மனுஸ்ம்ரிதி மொழிபெயர்ப்பு குளறுபடி.

626 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Sep 22, 2022, 12:21:20 PM9/22/22
to தமிழ் மன்றம்
மனுஸ்ம்ரிதி மொழிபெயர்ப்பு குளறுபடி.


ஒரு வேற்று மொழிநூலை அச்சிட்டு வெளியிடும் போது அதன் பொருள் சரியான முறையில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளதா? என்று ஒவ்வொரு மறுபதிப்பிலும் ஆய்ந்து பார்க்கப்படவேண்டும். அதிலும் அந்த பாடல் வரியில் இல்லாத சொல் ஒன்றை விளக்கத்தில் இடைச்செருகலாக சேர்ப்பது பெருந்தவறு,  தண்டனைக்கு உரிய குற்றம். அது சமூகத்தில் குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தும் என்பதற்கு  திருவஹீந்திரபுரம் கோமண்டூர் இளையவல்லி இராமானுஜாசாரியார்  மொழிபெயர்ப்பே தக்க சான்று. அதை மீண்டும் மீண்டும் அச்சிடும்போது சரிபார்க்காமல் வெளியிட்டோரும் குற்றம் புரிந்தவரே.  


image.png    
image.png

கருத்துக்கள் - எதிர்கருத்துக்கள் வரவேற்கப்படுகின்ற்ன
Narasimhan U ©
சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்று மனு ஸ்ம்ருதி சொல்லுகிறதா?
மனு ஸ்ம்ருதியில் 8 வது அத்தியாயம் 415 வது ஸ்லோகம் சூத்திரன் என்றால் வேசி மகன் என்று சொல்லுவதாக ஹிந்துமதத்தை எதிர்க்கும் இயக்கங்கள் 1927 முதல் சொல்லிவருகின்றன.
மனு ஸ்ம்ருதி நூல் 1865 இல் தமிழில் மொழிபெயர்ப்பு நூலாக வந்தது. .மொழி பெயர்த்தவர் திருவஹீந்திரபுரம் கோமண்டூர் இளையவல்லி இராமாநுஜாசாரியார், அவரை மொழி பெயர்ப்புச் செய்ய சொன்னவர் புதுவை நா முத்துரங்க செட்டியார். மொழி பெயர்ப்பைப் பிழையற திருத்தியவர்கள் செட்டியாரின் சகோதரர் முத்து கோவிந்த செட்டியார் மற்றும் பு.க.சுப்பராய முதலியார் இருவரும்., மொழி பெயர்க்கச் சொன்னவரும், மொழி பெயர்ப்பை திருத்தியவர்களும் பிராமணர்கள் அல்ல.
மொழி பெயர்ப்புச் செய்யும் போது மனு ஸ்ம்ருதியின் வியாக்யானமாகிய குல்லுக பட்டீயம், கோவிந்த ராஜீயம், மேதாதிதியம் என்னும் மூன்று வியாக்யானங்களை வைத்து
மொழி பெயர்க்கப்பட்டதாகப் பதிவாகியுள்ளது . ஆனால் இந்த மூன்று வியாக்யானங்கள் தவிர மற்ற நான்கு வியாக்யானங்கள் ஸர்வஜ்ஞ, நாராயணர், ராகவாநந்தர், நந்தந ராமசந்த்ரர் இவர்களின் வியாக்யானம் பிற்காலத்தில் 1886 இல் பிரசுரமாகியது.
மொத்தமுள்ள இந்த ஏழு வியாக்யானங்களையும் சேர்த்து ஒரே புஸ்தகமாக கவர்னர் ஜெனரல் சபையில் மெம்பராக இருந்த ராவ்ஸாஹப் விஸ்வநாத நாராயண மண்டலீக சர்மா என்ற பிராமணர் 1886 இல் (பம்பாயில்) மும்பையில் நாகரலிபியில் அச்சிட்டார்.
ஏழுவகை வேலைக்காரர்களில் மூன்றாவதாக உள்ளதைத் தன்னுடைய தேவடியாள் மகன் என்று தமிழ் மொழி பெயர்ப்பு செய்ததே பிரச்சனைக்குக் காரணம்.
ஏழு வியாக்யானங்களில் தேவடியாள் மகன் / வேசி மகன் என்ற பொருளில் மனு ஸ்ம்ருதியின் எட்டாவது அத்தியாயம் 415வது ஸ்லோகத்தில் வார்த்தைகள் அல்லது கருத்து எதுவும் இல்லவே இல்லை.
ஏழு தொழிலாளிகள் யார்? என்று சரியாக மொழி பெயர்ப்பு செய்தவர்கள் கூறுவது 1.யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டுவரப்பட்டவன், 2.பக்தியால் வந்தடைந்தவன், 3.(தன்) வேலைக்காரி மகன், 4.விலைக்கு வாங்கப்பட்டவன், 5.ஒருவனால் கொடுக்கப்பட்டவன், 6.பாகம் பிரித்ததால் கிடைத்தவன் 7.தான் கொடுக்கவேண்டிய அபராதம் அல்லது கடன் தொகையை ஈடுகட்ட வேலை செய்பவன் என்றுதான் வேலைக்காரர்கள் ஏழுவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இதுதான் சரியான மொழிபெயர்ப்பு.
இந்த ஸ்லோகம் ஒருவன் அந்நியனுக்கு “தாஸ்யம்”(DONDAGE) கட்டுப்பட்டு வேலை செய்தலை விவரிக்கிறது. இந்த ஏழுவகைக்குள் ஒன்றாகத்தான் வேலை செய்பவர்கள், இருப்பார்கள் என்பதை விளக்கிட வந்ததே இந்த 8-415 ஸ்லோகம் . சூத்ர என்ற சொல்லின் அர்த்தத்தினை நிரூபிக்க /விவரிக்க இந்த ஸ்லோகம் வரவில்லை. சூத்ர என்ற சொல்லுக்கும் இந்த ச்லோகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
தாஸிமகன் என்று குறிப்பிட்டால் ஸம்ஸ்க்ருத சொல்லாகும் என்று நினைத்துள்ளார் மொழி பெயர்ப்பாளர்.. தாஸன் என்றால் புல்லிங்கம் (ஆண்பால்) இதற்கு ஸ்திரீ லிங்கம் அதாவது பெண்பால் தாஸி என்பது.
தாஸன், தாஸி என்ற ஸம்ஸ்க்ருத சொற்களுக்கு வேலைக்காரன் என்றும் வேலைகாரி என்றுதான் பொருள் சொல்லவேண்டும். இன்றும் கூட வைஷ்ணவர்கள் மற்றொரு வைஷ்ணவரை ஸந்திக்கும்போது தங்களை “அடியேன் ராமானுஜ தாஸன்”. ஸ்ரீ ராமானுஜருக்கு தொண்டு செய்பவன் என்றுதான் சொல்லிக்கொள்வார்கள். அவர்கள் எந்த வர்ணத்தில் பிறந்த வைஷ்ணவர்களாக இருந்தாலும் அடியேன் ராமானுஜதாஸன் என்றுதான் சொல்லுவார்கள்.
தேவதாஸி என்றால் ஆலயத்திற்கு தொண்டு/ வேலை செய்பவள் என்று தமிழில் பொருள். பின் இந்த தேவதாஸி என்ற புனிதமான சொல் தேவடியாள் என்று கொச்சையான சொல்லாக மாறியது, புனிதமான அந்தச் சொல் அர்த்தமும் மாறி இன்று கெட்டவார்தையாகிவிட்டது.
வேலைக்காரன், வேலைக்காரி என்று சரியாகத் தமிழில் மொழி பெயர்க்காமல் தேவடியாள் என்பது எப்படி கோயிலுக்கு ஊழியம் / வேலை செய்பவர்களைக் குறிப்பதை மனதில் கொண்டு வேலைக்காரர்களைக் குறிக்க தேவடியாள் என்று மொழி பெயர்த்துவிட்டார் மொழி பெயர்த்த அய்யங்கார்.
மொழி பெயர்த்தவரும் மொழி பெயர்ப்பை சரிபார்த்தவரும் செய்த தவறால் வந்த பிரச்சனை இது பிற்காலத்தில் இது பெரிய பிரச்சனையை உண்டாக்கும் என்று மொழி பெயர்த்தவரும், மொழி பெயர்த்ததை சரி பார்த்தவர்களும் எண்ணியிருக்கமாட்டார்கள்.
இது பற்றி அஹோபிலமடத்து மாத இதழ் வேதாந்த தீபிகை ஸம்புடம் 18- பக்கம் 335 இல் மாயூரம் ஸ்ரீ டி எஸ் நடேச சாஸ்திரிகள் கட்டுரை தரும் செய்திகள்..
வியாக்யாங்களில் உள்ளதுஇந்த வார்த்தை
(இதற்கு படங்களில் உள்ளதை பார்க்கவும்)
மூலத்தில் உள்ள வார்த்தை
(இதற்கு படங்களில் உள்ளதை பார்க்கவும்)
மொழி பெயர்க்கப்பட்ட நூலில் உள்ள 8-415 ஸ்லோகத்தின் பகுதி
(இதற்கு படங்களில் உள்ளதை பார்க்கவும்)
இது எப்படியிருக்கிறது என்றால் சென்னையில் ஹாமில்டன் வாராவதி (Hamilton’s Bridge) என்றிருப்பதை மக்கள் பேச்சு வழக்கில் கொச்சையாக அம்பட்டன் வாராவதி என்று சொல்லி கடைசியாக இப்போது அதற்கு (Barber’s Bridge) அம்பட்டன் ப்ரிட்ஜ் என்று மாறிவிட்டது.
மனுவுக்கு உருவான ஏழு வியாக்யானங்களிலும் 8-415 ஸ்லோகத்துக்கு தேவடியாள் என்று பொருள் கொள்ளும் அர்த்தத்தில் வார்த்தைகளே இல்லை, தேவதாஸி என்றும் இல்லை.
8- 415 வது ஸ்லோகத்தில், யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டுவரப்பட்டவன் என்று உள்ளது. பிராமணன் ராஜாவாக இருக்கவில்லை, இருக்க மனுவும் அனுமதிக்கவில்லை. எனவே பிராமணனுக்கு யுத்தத்தில் ஜெயித்துவரப்பட்டவன் வேலைக்காரனாக இருக்க வாய்ப்பில்லை. இதை பிராமண வெறுப்பாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அடிப்படை ஆதாரமில்லாமல் பிராமணர்களையும், மனுவையும் திட்டுவது ஆராய்ச்சியற்ற வசவுக்கே வழிவகுக்கும்.
மனு எட்டாவது அத்தியாயம் 415 வது ஸ்லோகத்துக்கு ஆங்கில மொழிபெயர்ப்புகள் என்ன சொல்லுகின்றன என்பதை பார்த்தால் உண்மை தெரியும்.
1. By Man Matha Nath Dutt. M.A. Author of English translation of 2௦ Smritis and other Sanskrit works 1909.
“ A captive of war, a slave for maintenance the son of a female Slave , one purchased for money, a slave obtained as a present, a hereditary one, one condemned to slavery for any offence, these are the seven kinds of slaves ( lit. The sources of slavery).
2. (S.B.E. Vol. XXV, 1886, The Laws of Manu translated with extracts from seven commentaries by G.Buhler.”
There are slaves of seven Kinds, (Viz) he who is made a slave under a standard, he who serves for his daily food, he who is born in the house (the son of a female Slave), he who is bought and he who is given, he who is inherited from ancestors, and he who is enslave by way of punishment.
.............................................................................................................................
இனியும் மனுவில் சூத்திரன் என்றால் வேசி மகன், விபச்சாரி மகன் என்று சொல்லியுள்ளதாகவும் இதற்காகத் தவறான மொழி பெயர்ப்பை கையில் எடுத்து அதுவும், ஒரு பிராமணர் செய்த மொழி பெயர்ப்பு என்று பிரிண்ட் போட்டு விற்பத்தும், பிரிண்ட் போட்ட புத்தகத்தினை மனு நூல் எரிப்பு என்று எரிப்பதுமான செயல், அறமற்றது.
இதே எட்டாவது அத்தியாயத்தில் 410 ,414 இதே மொழி பெயர்ப்பு நூலில் சூத்திரன் என்பதற்கு வேசி மகன் என்று குறிப்பிடப்படவில்லை. மேலும் இதே மொழி பெயர்ப்பு நூலில் இதே எட்டாவது அத்தியாயத்தில் 416 இல் வேலைக்காரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் ஒப்பு நோக்கினால் மொழி பெயற்பினால் உண்டாகியதே 8-415 ஸ்லோகத்தில் உள்ள தவறு தேவடியாள் மகன் என்னும் சொல் என்பது புரியும்.
1889இல் இரண்டாவது பதிப்பு இதில் மூலம் இல்லாமல் மொழிபெயர்ப்புப் பகுதியான தமிழ் வடிவம் மட்டும் நூலாக வெளியானது , மூன்றாவது வது பதிப்பு 1919இல் நான்காவது பதிப்பு 1934இல் வெளியானது .
1919 இல் வெளியான பதிப்பைத்தான் ஸ்கேன் செய்து அப்படியே மாற்றம் இன்றி தருகிறோம் என்று திராவிடர் கழகம் கி வீரமணி ஆய்வுரையுடன் வெளியிடுகிறது . ஆய்வுரை செய்தவர் கண்களுக்கு ஏனோ அந்த மொழி பெயர்ப்புத் தவறு தெரியவில்லை ?! ஏனென்றால் அந்த தவறு அவர்களுக்கு சாதகமாக உள்ளது.
ஸம்ஸ்க்ருத மூலமும் தெரியாது, மற்றவர்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்று ஸம்ஸ்க்ருதத்தை வெறுக்க உணர்ச்சியை தூண்டி ஸமஸ்க்ருத தீண்டாமையை உண்டாக்கி ஏமாற்றியது போதும்.
மனு ஸ்ம்ருதியை அறிந்துகொள்ள நாம் ஸம்ஸ்க்ருதம் படிக்கவேண்டும் .

Seshadri Sridharan

unread,
Sep 23, 2022, 8:05:56 AM9/23/22
to தமிழ் மன்றம்
நானும் எதிர்பார்க்கவில்லை எனது முயற்சி இந்த அளவு தமிழகம் முழுவதும் தாக்கம் ஏற்படுத்தும் என்று!!! Quora விலும் facebook யிலும் நான் இந்த ஆ. ராசாவின் சூத்திரர் தேவடியாள் மகன் விளக்கம் பற்றிய பிறரது பதிவுகளுக்கு அந்த பாடல் வரியில் தேவடியாள் என்ற சொல்லே இல்லை என்று george  bhuler ன் மொழிபெயர்ப்பு வரியை பார்வைக்கு சில முகநூல் குழுக்களில் வைத்தேன். அவ்வளவு தான்  அதை புரிந்து கொண்ட சிலரும் தமது எதிர் பதிவுகளில் தேவடியாள் மகன் என்ற சொல்லே மனுதர்ம பாடலில் இல்லை என்று கூற உடனே அதற்கு ஆ. ராசா ஆதரவாளர்கள் "தேவடியாள் மகன்" இல்லை என்று நிரூபித்தால் 1 லட்சம் உரூபாய் பரிசு என்று அறிவித்தனர். நானும் சளைக்காமல் அந்த மின் முகவரிக்கு அதை அனுப்பினேன் ஆனால் அங்கிருந்து எந்த பதிலும் இல்லை. திராவிடர்கள் அல்லவா அப்படி தான் வாக்கு தவறுபவர்களாக இருப்பார்கள் என்று எனக்கு ஏற்கெனவே தெரியும். இனி தமிழகத்தில் எவரும் பெரியார் சொன்னது போல "சூத்திரன் என்றால் தேவடியாள் மகன்" என்று கூறுவதற்கு இனி அச்சப்படுவார்கள்.   


//மனுதர்மத்தில் சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்று இல்லை என நிரூபிப்பவர்களுக்கு ரூ. 1,00,000 பரிசு.
மானமிகு ஆ. இராசா பேசியது போல மனுதர்மத்தில் இல்லை
தவறு- பொய் - ஆதாரம் இல்லை என்று யாராவது இதுவரை மறுத்துள்ளார்களா?
- மனிதம் சட்டம் உதவி மய்யம்
தொடர்புக்கு,
16, பிவிஆர் தியேட்டர் சாலை,
நம்பியர் - 638458.
ஈரோடு மாவட்டம்.


இதோ நான் தருகிறேன் அந்த வரிகளை. இந்த தருமிக்கு யார் ஒரு லட்சம் தரப்போகிறார்???

ध्वज-आहृतो भक्त-दासो गृहजः क्रीतदत् त्रिमौ ।
पैत्रिको दण्डदासश्च सप्तैते दासयोनयः ॥

- manu-smruti (8.415)

த்வஜ ஆஹ்ருதா பக்த-தாஸ க்ருஹஜ: கீர்ததத் த்ரிமௌ |
பைத்ரிகோ தண்ட-தாஸ: ச ஸப்தைதே தாஸயோநய: ||

- மனு ஸ்ம்ருதி (8.415)

க்ருஹஜ: > என்றால் வீட்டில் பிறந்த என்று தான் பொருள் உள்ளது. இதாவது அடிமையின் வீட்டில் பிறந்த என்று தான் உள்ளது. தேவடியாள் மகன் என்பதற்கான "தாஸ்ய புத்ரா" என்ற சொல் இந்த சமசுகிருத பாடல் வரியில் இல்லை. ஏற்கனவே அடிமையானவன் பெற்றெடுக்கும் பிள்ளை 'எப்படி மாட்டின் கன்று மாட்டின் சொந்தக்காரனுக்கு சொந்தமோ' அது போல அடிமை வீட்டின் குழந்தை அந்த அடிமையின் எஜமானனுக்கே சொந்தம்.

refer page 185 and 186 of the book manusmriti published by George Buhler in 1886 as The Laws of Manu for sudra explanation.

rajam

unread,
Sep 23, 2022, 8:53:26 PM9/23/22
to vallamai, mintamil, tamilmantram
நல்ல கட்டுரை! நன்றி! 

++++++++++ 

1.' மொழிபெயர்ப்பு’ என்பது ஒருவர் ஒற்றைக் கயிற்றின்மேல் ஆடிக் காட்டும் வித்தை; ஒருவர் வழுக்கும் பாறையில் ஆடும் நடனம். 

1a. இங்கே திண்ணிய நிலத்தில் மரபுவழிப் பயிற்சி பெற்ற ஆடல்வல்லார் ஒருவரின் துல்லியத்தைக் காண முடியாது. 

1b. ‘Translation is only a gateway to access the original; it’s not the all end of it; taking it as God’s truth and doing research based only on translations would be very harmful’ என்று என்னுடன் தொடர்புகொண்டு மொழிபெயர்த்த அனைவருக்கும் சொன்னேன், இன்றும் அதையே சொல்லிவருகிறேன். 

++++++++++ 

தற்குறிப்பு: 

அடடா! 

பாரதிதாசன், கண்ணதாசன் ஆகியோர் இன்றிருந்தால் … அவர்களிடம் கேட்டிருக்கலாமே — ‘தாசன்’ என்னும் சொல்லுக்கு என்ன பொருள் என்று! :-( 

பத்மஶ்ரீ டாக்டர் மனோகர் தேவதாஸ் (ஓவியர், எழுத்தாளர்) — குடும்ப நண்பர் 
ஷார்மிளா (தேவதாஸ்) கணேசன் — Friends of Heritage Sites Founder — குடும்ப நண்பர் 
இவர்கள் இருவரும் இப்போது சென்னையில்தான் இருக்கிறார்கள். ஒருவர் கிறித்துவர், மற்றவர் இந்து. இவர்களுடைய தந்தையரின் பெயருக்கு என்ன பொருள் என்று தெரிந்துகொள்ளலாமே!!! 

++++++++++ 

தமிழில் அரசியல் இடையிட்டால் … தமிழின் வாழ்வும் வளமும் தொடர்ச்சியும் கெடும், கெட்டே போகும்

வணக்கம்,
ராஜம் 


Begin forwarded message:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj7Grd6bdXEr9%3DiADmRMQt1Rxd18pLTXT5PhM_%2Bb6O6Gvw%40mail.gmail.com.

தேமொழி

unread,
Sep 23, 2022, 10:22:07 PM9/23/22
to தமிழ் மன்றம்
On Friday, September 23, 2022 at 5:05:56 AM UTC-7 sseshadri69 wrote:
நானும் எதிர்பார்க்கவில்லை எனது முயற்சி இந்த அளவு தமிழகம் முழுவதும் தாக்கம் ஏற்படுத்தும் என்று!!!

மொழி பெயர்ப்பில் குளறுபடி என்று கண்டுபிடித்தது நீங்களா சேசாத்திரி ??? !!!

தேமொழி

unread,
Sep 23, 2022, 10:23:06 PM9/23/22
to தமிழ் மன்றம்
மொழி பெயர்த்தவர் திருவஹீந்திரபுரம் கோமண்டூர் இளையவல்லி இராமாநுஜாசாரியார்
இதிலிருந்து என்ன முடிவு காட்டலாம்?

