மகரத்தில் சிறுமை கருத்து வேர். மறைதல் பொருள் என்ன?

8 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Jul 27, 2023, 6:44:00 AM7/27/23
to தமிழ் மன்றம்
மகரத்தில் சிறுமை கருத்து வேர். மறைதல் பொருள் என்ன?

சிறுமை, நுண்மை, குறுமை, சுருக்கக் கருத்தில் மகர வரிசையில் உ > இ > எ > ஒ >அ திரிபில் மல் > மில் > மெல் > மொல் > மல் வேரில் சில சொற்கள் வழங்குகின்றன. அவை கிழே:

முகுள் / முகுளம் - அரும்பு, மொட்டு; முகை - அரும்பு, முசிறு - சிறு செவ்வெறும்பு, முடங்கல் - சிறுமை, முண்டு - சிறு வேட்டி, முரியல் - துண்டு, முழங்கை - குறுகிய கை, முழுக்கு - உடல் சிறுக்க நீரில் குளி, முளை / முளையான் - குழந்தை, முறி - துண்டு, தளிர், பாதி, முறுவல் - குறு நகை, முனை - நுனி, மூசு - பிஞ்சு, இளங்காய், மூரி - துண்டம், மூழ்/ முகிழ் (யாழ்) - அரும்பு,

மிடித்தல் - குறைவுறுதல், 

மெல்ல / மெதுவாக - சிறிது சிறிதாக 

மொக்கு / மொட்டு - அரும்பு, மொந்தை - சிறு பானை, சிறு ஏனம்.

மக / மகவு - பிள்ளை, குழந்தை, மகி - உருவில் சிறிய தேவாங்கு, மட்டம் - சிறுமை, மடர்பாளை - பூ அரும்பிய பாளை, மடி - சிறுகும் படி வளைத்து சுருட்டல், மழ - இளமை,  குழந்தை, மறி - சில விலங்கின் குட்டி.  

மறை - தொலைவு நீள நீள காட்சி சிறுகச்சிறுக சிறுத்து பார்வையில் இருந்து மறைதல். இது பார்வைக் கோளாறால் நிகழ்வது. முதல் இரயில் பெட்டி பெரிதாகத் தோன்றும் அதேநேரம் தொலைவு காரணமாக கடைசி பெட்டி சிறுகத் தோன்றும். உண்மை இவ்வாறு இருக்க ஒளிவு என்று சொல்லாமல் எல்லாவற்றுக்கும் மறைப்பு, மறைவு என்று ஒரு பொருளின் காட்சி இன்னொன்றி பின்னே ஒளிவதையும் மறை என்று  மக்கள் தவறாக குறிப்பிட்டு வந்துள்ளனர். ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து என்று ஆண்டாள் சரியாக சொல்லாட்சி புரிந்துள்ளாள் மறைந்து என்று தவறாக சொல்லவில்லை என்பதை நோக்கவேண்டும்.

image.png

Seshadri Sridharan

unread,
Jul 28, 2023, 7:47:45 AM7/28/23
to தமிழ் மன்றம்
ஆங்கிலன் கூட மறைதலை disappear என்றும் ஒளிதலை hide என்றும் வேறுபடுத்தி தான் உரைக்கிறான். தமிழன் தான் வேறுபாடு அறியாமல் தப்பு தப்பாக hide என்பதை மறை என்கிறான்.

Seshadri Sridharan

unread,
Jul 29, 2023, 1:27:57 AM7/29/23
to தமிழ் மன்றம்
On Fri, Jul 28, 2023 at 5:17 PM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
ஆங்கிலன் கூட மறைதலை disappear என்றும் ஒளிதலை hide என்றும் வேறுபடுத்தி தான் உரைக்கிறான். தமிழன் தான் வேறுபாடு அறியாமல் தப்பு தப்பாக hide என்பதை மறை என்கிறான்.

மறை, மறதி  இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. சிறுகச் சிறுக புலனாகாமல் போவது மீண்டும் தோன்ற வாய்ப்புள்ளது. இதாவது மறைவது மீண்டும் தோன்றலாம், மறந்ததும் மீண்டும் நினைவில் தோன்றலாம். ஆனால் இறப்பு இருக்கிறதே இறந்தவன் மீண்டு வரவேமாட்டான். ஆனால் இறப்பிற்கும் தமிழன் தோற்றம் - மறைவு என்கிறான். மறைந்தார் என்கிறான்.   
Reply all
Reply to author
Forward
0 new messages