அறியப்படுகிறான்? இதுவே கோவலன் கொலைக்கு ஒரு காரணமாக இருக்குமா? ( விரத நீங்கிய வெறுப்பினன் , சாவக நோன்பிகள் )
அடுத்து மனையறம்படுத்த காதைக்கு வருவோம்.
நெடுஞ்செழியனின் மகன் அரண்மனைத் தீயில் கருகியது சிலம்பிலேயே சொல்லப்படுகிறது. ஒரு பொற்கொல்லன் செய்த பிழைக்கு, வெற்றிவேற்செழியன் 1000 பொற்கொல்லரை கொன்றது பெரும் முட்டாள் தனம். கண்ணிற்குக் கண்ணென்றாலும், பழிக்குப் பழியென்றாலும் இது ஏற்கமுடியாத கொடுங்கோன்மை.
நெடுஞ்செழியனின் மகன் அரண்மனைத் தீயில் கருகியது சிலம்பிலேயே சொல்லப்படுகிறது.
கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்ல ராயிரவரைக் கொன்று
இணையத்திலும் தொடட்கட்டுரையாய் உண்டு. என் வலைப்பதிவிலும் உண்டு.
“சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு” என்ற நூலை(தமிழினி வெளியீடு, முதற்பதிப்பு 2007)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/00wtsG9vKDY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அடுத்தது சாவக நோன்பிகள் பற்றியது. அதற்குமுன் ஓர் அடிப்படைச்செய்தியை அறிந்துகொள்ளவேண்டும்.இந்தியாவெங்கணும் பழங்குடியினர் வரலாற்றுக்காலத்திற்கு முன்னர் பல்வேறு தெய்வங்களை நம்பியிருந்தார். அவை பெரும்பாலும் இனக்குழுத் தெய்வங்கள். அந்நம்பிக்கைகளை மறுத்து “இறைவனென யாருமில்லை” என்று முதலிற்சொன்னது இறைமறுப்புக் கொள்கையாகும். இதற்கு உலகாய்தம்/சாருவாகம்/பூதவாதம் என்று சிற்சிறு வேறுபாடுகளுடன் பெயருண்டு. உலகை ஆய்வது உலகாய்தம். இந்தக் கொள்கையை ஏற்காது வேதக்கொள்கை இந்தியாவின் வடமேற்கில் எழுந்தது.
கொஞ்சங்கொஞ்சமாய் அது கிழக்குநோக்கிப் பரவியது. கணக்குவழக்கின்றி அளவிலும் எண்ணிக்கையிலும் வேள்விகள் பெருகின. அவற்றில் ஆகுதியாகும் பொருட்கள் சிலவேளைகளில் விளைபொருட்களாயும், சிலவேளைகளில் விலங்குகளாயும் இருந்தன. குறிப்பாக மாடுகள் அளவிற்குமீறி வேள்விகளிற் பலியாகின. இது முல்லைநிலப் பொருளாதாரத்தையும், அப்பொழுது தோன்றிக்கொண்டிருந்த தொடக்கநிலை மருதநிலப் பொருளியலுக்கும் பெரிதும் தாக்கம் விளைவித்தது.நேமிநாதர் (22 ஆம் தீர்த்தங்கரர் கி.மு 850), பார்சுவநாதர் (23 ஆம் தீர்த்தங்கரர். கி.மு.712) காலங்களில் அங்குமிங்குமாய் வேள்விகளுக்கு எதிர்ப்புக் கிளம்பியது கி.மு. 600 களில் இந்த எதிர்ப்பு பெரிதும் வெடிக்கத் தொடங்கியது. மக்கலி கோசாலர் (நிருவாணம் கி.மு.533), வர்த்தமான மகாவீரர் (நிருவானம் கி.மு.527), கோதம புத்தர் (நிருவானம் கி.மு.483) ஆகியோர் காலங்களில் இது வேதமறுப்புக் கொள்கையாகவும் உருவெடுத்தது. ”இறையுண்டா, இல்லையா?” என்ற கேள்வியை இவர் ஒதுக்கி, (அதேசமயம் பெரும்பாலும் இறைமறுப்புக் கொள்கையைச் சார்ந்து) வேதமறுப்புக் கொள்கையையே இவர் பெரிதும் பேசினார். இவரில் மக்கலி கோசாலர் தெற்கிலிருந்து (குறிப்பாய்த் தமிழகத்திலிருந்து) போயிருக்கலாம் என்று இற்றை ஆய்வுகள் சொல்கின்றன. வர்த்தமானரும், கோதமரும் மகதத்தின் வடவெல்லை ஒட்டியவர்.மாடுகளை வேள்வியிற் பலியிடுவதைத் தடுத்து நிறுத்தியதால் மக்களிடையே இவர் மூவருக்கும் ஆதரவு பெருகியது. முடிவில் பெருஞ்செல்வந்தரும் மன்னரும் வேந்தருங் கூட இவர் பக்கம் வந்தார். வேதநெறி ஆட்டங் கண்டது. ஏற்கனவே தொடங்கியிருந்த உபநிடத மாற்றங்கள் பெருகின. வேதநெறியில் பூர்வ மீமாம்சம் தாழ்ந்து உத்தர மீமாம்சம் உயர்ந்தது. வேத மறுப்புக் கொள்கையைக் கொஞ்சங்கொஞ்சமாய் உருமாற்றி வேதநேறியும் உள்வாங்கத் தொடங்கியது. இந்த மாற்ற காலத்திற்றான், எல்லாச் சமயநெறிகளும் தமிழகத்துட் புகுந்தன. சங்க காலத்தைக் கி.மு.600-கி.பி 150 என்றே நான் சொல்வேன். எல்லாச் சமயநெறிகளையும் உட்கொண்டு பேசும் பாடல்கள் சங்க இலக்கியத்துள் உள்ளன.வேதமறுப்பின் மூன்றுசமயத் தலைவருமே பார்சுவரை ஏற்றுக்கொண்டது போலவே தெரிகிறது. பின்னால் அவருக்கப்புறம் சமயக்கொள்கை வளர்த்ததில் தான், பிறவிச்சுழற்சியைத் தடுத்துநிறுத்தும் வழிகளைச் சொல்வதில் தான், இவர்மூவரும் வேறுபட்டு நின்றார். இவரின் கொள்கைவேறுபாட்டை இங்குசொன்னால் விரியும். எனவே தவிர்க்கிறேன். பிறவிச்சுழற்சியை அற்றுவிக்கும் கொள்கையாய் கோசாலரின் அற்றுவிகம் (>அத்துவிகம்>அஜ்ஜுவிகம்>ஆஜுவிகம்) உணரப்பட்டது. பிறவிச்சுழற்சியைச் செயிக்கும் கொள்கையாய் மகாவீரரின் செயினம் உணரப்பட்டது. பிறவிச்சுழற்சி பற்றி புத்திதெளிவிக்கும் நெறியாய் புத்தம் உணரப்பட்டது. ஆசீவிகம், செயினம், புத்தம் என மூன்றுமே தியானநிலையை அழுத்துபவை. சம்மணம் கொட்டியே மாந்தர் தியானிப்பதால் சம்மணம்>சமணம் என்று மூன்றுமே அறியப்பட்டன.பின்னால் வேதம், செயினம், புத்தம், சிவம், விண்ணவமென்ற எல்லாஞ்சேர்ந்து அற்றுவிகத்தை கி.பி. 8/9ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலிருந்து அறவே ஒழித்தன. இன்று அற்றுவிகத்திற்கு ஒருசில சங்கப்பாடல்களைத்தவிர தனிப்பட ஒரு உருப்படியான நூலும் கிடைக்காத அளவிற்கு நிலைமையுள்ளது. அற்றுவிகத்தின் பின் மற்றவை தமக்குள் சண்டைகளைத் தொடர்ந்தபோது கி.பி. 600/700 களுக்கருகில் புத்தம் தமிழ்நாட்டில் காணாதுபோய் இலங்கையில் நிலைகொண்டது. செயினம் 12 ஆம் நூற்றாண்டு வரை தாக்குப் பிடித்து திருவண்ணாமலையைச் சுற்றிலும் தங்கிப்போய் ஓரமாய் ஒதுங்கிக்கொண்டது. அற்றுவிகமும், புத்தமும் தமிழகத்தில் இல்லாது போனவுடன் சமணம் என்ற பொதுப்பெயர் செயினரின் விதப்புப்பெயராகவும் ஆகிப்போனது. மதங்கள் பற்றிய ஒழுங்கான புரிதலுள்ளவர் ”சமணர்” என்ற பொதுச்சொல்லை ஆளாது ”செயினர்” என்ற விதப்புச் சொல்லாலேயே மகாவீரரைப் பின்பற்றுவோரைக் குறிப்பர்.