Abdul Kalam - அணு உலை உயிர்களுக்கு உலை

14 views
Skip to first unread message

எல்லைத் தமிழன்

unread,
Nov 9, 2011, 4:49:10 AM11/9/11
to tamilmantram

அணு உலை உயிர்களுக்கு உலை 
நமக்கு நாமே
வைக்கும் அணுகுண்டு
அணு உலை
வராது பூகம்பம் சரி
வந்தால்
அணு உலை
கணிக்க முடியாதது
இயற்கையின் சீற்றம்
அணு உலை
கொலைக்களம் ஆக வேண்டாம் 
கூடங்குளம்
அணு உலை
மின்சாரம் காற்றிலும் கிடைக்கும்
உயிர்கள் போனால் கிடைக்குமா ?
அணு உலை
பண நட்டம் பெற்றிடலாம்
உயிர்கள் நட்டம் ?
அணு உலை
மின்சாரம் பெறப் பல வழி
உயிர்கள் போக வழி
அணு உலை
உயிர்கள் அவசியம்
மின்சாரம் அனாவசியம்
அணு உலை
வாழலாம் மின்சாரமின்றி
வாழமுடியுமா?உயிரின்றி
அணு உலை
உயிரா ? மின்சாரமா?
உயிரே முதன்மை
அணு உலை
வராது சுனாமி என்றவர்களே
வராமலா இருந்தது சுனாமி
அணு உலை
உத்திரவாதம் உண்டா ?
பூகம்பம் வரதா ?
அணு உலை
விரும்பவில்லை வெறுக்கின்றனர்
மனிதாபிமானிகள்
அணு உலை 
வேண்டும் என்போர்
வசித்திட வாருங்கள்
அணு உலை அருகில்
 

Abdul Kalam.jpg

சி. ஜெயபாரதன்

unread,
Nov 9, 2011, 5:31:15 AM11/9/11
to tamil...@googlegroups.com, தமிழமுதம், anb...@googlegroups.com, vanna...@gmail.com, Anne Josephine, jayashree shankar
கூடங்குள அணுமின் நிலைய
வேலை நிறுத்தம்
தமிழர் வயிற்றுக்கு உலை.  
ஊழியத்துக்கு உலை.  
வருமானத் துக்கு உலை
தொழிற் சாலை கட்கு உலை
தமிழ்நாடு பிச்சை நாடாக
தன் கண்ணைக் குத்தும்
தகாத நிலை !
தமிழர் விரும்பிச் செய்யும்
தற்கொலை !


சி. ஜெயபாரதன்

++++++++++++++++

2011/11/9 எல்லைத் தமிழன் <matha...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

சி. ஜெயபாரதன்

unread,
Nov 9, 2011, 7:50:48 AM11/9/11
to tamil_a...@yahoogroups.com, தமிழமுதம், anb...@googlegroups.com, tamilmantram
/////மனிதாபிமானிகள்

அணு உலை 
வேண்டும் என்போர்
வசித்திட வாருங்கள்
அணு உலை அருகில் ///


அணுமின் உலை எதிர்ப்பாளர்களே ,

இப்படிப்  பயங்காட்டும் பூச்சாண்டிகள் மீது புழுதியை வீசுங்கள்

கனடா வட அமெரிக்காவில் உள்ள பெரிய நகரில் ஒன்றான டொரோண்டா -  5 மில்லியன் ஜனத்தொகை கொண்டது.   நகரின் அருகே இந்திய கனநீர் அணுமின் உலைகள் போல் 8 கனநீர் அணுமின் உலைகள் 9000 மெக வாட் உற்பத்தி செய்து   வருகின்றன.   எஞ்சினியரான  என் மகளும், மருமகனும் அங்கே வெவ்வேறு அணுமின் உலைகளில் உடல் நலமோடு பல்லாண்டுகள் பணி செய்து வருகிறார்.  

நான் 45 ஆண்டுகாலம் அணுமின் நிலையங்கள் பலவற்றில் பணிசெய்து உடல் நலமோடு இருப்பவன்.   அணுமின் உலை அருகே 29 ஆண்டுகள் குடும்பத்தோடு கனடாவில் வசித்து வருபவன்.

கல்பாக்கத்தில் 4 ஆண்டுகள் பணிசெய்து அணுமின் உலை அருகே வசித்தவன்.  ராஜஸ்தானில் 8 ஆண்டுகள் அணுமின் உலை அருகே வசித்தவன்.  மொம்பையில் 8 ஆண்டுகள் ஆராய்ச்சி அணு உலை அருகே வசித்தவன்.



சி. ஜெயபாரதன்

+++++++++++++++++++++

2011/11/9 எல்லைத் தமிழன் <matha...@gmail.com>
 
[Attachment(s) from =?UTF-8?B?4K6O4K6y4K+N4K6y4K+I4K6k4K+NIOCupOCuruCuv+CutOCuqeCvjQ==?= included below]
__._,_.___

Attachment(s) from =?UTF-8?B?4K6O4K6y4K+N4K6y4K+I4K6k4K+NIOCupOCuruCuv+CutOCuqeCvjQ==?=

1 of 1 Photo(s)

Recent Activity:
KadutaikaL
http://www.araichchi.net/
.............................................
Tamil-Fonts, Tamil-Software_Download
Tamil-word_processing, Tamil-eMail, Tamil-Internet)
http://www.araichchi.net/kanini/eKalappai/ekalappai.htm
.............................................
eMail setup:
http://www.araichchi.net/kanini/euthavi/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.araichchi.net/kanini/kanini.html
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.

__,_._,___

சி. ஜெயபாரதன்

unread,
Nov 9, 2011, 7:55:21 AM11/9/11
to tamil...@googlegroups.com, தமிழமுதம், anb...@googlegroups.com

/////மனிதாபிமானிகள்

அணு உலை
வேண்டும் என்போர்
வசித்திட வாருங்கள்
அணு உலை அருகில் ///


அணுமின் உலை எதிர்ப்பாளர்களே ,

இப்படிப்  பயங்காட்டும் பூச்சாண்டிகள் மீது புழுதியை வீசுங்கள்

கனடா வட அமெரிக்காவில் உள்ள பெரிய நகரில் ஒன்றான டொரோண்டா -  5 மில்லியன் ஜனத்தொகை கொண்டது.   நகரின் அருகே இந்திய கனநீர் அணுமின் உலைகள் போல் 8 கனநீர் அணுமின் உலைகள் 9000 மெக வாட் உற்பத்தி செய்து   வருகின்றன.   எஞ்சினியரான  என் மகளும், மருமகனும் அங்கே வெவ்வேறு அணுமின் உலைகளில் உடல் நலமோடு பல்லாண்டுகள் பணி செய்து வருகிறார்.  

நான் 45 ஆண்டுகாலம் அணுமின் நிலையங்கள் பலவற்றில் பணிசெய்து உடல் நலமோடு இருப்பவன்.   அணுமின் உலை அருகே 29 ஆண்டுகள் குடும்பத்தோடு கனடாவில் வசித்து வருபவன்.

கல்பாக்கத்தில் 4 ஆண்டுகள் பணிசெய்து அணுமின் உலை அருகே வசித்தவன்.  ராஜஸ்தானில் 8 ஆண்டுகள் அணுமின் உலை அருகே வசித்தவன்.  மொம்பையில் 8 ஆண்டுகள் ஆராய்ச்சி அணு உலை அருகே வசித்தவன்.


சி. ஜெயபாரதன்

++++++++++
 



2011/11/9 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Nov 9, 2011, 9:54:53 AM11/9/11
to tamil_a...@yahoogroups.com, தமிழமுதம், anb...@googlegroups.com, tamilmantram
ஒரு மாற்றம் :-   8 அணுமின் உலைகள் அல்ல.  12 அணுமின் உலைகள் டொரோண்டோ அருகில் இயங்கி வந்தன / இப்போது 10 இயங்கி வருகின்றன. இரண்டு பழைய அணுமின் உலைகள் நிறுத்தம்.

(8 யூனிட்ஸ்  750 மெகா வாட் பிக்கரிங் நிலையம்,  4 யூனிட்ஸ் 800 மெக வாட்ஸ் டார்லிங்டன் நிலையம்).



சி. ஜெயபாரதன்

+++++++++++++++++++

2011/11/9 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Nov 9, 2011, 8:35:54 PM11/9/11
to tamil...@googlegroups.com, தமிழமுதம், anb...@googlegroups.com, vanna...@gmail.com, Anne Josephine, jayashree shankar

Dear Mr Mathan,


There are lakhs of people, the nuclear scientists,engineers,technologists and workers are living with their parents, wife,and children living nearby the nuclear reactors for more than several decades around the world.They are very healthy and comfortable.Nothing happened to them.Don't confuse politics with science. Without science even the politics cannot triumph.

Friendly regards
N.Sithu Muruganandam    


+++++++++++++++++++++++++++

2011/11/9 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

Govindasamy Thirunavukkarasu

unread,
Nov 10, 2011, 3:25:09 AM11/10/11
to tamil...@googlegroups.com
அன்புமிகு செயபாரதன்
1940 களில் பிறந்த இந்தியர்கள்,அவர்களின் பிள்ளைகள்
ஆகியோர்களில் படித்த கூட்டம்தான்
இந்தியாவை தோண்டிப்புதைத்த கூட்டம்.

உடைமை,குடும்பம்,உயிர் என பல தியாகங்கள் செய்து போராடிய இந்திய
சமூகத்தில் ஒரு சிறு விடுதலை ஒளி கிடைத்தவுடன்
காய்ந்த மாடு கம்பில் புகுந்தது என்பது போல
தன் பங்குக்கு நாயென பாய்ந்து விழுங்கிய கூட்டம் இதுதான்.

படித்தவர்களுக்கு உள்ள மரியாதைக்குலைத்த கூட்டம் இதுதான்.
கொஞ்சம் காசை விட்டெறிந்தால் அமைதியான கூட்டம்.
காசு கிடைக்குமானால் எதுவேண்டுமானாலும் செய்யலாம்
எங்கும் யாரையும் சென்று அண்டலாம் என
பெற்ற விடுதலையை காசுக்கு அடிமையாக்கிய கூட்டம்
இவர்கள் ஆன்மிகம் பேசினாலும் அறிவியல் பேசினாலும்
அதற்கு மரியாதை இல்லை.
தமிழர் வயிற்றில் உலை என நீங்கள் எழுதுவது இந்த கூட்டத்திற்குத்தான்
பொருந்தும். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பரிசு .போகட்டும்.
சோற்றுக்கு சோரம் போக வேண்டாம்.

௯-௧௧-௧௧ அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:


> கூடங்குள அணுமின் நிலைய
> வேலை நிறுத்தம்
> தமிழர் வயிற்றுக்கு உலை.
> ஊழியத்துக்கு உலை.
> வருமானத் துக்கு உலை
> தொழிற் சாலை கட்கு உலை
> தமிழ்நாடு பிச்சை நாடாக
> தன் கண்ணைக் குத்தும்
> தகாத நிலை !
> தமிழர் விரும்பிச் செய்யும்
> தற்கொலை !
>
>
> சி. ஜெயபாரதன்
>
> ++++++++++++++++
>
> 2011/11/9 எல்லைத் தமிழன் <matha...@gmail.com>
>
>>
>> அணு உலை உயிர்களுக்கு

>> உலை<http://www.eraeravi.com/home/detail.php?id=729&cat=ka>


--
கோ.திருநாவுக்கரசு
உழவன் விடுதலை உலகின் விடுதலை
செம்பியநல்லூர்,அம்மாபேட்டை வழி 614401
திருவாரூர் மாவட்டம்.
பேசி: 9380297522

Govindasamy Thirunavukkarasu

unread,
Nov 10, 2011, 3:57:34 AM11/10/11
to tamil...@googlegroups.com
ஐயா,

தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் அணுசக்தி நிறுவனங்களில் பல ஆண்டுகளாக
பணியாற்றியும் உடல் ந்லத்தோடும் மகிழ்வோடும் இருப்பதுகாண மிக்க
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
அணுசக்தியின் தீமைகளுக்கு எதிரான போதுமான சாண்றாக இதை எடுத்துக்கொள்ள முடியாது.

சிகரெட் பிடித்தால் புற்றுநோய் வரலாம். ஆனால் சிகரெட் பிடிப்பவர்கள்
எல்லாருக்கும் கட்டாயமாக புற்று நோய் வரும் என்பதில்லை.

பூச்சிக்கொல்லிகள் அடித்த பயிர்கள் மூலம் வரும் உணவு அலருக்கும் பல
விதமான நோய்களை உருவாக்குகின்றது.அறிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளன.
ஆனால் பூச்சிக்கொல்லிகளை தவிர்க்க முடிந்தால்
அணு உலைகளைத் தவிர்க்க முடிந்தால் நல்லதுதானே

மக்களின் விருப்பமும் முக்கியமல்லவா ?
தற்சார்புத்தொழில் நுட்பம் ,தற்சார்பு பொருளாதாரம் ஆகியவைகளை கட்டியமைக்க
இந்தியாவிற்கு சக்தி வந்துவிட்டது.இன்றைய வல்லரசுகள் தங்கள்
வயிற்றுச்சுமையை தூக்கிக்கொண்டு நடக்கமுடியாமல் திணறுகிறார்கள்.அவர்களின்
அணு உலை வணிகத்திற்கு தாங்கள் ஏன் படாத பாடு
படுகிறீர்கள்.இந்தியாவைப்பற்றிய தங்களின் அறிவு அவர்களுக்கு நன்றாக பயன்
படுகிறது என்றே எண்ணுகின்றேன்.
Technical ,economical espionage கூடத்தினரின் செயலல்ல்வா அது.


௯-௧௧-௧௧ அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:


> /////மனிதாபிமானிகள்
> அணு உலை
> வேண்டும் என்போர்
> வசித்திட வாருங்கள்
> அணு உலை அருகில் ///
>
>
> அணுமின் உலை எதிர்ப்பாளர்களே ,
>

> *இப்படிப் பயங்காட்டும் பூச்சாண்டிகள் மீது புழுதியை வீசுங்கள்*


>
> கனடா வட அமெரிக்காவில் உள்ள பெரிய நகரில் ஒன்றான டொரோண்டா - 5 மில்லியன்
> ஜனத்தொகை கொண்டது. நகரின் அருகே இந்திய கனநீர் அணுமின் உலைகள் போல் 8 கனநீர்
> அணுமின் உலைகள் 9000 மெக வாட் உற்பத்தி செய்து வருகின்றன. எஞ்சினியரான
> என் மகளும், மருமகனும் அங்கே வெவ்வேறு அணுமின் உலைகளில் உடல் நலமோடு
> பல்லாண்டுகள் பணி செய்து வருகிறார்.
>
> நான் 45 ஆண்டுகாலம் அணுமின் நிலையங்கள் பலவற்றில் பணிசெய்து உடல் நலமோடு
> இருப்பவன். அணுமின் உலை அருகே 29 ஆண்டுகள் குடும்பத்தோடு கனடாவில் வசித்து
> வருபவன்.
>
> கல்பாக்கத்தில் 4 ஆண்டுகள் பணிசெய்து அணுமின் உலை அருகே வசித்தவன்.
> ராஜஸ்தானில் 8 ஆண்டுகள் அணுமின் உலை அருகே வசித்தவன். மொம்பையில் 8 ஆண்டுகள்
> ஆராய்ச்சி அணு உலை அருகே வசித்தவன்.
>
>
> சி. ஜெயபாரதன்
>
> +++++++++++++++++++++
>
> 2011/11/9 எல்லைத் தமிழன் <matha...@gmail.com>
>

>> **
>>
>> [Attachment(s) <#13387e659731c98c_TopText> from


>> =?UTF-8?B?4K6O4K6y4K+N4K6y4K+I4K6k4K+NIOCupOCuruCuv+CutOCuqeCvjQ==?=
>> included below]
>>
>>
>> அணு உலை உயிர்களுக்கு

>> உலை<http://www.eraeravi.com/home/detail.php?id=729&cat=ka>

>> Kalam.jpg]<http://groups.yahoo.com/group/tamil_araichchi/attachments/folder/1517873848/item/1474954502/view>
>> Abdul
>> Kalam.jpg<http://groups.yahoo.com/group/tamil_araichchi/attachments/folder/1517873848/item/1474954502/view>
>> Reply to
>> sender<matha...@gmail.com?subject=Re%3A%20Abdul%20Kalam%20-%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88>|
>> Reply
>> to
>> group<tamil_a...@yahoogroups.com?subject=Re%3A%20Abdul%20Kalam%20-%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88>|
>> Reply
>> via web
>> post<http://groups.yahoo.com/group/tamil_araichchi/post;_ylc=X3oDMTJxYjNvbGxvBF9TAzk3MzU5NzE0BGdycElkAzUwMzEzNjAEZ3Jwc3BJZAMxNzA1MDgzNzY0BG1zZ0lkAzIxNDIwBHNlYwNmdHIEc2xrA3JwbHkEc3RpbWUDMTMyMDgzNDk3OA--?act=reply&messageNum=21420>|
>> Start
>> a New
>> Topic<http://groups.yahoo.com/group/tamil_araichchi/post;_ylc=X3oDMTJlazJ2ODhiBF9TAzk3MzU5NzE0BGdycElkAzUwMzEzNjAEZ3Jwc3BJZAMxNzA1MDgzNzY0BHNlYwNmdHIEc2xrA250cGMEc3RpbWUDMTMyMDgzNDk3OA-->
>> Messages in this
>> topic<http://groups.yahoo.com/group/tamil_araichchi/message/21420;_ylc=X3oDMTM2cTVpYTF2BF9TAzk3MzU5NzE0BGdycElkAzUwMzEzNjAEZ3Jwc3BJZAMxNzA1MDgzNzY0BG1zZ0lkAzIxNDIwBHNlYwNmdHIEc2xrA3Z0cGMEc3RpbWUDMTMyMDgzNDk3OAR0cGNJZAMyMTQyMA-->(
>> 1)
>> Recent Activity:
>>
>> - New
>> Members<http://groups.yahoo.com/group/tamil_araichchi/members;_ylc=X3oDMTJmYXN1aTBhBF9TAzk3MzU5NzE0BGdycElkAzUwMzEzNjAEZ3Jwc3BJZAMxNzA1MDgzNzY0BHNlYwN2dGwEc2xrA3ZtYnJzBHN0aW1lAzEzMjA4MzQ5Nzg-?o=6>
>> 2
>>
>> Visit Your
>> Group<http://groups.yahoo.com/group/tamil_araichchi;_ylc=X3oDMTJlNm0zN2t1BF9TAzk3MzU5NzE0BGdycElkAzUwMzEzNjAEZ3Jwc3BJZAMxNzA1MDgzNzY0BHNlYwN2dGwEc2xrA3ZnaHAEc3RpbWUDMTMyMDgzNDk3OA-->


>> KadutaikaL
>> http://www.araichchi.net/
>> .............................................
>> Tamil-Fonts, Tamil-Software_Download
>> Tamil-word_processing, Tamil-eMail, Tamil-Internet)
>> http://www.araichchi.net/kanini/eKalappai/ekalappai.htm
>> .............................................
>> eMail setup:
>> http://www.araichchi.net/kanini/euthavi/Tamil-Outlook-Express.htm
>> ..................................
>> Tamil Fonts, Keyboard drivers and help:
>> http://www.araichchi.net/kanini/kanini.html
>> ..................................
>> PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
>> http://www.tamil.net/special/ekalappai3.pdf
>> ..................................
>> MARKETPLACE
>>
>> Stay on top of your group activity without leaving the page you're on -
>> Get the Yahoo! Toolbar

>> now.<http://global.ard.yahoo.com/SIG=15ogjqpt5/M=493064.14543979.14562481.13298430/D=groups/S=1705083764:MKP1/Y=YAHOO/EXP=1320842178/L=a8b12098-0abe-11e1-bcce-e3ecb8a18107/B=0EjKIkPDhFw-/J=1320834978821099/K=1a3XY.OkWV.Gz8m99iwRUQ/A=6060255/R=0/SIG=1194m4keh/*http://us.toolbar.yahoo.com/?.cpdl=grpj>
>> [image: Yahoo!
>> Groups]<http://groups.yahoo.com/;_ylc=X3oDMTJkMzJyaXZrBF9TAzk3NDc2NTkwBGdycElkAzUwMzEzNjAEZ3Jwc3BJZAMxNzA1MDgzNzY0BHNlYwNmdHIEc2xrA2dmcARzdGltZQMxMzIwODM0OTc4>
>> Switch to:
>> Text-Only<tamil_araichc...@yahoogroups.com?subject=Change+Delivery+Format:+Traditional>,
>> Daily
>> Digest<tamil_araic...@yahoogroups.com?subject=Email+Delivery:+Digest>•
>> Unsubscribe<tamil_araichc...@yahoogroups.com?subject=Unsubscribe>•
>> Terms
>> of Use <http://docs.yahoo.com/info/terms/>
>> .
>>
>> __,_._,___

சி. ஜெயபாரதன்

unread,
Nov 10, 2011, 6:07:58 AM11/10/11
to tamil...@googlegroups.com, தமிழமுதம், anb...@googlegroups.com
இந்தியாவில் 60 ஆண்டுகளாய் அடுத்தடுத்து இயங்கி வரும் 20 அணுமின் உலைகளில் இதுவரை தீவிரக் கதிரடி, மரணக் கதிரடி பெற்றவர் யாருமில்லை.

ஜெயபாரதன்.

+++++++++++++++

2011/11/10 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Nov 10, 2011, 7:22:08 AM11/10/11
to tamil...@googlegroups.com


௧௦ நவம்பர், ௨௦௧௧ ௩:௨௫ முற்பகல் அன்று, Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com> எழுதியது:

அன்புமிகு செயபாரதன்
1940 களில் பிறந்த இந்தியர்கள்,அவர்களின் பிள்ளைகள்
ஆகியோர்களில்  படித்த கூட்டம்தான்
இந்தியாவை தோண்டிப்புதைத்த கூட்டம்.


இந்தியா எங்கே புதைந்து கிடக்குது.

அந்த காலத்தை விட இக்கால இளைஞர்கள் ரொம்ப நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். பட்டம் பெறுமுன் பணி கிடத்து விடுகிறது. அது போல் இருந்தால் யாரும் புலம் பெயர தேவை இல்லை.

வான்கோழி மணலில் தன் தலையை புதைத்துக்கொண்டால் உலகமும் அப்படி இருக்குமோ?

வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Govindasamy Thirunavukkarasu

unread,
Nov 10, 2011, 9:50:10 AM11/10/11
to tamil...@googlegroups.com
இழவு விழுந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி நான் அந்த சமாசாரத்திற்கே வருவதில்லை.
இன்றைய செய்தி சுமார் ஏழரைக்கோடி இந்தியர்களின் உயிர் நீரிழிவு நோயால்
பாதிக்கப்படலாமென்கிறார்கள்.பசுமைப்புரட்சியை இனிமையாய் விற்றவன் இப்படி
நேரும் என்று கூறினானா?அறிவியல் மேதைகள் அப்போது கீரை விற்கவா
போயிருந்தார்கள்?
அல்லது விவசாய மேதை விருது பெற்ற சிங்கம் சாமிநாதன்தான் கூறினாரா?
இத்தகைய தீய விளைவு நேரும் என்பதை அவரது பரந்த அறிவில் தெரிய வாய்ப்பே
இல்லை.விளம்பரம் செய்யப்பட்ட மேதைகள் இந்த நாட்டின் சாபக்கேடுகள்.
பன்னாட்டுக்கம்பெனிகள் உள்ளே நுழைய பின்பாட்டு பாடுபவர்களுக்கு
எழுதிக்கொடுத்த வாசகமும் கற்றுக்கொடுத்த ராகமும்தான் தெரியும்.அதற்கு
மேல் சொந்த புத்திக்கு வேலையே இல்லை.
அணு உலை விடயத்திலும் நடப்பது அதுதான்.
பசுமைப்புரட்சி,போபால் நச்சு வாயு ,கேரள எண்டோசல்ப்ஹான் தெளிப்பு எவ்வளவோ
மோசடிகளை அறிவியல் பெயரிலும் தொழில் நுட்பபெயரிலும்
தமுக்கடித்த கூலிப்படைகள் இப்போது வாயே திறப்பதில்லை.

எனவே தாங்கள் ரொம்பவும் குனிந்து விழுந்து அணு உலைகள் பற்றி பரப்புரை
செய்ய வேண்டாம்.எங்களது எதிர்காலம் எங்கள் கையில் இருக்கட்டும்.

டோரண்டோ நகர் மின்சாரம் இல்லாவிட்டால் மடிந்து போய் விடும். ஆனால்
எங்களால் தாக்குப்பிடிக்க முடியும்.ஏதோ ஒரு சதியால் மின்சாரம் முழுதுமாக
வெட்டப்பட்டால் கூட இந்தியா மடிந்துவிடாது.
எப்படி மின்சார செலவைக்குறைப்பது என்பதை அரசு நடைமுறைப்படுத்தினால் அணு
உலைகளுக்கு வேலையே இல்லை.இந்த இயக்கத்தில் பல பொறியாளர்களும்
உள்ளார்கள்..
கிளிப்பிள்ளைபோல தாங்கள் பேசுகின்றீர்கள்.நீண்ட காலம் வெளிநாட்டில் தங்கி
அவர்களுக்கு பிடித்த விடயங்களில் லயித்து தாங்கள் எழுதுகிறீர்கள்.
இன்றைய இந்தியா உங்களுக்கு தெரியவில்லை. கடந்த 11 ஆண்டுகளில் இங்கு
ஏற்பட்ட கடுமையான விடயங்கள் அதிர்ச்சிக்குரியவை.ஒரு பொறியாளன் என்பதை
உதறிவிட்டு நான் கிராமங்களில் படிக்கும் பாடங்கள் எனது வாழ்வின்
வெளிச்சங்கள்.ஆனால் உங்களுக்கு தெரியவே இல்லை.புரியவும் வாய்ப்பில்லை.

மடியைப்பிடித்து மாங்காய் விற்றவள் முடியைப்பிடித்து காசு கேட்டாளாம்.
ஓசிக்கு ஒரு மாங்காய் கூட தராத உள்ளங்கள் பில்லியன்
டாலர்களைக்கொடுத்துவிட்டு மாந்த நேயத்தைப் பற்றி பசனை பண்ணுவார்களா
என்ன.? கடன்களுக்காக இந்தியா மானங்கெட்டு சொன்னபடி பொருளாதார திசை
வழியை மாற்றிக்கொண்டு ,ரூபாய் மதிப்பையும் குறைத்துக் கொண்டது
உஙளுக்குத் தெரியாதா ?

நடக்கின்ற அணு உலை சூதாட்டத்தில் பயன் பெறப்போவது
பன்னாட்டுக்கம்பெனிகளும் அவர்களின் அடிதாங்கிகளும் தான்.எனவே ரோம்பவும்
அறிவியல் ஆயுதத்தை எடுக்காதீர்கள்.

மேலை சிந்தனை முறையே வேறு. ஆப்பிரிக்க மக்களை பிடித்து அமெரிக்காவில்
விற்பான்.விற்ற காசில் நீலகிரியில் தோட்டங்கள் அமைப்பான்.காசுக்காக
இரண்டு நிலப்பரப்புகள் நாசமானது பற்றி அந்த இரக்கமற்ற மிருகங்களுக்கு
கவலைப்படத் தெரியாது.செவ்விந்தியர்களின் சவங்களின் மீது எழுப்பிய
மாளிகையில் நின்றுகொண்டு உலக சகோதரத்தைப் பற்றி உபதேசம் செய்பவர்கள்
அவர்கள். அதற்கு குடை பிடிக்கபோதிய காசு அவர்களிடம் உள்ளது.

இந்திய மின்சாரத் தேவைகள் பற்றிய ஆய்வு செய்தீர்கள் என்றால் தீர்வுகள்
பற்றி பேசலாம்.அதைச்செய்யாமல் அணு உலை விற்பதைப்பற்றியே
பேசுகின்றீர்கள்.தாங்கள் கூறும் தகவல்கலில் 95 விழுக்காடு புதிதான
தகவல்கள் அல்ல.கிளிப்பிள்ளைப் பேச்சு.அழகான மொழி பெயர்ப்பு


வாழ்த்துக்கள்.

அன்புடன்
அரசு

௧௦-௧௧-௧௧ அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

Govindasamy Thirunavukkarasu

unread,
Nov 10, 2011, 10:37:30 AM11/10/11
to tamil...@googlegroups.com
அன்பு வேந்தன்
த்ங்களின் இருப்பு நான் சொல்வதை உங்களால் புரிந்து கொள்ள் முடியாமல் தடுக்கிறது.
அமெரிக்காவில் "பணி" கிடைத்தும் எப்படி திரும்புவது என்று தவிப்பவர்கள்
பெருகி வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
நாடுகள் கடந்து தொழில் செய்பவனுக்கு நாடு கடந்து பணி புரிபவர்களும்
தேவை.இது நாடுகளின் வளர்ச்சியா? விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரின்
வளர்ச்சிக்கு நாடு,இனம்,உறவுகள் ,பண்பாடு, மற்றும் அனைத்து வேர்களையும்
அறுத்துக்கொண்டு தன்னையே மகிழ்வித்துக்கொள்ள பாடுபட்டு வாழும் படித்த
மேதைகள் பரிதாபத்திற்கு உரியவர்கள்.

வயிற்றுப்பாட்டிற்கு "பணி " கிடைப்பது பெரிய முன்னேற்றமா? இந்தியா எங்கே
எப்படி புதைந்து கிடக்கிறது என்று விளக்கலாம்.ஆனால் அது ஒரு மாலை நேர
பொழுதுபோக்காக ஆகிவிடக்கூடாது.

௧௦-௧௧-௧௧ அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

எல்லைத் தமிழன்

unread,
Nov 10, 2011, 11:46:00 AM11/10/11
to tamil...@googlegroups.com, தமிழமுதம், anb...@googlegroups.com, vanna...@gmail.com, Anne Josephine, jayashree shankar
வணக்கம் அய்யா ...
கூடங்குளம்  அணுஉலை ஆபத்து இல்லை எனில், அப்துல்கலாம் அவர்கள், மக்கள்  போராட்டத்தை நிறுத்த மக்கள் பிரதிகளின் கேள்விக்கு பதில் அளிக்காமல் இந்திய அரசின் கைகூலியக  தன்னைதாழ்த்தியது வருந்த வேண்டிய செய்தி .
தமிழகம்
 தமிழர் வயிற்றுக்கு உலை.   
ஊழியத்துக்கு உலை.   
வருமானத் துக்கு உலை 
தொழிற் சாலை கட்கு உலை 
தமிழ்நாடு பிச்சை நாடாக
தன் கண்ணைக் குத்தும் 
தகாத நிலை !
தமிழர் விரும்பிச் செய்யும் 
தற்கொலை !

என அய்யா நீங்கள் சிந்திப்பது முற்றிலும் தவறு ! என்போன்ற படிக்காத மக்களின் கேள்விக்கு பதில் தர முடியாமா ?

இந்தியா, தமிழினத்தை அழிக்க, படித்த தமிழர்கள் துணை போவது எப்படி நியாயம் ?
ஒகனேகல் மின்திட்டம் அமல் படுத்தினால் மக்கள் பாதிக்கமட்டார்கள்  . மின்னுற்பத்தி  பலமடங்கு கிடைக்கும் .
காவிரி தீர்ப்பை அமல்படுத்த வக்கத்ற்ற மத்தியஅரசின் சூழ்ச்சி எதனை பேருக்கு தெரியூம் ?  ஏன் நீங்கள்,  கலாம்  போன்ற ...தலைகள்  எங்கே போனிர்கள் ? அணுகழிவை ,எப்படி பாதுகாப்பிர்கள்? பல தலைமுறை பாதிப்பு இல்லையா ?   சீனாக்காரன்   
சுற்றி வளைத்து (முத்துமாலை திட்டம் ) இருடா.... என மிரட்டுகி  ரானே இந்தியாவை ,அப்பொழுது அவன் தாக்குதலுக்கு எம் மக்களல்லவா பலியாவோம் ? நீங்கள் கனடா .....பாதுகாப்பான இடத்தில அல்லவா இருப்பீர்கள்?

போபால் விசவாயு பாதிப்படைந்த     மக்களுக்கு  இன்னும் நிவாரணம்  வாங்கி கொடுக்க வக்கிலாத இந்தியா  காங்கிரஸ் அரசை நன்பி இனியுமா ஏமாற நாம் துணை போகலாமா ?
சிந்தியுங்கள் .......!!!!!!!

அன்புடன் 
மதன்      
 




2011/11/10 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

சி. ஜெயபாரதன்

unread,
Nov 10, 2011, 10:55:27 PM11/10/11
to RAJA SHUNMUGAM, tamil_a...@yahoogroups.com, தமிழமுதம், anb...@googlegroups.com, tamilmantram
////புகுஷிமாவில் மிக அடிப்படையான அணுக்கருவின் சிதைவு - ஹைட்ரஜன் வெடித்து உயிரிழந்தவர் எத்தனை லட்சம் என்ற புள்ளிவிவரம் கிட்டவில்லை. /////

No one lost life in Fuhushima Nuclear Reactor Accidents.  Over 10,000 People lost their life in the Tsunami.

In the Indian nuclear reactors (20)  no one has got higher doses of radaition, nor life for the past 60 years.  


Regards,
Jayabarathan

+++++++++++++++++++++++++++++

2011/11/10 RAJA SHUNMUGAM <sraj...@gmail.com>

 

Dear Jeyakanthan,
 
       In the name of science and technology somany killed all around the world but those are hide out from public.Read this below article and give your ans for this.Nuclear power station is stupidity if they need the power station let them start in the desert like  Rajasthan not in Tamil nadu.Instead of nuclear power we can go for Solar and Conventional power production system.In INDIA we are getting only 3% power from nuclear stations..............


செர்னோபிலில் தொடங்கி புகுஷிமா வரை அழிந்த மனிதர்களின் கதைகள் மூளைச்சலவை செய்யப்பட்ட இந்திய அணு விஞ்ஞானிகளுக்கு எந்தப் பாடமும் புகட்டவில்லை என்றால், பாவம் கூடங்குளத்து மக்கள். புகுஷிமா சுனாமியால் மட்டுமல்ல; சுனாமி ஏற்படாமலிருந்தாலும்கூட அணுமின் கழிவு மூலம் ஆபத்து என்றுமே உண்டென்று முன்பே எச்சரிக்கப்பட்டதாகவும் தகவல் உண்டு.
செர்னோபில் விபத்தால் ஏற்பட்ட கதிர்வீச்சில் பலிகொண்ட உயிர்கள் 75,000 இருக்குமென்றும் உயிர் போகாவிட்டாலும் நடைப்பிணமாக வாழ்வோர் சுமார் 75,000 என்றும் நியூயார்க் விஞ்ஞான அகாதெமி கூறுகிறது. செர்னோபிலுக்கு முன்பு பென்சில்வேனியா மாநிலத்தில் த்ரீமைல் ஐலேண்டு விபத்து நிகழ்ந்துள்ளது. விஞ்ஞானத்தில் வல்லவர்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அமெரிக்காவில் மூன்று மைல் தீவில் நிகழ்ந்த 1979 விபத்துக்குப்பின் அமெரிக்க அணுசக்தித்துறை எதுவும் புதிய அணுஉலை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
உக்ரைனில் நிகழ்ந்த செர்னோபில் விபத்துக்குப் பின் ஐரோப்பிய அணுசக்தித் தொழில் நிறுவனங்கள் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேறியுள்ள ஜப்பானின் புகுஷிமா விபத்தை சுனாமி மீது பழி சுமத்தி அணு விஞ்ஞானிகள் தப்பிக்க இயலாது.
தொழில்நுட்பக் கோளாறுகள் பற்றிய விஷயங்களையும் ஆராய்வது நன்று. புகுஷிமாவில் மிக அடிப்படையான அணுக்கருவின் சிதைவு - ஹைட்ரஜன் வெடித்து உயிரிழந்தவர் எத்தனை லட்சம் என்ற புள்ளிவிவரம் கிட்டவில்லை.
1979-ல் அமெரிக்காவில் மூன்று மைல் தீவு அணுமின் நிலைய விபத்துக்கு முன்பு 1967-ல் இங்கிலாந்தில் விண்ட்ஸ்கேல் விபத்து ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்பு 1952-ல் கனடாவில் சால்க் நதி விபத்துகள்.அணுஉலைகளின் குளிர்நிலை இழப்பால் அணுக்கதிர் கசிவு ஏற்பட்டு மனித உயிர்களைப் பலி வாங்கிய எண்ணிக்கை எவ்வளவு ஆயிரங்களோ. உலகில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களிலும் உள்ள அடிப்படைக் கோளாறு எதுவென்றால் அணுஎரிபொருள்களை நீர்வெப்ப - நீராவிச் சாதனங்கள் குறைவாக உட்கொண்டு குறைந்த ஆற்றலில் செயல்பட்டு அதிக மின்கழிவுகளை - கதிர்வீச்சு ஆபத்துக்குரியவற்றை வெளியேற்றுகின்றன. அத்துடன் உள்கட்டமைப்பில் உள்ள இயந்திரக் கோளாறுகள், அவசர சிகிச்சையின்மை, மின்வெட்டு - மின் அழுத்த ஏற்ற இறக்கம் இவ்வளவுக்கும் மேல், பூகம்ப - சுனாமி ஆபத்து என்று ஆயிரம் விஷயங்கள் விஞ்ஞான மூளைக்கும் அப்பாற்பட்டு விடை அறியப்படாமல் உள்ளன.
உலக அணுசக்தித் தொழில் நிறுவனங்கள் கதிர்வீச்சு அபாயத்தைப் பற்றிய மதிப்பீட்டை எச்சரிக்கை உணர்வுடனோ, சிரத்தையுடனோ, மனித உயிர்களை மனத்திற்கொண்டோ செய்யாதது துரதிருஷ்டவசமானது. 1975-ல் ராஸ்முஸ்ஸன் அறிக்கை மிகவும் நம்பகத்தன்மையுள்ள அணுசக்தித் தொழில்நுட்ப ஆய்வு அறிக்கையாக நம்பப்படுகிறது. இன்னமும் அந்த அறிக்கையைத்தான் மூளைச்சலவையான அணுமின் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அந்த அறிக்கை அணுமின் நிலையங்களில் உள்ள பாதுகாப்புகளுக்கு 25,000 ஆண்டு உத்தரவாதம் வழங்கியுள்ளது.
25,000 ஆண்டுகளில் அணுஉலைகளில் ஒன்று மட்டும் பழுதுறலாம் என்று கூறியுள்ளது. ஆனால், நான்காவது ஆண்டில் த்ரீமைல் தீவு அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. பின்னர் செர்னோபில், புகுஷிமா உலகறிந்த கதை.
பெரிய அளவில் இல்லாவிடினும், இதுவரை 440 அணுஉலைகள் பழுதடைந்து விபத்துகள் நிகழ்ந்துள்ளன. புகுஷிமா விபத்துக்குப்பின் அமெரிக்காவில் கொதிநீர் அணுஉலைகள் ஜெனரல் எலக்ட்ரிக்குச் சொந்தமானவை. அதன்மீது கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாள்வதைக் கண்காணிக்க அரசு முன்வந்துள்ளது. 1990-க்குப்பின் 17 விபத்துகள் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளன. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, சீனா ஆகிய நாடுகள் ஒட்டுமொத்தமாக அணுமின் நிலையத் திட்டங்களைக் கைவிட்டுவிட்டன. ஜெர்மனியில் படிப்படியாக நாட்டில் உள்ள அனைத்து அணுமின் உலைகளை மூடுவிழா செய்ய முடிவு செய்துள்ளது. துருக்கி, சிரியா, ஜோர்டன், போலந்து, எகிப்து, இஸ்ரேல், சவூதி அரேபியா, நைஜீரியா, ஐக்கிய அரபுக் குடியரசு ஆகிய நாடுகள் அணுமின் நிலையத் திட்டத்தில் தலைவைத்துப் படுப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டன.
உலகிலேயே மிகப்பெரிய அணுசக்தி நிறுவனம் ""அரீவா ஆஃப் பிரான்ஸ்''. புகுஷிமா விபத்து காரணமாக, பல்லாயிரம் கோடி டாலர் முதலீடுகள் கொண்ட ஐரோப்பிய அதிசக்தி அணுஉலைத் திட்டம் நீதிமன்ற வழக்கால் முடக்கப்பட்டுவிட்டது. யூரோப்பியன் பிரஷரைஸ்டு அணுஉலைத் திட்டம் பின்லாந்தில் செயல்படுவதாயிருந்தது. அரீவாவின் பிளேமன்வில்ய பிரெஞ்சு நாட்டுத் திட்டமும் அம்போவாகிவிட்டபோது... கூடங்குள முதலீடு பெரிய தொகை இல்லை. கூடங்குளத் திட்டத்தில் உள்ள ஆபத்தை மூளைச்சலவை செய்யப்பட்ட இந்திய அணுமின் துறை விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்ளாத சூழ்நிலை வந்துவிட்டால், தில்லி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசை எதிர்த்துப் பொதுநல வழக்குத் தொடர்வது நன்று.
