற்றலைப் பெறத் தவம் செய்யும் முனிவர்கள் ஏன் படுத்துக்கொண்டு தவம் செய்வதில்லை?!] 'வதியும்' என்ற சொல்லின் அடிப்படைப் பொருளை அதன் இலக்கிய வரவுகளிலிருந்து பிழிந்து பார்க்கலாம். அதோடு, மேல் விட்டத்தில் உரோகிணி + சந்திரன் ஓவியத்தைப் பார்க்கப் படுத்திருக்கும் நிலை வசதியாக இருக்கும்; தனிமைத் துயரும் கிளறும். 

2. "மதலைப்பள்ளி" என்ற தொடரில் "பள்ளி" என்பதே புறாக்கள் தங்கும் தளமான பகுதியைக் குறிக்கும். சமணர் பள்ளியைக் கருத்தில் கொள்ளலாம். "மதலை" என்ற சொல் தூண் போன்ற கால் பகுதியைக் குறிக்கும். மரங்களின் மேற்பகுதியிலிருந்து கீழ் நோக்கிக் கிளைப்பதே 'மதலை.' இது மரத்தைத் தாங்குவதாகக் கருதப்படுவதால், குழந்தைச் செல்வத்துக்கும் 'மதலை' என்ற குறிப்புண்டு. சங்க இலக்கியப் புழக்கத்தையும் காணலாம். 

3. "வடவர் தந்த வான்கேழ் வட்டம்." இது வழுவழு என்ற பளிங்குக் கல்லாக இருக்குமா என்பது என் ஐயம். எங்கள் வீடுகளில் சந்தனக்கல், அதாவது சந்தனம் அரைக்கும் கல், உண்டு. (குத்தால மலைக்கு மூணு நாலு கல்லு அப்பாலேதான் எங்க பாட்டி வீடு!) சந்தனக்கல் கருப்பாக இருக்காது. வெளிர் நிறத்தில் இருக்கும். ஆனால், பளிங்குக் கல் போல வழுவழு என இருக்காது. சந்தனக்கட்டைக்கும் அதை அரைக்கும் கல்லுக்கும் இடையே உராய்வு (friction) தேவை. இந்த உராய்வு வழுவழு பளிங்குக் கல்லில் கிடைக்காது. 100+ ஆண்டுகளான எங்கள் வீட்டுக் கல்லின் படம் இருக்கு, இயன்றபோது எடுத்துப் போடுகிறேன். 

4. "ஆடவர் குறுகா அருங்கடி." இங்கே "ஆடவர்" என்று குறிக்கப்படுகிறவர் யார்? 'ஆணாகப் பிறந்த எவரும்' என்ற பொருள் இங்கே பொருந்தாது. "ஆடவர்" என்ற சொல்லின் பயன்பாட்டை உங்கள் தேடு பொறியில் பார்க்கவும். வேட்டையில், போரில், இன்ன பிறவற்றில் உடல் வலிமையை வெளிப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள ஆணையே "ஆடவர்" என்று சங்க இலக்கியம் குறிக்கிறது. மணிமேகலையிலும் அப்படியே -- காலவேகம் என்ற மதகளிற்றை அடக்கி வந்த அரசிளங்குமரன் உதயகுமரனை "ஆடவர்" என்ற பொதுப்பெயரால் மணிமேகலை சுட்டுகிறாள். என்னைப் பொருத்த அளவில் "ஆடவர்" என்ற சொல் "அடு" என்ற வேரின் அடிப்படையில் பிறந்து "virile, sporty, …" போன்ற பொருள்களைக் குறிப்பதாகத் தோன்றுகிறது. அந்த அடிப்படையில் பார்த்தால் பாடல்களின் பொருள் நன்றாகவே புரிகிறது. 

ஆண் பிறவிகளுக்கு அந்தப்புரத்தில் இடமில்லாமல் இருக்கமுடியாது. கூனையும் குறளையும் பகடி செய்யும் கலித்தொகைப்பாடல் உண்டே. ஆண்மைத் தன்மை கொல்லப்பட்ட (castrated) காவலாளர் உரோமானிய அரசில் இருந்ததைப் பற்றிப் படித்த நினைவு. 

இது தெளிவாகத் தெரியவில்லை -- ஆனாலும் நம் தமிழ்ப்புலவர்களுக்கும், கணியருக்கும் (சோதிடர்?) அரண்மனையில் எங்கும் இடம் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். மோசிகீரனார் கதை சான்று. மேலும், அரசிக்கு ஆறுதல் சொல்ல ஒரு புலவரோ கணியனோ போகத் தடையிருந்திருக்காது என்று நினைக்கிறேன். என் ஊகமும் உங்களு ஊகமும் பக்கம் பக்கம்! 

++++++++++++++++++ 

மேற்சொன்ன கருத்தெல்லாம் உங்கள் ஆய்வுக்கு எந்த வகைத் தடையும் செய்வதற்காகச் சொல்லவில்லை. கருத்துப் பகிர்வு. அவ்வளவே.