வேதநெறி சிவத்தோடும், விண்ணவத்தோடும் சமரசம் செய்துகொண்டு வேதநெறிப்பட்ட சிவம் (தேவாரத்தில் இதே சொல்லப்படும்), வேதநெறிப்பட்ட விண்ணவம் (நாலாயிரப்பனுவலில் இதே சொல்லப் படும்) என்ற கலப்பு மதங்களைக் கொண்டுவந்து, புரிசைகளில் நெருப்பிற்கு முகன்மை கொடுக்காது நீருக்கே முகன்மைகொடுத்து 15 ஆம் நூற்றாண்டுவரை இருகூறாய்த் தனித்திருந்தன. அதற்கப்புறம் இவையிரண்டும் தங்களுக்குள் கொஞ்சங் கொஞ்சமாய் உறவாடி ஒரு சமதானநிலைக்கு வந்து இன்று சிவா-விஷ்ணு ஆலயங்கள் என்று பொது ஆலயங்கள் எழுப்பும்நிலைக்கு வந்திருக்கிறார். இந்துமதம் என்ற கலவைச்சொல் முகலாய காலத்திற்கும் அப்புறமெழுந்தது. கொஞ்சம் அழுத்திக்கேட்டால் பலரும் “சைவர்”, ”வைணவர்” என்றே தம்மைப் பிரித்துச்சொல்வர். என்செய்வது? காலம் மாறிவிட்டது. என்பதால் அரசாங்கப் பதிவுகளில் “இந்துமதம்” என்று எழுதிக்கொள்வர். இந்துமதம் ஒரு கலவை மதம்.இப்பொழுது வேதமறுப்பு சமயங்களுக்கு வருவோம். பிறவிச்சுழற்சியை நிறுத்த உறுதி எடுத்துக்கொண்டோர் துறவிகளாவர். இப்பிறவியைத் துறந்தோர். அடுத்த பிறவி வேண்டாம் என்ற சிந்தனையில் தன் வாழ்நாளைக் கழிப்பார். இவரைச் செயினத்தில் முனிவர் என்றும், அற்றுவிகத்தில் அறிவர் என்றும் புத்தத்தில் பிக்குகள் என்றுஞ் சொல்வர். முனிகளுக்கும், அறிவர்களுக்கும், பிக்குகளுக்கும் சேவை செய்வோர் சால்வகர் என்னும் சாவகராவார். எல்லாவித இல்லற நோன்பினரும் சாவக நோன்பிகள் ஆகலாம்.கோவலன் குடும்பத்தில் இம்மூன்று நெறிகளுக்குமே ஆதரவு இருந்திருக்கலாம். கோவலனின் தந்தை செயினத்திலோ/அற்றுவிகத்திலோ இருந்து பின் புத்த நெறியை ஒழுகியிருக்கிறார். கோவலன் செயினனா என்பது உறுதியாய்த் தெரியாது. ஆனால் மகளுக்கு மணிமேகலை என்ற புத்தப் பெயரைக் கொடுத்தான். அதற்கு கோவலன் தந்தையும் ஒப்பியிருக்கிறார். கண்ணகியின் தாதை அற்றுவிக நெறியாளி. கோவலனின் மகளும், துணைவியும் புத்தஞ் சேர்ந்தவர். கண்ணகி “குண்டத்தில் குளித்து முன்வினை அறுப்பது பீடன்று’ என்று சொன்னதால் அவள் செயின நெறிப்பட்டவாளாயும் இருக்கலாம். அன்றி அற்றுவிக நெறியானவளாயும் இருக்கலாம். ஏனெனில் அற்றுவிகம் முன்வினையைத் தொலைக்கவே முடியாதென்று சொல்லும் எல்லாம் விதிப்படி (நியதிப்படி) தான் நடக்குமென்று சொல்லும். செயினம் நல்வினையால் முன்வினையைத் தொலைக்கலாம், விதியை மாற்றமுடியுமென்று சொல்லும். இரண்டிற்குமே குண்டத்தில் குளித்து முந்தைய வினைகளை அறுப்பது ஒப்புக்கொள்ள முடியாதவொன்றாகும்.சாவக நோன்பிகளுக்கு என்று வெளிப்படை அடையாளம் ஏதும் இருந்ததுபோற் தெரியவில்லை இன்றும் ஏராளமாய்த் தமிழ்ச்செயினர் உள்ளார். அவருக்கும் நமக்கும் எந்த வேறுபாடும் தோற்றத்தில் காணமுடியாது. (நண்பர் பானுகுமார் தமிழ்ச்செயினர். அவருக்கும் மற்றவர்க்கும் எந்த வேறுபாடும் தோற்றத்திற் காணமுடியாது. தீவிரச் சிவநெறியாளர் திருநீறணிவது போல், தீவிர விண்ணெறியாளர் திருமண் சாற்றிக்கொள்வதுபோல் தமிழ்ச்செயினர் எதையும் நெற்றியிற் காட்டிக்கொண்டு நான் பார்த்ததில்லை.
தவிர, சுழற்குறி (சுவத்திகம்>ஸ்வஸ்திகம்) என்பது செயினத்திற்கும் அற்றுவிகத்திற்கும் பொதுவானது.
--You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
இப்பொழுது நாம் பார்க்கப்போகும் வரிகள்
தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு
மாமறை முதல்வ மதுரைச் செந்நெறிகூறு நீ”யெனக் கோவலற்கு உரைக்கும்என்பதாகும். தீயில் திறங்காட்டுவது யாகம் நடத்துவதே. அக்காலத்தில் யாகஞ்செய்யக் குறைந்தது நால்வர் தேவை. இக்காலத்தில் ஒருவரே இரு வேலைகள் செய்வதும், ஒரே வேலையை இருவர் செய்வதும் நடக்கிறது. ஒவ்வொரு யாகத்திலும் கூர்ந்துகவனித்தால் செய்வோர் பொறுப்புப்பகிர்வது தெரியும். முதலாமவர் ஓதி (Hotri; நம்ஓதியே சங்கதத்தில் நம்ஓத்ரி>நம்மோத்ரி>நம்மூத்ரி>நம்பூத்ரி எனவாகலாம். முன்குடுமி நம்பூதிகள் சேரநாட்டிலும், சோழியர் சோழ, பாண்டிய நாடுகளிலும் தங்கினார். சங்ககாலத்தில் முன்குடுமிச் சோழியரே மிகுதி. இற்றைக்காலத்தில் சென்னைப்பக்கம் ஓதியை வாத்தியார் என்பர்.). இரண்டாமவர் அடுத்தவர் (= நெருங்கியவர்; assistant; சங்கதத்தில் Adhvaryu. யாகத்தின் பூதிக-physical-வேலைகள் செய்பவர்) எனப்படுவார்; மூன்றாமவர் உடுகலி (Udgatri; உடன் பாடி; கனபாடிகளும் இவ்வகைதான். கலித்தல்=பாடுதல். கலித்தொகை= பாட்டுத் தொகுதி; கலித்தம்>கயித்தம்>கீதம். அன்று சங்கத கீதம் பாடுவது சாமமோதுவதே.) நாலாமவர் பெருமானர் (Brahmin; யாகம் நிர்வகிக்குங் கண்காணி) மாங்காட்டுப் பார்ப்பான் இந்த 4 வகைகளில் ஏதோவொன்று. செலவளித்து யாகஞ்செய்பவர் இயமானர்> இசமானர்>எசமானர் ஆவார்.”மாமறை முதல்வ! மதுரைக்கு செந்நெறி (= சரியான வழி) எது?” எனுங் கோவலனுக்கு:கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடிவேத்தியல் இழந்த வியனிலம் போலவேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்தான் நலந்திருகத் தன்மையிற் குன்றிமுல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்துநல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்பாலை என்பதோர் படிவங் கொள்ளும்காலை எய்தினீர் காரிகை தன்னுடன்என்று மறையவன் மறுமொழிதொடங்குவான். கோத்தொழிலாளர் = bureaucrats; வேத்தியல் = governance. கோவலனென்ற இயற்பெயர் பற்றி முன்பே சொன்னேன். சென்றபிறப்பில் பரதன் இயற்பெயர்; தொழிற்பெயரோ கோவலன் (கோ வலன் = கோத்தொழிலாளன்) ஆனது; இப்பிறப்பில் கோவலன் இயற்பெயர்; தொழிற்பெயர் பரதன் (= விலை சொல்வான்; trader/import-exporter) ஆனது. கோவலன் பெயருக்கு அடுத்து 2 ஆஞ் சொல்லிலே கோத்தொழிலாளரென மேலே ஆள்வதைக் கண்டுமா, சிலருக்குக் கோவலன் பெயரின் வார்த்தை விளையாட்டுப் புரியவில்லை? ஓர்ந்துபாருங்கள். விதியோ, வினையோ, எதுவாயினும் சமணருக்கு அறநெறி சொல்ல முற்பிறவிக் கதைகள் தேவை. இல்லெனில் பிறவிச் சுழற்சியை எப்படி உணர்த்துவது, அற்றுவிப்பது, செயிப்பது?கோவலன்-கண்ணகி-மாதவி பெயர்விளக்கத்தை முன்னொரு கட்டுரையிற் சொன்னேன். (என்நூலிலும் உண்டு.) பொறுமையோடு படிக்காது, வறட்டுப்பிடிவாதமாய், “இராகவையங்கார் சொன்னார்; இவர் சொன்னார்; கிருஷ்ணன், இலக்குமியே கோவலன், கண்ணகிக்குப் பொருள்” என அடம்பிடித்து, விண்ணவச்சாயலைச் சிலம்பிற்குச்சார்த்தித் தானுங்குழம்பி மற்றோரையும் குழப்புவர்க்கு என்னசொல்லிப் பயன்? விட்டுவிடவேண்டியதுதான். எரி விண்கல்லைப் பற்றிச்சொல்லும்போது ”எறிந்த” என்று தான் சொன்னேன். ஆனாலும் ”எறிந்த”வை விட்டு ”எரிந்த” என்றே பொருள்கொள்வாருக்கு என்ன சொல்ல? நகரவேண்டியதுதான். ரகர, றகறங்களுக்கு வேறுபாடறியாமலா பொருளெழுத வருவேன்? கட்டுரைத்தொடரைக் கவனமெடுத்து ஆழப்படிப்போருக்கு உறுதியாகச் சொல்கிறேன். சிலம்பைப் புரியாதோர் பழந்தமிழர் வரலாற்றைப் புரிந்துகொள்ளவே முடியாது. அதுவொரு அரிய திறவுகோல். உ.வே.சா.விற்கு நாமெல்லோரும் நன்றி சொல்லவேண்டும்..மேலுள்ள வரிகளுக்கு வருவோம்.ஒரு கொற்றவன் கோத்தொழிலாளரோடு கோடினால் (= விலகினால்) அவனுடைய வியல் நிலம் வேத்தியல் இழந்து போகுமென்ற கருத்து மிக முகன்மையானது. (இதை அருத்த சாற்றமும் அழுத்திச் சொல்லும். இன்றும் அமைச்சர் இந்திய ஆட்சிப் பணியாளரோடு கோடிக்கொண்டால் நாடு அதோகதி தான்.) அதுதான் கதைநடந்த காலத்திற் பாண்டிநாட்டில் நடந்தது. கோத்தொழிலாளர் அரசனுக்கு எச்செய்தியுஞ் சொல்லவில்லை. (தமிழகமறிந்த ஒரு வணிகனின் மகன் கோட்டைக்குள் நுழைந்துள்ளான். ”அவன் யார்? எதற்கு வந்தான்?” என்றசெய்தி கூட அரசனுக்கு அறிவிக்காது ஒரு கோட்டைத் தளபதி இருக்கமுடியுமா? Intellignce officials - ஏ பாண்டிநாட்டில் இல்லையா? கோவலன் என்ன சுப்பனா, குப்பனா? ”பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒருதனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்” மகனல்லவா? :அம்பானி மகன் மும்பையில் அடையாளந்தெரியாது போகமுடியுமா?” சற்று முரணாய்த் தெரியவில்லையா?பின்னால் அரசனிடம் வழக்காடுகையில் கணவன் பெயர் சொல்லாமல் ”மாசாத்துவான் மருமகள்” என்றுதானே கண்ணகி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறாள்? அப்படியாயின் மாசாத்துவான் 3 நாடுகளிலும் அரசுத் தொடர்பாளர்க்குத் தெரிந்தவனாகவே இருப்பானல்லவா? ஆயினும் கோவலன், கண்ணகியாரென்று அரசனுக்குத் தெரியவில்லையாம். Isn’t it something wrong with governance? பாண்டியன் எப்படி எதையும் விசாரிக்காமல் பொற்கொல்லன் பேச்சை நம்பிக் கோவலனைக் கொன்று சிலம்பு கொணரச் சொன்னான்? வழக்குரைகாதையில் அல்லவா, அரசனுக்குத் தன்தவறு புரிகிறது. எனவே பாண்டிய அரசின் நிர்வாகம் அரசனுக்குப் பலசெய்திகளைச் சொல்லவில்லை என்று தோன்றவில்லையா?.அரசனும் எதையுங் கேட்கவில்லையே? அரச நடைமுறையில் ஏதோ அடிப்படைத் தவறுள்ளதுபோல் ஆகவில்லையா? அதைத்தான் இங்கே உருவகமாய் வைத்து இளங்கோ சொல்கிறார்.பின்னால் கட்டுரைக் காதையில் மதுராபுரித் தெய்வம் மதுரையில் கண்ணகிக்கு முன்னால் நடந்த கலகங்களையும், மக்கள் மன்னனை எதிர்த்த கதையையும் ”ஆடித்திங்கள் மதுரை அழற்படும்” என்ற தானறிந்த முந்தையச்செய்திகளையும் அழற்பாடு சற்று தணிகையிற் சொல்லும். பஞ்சகாலமென நான்சொன்னதற்கு அதுவுமொரு காரணம் மக்களுக்கு அரசன்மேல் ஏராளங் கோபம் இருக்குமெனில் அது பஞ்சகாலம்தான். இல்லெனில் கண்ணகிக்கு நடந்த நிகழ்ச்சியை வினையூக்கியாய் வைத்து மதுரை எப்படி எரியூட்டப்படும்.? இலக்கிய அழுத்திற்காக இளங்கோ அதைக் கொங்கையில் விளைந்ததாய்ச் சொல்லலாம். (அதை ஒழுங்காய்ப் புரிந்துகொள்ள வேண்டாமா?) அதை விடுத்து தான்மதிக்கும் நாகசாமி ”சிலம்பு புதினமென்று” சொன்னதால், “கொங்கையிற் பாசுபரசா இருந்தது?” என்று பெரியாரை துணைக்கொண்டால் எங்கேபோய் முட்டிக்கொள்வது? மஞ்சட்கண்ணாடி போட்டுப்பார்த்தால் உலகம் மஞ்சளாய்த்தான் தெரியும் "ஆமாங்க! கண்ணகி ஒரு terrorist. இப்பொழுது மனமாறியதா? சிலம்பு ஒரு முட்டாள் தனமான புதினம்.”.கோத்தொழிலாளரொடு கொற்றவன் கோடி, வேத்தியலிழந்த வியனிலம்போல, இங்கே வெங்கதிர் வேந்தன் வேனலங் கிழவனோடு கோடிக்கொள்கிறானாம்.புவி சூரியனைச் சுற்றும் வலயத்தில் ஓராண்டில் 4 முகனநாட்கள் உண்டென்று முன்னாற் சொன்னேன். அவற்றில் 2 ஒக்கநாட்கள். மற்று இரண்டில் ஒன்று வேனில் முடங்கல் (summer solstice. இற்றைக் காலங்களில் சூன் 21 இல் நடைபெறும். சிலப்பதிகாரக்காலத்தில் சூலை 15 இல் நடைபெற்றது.) இன்னொன்று பனிமுடங்கல் (winter solstice. இற்றைக்காலங்களில் திசம்பர் 22 இல் நடைபெறும். சிலம்புக் காலத்தில் இது பொங்கலுக்கு அருகில் ஏப்ரல் 14 இல் நடைபெற்றது.) கோடை உச்சமென்பது வேனில்முடங்கலே. வேனில்முடங்கலும், பனிமுடங்கலும் புவியின் நாலாவது அசைவான நெற்றாட்டத்தால் (nutation) நெடுங்காலப் பாதிப்பிற்கு உள்ளாகும். அதாவது அவ்வியக்கத்தால் வேனில்முடங்கல் ஒரு சுழற்சிப்பருவத்தை ஒட்டி மிகச்சூடும், குறைவான சூடுமாய் ஆகிவிடும். இந்த நெடுங்கால மாற்றம் போக 12 ஆண்டிற்கு ஒருமுறை சூரியனில் தோன்றும், மறையும் சூரியப்புள்ளிகளாலுங் கோடை கூடுவதுங் குறைவதுமுண்டு. சூரியப்புள்ளிகளால் ஆகும் சூடுக்காலத்தைத் தான் பஞ்சகாலமென்றார். அது பெரும்பாலும் தாது ஆண்டிலும் (தாது+12, தாது+24, தாது+36, தாது+48) ஆண்டுகளிலும் நடைபெறுவதாய் ஒரு கணக்குமுண்டு.ஏதோவொரு காரணத்தால் வேனலங்கிழவனொடு வெங்கதிர்வேந்தன் தான் நலந்திருகத் (தான் நலந் திருகிப்போக = அளவிற்கு மீறிய கோடை கூடிப்போக) தன்மையிற் குன்றி (எல்லா ஆண்டுமுள்ள வளம்தருந் தன்மையிற்குன்றி) ”முல்லையுங்குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பிழந்து நடுங்குதுயருறுத்துப் பாலை என்பதோர் படிவங்கொள்ளும்“ என்று இளங்கோசொல்வார். பல தமிழறிஞரும் இம் 3 வரிகளைப் பாலை வரையறையாகக் கொள்கிறாரேயொழிய, என்ன காலமென்பதிற் கோட்டைவிடுகிறார். எல்லாக்காலங்களிலும், முல்லையுங்குறிஞ்சியும் திரிந்து பாலையாகாது. இவ்வாண்டு நல்ல மழைபெய்து,. ஏரி-குளங்கள் நிறைந்தன; அடுத்தாண்டு இளவேனிற்காலத்திலும் கோடையிலுங் கூட சிலபோது மழை பெய்கிறது; இந்நிலையில் அடுத்தாண்டு பாலை ஏற்படுமா? ஏற்படாது.இங்கே ஒரு கட்டியம் (condition) இருக்கிறது. அதைப் பலரும் மறந்துவிடுகிறார். வேனலங்கிழவனொடு வெங்கதிர்வேந்தன் ”தான் நலந்திருக தன்மையிற் குன்றிய” காலத்திற்றான் பாலை ஏற்படும். இப்பொழுது சூரியப்புள்ளிகளைப்பற்றி ஓர்ந்துபாருங்கள். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனின் நலம் திருகிக்கொள்கிறது. தன் வளந்தரும் தன்மையிற் குன்றிப்போகிறது. (மேலையர் 11 இலிருந்து 12 ஆண்டுகள் என்று துல்லியக்கணக்குச் சொல்வார். இந்தியவானியல் அன்றைக்கிருந்த அறிவில் 12 ஆண்டுகள் என்றது.) இதைத்தான் பஞ்சகாலம் என்கிறோம். மாங்காட்டுப் பார்ப்பான் கோவலனைப் பார்த்து, “என்னைய்யா, பஞ்சகாலம் ஏற்படுஞ்சமயத்தில் பெண்டாட்டியோடு இங்கே வந்திருக்கிறாய்? உங்களூர்போல நீர்வளம்கூடிய நாடு இதுவல்லப்பா? இது வறுபடும் நாடு”
அடுத்த பகுதிக்கு வருவோம்.அன்புடன்,இராம.கி.
Sent: Wednesday, July 20, 2016 7:11 PM
Subject: Re: [MinTamil] Re: சிலப்பதிகார ஐயங்கள்
அடுத்து திருவரங்கம், திருவேங்கடம் பற்றிப் பேசிவிட்டு மதுரைக்கான 3 வழிகளுக்குச் செல்லப்போகிறோம். தீதுதீர்ச் சிறப்பின் தென்னனை வாழ்த்திய மாமுது மறையோனிடம் ”யாது நும்மூர்? யாதி ஈங்கண் வரவு?” என்று கோவலன் கேட்க,நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்பால்விரித்து அகலாது படிந்ததுபோல்ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறல்பாயற் பள்ளி பலதொழுது ஏத்தவிரிதிரைக் காவிரி வியம்பெருந் துருத்தித்திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்என்று அரங்கத்தம்மானைப் பற்றிக் கூறுகிறான். மலைப்பாம்பின் மேற்பக்கம் முழுக்கருப்பாகவும், கீழ்ப்பக்கம் வெண்மையாகவும் இருக்கும். இத்தகைப் பாம்பு சுற்றிச்சுற்றி வளைத்து பாயற்பள்ளி அமைப்பது, எப்படியிருக்கிறதாம்? நெடிய பொற்குன்றத்தின் எல்லாப்பக்கங்களிலும் விரிந்து கருமேகம் படிந்ததுபோல் இருக்கிறதாம். இங்கே ஆயிரந் தலைகளென்பது உயர்வுநவிற்சி (இயற்கையில் எப்போதாவது இருதலைப் பாம்புகள் பிறப்பதுண்டு.) விரியும் குற்றலைகளையுடைய அகன்றபெரும் துருத்தியின் (காவிரியில் திருவரங்கத்தீவு துருத்திக்கொண்டேயுள்ளது) பாயற்பள்ளியில் எல்லோரும் தொழுதேத்தும்படி திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும் - என்ற விவரிப்பு நளினமானது. அடுத்து,வீங்குநீர் அருவி வேங்கடமென்னும்ஓங்குயர் மையத்து உச்சி மீமிசைவிரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கிஇருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்துமின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டுநன்னிற மேகம் நின்றது போலபகையணங் காழியும் பால்வெண் சங்கமும்தகைபெறு தாமரைக் கையின் ஏந்திநலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டுபொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றியசெங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்என்ற வரிகள் வேங்கடத்துச் சிறப்பைக் கூறுகின்றன. வேங்கடமென்பது நண்பர் நூ.த.லோ.சு. சொன்னபடி வேங்கடம் (வேகுங் கடம் வேங்கடம். இன்றுள்ள இராயல சீமையிற் பாதியை இது குறிக்கும்.) என்ற பரப்பையும் வேங்கடத்துள் நிற்கும் 7 மலைகளையுங் குறிக்கும். வேங்கடத்திற்கு மேலுள்ள நல்லமலையைச் சுற்றியுள்ள பகுதியும் வேகுங் கடம் தான். ஆனால் சங்ககாலத்தில் அது மொழிபெயர் தேயமென்ற பெயரைக் கொள்ளும். மாமூலனார் நிறையப் பேசியுள்ளார். மொழிபெயர் தேயம் இன்னும் வடக்கே போய் நூற்றுவர் கன்னர் (சாதவா கன்னர்) அரசைத் தொடும்.இன்றும் வேங்கடமலைக்குள் போகும்போது ஒரு வறண்டுபோன அருவியைப் பார்க்கலாம். (கோயில் நிருவாகத்தார் மறுபடியும் அதைப் புதுப்பிக்க முயலுகிறார். செல்வங் கொட்டிவழியும் போது அருவியைப் புதுப்பிக்க முடியாதா, என்ன? அந்தக்காலத்தில் அது வீங்குநீர் அருவியாய் இருந்ததுபோலும். அம்மலையின் உச்சியில் ஒருபக்கம் ஞாயிறும், இன்னொருபக்கம் திங்களும் ஓங்கிநிற்க இடைப்படும் இடத்தில் ஒளிபொருந்திய கோடியுடையை உடுத்து வானவில்லைக் கையிற்தரித்து நல்லநிறங் (கருநிறம்) கொண்ட மேகம் நின்றதுபோல் பகைவர் அணங்கிப்போகும் (ஆட்பட்டுப் போகும்) ஆழியையும், பால்வெண்மையான சங்கத்தையும் தன் தகைபெறும் தாமரைக்கையிலேந்தி நலம் கிளர்த்துகின்ற ஆரத்தை மார்பிற் பூண்டு, பொற்பூ ஆடையிற் பொலிந்து (பொற்பூ ஆடையைத்தான் பீத அம்பரம் என்று ஆண்டாளும் ஆழ்வாரும் சொல்லிச்சொல்லிக் குதுகலிப்பர்) தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் - திருவரங்கத்தைவிட இன்னும் நளினமான விவரிப்பு.இந்த இரு இடங்களையும் காணவந்தேன். நான் குடமலை மாங்காட்டிலுள்ளேன். தென்னவன் நாட்டுச்சிறப்பும் செய்கையும் கண்மணி குளிப்பக் காண்டேன் ஆதலின் வழ்த்திவந்திருந்தேன் இதுவே என் வரவு என்று மாங்காட்டு மறையோன் சொல்லுகிறான்.இதில் கவனிக்கவேண்டியது திருவரங்கத்தையும், வேங்கடத்தையும் பார்க்கவந்த மாங்காட்டு மறையோன், மதுரைக்குச் செல்லும் 3 வழியையும் விவரிக்கும்போது திருமால்குன்றம் பற்றி ஓரளவு மட்டுமே நிறைவின்றிச் சொல்வான். அதில் அரங்கம் வேங்கடம்போல் உணர்வுகலந்திருக்காது. ஏதோ நிறைவில்லாததுபோல் தெரியும். பேரா. தொ.பரமசிவன் தன் முனைவர்பட்ட ஆய்வேட்டில் திருமால்குன்றம் ஒருகாலத்தில் புத்த ஆராமமாய் இருந்திருக்கலாமென்று பல்வேறுவகையில் நிறுவுவார். (அருமையான ஆய்வேடு, பொத்தகமாயும் வெளிவந்தது. தமிழினி வெளியீடு.) அப்படியானால் இம்மாற்றம் கி.மு.75 க்கும் முன்னே நடந்திருக்கவேண்டும். எத்தனையோ புத்த, செயின, அற்றுவிகக் கோயில்கள் சிவ, விண்ணவக் கோயில்களாய் மாற்றம் பெற்றுள்ளன. அவற்றில் இதுவும் ஒன்றோ என்னவோ? (எங்கெல்லாம் மொட்டை போடுகிறோமோ, அங்கெல்லாம் மாற்றங்கள் ஏதோவொரு காலத்தில் நடந்திருக்கலாம். திருப்பதி மொட்டையும் நம்மைக் கேள்விகேட்க வைக்கிறது. வேறு பெருமாள் கோயில்களில் இது நடப்பதில்லையே?)
இனி மூன்று வழிகளுக்கு வருவோம்.
அன்புடன்,இராம.கி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/00wtsG9vKDY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
”இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம்...” என்னும் கொலைக்களக்காதை 193ஆம் வரியில் மதுரையிலிருந்த இளங்கோவேந்தனின் ஆரத்தை கொள்ளையன் கவரவந்த கதையைப் பொற்கொல்லன் சொல்வான். அதைக்கேட்ட வீரர் சமதானமாகிக் கோவலனைக் கொல்வர் எனவே நெடுஞ்செழியனின் இளங்கோ மதுரையிலிருந்ததும், கொள்ளையனால் அவன் ஆரமிழந்ததும் உண்மையாகலாம். அதேபொழுது, பாண்டியரிடையே கொற்கைக்கு முதன்மையிருந்த காரணத்தால் பட்டத்திற்கு முதலுரிமையாளன் ஆளுநனாக கொற்கையில் இருத்தப்பட்டதும் உண்மை. சிலபோது இளங்கோவின் சிற்றப்பன் ஆளுநனாகலாம்.
இரண்டாங் கேள்வியாய் “பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று” என்பதை எண்ணிக்கையாய் எடுக்காது, “திசையாயிரத்து ஐஞ்ஞூற்றுவரை” என்பதுபோல் கூட்டத்தாராய்க் கொள்ளலாமா என்றால், கொள்ளலாம். ஆனால் பொற்கொல்லரில் அப்படியொரு கூட்டக்குறிப்பு இருந்ததாவென்று பார்க்கவேண்டும்.
--You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
இந்திரனின் அருங்கலச் செப்பை மதிலுக்கு உவமையாக்கியது மிகவுஞ் சிறப்பானது. பொதுவாய் மேலையர் கோட்டைகளில் வழக்கமாய்க்காணும் அகழிப்பாலத்திற்கு மாறாய் இங்கே புதிய அடவாய் (design) அகழிக்கடியில் சுருங்கைவீதி ஒன்று சொல்லப்படுகிறது. இதுவொரு தொல்லியற் குறிப்பு. இதுபோன்ற கட்டுமானத்தை எந்தத் திரைப்படமும், புதினமும், நூலும் நமக்குச் சுட்டியதில்லை. ஏன், மகதக் கோட்டையை விவரிக்கும் அருத்தசாற்றங் கூட இப்படிக்காட்டாது.) கோவலன் கோட்டைவாயிலுக்கு வந்து, அங்கேயிருந்த காவலிற்சிறந்த கொல்லும்வாள் யவனர்க்கும் அயிராது புகுவான். (அயிராது = ஐயம் வராது. தன் பெயர், தந்தை பெயர், குடும்ப அடையாளம், ஊர்ப் பெயர் என முழுவிவரந் தெரிவித்தே கோவலன் கோட்டையுள் நுழைந்தானென இந்தவொரு சொல்லாட்சியால் நாம் உணர்ந்து கொள்கிறோம். ஆயினும் அவன் நுழைவு வழக்குரைகாதை வரை பாண்டியன் நெடுஞ்செழியனுக்குத் தெரியாதது நமக்கு வியப்பையே தருகிறது. ஒருவேளை பாண்டியனின் நிர்வாகத்தில் intelligence gathering என்ற அமைப்பு சரியில்லையோ? செழியன் வீழ்ச்சிக்கு அதுவே காரணமாய் இருக்குமோ?]
மூதூர் = old town. பெரும்பாலும் கோட்டையும், மூதூரும் வேறுபட்டவையோ என்ற எண்ணம் எனக்குண்டு.