அவருக்கு சமஸ்கிருதமும் தெரியாது தமிழும் தெரியாது என்று முடிவு கட்டலாமா?

இதைப் பெரியார் பலகாலமாக மேற்கோள் காட்டி வந்துள்ளார் - பெரியார் சான்றுகளுடன் பேசுவதுதான் வழக்கம் - அப்பொழுது சென்ற நூற்றாண்டில் கூட, மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற விதியை வைத்திருந்தவர் ஒருவர் கூட மொழிபெயர்ப்புப் பிழை என்று சொல்லவில்லையா?

மனுதர்ம நூலைப் படிக்காமல்தான் பேசிக் கொண்டிருக்கிறார்களா?
படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான்; ஐயோ என்று போவான்! - என்றார் பாரதியார். 

சம்ஸ்கிருதமும் தமிழும் மெத்தப் படித்த கூட்டம் ஏன் இது குறித்து மௌனம் காத்தனர். 

அறநெறியைக் குறித்த அக்கறை இல்லாதவர்களா ?  அல்லது 

தாசி என்றால் தேவடியாள் என்பது பொதுவழக்கு - அதையொட்டி அவர் மொழி பெயர்த்தார் என்று விட்டு விட்டார்களா?

அல்லது மேல்தட்டு மக்கள் வீட்டில் வேலை பார்க்கும் பெண்கள் தங்கள் ஆசைநாயகிகள் என்ற கருத்தில் வாழ்க்கையை நடத்தியிருக்க வேண்டும். 

இதற்காக ..
"தமிழில் அரசியல் இடையிட்டால் … தமிழின் வாழ்வும் வளமும் தொடர்ச்சியும் கெடும், கெட்டே போகும். "
என்ற சாபம் எல்லாம் விடத் தேவை இருப்பதாகத் தெரியவில்லை 
DasiAparanji1944.jpg
DasiAparanji1944.jpg

1944 – தாசி அபரஞ்சி  சென்ற நூற்றாண்டு திரைப்படம் 
இந்தப் படத்தில் வரும் தாசி அபரஞ்சி  என்பது வீட்டு  வேலைக்காரி  என்று புரிந்து கொண்டு மக்கள் படம் பார்த்தார்கள் என்றால் அது நகைப்பிற்கு இடமாகும் 
அதுமட்டுமல்ல பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள் படித்தவரும்  தாசி = வேலைக்காரி  என்று பொருள் கொள்ள மாட்டார்கள் 

தேமொழி

unread,
Sep 23, 2022, 11:05:25 PM9/23/22
to தமிழ் மன்றம்
2Manu Needhi - 8-415.jpg
Manu Needhi - 8-415.jpg
மனுதர்ம சாஸ்திரம். (மூலமும் உரையும் முழுவதும்). 
உரையாசிரியர் : பிரம்ம பீடம்
அன்னை ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா
https://ia601705.us.archive.org/32/items/acc.-no.-30173-manu-needhi-2011/Acc.No.30173-Manu%20Needhi-2011.pdf#page=492
---------------------------------

தேமொழி

unread,
Sep 23, 2022, 11:36:35 PM9/23/22
to தமிழ் மன்றம்
2Manu Needhi - 8-415.jpg
Manu Needhi - 8-415.jpg
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0016140_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf#page=36
நூலின் பக்கம் 34-35

மனுநீதி விளக்கம்
சுவாமி சிவானந்த சரசுவதி
1934

Seshadri Sridharan

unread,
Sep 23, 2022, 11:44:34 PM9/23/22
to தமிழ் மன்றம்

On Sat, 24 Sept 2022 at 06:45, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
"he who is born in the house"  என்றுதானே உள்ளது.
he who is born in the house of a slave" என்று இல்லை. அதனால் அவரவருக்கு தக பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளது.

முன்புள்ள பாடல் வரிகளையும் பின் தொடரும் பாடல் வரிகளையும் படித்தால் அது அடிமை பற்றியது என்று நன்கு விளங்கும். எனவே அடிமைக்கு பிறந்தவன் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அந்த அடிமையின் குழந்தை எஜமானன் வீட்டில் (outhouse) பிறந்தாலும் அல்லது அடிமைக்கென உள்ள தனிவீட்டில் பிறந்தாலும் அக்குழந்தையும் அடிமையே ஏனென்றால் ஒரு அடிமைக்கு எந்த சொத்தும் கிடையாது என்று பின் தொடரும் பாடல் வரிகளில் சொல்லப்பட்டுள்ளது. இளையவல்லி இராமனுசாச்சாரியார்  8.415 பாடலில் தன்னுடைய தேவடியாள் மகன் என்ற மொழிபெயர்ப்பில் தன் என்பதும் வேண்டாத இடைச்செருகல் தான். ஏனெனில் அதை அடிமையின் தேவடியாள் என்றும் கொள்ள முடியாது பிராமணனின் தேவடியாள் என்றும் கொள்ள முடியாது. இதில் யாரோ சில்மிஷ வேலை செய்துள்ளதாகவே எண்ணத்தோன்றுகிறது. அந்த சில்மிஷத்தை இளையவல்லி இராமனுசாச்சாரியாரின் வீட்டாரோ அல்லது பிழை திருத்தி பதிப்பித்த செட்டியார்களோ முதலியார்களோ அல்லது அச்சு கோர்ப்பவரோ கூட செய்திருக்க முடியும். எனினும் இன்னொரு மொழி நூல் என்பதால் ஒவ்வொரு மறுபதிப்பின் போதும் அம்மொழியை நன்கு அறிந்தவரை கொண்டு பாடல் வரிகளுக்கு சரியான சொல் விளக்கம் தரப்பட்டுள்ளனவா என்று ஆய்ந்த பிறகே அச்சிற்கு அனுப்பி இருக்க வேண்டும். அப்படி செய்யாததால் சர்ச்சை இன்றளவும் தொடர்கிறது. பிராமணர்கள் இந்நூலை பதிப்பிக்காமல் செட்டியார்கள், முதலியார்கள், பாதிரிகள் (george buhler) பதிப்பித்தது அவர்கள் நோக்கத்தில் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

எது எப்படியோ இனிமேலும் மனுஷம்ரிதியை பொது மேடையிலும் எழுத்திலும் மேற்கோளாக வைக்காமல் இருந்தால் சரி ஏனெனில் இது ஒரு சட்ட நூலும் அல்ல புனித நூலும் அல்ல. அது ஒரு மேற்கோள் நூல் அல்லது கோட்பாடு நூல் என்று தான் கொள்ள முடியும். மேலும் வழக்குகளுக்கு தீர்ப்பு கூற தனி சாதியார் இருந்தனர்.  அவர் பிராமணர் அல்லர் அரச குடும்ப உறவினர். தமிழகத்தில் அம்பலத்தார் என்ற தேவர் சாதி உட்பிரிவினர் தீர்ப்பு கூறினர். மனுதர்மம் தான் சட்ட நூல் என்றால் தீர்ப்பு கூறிய இவர் போன்ற சாதி மக்கள் இந்திய முழுவதும் குற்றவாளிகள் ஆவர்.
 

8.410. (The king) should order a Vaisya to trade, to lend money, to cultivate the land, or to tend cattle, and a Sudra to serve the twice-bom castes

8.41 1. (Some wealthy) Brahmana shall compassionately support both a Kshatriya and a Vaisya, if they are distressed for a livelihood, employing them on work (which is suitable for) their (castes).

8.412. But a Brahmana who, because he is powerful, out of greed makes initiated (men of the) twice-bom (castes) against their will do the work of slaves, shall be fined by the king six hundred (panas).

8.413. But a Sudra, whether bought or unbought, he may compel to do servile work; for he was created by the Self-existent (Svayambhu) to be the slave of a Brahmana.

8.414. A Sudra, though emancipated by his master, is not released from servitude; since that is innate in him, who can set him free from it?

8.415. There are slaves of seven kinds, (viz.) he who is made a captive under a standard, he who serves for his daily food, he who is born in the house, he who is bought and he who is given, he who is inherited from ancestors, and he who is enslaved by way of punishment.

8.416. A wife, a son, and a slave, these three are declared to have no property; the wealth which they earn is (acquired) for him to whom they belong.

8.417. A Brahmana may confidently seize the goods of (his) Sudra (slave); for, as that (slave) can have no property, his master may take his possessions.

8.418. (The king) should carefully compel Vaisyas and Sudra to perform the work (prescribed) for them; for if these two (castes) swerved from their duties, they would throw this (whole) world into confusion.

Seshadri Sridharan

unread,
Sep 24, 2022, 12:15:03 AM9/24/22
to தமிழ் மன்றம்
On Sat, Sep 24, 2022 at 7:52 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Friday, September 23, 2022 at 5:05:56 AM UTC-7 sseshadri69 wrote:
நானும் எதிர்பார்க்கவில்லை எனது முயற்சி இந்த அளவு தமிழகம் முழுவதும் தாக்கம் ஏற்படுத்தும் என்று!!!

மொழி பெயர்ப்பில் குளறுபடி என்று கண்டுபிடித்தது நீங்களா சேசாத்திரி ??? !!!

ஆம். க்ருஹஜ என்ற சொல் ஒரு தேவடியாள், வைப்பாட்டியை குறிப்பதல்ல என்று நான் தான் முடிவு கொண்டேன். எனது கல்வெட்டு விளக்கத்தில் நான் கொள்ளும் ஐயப்பாட்டு அணுகுமுரையே இதற்கு உதவியது என்பேன்.

இதற்கு முன் கோமாண்டுர் விஜய் என்பவர் மின்தமிழில் சூத்திரன் என்பதற்கு எந்த சமசுகிருத அகராதியிலும் தேவடியாள் மகன் என்று குறிக்கவில்லை என்று சொன்னது என் நினைவில் அப்படியே இருந்தது. அதே போல ஒரு தி.க. வழக்கறிஞர் தேவடியாள் மகன் என்ற குறிப்பு இந்த 8.415 பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். அதை நான் அப்போதே கூகிள் மனுஸ்ம்ரிதி pdf இல் சென்று பார்த்து அது தவறு என்று தெளிந்தேன். அதை வைத்து தான் இந்த 8.415 பாடலை மீண்டும் துழாவி அதில் க்ருஹஜ என்பது வீட்டில் பிறந்தவன் என்று தான் உள்ளது என்பதை உறுதி செய்து கொண்டேன்.    

அடுத்தடுத்த உமது 3-4 பதிவுகளில் பிறரது மனுஸ்ம்ரிதி வெளியீடுகளை எடுத்து போட்டமைக்கு உம்மை பாராட்ட  வேண்டும். இவர்கள் யாவரும் முந்தைய மொழிபெயர்ப்பின் தாக்கத்தால் அதே பிழையை அப்படியே அச்சிட்டுள்ளனர் என்று முடிவு கொள்ள முடிகிறது. அப்பாடல் வரியில் பக்த தாச என்று உள்ளது, இதாவது பக்கிதியினால் அடிமையாகிவிட்டவர் என்று. இதில் உள்ள தாசவை தான் க்ருஹஜ வோடு பொருத்தி தாசி மகன், வேசி மகன், தேவடியால் மகன் என்று முடிவு கொண்டனர் போலும். எனினும் தாச என்பது பொதுவாக ஆண்,  பெண்  இருவரையும் குறிப்பது. அந்த வகையிலும் இங்கு பெண்பால் ஆன தேவடியாள் என்பதை மட்டுமே இங்கு குறிப்பதற்கு கொண்டது இவர்கள் சமசுகிருதம் அறியா முட்டாள்கள் என்பதை சமசுகிருதமே அறியாத நான் உறக்கச் செல்லுவேன்.  

தேமொழி

unread,
Sep 24, 2022, 1:13:18 AM9/24/22
to தமிழ் மன்றம்
பார்க்க - 
https://aggraharam.blogspot.com/2021/01/

தேமொழி

unread,
Sep 24, 2022, 1:47:39 AM9/24/22
to தமிழ் மன்றம்
இதிலிருந்து பார்க்கவும் 

------------------
சனாதன தர்மத்துக்கு ஆதரவாக ஆளுநர் ரவி பேச்சு.. திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆன்மிகத்திலும் இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றும், ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியினாலும் இந்த நாடு உருவாக்கப்பட்டது எனவும் இந்தியாவை வழிநடத்துவது சனாதன தர்மம் எனவும் பேசி இருந்தார்.
------------------

இந்தியாவை வழிநடத்துவது சனாதன தர்மமா?
சனாதன தர்ம நூல் .... 
சனாதன தர்மத்தின் அடிப்படை என்னவென்று சொல்கிறது ? 

மனுநூல் முதன்மை,  மேலும் சில 
-----------------------

அந்த மனு நூல் என்ன சொல்கிறது ?
பிறப்பு அடிப்படையில் மக்களைப் பிரித்து  பேதம் கூறுவது மனு நூல் 
1. அதாவது சாதிக்கு ஒரு நீதி 
2. பெண்களை இழிவு படுத்துவது மனுநீதி 

இதுதான் இந்தியாவின் பண்பாடு, இந்தியாவை வழிநடத்துவது சனாதன தர்மம்  என்றால் நினைத்துப் பார்க்கவே கூசுகிறது 


அனைத்து சமயத் தலைவர்களும் செய்ய வேண்டியது...

சாமி சொன்னார் ...... சாமியார் சொன்னார் ....... என்று எழுதி வைத்துப் பின்பற்றிக் கொண்டிருக்கும் சமயநூல்களைக் காலத்திற்கு ஏற்ப மீள்பார்வை செய்வது தேவை.  

முதலில்;
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அடிப்படை மனித உரிமை குழுமம் உருவாக்கித் தந்திருக்கும் "மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம்" (Universal Declaration of Human Rights) என்பதை மீறும் சமயத்தின் கருத்துகளைக் கொஞ்சமும் தயக்கமின்றி வெட்டி வெட்டித்  தூக்கிப்போடவும்.

அடுத்து,
அறிவியல் ஆய்வாளர்கள் குழுமம் ஒன்று அமைத்து  (உயிரியல், வேதியியல், இயற்பியல், உளவியல், மருத்துவம்) அவர்கள் உதவியுடன்  அறிவியல்  விதிகளுக்கு  முரணான மாறான  கருத்துகளைச்  சற்றும் தயக்கமின்றி வெட்டி வெட்டித்  தூக்கிப்போடவும்.

அதற்குப் பிறகு;  
மிஞ்சி இருக்கும் (அதாவது அப்படி ஏதேனும் மிஞ்சி இருப்பின்), ஒவ்வொரு சமய நூலின் சாரத்தையும் மற்ற பிற சமயங்களின் சாரத்துடன் ஒப்பிட்டு அலசி ஆராயவும்.  எதனால் உங்கள் சமயம் சிறப்பு  என்று பட்டி மன்றம் நடத்தவும். 

பிறகு உங்கள் சமயங்களின் சாரத்தை  வட்டார மக்களின் எளிய மொழியில் எழுதி அவரவர் சமய மக்களுக்குப் பரப்பவும்.  

பொய்யான, பிழைகள் மலிந்த, அடிப்படை உரிமை மீறும் சமயக்கருத்துகளை மக்களுக்குப் பரப்பாதீர்கள்.
 

Seshadri Sridharan

unread,
Sep 24, 2022, 2:22:38 AM9/24/22
to தமிழ் மன்றம்
எத்தனையோ உபநிடதங்கள், ஆரண்யங்கள், தந்திர யோக நூல்கள் இருக்கையில் மனுதருமம் தான் சனாதனம் என்று தலித்தியர், திராவிடர் ஒட்டாரம் செய்வது அறியாத மக்களை தவறாக வழிநடத்துவது அல்லது கலவரமாக்குவது ஆகும்.

தேமொழி

unread,
Sep 24, 2022, 2:45:21 AM9/24/22
to தமிழ் மன்றம்
Sanatana Dharma:
an advanced text book of Hindu religion and ethics


Publication date 1904

Publisher Benares : Board of trustees, Central Hindu college

manu-sanathana.jpg
https://archive.org/details/sanatanadharmaad00benaiala/page/10/mode/2up?q=manu
-----------------------------------------------------

manu-sanathana2 .jpg
https://archive.org/details/sanatanadharmaad00benaiala/page/12/mode/2up?q=manu
-----------------------------------------------------

தேமொழி

unread,
Sep 24, 2022, 2:54:30 AM9/24/22
to தமிழ் மன்றம்
On Friday, September 23, 2022 at 11:22:38 PM UTC-7 sseshadri69 wrote:
எத்தனையோ உபநிடதங்கள், ஆரண்யங்கள், தந்திர யோக நூல்கள் இருக்கையில் மனுதருமம் தான் சனாதனம் என்று தலித்தியர், திராவிடர் ஒட்டாரம் செய்வது அறியாத மக்களை தவறாக வழிநடத்துவது அல்லது கலவரமாக்குவது ஆகும்.

சொல்வது சனாதன நூல்  
இந்தியாவை வழிநடத்துவது சனாதன தர்மம் எனவும் பேசியவர் ஆளுநர் 
அது சிறந்தது என்று சொன்னவர் இந்தியாவின் சட்டவரையறை மீது உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஆளுநர் 

Every Governor and every person discharging the functions of the Governor shall, before entering upon his office, make and subscribe in the presence of the Chief Justice of the High Court exercising jurisdiction in relation to the State, or, in his absence, the seniormost Judge of that Court available, an oath or affirmation in the following form, that is to say —

 “I, A. B., do swear in the name of God that I will faithfully execute the office of Governor (or discharge the functions of the Governor) of .............(name of the State) and will to the best of my ability preserve,     protect  and defend the Constitution and the law and that I will devote myself to the service and well-being of the people of ..………(name of the State).”
-----------------------------------------------------------------------------
Preamble to the Constitution of India

WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN, SOCIALIST, SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens:

JUSTICE, social, economic and political;

LIBERTY of thought, expression, belief, faith and worship;

EQUALITY of status and of opportunity; and to promote among them all

FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation;

IN OUR CONSTITUENT ASSEMBLY this twenty-sixth day of November, 1949, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.

----------------------------------------------------------------------------- 
இந்தியல் அரசியல் அமைப்பு  கூறும்  LIBERTY, EQUALITY, FRATERNITY என்பதற்கு சனதானத்தில்  இடமே இல்லை என்று அம்பேத்கர் கூறியுள்ளார்

தேமொழி

unread,
Sep 24, 2022, 3:14:09 AM9/24/22
to தமிழ் மன்றம்

இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்?

–அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

பகுதி 2

 நன்றி: http://nakkeran.com/index.php/2017/08/16/whither-hinduism-12345/

படிப்படியாகப் பார்ப்போம்.

ஒரு புருஷனும், அவன் பத்தினியும் மழை பெய்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். வழியில் ஒரு பள்ளம். இடையில் மழை நீர் தெரு மண்ணோடு கூட்டணி வைத்து ‘சகதி’ அந்தஸ்தோடு கிடக்கிறது.புருஷன் பார்த்தான். ஒரே தாண்டு. இந்தப்பக்கம் வந்துவிட்டான்.

திரும்பிப் பார்த்தால் அவன் பத்தினி பாவமாக நின்று கொண்டிருந்தாள். தாண்டினால் விழ வேண்டியதுதான் என பயந்தாள்.‘கொஞ்சம் கை குடுங்கோ… வந்துடறேன்’ என்கிறாள் பத்தினி. இது உங்களுக்காக சொன்ன உதாரணம்தான்.

இதேபோலத்தான் அன்று… ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?

நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.

‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.’

ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி.வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். 

ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்.

ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.

மனு? வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது. அஃதை விளங்கிக் கொள்ள அனைவருக்கும் அறிவு குறைவு.

அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என எளிமை என்ற பெயரில் செய்யப் பட்டதுதான் மனுதர்மம்.

பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை ‘மனு’ பிளவாக்கியது.

 கூடவே, இவர்களைத் தாண்டி ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது மனு.

பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு – சூத்திரனைப்பற்றி இப்படி எழுதியது.“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோ பதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை…” இப்படிப் போகிறது மனு.

வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் ‘நன்றாகவே’ வேலை செய்தது.

ஏற்கெனவே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த க்ஷத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர்களை வேலைக்காரர்களாக எடுபிடிகளாக வைத்திருப்பது என்ற பிராமணர்களின் கோட்பாட்டுக்கு குழைந்தனர்.

‘அடே… குழந்தாய் இந்தா பால். இதைக் குடித்து மகிழ்வாய் வாழு’ என்ற வேதத்தை மனு திரித்து… “இந்த பாலை இவன் குடிக்க வேண்டும்… இவன் குடிக்கக் கூடாது. இவன் எச்சில் படாமல் குடிக்க வேண்டும். இவன் பால் கறக்கும் மாட்டை மேய்க்கவேண்டும்” என பிளவு செய்தது.

ஆரியர்கள் பெண்களை அழைத்து வரவில்லை என்று சொன்னேன் அல்லவா? இதற்குக் காரணம் என எடுத்துக்கொள்ள ஏதுவான மனு ஸ்லோகம் ஒன்றை பாருங்கள்.

“பால்யே பிதிர்வஸே விஷ்டேதுபாணிக்ரஹா யௌவ் வனேபுத்ரானாம் பர்த்தரீ ப்ரேதுநபஜேத் ஸ்த்ரீ ஸ்வ தந்த்ரதாம்”

“பெண்ணே… நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள்… வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். உனக்கு இது தான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியவற்றவள், ஆண் சொல்படி கேள்.”

இப்படி ‘பெண்ணுரிமை’ பேசும் மனு இன்னொரு இடத்தில் சொல்கிறது.

“பெண்கள் அசுத்தமானவர்கள். உனக்கு விதிக்கப்பட்டுள்ள மந்த்ரோப தேச சம்ஸ்காரங்கள் அவளுக்கு கிடையாது. அவளை மதிக்காதே…” பிராமண ஆணுக்கு சொல்லுவதாய் வந்த கருத்து இது.

மனுவின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு ‘பூம் பூம்’ மாடுகள்போல தலையாட்டினார்கள் மற்ற வர்ணத்தவர்கள்.

வைதீக கட்டுப்பாடுகள் சர்வாதிகாரமாக விதிக்கப்பட்டன. “கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறான். இதுபடி கேள். இல்லையேல் நீ பாபியாவாய்…” என மந்த்ரங்களால் மிரட்டப்பட்டனர் மக்கள்.

பல நூறு வருடங்கள். ஒரு கிரிமினல் லா போன்றே மனுநீதி சமூக கட்டமைப்பை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. வைதீக கர்மாக்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய பிராமணன், க்ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.

இப்படிப்பட்ட ஒரு ‘சாஸ்திர ஏகாதிபத்ய’ சூழ்நிலையில்தான்… இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு குரல் புறப்பட்டது.“கடவுள் பெயரை சொல்லியும்… கர்மாக்கள் பெயரைச் சொல்லியும் சிந்தனை வளராத அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்கிறீர்களே?

உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது? கடவுளா? அவன் எங்கே இருக்கிறான்?

வேதத்தை சாதத்துக்கு (பிழைப்புக்கு) பயன்படுத்தாதீர்கள். பேதம் வளர்க்காதீர்கள். கொடுமைதான் உங்கள் கொள்கை என்றால் வேதம் வேண்டாம். மனு வேண்டாம். கடவுள் வேண்டாம். கர்மாக்கள் வேண்டாம். மனித தர்மம் மட்டும் தான் வேண்டும்…”என அந்த சூழ்நிலையில் மிகமிக வித்தியாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.

இன்றைக்கு அணு குண்டு வெடி சோதனைக்கே ‘புத்தர் சிரித்தார்’ என பெயர் வைக்கிறோம். அன்றைக்கு புததரே வெடித்தார் என்றால் விளைவுகள் என்ன?

----------------

இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்?

–அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

நூலை முழுவதும் படிக்க விரும்பினால் இங்கே படிக்கலாம் 

https://ia902505.us.archive.org/33/items/20220426_20220426_1642/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9C_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf

இந்து_மதம்_எங்கே_போகிறது_அக்னிஹோத்ரம்_ராமானுஜ_தாத்தாச்சாரியார்.pdf

Seshadri Sridharan

unread,
Sep 24, 2022, 5:38:38 AM9/24/22
to தமிழ் மன்றம்


On Sat, 24 Sep, 2022, 09:14 Seshadri Sridharan, <ssesh...@gmail.com> wrote:

On Sat, 24 Sept 2022 at 06:45, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
"he who is born in the house"  என்றுதானே உள்ளது.
he who is born in the house of a slave" என்று இல்லை. அதனால் அவரவருக்கு தக பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளது.

முன்புள்ள பாடல் வரிகளையும் பின் தொடரும் பாடல் வரிகளையும் படித்தால் அது அடிமை பற்றியது என்று நன்கு விளங்கும். எனவே அடிமைக்கு பிறந்தவன் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அந்த அடிமையின் குழந்தை எஜமானன் வீட்டில் (outhouse) பிறந்தாலும் அல்லது அடிமைக்கென உள்ள தனிவீட்டில் பிறந்தாலும் அக்குழந்தையும் அடிமையே ஏனென்றால் ஒரு அடிமைக்கு எந்த சொத்தும் கிடையாது என்று பின் தொடரும் பாடல் வரிகளில் சொல்லப்பட்டுள்ளது. இளையவல்லி இராமனுசாச்சாரியார்  8.415 பாடலில் தன்னுடைய தேவடியாள் மகன் என்ற மொழிபெயர்ப்பில் தன் என்பதும் வேண்டாத இடைச்செருகல் தான். ஏனெனில் அதை அடிமையின் தேவடியாள் என்றும் கொள்ள முடியாது பிராமணனின் தேவடியாள் என்றும் கொள்ள முடியாது. இதில் யாரோ சில்மிஷ வேலை செய்துள்ளதாகவே எண்ணத்தோன்றுகிறது. அந்த சில்மிஷத்தை இளையவல்லி இராமனுசாச்சாரியாரின் வீட்டாரோ அல்லது பிழை திருத்தி பதிப்பித்த செட்டியார்களோ முதலியார்களோ அல்லது அச்சு கோர்ப்பவரோ கூட செய்திருக்க முடியும். எனினும் இன்னொரு மொழி நூல் என்பதால் ஒவ்வொரு மறுபதிப்பின் போதும் அம்மொழியை நன்கு அறிந்தவரை கொண்டு பாடல் வரிகளுக்கு சரியான சொல் விளக்கம் தரப்பட்டுள்ளனவா என்று ஆய்ந்த பிறகே அச்சிற்கு அனுப்பி இருக்க வேண்டும். அப்படி செய்யாததால் சர்ச்சை இன்றளவும் தொடர்கிறது. பிராமணர்கள் இந்நூலை பதிப்பிக்காமல் செட்டியார்கள், முதலியார்கள், பாதிரிகள் (george buhler) பதிப்பித்தது அவர்கள் நோக்கத்தில் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

எது எப்படியோ இனிமேலும் மனுஷம்ரிதியை பொது மேடையிலும் எழுத்திலும் மேற்கோளாக வைக்காமல் இருந்தால் சரி ஏனெனில் இது ஒரு சட்ட நூலும் அல்ல புனித நூலும் அல்ல. அது ஒரு மேற்கோள் நூல் அல்லது கோட்பாடு நூல் என்று தான் கொள்ள முடியும். மேலும் வழக்குகளுக்கு தீர்ப்பு கூற தனி சாதியார் இருந்தனர்.  அவர் பிராமணர் அல்லர் அரச குடும்ப உறவினர். தமிழகத்தில் அம்பலத்தார் என்ற தேவர் சாதி உட்பிரிவினர் தீர்ப்பு கூறினர். மனுதர்மம் தான் சட்ட நூல் என்றால் தீர்ப்பு கூறிய இவர் போன்ற சாதி மக்கள் இந்திய முழுவதும் குற்றவாளிகள் ஆவர்.
 

