திரு. பொள்ளாச்சி மகாலிங்கம் மறைவு

36 views
Skip to first unread message

C.R. Selvakumar

unread,
Oct 2, 2014, 12:32:13 PM10/2/14
to தமிழ் மன்றம்

 திரு. பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் மறைந்து விட்டார் என்று கேள்விப்பட்டேன். என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அன்புடன்
செல்வா

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Oct 2, 2014, 7:56:22 PM10/2/14
to tamilmanram kuzhu, thiru thoazhamai

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

iraamaki

unread,
Oct 2, 2014, 8:14:34 PM10/2/14
to tamil...@googlegroups.com
என் இரங்கலையும் தெரிவிக்கிறேன்.
 
ஐயா மகாலிங்கத்தின் முயற்சியால் “தெய்வசிகாமணிக் கவுண்டர் தேடியெடுத்த பஞ்சமரபு நூலை தமிழருலகுக்கு வெளிக்கொணர்ந்ததும், அதற்கு வீ.பா.க.சுந்தரத்தின் மூலம் ஒரு தெளிவுரை கொணர்ந்ததும், ”பழங்கால நாகரிங்களின் ஆய்வுக்கான பன்னாட்டுக் கழகத்தின்” மூலம் “பழங்கால உலகு (ancient word) என்ற பொத்தகத்தை எடுவித்துக் கொணர்ந்ததும், சங்க இலக்கியம் மூலம், தெளிவுரை போன்றவற்றை வர்த்தமானனின் மலிவுப் பதிப்பு மூலம் கிடைக்கப் புரந்ததும் எதிர்காலத்தில் நிலைக்கும் பணிகள். இன்னும் எத்தனையோ புரவற்  பணிகளைச் செய்திருக்கிறார். அவற்றையும் நினைவு கூர்வோம். பொதுவாக ஒருவருக்கு எத்தனை தான் பணமிருந்தாலும் கொடுக்க மனம் வேண்டுமே? அவருக்கு இருந்தது.
 
அன்னாருக்கான இரங்கல் நேரத்தில் “கிரந்தம், கிரந்தம் என்று சிலரைப் பின்னிருந்து இயக்கித் தமிழரைத் தடுமாற வைத்ததைச்” சற்றே மறந்து,  நல்லவற்றை எண்ணிப் போற்றுவோம்.
 
அன்புடன்,
இராம.கி.. 

வேந்தன் அரசு

unread,
Oct 3, 2014, 6:22:36 AM10/3/14
to தமிழ் மன்றம்
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களில் இவரும் ஒருவர்.

2 அக்டோபர், 2014 8:14 பிற்பகல் அன்று, iraamaki <p...@giasmd01.vsnl.net.in> எழுதியது:



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N D Logasundaram

unread,
Oct 3, 2014, 6:39:21 AM10/3/14
to தமிழ் மன்றம்
இராம்லிங்கா மிஷன் எனுமமைப்பினை தொடங்கி கிரிதாரி பிரசாத் என்பவரை பிரசாகரக்கி 
நற்பணிகள் பல  செய்தவர் தமிழர் நல்வாழ்விற்கு பேருதவிகள் செய்துள்ள ஞானி பொறியாளர் 
தமிழர் தமிழ் புரவலர் அவர்கள் மறைவினுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 

நூ த லோ சு 
மயிலை 

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Oct 3, 2014, 9:31:46 AM10/3/14
to tamilmanram kuzhu
"கிரந்தம், கிரந்தம் என்று சிலரைப் பின்னிருந்து இயக்கித் தமிழரைத் தடுமாற வைத்ததை" மறக்க முடியாததால்தான் தனிக்குறிப்பும் எழுத இயலவில்லை. வலைப்பூவிலும் பதிய  இயலவில்லை. வள்ளலார்  கருத்துப் பரப்புப் பணிகளை அறிந்த நான் ஆர்வத்துடன்  1979 இல் சென்னைக்கு வந்த பொழுது முதல் கூட்டமாக  அவரது உரையைக் கேட்கச் சென்றேன்.

தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்துவது போல் பேசி சமற்கிருதத்தை உயர்த்தி  அதனைப் பரப்ப வேண்டும் என்று பேசினார்.  அடுத்து அவர் கூட்டங்களுக்குச் செல்வதை விட்டு விட்டேன். அறிஞர் ஒருவருடன் அவரது அலுவலகத்தில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு வந்தது. இது குறித்துக் கேட்க வேண்டும் என எண்ணினேன். அதற்குள் உடன் வந்த அறிஞருக்கு அவசர அழைப்பு வந்தமையால் உடன் செல்ல வேண்டி வந்தது. அவரிடம் இவ்வாறு கேட்க எண்ணியதை த் தெரிவித்தேன். அவரைப் பொருத்தவரை சமற்கிருதத்திற்கு அடுத்துதான் தமிழ். எனவே, கேட்டுப் பயனில்லை என்றார்.  மதிவாணரின் சிந்துவெளி எழுத்து நூலுக்கு உதவியது போன்ற அவரது பணியால் அவர்மீது ஈடுபாடு ஏற்பட்டாலும் அவரது மொழிக் கொள்கையும் தமிழ்வரிவடிவச் சீர் குலைப்புச் செயல்களும் வருத்தத்தை ஏற்படுத்தியமைதான் உண்மை. கடந்த ஆண்டும் அவரது இதழில் தமிழ் வரிவடிவச் சிதைவை ஊக்கப்டுத்தும் வகையில் தம் பத்தாண்டுக் கண்டுபிடிப்பு எனப் புதிய வரிவடிவத்தை அறிமுகப் படுத்தியிருந்தார். வாடிய பயிரைக் கண்ட பொழுதெல்லாம் வாடிய வள்ளலாரைப் புகழ்பவர்,  தமிழ்த்தாய்மீது பரிவு காட்டாமல் போய்விட்டாரே என்ற வருத்தம் உள்ளது. எனினும் கொடைஞரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Kaviyogi Vedham

unread,
Oct 4, 2014, 1:31:09 AM10/4/14
to தமிழ் மன்றம்
 வருத்தப்படுகின்றேன் திருவள்ளுவன்!
ஒருவருக்கு நல்ல அஞ்சலி செலுத்த முற்படும் போது
 அவரைப்பற்றி அதிலேயே தூஷணை( அபவாதம் அல்லது குறைகூறுதல்)
 செய்தலும் ஒரு நல்ல தமிழன் தவிர்க்க வேண்டியதில் ஒன்று.உங்களுக்கு இது அழகன்று.
 கொஞ்ச நாள் கழித்து இதைச் செய்திருக்கலாமே? இன்றே குறை சொல்லணுமா என்ன?. வருத்தப்படுகின்றேன்,
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Oct 4, 2014, 2:19:53 AM10/4/14
to tamilmanram kuzhu
அப்படி எண்ணித்தான் முதலில் அமைதி காத்தேன்.

எனினும் மறைந்ததாலேயே  மறு பக்கத்தை ச் சொல்லக் கூடாது என எண்ணுவதும் தவறுதானே!

அவரது கொடை உள்ளம் தமிழ் நூலாசிரியர்களுக்கும் பயன்பட்டது. அதே  நேரம் இந்துத்துவா விற்கும் பயன்பட்டது.

கொடை யாளி என்ற முடிறை யில் இரங்கலை த் தெரிவிப்பதால்தான்  கொடைஞருக்்கு இர ங்கலை த் தெ ரிவிப்பதாகக் குறிப்பிட் டேன்.

யாராக இரு ந்தாலும் தமிழ் வரிவடிவத்தை த் திட்டமிடுட்டு  சிதைப்பவர்களை யும் அதற்கு உறு துணை யாக இருப்பவர்களை யும் அடையாளம்  காட்டுவது தவறல்ல!  தமிழுக்கு முன்னால் யார்தான் உயர்ந்தவர்?

Kaviyogi Vedham

unread,
Oct 4, 2014, 3:43:50 AM10/4/14
to தமிழ் மன்றம்
சரி ஸ்வாமி.. கொஞ்ச நாள் கழித்து அதனைச் சுட்டியிருக்கலாமே. ஏன் அவசரம்??. தமிழ் மரபு , தமிழன் பண்பு அது  அன்று
 அவர் மேல் உங்களுக்குக் காழ்ப்புனர்ச்சி இல்லை என்பதை நான்(மட்டும்?) அறிவேன்.. மேலும். உங்கள் தமிழ் நாட்டில் நிறைய பணக்காரர்கள் இருக்கின்றனர். வேறுயாராவது நா. மகாலிங்கம் அய்யா போல் அள்ளிக்கொடுத்து பல தமிழ் இலக்கியங்களுக்கு+ நல்ல முந்தைய நூல்களுக்கு அருட்கொடை கொடுத்து அச்சிட்டு குறைந்த விலையில் பற்பல தமிழர்கட்கு, தமிழ் மாணவர்கட்கு, ஆய்வு செய்பவர்கட்குக் கொடுத்தவர் யார்  சொல்லுங்கள்? விரல்மடக்குங்கள் பார்க்கலாம்.அதுபோன்றே ஆன்மிகச் சேவையும் செய்தவர் அவர். ஆன்மிக நூல்களையும் பலர்க்கும் அவர் கையால் இலவசமாக உங்கள் போன்ற கவிஞர்கட்கு, பேச்சாளர்க்கு அள்ளிகொடுத்தவர் அவர். சிலம்பொலியாரையும், அவ்வையையும் கேளுங்கள்சொல்வர்.

 எங்கோ ஒரு மூலையில் உங்களுக்குப்( மட்டும்?)-பிடிக்காத ஒரு சிறு செயலைச்செய்ததற்காக இப்படி உமிழணுமா? என்பதே என் கேள்வி. அது அவரது தனிக்கருத்தாக எண்ணி மதிப்பீர்களாக.. உங்கள் கருத்துக்கு விரோதமாக அவர் எத்தனை, கிரந்த நூல்கள் சம்ஸ்கிருத நூல்களை ஆதரித்து வெளிக்கொணர்ந்தார்? சொல்க யானும் தெரிந்து கொள்கிறேன். நன்றி,
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 


வேந்தன் அரசு

unread,
Oct 4, 2014, 9:24:54 AM10/4/14
to தமிழ் மன்றம்
மிகைநாடி  மிக்க கொண்டால் அவர் பெருமைக்குரியவரே 

4 அக்டோபர், 2014 2:19 முற்பகல் அன்று, இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com> எழுதியது:
Reply all
Reply to author
Forward
0 new messages