அன்புடன்,
ராஜம் 

Pandiyaraja Paramasivam

unread,
Sep 11, 2013, 2:48:54 PM9/11/13
to tamil...@googlegroups.com, Pandiyaraja, C. R. Selvakumar
அன்புடை அம்மையீர்,
வணக்கம். பாராட்டுடன் முன்னோடியாக வந்த தங்களின் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. பழையதையெல்லாம் குறிப்பெடுத்துக்கொண்டு அவற்றைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. "-- இப்போ வங்கியில் இருக்கு! ;-)"- படித்தபோது இதயம் வலித்தது. நீண்ட மாதங்கள் கழித்துத் தங்களின் characteristic ++++++++++++++++++  பார்த்து மகிழ்ந்தேன்.
1. கட்டிலில் தேவி படுத்திருந்திருப்பாள் என நான் நினைக்கவில்லை. அத்தனை மாதர்கள் அருகிலிருக்க, அவர்கள் குறுமொழியும் நெடுமொழியும் பேசிக்கொண்டிருக்க - இந்தக் காட்சியைக் கற்பனை செய்துபார்த்தபோது, அவள் படுக்கையின் தலைமாட்டுப் பகுதியில் சாய்ந்து, படுக்கையில் கால்நீட்டி உட்கார்ந்திருப்பது போல் தான் எனக்குத் தோன்றியது. அருகில் நின்று செவிலியர் பேச வசதியாக இருக்கும். ஒருவேளை அவள் தலையைச் சற்றுப் பின்பக்கமாகச் சாய்த்தும் இருந்திருக்கலாம். ஒரு காலைச் சற்று மடக்கியும் (முழங்கால் சற்று உயரமாக, தொடையும் முழங்காலின் கீழ்ப்பகுதியும் முக்கோணத்தின் மேல் இரு பக்கங்களைப் போல்), ஒருகாலை நீட்டியும் அவள் உட்கார்ந்திருக்கலாம். சற்றே பின்பக்கம் (ஆயாசத்துடன்) தலைசாய்த்துப் பார்க்கும்போது விதானத்து ரோகிணி கண்ணில் பட்டிருக்கும். ஆயாசம் இன்னும் மிகுந்திருக்கும். எனினும் வதியும் என்பதை ஆயவேண்டும். பார்க்கிறேன்.
2. " மரங்களின் மேற்பகுதியிலிருந்து கீழ் நோக்கிக் கிளைப்பதே 'மதலை.' " என்கிறீர்கள். நானும் மீனாட்சியம்மன் கோவிலில் பார்த்திருக்கிறேன். அங்கு எனக்கென்ன வேலை என்று கேட்கிறீர்களா? வனஜாவுடன் (திருமணமான புதிதில்) பொற்றாமரைக் குளத்துப் படிக்கட்டுகளில் கால்களைத் தொங்கப்போட்டு நெடுநேரம் அமர்ந்திருக்கிறேன். அப்போது அங்கிருக்கும் மண்டபத்துத் தூண்களின் உச்சியிலிருந்து வாழைத்தார் போன்ற அமைப்பு வளைந்து கீழிறங்கி சற்று நிமிர்ந்து இருக்கும் பகுதியைப் பார்த்திருக்கிறேன். மதலை என்றவுடன் எனக்கு அதுதான் நினைவுக்கு வந்தது. நீங்களும் அதையே கூறுகிறீர்கள். எனவே "மாறுவன இருப்ப" என்ற தொடருக்கு  நான் அளித்திருக்கும் விளக்கம் சரியென்றே தோன்றுகிறது. மிக்க நன்றி.
3. நம் வீட்டுப் பளிங்கு  என்பது பாறைகளினின்றும் வெட்டி எடுக்கப்படுவது - நமது கருங்கல் போல. பலகையாக எடுக்கப்படும் பளிங்குக் கல்லைத் தேய் தேய் என்று தேய்த்த பின்னர்தான் அதற்கு வழுவழுப்புக் கிடைக்கிறது என்று நினைக்கிறேன். எனவே அதற்கு முந்தைய நிலையில் சிறிய சதுரங்களாக வெட்டி எடுக்கப்பட்ட துண்டுகளில் மஞ்சள் அரைக்கலாம். ஆக்ராவில் விற்பார்கள். எனவே தேய்த்துப் polish செய்யப்படாத பளிங்குப் பலகைதான் வான் கேழ் வட்டம் எனப்படுகிறது என நினைக்கிறேன்.
4. புலவர் - அதுவும் தமிழ்ச்சங்கத்தின் முதற் புலவர் என்ற நிலையில் நக்கீரர் அந்தப்புரத்தில் நுழைய அனுமதி இருந்திருக்கலாம். இருப்பினும் அங்குள்ள ஒரு பொது மண்டபத்தில் (வரவேற்பறையில்) தான் அவர் அரசியைச் சந்தித்திருக்க முடியும். நெடு நெடு-வென்று படுக்கையறையின் கட்டில் வரை சென்றிருக்கமுடியுமா என்பது ஐயத்திற்குரியதே.  மண்டபம் வரைகூட அவர் மட்டும்தான் சென்றிருக்க முடியும். அவருடன் பயணம் செய்யும் (பயணித்திருக்கும் ?!) நம்மையும் அழைத்துச் சென்றிருக்க முடியாது! எனக்கென்னவோ நெடுநல்வாடை படிக்கும்போது நானும் தொடக்கத்திலிருந்து அவர்கூடவே நடப்பது போல் ஓர் உணர்வு. அதன் விளைவுதான் இந்தத் தலைப்பு.
எனக்காகத் தாங்கள் அக்கரையுடன் நேரம் எடுத்துப் படித்து, தங்களின் மேலான கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி. 
வணக்கத்துடன்,
ப.பாண்டியராஜா
 
Reply all
Reply to author
Forward
0 new messages