8.410. (The king) should order a Vaisya to trade, to lend money, to cultivate the land, or to tend cattle, and a Sudra to serve the twice-bom castes

8.41 1. (Some wealthy) Brahmana shall compassionately support both a Kshatriya and a Vaisya, if they are distressed for a livelihood, employing them on work (which is suitable for) their (castes).

8.412. But a Brahmana who, because he is powerful, out of greed makes initiated (men of the) twice-bom (castes) against their will do the work of slaves, shall be fined by the king six hundred (panas).

8.413. But a Sudra, whether bought or unbought, he may compel to do servile work; for he was created by the Self-existent (Svayambhu) to be the slave of a Brahmana.

8.414. A Sudra, though emancipated by his master, is not released from servitude; since that is innate in him, who can set him free from it?

8.415. There are slaves of seven kinds, (viz.) he who is made a captive under a standard, he who serves for his daily food, he who is born in the house, he who is bought and he who is given, he who is inherited from ancestors, and he who is enslaved by way of punishment.


சூத்திரன் என்பதற்கு ஏழு வெவ்வேறு பொருள்கள் இருக்க தனக்கு மிகவும் உதவும் என்று தேவடியாள் மகன் என்ற சொல்லை மட்டும்  தேர்ந்து கொண்ட பெரியார் தமிழரை கொச்சைபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் தான் செயற்பட்டுள்ளார் என்று தெரிகிறது.

வேந்தன் அரசு

unread,
Sep 24, 2022, 6:31:28 AM9/24/22
to tamil...@googlegroups.com


சனி, 24 செப்., 2022, முற்பகல் 9:14 அன்று, Seshadri Sridharan <ssesh...@gmail.com> எழுதியது:

On Sat, 24 Sept 2022 at 06:45, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
"he who is born in the house"  என்றுதானே உள்ளது.
he who is born in the house of a slave" என்று இல்லை. அதனால் அவரவருக்கு தக பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளது.

முன்புள்ள பாடல் வரிகளையும் பின் தொடரும் பாடல் வரிகளையும் படித்தால் அது அடிமை பற்றியது என்று நன்கு விளங்கும். எனவே அடிமைக்கு பிறந்தவன் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அந்த அடிமையின் குழந்தை எஜமானன் வீட்டில் (outhouse) பிறந்தாலும் அல்லது அடிமைக்கென உள்ள தனிவீட்டில் பிறந்தாலும் அக்குழந்தையும் அடிமையே ஏனென்றால் ஒரு அடிமைக்கு எந்த சொத்தும் கிடையாது என்று பின் தொடரும் பாடல் வரிகளில் சொல்லப்பட்டுள்ளது. இளையவல்லி இராமனுசாச்சாரியார்  8.415 பாடலில் தன்னுடைய தேவடியாள் மகன் என்ற மொழிபெயர்ப்பில் தன் என்பதும் வேண்டாத இடைச்செருகல் தான். ஏனெனில் அதை அடிமையின் தேவடியாள் என்றும் கொள்ள முடியாது பிராமணனின் தேவடியாள் என்றும் கொள்ள முடியாது. இதில் யாரோ சில்மிஷ வேலை செய்துள்ளதாகவே எண்ணத்தோன்றுகிறது. அந்த சில்மிஷத்தை இளையவல்லி இராமனுசாச்சாரியாரின் வீட்டாரோ அல்லது பிழை திருத்தி பதிப்பித்த செட்டியார்களோ முதலியார்களோ அல்லது அச்சு கோர்ப்பவரோ கூட செய்திருக்க முடியும். எனினும் இன்னொரு மொழி நூல் என்பதால் ஒவ்வொரு மறுபதிப்பின் போதும் அம்மொழியை நன்கு அறிந்தவரை கொண்டு பாடல் வரிகளுக்கு சரியான சொல் விளக்கம் தரப்பட்டுள்ளனவா என்று ஆய்ந்த பிறகே அச்சிற்கு அனுப்பி இருக்க வேண்டும். அப்படி செய்யாததால் சர்ச்சை இன்றளவும் தொடர்கிறது. பிராமணர்கள் இந்நூலை பதிப்பிக்காமல் செட்டியார்கள், முதலியார்கள், பாதிரிகள் (george buhler) பதிப்பித்தது அவர்கள் நோக்கத்தில் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

எது எப்படியோ இனிமேலும் மனுஷம்ரிதியை பொது மேடையிலும் எழுத்திலும் மேற்கோளாக வைக்காமல் இருந்தால் சரி ஏனெனில் இது ஒரு சட்ட நூலும் அல்ல புனித நூலும் அல்ல. அது ஒரு மேற்கோள் நூல் அல்லது கோட்பாடு நூல் என்று தான் கொள்ள முடியும். மேலும் வழக்குகளுக்கு தீர்ப்பு கூற தனி சாதியார் இருந்தனர்.  அவர் பிராமணர் அல்லர் அரச குடும்ப உறவினர். தமிழகத்தில் அம்பலத்தார் என்ற தேவர் சாதி உட்பிரிவினர் தீர்ப்பு கூறினர். மனுதர்மம் தான் சட்ட நூல் என்றால் தீர்ப்பு கூறிய இவர் போன்ற சாதி மக்கள் இந்திய முழுவதும் குற்றவாளிகள் ஆவர்.


அதேபோல மனு இந்துமத நூல் அல்ல என்றும் அதை வசைபாடினால் இந்துகள் சீறவும் கூடாது என அறிவிக்கப்பட  வேண்டும்

வேந்தன் அரசு

unread,
Sep 24, 2022, 6:38:24 AM9/24/22
to tamil...@googlegroups.com
ஒருபக்கம் மனுவை ஏசிவிட்டு மறுபக்கம், கோவையில் ஸ்டாலினை மனுநீதிச்சோழன் எனப்புகழ்ந்து சுவரொட்டி ஒட்டியுள்ளார்கள். கொடுமை

Seshadri Sridharan

unread,
Sep 24, 2022, 10:41:04 AM9/24/22
to தமிழ் மன்றம்


//அதேபோல மனு இந்துமத நூல் அல்ல என்றும் அதை வசைபாடினால் இந்துகள் சீறவும் கூடாது என அறிவிக்கப்பட  வேண்டும்//

அது மத நூலக அல்லாத போது ஏன் சீற வேண்டும்?  ஆனால் பிராமணரை  வசைபாடுவதற்கு  ஒரு கருவியாக கொண்டால் அது வெறுப்பு பரப்பல் என்ற அடிப்படையில் எதிர்க்கப்படும்.


Seshadri Sridharan

unread,
Sep 24, 2022, 10:45:36 AM9/24/22
to தமிழ் மன்றம்
சூத்திரனுக்கு ஏழு பொருள் சொல்லப்பட்டாலும் "தேவடியாள் மகன்" என்பதை மட்டும் தேர்ந்தெடுப்பதை போலத்தான் உபநிடதம், ஆரண்யம், தந்திரயோகம் முதலானவற்றை விடுத்து மனுஸ்மிருதியை மட்டும் பிடித்துக்கொண்டு அது தான் சனாதனம் என்பதும் 
Reply all
Reply to author
Forward
0 new messages