1. மொழிப்போர் வரலாறு அறிவோம்!-11 : மொழிப்போரில் மகளிர் பங்களிப்பு – 2 : இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2. வெருளி நோய்கள் 846-850: இலக்குவனார் திருவள்ளுவன்

4 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Dec 19, 2025, 3:18:51 PM (2 days ago) Dec 19
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

வெருளி நோய்கள் 846-850: இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ        இலக்குவனார் திருவள்ளுவன்      20 December 2025      கரமுதல




(வெருளி நோய்கள் 841-845: தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 846-850

  1. குருடர் வெருளி – Caecophobia
    குருடர் பற்றிய காரணமற்ற பேரச்சம் குருடர் வெருளி.
    Caeco என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குருடு.
    00
  2. குருதி அழுத்தமானி வெருளி – Sphygmomanophobia
    குருதி அழுத்தமானி பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் குருதி அழுத்தமானி வெருளி.
    Sphyg என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் நாடித்துடிப்பு.
    Sphygmomano என்பது குருதி அழுத்த மானியைக் குறிக்கிறது.
    குருதி அழுத்தம் வரம்பு அளவைவிடக் குறைவாகவோ கூடுதலாகவோ இருந்தால் ஏற்படும் தீமைகளையும் இடர்களையும் எண்ணி அஞ்சி அதை அளவிட்டுக் காட்டும் குருதி அழுத்த மானி குறித்தும் பேரச்சம் கொள்கின்றனர்.
  3. குருதி ஊசி காய வெருளி-Blood injection injury phobia

குருதி ஊசி காயம் தொடர்பான மிகையான பேரச்சம் குருதி ஊசி காய வெருளி.
குருதியைக் கண்டும் ஊசி போடுவதாலும் ஊசி போடப்படுவதைப் பார்த்தாலும் காயம் வந்தாலும் பிறர் காயங்களைப் பார்த்தாலும் ஏற்படக்கூடிய அளவுகடந்த பேரச்சங்களை இது குறிக்கிறது.
இதனைத் தனி ஒரு வெருளியாகக் குறிப்பிடாமல் குருதி வெருளி, ஊசி வெருளி(நுதி வெருளி/மருந்தூசி வெருளி), உடற்காய வெருளிவகைகளைக் குறிப்பிடும் பொதுச்சொல்லாகத்தான் கையாளுகின்றனர்.
00

  1. குருதி வெருளி – Haemophobia/ Hemaphobia/Hematophobia

குருதியைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் குருதி வெருளி
குருதி என்பது தமிழ்ச்சொல்லல்ல என எண்ணிக் கொண்டு சிலர் அரத்தம், இரத்தம் என்றெல்லாம் பயன்படுத்துவர். குருதி தமிழ்ச்சொல்லே. குருதி என்னும் சொல்லை 66 இடங்களிலும், குருதித்து(1), குருதிய(1) ஆகியசொற்களையும் சங்கப்புலவர்கள் கையாண்டுள்ளனர். எனவே, இரத்தம் அல்லது அரத்தம் என்று குறிப்பதைவிடக் குருதி என்ற சொல்லையே நாம் பயன்படுததலாம்.
சிறு பருவத்தில் அல்லது இளம் பருவத்தில் கை கால்களில் அடிபட்டு இரத்தம் வருவதால் ஏற்படும் அச்சம் நிலைத்து விடுகிறது. நேர்ச்சிகளில்(விபத்துகளில்) இரத்தம் சிந்துவதைப் பார்த்து ஏற்படும் அச்சமும் வளர்ந்து குருதி வெருளியாகிறது. (இரத்தம், அரத்தம், குருதி எல்லாம் ஒன்றுதான்.)
குருதி என்னும் பொருள் தரும் haima என்னும் கிரேக்கச் சொல் Haemo என மருவியுள்ளது.
00

  1. குரோக்கி வெருளி – Grokephobia
    புனைவுரு பாத்திரமான குரோக்கி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குரோக்கி வெருளி.
    குரோக்கி (Groke) என்பது பின்லாந்து-சுவீடன் எழுத்தாளரான ஓவியர் தோவு சான்சன் (Tove Jansson) உருவாக்கிய சிறார் ஓவிய நூல்களில் இடம் பெறும் மூமின்(Moomin) தொடரில் இடம் பெறும் கற்பனைப் பாத்திரம்.
    00

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன் 

வெருளி அறிவியல் 2/5

++

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-11 : மொழிப்போரில் மகளிர் பங்களிப்பு – 2 : இலக்குவனார் திருவள்ளுவன்

 



(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-10 : மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு – 1: தொடர்ச்சி)

மொழிப்போர் வரலாறு அறிவோம்!-11

மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு – 2

மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள்

இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில்  பெண்களின் அளப்பரிய பங்கில் ஒரு பகுதிதான் பதிவுகளில் உள்ளன. அவற்றில் நாமறிந்த ஒரு பகுதியைத்தான் ‘பெண்களின் முதன்மைப் பங்கு’ என்னும் தலைப்பில் முன் கட்டுரையில் பார்த்தோம். எனவே, இன்னும் சொல்வதற்கு மிகுதியாக உள்ளன. எனினும் மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள் பெயர்களைப் பார்ப்போம்.

மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள் நிரல்

17.1.1938இல்

ஈரோடு (இ)ரங்கம்மாள்

சென்னை இலலிதாம்பாள்(இரு குழந்தைகளுடன்)

14.11.1938 இல்

மருத்துவர் தருமாம்பாள்

புதின ஆசிரியர் மூவாலூர் இராமாமிர்தத்தம்மையார்

பட்டம்மாள் (திருவாரூர் பாவலர் பாலசுந்தரம் மனைவி)

மலர் முகத்தம்மையார்(மயிலைத் தமிழ்ப்புலவர் முத்துக்குமாரசாமியார் தமக்கை)

சீதம்மாள் (மரு.தருமாம்பாள் மருமகள், மூன்று அகவையுடைய குழந்தை மங்கையர்க்கரசி, ஓர் அகவைக்குழந்தை நச்சினார்க்கினியன் ஆகியோருடன்)

21.11.1938இல்

உண்ணாமலையம்மையார் (முன்னாள் திராவிடன் ஆசிரியர் புலவர் அருணகிரிநாதர் மனைவி, தமிழரசி என்னும் ஓர் அகவைக் குழந்தையுடன்)

புவனேசுவரி அம்மையார்(தோழர் என்.வி.நடராசன் மனைவி, சோமசுந்தரம் என்னும் 2 அகவைக் குழந்தையுடன்)

சிவசங்கரி(தோழர் டி.வி.முருகேசன் மனைவி, (உ)லோகநாயகி என்கிற2 அகவைக் குழந்தையுடன்)

சரோசனி அம்மையார்(தோழர் தேவசுந்தரம் மனைவி மார்த்தாண்டம் என்கிற 2 அகவைக் குழந்தையுடன்)

கலைமகளம்மையார்(மரு.சிற்சபையின் மனைவி மரு.தருமாம்பாள் மருமகள்)

ஞானசுந்தரி அம்மையார்(விமலா என்கிற 2 அகவைக் குழந்தையுடன்)

தனக்கோட்டிஅம்மையார், சதுரங்கப்பட்டினம்

28.11.0938இல்

இராசம்மாள்(பெல்லாரி திவான்பகதூர் கோபால்சாமி முதலியார் தமக்கை; பண்டிதை நாராயணி அம்மையார் தாயார்)

கமலம்மாள்(சேக்காடு தோழர் பாலசுப்பிரமணிய முதலியார் மனைவி)

கேக்காடு அங்கயற்கண்ணி அம்மையார்

வேலூர் துளசிபாய்(பிராமணர்)

5.12.1938இல்

செயலெட்சுமி அம்மையார்(இந்தி எதிர்ப்புப் போரில் 85 மாதக்கடுங்காவல் பெற்ற சிந்தாதிரிப்பேட்டை சாமிநாதனின் சிறிய தாயார்)

12.12.1938இல்

(உ)ரோசம்மாள் (சிவாசி என்கிற 2 அகவைக் குழந்தையுடன்)

16.12.1938இல்

அம்பலூர் அபரஞ்சிதம்மாள்(குழந்தை இளங்கோவுடன்)

அம்பலூர் கோவிந்தம்மாள்

கனகாம்பாள்

ஆர்.செல்லம்மாள்

9.1.1939இல்

சேலம் தேவகி அம்மாள் (இரு குழந்தைகளுடன்)

22.01.1939 இல்

எசு.குப்பம்மாள்

பிரகாசம்மாள்

சொக்கம்மாள்

பகவதியம்மாள்

துளசிபாய்

இராசேசுவரி அம்மாள்

குணபாக்கியம் அம்மாள்

கண்ணம்மாள்(இரண்டு அகவைக் குழந்தையுடன்)

விச்சி அம்மாள்

கமலம்மாள்(கசேந்திரன் என்கிற குழந்தையுடன்)

30.01.1939 இல்

சென்னை கல்யாணி அம்மாள்

6.02.1939இல்

மீனாட்சி அம்மாள்

முத்தம்மாள்(தன் குழந்தையுடன்)

அன்னம்மாள்

அமிர்தம்மாள்

பத்மாவதி அம்மாள்

17.02.1939இல்

சென்னை ஆர்.நாராயணி அம்மையார்(பெரியாரைப் பதினைந்து நாள்களுக்குள் விடுதலை செய்க. இல்லையேல் மறியல் என்று முன்கூட்டி எச்சரிக்கை விடுத்து  முதலமைச்சர் இல்லம் முன் மறியல் செய்து சிறை புகுந்தார்.)

20.02.1939இல்

பட்டம்மாள் (பாவலர் பாலசுந்தரம் மனைவி குழந்தை ஆலங்காட் டானுடன்)

ஞானம் அம்மையார்(புலவர் மறை திருநாவுக்கரசு மனைவி. அறிஞர் மறைமலையடிகளாரின் இளைய மருமகள், குழந்தை சிறையஞ்சானுடன்)

6.03.1939இல்

மலர்க்கொடி அம்மையார்

13.03.1939இல்

இராசம்மாள்(திருவாரூர் தோழர் டி.என்.இராமனின் தாயார்)

சரோசனி அம்மையார்(மறை-மாணிக்கவாசகத்தின் மனைவி, மறைமலை அடிகளாரின் மூத்த மருமகள், குழந்தை மறைக்காடனுடன்)

திருச்சி எபினேசம்மாள்

மாயவரம் இரசாமணி அம்மாள்

26.06.1939 இல்

நெய்வேலி தாயாராம்மாள்

நாகை விசாலாட்சி அம்மாள்

17.07.1939இல்

11ஆவது சருவாதிகாரி சுத்தம் ரோசம்மாள்

குருவம்மாள்(சிறையில் உயிர்த்த வீரன் தாளமுத்துவின் மனைவி)

காமாட்சியம்மாள்

மருதம்மாள்(மீனாட்சி சுந்தரம்,அம்சவேணி என்கிற இரு குழந்தைகளுடன்)

வடிவாம்பாள்(ஐந்து அகவைக்ம குழந்தையுடன்)

மலர்க்கொடி அம்மையார்(இரண்டாம் முறை சிறைவாசம்)

இலட்சுமி அம்மாள்

24.07.1939இல்

தாயாரம்மாள் (இரு குழந்தைகளுடன்)

21.08.1939இல்

12ஆவது சருவாதிகாரி மாரியம்மாள்

நெய்வேலி பொன்னம்மாள்(நெல்லைத் தமிழ்ப்புலவர் இராமநாதர் மனைவி)

தமிழ்அன்னை (8 அகவைக் குழந்தையுடன்)

4.09.1939இல்

நாச்சியம்மாள்(இந்திப்போரில் முதன் முதல் சிறைசென்ற பல்லடம் தோழர் பொன்னுசாமியின் மனைவி, நாகம்மாள் என்கிற 10 மாதக் குழந்தையுடன்)

பூவாளுர் செல்லம்மாள்

ஈரோடு மீனாட்சியம்மாள்(மூன்று அகவை இரத்தினம், 9 மாத நாகம்மாள் ஆகிய குழந்தைகளுடன்)

அங்கமுத்து அம்மாள்

காஞ்சி இராசாமணி அம்மாள்

இந்திப் போரில் சிறை சென்ற மங்கைமார் தொகை 73, அவர்களுடன் சிறை சென்ற குழந்தைகள் தொகை 32.)

இத்தகவல்கள் முனைவர் ம.நடராசன் தொகுப்பாசிரியராகவும் மணா பதிப்பாசிரியராகவும் கொண்டு வெளிவந்துள்ள உயிருக்கு நேர் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது என நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

மொழிப்போர் வரலாறு அறிவோம்!

++



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Seshadri Sridharan

unread,
Dec 19, 2025, 9:05:56 PM (2 days ago) Dec 19
to tamil...@googlegroups.com

மிக நன்று 


Reply all
Reply to author
Forward
0 new messages