உலகில் உள்ள அனைத்து நாடுகளும் புகுஷிமா விபத்தை நல்ல பாடமாக உணர்ந்து புதிய திட்டங்களை ஒத்திவைத்தும், செயல்பாட்டில் உள்ள அணு உலைகளின் பாதுகாப்பு பற்றிய நடவடிக்கைகளில் மறுபரிசீலனைகளையும் செய்யும்போது இந்திய விஞ்ஞானிகள் மிகவும் பொறுப்பற்ற முறையில் பேசுவதுடன் ""உலகில் இல்லாத பாதுகாப்புகள் இந்திய அணுஉலைகளில் உள்ளதாகத் தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்கின்றனர்.
இந்திய அணுமின் நிலையத் தலைவர் (சடஇஐக) எஸ்.கே. ஜெயின் கூறும்போது, ""எங்களிடம் அணுஉலைகள் பற்றிய அறிவு முழுமையாக உள்ளது. இந்தியாவில் நிறுவப்பட்ட அணுஉலைகள் அனைத்தும் எப்படிப்பட்ட பூகம்பத்தையும் எப்படிப்பட்ட சுனாமியையும் தாங்கும் சக்தி படைத்தது'' என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் எப்படி அணு உலைகள் பத்திரமாக இயங்கி வரும் லட்சணத்தை அறிவது நன்று. மொத்த மின்சார உற்பத்தியில் 3 சதவீதம் மட்டுமே வழங்கும் அணுசக்தித்துறை விஞ்ஞானிகளின் அலட்டலுக்கு ஒரு குறையுமில்லை. தாராப்பூரில் மட்டும் 1980-களில் தொடங்கி இன்றுவரை சுமார் 400 தொழிலாளர்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். தில்லியிலிருந்து 200 கி.மீ. தூரத்தில் உள்ள நாரோராவில் தீவிபத்து ஏற்பட்டு அணுஉலை கட்டடம் வரை தீ பரவியது. அப்போது அமைக்கப்பட்டிருந்த அவசரநிலை ஏற்பாடுகள் எதுவும் வேலை செய்யவில்லை. நல்லவேளையாக தீ தானாகவே அணைந்துவிட்டதால் மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கைகாவில் சோதனையின்போது தவறான வடிவமைப்பால், கட்டுமானம் சரிந்தது - நல்லவேளையாக அப்போது அணுஉலை வேலை செய்யாததால் மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அவ்வப்போது விஞ்ஞானம் காப்பாற்றாமல் தெய்வம் காப்பாற்றியுள்ளதாம்.
ராஜஸ்தான் அணுமின் நிலையத்தின் கதிர்வீச்சுக் கழிவுகள் 1995-ல் ஏரியில் விடப்பட்டதை மூன்று மாதம் கடந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2003-ல் கல்பாக்கத்தில் ஆறு தொழிலாளர்கள் கூடுதல் கதிர்வீச்சுக்கு ஆளாகி மடிந்துள்ளனர். இந்திய அணு சக்தி வரலாற்றில் பணியாளர்கள் நேரிடையான கதிர்வீச்சுக்கு ஆளானது - அனுமதிக்கப்படும் அளவுக்குமேல் தாக்கப்பட்டதில் மோசமான ஒன்று.
கைகா அணுமின் நிலையத் தொழிலாளர்களின் சிறுநீர்ப் பரிசோதனையின்போது கூடுதல் அளவில் ட்ரைட்டியம் இருப்பது புலனானதைத் தொடர்ந்து 2009-ல் தொழிலாளர் போராட்டம் வெடித்தது. விசாரணையின்போது தெரியவந்த விவரம் குடிதண்ணீர்த் தொட்டியில் ட்ரைட்டியம் கலந்துள்ளதும் புலனாயிற்று. ட்ரைட்டியம் குருதியில் கலந்தால் புற்றுநோய் ஏற்படும்.
மேலே விவரிக்கப்பட்ட பல்வேறு அணுமின் நிலைய விபத்துகள் - தெய்வச் செயலால் தவிர்க்கப்பட்ட விபத்துகள் எல்லாமே இந்திய அணுமின்சக்தித் துறைச் செயலர் பெருமையுடன் கூறும் கதிர்வீச்சுப் பாதுகாப்பு - அவசரகால பாதுகாப்பின் லட்சணம். எந்த சுனாமியோ, பூகம்பமோ இல்லாத சூழ்நிலையில்கூட இந்தியாவின் அணுசக்தி நிலையக் கழிவுகளின் கதிர்வீச்சுகள் மனிதர்களின் உடற்கூறுகளுக்குச் சென்றவண்ணம் உள்ளன. இந்திய அணுசக்தித்துறை சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் செயல்படுகிறது.
1962-ல் இயற்றப்பட்ட அணு மின்சாரச் சட்டம், அணுசக்தித் துறைக்கு அவர்கள் விரும்பாத விஷயங்களைத் தெரியப்படுத்த வேண்டாம் என்ற சுதந்திரத்தை வழங்கியுள்ளது. உண்மையை மறைக்கும் அதிகாரம் - ""நமது அணுசக்தி பலம் பாகிஸ்தானுக்கோ - சீனாவுக்கோ தெரிய வேண்டாம்'' என்பது சரி. ஆனால், இயந்திரக் கோளாறு - அவசரகால பாதுகாப்பு கோளாறு - கட்டுப்படுத்தப்படாத கதிர்வீச்சுக் கழிவு... பற்றிய செய்திகளை எப்படி மூடி மறைக்க முடியும்? எப்படியோ 2ஜி ஊழல்போல் கசிந்து விடுகிறது.
யுரேனியம் தோண்டி எடுப்பதிலிருந்து அணுஉலை செயல்படும்வரை நிகழ்த்தப்படும் அணு எரிசுழற்சியில் - ஒவ்வொரு கட்டத்திலும் கதிர்வீச்சுக் கழிவு ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. மண்ணில் சேரும் இக்கழிவின் கதிர்வீச்சு சக்தியின் ஆபத்து ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும். அணுமின் கழிவு பற்றிய ஆபத்தைப் பற்றி அணுமின் துறை ஒப்புக்கொள்ளவே மறுக்கிறது.
வங்காள விரிகுடாவில் எந்தவிதமான சுனாமியும் ஏற்படாது என்றோ - கடல்நீர் பெருக்கெடுத்து கடற்கரை நகரை அழிக்காது என்றோ என்ன உத்தரவாதம் உள்ளது? பாண்டியர் துறைமுகம் கொற்கை அழிந்தது. சோழர் துறைமுகம் பூம்புகார் அழிந்தது. பல்லவர் துறைமுகம் மாமல்லபுரமும் அழிந்தது. அப்படி இருக்கும்போது, கல்பாக்கமும், கூடங்குளமும் அழிக்க முடியாத ஆயிரங்காலத்துப் பயிரா என்ன? ஒருக்கால் அப்படி அழியுமானால்... மக்களோ, மரமோ, பயிரோ எஞ்சினால் நமது அதிர்ஷ்டம். இவ்வளவு மக்கள் எதிர்ப்புகளைப் புறந்தள்ளிக் கூடங்குள அணுமின் உலைகள் நிறுவப்படுமானால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை.

2011/11/9 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
 
.

__,_._,___


சி. ஜெயபாரதன்

unread,
Nov 10, 2011, 10:59:10 PM11/10/11
to RAJA SHUNMUGAM, tamil_a...@yahoogroups.com, தமிழமுதம், anb...@googlegroups.com, tamilmantram
கல்பாக்கத்தில் ஆறு தொழிலாளர்கள் கூடுதல் கதிர்வீச்சுக்கு ஆளாகி மடிந்துள்ளனர்.

இது தவறான கருத்து.  பாதிக்கப் பட்டவர் யாரும் மடியவில்லை. 

ஜெயபாரதன்.

+++++++++++++++++++++++++++++++


2011/11/10 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages