வக்காலத்து அல்லது வக்காலத்து வாங்குதல் என்பதன் பொருள் என்ன?

967 views
Skip to first unread message

HK Arun

unread,
Oct 3, 2011, 8:16:03 AM10/3/11
to tamil...@googlegroups.com
தமிழில் "வக்காலத்து" அல்லது "வக்காலத்து வாங்குதல்" எனும் சொற்கள் சில வட்டார வழக்குகளில் காணப்படுகின்றன. இச்சொற்கள் குறித்த சரியான பொருள் விளக்கம் என்ன?

இன்னுமொரு சொல் "தான்தோன்றித்தனம்" எனும் சொல்லுக்கான பொருள் மட்டும் அதன் வேர்சொல் பயன்பாடு போன்றவற்றையும் அறிய ஆவல்.

--
அன்புடன்
அருண் | HK Arun


C.R. Selvakumar

unread,
Oct 3, 2011, 10:50:42 AM10/3/11
to tamil...@googlegroups.com
அன்புள்ள அருண்,
 
வக்கீல் என்றால் வழக்குரைஞர் (லாயர்) என்று தெரியும் அல்லவா.
அதை ஒட்டி ஒருவ்வருக்காக மற்றொருவர் வழக்குரைக்க வருதலை
வக்காலத்து வாங்குதல் என்கிறார்கள். வக்கீல் தொழிலர், வக்காலத்து அவர்
செய்யும் தொழில் ("lawyering". the job of a lawyer, work of a laywer, practicing law).
இது மேலோட்டமாக நான் அறிந்தது. சரியான சொற்பிறப்பியல் அல்ல.
 
தாந்தோன்றி என்றால் யாருடைய உதவியும் இல்லாமல் தானே தோன்றியது. தான்தோன்றி என்பது மிக உயர் பொருள் தருவதாயினும் (சிவனைத் தான்தோன்றி என்றும் கூறுவர்), யார் பேச்சையும் கேட்காமல்
தானாகவே, தனக்குப் பிடித்தவாறெல்லாம் (சரியல்லாததையும், கெட்டதெல்லாம்) செய்யும் ஒருவரையும் தான்தோன்றி என்றும்,
அப்படியான நடத்தை, போக்கை தான்தோன்றித்தனம் என்பர். சுயம்பு என்றாலும் தானே தோன்றியது. சிலர் பெயர்கூட சுயம்புலிங்கம்,
சுயம்புநாதன் என்று இருக்கும். தமிழில் தானப்பன் என்பதும் வழக்கில்
இருக்கும் பெயர்.
 
அன்புடன்
செல்வா

2011/10/3 HK Arun <arunh...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

Mani Manivannan

unread,
Oct 3, 2011, 11:36:19 AM10/3/11
to tamil...@googlegroups.com
வக்கீல் மற்றும் வக்காலத்து (वकालत) என்பவை உருது மொழிச் சொற்கள். 

வக்காலத்து என்பது ஆங்கிலத்தில் Power of Attorney என்ற சட்டக் கலைச்சொல்லுக்கு இணையானது. (http://wiki.answers.com/Q/What_is_vakalat_in_legal_terms) (http://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81)

“நீ என்ன அந்த ஆளுக்கு வக்காலத்தா?” அல்லது “நீ என்ன அந்த ஆளுக்கு வக்காலத்து வாங்கிட்டு வந்துட்டாயா?” என்ற சொற்றொடர்களுக்கு, ”நீ என்ன அந்த ஆளுக்காக வழக்காடும் உரிமை பெற்று வந்து விட்டாயா” என்று பொருள். 

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
கொட்டிவாக்கம், சென்னை 600043

2011/10/3 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

HK Arun

unread,
Oct 3, 2011, 12:42:58 PM10/3/11
to tamil...@googlegroups.com
விளக்கத்திற்கு மிக்க நன்றி செல்வா.

"தான்தோன்றித்தனம்" எனும் சொல், எதனையும் சரியாகப் பரிசீலிக்காமல் ஆராயமல் தன்மனம் போக்கில் கருத்து தெரிவிப்பதனையும், எந்த ஒருவரினதும் தகுதரம் பாராது எந்த ஒரு உயர் மனிதரையும் மதியாத வகையில் "வா இரண்டில் ஒன்று பார்ப்போம்" என்பது போன்ற செயல்பாடுகளும், தான்செய்வதே சரியென (பிழையானதாக இருந்தப்போதும், அதனை மறைத்து) நிறுவமுனைவதும் "தான்தோன்றித்தனம்" எனும் வகைக்குள் அடங்குபவைகள் தானே?

2011/10/3 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

HK Arun

unread,
Oct 3, 2011, 1:00:27 PM10/3/11
to tamil...@googlegroups.com
 அன்புடன் மணி மு. மணிவண்ணன்

பதிலுக்கு மிக்க நன்றி! 

நீங்கள் கொடுத்த விளக்கத்தின் படி "நீ என்ன அந்த ஆளுக்கு வக்காலத்தா?" எனும் வாக்கியம் "நீ என்ன அந்த ஆளுக்கு பிரதிநிதியா?" என்பது போல் இருக்கிறது. பிரதிநிதி என்பது தமிழ் சொல்லா? அல்லது வேறு சொற்கள் உள்ளனவா?

"பிரதிநிதியா?" என்பதை "பிரதிநிதி" (Representative) என்பதுபோல்
"வக்காலத்தா?" என்பதை எவ்வாறு (வக்காலத்தர்!?) அழைக்கப்படுகிறது?

தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் செய்த செயல் பிழையானது எனும் போது, குறிப்பிட்ட அந்நபரது பிழையை திருத்த முனையாமல், அதனை மறுதலித்து அந்நபருக்காக வீன்விவாதம் அல்லது எதிர்வாதம் புரியும் ஒரு நபரை எவ்வாறு அழைக்கலாம்?

Elangovan N

unread,
Oct 3, 2011, 1:05:04 PM10/3/11
to tamil...@googlegroups.com
அன்பின் நண்பர் மணிவண்ணன், 
வக்காலத்து என்பது நீங்கள் சொல்வது போல ஒரு ஆவணமே.
6/7 ஆண்டுகளுக்கு முன் ஒரு வழக்கில் வழக்குரைஞரை மாற்ற வேண்டிய தேவை எழுந்தது.
புதிய வழக்குரைஞர் அப்பொழுது வக்காலத்து என்ற ஒரு ஆவணம் எழுதி என்னிடம்
கையெழுத்து பெற்றுச் சென்றார்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
பி.கு: ஏன் வழக்குரைஞரை மாற்ற வேண்டி வந்தது தெரியுமா? எதிராளி கூட கூட்டுப் போட்டுக் கொண்டார் :-))))
அப்போது, வழக்குமன்றத்தில் இது போன்ற கிடைத்த பல்வேறு துய்ப்புகளில், இந்தியாவில் சட்டம் படுகின்ற பாட்டுக்கு அரசியல்வாதிகளை மட்டும் திட்டுவது எந்த விதத்திலும் ஞாயமே இல்லை என்று பட்டது.


2011/10/3 Mani Manivannan <mmani...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages