தொல்காப்பியமும் பாணினியமும் – 3 : நூற்சிறப்பு – இலக்குவனார் திருவள்ளுவன்

5 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Sep 14, 2025, 6:43:57 AM (7 days ago) Sep 14
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan

தொல்காப்பியமும் பாணினியமும் – 3 : நூற்சிறப்பு – இலக்குவனார் திருவள்ளுவன்

 


ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      14 September 2025      கரமுதல


(தொல்காப்பியமும் பாணினியமும் – 2 :பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் – தொடர்ச்சி)

தொல்காப்பியமும் பாணினியமும்

நூற்சிறப்பு

தொல்காப்பியச் சிறப்பு

தொல்காப்பியம், பழந்தமிழர் வரலாற்றை எழுதுவதற்கு வேண்டிய கருவூலமாகத் திகழ்வது என்றும் தொல்காப்பியமே கிறித்து காலத்திற்கு முற்பட்ட வரலாற்று வாயில் என்றும் பேரா.முனைவர் சி.இலக்குவனார் தொல்காப்பியத்தின் சிறப்பினைப் பாராட்டுகிறார். 

“பொருள்” சிந்தனை தமிழுக்கே உரியது. தொல்காப்பியரும் முன்னோர் வழித் தம் நூலான தொல்காப்பியத்தில் பொருள் சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார். இதனைப் பேராசிரியர் க. அன்பழகனார் (கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா: அணிந்துரை: பக்கம். 12-13) பின்வருமாறு கூறுகிறார்:- “மேலும், தொல்காப்பியர் வடமொழியினும் தேர்ச்சியுடையவர் என்று கருதினும், வடமொழி இலக்கண நூல்கள் எனப்படும் ஐந்திரமோ, பாணினியமோ, தொல்காப்பியர் காலத்துக்கு முன் தோன்றியன அல்ல என்பதாலும், ஒரு வேளை இருந்தன எனினும் வேற்றுமொழி எழுத்திலக்கணம், முன்னரே பிறந்த ஒரு மொழி எழுத்துக்கு இலக்கணமாக முடியாமையானும், சொல்லும் அதன் புணர்ச்சிகளும், சொற்றொடர்களும் மக்கள் வழக்கில் மரபாக நிலைத்தவையாதலின் பிறமொழி இலக்கணம் பயன்படாமையானும்; பொருள்” என்னும் அறிவுசால் வாழ்க்கை இலக்கணம், வடமொழியில் என்றும் தோன்றாமையாலும், வடமொழி நூல் எதுவும் முதல்நூல் ஆக வழியில்லை. மேலும், பிறமொழி இலக்கண நூலார் எவரும் எழுத்துக்கும்- சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் காண்பர். பிற்காலத்தில்தான் செய்யுள் யாப்பும் (கட்டும்), கருத்துக்கு அழகு செய்யும் அணியும் குறித்து இலக்கணம் செய்வாராயினர். ஆனால், தொல்காப்பியனார் விவரித்த பொருள்” இலக்கணம் குறித்த சிந்தனையே வடமொழியாளரிடத்தில், என்றும் எழவில்லை. பொருள் என்றது சொல்லின் பொருள் விளக்கம் கருதியது அன்று. அது வாழ்க்கை விளக்கம். அதுவும் இலக்கியத்தில் இடம்பெறும் முறையையும் வகையையும் விளக்குவது. அகமும் புறமுமாய்ப் பகுக்கப் பெற்ற இலக்கிய உலகில் அகத்திணை, புறத்திணை எனவும், களவு-கற்பு எனவும், பிறவாறும் வகை செய்யப்பட்டு உலகியல் வாழ்வியல் இணையும் ஆடவரும் மகளிரும் ஆன இரு சாராரும் எய்தும் உணர்வுகளைப் புலப்படுத்தும் காட்சிகளைச் செய்யுளாக்குவதற்கு உரிய இலக்கணத்தை விவரிக்கும் தனிச் சிறப்புடையதாகும்.) 

தொல்காப்பியம் சிறப்பிக்கும் மரபு

‘தொல்லியல் மருங்கின் மரபு’ (எழுத்து.356), ‘தொல்நெறி மரபு’ (சொல்.106: பொருள். 491) ‘சிறப்புடை மரபு’ (சொல்.421) பொருள்.97) ‘மரபுநிலை திரியா மாட்சி’ (பொருள்.48), ‘தெறற்கரு மரபு (பொருள்.148), ‘அறத்தியல் மரபு’ (பொருள்.203), ‘ மரபு (பொருள்.148), ‘அறத்தியல் மரபு’ (பொருள்.203), ‘நிலைக்குரி மரபு’ (பொருள். 216. 368), ‘கெடலரு மரபு’ (பொருள்.238), ‘நாட்டியல் மரபு’ (பொருள்.243), ‘தொகுநிலை மரபு’ (பொருள்.462), ‘மன்பெறு மரபு’ (பொருள்.628) என்று மரபின் சிறப்பைப் பல அடைமொழிகளிட்டுத் தொல்காப்பியம் சிறப்பித்துப் பேசுகிறது. எனவே, தொல்காப்பியம் மூலம் தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்னரும் தமிழுக்கும் தமிழருக்கும் தொன்மையான மரபு இருந்தமையை உணரலாம்.

தொல்காப்பியத்தை அறியாது வாழ்ந்த மேனாட்டு அறிஞர்கள் சமசுகிருத நூல்களை உயர்வாகவும் தொன்மையாகவும் தமிழ் நூல்களுக்கு முந்தையதாகவும் கருதியமை போல், பாணினியத்தை மட்டும் அறிந்து ஆனால் முழு ஆராய்ச்சி யின்றி அதனைப் புகழ்ந்து தள்ளினர். ஆனால் தொல்காப்பியம் குறித்து அறிந்த கடந்த நூற்றாண்டு மேலை நாட்டினர் தொல்காப்பியத்தின் சிறப்பையும் அட்டாத்தியாயி நூலின் குறைகளையும் உணர்ந்தனர்.

(தொடரும்)

தொல்காப்பியமும் பாணினியமும்

இலக்குவனார் திருவள்ளுவன்


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages