வெருளி நோய்கள் 709 -713 : இலக்குவனார் திருவள்ளுவன்

4 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Nov 19, 2025, 3:54:09 PM (2 days ago) Nov 19
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore

வெருளி நோய்கள் 709 -713 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 704 -708 : தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 709 -713

709. கழுவுத் தூள்  வெருளி-Wajjeophobia

ஏனம் கழுவிக்கான தேய்ப்புத்தூள் (dishwasher detergent) தொடர்பான அளவு கடந்த பேரச்சம் கழுவுத் தூள் வெருளி.

தேய்ப்புத் தூள் என்றால் கைகளால் பாத்திரங்களை அலம்பும் பொழுது பயன்படுத்தும் தூளைக் குறிக்கும்.

காண்க: கழுவு நீர்ம  வெருளி – Xiwophobia

00

 710. களவு வெருளி – Cleptophobia/Kleptophobia

நம்மிடம் இருந்து யாரும் திருடி விடுவார்கள் என்ற அச்சமும் நாம் யாரிடமிருந்தாவது திருடுவோம் என்ற அச்சமும் ஆகிய இரண்டும் களவு வெருளி/திருட்டு வெருளி எனப்பெறும்.

போதிய காரணமின்றி நம் பொருள்கள் திருடு போகும் என்று பரபரப்பாகவும் மன அழுத்தத்துடனும் இருப்பதும் உண்டு. பிறர் பொருளை யாரும் அறியாமல் எடுத்துவிடுவோம் என்று அஞ்சி உள்ளம் நடுங்குவதும் உண்டு. அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் யாரும் அறியாமல் பிறர் பொருளை எடுக்கும் பழக்கத்தில் உள்ள நிகழ்வுகளை நாம் பார்த்திருக்கிறோம்.  இத்தகையோர் களவு வெருளிக்கு ஆளாகின்றனர்.

clepto / klepto  ஆகிய என்னும் கிரேக்கச் சொற்களுக்குத் திருடுவது, திருட்டு, திருடன் எனப் பொருள்கள்.

00

  711. களிப்பு வெருளி – Charaphobia / Cherophobia

களிப்புச் சூழல் குறித்த அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் களிப்பு வெருளி.

களிப்புச் சூழல் வந்தால் மகிழ வேண்டும்.

கள்ளுண்டு மகிழ்தலைக் களிப்பு என்பர். களிப்பு என்பது மகிழ்ச்சி தரும் கொண்டாட்டம்.

மகிழ்ச்சி வெருளியும் களிப்பு வெருளியும் தொடர்புடையனவே.

‘chero’ என்னும் கிரேக்கச்சொல்லுக்கு மிகுமகிழ்வெய்தல் என்று பொருள்.

00

 712. களை வெட்டி வெருளி –  Zizanmephobia

களை வெட்டி(weed eater) குறித்த வரம்பற்ற பேரச்சம் களை வெட்டி வெருளி.

களையை வெட்டும்பொழுது களையல்லாதனவும் வெட்டப்படுமோ என்று எண்ணிக் களைவெட்டிகுறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.

00

713. களைச்செடி வெருளி – Viriditaphobia

களைச்செடி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் களைச்செடி வெருளி.

தேவையற்ற தாவரமாகவோ தவறான இடத்தில் வளரும் தாவரமாகவோ பயிர்களிடையே வளரும் களைகள் பயிர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு பயிர்களுக்குண்டான ஊட்டச்சத்துக்கள், நீர், சூரிய ஒளி, வளர்வதற்கான இடம் போன்றவற்றைப் பெருமுனைப்புடன் பகிர்ந்து கொள்கிறது. எனவே,பயிர்களின் வளர்ச்சி பாதிப்புறுவதால் களைகள் குறித்த பேரச்சம் உருவாகி வளர்கிறது.

00

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

வெருளி அறிவியல் 2/5

+++

க௪. தமிழர் என்றும் ‘இந்தி’யை ஏற்கமாட்டார் – திருத்துறைக் கிழார்

 


ஃஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      20 November 2025      கரமுதல


(க௩. போலித் தமிழர் – திருத்துறைக் கிழார் : தொடர்ச்சி)

திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
புலவர் வி.பொ.பழனிவேலனார்

ஆ.தமிழர்
க௪. தமிழர் என்றும் 
இந்தி’ யை ஏற்கமாட்டார்

வடஇந்தியர் “தேசிய ஒருமைப்பாடு, தேசிய மொழி பாரதம் ஒரே நாடு” என்றெல்லாம் பேசி இலக்கிய இலக்கணமற்ற, தனக்கென்று எழுத்தில்லாத எண்ணூறு ஆண்டுக்குள் தோன்றிய பண்படாத மொழியாகிய “இந்தி” மொழியை இந்தியத் தேசிய மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் ஆக்குவதற்கு முனைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
தென் மாநிலங்களின் மக்கள் இந்தியை ஏற்க அணியமாயில்லையாயினும், பேராயக் கட்சியினர் ஆட்சி புரியும் மாநிலங்களில் தற்பொழுது மும்மொழிக் கொள்கையை ஏற்றுச் செயல்படுகின்றனர். ஆனால், தமிழ்நாடு மட்டில் இருமொழிக் கொள்கையையே கடைப்பிடித்து வருகிறது. ஏனெனில், தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பு பேராயத்திற்கோ, வேறு அனைத்திந்தியக் கட்சிக்கோ 1967 முதல் கிட்டவில்லை. எனினும், நடுவணரசு (தில்லியரசு) கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிட்டுத் தமிழ்நாட்டில் இந்தியைப் பரப்ப முனைந்து வருகிறது. இந்திப் பரப்பு நிலையங்கள் பல அமைத்து இலவயமாக எல்லார்க்கும் இந்தியைக் கற்றுக் கொடுக்கின்றனர். சிலர்க்கு இந்தி படிக்கப் பணமும் கொடுக்கப்படுகிறது.
அஞ்சல் துறை, இருப்புப்பாதைத் துறை, வருமானவரித் துறை, சுங்கவரித் துறை, வாழ்நாள் பதிவுக்கழகம், அரசுடைமையாக்கப்பட்ட வைப்பகங்கள் (Banks) முதலிய தில்லி நடுவணரசு நிறுவனங்கள் வழி இந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அவற்றில்கூட இந்தியும், ஆங்கிலமுந்தாம் பயன்படுத்தப்படுகின்றன. தமிழுக்கு இடமில்லை.
நடுவணரசு நிறுவனங்களில் பணிபெற யார் சென்றாலும் இந்தி தெரியுமா? என்றொரு கேள்வி கேட்கப்படுகிறது. இந்தி படித்தவர்க்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. திரு. நேரு அவர்கள் காலம் முதல் “மக்கள் விரும்பும் வரையில் எந்த மாநில மக்கள் மீதும் இந்தியை வலிந்து புகுத்தமாட்டோம்,”என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், அது சட்டமாக்கப்படவில்லை.
மக்கள் விரும்பச்செய்வதற்கு வானொலி, தொலைக்காட்சி மூலமும், நடுவணரசு அலுவலகங்கள் மூலமும் இந்தி பரப்பு மன்றங்கள் மூலமும், பணம் மூலமும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
“மக்கள் விரும்பும்வரை இந்தியைப் புகுத்த மாட்டோம்” என்பதைச் சட்டமாக்க வேண்டுமென்று திரு முரசொலி மாறன் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த சட்டத்தீர்மானம் ஏற்கப்படவில்லை.
இத்தகு சூழல்களை உருவாக்கிக்கொண்டு “விரும்பும் வரை” என்று மேற்பூச்சுப் பூசுவது ஏமாற்றே!
அ.இ.அ.தி.மு.க., தி.மு.க.,தமிழ்நாட்டு ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் வரையிலும் இந்தி தமிழ்நாட்டில் புகவியலாது. ஏனெனில், அவை இருமொழிக் கொள்கையைப் பின்பற்றும்.

அதாவது தமிழ் ஆட்சிமொழி, முதல் மொழி, ஆங்கிலம் தொடர்பு மொழி. ஏனைய அனைத்திந்தியக் கட்சிகளில் எது தமிழ்நாட்டு ஆட்சிப் பொறுப்புக்கு வரினும், இந்தி பையப் புகும். அதற்கு முயல்பவர்தாம் “மக்கள் விரும்பும்வரை இந்தி புகுத்தப்படாது” என்று பசப்புமொழி பேசிவருகின்றனர். இந்தி மொழியை எல்லாரும் கற்றுக் கொள்வது குற்றமன்று. ஆனால், அதைத் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாக ஏற்றல், ஒல்லாது.
ஆயின், தமிழழியும்; தமிழ்ப்பண்பாடு கெடும்; நாகரிகம் நலியும்.
சமற்கிருதமும், பாரசீகமும், அரபியும், உருதும், ஆங்கிலமும் தமிழில் கலந்து தமிழை முக்கால் பங்கு அழித்துவிட்டன
. இந்தி சிறிது சிறிதாகத் தமிழில் வந்து கலந்து கொண்டிருக்கின்றது. இந்தியைத் தேசியத் தொடர்பு மொழியாக ஏற்றால் தமிழ் அடியோடு அழிந்தொழியும். எனவே, தமிழர் இந்திமொழியை என்றும் ஏற்கமாட்டோம்.

(தொடரும்)

திருத்துறைக்கிழார் கட்டுரைகள்

தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages